புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10 
3 Posts - 75%
Manimegala
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10 
11 Posts - 4%
prajai
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10 
9 Posts - 4%
Jenila
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10 
4 Posts - 2%
Rutu
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10 
3 Posts - 1%
jairam
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி


   
   

Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:28 am

First topic message reminder :

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Uyir

பழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது, தூங்குவது மாதிரி அதுவும் ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது.

இல்லறத்தில் ஆண், பெண் இடையே இருக்கும் உறவு, ஒளிவு மறைவில்லாதது. அன்பு செலுத்துவது, உண்மையாக இருப்பது, மரியாதை தருவது என எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின் தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். ‘பெண் என்பவகள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம் தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும் இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவகள் திருமண உறவுக்கு வெளியில் அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும் பிரச்னைகள் உருவாகும்’ என்பது அந்த ரிஷிகள் சொன்ன வாக்கு.

முடிவாக அவர்கள் சொன்ன நீதி... ‘இந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!’ நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, "பாலுணர்வு" என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி, "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது "டேக் இட் ஈஸி" கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.

இதிலிருந்து மீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரிய ஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பான சிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர். மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற ஜாக்கிரதை உணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

இந்தத் தொடரைப் படிக்கும் எவரும் "உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை" என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

அது ஒரு பெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும் ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமான கலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.

தங்கள் காதல் மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்த டீன்ஏஜ் காதலர்கள், தனியாக அறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத் தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள் உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லை’ என்று நிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக் கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்கு ஜோடியே தேவையில்லை’ என்ற படி தனி ஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்த அறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.

வெளிச்சம், இருட்டு என்ற வித்தியாசம் எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமான உணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம் தராமல், அடுத்தடுத்து பத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியான அந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் ‘தேனிலவு சூட்’ அல்லது ஏதாவது குளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.

ஸாரி... அது தப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையை அனுபவித்தது, ஓர் ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான் நடந்தது இந்த ஆராய்ச்சி.

‘இதில் போய் என்ன ஆராய்ச்சி!’ என முகத்தைச் சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்த பாராவுக்கு போங்கள்.

இந்த வித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்... ‘இருண்ட கண்டம்’ என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்த ஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோ தொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
வகைப்படுத்தி பெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.

ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின் அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? ஒட்டுமொத்த உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளை உலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது? பிரபஞ்சத்தை சிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்த ஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பது வெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்? இந்த உறவில் பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன? பலபேருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்?



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 1:30 am

சனாதன தர்மம் என்றழைக்கப்படுகிற இந்து மதத்தில் இறைவனைத் தரிசிக்கப் பற்பல வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதில் ஒன்று யோக நிலை. இந்த யோக நிலையில் இந்திரியத்தை (விந்து) கட்டுப்படுத்துவதும் முக்கியமான ஒன்று. இப்படி இந்திரியத்தைக் கட்டுப்படுத்தச் சொல்வது கூட உடம்புக்கு நல்லது செய்யும், ஆரோக்கியம் தரும், ஆயுள் கூடும் என்பதற்காக அல்ல. இந்த அளவு கட்டுப்பாடாக இருந்தால் இறைவனை தரிசிக் கலாம் என்பதற்காகத்தான் அப்படி சொல்லி வைத்தார்கள். இதைக் கடைபிடிப்பவர்கள் விதிவிலக்கானவர்கள். ஆனால், பொதுவானவர்கள், சாதாரண மக்களை மனதில் கொண்டுதான் நமது முன்னோர்கள் மனித வாழ்க்கையை நான்கு கட்டங்களாகப் பிரித்து இதில் "கிருகஸ்தன்" என்கிற கட்டத்தைப் பிரதானமாக உருவாக்கி வீருந்தார்கள்.

குடும்பம் என்பதைச் சுற்றிதான் சமூகமே இயங்குகிறது. சமூக சுழற்சிக்கு ஆதாரமே குடும்பம் என்கிற கட்டுமானம்தான். குடும்பஸ்தனாக வாழ்பவனைத்தான் உலகமே வாழ்த்தும். அதனால்தான் குடும்பஸ்தனாக மாறும் ஒருவனுக்குத் திருமணவிழா என்கிற ஒன்றைக் கோலாகலமாக நடத்தும் நிலை வந்தது. ரிஷிகளுக்குக்கூட ரிஷிபத்தினிகள் இருந்தார்கள் என்றும், கடவுளுக்குக்கூட மனைவி, மக்கள் இருந்தனர் என்றும் நமது புராணங்களும் இதிகாசங்களும் குறிப்பிடுவதற்குக் காரணமே "குடும்பம்" என்ற அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்குத்தான்.

முற்காலத்தில் "ஒரு மனிதனின் வாழ்க்கை நான்கு முக்கிய நோக்கங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்" என்று வரையறுத்திருந்தனர். இந்த நோக்கங்களுக்கு "சதுர்வித புருஷார்த்தம்" என்று பெயர். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்பதுதான் அந்த நான்கு நோக்கங்கள். காமத்துக்கும் உரிய முக்கியத்துவம் அந்த நாட்களில் தரப்பட்டிருந்ததை இதிலிருந்து அறிய முடிகிறது.

என்ன இது... டாக்டர் சமஸ்கிருத பண்டிட்டாக மாறி, புராண இதிகாசங்களை பற்றி லெக்சர் அடிக்கிறாரே என்று நினைக்காதீர்கள். நவீன காலத்துக்கு வருகிறேன்...

இந்த "உயிர்" தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் பிரபஞ்சம் தோன்றியபோதே காமமும் பிறந்துவிட்டது என்று ரிக்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டிருந்தேன். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காமத்தை ஒரு மனிதன் தனக்குத் தேவையில்லை என்று எவரும் வற்புறுத்தாமல் தானே புறக்கணித்தால் அவரைப் பற்றி நாம் கவலைகொள்ள தேவையே இல்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், செக்ஸில் ஈடுபட்டால் ஆரோக்கியம் கெட்டுவிடும், உடம்பு பலவீனமாகி விடும் என்று சொல்லி வலுக்கட்டாயமாக தவிர்ப்பது, செக்ஸ் உணர்ச்சியை உள்ளுக்குள் பூட்டி வைப்பதுதான் சரியானதில்லை என்கிறேன். உடல் பலவீனமாகிவிடும் என்று அழுத்தமாகக் கட்டுப்படுத்தினால் ஒரு காலக்கட்டத்தில் பூதாகரமான விளைவுகளை அது ஏற்படுத்தும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 1:31 am

1700 ஆண்டுகளுக்கு முன்பே வாத்ஸாயனர் "செக்ஸ் ஆர்வத்தைத் தவிர்த்தால், அல்லது தள்ளிப் போட்டால், தாமதப்படுத்தினால் அது முறையற்ற செயல்பாட்டுக்கு வழிவகுக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை இந்த நூற்றாண்டில் நவீன உளவியலின் தந்தை என்றழைக்கப்படும் சிக்மண்ட் ஃபிராய்டு, "செக்ஸ் ஆர்வத்தைத் தடுத்தால், மனசும் உடம்பும் தனித்தனியாகவோ அல்லது இரண்டும் சேர்ந்தேகூட பாதிக்கலாம்" என்று குறிப்பிடுகின்றார்.

ஆண்களுக்கு ப்ரஸ்டேட் (prostate) சுரப்பி என்ற ஒன்று உண்டு. ஆண்குறியின் அடிவயிற்றின் உள்ளே இருக்கும் இந்த சுரப்பி, சிலருக்கு வீங்கிப் போய், சிறுநீர் வெளியேறுவதில் சிக்கலை உண்டாக்கும். இந்தப் பாதிப்புக்குள்ளானவர்களைப் பரிசோதித்ததில் பெரும்பாலானவர்கள் ரெகுலரான செக்ஸ் வைத்துக் கொள்ளாமல் கட்டுப்பாடாக இருந்தவர்கள் என்ற உண்மை தெரியவந்திருக்கிறது. இவர்களுக்கு செயற்கையாக விந்தை வெளியேற்றுவதன் மூலம் பிரச்னைக்கு டாக்டர்கள் தீர்வு காண்பார்கள்.

பெண்களைப் பொறுத்தவரை, செக்ஸ் உணர்வை வெளிப்படுத்த வழியில்லாதவர்களுக்கு மனரீதியாக பிரச்னை ஏற்பட்டு விநோதமாக நடந்து கொள்வதற்கு ஹிஸ்டீரியா என்று பெயர் வைத்தார்கள் அக்காலத்தில். அடிவயிறு, இடுப்பு வலிக்கிறது என்பார்கள் சில பெண்கள். இதற்கு 1869ல் ஜார்ஜ் டெய்லர் என்பவர் ஒரு வைப்ரேட்டரைக் கண்டுபிடித்து, அதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செக்ஸ் இன்பம் கொடுத்து சிகிச்சை அளித்தார். கணவனிடம் பெறும் இன்பத்தின் மூலம் தீரவேண்டிய பிரச்னையை டாக்டரிடம் சென்று பணத்தை செலவு செய்து, எந்திரத்தின் மூலம் தீர்த்துக் கொள்வதை என்னவென்று சொல்வது?

செக்ஸை வலுக்கட்டாயமாகத் தவிர்க்கும் சில ஆண்களுக்கு "செக்ஸுவல் அப்யூஸ்" (Sexual abuse) என்ற குணக்கேடு ஏற்படும். இவர்கள்தான் பெண்களிடம் தவறாக நடப்பது, சிறுமிகளிடம் சில்மிஷம் செய்வது போன்ற சில்லுண்டி வேலைகளில் ஈடுபடுவார்கள். வலுக் கட்டாயமாக செக்ஸை தவிர்ப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இது உதாரணமாகும்.

செக்ஸை வலுக்கட்டாயமாகக் கட்டுப்படுத்தினால் பிரஷர் அதிகரிக்கும், டென்ஷன், தலைவலி ஏற்படும், அல்சர் போன்றவைகூட ஏற்படலாம் என்பது நிரூபிக்கப்பட்ட நிஜங்கள். வலுக்கட்டாயமாக அடக்கப்படும் செக்ஸ் உணர்ச்சி, உடலில் மன அழுத்தத்தை அதிகப்படுத்துவதால்தான் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

முற்றும்




உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 11, 2015 1:01 am

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 3838410834



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக