புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
366 Posts - 49%
heezulia
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
25 Posts - 3%
prajai
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவற விடுபவை...


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 05, 2011 7:03 pm

தவற விடுபவை...

நம் வாழ்வில், நம் காலம் முழுக்க, வழி நெடுக்க - பிள்ளை பிராயம் முதல்
நிறைய விஷயங்களை தவற விட்டு கொண்டே போகிறோம். தொலைப்பதல்ல... தவற விடுவது. தொலைப்பது வேறு, தவற விடுவது வேறு. தவற விடுவதும் - பொருட்களை அல்ல... நிறைய உன்னத அம்சங்களை தவற விடுகிறோம்... பொருட்களை தவற விட்டால் கூட - கணாடெடுத்து விடலாம் அல்லது தேடி பிடித்து, வேறு கூட வாங்கி விடலாம். இவை, எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்க முடியாத, விலை மதிப்பற்றவை. தேடினாலும் இதே மாதிரி ஒன்றை கண்டெடுக்க முடியாது.

குழந்தை பருவத்தில், குழந்தை பருவத்தை தவற விட்டு வாழுவது எத்தனை கொடுமையான அம்சம். எத்தனை பணம் கொடுத்தாலும், மீண்டும் ஒரு குழந்தையாகி, மீண்டும் ஒரு குழந்தை பருவத்தை சுவாசிக்க முடியுமா? அவன் இன்று வாலிபன் தான். ஆனால் குழந்தை பிராயத்தில் - இயல்பாய் அனுபவிக்க வேண்டிய குழந்தை பருவத்தை - அவனால் அனுபவிக்க இயலாது, தவற விட்டு விட வேண்டியதாயிற்று. விளைவு, இன்று வரை வாழ்வில் அனேக விஷயங்களை தவற விட்டு கொண்டே இருக்கிறான்.

நம் வாழ்வில் - நிறைய விஷயங்கள் - சங்கிலி தொடரை போல் ஒன்றை
ஒன்று கவ்வி தொடர்ந்து வருவது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்களே- அந்த மாதிரி. அவனது பிள்ளை பிராயம்- பிள்ளை பிராயமாகவே இருந்ததில்லை. அவன் அப்பா மிக கண்டிப்பானவர் மற்றும் மிக மிக கோபக்காரர். அதன் விளைவு- அந்த சிறுவன் நிறைய விஷயங்களை தவற விட்டான். அவன் அப்பா, அவனை குழந்தைகளோடு விளையாட அனுமதிக்க மாட்டார். கெட்டு போய் விடுவானாம்.

வீட்டுக்குள்ளேயே பூட்டி வைப்பார். ஜன்னல் கம்பிகளின் வழியே உலகத்தை
பார்ப்பான். ஸ்கூல்- ஸ்கூல்லை விட்டால் வீடு... வீட்டை விட்டால்
ஸ்கூல்... இந்த அளவே அவனது சுதந்திரம் இருந்தது... அதனால் அவனது மொத்த பிள்ளை பிராயத்து குதூகலமும் தவறியே போனது. "சடங்கான பிள்ள மாதிரி" வீட்டுக்குள்ளேயே இருக்கான்டா என்று- மற்ற பையன்கள் கேலி பேசியதில்- அவன் தனது சந்தோஷங்களை தவற விட்டான்.

கொஞ்சம் வளர, வளர - அவனுக்கு சிறிதளவு சுதந்திரம் தரப்பட்டாலும், அதை
அனுபவிக்க முடியவில்லை. வீட்டுக்குள் கிடப்பதையே சுகமாக கருதியதில்,
மேலும் சில ஆனந்தத்தை தவறவிட்டான். எதற்குமே அச்சப்பட்டு வாழும் மனநிலையை பெற்றான். தன்னம்பிக்கையையும் தவற விட்டான். ஒரளவுக்கு படிக்கக்கூடிய பையனாக இருந்தமையால், மற்ற குறைபாடுகளை - இது பேலன்ஸ் பண்ணியது. யாரோடும் சேராமல் இருப்பதையே விரும்பியதால்- நட்பு வட்டத்தை தவற விட்டான். அதனால் - நட்பு வட்டம் மூலம் கிடைக்கும் நல்ல விஷயங்களும் தவறி போனது.

யாரிடமும் எது கேட்கவும் தயங்கினான். "பையன் நல்ல ஒழுக்கமுள்ளவனா வரணும்" என்கிற காரணத்தால், பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பிள்ளை, தன் வாழ்வில் தேவையான அனைத்து நல்ல விஷயங்களை தவற விட்டு கொண்டே வந்தது. என்றோ, எப்போதோ - சரியாக இருக்கும் என்று நினைத்து செய்த சில விஷயங்கள், முற்று பெறாமல்- அவன் மொத்த வாழ்வையும் அலைக்கழித்த வண்ணமே இருந்தது. விளைவு, ஏதாவதொன்றை எப்போதும் தவற விட்ட வண்ணமே இருந்தான்.

கல்லூரியில் சேர்ந்தான். அவன் வாங்கிய மார்க்க்கு, அவன் தந்தை எடுக்க சொன்ன பாடத்திற்கு, உள்ளுர் காலேஜில் இடம் கிடைக்காததால் ஹாஸ்டலில் சேர்ந்தான். ஆனால் ஹாஸ்டலில் அவனால் இருக்க முடியவில்லை. இரண்டொரு தினங்களிலேயே "ஹோம் சிக்". வீட்டு
ஞாபகங்கள் வருத்த- அவனை அலைகழிக்க - வீட்டுக்கு ஓடி வந்து. அம்மா மடியில் படுத்து கொண்டு, "ஹாஸ்டலுக்கு போக மாட்டேன்" என்று அழுது இருக்கிறான். "நாற்பதாயிரம் பீஸ் கட்டி இருக்கு. போடா" என்று அவன் அப்பா விரட்ட, மிக பெரிய களோபரம் நடந்தது - வீட்டில். "வெட்கம்மா இல்ல. இவ்வளவு பெரிய மாடா இருந்துட்டு பயமா இருக்குங்கிற. உன்கூட படிக்கிறவங்க எப்படி இருக்காங்க". என்று அவன் அப்பா சொல்ல -கடைசியாக அவன் சொன்னான். "நீ ஹாஸ்டலுக்கு போக சொன்னா தற்கொலை பண்ணிக்குவேன்" என்று. பிறகு அவன் அம்மா தலையிட்டு, அவனை
ஹாஸ்டலுக்கு அனுப்ப வில்லை. "பிள்ளைய பலி கொடுக்க முடியாது" என்றாள்.

தற்கொலை அளவுக்கு போகும் மாணவர்களில் பெரும் பகுதியினர்- பொத்தி பொத்தி வளர்க்கப்படும் சூழலில் இருந்தவர்களே. பிறகு, மறு வருடம் தான், அவன் வேறு காலேஜில் சேர்ந்தான். அவன் வளர வளர - அவன் எவ்வளவோ நல்ல விஷயங்களை தவற விட்ட வண்ணம் தான் இருந்தான். தவற விடுவது தெரிந்தாலும், அவனால் தவற விடாமல் இருக்க முடியவில்லை.

முதுகலை படித்து கொண்டிருந்த போது, அவன் ஒரு பெண்ணை விரும்பினான். ஆனால், அவனால் அதை - அவளிடம் தெரியப் படுத்தவே
முடியவில்லை. காரணம். பயம். ஆண்களோடு பேசவே அச்சப்பட கூடிய ஒருவன், பெண்களிடம் எப்படி பயமின்றி பேசுவான். தைரியமாக தன் காதலை எப்படி சொல்வான். விளைவு. தன் காதலை சொல்லாமலே போனான். தான் வளர்க்கப்பட்ட விதத்தால் தன் காதலை தவற விட்டான்.

பின்னாளில் வேலைக்கு போனான். எந்த இடத்திலும் அவனால் உருப்படியாக இருக்க முடியவில்லை. "ஒவ்வொருத்தனும் ஒவ்வொண்ணு சொல்றான்" என்று குறைப்பட்டு கொண்டான். இந்த உலகில் அனுசரித்து போகும் குணம் இருந்தால் மாத்திரமே ஜெயிக்க முடியும் என்கிற சிந்தனையை தவற
விட்டான். வழி நெடுக தவற விட்டவையாக நிறைய உள்ளன. இன்று, அவன் அப்பா நினைத்ததற்கு மாறாகவே வளர்ந்துள்ளான். எல்லா கெட்ட பழக்கமும் உண்டு.இயல்பாக வளர விட்டிருந்தால் கூட, சரியான பாதையில் சென்று இருக்கக் கூடும்.

இன்று எல்லாவற்றையும் தவற விட்டப்படி நிற்கிறான். இது ஒரு உண்மை
சம்பவம். பதினைந்து வருஷங்கள் முன் நடந்தது. குழந்தை வளர்ப்பில் இன்று
யாரும் - இப்படி இருப்பதில்லை என்று நம்புகிறேன். ஆனால் ஒரு காலத்தில்
இப்படி இருந்தது என்பது உண்மை.

http://tamiluthayam.blogspot.com/2010/04/blog-post.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக