புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது கடிதம் அல்ல கண்ணீர்..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 3:45 pm

கவிதைக்கு பொய் அழகு என்பதை சற்று திருத்தி பொய்யுமழகு என்று ஏற்றுக் கொண்டு.., உண்மையுமான வலியொன்று கவிதையுமாய் இதோ இங்கே... (அம்புலி என்ற பெயர் மட்டும் கற்பனை)

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Manthinkingk

இது கடிதம் அல்ல கண்ணீர்

ன்புள்ள அம்புலிக்கு!

அன்பே..
பார்த்தோம்
பார்த்தோம்
பார்த்தோம்
ஒன்பது வருடங்கள் பார்த்துக் கொண்டே கழிந்தது.

காற்றினைச் சுமந்தயென் இதயம் கூட
அநதக் காற்றைவிட அதிகம் - உன்
நினைவுகளைச் சுமந்திருக்கும்.


நொடிக்கு நொடி..
நொடிக்கு நொடி..
என் காதல் அசைபோட்டதெல்லாம்...
எங்கேனும் ஒருமூலையில் நின்று
உனக்கு தெரியாமலாவது - உன்னை
பார்க்க மாட்டேனா என்பதை மட்டுமே.

உண்மையில் -
உன் பார்வையில் உயிர் வாழ்ந்த எனக்கு
அந்தக் காலதூரம் கூட கண்ணுக்குத்
தெரியவில்லை.

காணும் இடமெல்லாம் அம்புலி அம்புலி!
நினைக்கும் நினைவெல்லாம் அம்புலி அம்புலி!

கணத்திற்கு கணம்...
கணத்திற்கு கணம் - என் இதயம்
சுவாசித்ததெல்லாம் அம்புலி அம்புலி அம்புலி
மட்டுமே!

ஒரு இசை கேட்பேன்
அங்கு உன் நினைவு வரும்
ஒரு படம் பார்ப்பேன்
அங்கு உன் நினைவு வரும்

எங்கு திரிந்தாலும் என்ன செய்தாலும்
யாரிடம் பேசினாலும் -
உன்னை மறந்து மட்டும்
நான் எதையுமே செய்ததில்லை.

பிறகு ஒரு நாளில்...

நம் விழிகளில் இனித்த காதல்
இதழ்களிலும் தித்தித்ததோ தெரியவில்லை.
மெல்ல.. சிரிக்க ஆரம்பித்தோம்
தூரத்தே நின்று ஜாடையில் பேச ஆரம்பித்தோம்

நீ தொலைபேசியில் அழைத்தாய்
சிரித்து சிரித்துப் பேசினாய்
என் நினைவு முழுதும்
நீ மட்டுமே என்றானாய்.

எங்கேனும் போகும்போது கூட
என்னிடம் ஒரு கண்ஜாடையாவது
செய்துவிட்டுப் போகத் துடித்தாய்.

நான் வெளியே சென்றால்
ஜன்னலோரம் வந்து
வேறேன்னவோ செய்வது போல்
எனக்கு சைகைக் காட்டி - போய்...வா என்றாய்.

திரும்பி வரும்வரை - உன்
தம்பி தங்கைகளோடு விளையாடுவதைப் போல
வாசலிலே காத்திருந்தாய்.

அப்போதெல்லாம் - இரவு வந்தால்
ஏன் வந்ததோ என்றிருக்கும், தூக்கமே வராது.
அந்த நிமிடமே உன்னைக் காண
மனம் துடிக்கும்.

வாசலில் வந்து நின்று
உன் வீட்டைப் பார்ப்பேன்
ஜன்னல், வாசல், கிணற்றடி, முற்றம்,
மொட்டைமாடி,
எங்காவது நீ நிற்கமாட்டாயா என்றென்
கன்னுகெட்டியவரை தேடுவேன்.


எங்குமே நீ இருக்க மாட்டாய்.
ஊரே உறங்கிக் கொண்டிருக்கும்
என் மனம் மட்டும் உன்னை நினைத்துக்
கண்ணீர் வடிக்கும்..


இரவெல்லாம் உன் நினைவுகளோடு விழித்துவிட்டு
விடியலில் உறங்கிப் போவேன்.
உனக்குத்தான் அதெல்லாம் தெரியாதே!

நீ எங்கள் வீட்டு வாசலில் வந்துநின்று
யாரையோ அழைப்பது போல்
சப்தம் போட்டு அழைப்பாய்-

உன் குரல் என் செவிகளில் புகுந்து
உயிரை உசுப்பி விட -
விழுந்தடித்து எழுந்து வாசலுக்கு வருவேன்.

நீ என்னைக் காணக் குழாயடிக்கு வந்து
வந்து.. வந்து..
இரண்டு மூன்று துணிகளை
பத்து குடம் தண்ணீரில் அலசுவாய்!

யாருமில்ல நேரம் பார்த்து
காற்றிலே தவழும் முத்தங்களைத் தருவாய்!

ஒரே ஒரு நாள் -

ஒரே ஒரு முறை என்னைப் பார்க்காது
போனாலும்
வருத்தப்பட்டாய். என் உயிரே நீ தான் என்றாய்!

ஆக..
கடிதம் இல்லை..
கட்டி பிடிக்கவில்லை..
தொட்டு பார்க்கவில்லை..
எதிர் எதிர் வீட்டு இடைவெளியில் -
உயிர் மட்டும் - யாரிடம் இருக்கிறதென்பதே
தெரியமால் காதலித்தோம்.


காதலித்தோம்
காதலித்தோம்
மூன்று வருடங்கள் இன்னும் கழிந்தது.

பதின்மூன்றாம் வருடத்தில் - ஊராரின் கண்களில்
உறுத்தியது நம் காதல்.


ஜாதி பேசி
மதம் பேசி
அந்தஸ்து பேசி
பகைமையை வளர்த்த சமூகத்திற்கு மத்தியில்
மிக யதார்த்தமாய் பிரிந்தோம் -நாம்!

எப்படியும் சேர்ந்துவிடுவோமென்ற எண்ணத்தில்
வெளிநாடு வந்தேன்.


நீயோ ஓரிரு கடிதங்களை மட்டுமே அனுப்பினாய்.
கடைசி கடிதத்தில்
'இனி கடிதமும் வராதென்று'
தெரிவித்தாய்!

கனத்த இதயத்துடன் இரண்டு வருடங்கள் கழிந்தது
மூன்றாம் வருடத்தில் உனக்குத் திருமணம்
என்றார்கள்.

பதினைந்து வருடக் கண்ணீரும்
உடைத்துக் கொண்டு வந்தது.


அழுது..அழுது..அழுது.. என்
வாழ்க்கையை மறந்துவிட்டு -
உனக்கு வாழ்த்தும் அனுப்பினேன்.

நினைத்துப் பார்க்கையில் வலிக்கிறது காதல்!
இப்பொழுது உனக்குக் குழந்தையும் இருக்கிறதாம்!

எனக்கு வயது முப்பத்து மூன்று.


என்னிடம் -
உன் நினைவு..
உன் பார்வை...

இப்படி சில கவிதை....
அவ்வப்போது அழுகை......
அதோடு உன் கனவுகளைத் தவிர
வேறொன்றுமே இல்லை!
---------------------------------------------------
_வித்யாசாகர்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 22, 2009 3:49 pm

வித்யாசாகர் wrote:

ஒரு இசை கேட்பேன்
அங்கு உன் நினைவு வரும்
ஒரு படம் பார்ப்பேன்
அங்கு உன் நினைவு வரும்

எங்கு திரிந்தாலும் என்ன செய்தாலும்
யாரிடம் பேசினாலும் -
உன்னை மறந்து மட்டும்
நான் எதையுமே செய்ததில்லை.

அப்போதெல்லாம் - இரவு வந்தால்
ஏன் வந்ததோ என்றிருக்கும், தூக்கமே வராது.
அந்த நிமிடமே உன்னைக் காண
மனம் துடிக்கும்.

வாசலில் வந்து நின்று
உன் வீட்டைப் பார்ப்பேன்
ஜன்னல், வாசல், கிணற்றடி, முற்றம்,
மொட்டைமாடி,
எங்காவது நீ நிற்கமாட்டாயா என்றென்
கன்னுகெட்டியவரை தேடுவேன்.[/color]

ஆக..
கடிதம் இல்லை..
கட்டி பிடிக்கவில்லை..
தொட்டு பார்க்கவில்லை..
எதிர் எதிர் வீட்டு இடைவெளியில் -
உயிர் மட்டும் - யாரிடம் இருக்கிறதென்பதே
தெரியமால் காதலித்தோம்.[/color]

---------------------------------------------------
_வித்யாசாகர் [/color]


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐ லவ் யூ நடனம்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 22, 2009 3:50 pm

ஆனால் இதை யாருக்கு அனுப்புவது??



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 22, 2009 3:56 pm

இரவு வந்தால்
ஏன் வந்ததோ என்றிருக்கும், தூக்கமே வராது.
அந்த நிமிடமே உன்னைக் காண
மனம் துடிக்கும். இது கடிதம் அல்ல கண்ணீர்.. 677196 இது கடிதம் அல்ல கண்ணீர்.. 677196 இது கடிதம் அல்ல கண்ணீர்.. 677196



அருமை அருமை இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642 இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642


வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 3:58 pm

விஜய் wrote:ஆனால் இதை யாருக்கு அனுப்புவது??

யாருக்கும் அனுப்படாத கவிதைகள் என்னிடம் இப்படி நிறைய இருக்கிறது விஜய். இப்படி பட்ட கவிதைகளை யாரும் யாருக்கும் அனுப்ப வேண்டாம் தோழா..

இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 22, 2009 4:00 pm

வித்யாசாகர் wrote:
விஜய் wrote:ஆனால் இதை யாருக்கு அனுப்புவது??

யாருக்கும் அனுப்படாத கவிதைகள் என்னிடம் இப்படி நிறைய இருக்கிறது விஜய். இப்படி பட்ட கவிதைகளை யாரும் யாருக்கும் அனுப்ப வேண்டாம் தோழா..

இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642

நன்றி நண்பரே....

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 4:02 pm

அருமையான காதல் கவிதை,கண்ணீர் கவிதை..நன்றிகள் வித்யாசாகர் ,மீனுவின் பாராட்டுக்கள் ஸ்பெஷல் இந்த கவிதைக்கு ..தொட்டுக்காம கட்டிப் பிடிக்காம காதலிப்பதுதான் உண்மையான காதல்..நாம் என்ன செய்தாலும் மனதில் மறக்காம இருப்பதே காதல்... நைட் வந்தால் மிஸ் பண்ணுவதும் நிஜ காதலே ..ஒரு பெரிய விஷயமான காதலை ஒரு கவிதையில் அழகா சொல்ல நம்ம விட்யாசாகரால் மட்டுமே முடியும் .
இது கடிதம் அல்ல கண்ணீர்.. 011 இது கடிதம் அல்ல கண்ணீர்.. 2 இது கடிதம் அல்ல கண்ணீர்.. A170



யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Sep 22, 2009 4:09 pm

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Empty திருமணத்தின் முன் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி? இந்த கவிதயை உஙக காதலருக்கு அனுப்பினால் அலுப்படிக்காமல்

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Empty உங்க பின்னாலையெ சுத்துவார்



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 4:10 pm

கை தட்டும் போது மனதிற்குள் ஒரு அறை சிரிக்கிறது.., மற்றொரு அறை.. அழுகிறதென்று நினைக்கிறேன். ஆயினும் காதுகளில் கை தட்டும் ஓசை மட்டுமே.. மட்டுமே..

காற்றின் ஓசையோடு வருகிறேன்.. படிப்பவர்கள் இயலுமாயின் விமர்சனம் தர முயற்சி செய்யுங்கள்.

கவிதைகள் தமிழாளின் மடியிலே புத்தகமாய் வந்து விழும் முன் திருத்தப் படவேண்டும், திருத்தம் தேவையெனில்.

நன்றி மீனு.. மற்றும் அனைவருக்கும்.

இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642 இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642 இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 22, 2009 4:13 pm

சிரி



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக