புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10 
1 Post - 2%
prajai
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10 
383 Posts - 49%
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10 
26 Posts - 3%
prajai
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி


   
   

Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:28 am

First topic message reminder :

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Uyir

பழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது, தூங்குவது மாதிரி அதுவும் ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது.

இல்லறத்தில் ஆண், பெண் இடையே இருக்கும் உறவு, ஒளிவு மறைவில்லாதது. அன்பு செலுத்துவது, உண்மையாக இருப்பது, மரியாதை தருவது என எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின் தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். ‘பெண் என்பவகள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம் தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும் இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவகள் திருமண உறவுக்கு வெளியில் அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும் பிரச்னைகள் உருவாகும்’ என்பது அந்த ரிஷிகள் சொன்ன வாக்கு.

முடிவாக அவர்கள் சொன்ன நீதி... ‘இந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!’ நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, "பாலுணர்வு" என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி, "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது "டேக் இட் ஈஸி" கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.

இதிலிருந்து மீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரிய ஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பான சிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர். மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற ஜாக்கிரதை உணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

இந்தத் தொடரைப் படிக்கும் எவரும் "உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை" என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

அது ஒரு பெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும் ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமான கலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.

தங்கள் காதல் மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்த டீன்ஏஜ் காதலர்கள், தனியாக அறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத் தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள் உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லை’ என்று நிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக் கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்கு ஜோடியே தேவையில்லை’ என்ற படி தனி ஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்த அறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.

வெளிச்சம், இருட்டு என்ற வித்தியாசம் எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமான உணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம் தராமல், அடுத்தடுத்து பத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியான அந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் ‘தேனிலவு சூட்’ அல்லது ஏதாவது குளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.

ஸாரி... அது தப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையை அனுபவித்தது, ஓர் ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான் நடந்தது இந்த ஆராய்ச்சி.

‘இதில் போய் என்ன ஆராய்ச்சி!’ என முகத்தைச் சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்த பாராவுக்கு போங்கள்.

இந்த வித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்... ‘இருண்ட கண்டம்’ என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்த ஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோ தொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
வகைப்படுத்தி பெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.

ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின் அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? ஒட்டுமொத்த உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளை உலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது? பிரபஞ்சத்தை சிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்த ஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பது வெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்? இந்த உறவில் பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன? பலபேருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்?



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 12:57 am

விந்து உற்பத்தி என்பது ஒரு ஊற்று போல ஊறிக் கொண்டே இருக்கும். இப்படி நிமிடம்தோறும் சளைக்காமல் ஊற்றெடுக்கும் விந்து, விதைக்குள்ளேயே தொடர்ந்து சேகரித்து வைக்கப்பட்டிருக்காது. இதனை, நாமாக செக்ஸில் ஈடுபட்டு வெளியேற்றுகிறோமா... அல்லது தூக்கத்தில் நம்மை அறியாமல் அது வெளியேறுகிறதா... என்பதெல்லாம் அவரவருடைய வசதி மற்றும் அசதியைப் பொறுத்தது.

பிரம்மச்சர்யம் உயர்வானது என்று சொல்கிறவர்களால் கூட தங்களின் விந்துவை கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள முடியாது. ஒரு தண்ணீர் குழாயில் இருந்து விழுகிற நீரை பக்கெட்டில் பிடிக்கிறோம். குழாயை மூடாமல் விட்டால், அல்லது மூட முடியாவிட்டால் பக்கெட் நிரம்பி விழுவதை தவிர வேறு வழியில்லை. விந்து உற்பத்தி என்பது மூடமுடியாத குழாய்தான்!

பிரம்மச்சாரி என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதில் ஒன்று, செக்ஸில் ஈடுபடாதவன் என்பது. உலகில் பிரம்மச்சாரிகள் இருக்கலாம். ஆனால், ஸ்கலிதம் ஆகாத பிரம்மச்சாரிகள் இருக்கவே முடியாது!

விந்து அதிகமாக வெளியேறினால் உடம்பு பாதிக்கும் என்றும், "விந்து விட்டவன் நொந்து கெட்டவன்" என்றெல்லாம்கூட தவறான நம்பிக்கைகள் மக்களிடம் உள்ளன. எச்சில் மாதிரிதான் விந்துவும். தேவையில்லாமல் எச்சிலைத் துப்பிக் கொண்டிருப்பவர்களின் உடம்பு பாதிக்கவா செய்கிறது? எச்சிலைப் போலவே விந்து வெளியேறுவதாலும் எந்த பாதிப்பும் இல்லை என்பதே உண்மை.

எச்சிலைப் போல விந்துவும் உடம்பில் ஊறும் ஒரு திரவம்தான். விந்து வெளியேறினால் உடம்பு பாதிக்கும் என்று மக்கள் நினைப்பது உண்மை என்றால், திருமணமான ஒவ்வொரு ஆணும் இரண்டே வருடத்தில் டி.பி.நோயாளி மாதிரியல்லவா ஆகியிருக்க வேண்டும்? எப்படி மொழுமொழு என்று ஆரோக்கியமாக இருக்கிறார்கள்?
விந்துவைப் பற்றி இவ்வளவு தவறான நம்பிக்கைகள் இருக்கக் காரணம் இயற்கையின் படைப்பு ரகசியங் களையும், படைப்பின் நோக்கத்தையும் மக்கள் புரிந்து கொள்ளாததுதான்.

மக்களின் இந்த அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு, பல போலி டாக்டர்கள் பணம் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். "தாது நஷ்டமா? ஓடி வாருங்கள் உடனடி குணம் தருகிறோம்" என்று கூப்பிடும் இந்தப் போலி டாக்டர்களும், இவர்களின் சிட்டுக்குருவி லேகியங்களும் விஞ்ஞானத்துக்குப் புறம்பானைவை மட்டுமல்ல, தடைசெய்யப்பட வேண்டியவையும்கூட.

அடுத்து, "பீஜம்" என்று சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் வித்து (Seed), ஷேத்திரம் என்று சொல்லப்படும் மண் (Land) பற்றியும் பார்ப்போம். என்ன... டாக்டர் திடீரென்று வித்து, மண் என வேளாண்துறை செய்திகளுக்குத் தாவுகிறாரே என்று நினைக்கிறீர்களா?

வித்துக்கும் (பீஜம்) மண்ணுக்கும் (ஷேத்திரம்) வேளாண் துறையில் உள்ள உறவு உலகுக்கே தெரியும். இந்த இரண்டும் ஒரு பயிர் வளர, அடிப்படையான விஷயங்கள். அதேபோல்தான், ஒரு உயிர்வளர வித்து என்ற உயிரணுவும், அதைத் தாங்கிச் சுமந்து வளர்க்கக்கூடிய கர்ப்பப் பை என்ற நிலமும் தேவை! ஆணின் விதையிலிருந்து உருவாகும் உயிரணுவில் தலை, உடம்பு, வால் என மூன்று பகுதிகள் உள்ளன. தலைப்பகுதி கிட்டத்தட்ட "வேல்" வடிவத்தில் அமைந்திருக்கும். இந்தத் தலைப் பகுதியில்தான் ஒரு மனிதனின் பரம்பரைத் தன்மைகள் பொதித்து வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட அந்த மனிதனின் குணம், நிறம், பரம்பரை நோய்கள் போன்ற அனைத்து சமாசாரங்களும் உயிரணுவின் தலைப் பகுதியில்தான் அடங்கியிருக்கும். ஒவ்வொரு உயிரணுவின் தலைப்பகுதியிலும் 23 குரோமோசோம்கள் இருக்கும் (பெண்ணின் கருமுட்டையிலும் 23 குரோமோசோம்கள் இருக்கும்).



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 12:57 am

உயிரணுவின் உடல் பகுதியை, உயிரணுவின் "பவர் ஹவுஸ்" என்றுதான் சொல்லவேண்டும். ஆண்குறியிலிருந்து வெளியேறும் ஒரு உயிரணு... பெண்ணின் பிறப்புறுப்புப் பாதையிலும், ஃபெலோபியன் குழாய்களிலும் நீச்சலடித்துக் கருப்பைக்குள் செல்ல வேண்டும். இப்படி முழு வீச்சுடன் முண்டியடித்து நீந்தி செல்வதற்கான சக்தியை உயிரணுவுக்குத் தருவது, உயிரணுவின் உடல் பகுதிதான்.

பெண்ணின் பிறப்புறுப்புக்குள் உயிரணு நீந்திச் செல்லப் பயன்படுவது, அதன் வால்பகுதி. தலைப்பிரட்டை எனப்படுகிற தவளைக் குஞ்சு மாதிரிதான், உயிரணுவின் வடிவம் ஏறக்குறைய இருக்கும். வாலின் உதவியுடன் நீந்தும் உயிரணு மணிக்கு 5 முதல் 7 அங்குலம் வரை நீந்த முடியும்.

தவளைக் குஞ்சை கண்ணால் பார்ப்பதுபோல், உயிரணுவைப் பார்க்க முடியாது. மைக்ராஸ்கோப் மூலம்தான் பார்க்க முடியும். 17ம் நூற்றாண்டு வரை உயிரணுவைப் பற்றி யாருக்கும் சரியாகத் தெரியாததற்குக் காரணம், மைக்ராஸ்கோப் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததுதான். அதே நூற்றாண்டில் டென்மார்க்கை சார்ந்த விஞ்ஞானி லீவன் ஹுக், மைக்ராஸ்கோப்பைக் கண்டுப்பிடித்த பிறகுதான் மருத்துவ உலகில் பல அற்புதங்களை, பேருண்மைகளைக் கண்டறியும் வாய்ப்பு கிட்டியது. தான் கண்டுப்பிடித்த மைக்ராஸ்கோப்பிலேயே முதன்முதலாக உயிரணுவைப் பரிசோதித்து, "உயிரணு என்பது இப்படித்தான் இருக்கும்" என்று உலகின் கூரையில் நின்று கூவினார் லீவன் ஹுக்!

ஆணின் விதையில் உருவாகும் உயிரணு, உருவாகும் போதே இன்னொரு உயிரை உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்குத் தகுதியோடும், பக்குவமாகவும் இருப்பதில்லை. படிப்படியாக வளர்ந்துதான் அது ஒரு பக்குவநிலைக்கு வருகிறது. பக்குவப்பட்ட ஒரு உயிரணு உருவாகக் கிட்டத்தட்ட 60 முதல் 72 நாட்கள் வரை ஆகும். அத்தகைய உயிரணு, ஆணுறுப்பிலிருந்து வெளிவந்த பிறகு 72 மணி நேரமே உயிருடன் இருக்கும். அதன்பிறகு இறந்துவிடும். பக்குவப்பட்ட உயிரணு ஏதோ காரணங்களால் வெளிவர முடியாவிட்டால் (உதாரணமாகக் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்திருந்தால்), அது அங்கேயே இறந்துவிடும். இறந்த உயிரணுவில் உள்ள பொருட்கள் உடலுக்குள்ளேயே ஜீரணிக்கப்பட்டுவிடும்.

சரி... ஆணுறுப்பு பற்றியும் விந்து, உயிரணு பற்றியும் போதுமான அளவு தெரிந்து கொண்டுவிட்டோம். இனி பெண்ணின் ஜனன உறுப்பு பற்றி பார்ப்போம். ஆண் ஜனன உறுப்பு போலவே, பெண்ணின் ஜனன உறுப்பிலும் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகள், கண்ணுக்குத் தெரியாத உள் உறுப்புகள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு.
இதழ்கள் மற்றும் யோனிமலர் எனப்படும் கிளிட்டோரிஸ் (Clitoris), வெஸ்டிபியூல் (Vestibule) போன்ற பகுதிகள் கண்ணுக்குத் தெரிபவை. இதழ்களில் இரு பகுதிகள் உண்டு. லேபியா மெஜோரா எனப்படுவது மேல் இதழ். இந்த மேல் இதழை விரித்தால் தெரிவது, உள் இதழ். இதற்கு லேபியா மைனோரா என்று பெயர். இதில் இரண்டு அடுக்குகள் உண்டு. இந்த இதழ்கள் பெண்ணின் பிறப்புறுப்பை ஒரு "சதைக் கதவாக" இருந்து பாதுகாக்கின்றன. இவை வெறும் "சதைக் கதவு" மட்டுமில்லை... ஏராளமான உணர்ச்சி நரம்புகள் இவற்றில் பின்னிப் பிணைந்து கிடப்பதால், இவை இன்பச் சுரங்கமும்கூட! ஒரு பெண்ணுக்கு செக்ஸ் சுகத்தை அளிப்பதில் இதழ்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. இதில் லேபியா மைனோரா இதழை விரித்தால், அதற்குள் இருப்பதுதான் வெஸ்டிபியூல். இது பிறப்புறுப்பின் உள் பகுதி. இதில் சிறுநீர் துவாரம் மற்றும் பெண்குறியின் உள்பாதை இரண்டும் இருக்கும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 12:57 am

பெண்களின் பிறப்புறுப்பு காவலர்களான இதழ்கள் பற்றி இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்... இந்த இதழ்கள், பெண்ணுக்குப் பெண் வித்தியாசமாகவே இருக்கும். ஒரே பெண்ணுக்குக் குழந்தை பெற்றெடுப்பதற்கு முன்பு ஒரு மாதிரியும், பெற்றெடுத்த பின்பு வேறு மாதிரியும் இருக்கும். இதுபோல நிறைய குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்ணுக்கு வேறு மாதிரி இருக்கும். இதற்காகப் பெண்கள் கவலைப்படத் தேவையில்லை.

பொதுவாகவே பெண்கள் தங்கள் உடல் உறுப்புகளின்மீது அதிக அக்கறையும் கவலையும் கொள்பவர்கள். "அடடா... நெற்றி கொஞ்சம் பிறை மாதிரி இருந்திருக்கலாமே. இடுப்பு வெண்ணெய்த் தீவாக இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். இப்படி மடிப்பு மலைத்தொடராக இருக்கிறதே உதடு இப்படி மணிபர்ஸ் மாதிரி அமைஞ்சிருச்சே! ..." என்றெல்லாம் கவலைப்படுவார்கள். இத்தகைய பெண்களில் பலருக்குத் தங்களின் பிறப்புறுப்பு மீதும் நிறைய கவலைகள் உண்டு.

நியூயார்க் நகரில் பெட்டி டாட்ஸன் என்று ஒரு பெண்மணி பென்சில் ஓவியம் வரைவதில் கில்லாடி. சிறு வயதிலிருந்து தான் அனுபவித்த சுய இன்ப பழக்கத்தால் தன் பிறப்புறுப்பு சிதிலமடைந்திருக்குமோ என்ற கவலை அவரை வாட்டி எடுத்தது. இந்தப் பயத்தால், கணவருடன் உறவில் ஈடுபடும் போதெல்லாம் ஆடைகளைக் களைவதற்கு சம்மதிக்கவே மாட்டார். இதற்கிடையே வேறு ஏதோ காரணத்தால், கணவன் அவரை விட்டுப் பிரிய... டாட்ஸனை தனிமை வாட்டியது. அப்போது சில ஆண் நண்பர்களின் நட்பு அவருக்குக் கிடைத்தது. அதில் ஒருவன் வற்புறுத்தி ஆடையைக் களையவைத்து, "சுய இன்ப பழக்கத்தால் பிறப்புறுப்பு சேதமடையவில்லை, பார்!" என்று காட்டியபிறகே அவருக்கு உண்மை புரிந்தது.

அதன்பிறகு தன்னம்பிக்கை பெற்ற டாட்ஸன் ஓவியம் வரைவதில் முழு நேரம் ஈடுபட்டார். தன்னுடைய பென்சில் ஓவியங்களை வைத்துக் கண்காட்சியும் நடத்தினார். இந்தக் கண்காட்சியில் இடம்பெற்ற டாட்ஸனின் ஓவியங்களில் இயற்கை காட்சிகளோ, மலர்களோ, மரங்களோ இடம்பெறவில்லை. இடம் பெற்றிருந்த அத்தனை ஓவியங்களும் பெண்ணின் பிறப்புறுப்புகள்தான்! டாட்ஸனை புகழ் தேடிவந்தது.

அடுத்து அவர், "பாடி செக்ஸ் ஒர்க்ஷாப்" எனும் பெயரில் பெண் பிறப்புறுப்புகளைப் பற்றிய கருத்தரங்கத்தை நியூயார்க் நகரில் நடத்தினார். பெண்கள் கூட்டம் முண்டியடித்தது. ஆண்களுக்கும் ஒரு பிரத்யேக ஒர்க்ஷாப் நடத்துமளவு பிரபலமானார். பின்னாட்களில் புகழ்பெற்ற பிரபல செக்ஸ் நிபுணராகவும் டாட்ஸன் மாறினார்.
இவரின் ஜாதகத்தை ஏன் சொல்கிறேன் என்றால் புகழ்பெற்ற அறிவுஜீவிகள், கலைஞர்கள், புத்திசாலிகள்கூட பிறப்புறுப்புகளைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டிருந்தார்கள் என்பதற்காகத்தான்.

பெண்ணின் ஜனன உறுப்பில் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளே இருக்கும் பகுதிகளில் பெண்குறி உள்பாதை, கர்ப்பப் பையின் வாசல், கர்ப்பப்பை, ஃபெலோபியன் டியூப், கருமுட்டைப் பை ஆகியவை அடங்கும்.

பெண் பிறப்புறுப்பின் உள்பாதை, கண்ணுக்குத் தெரியும் வெஸ்டிபியூல் பகுதியில் தொடங்கிக் கர்ப்பப்பை வாசல் வரை அமைந்திருக்கும். உள்பாதையில் ஒரு அங்குல தூரத்தில் அமைந்திருப்பது கன்னித்திரை. இதைப்பற்றிய செய்திகளை முந்தைய அத்தியாயங்களிலேயே நாம் பார்த்திருக்கிறோம்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 12:58 am

வெவ்வேறு அளவுள்ள பாதங்களுக்கு ஏற்ப சுருங்கி விரியும் தன்மை கொண்ட கால் சாக்ஸ் மாதிரிதான் இந்தப் பிறப்புறுப்பின் உள்பாதையும் அமைந்திருக்கும். சில பெண்கள், ஆண் அளவுடன் ஒப்பிட்டுக் கவலை கொள்வார்கள். தேவை இல்லாத கவலை இது. இந்தக் கவலையைத் தூக்கி வீசாத பெண்களுக்குத் திருமணத்துக்குப் பின்னர் "வெஜினிஸ்மஸ்" (Vaginismus) என்கிற செக்ஸ் பிரச்னை ஏற்பட்டு விடும். இது போன்ற உணர்வில் உள்ள பெண்களுக்கு, பிறப்புறுப்பு இறுக்கமாகி பிரச்னை வரும். இத்தகைய பெண்களுக்கு நான் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தி, "பத்தாவது மாதம் ஒரு குழந்தையே ஜம்மென்று இந்தப் பாதை வழியேதான் வெளிவருகிறது. அப்படியிருக்க பயம் எதற்கு?"

அடுத்துக் கர்ப்பப் பையின் வாசல். இதுவும் நீளும் தன்மை கொண்டதே. இப்பகுதியில் மியூக்கஸ் எனும் சளிபோன்ற திரவம் உற்பத்தியாகி, அது கர்ப்பப்பை வாசலில் அடர்த்தியான சளிப்படலமாக அமைந்திருக்கும். கருமுட்டை வெளிவரும் நாளில், இந்த சளிப்படலம் கரைந்து, பிறப்புறுப்பு பாதை வழியாக வெளிவந்து விடும். இதனையே வெள்ளைப்படுதல் என்று தவறாக நினைக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.

இதை, "இயற்கையான குடும்பக் கட்டுப்பாடு முறை" என்று நினைத்துக்கொண்டு உறவில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள். கருமுட்டை வரும் நாளில் மியூக்கஸ் சளிப்படலம் மெலிதாகிக் கரைந்துவரும் விஞ்ஞான உண்மையை உல்ட்டாவாகப் புரிந்துகொண்டு, அந்த நாட்களில் உடலுறவு கொள்வதைத் தவிர்ப்பார்கள். ஆனால், இந்த நம்பிக்கை விஞ்ஞானப்பூர்வமானது அல்ல.

சரி... இனி நாம், கண்ணுக்குத் தெரியாமல் பெண்ணின் உடலுக்குள் அமைந்துள்ள கர்ப்பப்பை, கருமுட்டைப் பை, கருமுட்டை ஆகியவை பற்றிப் பார்க்கலாமா?

"காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்த
கதவு ஒன்று கண்டறிவோம்!" என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும்...

"கற்பு என்பது உள்ளபடி நம் கர்ப்பப் பையில் இல்லையடி!" என்று கவிப்பேரரசு வைரமுத்துவும் பெண்ணின் கர்ப்பப்பை குறித்துத் தம் பார்வைகளைப் பதிவு செய்திருக்கின்றனர்.

சரி... நாம் பெண்ணின் பிறப்பு உறுப்புக்குள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் விஷயங்களைப் பற்றி ஆராய்வோம். கர்ப்பப் பைக்கு ஆங்கிலத்தில் யூட்ரஸ் (Uterus) என்று பெயர். கர்ப்பப் பையின் பரப்பளவு எவ்வளவு தெரியுமா? ஆச்சர்யப் படாதீர்கள்... நம் ஒரு கையை இறுக்கி மூடும்போது கிடைக் கும் பரப்பளவுதான்!
முக்கோண வடிவில் இருக்கும் கர்ப்பப்பை, சாதாரண நிலையில் 3 முதல் 4 அங்குல நீளமும், 2 அங்குல அகல மும் உடையது. அதேசமயம், கருவுற்ற காலத்தில் இதன் நீளம் 12 முதல் 13 அங்குலமாகவும், அகலம் 8 முதல் 10 அங்குல மாகவும் விரிவடையும். முக்கோண வடிவத்தின் கூர்பகுதி யில் கர்ப்பப் பையின் வாசல் இருக்கும். கர்ப்பப் பையின் சுவர்கள் அடர்த்தியாகவும் நீளும் தன்மை உடைய தாகவும் இருக்கும். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அது இயல்பான நிலைக்கு செல்ல வேண்டும் என்பதற் காகத்தான் இப்படியரு நீட்சித்தன்மையுடன் படைக்கப்பட்டிருக்கிறது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 12:58 am

பிறப்புறுப்பின் உள்பாதை, பெண்ணுக்குப் பெண் வித்தியாசப்படும். சராசரியாக சாதாரண நிலையில் பெண்குறியின் உள்பாதையின் நீளம் மூன்றிலிருந்து ஐந்து அங்குலம் வரை இருக்கும். ஆனால், இயற்கையின் அற்புதம் பாருங்கள்... இந்த உள்பாதையை ரப்பர் பாண்ட் மாதிரி... தேவைக்கேற்ப நீளும் வசதிகொண்டதாக இயற்கை படைத்திருக்கிறது!

கர்ப்பப் பையின் சுவர்கள் மூன்று அடுக்கு களைக் கொண்டிருக்கும். உள்ளே இருக்கும் அடுக்குக்கு "எண்டோமெட்ரியம்" என்று பெயர். கரு உருவானதும் அது வளர்வதற்கு ஏதுவாக சற்று பருத்து, ஒரு குஷன் போல் பயன் தரும் இந்த அடுக்கு. ஒருவேளை கரு தரிக்க வில்லை என்றால் இறந்த கருமுட்டை, உப்ப லான எண்டோமெட்ரியத்தின் துகள்கள் எல்லாம் மாதவிடாய் சமயத்தில் ரத்தத்துடன் கலந்து வெளியேறி விடும். ஒவ்வொரு மாதமும் எண்டோமெட்ரியம் உப்பலாகும். கரு உருவாகவில்லை என்றால், கழிவுகள் மாதவிடாயின்போது வெளிவந்துவிடும். இது ஒரு சுழற்சியாகவே நிகழும். பெண் பருவமடைந்திருந்த நாளிலிருந்து மெனோபாஸ் வரை இது நடக்கும்.

அடுத்து, ஃபெலோப்பியன் டியூப். இது கர்ப்பப் பையின் மேல்புறம், இடது மற்றும் வலது பக்கத்தில் இரு குழாய்களாக இருக்கும். ஒவ்வொரு ஃபெலோப்பியன் குழாயும் 4 அங்குல நீளம், 2 மில்லிமீட்டர் குறுக்களவு கொண்டது. இதனுள்ளே சிறுசிறு நூல் மாதிரி "சீலியா" என்பது அமைந்திருக்கும். கருமுட்டையைக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக் கர்ப்பப் பைக்குக் கொண்டு வருதற்காக இந்த சீலியாக்கள் மரவட்டையின் கால்களைப் போல் அசைந்து கொண்டேயிருக்கும்.

இடையில் ஒரு செய்தியை சொல்லி விடுகிறேன். பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் (Tubectomy) செய்யப்படும் போது இந்த ஃபெலோப்பியன் டியூப் பைதான் வெட்டித் தைப்பார்கள்.

கரு முட்டைப் பையைப் பற்றி இப்போது பார்க்கலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் இரண்டு கரு முட்டைப்பை கர்ப்பப் பைக்கு இடது புறமும், வலதுபுறமும் அமைந்திருக்கும். கிட்டத்தட்ட பாதாம் பருப்பு வடிவத்தில் இருக் கும். இவை ஒன்றரை அங்குல நீளம், ஒரு அங்குல அகலமும் உடையவை. ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே, கரு முட்டைப்பை இருக்கும். அதில் பக்குவப் படாத சுமார் இரண்டு லட்சம் கருமுட்டைகள் இருக்கும். இந்த லட்சக் கணக்கான கருமுட் டையில் (பருவம் எய்திய நாளிலிருந்து மெனோபாஸ் வரைக்கும்) ஏறக்குறைய 300 முதல் 500 கருமுட்டைகளே பக்குவத்துக்கு வருகின் றன. மீதி உள்ளவற்றை உடம்பே ஜீரணித்து விடும். ஒவ்வொரு மாதமும் இடதுபுற அல்லது வலது புற கருமுட்டைப் பையிலிருந்து பக்குவமடைந்த ஒரு கருமுட்டை, பையிலிருந்து வெளிபட்டு சீலியாக்களால் நகர்த்தப்பட்டு கருப்பைக்குள் வரும். இப்படி ஒவ்வொரு மாதமும் கருமுட்டை வெளிப்படுவதற்கு "ஓவலேஷன்" (Ovulation) என்று பெயர்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 12:58 am

லத்தீன் மொழியில் முட்டைக்கு "ஓவம்" (Ovum) என்று பெயர். இந்தக் கருமுட்டை வெளியேறு தல் ஒவ்வொரு பெண்ணுக்கும் பருவமடைந்த நாளிலிருந்து மெனோபாஸ் வரை 4 வாரங்களுக்கு ஒரு தடவை தொடர்ந்து நிகழும். கருமுட்டையைப் பக்குவமடைய வைப்பது, அதை நான்கு வாரத்துக்கு ஒரு முறை வெளிவர வைப்பது போன்றவற்றை ஈஸ்ட்ரோஜன் எனப்படும் பிரத்யேக பெண் ஹார்மோன் செய்யும். கருமுட்டை கருப்பைக்குள் போனதும் அந்த மாதமே அப்பெண் கருவாகிவிட்டால், அடுத்த மாதம் வெளிப்படும் முட்டை என்னவாகும் என இயல்பாக உங்களுக்குக் கேள்வி எழும். நம்மைவிட இயற்கை அதிபுத்திசாலி. அப்படி அப்பெண் முதல் முட்டையிலேயே கருதரித்துவிட்டால், அந்த முட்டை எங்கிருந்து வெளிப்பட்டதோ அங்கே "ப்ரஜஸ்டெரோன்" (progesterone) எனும் ஹார்மோன் உருவாகி, மேற்கொண்டு அடுத்த கருமுட்டை வெளிவராமல் பார்த்துக் கொள்ளும்.

இங்கு இன்னொரு விஷயம் சொல்கிறேன். கர்ப்பத் தடை மாத்திரைகள் கர்ப்பம் அடையாமல் பார்த்துக்கொள்வது எப்படி தெரியுமா? அந்த மாத்திரைகளில் இருக்கும் ஹார் மோன் மருந்துகள், வாய்வழி உள்ளே சென்று ப்ரஜஸ்டெ ரோனை உருவாக்கி, முட்டை வெளியேறாமல் பார்த்துக் கொள்ளும்.
ஒரு பெண்ணுக்கு 45 வயதிலிருந்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது நின்று விடுவதால்தான் அந்த வயதில் மாதவிடாய் நின்று விடுகிறது.

கருமுட்டையைப் பற்றியும் பார்த்துவிடுவோம். ஆணின் உயிரணுவில் இருப்பது போலவே பெண்ணின் கருமுட்டையிலும் 23 குரோமோ சோம்கள் இருக்கும். பரம்பரை குணங்கள், நிறம், பரம்பரை நோய்க் கூறுகள் எல்லாம் இதில்தான் பொதிந்திருக்கும். கருமுட்டையின் குறுக்களவு ஒரு மில்லிமீட்டர். குண்டூசி தலை அளவுதான் இருக்கும். பையிலிருந்து முட்டை வெளியாகி ஏறக்குறைய 24 மணிநேரம் வரை உயிருடன் இருக்கும்.

சரி, கரு எப்படி உருவாகிறது?



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 1:21 am

ஒருமுறை உடல் உறவு கொள்ளும்போது 380 முதல் 480 மில்லியன் உயிரணு பெண்ணுறுப்புக்குள் செல்லும். இந்த உயிரணுக்கள் பெண்குறி பாதை, கர்ப்பப்பை வாசல் என பலவற்றில் பயணித்து ஃபெலோப்பியன் டியூப்புக்குள் செல்ல கிட்டத்தட்ட மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் ஆகும். இதனால், 480 மில்லியன் உயிரணுவில் சுமார் 3000 உயிரணுக்கள் மட்டுமே டியூப்புக்குள் செல்லும். இவற்றிலும் பல, அசைந்து கொண்டேயிருக்கும் சீலியாக்களை எதிர்கொள்ள முடியாமல், இறந்துபோய் சில நூறு உயிரணுக்களே எஞ்சி நின்று கருமுட்டைக்கு அருகில் போய் நிற்கும். இந்த சில நூறு உயிரணுக்களில், ஒரே ஒரு உயிரணு மட்டுமே கடைசியில் கருமுட்டையைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிடும். ஒரு உயிரணு வந்தவு டன் கருமுட்டை மூடிக்கொள்ளும். இன் னொரு உயிரணு உள்ளே வராமலிருக் கத்தான் இந்த ஏற்பாடு!
கருமுட்டையிலிருக்கும் 23 குரோமோசோம்களும், உயிரணுவில் இருக்கும் 23 குரோமோசோம்களும் சேர்ந்து (23 ஜோடி) 46 குரோமோசோம்களாகி உயிர் உருவாகும்.

இயற்கைக்கு ஈடு இணை ஏதுமே இல்லை என்று திரும்பத் திரும்ப... பலரும் சொல்வதற்கு என்ன காரணம் என்பது புரிகிறதா மனிதர்களே..!

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். ஒரே ஒரு உயிரணு மட்டும் கருமுட்டையை அடைந்து உயிர் உருவாகிறது எனும்போது... ஏன் இயற்கை லட்சக்கணக்கான உயிரணுக்களை விந்தில் உருவாக்குகிறது? நியாயமான கேள்விதான்.

மராத்தான் ஓட்டம் பார்த்திருக்கிறீர்களா?

அதில் ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்கும்போது சில நூறு பேர்கள் இருப்பார்கள். கடைசியில் பல மைல்களை கடந்து, இறுதியில் ஜெயிப்பது ஒரே ஒருவர் மட்டுமே. மராத்தான் ஓட்டத்தில் பல மைல்களைத் தொய்வின்றி, எந்தவிதமான தங்குதடையின்றி ஓடிச்சென்று கடக்க பலம் வேண்டும். அப்படிப்பட்ட சக்தியுடையவர்களை வெகு சிலரிலிருந்து கண்டுபிடிக்க முடியாது... இருக்க மாட்டார்கள். அதனால்தான் மராத்தானில் பலர் ஓடுகிறார்கள். அதுபோல உயிரணுவும் உள்ளே நீந்தி செல்ல மிகுந்த பலம் தேவை. இது வெகு சில உயிரணுவால் மட்டுமே சாத்தியம். அதனால்தான் பல லட்ச உயிரணுக்களை இயற்கை படைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, கருமுட்டையைத் துளைத்துக் கொண்டு உயிரணு உள்ளே செல்கிறது என்றோமல்லவா... அப்போது, உயிரணுவின் உடல் பகுதி, வால் பகுதி ஆகியவை உள்ளே போகாது. கருமுட்டையை உயிரணு துளைக்கும்போது, உயிரணுவின் தலைப்பகுதியில் இருக்கும் 23 குரோமோசோம்களை மட்டும் (நியூக்ளியஸ்) கருமுட்டைக்குள் செலுத்திவிட்டு, உயிரணுவில் வாலும் உடலும் இறந்துபோய் திரும்பி விடும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 1:22 am

உயிரணு கருமுட்டையை மோதும்போது, உயிரணுவின் தலைப்பகுதியில் "அக்ரோசின்" எனும் ரசாயனம் வெளிப்பட்டு கருமுட்டையின் சுவரை அரித்து சிறிய துளையை ஏற்படுத்தும். ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கத் தேவையான அளவில் உயிரணுக்கள், ஆரோக்கியமான உயிரணுக்கள் ஓர் ஆணிடம் இருக்க வேண்டும். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் "தனது விந்து கெட்டியாக இருக்கிறது என்றோ, நீர்த்துள்ளது என்றோ..." நினைத்துகொண்டு சிலர் போலி டாக்டர்களிடம் சிகிச்சைக்கு செல்வார்கள். அவர்களும், இதை சாக்காக வைத்துப் பணதைக் கறந்துவிடுவார்கள். விந்து கெட்டியாக இருப்பதற்கும், நீர்த்து இருப்பதற்கும் நாம் சாப்பிடும் உணவு, நம் உடலில் உள்ள நீர்சத்து, உடல் ஆரோக்கியம் போன்றவைதான் காரணம். ஆகவே விந்து கெட்டியாக அல்லது நீர்த்துப் போயிருப்பது ஒரு குறைபாடு அல்ல. ஆரோக்கியமான உயிரணு அதில் உள்ளதா என்பதே முக்கியமானது. சரி, உயிர் எப்படி வளர்கிறது? உயிர் எப்படி வளர்கிறது...

கருமுட்டையுடன் விந்தின் உயிரணு இணைந்ததும் கரு உருவாகிறது. ஆரம்பத்தில் கருவுக்குள் ஒரே ஒரு செல்தான் இருக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் அந்த ஒரு செல், இரண்டு செல் ஆகிவிடும். அடுத்தடுத்து, அவை பன்மடங்காகப் பெருகி நான்காவது நாளில் பல ஆயிரம் செல்கள் சேர்ந்த ஒரு பந்து மாதிரி ஆகிவிடும். இந்தப் பந்துக்கு மாருலா (Morula) என்று பெயர். இந்த மாருலா, நான்காம் நாள் ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கர்ப்பப் பைக்குள் வந்துவிடும். ஏழாம் நாள் கர்ப்பப் பையில் உப்பிக்கொண்டிருக்கும் உள்சுவரான "எண்டோமெட்ரிய"த்தில் இந்த மாருலா அமர்ந்துவிடும். அங்கே படிப்படியாகப் பத்தாவது மாதம் வரை வளரும். அதன்பிறகு ஒரு புதிய ஜீவன் பூமிக்கு வந்து வெளிச்சத்தைத் தரிசிக்கும். இது இயற்கையாக, இயல்பாக எல்லோருக்கும் நடைபெறும் கருத்தரித்தலாகும்.

ஆனால், வெகு சில பெண்களுக்கு நான்காவது நாள் ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து, மாருலா நகராமல் அதற்குள்ளேயே கருவாக வளரும். இதற்கு "எக்டோபிக் பிரகனன்சி" (Ectopic pregnancy) என்று பெயர். இது தாயின் உயிருக்கே ஆபத்தாகி விடும் கர்ப்பம். ஏனெனில், கர்ப்பப்பைக்கு இருக்கிற விரிந்துகொடுக்கிற தன்மை, ஃபெலோப்பியன் டியூப்புக்கு இல்லை என்பதால்தான் இந்த ஆபத்து.

சரி, கரு எப்படி ஆணாகவோ பெண்ணாகவோ மாறுகிறது?


உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கும். இதில் 22 ஜோடி குரோமோசோம்களின் வேலை பரம்பரை குணம், நிறம், நோய்க்கூறு போன்றவற்றை நிர்ணயிப்பது. எஞ்சியுள்ள ஒரு ஜோடி, அதாவது 23வது ஜோடிதான் பாலினத்தைத் தீர்மானிக்கும் குரோமோசோம் (Sex chromosomes). ஆணின் உயிரணுவில் உள்ள 23 குரோமோசோமில் 50 சதவிகிதம் "எக்ஸ்" குரோமோசோம்களாகவும், 50 சதவிகிதம் "ஒய்" குரோமோசோம்களாகவும் இருக்கும். பெண்ணின் கருமுட்டையில் உள்ள 23 குரோமோசோமில் 100 சதவிகிதமும் "எக்ஸ்" குரோமோசோம்கள் மட்டுமே இருக்கும். ஆணின் உயிரணுவில் உள்ள "ஒய்" குரோமோசோம் பெண்ணின் கருமுட்டையில் உள்ள "எக்ஸ்" குரோமோசோமுடன் சேர்ந்தால் "எக்ஸ்ஒய்" ஆகி, ஆண் குழந்தை உருவாகும். உயிரணுவில் உள்ள "எக்ஸ்" குரோமோசோம் பெண்ணின் கருமுட்டையில் உள்ள "எக்ஸ்" குரோமோசோமுடன் சேர்ந்தால் "எக்ஸ்எக்ஸ்" ஆகி பெண் குழந்தை உருவாகும். இப்போது ஒரு உண்மை புரிகிறதா?

ஒரு பெண்ணின் வயிற்றில் பெண் குழந்தை உருவாகக் காரணமாக இருப்பது ஆணின் உயிரணு என்பது தெரியாத பலர், "பொட்டை புள்ளைய பெத்துருக்கியே, உன்னை மாதிரியே" என்று பெண்ணைத் திட்டுவார்கள். முழுக்க முழுக்க பெண், ஆண் என்பதைத் தீர்மானிப்பது ஆணின் உயிரணுதானே தவிர, பெண் அல்ல!



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 1:22 am

சரி... ஏன் ஒரு சிலருக்குக் குழந்தை பிறக்காமல் போகிறது... குழந்தை பிறக்காமை அல்லது குழந்தை உருவாக்க இயலாமை ஏன் ஏற்படுகிறது?

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணமான பத்தாவது மாதமே அவர்கள் மடியில் ஒரு மழலை தவழ வேண்டும் என்கிற ஆசை வரும். "திருமணம் ஆன அடுத்தகட்டம் உடனடியாகக் கர்ப்பம்" என்கிற நிலையிலேயே சமூகமும் புதுத் தம்பதிகளைப் பார்க்கிறது. இதனைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், "இப்போதைக்குக் குழந்தை வேண்டாமே" என்று ஒரு புதுமண ஜோடி தற்காலிகமாக இருவரின் விருப்பத்துடன் முடிவெடுக்க விடாமல் நிர்ப்பந்திப்பதுதான் தவறு என்கிறேன்.

திருமணமான ஒரு தம்பதிக்குப் பத்து மாதத்தில் குழந்தை பிறக்கவில்லை என்றால், அந்த ஜோடியைவிட அவர்களைப் பெற்றவர்கள்தான் அதிக கவலைப்படுகிறார்கள். "உங்க பொண்ணுக்கு ஏதாச்சும் விசேஷம் உண்டா?" என்று மற்றவர்கள் விசாரிக்கும்போது, அந்தப் பெற்றோர் தங்கள் மகளை அல்லது மகனை உசுப்பேற்றுவது வாடிக்கையாக இருக்கிறது. பல வீடுகளில் பெரியவர்கள் வீட்டுக்கு வந்த மருமகளிடம் அல்லது திருமணமாகிப் போன தனது மகளிடம், "இந்த மாசம் நீ தலை குளிச்சியா?" என்று வாஞ்சையோடு விசாரிப்பதன் அர்த்தம் இதுதான்.

ஆம்... இதெல்லாம் திருமணமான தம்பதிகளுக்கு சமூகமும் பெற்றோரும் உற்றோரும் தரும் நெருக்கடி. இதனால் அந்தப் புதுமணத் தம்பதிகளுக்கு ஒருவித மனஅழுத்தம் உண்டாகும் என்பதை எவரும் அறிவதில்லை.

வெளியிலிருந்து வருகிற நெருக்கடி யும், நிர்ப்பந்தமும் புதுமணத் தம்பதிகளின் சந்தோஷத்தைப் பறிப்பது டன் அர்த்தமற்ற கவலைகளை உருவாக்கிவிடும். ஆயிரமாயிரம் வண்ணக் கனவுகளுடன் இல்லறச் சோலையில் அடி எடுத்து வைக்கும் அவர்கள், குழந்தைக்காக ஏங்க ஆரம்பித்து விடுகிறார்கள். இயல்பான சந்தோஷம் சிறகிழந்து விடுகிறது. இதனால்தான் திருமணமான ஓரிரு மாதங்களிலேயே சினிமா, பூங்கா, கோயில், நண்பர்கள் வீடு, ஊர் சுற்றல்... என்று வலம்வர வேண்டியவர்கள் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக ஏறி இறங்க வேண்டியவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

குழந்தையில்லாத தம்பதிகளில் சிலர் பத்திரிகை யில், தொலைக்காட்சிகளில் செய்தியாகக் காட்டப்படும் குழந்தை உருவாக்கும் புதிய மருத்துவ முறைகளை அறிந்து, அந்த முறையில் குழந்தை உருவாக்கிக் கொள்ள ஓடுவதும், பணத்தை நிறைய செலவு செய்வதும், பின்பு அந்த முறையில் குழந்தை உருவாக்க முடியாமல் போய் மனம் கலங்குவதையும் பார்க்க முடிகிறது. தங்களுக்கு, இந்த முறையில் கரு உருவாக்க முடியுமா? என்கிற அறிவின்மையே இதுபோன்ற வீண் அல்லாட்டத்துக்குக் காரணமாகிறது.

குழந்தை இல்லை என்கிற குறையின் காரணமாகப் பல குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் பிணக்கு, குடும்பத்துக்குள் சச்சரவு என்று ஏகப்பட்ட களேபரங்கள் நடப்பதையும் நாம் அறிவோம். இவர்கள் எல்லாம் சொர்க்கமாக இருக்கவேண்டிய தங்கள் வாழ்வை நரகமாக்கிக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 1:23 am

இவ்வளவு களேபரங்களுக்கு எல்லாம் என்ன காரணம்? திருமணம் ஆனதும் குழந்தை பிறந்துவிட்டால் கணவன், "தன்னை ஆண்மையுள்ளவன்" என்றும், மனைவி தன்னை "பெண்மை நிரம்பியவள்" என்றும் சமூகத்தின் முன்பாக நிரூபிக்கிறார்கள் என்கிற சமூக நம்பிக்கைதான் காரணமாகும். மொத்த சமுதாயமும் குழந்தை பெற்றெடுத்த தம்பதியைதான் நல்ல ஜோடியாகக் கருதுகிறது. இதுவொரு அவலமான நிலை.

ஒரு குழந்தை பெற்றெடுத்ததை வைத்து ஆணுக்கும் பெண்ணுக்கும் "ஆண்மை", "பெண்மை" முத்திரை குத்துவதே தவறு. ஏனெனில், குழந்தையை உருவாக்கும் திறன் பெற்ற ஒரு ஆண், செக்ஸில் குறைபாடு உள்ளவனாகக்கூட இருக்கலாம். இதுபோலவே, செக்ஸ் நடவடிக்கையில் எந்த குறைபாடும் இல்லாத ஒரு ஆணால், ஒரு குழந்தையை உருவாக்க இயலாமலும் போகலாம். இது பெண்களுக்கும் பொருந்தும்.

எனவே திருமணமான புதுமணத் தம்பதிகளுக்கும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் என்னுடைய அறிவுரை இதுதான்: "சமுதாயம் கேட்கும் கேள்விகளை, எள்ளல் பார்வைகளை மனசில் ஏற்றிக் கொள்ளாதீர்கள். ஏனெனில், நம்மீது உண்மையான அக்கறை கொண்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றபடி உள்ள எல்லோரும் சம்பிரதாயத்துக்கு நலம் விசாரிப்பவர்கள் மட்டும்தான்.

வாழ்வின் நோக்கமே சந்தோஷம்தான். குழந்தை இருந்தால், அந்த சந்தோஷம் இரட்டிப்பாகும் என்பது நிஜமே. அதேசமயம் குழந்தை இல்லாவிட்டால் வாழ்வில் சந்தோஷமே இல்லை என்று கருதுவதும் தவறு.

"கல்யாணம் ஆன தம்பதிகள் செக்ஸ் வைத்துக் கொண்ட உடனேயே குழந்தை உண்டாகிவிடும்" என்று மிகமிக எளிமையாக சொல்லிவிடுவார்கள். சொல்லுதல் யாருக்கும் எளிதல்லவா? ஆனால், புள்ளிவிவரம் ஒன்று "திருமணமானவுடன் 25 சதவிகித தம்பதிகளுக்குக் குழந்தை உண்டாவதில் சிக்கல் இருக்கிறது என்றும், இந்த 25 சதவிகிதத்தில் 10 சதவிகித தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவே பிறக்காது என்கிற நிலையும், மீதம் உள்ள 15 சதவிகித தம்பதிகளுக்கு எதிர்பார்த்த எண்ணிக்கையில் குழந்தை பிறக்காது" என்றும் குறிப்பிடுகிறது.

ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்காமைக்கான காரணங்கள் தற்காலிகமாக இருந்தால் அதற்கு பெயர் "இன்பெர்டிலிட்டி" (Infertility). அதுவே நிரந்தரமானவையாக இருந்தால் அதற்கு "ஸ்டெரிலிட்டி" (Sterility) என்று பெயர். ஒருவேளை, குழந்தை பிறக்காமைக்குக் காரணங்கள் நிரந்தரமானவையாக இருக்குமானால், அந்தத் தம்பதிகள் கவலைப்படவே தேவையில்லை. இதற்கு இன்றைய நவீன மருத்துவத்தில் நல்ல சிகிச்சை முறைகள் உள்ளன. உதாரணமாக, ஆணுக்குத் தீர்க்கமுடியாத குறைகள் இருந்தால் "டோனர் இன்செமினேஷன்"... பெண்ணுக்கு "சரோகேட் மதர்" எனும் சிகிச்சை முறைகள் நவீன மருத்துவத்தில் இருக்கிறது. இதன்மூலம் இவர்களும் மழலைச் செல்வத்தை மடியில் ஏந்தலாம்.

பொதுவாக ஒரு பெண் கர்ப்பமாக வேண்டும் என்றால், கருமுட்டை வெளியாகும் தருணத்தில் உடல் உறவில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, பெண்ணின் ஜனன உறுப்பும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆணின் உயிரணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக உருவான கரு தங்கி வளருவதற்கு ஏற்றாற்போல கர்ப்பப் பையும் ஆரோக்கியமாக இருப்பதுடன் கர்ப்பம் தரிக்கும் பெண்ணின் உடலும் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக