புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 9:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 9:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 9:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 3:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 1:04 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Sep 16, 2024 1:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 11:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 5:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 5:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 3:22 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 2:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:24 am

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 9:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 2:21 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 1:51 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat Sep 14, 2024 1:16 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Sep 14, 2024 12:36 am

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 9:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 4:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_m10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10 
14 Posts - 64%
heezulia
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_m10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_m10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10 
2 Posts - 9%
prajai
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_m10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10 
1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_m10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10 
1 Post - 5%
வேல்முருகன் காசி
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_m10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_m10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10 
140 Posts - 42%
ayyasamy ram
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_m10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_m10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_m10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_m10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_m10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_m10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_m10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_m10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_m10தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்!


   
   
senthilmask80
senthilmask80
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Postsenthilmask80 Mon Oct 03, 2011 10:43 am

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்!

தென் கிழக்கு ஆசிய நாடுகளில், கி.பி., முதல் நூற்றாண்டிலேயே, ராமாயணம் பரவத் தொடங்கி விட்டது. முதலில் வாய்மொழியாகவும், பிறகு நாடக வடிவிலும், அதற்கு பிறகு இலக்கிய வடிவத்திலும், ராமாயணம் இந்த வட்டார மக்களிடம், பிரபல மடைந்துள்ளது.
தாய்லாந்து, மலேசியா, இந் தோனேசியா, கம்போடியாவில் ராமாயண கதை இயற்றப் பட்டிருக் கின்றன. தாய்லாந்து ராமாயணத் தின் பெயர் ராமாக்கியன்; ராமகீர்த்தி என்றும் அது அழைக்கப்படுகிறது.
மலாய் மொழியில் இயற்றப்பட்ட ராமாயணத்தின் பெயர், ஹிக்காயத் ஸ்ரீராமா. பர்மா விலும், ஜாவாவிலும், 10ம் நூற்றாண்டில் எழுதப் பட்ட ராமாயணம், "ராம வத்து!'
சீனாவில், 16ம் நூற் றாண்டில், ராம காவியம் வரையப்பட்டது.
தென்கிழக்கு ஆசிய ராமாயணங்கள் வால்மீகி, கம்ப ராமாயணங்களுடன் ஒன்றுபட்டும், வேறு பட்டும் உள்ளன. வால்மீகி - கம்ப ராமாயணத்தில், தசரத மன்னருக்கு கவுசல்யா, சுமித்ரா, கைகேயி என்று மூன்று மனைவியர்.
தாய்லாந்தின் ராமாக்கியனில், இவர்கள் கவுசுரியா, சமுத்ராஜா, கையாகேஷி என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால், மலாய் மொழி ஹிக்காயத் ஸ்ரீராமாவில் தசரத மன்னருக்கு, இரு மனைவியர் தாம். அவர்களின் பெயர் மண்டூதரி, பல்யாதுரி!
தாய்லாந்து ராமாக்கியன் காவியம், கம்ப ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடையது. தமிழ்ச்சொற் களும், பெயர்களும் உள்ளன. கலைக்கோட்டி, ராம பட்டன், திரிபுரம், கென், சடாயு ஆகியவை சில உதாரணங்கள். இதைப் போன்றே, மலாய் மொழி ஹிக்காயத் ஸ்ரீராமாவிலும் பல தமிழ்ச் சொற்கள் காணப்படு கின்றன. தமிழர்களால், இப் பகுதிகளில் ராமாயணம் பரப்பப்பட்டதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நாடுகளின் அரசியல், சமய, கலாசார மாற்றங்கள், ராமாயணத்திலும் எதிரொலிக்கிறது. பர்மா, ஜாவா போன்ற நாடுகளில், 10ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ராமா யணத்தில், புத்த மதத்தின் தாக்கம் உள்ளது. அதனால், உயிர் பலி, தற்கொலை போன்ற அம்சங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. தசரதனுக்கு அளிக்கப்பட்ட சாபம், சூர்ப் பணகையின் மூக்கறுப்பு போன்றவை இதில் அகற்றப்பட்டுள்ளன. பூஷணன், தன் சகோதரன் ராவணனுக்கு புத்த சித்தாந்தத்தை உபதேசிக்கும் நீண்ட பகுதியும் இந்த, "ராமவத்து' காவியத் தில் உள்ளது.
சீன ராமாயண காவியம், 16ம் நூற்றாண்டில் எழுதப் பட்டது. அதில், குரங்கு வடிவான கடவுளுக்கு முக்கிய இடம் உண்டு. சீனப் புத்தகங்களில், குரங்குக் கடவுளின் படம் (அனுமன்) இடம் பெற்றுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா வில், ராமாயணம் அதிக செல்வாக்கு பெற்றுள்ளது. ஜாவா, சுமத்ரா, பாலி ஆகிய வட்டாரங்களில் பல ராமா யணங்கள் உள்ளன. "யோகீஸ்வரா' ஜாவா ராமா யணத்தின் பெயர். இந்தோ னேசியர்களின் வாழ்க்கை முறையில் இன்றளவும் ராமாயணம் தார்மீகப் பங்காற்றி வருகிறது.
இந்தோனேசியாவைப் போன்றே மலேசியா விலும் பல பெயர்களில் நீண்ட காலமாக ராமாயணம் செல்வாக்குடன் விளங்கி வருகிறது; ஹிக்காயத் ஸ்ரீராமா அவற்றில் ஒன்று. இது, 13ம் நூற்றாண்டுக்கும், 17ம் நூற்றாண்டுக்கும் இடைப் பட்ட காலத்தில் தோன்றியது. உரை நடையில் இயற்றப்பட்ட இந்த ராமா யணம், முதல் முறையாக, 1843ல் அச்சிடப்பட்டது. ராவணனின் பிறப்பு பற்றிய விவரிப்புடன், இது துவங்குகிறது. அன்றைய மலாயாவின் ராமாயணமான இதில், பாத்திரங்களின் உறவு முறையில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, சீதை, ராவணனின் மகள் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ராமனுக்கும், தேவி அஞ்சாதிக்கும் பிறந்தவன் அனுமன். வாலி, சுக்ரீவனின் சகோதரி இந்த அஞ்சாதி. ராவணன் மனைவி மண்டோதரிக்கும், வாலிக்கும் பிறந்தவன் அங்கதன் என்று வித்தியாசமான பல கருத்துகள் இதில் காணப்படுகின்றன. மலேசியாவில் ராமாயணப் பொம்மலாட்டங்களுக்கும் குறைவில்லை.
தாய்லாந்தில் ராமாயணம், ஆலய வழிபாடுகள், நாட்டியம், பொம்மலாட்டம், சிற்பம், ஓவியம் என பல துறைகளில் நீண்ட காலமாகச் செல்வாக்கு பெற்றிருக்கிறது. குறிப்பாக, தென்னிந்திய மரபில் வந்த ராமாயணம் என்பதால், வால்மீகி ராமாயணத் தாக்கம் அதிகம் இல்லை. வால்மீகி ராமாயணத்தில் அரக்கியாக வரும் சூர்ப்பணகை, அழகிய பெண்ணாக ராமனைச் சந்திக்கிறாள். கம்ப ராமாயணத்தில் இடம் பெறாத மயில் ராவணன் கதையும் இங்கு பிர பலம். தாய்லாந்து ராமாயணத்தில், அனுமனுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டி ருக்கிறது.
"நாங்' என்ற ராமா யணப் பொம்மலாட் டம், தாய்லாந்தில் தொடர்ந்து நடத்தப் பட்டு வருகிறது. தலை நகர் பாங்காக்கில் அமைந்துள்ள புத்தர் ஆலய சுற்று வட்டாரங் களில், ராமாயணகதைக் காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
லாவோஸ் நாட்டில், பல ராமாயணங்கள் வழங்கி வருகின்றன. வங்காள ராமாயணப் பின்னணியில் அமைந்த ராமாயணமும் அவற்றில் அடங்கும். அங்கு வழக்கத்தில் இருந்த, இரண்டு ராமாயணங்கள் சென்ற நூற்றாண்டில் லாவோசிய மொழியில் நூலாக அச்சிடப்பட்டன. தலைநகர் வியந்தின் கோவிலில் சுவரோவியமாகவும் ராமாயணம் சித்தரிக்கப்பட்டுள்ளது. கம்ப ராமாயணத்தில் உள்ளது போல், சீதை, ராமன் மீது காதல் கொள்ளும் நிலை, லாவோஸ் ராமா யணத்திலும் வர்ணிக்கப்படுகிறது. அதே சமயம், சீதை, ராவணனின் மகள் என்றும் கூறப்படுகிறது. காஷ்மீர் ராமாயணத்திலும் இவ்வாறு உள்ளது கவனிக் கத்தக்கது.
ராவணனுக்கு, 10 தலைகளும், 20 கைகளும் உள்ளதாக, தென் கிழக்கு ஆசிய ராமாயணங்களில் கூறப்படவில்லை.
கம்போஜம் என்று முன்பு அழைக்கப்பட்ட கம்போடியாவிலும் ராமாயணம் அதிக செல்வாக்கு பெற்றுள்ளது. அங்குள்ள அங்கோர்வாட் கோவில் புகழ் மிக்கது. இந்தக் கோவிலில் ராமாயண நிகழ்ச்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. பாற்கடலைக் கடையும் காட்சியில், வாலி பங்கெடுத்துக் கொள்வதாகக் காட்டப்பட்டுள்ளது. வால்மீகி ராமாயணத்தில் இந்த நிகழ்ச்சி கூறப்படாவிட்டாலும், கம்ப ராமா யணத்தைப் பின்பற்றி, இக்காட்சி உருவாக் கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
திருவாடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த கைலாய பரம்பரையினர், கம்போடியாவிலும், தாய்லாந் திலும் இந்தக் கதைச் சம்பவங்களைப் பரப்பி இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. ராமகீர்த்தி எனும் பெயர் பெற்ற கம்போடிய ராமாயணம்,
15ம் நூற்றாண்டை சேர்ந்தது. ராமாயணக் கதை, லகோன் கோல் எனும் பெயரில் நாட்டிய நாடகமாகவும், கம்போடியாவில் நடத்தப்பட்டு வருகிறது.
வியட்னாமியர்களிடையே, கி.பி., மூன்றாம் நூற்றாண்டிலேயே ராமாயணம் செல்வாக்கு பெறத் துவங்கியது. ஸ்ரீமாறா என்ற மன்னரால் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், ராமாயணக் கதை இடம் பெற்றுள்ளது. ஸ்ரீமாறன் என்ற பெயர், பாண்டிய மன்னர் பரம்பரைக்குரியது என்பதால் வியட்னாமு டன் அவர்களுக்கு பழங்காலத் தொடர்பு இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. அந்த நாட்டின் வோ-கான் பகுதியிலுள்ள, 7ம் நூற் றாண்டுக் கல்வெட்டில், வால்மீகியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
***

ஜே.எம்.சாலி

நன்றி: தினமலர்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 03, 2011 11:00 am

ஆதியில் உலகம் முழுவதும்..ஒரு மதமே இருந்தது என்றும்...அந்த வேத மதமே பிற்காலத்தில் "இந்து"மதம் என
ஒரு பகுதிக்குரியதாய் குறுக்கப் பட்டுவிட்டதையும்...
நமது ஆதி மதத்தின் சின்னங்களும், வழிபாட்டு முறைகளும்..புராணக் கதைகளும்...சிறு,சிறு, மாற்றங்களுடன்..இன்னமும்..உலகின் பலவேறு பகுதிகளிலும்..ஆசியா மட்டுமின்றி...ஆப்பிரிக்காவிலும் கூட நமது மதத்தின் தொன்மங்கள் இருப்பதை..
காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பரமாச்சாரியார்...தனது "தெய்வத்தின் குரலில்" பல்வேறு சான்றுகளுடன் விளக்கமாகவே எடுத்துரைத்துள்ளார். senthilmask80-இன் இந்தப் பகிர்வுக்கு
எனது நன்றிகள்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 03, 2011 12:37 pm


பல நூற்றாண்டு பாரம்பரியம் மிக்கது நம் இந்து மதம்... அருமையிருக்கு




தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக