புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
56 Posts - 64%
heezulia
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
1 Post - 1%
Guna.D
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
51 Posts - 64%
heezulia
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
1 Post - 1%
Guna.D
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவற விடுபவை...


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed 5 Oct 2011 - 20:33

தவற விடுபவை...

நம் வாழ்வில், நம் காலம் முழுக்க, வழி நெடுக்க - பிள்ளை பிராயம் முதல்
நிறைய விஷயங்களை தவற விட்டு கொண்டே போகிறோம். தொலைப்பதல்ல... தவற விடுவது. தொலைப்பது வேறு, தவற விடுவது வேறு. தவற விடுவதும் - பொருட்களை அல்ல... நிறைய உன்னத அம்சங்களை தவற விடுகிறோம்... பொருட்களை தவற விட்டால் கூட - கணாடெடுத்து விடலாம் அல்லது தேடி பிடித்து, வேறு கூட வாங்கி விடலாம். இவை, எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்க முடியாத, விலை மதிப்பற்றவை. தேடினாலும் இதே மாதிரி ஒன்றை கண்டெடுக்க முடியாது.

குழந்தை பருவத்தில், குழந்தை பருவத்தை தவற விட்டு வாழுவது எத்தனை கொடுமையான அம்சம். எத்தனை பணம் கொடுத்தாலும், மீண்டும் ஒரு குழந்தையாகி, மீண்டும் ஒரு குழந்தை பருவத்தை சுவாசிக்க முடியுமா? அவன் இன்று வாலிபன் தான். ஆனால் குழந்தை பிராயத்தில் - இயல்பாய் அனுபவிக்க வேண்டிய குழந்தை பருவத்தை - அவனால் அனுபவிக்க இயலாது, தவற விட்டு விட வேண்டியதாயிற்று. விளைவு, இன்று வரை வாழ்வில் அனேக விஷயங்களை தவற விட்டு கொண்டே இருக்கிறான்.

நம் வாழ்வில் - நிறைய விஷயங்கள் - சங்கிலி தொடரை போல் ஒன்றை
ஒன்று கவ்வி தொடர்ந்து வருவது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்களே- அந்த மாதிரி. அவனது பிள்ளை பிராயம்- பிள்ளை பிராயமாகவே இருந்ததில்லை. அவன் அப்பா மிக கண்டிப்பானவர் மற்றும் மிக மிக கோபக்காரர். அதன் விளைவு- அந்த சிறுவன் நிறைய விஷயங்களை தவற விட்டான். அவன் அப்பா, அவனை குழந்தைகளோடு விளையாட அனுமதிக்க மாட்டார். கெட்டு போய் விடுவானாம்.

வீட்டுக்குள்ளேயே பூட்டி வைப்பார். ஜன்னல் கம்பிகளின் வழியே உலகத்தை
பார்ப்பான். ஸ்கூல்- ஸ்கூல்லை விட்டால் வீடு... வீட்டை விட்டால்
ஸ்கூல்... இந்த அளவே அவனது சுதந்திரம் இருந்தது... அதனால் அவனது மொத்த பிள்ளை பிராயத்து குதூகலமும் தவறியே போனது. "சடங்கான பிள்ள மாதிரி" வீட்டுக்குள்ளேயே இருக்கான்டா என்று- மற்ற பையன்கள் கேலி பேசியதில்- அவன் தனது சந்தோஷங்களை தவற விட்டான்.

கொஞ்சம் வளர, வளர - அவனுக்கு சிறிதளவு சுதந்திரம் தரப்பட்டாலும், அதை
அனுபவிக்க முடியவில்லை. வீட்டுக்குள் கிடப்பதையே சுகமாக கருதியதில்,
மேலும் சில ஆனந்தத்தை தவறவிட்டான். எதற்குமே அச்சப்பட்டு வாழும் மனநிலையை பெற்றான். தன்னம்பிக்கையையும் தவற விட்டான். ஒரளவுக்கு படிக்கக்கூடிய பையனாக இருந்தமையால், மற்ற குறைபாடுகளை - இது பேலன்ஸ் பண்ணியது. யாரோடும் சேராமல் இருப்பதையே விரும்பியதால்- நட்பு வட்டத்தை தவற விட்டான். அதனால் - நட்பு வட்டம் மூலம் கிடைக்கும் நல்ல விஷயங்களும் தவறி போனது.

யாரிடமும் எது கேட்கவும் தயங்கினான். "பையன் நல்ல ஒழுக்கமுள்ளவனா வரணும்" என்கிற காரணத்தால், பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பிள்ளை, தன் வாழ்வில் தேவையான அனைத்து நல்ல விஷயங்களை தவற விட்டு கொண்டே வந்தது. என்றோ, எப்போதோ - சரியாக இருக்கும் என்று நினைத்து செய்த சில விஷயங்கள், முற்று பெறாமல்- அவன் மொத்த வாழ்வையும் அலைக்கழித்த வண்ணமே இருந்தது. விளைவு, ஏதாவதொன்றை எப்போதும் தவற விட்ட வண்ணமே இருந்தான்.

கல்லூரியில் சேர்ந்தான். அவன் வாங்கிய மார்க்க்கு, அவன் தந்தை எடுக்க சொன்ன பாடத்திற்கு, உள்ளுர் காலேஜில் இடம் கிடைக்காததால் ஹாஸ்டலில் சேர்ந்தான். ஆனால் ஹாஸ்டலில் அவனால் இருக்க முடியவில்லை. இரண்டொரு தினங்களிலேயே "ஹோம் சிக்". வீட்டு
ஞாபகங்கள் வருத்த- அவனை அலைகழிக்க - வீட்டுக்கு ஓடி வந்து. அம்மா மடியில் படுத்து கொண்டு, "ஹாஸ்டலுக்கு போக மாட்டேன்" என்று அழுது இருக்கிறான். "நாற்பதாயிரம் பீஸ் கட்டி இருக்கு. போடா" என்று அவன் அப்பா விரட்ட, மிக பெரிய களோபரம் நடந்தது - வீட்டில். "வெட்கம்மா இல்ல. இவ்வளவு பெரிய மாடா இருந்துட்டு பயமா இருக்குங்கிற. உன்கூட படிக்கிறவங்க எப்படி இருக்காங்க". என்று அவன் அப்பா சொல்ல -கடைசியாக அவன் சொன்னான். "நீ ஹாஸ்டலுக்கு போக சொன்னா தற்கொலை பண்ணிக்குவேன்" என்று. பிறகு அவன் அம்மா தலையிட்டு, அவனை
ஹாஸ்டலுக்கு அனுப்ப வில்லை. "பிள்ளைய பலி கொடுக்க முடியாது" என்றாள்.

தற்கொலை அளவுக்கு போகும் மாணவர்களில் பெரும் பகுதியினர்- பொத்தி பொத்தி வளர்க்கப்படும் சூழலில் இருந்தவர்களே. பிறகு, மறு வருடம் தான், அவன் வேறு காலேஜில் சேர்ந்தான். அவன் வளர வளர - அவன் எவ்வளவோ நல்ல விஷயங்களை தவற விட்ட வண்ணம் தான் இருந்தான். தவற விடுவது தெரிந்தாலும், அவனால் தவற விடாமல் இருக்க முடியவில்லை.

முதுகலை படித்து கொண்டிருந்த போது, அவன் ஒரு பெண்ணை விரும்பினான். ஆனால், அவனால் அதை - அவளிடம் தெரியப் படுத்தவே
முடியவில்லை. காரணம். பயம். ஆண்களோடு பேசவே அச்சப்பட கூடிய ஒருவன், பெண்களிடம் எப்படி பயமின்றி பேசுவான். தைரியமாக தன் காதலை எப்படி சொல்வான். விளைவு. தன் காதலை சொல்லாமலே போனான். தான் வளர்க்கப்பட்ட விதத்தால் தன் காதலை தவற விட்டான்.

பின்னாளில் வேலைக்கு போனான். எந்த இடத்திலும் அவனால் உருப்படியாக இருக்க முடியவில்லை. "ஒவ்வொருத்தனும் ஒவ்வொண்ணு சொல்றான்" என்று குறைப்பட்டு கொண்டான். இந்த உலகில் அனுசரித்து போகும் குணம் இருந்தால் மாத்திரமே ஜெயிக்க முடியும் என்கிற சிந்தனையை தவற
விட்டான். வழி நெடுக தவற விட்டவையாக நிறைய உள்ளன. இன்று, அவன் அப்பா நினைத்ததற்கு மாறாகவே வளர்ந்துள்ளான். எல்லா கெட்ட பழக்கமும் உண்டு.இயல்பாக வளர விட்டிருந்தால் கூட, சரியான பாதையில் சென்று இருக்கக் கூடும்.

இன்று எல்லாவற்றையும் தவற விட்டப்படி நிற்கிறான். இது ஒரு உண்மை
சம்பவம். பதினைந்து வருஷங்கள் முன் நடந்தது. குழந்தை வளர்ப்பில் இன்று
யாரும் - இப்படி இருப்பதில்லை என்று நம்புகிறேன். ஆனால் ஒரு காலத்தில்
இப்படி இருந்தது என்பது உண்மை.

http://tamiluthayam.blogspot.com/2010/04/blog-post.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக