புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_m10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10 
44 Posts - 61%
heezulia
மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_m10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_m10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_m10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10 
2 Posts - 3%
viyasan
மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_m10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_m10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10 
236 Posts - 43%
heezulia
மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_m10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_m10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_m10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_m10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_m10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_m10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_m10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_m10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_m10மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனநலம் - மறுபடியும் மழலையாவோம்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Sep 28, 2011 5:33 pm

உடல் நலத்தைப் பேண சரியான பயிற்சி, முறையான பழக்கவழக்கம், சத்தான உணவு என வகைப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், மன நலனுக்கு? மனதை அடக்கியாண்டால் உலகையே கைகொள்ளலாம் என்கிறது இந்து சாஸ்திரம். அதேநேரம், 'மனம் ஒரு குரங்கு’ என ஆதிகாலம் தொட்டுச் சொல்லப்படும் கூற்றுக்களுக்கும் குறைவு இல்லை. மனதைப் பக்குவப்படுத்தும் பயிற்சி குறித்து சொல்கிறார் பிரபல மனநல மருத்துவர் அசோகன்.

''மனதில் தோன்றும் ஆசைகளை அடக்கவும், நெறிமுறைகளோடு வாழவும் ஆன்மிகமே சிறந்த வழி என்பார்கள். நல்ல சிந்தனை எதன் மூலமாக ஏற்பட்டாலும் அதனை வரவேற்பதுதான் மகத்தானது. மனம் தளரும்போதும், நிம்மதிக்காகத் தவிக்கும்போதும் நம்மை மீறிய சக்தி இருப்பதாக மனம் நினைக்கிறது. அந்த நம்பிக்கைதான் நம்மை நல்வழியில் நடத்துகிறது.

சமீபத்தில் ஒரு கண்டுபிடிப்பு மருத்துவ உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு இசைக்கருவியை மீட்டும்போது நம்மில் ஏற்படும் அதிர்வலைகளின் அளவைக் கண்டு பிடித்தார்கள். இசைக்கருவியை மீட்டாமல், அதை மீட்டுவதுபோல் மனதுக்குள் பாவித்தால் அதே மாதிரியான அதிர்வு அலைகள் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. எதையாவது கற்பனை செய்துகொள்வதன் மூலமாகக்கூட நம் உடலுக்குள் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய ஆராய்ச்சி அது. மனம் எத்தகைய வல்லமை வாய்ந்தது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டியது இல்லை!'' எனச் சொல்லும் டாக்டர் அசோகன் தான் மேற்கொள்ளும் பயிற்சிகள் குறித்தும் சொன்னார்.

''உடல் நலத்தைப் பேணுவதைக் காட்டிலும் மன நலத்தைப் பேணுவது முக்கியமானது. மனம்தான் நம் உடலை ஆள்கிறது. அத்தகைய மனதுக்கு தெளிவையும் தீர்க்கத்தையும் உருவாக்கிக்கொடுக்க வேண்டியது நம் கடமை. இதற்காக மலையைத் தலையில் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண நடை பயிற்சி போதும். காலாற நடப்பவர்களை நீங்கள் கண்டிருக்கலாம். நான் தினமும் மனமார நடக்கிறேன். ஆழ்ந்த தியானத்தில் மூழ்குவது, பிடித்த மந்திரங்களை உச்சரிப்பது, மனதுக்குள் கற்பனைகளை விதைத்து அதனைப் பெருக்கிப் பார்ப்பது, ஒரு நல்ல நூலை ஆழ்ந்து வாசிப்பது என ஏதாவது ஒரு செயலில் மனதை ஈடுபடுத்தலாம். அதுதான் மனமார நடக்கும் பயிற்சி. கடிகார முள்ளைப் போன்றது மனம். அதனை ஒரு இடத்தில் கட்டி வைப்பது சாத்தியம் இல்லாதது. ஆனால், மனதின் வழியே பயணமானால் மனம் நம் வழியே நிச்சயம் வசமாகும்.

ஆன்மிக நம்பிக்கை கொண்டவர்கள் இறை வனைத் துதித்துப் பாடுவார்கள். இறைவனை மனதுக்குள் நேர்நிறுத்தி அவனிடம் நேரடியாகப் பேசுவதுபோல் பிரார்த்திக்கும்போது மனம் இலகுவாகிறது. 'என் கஷ்டங்களை எல்லாம் உன்னிடம் கொட்டிவிட்டேன்!’ என்கிற நிறைவு உண்டாகிறது. மனநல மருத்துவத்தில் பகிர்தல் மூலமாகத்தான் முக்கால்வாசி பிரச்னைகள் சரிசெய்யப்படுகின்றன. 'காடு மலை தேடி வந்து கஷ்டத்தை சொல்லிப்புட்டேன்... வீடுபோய் சேர்ந்தபிறகு வெசனமத்து நான் கிடப்பேன்!’ என பழநி மலைக்கு பாத யாத்திரை செல்பவர்கள் பாடுவதைக் கேட்டிருக்கலாம். ஒருவரிடம் பகிர்ந்துகொள்வதன் மூலமாக நம் கஷ்டம் பாதியாகக் குறைகிறது. ஆன்மிகம் தொடங்கி மருத்துவ உலகம் வரை இதைத்தான் சொல்கிறது.

தினமும் குறைந்தது 15 நிமிடங்களை மனப் பயிற்சிக்காக ஒதுக்குங்கள். நல்ல காற்றில் அமைதியான சூழலில் தியானத்தில் அமருங்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். அன்றைக்கு முழுக்க உங்களுக்குத் தேவையான தெளிவை அந்த 15 நிமிடங்கள் உங்களுக்கு நிச்சயம் தரும்!

நல்ல உணவு உடலை எப்படி சீராக வைத்திருக்கிறதோ... அதேபோல் நல்ல சிந்தனை மனதை சீராக உருவாக்குகிறது. பலவிதமான திட்டங்களோடு நம் இலக்குகளை நோக்கி நாம் ஓடுகிறோம். பலவிதமான அனுபவங்களையும் சந்தித்த பிறகு நமக்குள் ஒரு தெளிவு பிறக்கிறது. தண்ணீரின் மேல் மிதக்கும் தக்கையாக நம்மை உணர்கிறோம். தக்கையின் பயணத்தை தண்ணீரே தீர்மானிக்கிறது என்பது நமக்கு மிகத் தாமதமாகப் புரிகிறது!'' -மனதை இலகுவாக்க வழிசொல்லும் அசோகன் நிறைவாக இப்படிச் சொல்கிறார்.

''நான் நிறையக் கற்றுக்கொண்டது என்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் இருந்துதான். சிலர் தங்களின் மனக் கவலைகளைப் பற்றிச் சொல்லும்போது, அவர்களின் இடத்தில் அமர்ந்திருக்கவேண்டிய ஆள் நான்தான் என நினைப்பேன். அவர்களின் மனக்கவலைகள் அப்படியே என் மனநிலையைப் பிரதிபலிப்பவை போல இருக்கும். பாமரர் ஒருவர் என்னை சந்தித்தபோது, 'அடுத்தவங்க அண்டுற மாதிரி அனுசரணையான ஆளா இருக்கணும் சார்... ஒரு குழந்தையைக் கொஞ்சுறப்ப நாமளும் குழந்தையா மாறணும். 80 வயது தாத்தாங்கிற தோரணையில குழந்தையை மிரட்டினோம்னா, அது விலகி ஓடிடும்!’ எனச் சொன்னார். இன்றைக்கும் என் மனதுக்குள் அப்படியே ரீங்கரிக்கும் மந்திரம் இது. அடுத்தவர்களின் மனதுக்கு ஏற்றபடி நடந்துகொள்வதே மகத்தான குணம்.

சிறு வயதில் அணிந்த சட்டையை இள வயதில் நாம் தவிர்க்கிறோம். அதன் அளவு பொருந்தாது என்கிற புரிதல் நமக்கு ஏற்படுகிறது. உடையில் மட்டும் அல்ல... உள்ளத்திலும் அந்தப் புரிதல் ஏற்பட வேண்டும். எளிமை பழகி, எல்லாவற்றையும் ரசித்து, சின்னச் சின்ன சந்தோஷங்களில் சிலிர்த்து சாதாரண இலக்குக் கொண்ட ஆளாக இருப்பதில்தான் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கிறது. குழந்தையாகப் பிறந்து வயதான குழந்தையாக மாறுவதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் இருக்கிறது!''

- இரா.சரவணன்
படங்கள்: வி.செந்தில்குமார்

நன்றி
http://www.vikatan.com/article.php?aid=9815&sid=270&mid=17

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 28, 2011 5:56 pm

நல்ல அருமையான கட்டுரை.பகிர்தமைக்கு நன்றி மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! 224747944 மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! 2825183110 மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனநலம் - மறுபடியும் மழலையாவோம்! Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக