புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_m10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_m10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10 
2 Posts - 18%
heezulia
கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_m10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_m10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_m10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_m10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10 
372 Posts - 49%
heezulia
கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_m10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_m10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_m10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_m10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10 
25 Posts - 3%
prajai
கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_m10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_m10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_m10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_m10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_m10கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 12:26 am

தமிழகத்தின் மூத்த தலைவருக்கு,

வணக்கம் ஐயா.நீங்கள் உங்கள் குடும்பத்தோடு மிக்க சுகமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்விடம் எல்லாம் சுகம் என்று சொல்ல முடியாத நிலையில்...இருந்தாலும் தோழைமையோடும் ஏழமை பேசுதல் நம் பண்பாடு இல்லையே..அதனால் சுகம் என்றே சொல்லி வைக்கிறேன்..

யாரடா நீ என்று நீங்கள் கேட்பதற்குள்...உங்களுக்கு என்னை தெரியாது...ஆனால் உங்களை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும்..ஏழு வயது இருக்குமென்று நினைக்கிறேன்.."போடுங்கம்மா ஓட்டு சூரியனப் பாத்து" என்று ஓட்டு சாவடியில் நின்று உங்களுக்காக ஓட்டு கேட்டு இருக்கிறேன்..அதற்காக எம்.ஜி.யார் பக்தரான என் தந்தையிடம் அடியும் வாங்கி இருக்கிறேன்.

அத்துடன் நின்றதா என் பைத்தியக்காரத் தனம்? கல்லூரி சேர்ந்த முதல் வருடம் ஒரு தேர்தல் வந்தது...அன்று நடந்த அராஜக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று உங்களுக்காகவும் உங்கள் ஆதரவு பெற்ற தம்பிகளுக்காகவும் கல்லூரியை புறக்கணித்து விட்டு கிராமம் கிராமமாக திரிந்திருக்கிறேன்...கட்சி என்னவோ வென்றது...ஆனால்....

உங்களை ஜெயலலிதா அரசு அதிகாலையில் கைது செய்த‌ போது அய்யோ கொல்றாங்களே...கொல்றாங்களே என்று அலறிய போது...ரத்தம் கொதித்த கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன்....பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்...அன்று கொல்லும் அரசன் ஆணை வென்றுவிட்டது...என்று துடித்தவர்களில் நானும் ஒருவன்...உங்களை விடுவிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து போலீசிடன் அடிவாங்கிய அப்பாவிகளில் நானும் ஒருவன்...லண்டன்ல இருந்து லீவுக்கு வந்துருக்க...உனக்கு ஏண்டா இந்த ஊர் அரசியல் என்று என் தந்தை கண்டித்த போதும் அவரிடம் சண்டை போட்டிருக்கிறேன்...எனக்கு அவர் எப்படியோ அப்படியே நீங்களும் ஒரு தந்தையே...

என்னவென்று தெரியவில்லை...உங்கள் மீது அப்படி ஒரு நம்பிக்கை...தமிழினத்திற்கு இருக்கும் ஒரே தலைவன் என்ற நம்பிக்கை...நீங்களும், அறிஞர் அண்ணாவும், நெடுஞ்செழியன், மதியழகன், பேராசிரியர் அன்பழகன், மற்றும் பல எண்ணற்ற தொண்டர்கள் இல்லாதிருந்தால் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டிருக்கும்...தமிழுக்கு சவக்கிடங்கு தோண்டப்பட்டிருக்கும் என்று இன்னமும் நம்புபவர்களில் நானும் ஒருவன்.


உங்களுக்கு தெரியுமா ஐயா, என் தாயின் சகோதரன், என் தாய் மாமன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் அடித்த அடியில் கால் முடமாகிப் போனான்...அவனுக்கு அப்பொழுது வயது பதினைந்தோ என்னவோ...பிற்காலத்தில் இதனாலயே அவன் திருமணம் தடைப்பட‌ இருபத்தைந்து வயதில் தற்கொலை செய்து கொண்டான்...அவன் வீழ்ந்தாலும் ஒவ்வொரு மனிதனின் கடமையான தாய் மொழியை காப்பதில் அவன் தன் கடமையை செய்து விட்டே வீழ்ந்தான்...வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்...உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு...

ஆனால் ஐயா, திரும்பி பார்க்கையில் நான் செய்தது சரிதானா என்று எனக்குள் பெரும் கேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கின்றன...

உண்மையில் தவறு என்று ஆரம்பித்தது?
அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்ற கொள்கையிலிருந்து பின்வாங்கி இன்றைக்கு முப்பது உறுப்பினர்கள், நாளை நாம் தான் நாடாள வேண்டும் என்று ஆரம்பித்த பதவி ஆசையிலா?
இல்லை என் கட்சி, என் பதவி, என் குடும்பம் என்று நீங்கள் எம்.ஜி.ஆரை ஓரம் கட்டிய போதா?

நீங்கள் எம்.ஜி.யாரை எதற்கு ஓரம் கட்டினீர்கள் என்று எனக்கு தெரியாது ஐயா..அப்பொழுது நான் பிறக்கவேயில்லை...ஆனால் நீங்கள் வை.கோ.வை கட்சியை விட்டு நீக்கினீர்களே...அன்று தான் உறவு உடைந்தது ஐயா...அன்று தான் உடைந்தது...

சரி, கட்சியை விட்டு நீக்க உங்களுக்கு உரிமை இருக்கலாம்...ஆனால் அதற்கு நீங்கள் சொன்ன காரணம்?

"விடுதலைப் புலிகளின் துணையுடன் என்னை கொல்ல முயற்சி" என்று கொலைப்பழி சுமத்தினீர்களே?? நெஞ்சுக்கு நீதி எழுதிய உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்...ஜெயலலிதா அரசால் உங்களுக்கு அனுப்பப்பட்ட இந்த செய்தி உண்மை என்று நீங்கள் உண்மையிலேயே நம்பினீர்களா இல்லை நொண்டி குதிரைக்கு சறுக்கியதே சாக்கு என்று இதை காரணமாக வைத்து ஸ்டாலினுக்கு எதிர்கால போட்டி என்று கருதப்பட்ட வைகோவை வெளியே அனுப்பினீர்களா??

எத்தனையோ காரணங்கள் சொல்லியிருக்கலாம்...ஆனால் கொலைப் பழி?? கட்சிக்கு ரத்தமும் சதையுமாக இருந்த வைகோ மேல் உங்களுக்கு இப்படி ஒரு பழி சுமத்த எப்படி மனம் வந்தது?? இது முதுகில் குத்தும் துரோகம் அல்லவா?

நடந்தது பழங்கதை...அதை ஏன் அல்பமாக கேள்வி கேட்கிறாய் என்று நீங்கள் சொல்லக்கூடும்....ஆனால் இப்பொழுது நடப்பது என்ன?

தயாநிதி மாறனுக்கு எதற்கு பதவி கொடுத்தீர்கள்? முரசொலி மாறனின் மகன், உங்களுக்கு பேரன் என்பதை தவிர, அவர் கட்சிக்கும் நாட்டுக்கும் ஆற்றிய அரும்பணிகள் என்ன?? எந்த தகுதியில் அவர் எம்.பி. சீட்டுக்கு நிறுத்தப்பட்டு உடனடியாக மத்திய மந்திரி ஆக்கப்பட்டார்??

அது தான் அப்படி என்றால்....எந்த அடிப்படையில் எதன் காரணமாக அவர் மந்திரி பதவியிலிருந்து விலக்கப்பட்டார்? எதனால் ஒருவர் மந்திரியாகிறார், எதனால் ஒருவர் நீக்கப்படுகிறார் என்று மக்களுக்கு சொல்ல வேண்டாமா?? இது அடிப்படை ஜனநாயகம் அல்லவா?? ஜனநாயகம் பற்றி அடிக்கடி பேசும் உங்களுக்கு இது ஏன் மறந்து போயிற்று???

இப்பொழுது திடீரென்று பனித்தது...இனித்தது...கூவத்தில் பன்றி குளித்தது என்றெல்லாம் பேட்டி கொடுக்கிறீர்கள்... ஆனால் முதலில் ஏன் புளித்தது என்றே நீங்கள் சொல்லவில்லையே ஐயா??

மாநில பொறுப்பை கவனிக்க ஸ்டாலின், மத்திய பொறுப்புக்கு முரசொலி மாறன்...அவர் இறந்து விட்டால் அடுத்து என் பேரன்...அது தான் தயாநிதி மாறன்....அவனை தூக்கிவிட்டால் வேறு எவனுக்கும் தகுதியில்ல்லை...என் மகளே என்று நீங்கள் திரு.கனிமொழியை அவசர அவசரமாக எம்.பி.ஆக்கியது நியாயமா??

நான் தான் தி.மு.க தலைவர்...அதுவும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர்..என்று நீங்கள் சொல்லலாம்...ஆனால் தி.மு.க உங்கள் கட்சியில்லையே? அது அண்ணாதுரையால், லட்சக்கணக்கான தி.மு.க தொண்டர்களால் அன்றைக்கிருந்த காங்கிரஸ் அரசிடம் அடியும் உதையும் வாங்கி வளர்க்கப்பட்ட கட்சியல்லவா?? இது உங்கள் குடும்ப வியாபாரம் அல்லவே மகளுக்கு, மகனுக்கு, பேரனுக்கு என்று பங்கு பிரிக்க??

உனக்கு அரசியல் தெரியாது என்று நீங்கள் என்னை ஒரே சொல்லில் ஒதுக்கலாம்...உண்மை தான் எனக்கு குடும்ப அரசியல் தெரியவில்லை...புரியவும் இல்லை...



கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 12:26 am

உலகத் தமிழர்களின் ஒரே தலைவர் என்று இன்னமும் உங்களை சிலர் சொல்கிறார்கள்...அதை இன்னமும் சிலர் நம்பிக் கொண்டிருக்க கூடும்.... இன்றைக்கு இலங்கை பிரச்சினையில் நீங்கள் செய்யும் செயல்கள் வெந்த புண்ணில் வெங்காயத்தைத் தேய்ப்பது போல் இருக்கிறது....

டி.ஆர். பாலுவுக்கு கப்பல் துறை, போக்குவரத்து துறை இல்லையென்றால் அரசில் சேர மாட்டோம் என்று அடம்பிடித்த நீங்கள் இலங்கையில் சின்னஞ்சிறு குழந்தைகள் வரை கொன்று குவிக்கப்படும் போது, மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதுகிறீர்கள்...கம்யூனிஸ்டுகள் கூட்டம் நடத்திய பின், மனித சங்கிலி என்று அறிவிக்கிறீர்கள்....மற்ற நாட்டு பிரச்சினையில் இந்தியா தலையிட முடியாது என்று அறிக்கை விடுகிறீர்கள்....


மத்திய வெளியுறவு மந்திரி இலங்கை செல்வார் என்று அறிக்கை விட்டீர்கள்...உங்கள் அடிப்பொடிகள் அதையும் கொண்டாடினார்கள்....ஆனால் நடப்பது என்ன?? மந்திரி இன்னமும் மந்தியாக இங்கு தான் இருப்பார்....எப்பொழுது செல்வார்....எல்லாரும் செத்த பின் அனுதாபம் தெரிவிக்கவா? மலர் வளையம் வைக்கவா? எவனுக்கு வேண்டும் உங்கள் அனுதாபமும் மலர் வளையமும்??

என்னை என்ன தான் செய்ய சொல்கிறாய்...ஆதரவை வாபஸ் வாங்கினால் இந்திய அரசு கவிழும் ஆனால் இலங்கை பிரச்சினை தீராது என்று நீங்கள் வாதாடக் கூடும்...

உண்மை தான் ஐயா....


ஆனால், நீங்கள் ஏன் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஒரு சமரச தீர்வு காண முயற்சிக்கக் கூடாது??

இந்திய அரசு தலையிட வேண்டாம்...குறைந்த பட்சம் சிங்கள ராணுவத்திற்கு பயிற்சியும், ஆயுதங்களும், ஆலோசனைகளும் கொடுப்பதை நிறுத்தலாமே??

இந்தி எதிர்ப்புக்காக போரடிய உங்களால் இதை ஏன் ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல முடியாது?? நீங்கள் தலைமை ஏற்றால் இன்றும் கோடிக்கணக்கான மக்கள் குவிவார்களே?? மக்கள் திரண்டால் இந்திய அரசால் அதை புறக்கணிக்க முடியுமா? ஒரு வேளை எதிர்க்கட்சியாக இருந்தால் தான் அதையெல்லாம் செய்வீர்களா??

இதுவரை இத்தனை நடந்தும் ஒரு துரும்பைக் கூட நகர்த்தாமல் படுகொலையை ஊக்குவிக்கும் இந்திய அரசில் நான்கு மந்திரிகளுடன் நீங்களும் ஒரு அங்கம்....உண்மையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்திய அரசு என்றால் நீங்கள் தான்....மறந்து விடாதீர்கள்..

விடுதலைப் புலிகள் வன்முறைவாதிகள் என்ற பல்லவியை பாடாதீர்கள்....அஹிம்சை முறையில் போராடிய தந்தை செல்வா, உண்ணாவிரதம் இருந்தே உயிர்விட்ட திலீபன் என்ன ஆனார்கள் என்று உங்களுக்கு தெரியும்...விடுதலைப் புலிகள் எந்த சூழ்நிலையில் உருவானார்கள் என்றும் உங்களுக்கு தெரியும்....கண் முன்னே தாயும், சகோதரியும் கற்பழிக்கப்படுவதை பார்க்கும் எவனும் புலியாகத் தான் மாறுவான்...1980களில் ஜே.வி.பியும், இலங்கை அரசும் செய்த இனப்படுகொலைகள் உங்களுக்கு தெரியாதா?? எத்தனை தாய்களும், அவர்கள் வயது வராத மகள்களும் கற்பழிக்கப்பட்டு, லாரி டயருடன் கட்டி, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டனர்??? இந்த சூழ்நிலையில் அவர்கள் துப்பாக்கி எடுப்பதை தவிர உண்ணாவிரதமா இருக்க முடியும்??

அது எல்லாம் பழங்கதை..இப்பொழுது நடப்பது என்ன?? ராஜீவ் காந்தியை கொலை செய்தார்களே என்று நீங்கள் சொல்லக்கூடும்....

இருக்கலாம்...அதே சமயம் ராஜீவை கொன்றது சந்திராசாமி என்று கூட சில தகவல்கள் உண்டு....ஆனால், இப்பொழுது நடப்பது புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடக்கும் போர் என்று நீங்கள் சொல்கிறீர்களா?? அப்படியானால், பள்ளி மீது குண்டு வீசி, குழந்தைகளை கொன்றது??

அதற்கெல்லாம் நான் ஒன்றும் செய்ய முடியாது...என்று நீங்கள் நினைத்தால் அதையாவது சொல்லி விடுங்கள்....மறக்குலத்தில் வந்த உங்களுக்கு இதை சொல்ல மனத் துணிச்சல் உண்டு என்று நம்புகிறேன்...ஆனால், கடிதம் எழுதுகிறேன், கோரிக்கை வைக்கிறேன் என்று ஊருக்காகவும், அரசியலுக்காகவும் நடிக்காதீர்கள்..

மற்றவர்களிடம் கேட்க வேண்டியது தானே...என்னிடம் ஏன் கேட்கிறாய் என்று நீங்கள் கேட்கலாம்...உண்மை தான்...ஆனால், தமிழ்நாட்டில் பெரும் இயக்கங்கள் என்றால் நீங்களும், ஜெயலலிதா அம்மையாரும் தான்...அவர் நிலைப்பாடு தெரிந்த விஷயம்....எப்படியாவது எல்லா தமிழர்களும் ஒழிந்தால் சரி என்பது அவரது வெளிப்படையான நிலை....உங்கள் நிலையும் அது தான் என்றால் சொல்லிவிடுங்கள்... அவரை மன்னிக்கலாம்....ஏனெனில் அவர் நெஞ்சில் குத்துகிறார்...ஆனால் நீங்கள் ஐயா....முதுகில் அல்லவா குத்துகிறீர்கள்???

எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் சரித்திரத்தை எழுதும் எவரும் திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியை புறக்கணித்து எழுதிவிட முடியாது...ஆனால் நீங்கள் தமிழின தலைவராக எழுதப்படுவீர்களா இல்லை தமிழ்நாட்டில் வந்து சென்ற மற்றொரு அரசியல்வாதியாக இனம் காணப்படுவீர்களா என்பது உங்கள் கையில் தான் உள்ளது...

திருக்குறளுக்கு உரையெழுதிய உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை...ஆனாலும் உங்கள் பணிச்சுமைகளால் நீங்கள் மறந்துவிட்டிருக்கலாம் என்பதால் ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன்...

தக்கார் தகவிலார் என்பதவரவர்
எச்சத்தாற் காணப்படும்

http://muranthodai.blogspot.com



கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 23, 2009 3:33 am

முறையான கடிதம்.

தமிழகத்தில் வசிப்பவர்கள், மிக காரணமாக, படித்துக் கொள்வது அவசியம்.

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 3:10 am

திருக்குறளுக்கு உரையெழுதிய உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம் 677196



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக