புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_m10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10 
14 Posts - 70%
heezulia
உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_m10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_m10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_m10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_m10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_m10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_m10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_m10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_m10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10 
8 Posts - 2%
prajai
உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_m10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_m10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_m10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_m10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10 
4 Posts - 1%
mruthun
உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_m10உலக ஒழுங்கு மாறுகிறதா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக ஒழுங்கு மாறுகிறதா?


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Sep 28, 2011 4:47 pm


- M.M.M. ஹன்ஸீர்.

பனிப்போர் காலத்தின் பின்னர் உலகம் மாறுபட்ட பல நெருக்கடிகளை சந்தித்திருக்கின்றது. உலகலாவிய பயங்கரவாத அச்சுறுத்தல், பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான யுத்தம் என்பன பனிப்போரின் பின்னரான முக்கிய நெருக்கடிகளாக இருந்தாலும், இன்றைய உலகம்; பலதரப்பட்ட நெருக்கடிகளை ஒரே நேரத்தில் சந்திக்கின்றது.. என்றும் இல்லாதவாறான அமெரிக்க, ஐரோப்பிய நிதி நெருக்கடி, மத்திய கிழக்கில் டியுசீனியாவில் தொடங்கி எகிப்து, சிரியா, யெமன் என தொடரும் மக்கள் போராட்டங்களும் என உலகம் பலதரப்பட்ட நெருக்கடிகள் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகின்றது.

2ம் உலக மகா யுத்தத்தின் பின்னர் யுத்தங்கள், புரட்சிகள், நெருக்கடிகள் என்பன அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களில் கவனமாக தவிர்க்கப்பட்டு அவை ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு திட்டமிட்ட வகையில் திருப்பி விடப்பட்டன. அமெரிக்க, சோவியற் பனிப்போர் காலத்தில் கூட இரு நாடுகளும் நேரடியளாக மோதாமல் தமது மோதல்களுக்கு பரீட்சாத்த களமாக ஆசியாவையும், ஆபிரிக்காவையும் பயன்படுத்தின. 1962ம் ஆண்டு கியுபாவில் சோவியத்தின் ஏவுகணை தளம் தொடர்பாக அமெரிக்க, சோவியற் இடையிலான உச்சகட்ட நெருக்கடி இரு நாடுகளுக்கிடையிலான அணு ஆயுத யுத்தமாக மூழுமோ என உலகம் அச்சப்பட்ட வேளையில் அது மிக கவனமாக தவிர்க்கப்பட்டது. கொரிய யுத்தம் வியட்நாம் போர் ஆப்கானிஸ்த்தான் ஆக்கிரமிப்பு, ஆபிரிக்க புரட்சிகள் என 2ம் உலக மகா யுத்தத்தின் பின்னான பாரிய இரத்தக்களரிகளும் யுத்தங்களும் அமெரிக்க சோவியற் போட்டியின் பயனாக ஆசிய ஆபிரிக்க மண்ணில் இடம்பெற்றன.

1ம், 2ம் உலக மகா யுத்தங்களின் படிப்பினையானது ‘பேச்சுவார்த்தை’ ‘சமரசம்’, ‘யுத்த தந்திரோபாயம்’ எனும் அரசியல் யுத்தியை முதலாளித்துவவாத, ஏகாதிபத்திய அரசுகள் தம்மிடையே மேற்கொண்டு நிதி மூலதன வளர்ச்சியை தம்மிடையே ஏற்படுத்தி பங்குபோட்டு கொண்டமை மாத்திரமின்றி, இவர்களுக்கிடையிலான யுத்தங்களை வேறு பகுதிகளுக்கு திருப்பி விட்டதுடன், நேட்டோ, வோர்சோ அணிகளுக்கிடையிலான நேரடி யுத்தங்களும் இல்லாமல் செய்யப்பட்டது. 2ம் உலகமகா யுத்தத்தின் மையமான யூதர்களின் பிரச்சினை ஐரோப்பாவில் வெடித்ததாயினும் அது ஆசியாவின் எண்ணெய் வளம் கொளிக்கும் மத்திய கிழக்கில் விதைக்கப்பட்டது. அதனை பலஸ்தீன,அரபு, ஸ்ரேல் பிரச்சினையாக்கி ஏகாதிபத்தியம் அதனை தனது பொருளாதார தீப்பந்தமாகவும் நிதி மூலதன சுரங்கத்திற்கான வழியாகவும் ஆக்கி கொண்டது. அங்கு தொடங்கிய இரத்தக்களரி 3ம் உலக நாடுகளான கொரியா, வியட்நாம், ஈரான், ஆப்கானிஸ்த்தான், ஈராக் என்று ஆசியாவுக்குள்ளேயே மையம் கொண்டது. இவ் யுத்தங்கள் அமெரிக்கா, சோவியற், ஐரோப்பிய ஏகாதிபத்திய வல்லரசின் நேரடி பங்குபற்றுதல், முழுமையான ஆதரவுடன் இடம்பெற்ற போதிலும் அமெரிக்க ஐயேராப்பிய நாடுகளுக்கிடையில் நேரடியாக இடம்பெறாததால் பனிப்போர் என அழைக்கப்பட்டது.

1990ம் ஆண்டு சோவியற் யூனியனை சிதறடித்து அமெரிக்கா 2ம் உலக போரின் பின் அது வரை இருந்து வந்த இரு முகாம் கோட்பாட்டை உடைத்து தனது தலைமையில் ஒரே முகாம் கோட்பாட்டை நிலை நிறுத்தி உலக ஒழுங்கை ( World Order) தனது தலைமையில் மாற்றி கொண்டது. அது வரையிலான பனிப்போர் (Cold War World) உலகு முடிவுக்கு வந்து பனிப்போரின் பின்னான (Post War World) உலகிற்கு அமெரிக்கா ஏக தலைவனாக முடிசூடி அமர அரிய வாய்ப்பை 1990ம் ஆண்டு குவைத் ஆக்கிரமிப்பு எனும் ரூபத்தில் முன்னால் ஈராக் அதிபர் சதாம் உசைன் ஏற்படுத்தி கொடுத்தார்.

21ம் நூற்றாண்டின் உலக ஒழுங்கின் போக்கை மாற்றியமைக்க காரண கர்த்தாக்களாக இருந்தவர்களில் மூவர் குறிப்பிடத்தக்கவர்கள். உலக ஒழுங்கு மாற்றம் என்பது சடுதியாக இடம்பெறும் ஒரு விடயம் அல்ல, அது பல ஆண்டுகளாக திட்மிடப்பட்டு, உறுதியான வெளியுறவு தந்திரோபாயம், பலமான இராணுவக்கட்டமைப்பு மூலம் நிகழ்கின்றபோதிலும் குறிப்பிடப்படும் மூவர் அதனை உடனடி காரணிகளாக மாற்றுவதற்கு காரணமாய் இருந்தனர். ஒருவர் சோவியற் யூனியனின் கடைசி அதிபரான மிசைல் கொப்பர்சோ, அடுத்தவர் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசைன், இறுதியானவர் அல்கெய்தா தலைவர் ஒசாமா பில் லாடன். முதலாமவர் பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்து பனிப்போர் உலகை பனிப்போரின் பின்னான உலகாக மாற்றியமைக்க பெரிதும் காரணமானார்.

இரண்டாமவர் பனிப்Nhரின் பினான உலகிற்கு அமெரிக்காதான் ஏக தலைவன் என முடி சூட களம் அமைத்துக் கொடுத்தார். இறுதியானவர் பனிப்போரின் பின்னான உலகை பனிப்போரின் பின் பின்னான உலகாக ( Post-Post cold war world) மாற்றியமைக்க காரணமாக இருந்ததுடன் உலகளாவிய அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு போர் (?) எனும் பரந்து பட்ட யுத்தத்திற்கு தளம் அமைத்துக்கொடுத்தார்.

2001ம் ஆண்டு செபரம்பர் மாத அமெரிக்கா மீதான தாக்குதல் மீண்டும் ஒரு முறை உலக ஒழுங்கை அமெரிக்கா தலைமையில் வலுவாக அமைய கால்கோலியது. ஆயினும் இந்நிகழ்வு தற்செயலானது அல்ல இவ்வாறான மாற்றத்தை நோக்கி பல ஆண்டுகளாக உலகம் செயற்பட்டு கொண்டிருந்த வேளையில் அதனை உடனடி விளைவாக்கியது மட்டுமே 9ஃ11 தாக்குதல். சோவியத்தின் வீழ்ச்சியின் பின்னர் தனது தலைமையின் கீழ் உலக ஒழுங்கை நிர்ணயித்த அமெரிக்கா 9ஃ11 தாக்குதலின் பின் அதனை இன்னும் வலுப்படுத்தி தனது எதிரிகளை முற்றிலுமாக முறியடிக்கும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொண்டது. சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின் அமெரிக்காவின் உடனடி எதிரியாக மாறியது உலகளாவிய இஸ்லாமிய வாதம். ஆசிய ஐரோப்பா எங்கும் பரந்திருந்த இஸ்லாமிய வாத கிளர்ச்சி,புரட்சி சிந்தனைகளை முற்றாக முறியடித்து அச்சிந்தனைகளுக்கு ஆதரவான அரசுகளை கவிழ்த்து தனக்காதரவான அரசுகளை உருவாக்கவும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்குமான மரண அடி கொடுக்கவும் அமெரிக்காவிற்கு சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிட்டியது.

2002ம் ஆண்டு அமெரிக்கா கொள்கை வகுப்பு தந்திரோபான நிலை இயக்குனர் றிச்சட் என் காஸ் (Richard N Haas) தனது நாட்டின் நிலைப்பாட்டை இவ்வாறு கூறினார். “உலகில் ஒரு வெளியுறவு கொள்கைதான் இருக்க வேண்டுமே தவிர பல கொள்கைகள் அல்ல. நான் இங்கு வெளியுறவு கொள்கை என்ற பதத்தை பயன்படுத்தினேனே தவிர வெளியுறவுக் கொள்கைகள் என்ற பதத்தை அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.(ஒரு விரிவுரையின் போது) உலகலாவிய ரீதியிலான பயங்கரவாதத்திற்கு(?) எதிரான போரை பிரகடன படுத்திய அன்றைய அமெரிக்க அதிபர் ஜோர்ச் டபுள்யு புஷ் உலகை பார்த்து இவ்வாறு எச்சரித்தார் “ ஒன்றில் நீங்கள் எமது பக்கம் அல்லது அவர்களின்; பக்கம், உங்கள் நிலை எது என்பதை நீங்கள் தெரிவு செய்யுங்கள்”. பனிப்போர் காலத்தில் சோவியற் முகாமையும், அமெரிக்க தலைமையிலான முதாளித்துவ முகாமையும் சமாளிக்க நேரு, டிட்டோ, நாசர் போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்ட அணிசேரா கொள்கையை காலில் போட்டு மிதித்தபடியே ஜோர்ச் புஷ் இவ் எச்சரிக்கையை உலகிற்கு விடுத்தார். அதனை தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான போர்(?) இஸ்லாமிய எழுச்சியின் மையங்களாக கருதப்பட்ட ஆப்கானிஸ்த்தான் ஈராக் போன்றவற்றில் கடுமையாக நிகழ்த்தப்பட்டதுடன் ஈரானுக்கும் பாகிஸ்த்தனுக்கும் கடும் தொனியிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஈரான் எல்லையிலும் ஏனைய மூன்று நாடுகளிலும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் அந்நாடுகளின் காவலனாக(?) அமர்ந்து கொண்டன. அதன் பின் டியுசீனியா, எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சி ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த சர்வாதிகார, இராணுவ அரசுகளை வீட்டுக்கு அனுப்ப இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மேற்குலகம் தமக்கு வேண்டாத மத்திய கிழக்கு அரசுகளை மனித உரிமை மீறல், சொந்த மக்கள் மீதான படுகொலை என்ற கோசங்களுடன் விரட்டியடிக்க தனது உளவு பிரிவுகளை முடிக்கு விட்டன. லிபியாவில் கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இ;ப்போது ஆட்சி கவிழ்ப்பு படலம் சிரிய ஜனாதிபதி அஷாத்தை நோக்கி நகர்கிறது.

அண்மையில் லிபியாவில் கைப்பற்றப்பட்ட இரகசிய ஆவணங்கள் கடாபியுடன் அமெரிக்காவின் CIA பிரித்தானியாவின் M16 போன்ற உளவு அமைப்புக்கள் நெருக்கமாக இருந்ததாக சான்று பகர்கிறது. ஆக மத்திய கிழக்கின் சர்வாதிகார இராணுவ அரசுகளுக்கு அமெரிக்கா காவலாக இருந்து காத்திருக்கிறது. இப்போது அவைகளை விரட்டி அடித்து கொண்டிருக்கின்றது. உலக ஒழுங்கின் இராணுவ ரீதியிலாhன நெருக்கடிகள் இவ்வாறு இருக்க என்றும் இல்லாதவாறு ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார நெருக்கடி, ஐரோப்பிய மண்டல கடன் சுமை என்பன காரணமாக அமெரிக்க தலைமையிலான உலக ஒழுங்கில் மாற்றம் வந்து விடுமோ என்ற ஆர்வம் சில ஆய்வாரள்களிடம் தோற்றம் பெற்று இது தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவர தொடங்கியுள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி மிக அபாயகரமானது. இதனை சீர் செய்யாவிட்டால் முழு உலகமும் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பன எச்சரிக்கின்றன. அமெரிக்க டொலரின் சரிவு, அமெரிக்க கடன் போன்றன அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் இம்மகிழ்ச்சி தற்காலிகமானதே. இந்நெருக்கடிகள் அமெரிக்hக தலைமையிலான உலக ஒழுங்கை இன்னும் வலுப்படுத்துமே தவிர தளர்த்ப்போவதில்லை. 3ம் உலக நாடுகள் தமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வாழ்வாதார உற்பத்தி, உட்கட்டமைப்பு வசதி போன்றவற்றை அபிவிருத்தி செய்ய 40 வீதத்திற்கும் அதிகமான உதவிகளை IMF, Worldbank போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமே தங்கியுள்ளன. IMF / Worldbank இன் முக்கிய நிதி பங்குதாரர்கள் அமெரிக்காவும் ஐரோப்பாவும்தான். தமது பொருளாதார நெருக்கடியினால் IMF அல்லது Worldbank அளிக்கும் நிதியை அமெரிக்க ஐரோப்பா குறைக்குமானால் 3ம் உல நாடுகள் மிக பாரிய நெருக்கடியை எதிர் கொள்ள நேரிடும். இதனால் பாரிய மக்கள் புரட்சியும் போராட்டங்களும் வெடிக்கலாம் இதனை பயன்படுத்தி அமெரிக்க ஏகாதிபத்தியம் 3ம் உலக நாடுகளின் ஊடாக தன்னை வலுப்படுத்தி தமது இருப்பை இன்னும் தளமமைத்து கொள்ளும்.

அமெரிக்க ஏகாதிபத்திய, முதலாளித்துவத்தின் நெருங்கிய நண்பனான பிரான்சின் எதிர்கால ஜனாதிபதியாவார் என கருதப்பட்ட IMF இன் முன்னாள் தலைவர் ஸ்ரொஸ் கான் நியுயோர்க் விமான நிலையத்தில் வைத்து பாலியல் குற்றசாட்டொன்றில் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் தனது பதவியை துறந்ததுடன் பலதரப்பட்ட நெருக்கடிக்கு உள்ளதுடன் அவரின் எதிர்கால பிரான்சின் ஜனாதிபதியாகும் கனவும் கலைந்தது. ஆனால் இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதியான ஆதாரம் இல்லாதவை என கூறி அமெரிக்க நீதிமன்றமே அவரை விடுதலை செய்தது. மேற்குலக கலாச்சார பார்வையில் வலுவில்லாத உறுதியற்ற தகவல்களுடனான குற்றச்சாட்டில் ஸ்ரொஸ் கான் அமெரிக்காவில் ஏன் கைது செய்யப்பட்டார். அமெரிக்க பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது IMF இனால் 3ம் உலக நாடுகளுக்கு வழங்கும் கடன் உதவிகள் டொலரில் அல்லாமல் மாற்று நாணயங்களில் வழங்குவதற்கான திட்டமொன்று குறித்து ஸ்ரொஸ் கான் தனது ஆலோசகர்களிடம் தீவிரமாக பரிசீலித்து கொண்டிருந்தார் என்பதும் அதனை தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள் பதவி இழப்புக்களும் தனது உலக ஒழுங்கை மாற்றியமைக்க நினைப்பவர் தனது நண்பராயினும் விட்டு வைக்க போவதில்லை எனும் செய்தியையே அமெரிக்கா உலகிற்கு சொல்ல முற்படுகின்றது.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக