புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_m10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_m10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_m10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_m10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_m10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_m10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_m10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_m10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_m10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_m10யாதுமாகி நின்றாய் பராசக்தி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாதுமாகி நின்றாய் பராசக்தி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:34 am

யாதுமாகி நின்றாய் பராசக்தி! Vm1

"வைய முழுதும் படைத்து அளிக்கின்ற மஹாசக்தி தன் புகழ் வாழ்த்துகின்றோம். பூதங்கள் ஐந்தில் இருந்து எங்கும் கண்ணில் புலப்படும் சக்தியைப் போற்றுகின்றோம். உயிர் எனத் தோன்றி உணர்வு கொண்டே வளர்ந்து ஓங்கிடும் சக்தியை ஓதுகின்றோம்'' என்று மகாகவி பாரதி பராசக்தியின் பேரருளைப் போற்றுவார்.

உலகத்தில் எல்லாவற்றிலும் வியாபித்து அவற்றை இயக்கும் உயிர்சக்திதான் ஆதிபராசக்தி. பிரம்மா, விஷ்ணு, ஈசன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் படைத்தல், காத்தல், அருளல் என்னும் சக்தியை அளிப்பவள் பராசக்தியே என்பது சக்தி வழிபாட்டின் ஆதார சுருதி.

சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சிவம் என்பது ஜடப்பொருள். அதனுடன் சக்தி இணையும்போது சலனம் ஏற்படுகிறது. சக்தியின் பரிணாமங்கள் எண்ணிக்கையில் அடங்காது. சூரியனை விட்டு சூரிய ஒளி அகலாதது போல பரமசிவத்திலிருந்து பராசக்தியைப் பிரிக்க முடியாது. பராசக்தியின் ஆயிரத்தில் ஒரு கூறு ஆதி சக்தியாகிறது. ஆதிசக்தியின் ஆயிரத்தில் ஒரு கூறு இச்சா சக்தியாகவும், கிரியா சக்தியாகவும், ஞான சக்தியாகவும் பரிமளிக்கிறது. முத்தொழிலையும் இயற்றுகிறது. இவ்வுலகிலே அவளுடைய சிருஷ்டியான மலை, கடல், நதி, மரம், செடி, கொடி, சோலைகள் எல்லாம் அவளது உடல். மனிதர்களின் தகாத செயல்களால் அந்த சக்தி கோபமுறும்போது இயற்கை உபாதைகள் (அழிவுகள்) நிகழ்கின்றன. பெரு வெள்ளம், மழையின்மை, பூகம்பம், தொற்றுநோய்கள் இப்படிப் பல வித இடையூறுகள் ஏற்படுகின்றன.

உலகில் நல்லவர்களைக் காக்க, கெட்டவர்களை வதைக்க துணையாயிருப்பவள் பராசக்தியே!சிவ பக்தியில் திளைத்த மார்க்கண்டேயனைக் காக்க, சிவபிரான் காலனை உதைத்து மரிக்கச் செய்தது சக்தியின் பாகமாகிய இடது பாதம்தானே! இராமாயணத்தில் இராவணனை அழிக்க சீதை என்ற சக்தியாகவும், மகாபாரதத்தில் அதர்மமும் சூழ்ச்சியும் செய்து வந்த கெüரவர்களை வெல்ல திரெüபதி என்ற மகாசக்தியாகவும் இருந்தவள் அவளே! மகிஷாசுரனை வதைக்க மகிஷாசுரமர்த்தினியாக வடிவெடுத்தவள் அந்த மகா சக்தியல்லவா! தமது புதல்வனுக்கு "சக்திவேல்" கொடுத்து அதனால் முருகப்பெருமான் சூரபத்மாதியர்களை வதைக்கத் துணை நின்றவள் பராசக்திதானே! அவளே கிருஷ்ணனுக்கு சத்யபாமா என்ற சக்தியாக இருந்து நரகாசுரனை வதைக்க உதவினாள். பஸ்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்தவளும் அவள் அல்லவா? இப்படி எத்தனையோ வரலாறுகள். சக்தி இல்லையேல் உலகம் இல்லை.

ஆதி அந்தம் இல்லா ஆதிபராசக்தி ஒன்றாகத் தோன்றி ஆண்-பெண் என்ற இரண்டு சக்தியாகி, இச்சை, கிரியை,ஞானம் என மூன்றாக வளர்கிறாள். பரா, பச்யந்தி, மத்யமா, வைகரி என்ற நான்காகப் பரிணமித்து, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐவகை சக்திகளாக உருப்பெறுகிறாள். நமது உடலில் உள்ள ஆறு ஆதாரங்களில் அமர்ந்து நம்மை ஆட்டுவிக்கிறாள். அவளே சப்த மாதாக்களாக, அஷ்ட லக்ஷ்மிகளாக, நவ துர்க்கையாக பல ரூபங்களில் காட்சி தருகிறாள். தசமஹாவித்யா ரூபங்களைக் கொண்டு இப்பிரபஞ்சம் முழுவதும் தானே என்றும் பிரபஞ்சம் அனைத்திலும் காணப்பெறும் யாவும் என் படைப்புகளே என்றும் பறைசாற்றுகிறாள்.

சிவ பிரானின் இடப்பாகத்தைப் பெற்ற அர்த்தநாரீஸ்வர வடிவில், "பவானி' என்று பெயர் பெறுகிறாள். புருஷோத்தமனாக - ஆண் வடிவில் விஷ்ணுவாகவும், பெண் வடிவில் வைஷ்ணவியாகவும், அசுரர்களை அழிக்கக் கோலம் கொள்ளும்போது காளியாகவும், போரில் வெற்றி பெற்று வரும் போது துர்க்கை எனும் கொற்றவையாகவும் காட்சி தருகிறாள். முத்தொழிலைச் செய்யும் போது பிராம்மணி, வைஷ்ணவி, காத்யாயினி என்றும், வித்தையின் வடிவம்கொள்ளும்போது சரஸ்வதியாகவும் தனதான்ய தலைவியாக வரும்போது லக்ஷ்மி என்றும் அழைக்கப் பெறுகிறாள்.

ஓடும் நீரில் ஜல சக்தி; ஒளிரும் விளக்கில் ஒளிசக்தி: எரியும் நெருப்பில் வெப்ப சக்தி; வீசும் காற்றில் வாயு சக்தி; இயங்கும் எந்திரத்தில் இயந்திர சக்தி-மின் சக்தி; பொருட்களில் ஈர்ப்பு சக்தி - இப்படி மனோசக்தி உட்பட அனைத்து உயிரினங்களிலும் அவள் அடங்கியிருக்கிறாள். இந்த எல்லா சக்திகளையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் ஆன்ம சக்தி. இந்த ஆன்ம சக்தி அதிகரிக்க அதிகரிக்க நாம் இறைவனை நெருங்குகிறோம். இந்த சக்தி பரிபூர்ண நிலையை அடையும்போது அந்த ஆத்மா பேரானந்தம் அடைகிறது. இறைத் தன்மையை அடைந்து இறைவனோடு இரண்டறக் கலந்துவிடுகிறது.

எல்லாம் சக்தி மயம் என்ற தத்துவத்தை உணர்த்த வந்ததுதான் நவராத்திரப் பண்டிகை. மகாசக்தியை- பெண்மையைப் போற்றும் திருவிழா. பக்தியையும், அன்பையும், மனித நேயத்தையும் காட்டும் உன்னத விழா! ஒவ்வொருவர் இல்லத்திலும் படிகட்டி கொலு பொம்மைகளை வைத்து உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து மகிழ்ச்சியையும் அன்பையும் பரிமாறிக்கொள்ளும் அற்புதமான பண்டிகை. படைப்பில் அனைவரும் சமம். அதனால்தான் புழு, பூச்சி முதல் மனிதர், தேவர் வரை, அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் பொம்மை கொலுவில் சமமாகக் காட்சியளிப்பர்.

மஹாளயத்தைத் தொடர்ந்து வரும் சுக்ல பட்சம் தேவதைகளின் குறிப்பாக சக்தி வழிபாட்டுக்கு உரியதாகும். அனைத்து உயிரினங்களும் பராசக்தியிடம் அடங்குவதால் இந்த ஒன்பது நாட்கள் சக்தி வழிபாடு பிரதானமாகிறது. நவராத்திரியில் பராசக்தியை பூஜை செய்வது மற்ற நாட்கள் வழிபாடு செய்வதை விட பல மடங்கு பலனளிக்க வல்லது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடாகவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி வழிபாடாகவும், நிறைவான மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே ஒன்பது நாட்களும் ஸ்ரீசக்ர பூஜை, அஷ்டோத்திரம், திரிசதி, சஹஸ்ரநாமம், தேவி மாஹாத்மிய பாராயணம் என்று பல விதமாக பராசக்தியை பூஜிப்போம். அவளின் அருள் பெறுவோம்.

வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்



யாதுமாகி நின்றாய் பராசக்தி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக