புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
4 Posts - 3%
prajai
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Jenila
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
1 Post - 1%
M. Priya
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
1 Post - 1%
kargan86
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
1 Post - 1%
jairam
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
8 Posts - 5%
prajai
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
6 Posts - 4%
Jenila
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Rutu
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
viyasan
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
1 Post - 1%
M. Priya
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவரச நாயகி (என் 3000வது பதிவு)


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 12, 2011 12:59 pm

First topic message reminder :

வக்கீல் 'விவாகரத்து’ வண்டுமுருகனின் அலுவலகத்தில் 'நவரசநாயகிபோண்டாஸ்ரீயும் அவரின் கணவர் பேயாண்டியும் உட்கார்ந்திருந்தனர்.

"நான் இவ கூட வாழ்ந்திருவேன்! ஆனா, இவ வளர்க்குற ஒன்பது நாயோட என்னாலே குப்பை கொட்டவே முடியாது வக்கீல் சார்!" என்று பேயாண்டி உறுதியாகக் கூறினார்.

"இவரு போனாப் போறாரு! முதல்லே டைவர்ஸுக்கு ஏற்பாடு பண்ணுங்க சார்!" என்று அலட்சியமாகக் கூறினார் நவரசநாயகி.

"என்னம்மா இது? ஒன்பது நாய்க்குத் தீனி போட்டு வளக்குறீங்க? பத்தாவதா உங்க புருஷனுக்கும் கொஞ்சம் போட்டா அவரு பாட்டுக்கு வாலைக்குழைச்சிட்டு இருப்பாரில்லே?" என்று பஞ்சாயத்து பண்ண முயன்றார் வண்டுமுருகன்.

"என்ன பேச்சுப் பேசறீங்க வக்கீல் சார்? இவரை நம்பி ஒரு அவுட்-டோர் ஷூட்டிங் கூட போக முடியலீங்க! உங்களுக்குத் தெரியுமா? மொத்தம் பத்து நாய் இருந்திச்சு எங்க வீட்டுலே, அதிலே ஒரு நாய் எப்படி செத்துப்போச்சுத் தெரியுமா?" என்று கண்ணீரும் கம்பலையுமாகக் கேட்டாள்.

"எப்படிங்க?" என்று கரிசனத்தோடு கேட்டார் விவாகரத்து வண்டுமுருகன்.

"நாயை இவரு துணிக்குப் போடுற சோப்புப்பவுடரைப் போட்டுக் குளிப்பாட்டியிருக்காருங்க! கடைக்காரர் வாங்கும்போதே இவர்கிட்டே சொல்லியிருக்காரு, அந்த சோப்புப்பவுடரப் போட்டுக் குளிப்பாட்டினா நாய் செத்துப்போயிருமுன்னு...! இவர் கேட்காமப் பண்ணி ஒரு நாய் செத்தெ போச்சு!" என்று மூக்கைச் சிந்தினாள் போண்டாஸ்ரீ.

"ஏன் சார், மேடம் சொல்றது உண்மையா?" என்று கேட்டார் வண்டுமுருகன்.

"அப்பட்டமான பொய் வக்கீல் சார்! அந்த நாய் சோப்புப்பவுடராலே சாகலே! அதை வாஷிங் மெஷின்லே போட்டதுலே தான் செத்துப்போச்சு!" என்று ரோஷமாகக் கூறினார்.

"ஆ! இது வேறயா...?" என்று வாய்ப்பிளந்தாள் போண்டாஸ்ரீ.

"என்ன சார் இது? யாராவது வாஷிங் மெஷினிலே நாயைப் போடுவாங்களா?" என்று அதிர்ச்சியோடு கேட்டார் வண்டுமுருகன்.

"என்ன பண்ணுறது சார்? எங்க வீட்டு மெஷினிலே நாயைத் தான் போட முடியும்," என்று பெருமூச்சு விட்டார் பேயாண்டி.

"கேட்டீங்களா வக்கீல் சார்? அந்த நாய் எவ்வளவு புத்திசாலி நாய் தெரியுமா? தினமும் வாசலிலேருந்து பால்பாக்கெட், நியூஸ் பேப்பரெல்லாம் எடுத்திட்டு வந்து கொடுக்கும்," என்று கர்ச்சீப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டாள் போண்டாஸ்ரீ!

"அது எல்லா நாய்ங்களும் செய்யுறது தானே?" என்று கேட்டார் வண்டுமுருகன்.

"சார், மத்த நாயெல்லாம் அந்தந்த வீட்டுக்கு வர்ற பேப்பரையும் பால்பாக்கெட்டையும் தானே எடுத்திட்டு வரும்? என்னோட நாய் அடுத்த வீடு, எதிர்த்த வீட்டுக்கு வர்ற பால்பாக்கெட், பேப்பரையுமே தூக்கிட்டு வந்திரும் சார்! ரொம்பப் பொறுப்பான நாய்!" என்று விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள் போண்டாஸ்ரீ.

வக்கீலின் அனுதாபத்தை போண்டாஸ்ரீ பெற்றுவிடப் போகிறாளே என்ற் ஆத்திரத்தில், பேயாண்டி பேசினார்.

"வக்கீல் சார்! அதுலே ஒரு நாய்க்கு வேறே இவ பேசறதுக்குக் கூட டிரைனிங் கொடுத்திட்டா சார்! ஒரு வாட்டி அதை வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போறபோது, எதுத்தாப்புலே வந்த ஒருத்தர் 'என்ன, கழுதையைக் கூட்டிக்கிட்டு வாக்கிங் போறீங்களா?-ன்னு கேட்டாரு! நான் கோபமா, 'யோவ், இது கழுதையில்லை, நாய்’-ன்னு சொன்னேன். உடனே இந்த நாயி, ’எசமான், அவரு என் கிட்டேத் தானே கேட்டாரு, நீ ஏன் பதில் சொல்றே?-ன்னு கேட்குது சார்! எவ்வளவு அவமானமாயிருச்சு தெரியுமா?" என்று வினவிய போது அவரது தொண்டையைத் துக்கம் அடைத்தது.

"எதுக்கும்மா நாய்க்கெல்லாம் பேசறதுக்கு டிரைனிங் கொடுக்கறீங்க?" என்று வியப்போடு கேட்டார் விவாகரத்து வண்டுமுருகன்.

"என்ன சார் பண்ணுறது, வீட்டுலே புத்திசாலித்தனமாப் பேச ஒரு நாயாவது வேண்டாமா?" என்று அழுகைக்கு நடுவே வினவினாள் போண்டாஸ்ரீ.

"வக்கீல் சார், நாய்க்கு பிஸ்கெட் போடுவாங்க, கறிபோடுவாங்கன்னு கேள்விப்பட்டிருப்பீங்க! இவ வளர்க்கிற நாய்க்கு சனிக்கிழமையான பிஸ்ஸா வேணுமாம்! அசந்தா அதுவே போன் பண்ணி வரவழைச்சிடுதுங்க!" என்று ஆதங்கப்பட்டார் பேயாண்டி.

"வாயில்லா ஜீவன் கிட்டே கொஞ்சம் அன்பு காட்டுறது தப்பா சார்?" என்று கேட்டார் போண்டாஸ்ரீ.

"அதுக்குன்னு இவ்வளவு அன்பா? இந்த உலகத்துலேயே ஃபேர் அண்ட் லவ்லி போட்டுக்கிறது எங்க வீட்டு நாயிங்க மட்டும் தான் சார்," என்று தேம்பத்தொடங்கினார் பேயாண்டி. "இதுலே கொடுமை என்ன தெரியுமா? 'நான் நாயிங்களோட வெளியே போறேன்; நீங்க வீட்டுக்குக் காவலா இருங்க,’ன்னு எங்கிட்டேயே சொல்லிட்டுப் போறா சார்!" என்று பொருமினார்.

"ஏம்மா பாவம் புருஷனைத் தனியா விட்டுட்டுப் போறீங்க?" என்று விசனத்தோடு விசாரித்தார் வண்டுமுருகன்.

"ஏன், தனியா இருக்க பயமா? மத்த நேரங்களிலே எப்படியோ, இவரு வீட்டுலே தனியா இருந்தார்னா, வாசல்லே 'நாய் ஜாக்கிரதை,’ போர்டு மாட்டிட்டுத் தான் போவேன் தெரியுமா?" என்று பதிலடி கொடுத்தாள் போண்டாஸ்ரீ.

"வக்கீல் சார்! இந்த நாய்ங்களாலே என்னாலே வெளியே தலையைக் காட்ட முடியலே சார்! தனியாப் போகும்போது தெருநாய்ங்களெல்லாம் ’இவன்தாண்டா அந்த ஒன்பது நாய் வளர்க்குறவனு-ன்னு என்னை ரவுண்டு கட்டித் துரத்துது சார்!" என்று வாய்விட்டு அழுதே விட்டார்.

"பொய் சொல்லுறாரு சார்! எங்க தெருவிலே இப்போ ஒரு நாய் கூட கிடையாது தெரியுமா?" என்று மேஜையைக் குத்திச் சொன்னார் போண்டாஸ்ரீ.

"எப்படியிருக்கும்? இந்த ஒன்பது நாய்க்கும் கிடைக்கிற ராஜமரியாதையைப் பார்த்து வாழ்க்கை வெறுத்துப்போயி, மொத்தத் தெருநாயும் அதுங்களே கார்ப்பரேஷன் ஆபீசுக்கு அட்ரஸ் கண்டுபிடிச்சுப் போய்ச் சேர்ந்திருச்சு சார்!" என்று விளக்கினார் பேயாண்டி.

"பேயாண்டின்னு பேரை வச்சுக்கிட்டு நாயைக் கண்டு பயப்படுறாரு பாருங்க!" என்று நக்கலடித்தார் போண்டாஸ்ரீ.

"இந்த நாய்ங்களாலே எனக்கு மட்டுமில்லீங்க, அக்கம்பக்கத்திலிருக்கிறவங்க எல்லாருக்கும் தொல்லைங்க! ஒரு நாள் அசந்து தூங்கிட்டிருக்கும்போது, அர்த்த ராத்திரி ஒரு மணிக்கு பக்கத்து வீட்டுக்காரர் போன் பண்ணி ’உங்க நாயுங்க ரொம்ப குரைக்குது; தூங்க முடியலே-ன்னு கம்ப்ளெயிண்ட் பண்ணினாருங்க! எவ்வளவு டென்சன் பாருங்க இதுங்களாலே?" என்று தானும் டென்சன் ஆனார் பேயாண்டி.

"க்கும், இவரு மட்டும் என்னவாம்?" என்று இடைமறித்தாள் நவரசநாயகி. "யாரோ ஒருத்தர் போன் பண்ணிக்கேட்டுட்டாருங்கிறதுக்காக, இவரும் தினமும் அர்த்தராத்திரிக்கு அலாரமெல்லாம் வச்சு, எழுந்திரிச்சு, எல்லாருக்கும் போன் பண்ணி, ’இன்னிக்கு எங்க நாய் குரைச்சுதா, எல்லாரும் நல்லாத் தூங்கிட்டுத்தானே இருக்கீங்க-ன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாரு! இவரோட தொல்லைக்கு நாயே மேலுன்னு எல்லாரும் செல்போனை பீச்சிலே போய் போட்டுட்டு வந்திட்டாங்க!" என்று பதிலடி கொடுத்தார் போண்டாஸ்ரீ.

"இவங்க சொல்றதுலேயும் ஒரு நாயம், அதாவது நியாயம் இருக்கே மிஸ்டர் பேயாண்டி?" என்று கேட்டார் வண்டுமுருகன்.

"சார், என் அவஸ்தை உங்களுக்குத் தெரியாது! தினமும் காலையிலே எழுந்து ஒன்பது நாய்களையும் ’வாக்கிங்’ கூட்டிக்கிட்டுப் போகணுங்க! அதுவும், தனித்தனியா கூட்டிக்கிட்டுப் போகணும். காலையிலே ஆறு மணிக்கு ஆரம்பிச்சேன்னா சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் ’மார்னிங் வாக்கிங்’ போற ஒரே ஆளு நான் தானுங்க!" என்று குரல் தழுதழுக்கக் கூறினார் பேயாண்டி.

"எதுக்குத் தனித்தனியா கூட்டிக்கிட்டுப்போகணும்? எல்லா நாயையும் ஒரே சமயத்துலே கூட்டிக்கிட்டுப் போகலாமே?" வண்டுமுருகன் விடுவதாக இல்லை!

"நீங்க வேறே! ஒரு நாய் இழுக்கிற இழுப்புக்கு என்னாலே ஓட முடியலே! ஒன்பது நாயும் இழுத்திட்டு ஓடுனா என்னாவுறது? அப்படியும் ஒருவாட்டி முயற்சி பண்ணினேனுங்க! வடபழனியிலேருந்து செங்கல்பட்டு வரைக்கும் இழுத்துட்டுப் போயிருச்சுங்க! அங்கேருந்து லாரி புடிச்சு மெட்ராஸ் வர்றதுக்குள்ளே போதும் போதுமுன்னு ஆயிருச்சு! அதுக்கப்புறம் தான் இது சரிப்படாதுன்னு காருலே வாக்கிங் போக ஆரம்பிச்சேன்!" என்று பரிதாபமாகக் கூறினார் பேயாண்டி.

"மிஸ்டர் பேயாண்டி! குரைக்கிற நாய் கடிக்காதுன்னு எங்க ஊருலே பெரியவங்க சொல்லுவாங்க!" என்று சமாதானப்படுத்த முயன்றார் வண்டுமுருகன்.

"அது உங்க ஊருப் பெரியவங்களுக்குத் தெரிஞ்சாப் போதுமா? எங்க வீட்டு நாய்ங்களுக்குத் தெரிய வேண்டாமா? என் உடம்பைப் பாருங்க சார்! எந்தெந்த நாய் என்னென்னிக்கு எங்கெங்கே கடிச்சிருக்குன்னு கஜினி சூர்யா மாதிரி உடம்பு முழுக்க அங்கங்கே பச்சை குத்தி வச்சிருக்கேன்! ஒன்பது நாய் ஷிஃப்டு போட்டு ஒரு மனிசனை மாத்தி மாத்திக் கடிச்சா என்னாகுறது?" என்று வெம்பினார் பேயாண்டி.

"அடடா! ஊசி போட்டீங்களா இல்லியா?" கொஞ்சம் அக்கறையும் நிறைய அச்சமுமாய் வண்டுமுருகன் கேட்டார்.

"எத்தனை ஊசி போடுறது சார்? அடுத்த தெருவிலே இருக்கிற ஆஸ்பத்திரியிலே ஆயுள்சந்தா கட்டி வாரத்துக்கு நாலு நாள் போய் ஊசி போட்டிட்டிருக்கேன். ஒரு வாட்டி ஒன்பது நாயும் சேர்ந்தே கடிச்சிருச்சுங்க! ஒரு நாய்க்கு பதினாலு வீதம் ஒன்பது நாய்க்கு நூத்தி இருபத்தாறு ஊசி போட்டு, என் வயிறு ஜாங்கிரி மாதிரி ஆயிருச்சுங்க! இப்பெல்லாம் வாய்வழியா சாப்பிடவே வேண்டாம். ஸ்பூனாலே டைரக்டா வயித்துக்குள்ளேயே போட்டுக்கிறேன் தெரியுமா?"

"ஏன் மேடம்? இவ்வளவு வருஷமா நாய் வளர்க்கறீங்க? உங்களை எப்பவாவது நாய் கடிச்சிருக்கா?" என்று ஆர்வத்தால் கேட்டார் வண்டுமுருகன்.

"ஐயோ, என்னோட நாய்ங்க ரொம்ப நல்லதுங்க! மனுசங்களைக் கடிக்கவே கடிக்காதுங்க சார்" என்று போண்டாஸ்ரீ சொல்லவும் பேயாண்டியின் முகம் பேயறைந்தது போலானது.

"வக்கீல் சார்! இவளைப் பத்தி சரியாப் புரிஞ்சிக்கணுமுன்னா, ஒரு வாட்டி இவ வளர்க்குற ஒன்பது நாயோட பெயரையும் சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம்!" என்றார் பேயாண்டி.

"இவ்வளவு தானா? வரிசையா சொல்றேன் கேளுங்க, பெப்பர், டொமாட்டோ, பல்சர், பைனா, கார்லீ, ஜிஞ்சி, மைசீ, நீமா, ஜீரா! கரெக்டா சொல்லிட்டேனா?" என்று ஒரே மூச்சில் ஆயிரத்து முன்னூற்றி முப்பது திருக்குறளையும் சொன்ன பெருமையோடு கேட்டார் போண்டாஸ்ரீ.

"இப்போ, எங்க அப்பா அம்மா பேரைச் சொல்லச் சொல்லுங்க!" என்றார் பேயாண்டி.

"அது... வந்து... அதாவது... இவங்க அம்மா பேரு வந்து..." என்று தடுமாறினார் போண்டாஸ்ரீ.

"பார்த்தீங்களா சார்? நாய்ங்களோட பேரு ஞாபகத்துலே இருக்கு! மனுசங்க பேரு மறந்து போச்சு!" என்றார் பேயாண்டி, வெற்றிப் பெருமிதத்துடன்.

"இது ஒரு பிரச்சினையா?" என்று கேட்டார் வண்டுமுருகன். "மேடம், நீங்க பெரிய நடிகை! உலகமே உங்களை நவரசநாயகின்னு சொல்லுது! பேசாம உங்க நாய்க்கு இவங்க சொந்தக்காரங்களோட பெயரை வச்சிட வேண்டியது தானே? பெயரையும் மறக்க மாட்டீங்க! அவருக்கும் சந்தோஷமாயிருக்குமே!" என்று ஆலோசனை தெரிவித்தார் வண்டுமுருகன்.

"யோவ் வண்டுமுருகா!" பேயாண்டி இறைந்தார். "இவளா நவரசநாயகி? சினிமாவுக்கு வரதுக்கு முன்னாடி ஓட்டல்லே வேலை பண்ணிட்டிருந்தாய்யா! இவ நாய்க்குப் பேரு வச்சிருக்காளே, அதோட அர்த்தம் என்னான்னு சொல்லுறேன் கேட்டுக்கோங்க! மிளகு, தக்காளி, பருப்பு, பைனாப்பிள், பூண்டு, மைசூர், வேப்பம்பூ, ஜீரகம்! ஏதாவது புரியுதா? மிளகு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம், பைனாப்பிள் ரசம், பூண்டு ரசம், மைசூர் ரசம், வேப்பம்பூ ரசம், ஜீரக ரசம்! இப்படி ஒன்பது நாய்க்கும் ஒன்பது ரசத்தோட பேரை வச்சிருக்கிறதுனாலே தான் இவளை எல்லாரும் ’நவ-ரச-நாய்-கி-’ன்னு கூப்பிடுறாங்க தெரியுமா?" என்று குட்டை உடைத்தார்.

"முதல்லே ரெண்டு பேரும் எழுந்திரிச்சு வெளியே போங்க!" என்று இரைந்தார் விவாகரத்து வண்டுமுருகன். "இல்லாட்டி கார்ப்பரேஷனுக்கு போன் போட்டு உங்களைக் கூட்டிக்கிட்டுப் போக நாய்வண்டியை வரவழைச்சிருவேன்!"

பி.கு: இந்த பதிவுக்கும் நாய்களை வளர்க்கும் நம் நடிகைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை அப்படீன்னு உங்க தலையிலே அடிச்சு சத்யம் பண்ணினா நீங்க நம்பவா போறீங்க?

என்னுடைய 1000-வது பதிவு : Gum.. Bug... பப்புள்கம்

என்னுடைய 2000-வது பதிவு : சதுர டி‌வி -- காதல் நோய்




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Oct 12, 2011 6:25 pm

கே. பாலா wrote:
நட்புடன் wrote:
dsudhanandan wrote:
உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஐயோ சுதா. என்னை மறந்து சிரித்தேன்.ஆபீசுல எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்க்குறாங்க சுதா

ரொம்ப நன்றி.. சென்னைன்னா கீழ்பாக்கத்துக்கு கொண்டுபோயிருப்பாங்க.... துபாய்லே, துபாய் கம்யூனிட்டி ஹெல்த் சென்டர் தானே?
இல்ல சுதாநந்தன் - துபாய் சென்டர் பார் இன்க்யுரபில் சைகோ கோமா சைமாடிக் சென்டர்...
அட ...அடிக்கடி அங்கே போற உங்களுக்கு தெரியாததா ??

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Thank-you015
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 12, 2011 6:32 pm

sshanthi wrote:ஹாஹாஹாஹா..... சூப்பர் சுதானந்தன் அண்ணா

நன்றி சாந்தி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 12, 2011 6:34 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
கே. பாலா wrote:
நட்புடன் wrote:
dsudhanandan wrote:
உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஐயோ சுதா. என்னை மறந்து சிரித்தேன்.ஆபீசுல எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்க்குறாங்க சுதா

ரொம்ப நன்றி.. சென்னைன்னா கீழ்பாக்கத்துக்கு கொண்டுபோயிருப்பாங்க.... துபாய்லே, துபாய் கம்யூனிட்டி ஹெல்த் சென்டர் தானே?
இல்ல சுதாநந்தன் - துபாய் சென்டர் பார் இன்க்யுரபில் சைகோ கோமா சைமாடிக் சென்டர்...
அட ...அடிக்கடி அங்கே போற உங்களுக்கு தெரியாததா ??

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அவரு அங்க வராதே உன்ன பாக்கதானாமே பெருமாள்?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 12, 2011 10:43 pm

நல்ல காமெடி நவ ரச நாய் கி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Ila
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Wed Oct 12, 2011 11:10 pm

அன்பு சுதா,
மகிழவைக்கும் இனிமையான பதிவு..
உங்கள் மூ நாயி ரம் பதிவிர்க்கும் வாழ்த்துகள்...

அன்புடன்,

உதயா..


dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 12, 2011 11:11 pm

மிக்க நன்றி இளா & உதயா



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Wed Oct 12, 2011 11:15 pm

சுதா,

இதை அப்படியே ஒலி வடிவிலே செய்யலாமா..

முடிந்தால் skype வாங்க..

அன்புடன்,

உதயா..

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 12, 2011 11:19 pm

பாஸ் நான் Skype இன்ஸ்டால் செய்யவில்லை.... நீங்க வேணும்னா மாற்றுங்க பாஸ்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 12, 2011 11:24 pm

dsudhanandan wrote:பாஸ் நான் Skype இன்ஸ்டால் செய்யவில்லை.... நீங்க வேணும்னா மாற்றுங்க பாஸ்

என் சுதா பயபடுறீங்க உங்கள் நகைசுவை நீங்களே பேசினா இன்னும் நல்லா இருக்குமே ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 4 Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 12, 2011 11:27 pm

இளமாறன் wrote:
dsudhanandan wrote:பாஸ் நான் Skype இன்ஸ்டால் செய்யவில்லை.... நீங்க வேணும்னா மாற்றுங்க பாஸ்

என் சுதா பயபடுறீங்க உங்கள் நகைசுவை நீங்களே பேசினா இன்னும் நல்லா இருக்குமே ஜாலி

பயமில்லை பாஸ்... என் குரல் ஒண்ணும் அவளோ சிறப்பா இருக்காது.... உதயாவ இப்பதான் கூப்பிட்டேன்.... இட்லி சாபிட்டுகிட்டு இருக்கார்... அவர் குரலிலேயே வரட்டும் என்பது என் ஆசை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக