புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
புகழ்ச்சியின் மயக்கறு!
புன்மையை உதறு!
இகழ்ச்சியைத் தாங்கு!
எள்ளலை எடுத்தெறி!
நிகழ்ச்சியை வரிசைசெய்!
நினைவை உறுதிசெய்!
மகிழ்ச்சியும் துயரமும்
மனத்தின் செயல்களே!
பாடல் - 1 உரைக்குறிப்புகள் : (எண் அடிகள் எண்)
1. புகழ்ச்சியின் மயக்கு-பிறர் கூறும் புகழ்ச்சியுரைகளால் ஏற்படும் உணர்வுக் கிறக்கம்; அறுத்தல்-அடியோடு நீக்குதல்.
2. புன்மை-இழிவாம் தன்மை; உதறுதல்-பற்றப் பற்றத் தவிர்த்தல்.
3. இகழ்ச்சி-செயப்பெறும் நல்வினைகளின் மேல் அறியாமையால் கூறப்பெறும் இகழ்ச்சியுரைகள்.
4. எள்ளல்-அருமை வினைகளை எளிமையாகக் கருதி உரைக்கப்பெறும் புன்சொற்கள்.
5. வரிசை-செயப்பெறும் வினைகளை அறிவானும் வினையானும் வகைப்படுத்தி இடத்தானும் காலத்தானும் பொருந்த அமைத்துக் கொள்ளுதல்.
6. நினைவை உறுதி செய்தல்-செயத் தக்கவற்றுக்கும் தகாதனவற்றிற்கும் வேராகிற நினைவுகளை அறிவான் தேறி செயலுக்குரியனவாகத் தெரிந்தெடுத்தல்.
7,8. மகிழ்ச்சி என்பதும் துயரம் என்பதும் செயப் பெறும் வினைகட்கு ஏற்ப மனம் அவ்விடத்துப் பெறும் உணர்வு முடிபுகளுக்கான பெயர்களாகும்.
புகழ்ச்சியின் மயக்கறு!
புன்மையை உதறு!
இகழ்ச்சியைத் தாங்கு!
எள்ளலை எடுத்தெறி!
நிகழ்ச்சியை வரிசைசெய்!
நினைவை உறுதிசெய்!
மகிழ்ச்சியும் துயரமும்
மனத்தின் செயல்களே!
பாடல் - 1 உரைக்குறிப்புகள் : (எண் அடிகள் எண்)
1. புகழ்ச்சியின் மயக்கு-பிறர் கூறும் புகழ்ச்சியுரைகளால் ஏற்படும் உணர்வுக் கிறக்கம்; அறுத்தல்-அடியோடு நீக்குதல்.
2. புன்மை-இழிவாம் தன்மை; உதறுதல்-பற்றப் பற்றத் தவிர்த்தல்.
3. இகழ்ச்சி-செயப்பெறும் நல்வினைகளின் மேல் அறியாமையால் கூறப்பெறும் இகழ்ச்சியுரைகள்.
4. எள்ளல்-அருமை வினைகளை எளிமையாகக் கருதி உரைக்கப்பெறும் புன்சொற்கள்.
5. வரிசை-செயப்பெறும் வினைகளை அறிவானும் வினையானும் வகைப்படுத்தி இடத்தானும் காலத்தானும் பொருந்த அமைத்துக் கொள்ளுதல்.
6. நினைவை உறுதி செய்தல்-செயத் தக்கவற்றுக்கும் தகாதனவற்றிற்கும் வேராகிற நினைவுகளை அறிவான் தேறி செயலுக்குரியனவாகத் தெரிந்தெடுத்தல்.
7,8. மகிழ்ச்சி என்பதும் துயரம் என்பதும் செயப் பெறும் வினைகட்கு ஏற்ப மனம் அவ்விடத்துப் பெறும் உணர்வு முடிபுகளுக்கான பெயர்களாகும்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உண்மை வலியது!
உள்ளமும் வலியது!
திண்மை தருவதும்
தேர்வதும் அதுதான்.
மண்மேல் அனைத்தும்
மடிந்துமட் குவன!
எண்மேல் எண்ணிய
ஒருவனாய் இரு,நீ!
பாடல் - 16 உரைக் குறிப்புகள்
1. ஆற்றல் சான்றது உண்மை.
2. அந்த ஆற்றலை உள்ளமும் பெற்றிருக்கிறது. (நம் உள்ளமும் உண்மையை உள்ளார்ந்து பெறுமானால் நாமும் ஆற்றலுடையேமாய் மாறுவோம்.)
3,4. தகைமை நிலைகளில் திண்மையைத் தருவதும், நல்லது தீயது ஆய்ந்து பார்த்து நன்மையைத் தேர்வதும் அந்த உண்மை சான்ற உள்ளந்தான் என்பதறிக.
5,6. மற்று, இவ்வுலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் மட்கி அழிவனவாகவே உள்ளன.
7,8. ஒருகால் அழியுந் தன்மையை உடைய இவ்வுலகில் அழியாது நிற்பது புகழாகலின், அப்புகழால் நிலைப்பேறு பெற்றிருக்கும் சான்றோரின் எண் வரிசையில் மேலும் எண்ணப் பெற்ற ஒரு சான்றோனாக நாம் விளங்குதல் வேண்டும் என்க.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
புன்மை சிறியது!
பொய்மையும் சிறியது!
புன்மேல் பனித்துளி
போலும் உடம்பதன்
மின்போல் வாழ்க்கையில்
மீந்துவ துயர்வே!
புன்மையும் புரையும்
பொக்கன; புதைவன!
பாடல் - 17 உரைக் குறிப்புகள்:
1. புல்லிய மனத்தன்மை ஆற்றல் நிலையினும், வினை நிலையினும் மிகவும் சிறுமையுடையதாகும்; இழிந்ததாகும்.
2. அப்புன்மைத் தன்மை போன்றே பொய்மைத் தன்மையும் சிறுமையுடையதும், இழிந்ததும் ஆகும்.
3-6. காலத்தாலும், சூழ்நிலைத் தகவாலும் புல்லின்மேல் வந்து பொருந்திய சிறிய பனித்துளி போல, உயிரை வந்து சார்ந்திருக்கும் இவ்வுடம்பொடு கூடிய வாழ்க்கையும் மின்னல் போலும் விரைந்து தோன்றி மறையக் கூடியதேயாம்! இவ்வாழ்வு உண்மை சார்ந்த உள்ளதொடு தக அமையப் பெற்றால் மீதமாவது என்பது உயர் பயன் ஒன்றுமே!
7,8. புல்லிய மனத்தன்மையும், மனப் பொய்ம்மையும் விரைவில் மாயக் கூடியனவாகும்! புதைந்து போவனவாகும். எனவே அவற்றைக் கைக்கொள்ளற்க என்றபடி.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
தருக்குகொள் ளாதே!
தன்முனைப் பகற்று!
செருக்குச் சேற்றினில்
சிதைந்தவர் பலபேர்!
உருக்குலைத் திடும்,அது;
உன்னையும் உம்மையும்!
திருக்குலைத் திடும்,அது;
தீமையும் விளைவிக்கும்!
பாடல் -18 உரைக் குறிப்புகள்:
1. தான் ஒருவனே இந்நிலைக்கு வாய்த்துள்ளதாக என்றும், எதிலும் அறிவுச் செருக்கும், வினைச் செருக்கும், மனச் செருக்கும் கொள்ளாதிருக்க!
2. தன்முனைப்பு எண்ணங்களை மனவறையினின்றும் அப்புறப்படுத்தி விடுக!
3,4. அகந்தை கொண்டு அஃதால் வரும் மகிழ்வொடு தன்னிலையினின்று இழிந்தும் அழிவுச் சேற்றில் தள்ளப்பட்டுச் சிதைந்து போயினார் இவ்வுலகத்துப் பலராவர்.
5,6. அம் மனச் செருக்கு நம்மின் பண்புருவைக் குலைத்தழிப்பது; அழிப்பதோடு, நம்மைச் சார்ந்தோர் எவராயினும் அவர்க்கும் அழிவு தர வல்லது!
7,8. மேலும், அது நம்பால் உள்ள வேறுபாடற்ற நடுநிலைத் தன்மையால் அமைந்திருக்கின்ற அக அழகைக் குலைப்பதோடு, தீங்கையும் விளைவித்து விட வல்லதாகும். (திரு என்பதற்குச் செல்வம் என்னும் பொருள் உண்மையின், அச் செருக்காந்தன்மை நம்மின் பொருட் செல்வத்தையும், அறிவுச் செல்வத்தையும் மற்றும் செல்வ நிலைகளாகக் குறிக்கப் பெறுவன வேறு எதனையும் குலைத்தழிக்கும் என்றும் பொருள் கொள்க!)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உலகுக் குரியனாய்
உன்னை உயர்த்திடு!
உலகுக் குரியராய்
உயர்த்து மாந்தரை
கலகக் கொள்கையில்
கால்கோ ளாதே!
விலகப் பயில்,நீ!
வீணுரை வீணரை!
பாடல் - 19 உரைக் குறிப்புகள்:
1,2. இவ்வுலக மக்களுக்கு நாம் உரிமையினம் என்னும் பரந்த பெருமனத்தை உடையேமாக உயர்த்திக் கொள்ளுக! (நாம் சிற்றிறைவரும் உலக உடம்பரும் அல்லமோ?)
3,4. அந்நிலைக்கு உயர்த்திக் கொண்டால் மட்டும் போதுவதோ? நம் இனத்தாராகிய இவ்வுலக மாந்தர் அனைவரையும் அதே போன்று மாந்த நலத்துக்குத் தாமும் அத்தகையரே என்னுமாறு உயர்த்துதல் வேண்டும். (அவர் தந்தமக்குரியராய் தந்தலச் சேற்றில் சிக்கியுழல்தலான் அவர்களையும் அந்நிலையினின்றும் மீட்க வேண்டும் என்றவாறு.)
5,6. கெடும்பையும் குழப்பத்தையும் உருவாக்கி மக்கள் நலந்தீய்க்கும் எக் கொள்கையிலும் சென்று பொருந்தற்க!!
7,8. வெறுமையான உரைகளை நீளப்பெய்து, நம் அரிய நேரத்தையும் ஆற்றலையும் வீண்டிக்கும் தகவிலா வீணர்களிடமிருந்து விலகி நிற்கப் பயின்று கொள்க!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மாந்த ஒளி,நீ!
மந்த விலங்கில்லை!
ஏந்தல் எனநட!
இளைத்தும் தலைநிமிர்!
காந்தப் பார்வையால்
மக்களைக் கவர்ந்திழு!
சேந்து,அவர் நினைவை
செம்மை நினைவுவார்!
பாடல் - 20 உரைக் குறிப்புகள்:
1,2. ஒளியார்ந்த மாந்த உயிரோம் நாம்! அறிவிலும் மனத்திலும் கீழ்ப்பட்ட விலங்கு அல்லேம்; நம் பிறப்பும் தோற்றக் கரணியமும் உயர்ச்சி நோக்கியது!
3. எனவே, மாந்த உயிரிலேயே உயரியவர் நாம் எனும் பெருமிதத்தோடு நடையை மேற் கொள்க!
4. பொருளாலும், உருவாலும் இளைத்துப் போகும் சூழல் வந்து நேரினும், அதுபோதும் நாம் தலை நிமிர்ந்தே நிற்றல் வேண்டும்.
5,6. காந்தம் போலும் ஈர்ப்புப் பார்வையால் மாந்த இனத்தைக் கவர்ந்து நம் வழியில் செலுத்துவோமாக!
7,8. தகவிலாப் பிறரின் தாறுமாறான நினைவுகளையெல்லாம் அவர் மனத்தினின்று சேந்திப் புறத்தெறிவோமாக. மேலும் அவரின் நெஞ்சக் குளங்களில் செவ்விய நல்லெண்ணங்களை வார்த்து நிரப்புவோமாக!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அறிவொளி விளக்கால்
அவர்விளக் கேற்று!
செறிவுரை பகர்ந்திடு!
செழிக்க அன்புசெய்;
முறிவுரை பகரேல்!
முகவுரை கீழ்மை!
வெறியுணர் வடக்கு!
வீம்பறி யாமை!
பாடல் - 21 உரைக் குறிப்புகள்:
1,2. செறிந்தொளிரும் அறிவு விளக்கால், அவர்பால் அமைந்திருக்கின்ற அறியாமையிருள் கப்பிய விளக்குகளை ஏற்றி ஒளி பெறச் செய்க.
3. அறிவார்ந்தவும், நுண்மையும், செறிவும் சார்ந்தவுமான பயன் விளைக்கும் உரைகளையே நிகழ்த்துக.
4. நம்மை அண்டியோர் எவர்பாலும் அவர்கள் உள்ளமும் மனமும் இன்பத் துய்ப்பான் செழிப்புறுமாறு அன்பைப் பொழிக! (எல்லா அறிவு நிலைகளையும் பிணைப்பதும், வளரச் செய்வதும் அதுவாகலான்)
5. நெருங்கிப் பேசுவோர் இணைவு முறிவுறுமாறு பிரிப்புணர்வு புலப்படும் பசையற்ற உரையை எக்காலும் எவர்பாலும் தவிர்க்க!
6. பிறர் மகழ வேண்டும் என்பதற்கெனத் (தன்னலவுணர்வால்) போலி முகமனுரை செய்தல் கீழ்மையானதெனவே அதை முற்றுந் தவிர்க்க!
7. உள்ளத்திற்கும் உடற்கும் கிளர்ச்சியூட்டித் திமிர்ந்தெழ வல்லவான வெற்று மிகையுணர்வுகள் தோன்றாவாறு அவற்றை அறிவான் கட்டுப்படுத்தி யடக்குக!
8. வீம்பு - வீண்பெருமை; செருக்குடன் கொள்ளும் அறியாமை மனவெழுச்சி; ஆரவார முனைப்பு.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உரையால் உரைபெறு!
உவகையால் ஒளிசேர்!
புரைசொல் இழக்கு!
போலிமை வினைதவிர்!
திரையிட் டிராதே!
தீமையைத் துணிந்துகொல்!
வரையறு போக்கை;
வாழ்வைக் காதல்செய்!
பாடல் - 22 உரைக் குறிப்புகள்:
1. நாம் பேசும் உரையின் நல்லுணர்வும், நல்லறிவும் அளவானே பிறர் எதிர்வுரையும் இருக்குமாகலின், நாம் பேசும் முதலுரையின் தொடுப்பைச் சிறந்ததாக்குக என்பது.
2. ஒழுக்கம், நேர்மை, உண்மை, அறிவு இவற்றின் வழி விளைந்துள்ள மனக்களிப்பால் நம்மைச் சார்ந்து வரும் அந்நிலைகளைப் பற்றி ஒளி பெறுகின்ற நிலைக்குச் சான்றினனாக இருக்க!
3. பயனில் கொடுஞ்சொற்கள் தீங்கையும், இழுக்கையுமே விளைக்கும்.
4. உண்மைக்கு மாறான வெற்றாரவார வினைப்பாடுகளை எக்காலும் தவிர்க்க!
5. அறிவாற்றல்களைப் பிறர்க்கும் வழங்கிப் பயன்படுமாறு செயாது அவற்றிற்குத் திரையிட்டு அமைந்து பயனின்றிக் கிடத்தல் கூடாதென்க. (திரைக்குள் மறைந்தபடி செய்யும் தீவினைகளைத் தவிர்க்க எனினுமாம்.)
6. தீமைகள் எங்கு எவரால் எவரிடத்து நிகழ்த்தப் பெறினும், அங்கு அதனை அக்காலே துணிவொடு எதிர்த்தழிக்க!
7. வினையையும் அதன் போக்கையும் பொருள், கருவி, காலம், இடம், பயன் இவற்றொடு தொடர்பு படுத்தித் திட்டவட்டமாக ஆய்ந்து நிரல் படுத்துக!
8. மாந்த வாழ்க்கை ஒரு பேறும், உயர்ந்ததும் உயிர் மலர்ச்சிக்காகவும் அமைந்ததாகலின் அதை நன்குத் துய்த்திட வேண்டி அதன்பால் பேரன்பும் பேரீடுபாடும் கொள்க! (வாழ்வை எந்நிலையிலும் வெறுத்தலும், துறத்தலும் கூடாது என்பதாம்.)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கலைபயில்; எண்பயில்;
கவினிலக் கியம்பயில்!
சிலைபயில்; வண்ணச்
சித்திரம் எழுது!
அலைபயில்; கலம் பயில்!
அளாவும் விண்பயில்!
உலைபயில்; உடல்பயில்;
உன்னை நீ,பயில்!
பாடல் - 23 உரைக் குறிப்புகள்:
1,2. வாழ்க்கையமைப்பிற்கும் போக்கிற்கும் பயனும் எழிலும், சுவையும் ஊட்டுகின்ற எல்லாக் கலைகளையும் பயின்று கொள்க! எல்லா நடைமுறைகளுக்கும், அகத்தியமான கணக்கியல் அறிவைப் பயின்று கொள்க! ஒழுங்கையும் செப்பத்தையும் செழுமையையும் கூட்டுவிக்கின்ற எழிலார்ந்த அறிவு இலக்கியங்களைப் பயின்று கொள்க!
3,4. சிலை வடிக்கும் அரிய கலையை (சிற்பக் கலையை)ப் பயின்று கொள்ளுக! அழகிய வண்ண ஓவியங்களை வரைந்து வரைந்து பயில்க!
5. அலையிடை நீந்திப் பயிலும் கட்டுமரம், படகு, கப்பல் போலும் நீர்க்கலங்களை இயக்கப் பயிற்சி பெறுக!
6. அண்டப் பரப்பில் அளாவிப் புடை விரியும் கோள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பற்றிய அறிவைப் பயில்க!
7,8. சமையல் என்பது பெண்டிர்க்கேயுரிய தனிக் கலையாகக் கருதி ஒதுக்கி விடாது அக்கலையிலும் தேர்ச்சியுடையவனாகுக! உடலோம்பல் என்பது உயிரோம்பல் ஆதலின் அதற்கான பயிற்சியை வாழ்வு முழுமையும் தொடர்ந்து மேற்கொள்க! அவற்றொடு, நாம் யாரென நம்மையே அறிந்து கொள்க! (இப் பயிற்சி மெய்யறிவியல் பற்றிய கல்வியாலும், உணர்வாலும் மட்டுமே கைவரப் பெறுவதாகும்.)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
விளங்கிய செல்வம்
வினைபடு கருவி!
வளங்களைப் பகிர்ந்துகொள்!
வயல்விளை வறிவு!
உளங்கொள ஈத்துண்!
உவகையே ஈகை!
களங்கல் விக்கமை!
கனவிலும் கேள்விகொள்!
பாடல் - 24 உரைக் குறிப்புகள்:
1,2. விளக்கம் பொருந்தி பெரிதாய் உலகோரால் மதிக்கப் பெறும் பொருட்செல்வம் இவ்வுலகில் அவ்வவரும் வினைப்படுவதற்கென்றுள்ள கருவியேயாகும். அதனை வெறும் வழிபாட்டுக்குரியதாக எண்ணலாகாது.
3. முயற்சியாலும் சூழலாலும் வந்து வாய்க்கும் செல்வ வளங்களை, அவை வாயாத் தகுதியினரிடையே அவற்றைக் கலந்து பகிர்ந்து கொள்ளுக!
4. அறிவு, வயல் விளைவைப் போன்றதாகும். (பயிர் விளைச்சலில் ஒரு வித்தினின்று பல்வித்துகளை விளைத்தல் போலும் ஓர் அறிவு வித்தூன்றல் பல அறிவு வித்துகளின் பெருக்கத்திற்கு மூலமாகுதலாலும் வேளாண்மை பகிரப் படுதலாலும் அறிவு வயல் விளைவு போன்றதாகும் என்க.)
5. உள்ளம் விரும்பி பிறர்க்கு ஈந்து அவரொடு உண்டு மகிழ்க!
6. உவகையென்பது பிறர்க்கீதலால் ஏற்படும் உள்ளக் களிப்பன்றிப் பிறிதில்லை; எனவே, ஈத்துவக்க!
7. எவ்வகைச் சிறப்புக் கல்வியிலும் நுழைந்து நம்மால் வெற்றி காணவியலும் என்பதை நன்கு அறிந்தாய்ந்து அவ்வத் துறைகளுக்காகும் கல்விக் களங்களை அமைத்துக் கொண்டு அவற்றில் ஈடுபடுக!
8. பிறர் கூறும் பயனுரைகளை நேரிலன்றிக் கனவிலும் உணர்வை அதில் ஊன்றிக் கொள்க என்றபடி. கேள்வியறிவை எவ்விடத்திலும் மிகுக்க என்றவாறாம்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிறக்கச் செய்திடு!
சிறப்பூண் சிறிதுண்!
உறக்கம் மிகுதவிர்!
ஓய்வுளக் கிளர்ச்சி!
மறக்க மறப்பன!
மதிப்பன மதி;மகிழ்!
துறக்க, துறப்பன!
துய்ப்புயிர் வாழ்க்கை!
பாடல் - 25 உரைக் குறிப்புகள்:
1. எவ்வினையையும், சிறப்பாகவும், முழுமையாகவும், செப்பமாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும் செய்க!
2. அளவிற் குறைவெனினும் ஆற்றல் செறிந்த உணவாகத் தேர்ந்து உண்க!
3. தேவைக்கு மேலான நீளுறக்கத்தைத் தவிர்க்க! (மிகுவுறக்கம், உடல் நலத்திற் கேலாததானும், காலக் கேடாக்குதலானும் அது தவிர்க்கவென்பதாம்)
4. ஓய்வை முறையாக எடுத்துக் கொள்ளுதல் உள்ளத்தை எக்காலும் கிளர்ச்சியும், எழுச்சியும், சுறுசுறுப்பும் உடையதாக வைத்துக் கொள்ளப் பயன்படும்.
5,6. மறக்கத் தக்க எவற்றையும் உடன் மறப்பதோடு, மதிக்கத்தக்க எதற்கும் உரிய மதிப்பைத் தருக!
7,8. நேரிய வாழ்க்கைப் போக்குக்குத் தேவையற்ற, அல்லது மிகுவாக வேண்டப்படாது நீங்க வேண்டியதும், நீக்க வேண்டியதும் எவையெவையோ அவ்வவற்றைத் துறக்க!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
» பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
» தமிழ் தேசிய தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம்: ஜுன் 11, 1995
» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
» முத்தான முப்பது முப்பது மருத்துவ குறிப்புகள்
» பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
» தமிழ் தேசிய தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம்: ஜுன் 11, 1995
» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
» முத்தான முப்பது முப்பது மருத்துவ குறிப்புகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|