புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லாமலே  Poll_c10சொல்லாமலே  Poll_m10சொல்லாமலே  Poll_c10 
21 Posts - 70%
heezulia
சொல்லாமலே  Poll_c10சொல்லாமலே  Poll_m10சொல்லாமலே  Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
சொல்லாமலே  Poll_c10சொல்லாமலே  Poll_m10சொல்லாமலே  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
சொல்லாமலே  Poll_c10சொல்லாமலே  Poll_m10சொல்லாமலே  Poll_c10 
1 Post - 3%
viyasan
சொல்லாமலே  Poll_c10சொல்லாமலே  Poll_m10சொல்லாமலே  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லாமலே  Poll_c10சொல்லாமலே  Poll_m10சொல்லாமலே  Poll_c10 
213 Posts - 42%
heezulia
சொல்லாமலே  Poll_c10சொல்லாமலே  Poll_m10சொல்லாமலே  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
சொல்லாமலே  Poll_c10சொல்லாமலே  Poll_m10சொல்லாமலே  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொல்லாமலே  Poll_c10சொல்லாமலே  Poll_m10சொல்லாமலே  Poll_c10 
21 Posts - 4%
prajai
சொல்லாமலே  Poll_c10சொல்லாமலே  Poll_m10சொல்லாமலே  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சொல்லாமலே  Poll_c10சொல்லாமலே  Poll_m10சொல்லாமலே  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சொல்லாமலே  Poll_c10சொல்லாமலே  Poll_m10சொல்லாமலே  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சொல்லாமலே  Poll_c10சொல்லாமலே  Poll_m10சொல்லாமலே  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சொல்லாமலே  Poll_c10சொல்லாமலே  Poll_m10சொல்லாமலே  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சொல்லாமலே  Poll_c10சொல்லாமலே  Poll_m10சொல்லாமலே  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லாமலே


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 14, 2011 10:21 am

"வணக்கம் சார்! டாங்க் ஃபில் பண்ணணுமா சார்..?"

"இரண்டு ஆயில் ஒரு லிட்டர்"

"ஓ.கே. சார்! ரவுண்டா 90 ரூபாய்க்குப் போட்டுடட்டுமா சார்"

வண்டியோடு நின்றவன் தலையாட்ட,

"மீட்டரப் பாருங்க சார்.."

தமிழ்ச்செல்வி பட்டனைத் தட்டிவிட்டு டேங்க்கில் பெட்ரோலை கொட்டத் தொடங்கினாள்.

அடுத்து வந்த நான்கு பேருக்கும் பெட்ரோல் போட்டதும், ஐந்தாவதாய் சுரேஷ்.

"வணக்கம் சார்"

"வித் அவுட் ஆயில் இரண்டு லிட்டர்"

"ஓகே சார்! வண்டிய விட்டு இறங்கி நில்லுங்க சார்"

"ஏன் உட்கார்ந்திருந்தா போடமாட்டீங்களோ..?"

"சார் ப்ளீஸ்.. வண்டிய ஸ்டேண்ட் போட்டாத்தான் பெட்ரோல் போடணும்னு எங்க கம்பெனி ஆர்டர் சார். தயவுசெய்து இறங்கி நில்லுங்க..."

"என்ன பெரிய தொல்லையாப் போச்சு.. என்ன இது அதிகாரம்..? மத்த பங்க்ல இந்த மாதிரி இல்லையே?"

"இங்க இப்படித்தான் சார்.. நீங்க இறங்காட்டி எங்களுக்குக்கு திட்டு விழும் சார்"

இவள் சொல்லி நாம் இறங்குவதா என்ற கோபத்துடனும் சலிப்புடனும் வேண்டா வெறுப்பாக சுரேஷ் வண்டியைவிட்டு இறங்கினான். இடுப்பில் இருந்த செல்போன் கிச்சுக்கிச்சு மூட்டியது. அதை எடுத்துப்பேசப் போனவனைத் தடுத்து,

"சார்.. இங்க செல்போன்ல பேசக்கூடாது சார்.."

"அப்புறம் எங்க வெச்சு பேசுறதாம்.? ரிங்க் அடிக்கும்போது எடுக்காம வீட்டுல போயா எடுப்பாங்க.."

"இது பெட்ரோல் பங்க் சார்.. இங்க செல் உபயோகிக்கக்கூடாது"

"என்ன பிரச்னை உங்களுக்கு.. இதுக்கு பேசாம பெட்ரோல் போட வராதீங்கன்னு சொல்லிட வேண்டியதுதானே?"

மீதி சில்லைரையை வாங்கியவன், கோபத்தை கிக்கரில் காட்டினான்.

***

மாலைப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு என்ற செய்தி தூக்கில் தொங்குவது போல தொங்கிக்கொண்டிருந்தது!

பக்கத்தில் டீக்கடை. ஆபிஸ் நண்பர்களோடு சுரேஷ் வந்திருந்தான்.

"மாஸ்டர்.. நாலு டீ.. கப்ல! ஒண்ணு வித் அவுட் சுகர்! "

கொடுமை! முப்பது வயசுக்குள்ளேயே சக்கரை இல்லாமல் டீ.. ஹூம்ம்.

சுரேஷ் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டான். டீயை எடுத்துக்கொண்டு, "ஏம்ப்பா இது வித் அவுட் இல்லையே.. மாத்திடாதீங்க.."

இது சக்கரை வியாதி எனக்கில்லை என்று சொல்லாமல் சொல்வது!

"என்ன மச்சி இது.. ராக்கொள்ளைக்காரன் மாதிரி மறுபடியும் பெட்ரோல் விலைய உயர்த்திருக்கான் பாரு.."

"இப்படியே போனா.. வண்டிய உருட்டிக்கிட்டுத்தான் வரணும்"

"டேய் நீ வண்டியில வரப்போயிதாண்டா ஒண்ணு ரெண்டு ஃபிகருங்களாவது உன்னப் பாக்குது. அதுக்காகவாச்சும் வண்டிய தள்ளிக்கிட்டு வா.."

"டேய் இந்தத் தொல்லத் தாங்கமுடியலைன்னா.. பெட்ரோல் பங்க்ல வேற விதமான கொடுமைடா. வண்டியவிட்டு இறங்குன்னு சொல்றான். ஸ்டாண்ட் போடுங்கறான்.. என்னா அதிகாரம்ப்பா! விட்டா அட்டென்ஷன்ல நின்னா தான் பெட்ரோல் போடுவோம்னு ஆர்டர் போடுவாங்க போல" சுரேஷ் ஆதங்கப்பட,

"ஆமாடா மச்சான்.. சில பெட்ரோல் பங்க்ல இப்படி படுத்தி எடுக்கிறாங்க.."

சிகரெட்டின் நெருப்பு உதட்டை முத்தமிட நெருங்க, கீழே போட்டு நசுக்கியவன் அலுவலகம் நோக்கி அவர்களோடு நடக்கத் தொடங்கினான்.

***

இரவு எட்டு மணியான பின்னரும் ரோட்டில் கொஞ்சம் கூட கூட்டம் குறைந்தபாடில்லை. உண்மையாகவே வண்டியை உருட்டத்தான் வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு சிக்கனலாய் கடந்து எப்போது வீடு போய்சேருவது? கிடைத்த கேப்பில் வண்டியை விரட்டியபோது செல் போனின் ரிங்க்டோன் காதுக்குள் வண்டாய் குடைந்தது.

"ஹலோ.."

"டேய்.. கார்த்திக் பேசுரேன்டா.."அவன் குரலில் பதட்டம்.

"மச்சான் சொல்லுடா.."

"நான் இப்போ SRK ஆஸ்பத்திரியில இருக்கேன்டா.."

சுரேஷ் கொஞ்சம் தள்ளிப்போய் வண்டியை ஓரங்கட்டினான்.

"என்னாச்சுடா..? லீவுலதான இருக்கே? என்ன செய்யுது.?"

"எனக்கில்லடா.. எங்க அண்ணா பொண்ணுக்கு.. ஆக்சிடென்ட்"

"அப்படியா? சாரிடா..ரொம்ப பெரிசா அடி ஏதும் படலையே.."

"இல்ல சுரேஷ்.. ரோட் ஆக்சிடெண்ட் இல்ல.. முடிஞ்சா நேர்ல வா சொல்றேன்.. உங்க அக்கா இந்த ஆஸ்பிடல்ல தானே வேலை பாக்குறாங்க..?"

"ஆமா.. சரிடா.. நான் இப்பவே அங்க வர்றேன்"

***

பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

கார்த்திக்கின் குடும்பமே அங்கே திரண்டிருந்தது. எல்லோர் கண்களிலும் கண்ணீரும் கவலையும்.

"ஆண்டவா காப்பாத்து.. பொம்பள பிள்ளையாச்சம்மா.. அதுதான் ரொம்ப கவலையா இருக்கு. ஒண்ணு கிடக்க ஒண்ணி ஆயிடுச்சின்னா? முருகா.. நினக்கவே கொல நடுங்குதே.." பாட்டியம்மா அரற்றிக் கொண்டிருந்தாள்.

சுரேஷ் கார்த்திக்கை ஓரங்கட்டி, "என்னடா ஆச்சு.. இவங்க நிக்கறதைப் பாத்தா ரொம்ப சீரியசான விஷயமாத் தெரியுதே.. யாரு அந்த சுட்டிப் பொண்ணா..?"

"ஆமாடா. அத ஏன் கேக்குறே.. மத்தியானம் வண்டிய எடுத்துட்டு வெளியே போனேன். அவ நானும் வர்றேன் சித்தப்பான்னா.. எப்பவும் போல சரின்னு சொல்லிட்டு கூட்டிட்டுப் போனேன்.. கடைக்குப் போய் ஐஸ் க்ரீம் எல்லாம் வாங்கிக் கொடுத்திட்டு வரும்போது பெட்ரோல் போடப்போனேன்டா.. அங்க தான் வினையே.. அவ வண்டில முன்னாடி உட்கார்ந்து இருந்தா.. பெட்ரோல் போட சொன்னேன்.. போட்டுகிட்டிருந்தான். காசெடுக்க பர்சை எடுக்க திரும்பறேன்.. என்னாச்சுன்னு தெரியல குழந்தை அலற ஆரம்ப்பிச்சிட்டா.. முகம் பூரா பெட்ரோல்.. பெட்ரோல் போடுறவன் சொல்றான் குழந்தை தட்டிட்டான்னு.. கொஞ்சமாத்தான் முகத்துல தெரிச்சிருக்கு, ஆனா கண்ணுல நிறைய விழுந்துடுச்சு போல.. வீட்டுக்கு வந்து தண்ணிய விட்டுக் கழுவியும் போகல.. வலியில துடிக்க ஆரம்பிச்சுட்டா.. என்ன செய்யுறதுன்னே தெரியல.. எல்லோரும் என்னையே திட்டுறாங்க. வந்து பாத்த டாக்டர் கூட என்னை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாரு.."

" மடையா.. ஏண்டா குழந்தைய முன்னால உட்காரவச்ச.. பெட்ரோல் போட்டவன் இறங்க சொல்லலையா..?"

"இல்லடா சுரேஷ்.. எப்பவும் அங்கேதான் பெட்ரோல் போடுவேன். எத்தனையோ தடவ இவ எங்கூட வந்திருக்கா. இப்படி ஆகும்னு நினைக்கலையே.."

"சரிடா.. ஒண்ணும் ஆகாது.. கவலைப்படாதே. எங்க அக்கா இருக்கா.. நல்ல கவனிச்சுக்குவா.."

ஆறுதல் சொல்லிவிட்டு வெளியேறினான்.

***

டி.வி.யில் செய்திகளை சுவாரஸ்யம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தவனை அக்காவின் பேச்சு திரும்பிப் பார்க்க வைத்தது. வந்தவள் களைப்புடன் சோபாவில் சாய்ந்தாள்.

"அக்கா.. கார்த்திக்கோட அண்ணன் பொண்ணு எப்படி இருக்கா..?"

"கொஞ்சமாச்சும் அறிவிருந்தா அப்படிச்செய்வானா..? முட்டாள். பெட்ரோல் பங்க்குக்கு சின்னக்குழந்தைய ஏன் கூட்டிட்டுப் போணும்..? சரி போனது தான் போனே.. பெட்ரோல் போடும்போதாவது முன்னாடி இருந்த பொண்ணை இறக்கி விட்டிருக்கக்கூடாதா..? அறிவுகெட்டப்பய.. என்ன படிச்சி என்ன..?"

"ஏன் என்னாச்சு..?"

"இனியும் என்ன ஆகணும்..? சின்னக்குழந்தடா.. பர்ஸ்ட் எய்ட் கொடுத்து ஸ்பெஷல் டாக்டர் பாக்கட்டும்னு கண் ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருக்கோம்.. இனி அங்க தான் தெரியும்.. கண்ணுக்கு ஏதும் ஆச்சா ஆகலையான்னு.. இந்த மாதிரி சில கேஸ்ல கண்ணு தெரியாம போகக்கூட வாய்ப்பிருக்கு. ஆண்டவன் புண்ணியத்துல அப்படி ஏதும் நடக்காம இருக்கணும்."

சுரேஷ்க்கு மனசே சரியில்லை. சின்னக்குழந்தை..கண்ணுக்கு ஏதும் ஆச்சுன்னா..? நினைத்து பார்க்கக்கூட முடியவில்லை.. "ஆண்டவா குழந்தை கண்ணுக்கு ஏதும் ஆகக்கூடாது !"

***

தெருவில் போய்க்கொண்டிருந்தவன் ஞாபகம் வந்தவனாக வண்டியை பெட்ரோல் பங்க்கை நோக்கித் திருப்பினான். கூட்டம் கொஞ்சம் அதிகம் இருந்தது.

இவனுக்கு முன்னே நான்கு பேர் இருந்தனர்.

"வணக்கம் சார்.."

"நூறு ரூபாய்க்குப் போடும்மா.."

"சார் வண்டிய விட்டு இறங்கி நில்லுங்க சார்"

"எதுக்கும்மா.. பரவாயில்ல போடு.."

"இல்ல சார்.. இறங்குங்க.."

"நான் உட்காந்தா என்ன.. நின்னா உனக்கென்ன.. பெட்ரோல் போடவேண்டியதுதானே.. இது என்ன அதிகப்பிரசங்கித்தனம்.."
அவர் வாக்குவாதம் செய்ய, தமிழ்செல்வி "இல்லை சார்.. ப்ளீஸ்.. இறங்கிடுங்க.. " என்று சொல்லிக் கொண்டிருக்க, சுரேஷ்
வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அவர் அருகே போனான்.

" ஹலோ.. அதான் சொல்றாங்க இல்ல... இறங்கி நில்லுங்க சார்.. அவங்க சில ரூல்ஸ் வச்சிருப்பாங்க. அதுக்கு ஏதாச்சும் அர்த்தமிருக்கும்.. உங்களை நிக்க வெக்கணும்னு அவங்களுக்கு என்ன வேண்டுதலையா.. இறங்குங்க சார்" என்ற சுரேஷை, வரும்போதெல்லாம் சண்டை போடும் சுரேஷை, தான் எதுவும் சொல்லாமலேயே வண்டியை விட்டு இறங்கி நிற்கும் சுரேஷை ஆச்சர்யத்தில் பார்த்தாள் தமிழ்செல்வி.

நன்றி - டி. எம். ஃப்ராங்க்



கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 14, 2011 10:33 am

அர்த்தமுள்ள கதை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சொல்லாமலே  1357389சொல்லாமலே  59010615சொல்லாமலே  Images3ijfசொல்லாமலே  Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 14, 2011 10:42 am

சூப்பருங்க சூப்பருங்க நல்ல அறிவுரை கதை எல்லோருக்கும் உதவும் மகிழ்ச்சி மகிழ்ச்சி
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சொல்லாமலே  Ila
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Oct 14, 2011 7:21 pm

நல்ல அறிவுரை கதை குரு ரேவதி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 14, 2011 7:59 pm

நல்ல கதை ரேவதி.......பகிர்விற்கு நன்றிகள்...... சொல்லாமலே  224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 14, 2011 8:30 pm

ரேவதி wrote:
தமிழ்ச்செல்வி
சுரேஷ்
"கார்த்திக் அக்கா
"நூறு ரூபாய்க்குப் போடும்மா..
"எதுக்கும்மா.. பரவாயில்ல .......- டி. எம். ஃப்ராங்க்

பேசக்கூடிய கதா பத்திரங்கள் இவ்வளவுதான். இவர்கள் பேசுவதும் குறைவுதான்.
போரடிக்காமல் கதை நகர்கிறது.

நல்ல கதை! பதிவிற்கு நன்றி ! இப்பணியை தொடர்க , இதுபோன்ற கதைகளை மட்டும் பதிந்தால் நல்லதுதான். பேய் கதை எல்லாம் வேண்டாமே !





சொல்லாமலே  Thank-you015
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Oct 14, 2011 10:23 pm

நல்ல கதை...நன்றி மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 15, 2011 9:40 am

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
தமிழ்ச்செல்வி
சுரேஷ்
"கார்த்திக் அக்கா
"நூறு ரூபாய்க்குப் போடும்மா..
"எதுக்கும்மா.. பரவாயில்ல .......- டி. எம். ஃப்ராங்க்

பேசக்கூடிய கதா பத்திரங்கள் இவ்வளவுதான். இவர்கள் பேசுவதும் குறைவுதான்.
போரடிக்காமல் கதை நகர்கிறது.

நல்ல கதை! பதிவிற்கு நன்றி ! இப்பணியை தொடர்க , இதுபோன்ற கதைகளை மட்டும் பதிந்தால் நல்லதுதான். பேய் கதை எல்லாம் வேண்டாமே !

நன்றி......
இன்று ஒரு பேய் கதை பதிய உள்ளேன் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 15, 2011 11:00 am

நல்ல கதை.
படிக்கவே இண்டெரெஸ்டா இருந்தது.
சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Oct 15, 2011 11:54 am

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக