புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10 
77 Posts - 36%
i6appar
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மருத்துவத்தின் வரலாறு


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:27 pm

First topic message reminder :

தமிழிலும் இந்திய மொழிகளிலும் வெளிவந்த வரலாற்று நூல்களில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு குறிப்பிடப்படவில்லை. தமிழ் மருத்துவமும் அதன் வரலாறும் மறைக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது.

பழமையான தொடர்ந்த நாகரிக வரலாற்றினையுடைய மக்கள், தாங்கள் கற்றறிந்த வாழ்வியல் அங்கமான மருத்துவம் பற்றிய வரலாற்றை அறிய முற்படாமலும், அறிந்தனவற்றை வரலாற்று முறையில் எழுத முற்படாமலும் இருப்பதனால், ‘தமிழ் மருத்துவத்தின் வரலாறு' அறியப்படாமல் இருந்து வருகிறது.

வரலாறு

வரலாற்றில் இடம் பெறும் பொருளின் தோற்றம், தொடர்ச்சி' வளர்ச்சி, பரிணாமம்' முதிர்ந்த நிலை, தற்போதைய நிலை ஆகியவற்றைக் கண்டறிந்து உறுதிப்படுத்தி, அகப்புறச் சான்றுகளுடன் உரைத்திடுவது வரலாற்றின் வரைவிலக்கணமாகும்.

தமிழ் மருத்துவ வரலாறு

முற்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், அவற்றுக்குரிய மருத்துவத் தொடர்புகளைக் கொண்டு அகப்புறச் சான்றுகளுடன் மருத்துவ வரலாறு வரையப்படும்.

வரலாற்றின் தேவை

மருத்துவ வரலாறு வாழ்வியல் தொடர்புடையது என்பதாலும், அதன் வரலாற்றினால் மருத்துவத்தின் தொன்மை' நோய்களைக் கண்டறிந்து மருந்தளித்த முறைகள் தெரியவரும் என்பதாலும் எதிர்காலத்தில் வருகின்ற நோய்களிலிருந்து எந்தெந்த முறைகளை மேற்கொள்ளலாம் என்பதுடன் புதிய பரிமாணங்களில் மருத்துவத்தை வளர்த்துக் கொள்ளலாம். மேற்கொண்டு செய்ய வேண்டிய செயல் முறைகளிலும் தெளிவு பெற வழியேற்படும்.

வரலாற்றின் இன்றியமையாமை

உலகில் பல்வேறு முறை மருத்துவங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றினால் ஏற்படுகின்ற பக்க விளைவுகளைக் கண்டு அஞ்சி, மரபு வழி மருத்துவமே சாலச் சிறந்தது என உலக மருத்துவ அறிவியல்துறை சார்ந்த அறிஞர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்,இந்திய மருத்துவத்தின் வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தும் நிலையேற்பட்டிருக்கிறது என்பதுடன்' இந்திய மரபினரின் பழமையான மருத்துவத்தின் வரலாறு எழுத வேண்டியது இன்றியமையாத ஒன்றெனக் கருதும் கருத்து வலுவடைகிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:55 pm

உணவு நெறி

நோயில்லா நெறியை உணர்த்துவது உணவு நெறி. அது தினவொழுக்கம், நடைப்பயிற்சி, உறக்கம் போன்றவையாகும். உணவின் நெறிமுறை தவறினால் நோயில்லா நெறி என்பது பிழையாகிப் போகும். ஆகவே' உணவு நெறியை மேற்கொண்டு வாழும் வாழ்க்கையே நோயில்லா வாழ்க்கையாகக் கருதலாம்.

உண்ணும் உணவில் குற்றமுடைய உணவு, நல்ல உணவிலும் உண்போர் உடலுக்கு ஒவ்வாத உணவு என்னும் வகை உணவை நீக்கிவிட்டு' உடலுக்கும் மனத்துக்கும் ஏற்ற உணவை உட்கொண்டால்– நேர்ந்தால்' (நேருமா என்பது வேறு) உடலுக்கு மட்டுமல்ல உயிருக்கும் குற்றம் உண்டாகாது என்பர்.57.

குற்றமுடைய உணவு என்பது கெட்டுப்போன உணவு என்றும், ஒருவன் உண்ணும் அளவுக்கு மீறி உண்ணப்படுகின்ற உணவையும் குற்ற உணவு என்றும் கொள்ளலாம். இத்தகைய உணவு நோயை உண்டாக்கி உடலுக்குத் துன்பத்தைத் தரும்.

உயிர்க்கு ஊறுவிளைக்கும் உணவு என்பது ஒவ்வாத உணவு ஆகும். ஒவ்வாத உணவாவது' சேரக் கூடாத காய்கறிகளை ஒன்று சேர்த்துச் சமைப்பதால் ஒவ்வாமை தோன்றும். அதாவது உணவு நஞ்சு. அத்தகைய உணவு உயிர்க்கு ஊறு விளைவிக்கும் என்பதைக் குறிப் பிட்டே, ஊறு பாடில்லை உயிர்க்கு என்று உரைக்கப்பட்டது.

உணவு உண்ணத் தொடங்கும் முன், முன்னர் உண்ட உணவு முற்ற செரித்துப் பின் பசி முற்றிய நிலையை அடைந்த பின்பே உணவுண்ண வேண்டும்58. என்று உணவு நெறி வகுக்கப்பட்டுள்ளது.

பல்லாண்டுகளுக்கு முன்பே வாழ்க்கைக்குரிய பக்குவங்களை வாழ்க்கை நெறியாக' மருத்துவ நெறியாக, உணவு நெறி உரைக்கப் பட்டிருப்பது உணர்தற் குரியது.

மருந்தே உணவு, உணவே மருந்து

பண்டைய தமிழிலக்கியங்கள் தமிழர் தம் உணவு முறைகளை எடுத்து விளக்குவதுடன் உணவை உண்பதிலும் உணவைப் பல வகையாகச் சமைத்து உண்பதிலும் முன்னோடியாக விளங்கி' நாகரித்தினாலும் பண்பாட்டினாலும் சிறந்து விளங்கியமையைத் தெரிவிக்கிறது.

உயிர் வாழ வேண்டுமானால் உணவு வேண்டும். உணவு இல்லாமல் உயிர் வாழ்தல் என்பது இயலாதது என்பதை உணர்ந்து'

"" உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்''59

என்று உரைத்தனர்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று தன்னிடமிருக்கும் உணவை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து அவர்களையும் வாழ்விக்கச் செய்யும் பண்பாட்டினைக் கொண்டிருந்தார்கள்.

தமிழர்களின் உணவுமுறைகள் நிலத்தின் அடிப்படையில் வெவ்வேறு வகையினவாக இருந்திருக்கின்றன. தொழில் அடிப் படையிலும், பருவத்துக்கு ஏற்றவாறும்' வயதுக்குத் தக்கவாறும் அமைந்து காணப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:56 pm

உணவின் அளவு

உணவு உண்பதில் அளவை மேற்கொண்டிருந்தனர். பெருந்தீனி தின்றால் நோயும்' சிறு தீனி தின்றால் வலுவிழந்து நோயும் வரக்கூடும் என்றறிந்து'

“உண்பது நாழி உடுப்பவை இரண்டே"60 என்னும் கொள்கையை வகுத்திருந்தனர். ஒவ்வொருவரும் நாழி என்னும் அளவு உணவு மட்டுமே உண்ண முடியும் அல்லது உண்ண வேண்டும் என்பதும் ஆடை வகையால் இரண்டு ஆடைகள் மேலாடை இடையாடை என உடுத்த வேண்டும் என்பதும் கற்றனர்.

உணவுநெறி உடலைப் பேணிப் பாதுக்காப்பது;வலிமை கொள்ளச் செய்வது; நோயைத் தவிர்ப்பது என்பதால், வாழ்க்கைக்கு உகந்தது. அந்நெறியின் மேன்மையை உயிராகக் கருதிப் பாதுகாத்தனர் என்பதற்குச் சான்றாக,

பசித்திருப்பது நன்மையைத் தரும். உணவு உண்டபின்பு வாயைக் கழுவ வேண்டும். நோயாளிக்கு உணவளித்தால் அது செரியாமையால் துன்பம் தரும்61 என்றெல்லாம் அறிவுறுத்தக் காண்கின்றோம்.

உடலில் தூய்மை

ஒவ்வொருவரும் உடலைத் தூய்மையாக வைத்துக் கொண் டிருந்தாலேயே பாதி அளவு நோயின் தாக்குதலிலிருந்து மீளலாம். உடலில் தூய்மையில்லாமல் நல்ல உணவை உட்கொண்டாலும் நோய் வரக் கூடும்.உணவுண்ணும் முன் நீராடி உணவுண்ண வேண்டும்62 என்னும் கருத்துடையவர்களாக இருந்தனர்.

உணவுண்ணும் முறை

வாழ்க்கை நியதிகளை உரைப்பதே ‘ஆசாரம்' எனப்பட்டது. அவ்வாறான நியதிகளைத் தொகுத்துரைக்கும் ஆசாரக் கோவை'

‘உணவு உண்ணும் போது கிழக்கு நோக்கி அமர்ந்து உணவுண்ண வேண்டும். நின்று கொண்டோ படுத்துக் கொண்டோ கட்டிலின் மேல் அமர்ந்து கொண்டோ உணவுண்ணக் கூடாது என்கிறது.63

உணவு உண்ட பின் நடை

உணவு உண்ட பின்னர் ஒவ்வொருவரும் சிறிது தூரம் நடக்க வேண்டும். அவ்வாறு நடப்பது உண்ட உணவு செரிமானமாவதற்கு உதவும் எனக் கூறுவர். நோயாளி உணவு உண்டபின் சிறிது தூரம் நடக்க வேண்டுமென்று மருத்துவர் அறிவுறுத்துவர். அத்தகைய மருத்துவச் சிந்தனையும் உடல் நலனைப் பேணுகின்ற சிந்தனையும் பண்டைக் காலத் தமிழர்களிடையே மிகுந்து காணப்பட்டிருக்கிறது.

‘உணவு உண்ட பின்னர் நூறடி தூரம் உலவிவிட்டு வர வேண்டு மென்று மருத்துவ நூல் கூறுவதாகவும், அதற்கு ஏற்றவாறு உணவு மண்டபம் நூறடி நீள நடை மண்டபத்துடன் அமைக்கப் பட்டிருப்பதாகவும் சிந்தாமணி உரையாசிரியர் நச்சினார்க்கினியர் உரைக்கக் காணலாம்' .64

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:57 pm

உண்கலங்கள்

உணவு உண்பதற்காகப் பயன்படுத்தப்படும் உண்கலங்கள் உணவுக்கும் உணவுண்போர் உடலுக்கும் ஏற்றதாக அமைய வேண்டும் என்பது பொது விதி. அத்தகைய பொதுவிதியைக் கருத்திற் கொண்டு உண்கலங்களைப் பயன்படுத்துவதில் கருத்துடையவர்களாக இருந்தனர்.

உணவுண்ணும் உண்கலமாகப் பொன், வெள்ளி' வாழை இலை, தேக்கிலை' தாமரை இலை முதலியன பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

"" செழுங்கோள் வாழை யகலிலைப் பகுக்கும்''65

"" குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு

அமுதம் உண்க அடிகள் ஈங்கென''66

வாழை இலையில் உணவு உண்டது தெரிகிறது. பொன், வெள்ளி, வாழை இலை' தேக்கிலை, தாமரை முதலியவற்றில் உணவுண்பது உடல் நலத்தைத் தரும் என்பது மருத்துவ நூலாரின் கருத்தாக இருக்கிறது.

உணவே மருந்து

தமிழ் மருத்துவ நூலான பதார்த்த குண சிந்தாமணி, தேரையர் வெண்பா போன்ற நூல்கள், ஒவ்வொரு பொருளிலும் அடங்கியுள்ள மருத்துவக் குணங்களை எடுத்துரைக்கின்றன. மரங்களிலிருந்து கிடைக்கின்ற பூ' காய், கனிகள்; செடி, கொடிகளிலிருந்து கிடைக்கின்ற பூ, காய் கனிகள்; குறுஞ்செடிகள் எனப்படும் மூலிகை வகைக் கீரைகள்; பதப்படுத்தி வைக்கப்படுகின்ற ஊறுகாய்' வற்றல் போன்றவை, விலங்கு இனமான பசு' எருமை, ஆடு' போன்றவைகளிடமிருந்து பெறப்படுகின்ற பாலிலிருந்து தயாரிக்கப்படுகின்ற தயிர், மோர்' வெண்ணெய், நெய் போன்றவை; சேகரிக்கப்படும் பொருள்களான மலைத்தேன்' கொசுத் தேன், கொம்புத் தேன்' குறிஞ்சித் தேன் ஆகியவை; விளைவிக்கப்படுகின்ற பொருள்களான நவதானியங்கள்' பருப்பு வகைகள்;தயாரிக்கும் பொருளான எண்ணெய் வகைகள்;இறைச்சி வகைகளான மாடு' ஆடு, பன்றி' உடும்பு, கோழி' நாரை, உள்ளான்' கொக்கு, காடை' மீன், கருவாடு போன்றவை; நீர் வகையான ஆறு, குளம், கிணறு' ஊற்று, சுனை' அருவிநீர் போன்றவை; நில வகையான குறிஞ்சி, முல்லை, மருதம்' நெய்தல்;ஆடை வகையான பருத்தி' தோல், ஆட்டு மயிர்' எலி மயிர், பட்டு' இலை , தழை ஆகியவை; வண்ண வகைகளான கருப்பு, வெள்ளை, மஞ்சள்' சிவப்பு, ஊதா' நீலம், பச்சை' ஆரஞ்சு, போன்றவை: வீடுகளின் வகை' பாய்வகை, படுக்கை வகை' இருக்கை வகை, பாத்திரங்களின் வகை போன்ற வகையினப் பொருள்கள் மருத்துவக் குணங்கள் கொண்டவை என்றும்' அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோயை நீக்கும் தன்மை கொண்டிருப்பதாகவும் கூறுகின்றன.

மேற்கண்ட பொருள்களின் மருத்துவக் குணங்களை அறிந்தும் அறியாமலும்' உண்ணவும் உடுக்கவும் இருக்கவும் பயன்படுத்தவும் தொடங்கினர்.

மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற வாழ்விடங்களாகத் தேர்ந் தெடுத்த பகுதிகளில் அல்லது நிலங்களிலிருந்து அந்தந்தப் பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு மருந்தாக அமைவது இயற்கை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:59 pm

நானிலமும் நோய்களும்

நிலங்கள் நான்கு என்பது இலக்கிய மரபு. நிலத்தின் அடிப்படைக் கேற்ப உண்டாகும் நோய்களும் வேறுபடும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன. குறிஞ்சி நிலமான மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உண்டாகும் நோய்களும், நெய்தல் நிலமான கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உண்டாகும் நோய்களும் வேறு வேறாகக் காணப்படுகின்றன. அதுபோலவே பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு உண்டாகும் நோய்களும் வேறு வேறாக இருக்குமென்று குறிப்பிடப் படுகின்றன. அந்தந்த நிலங்களில் வாழும் மக்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு' அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கின்ற மருத்துவத் தாவரங்களே மருந்தாகும் என்பது மருத்துவ நூலோர் கண்ட உண்மையாகும்.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை இயற்றத் தெரிந்த தமிழ் மக்கள், வாழும் இயல்பினால் உண்டாகும் நோய்க்கு மருந்தாக, வாழும் பகுதிகளிலுள்ள தாவரங்களிலிருந்தே கண்டறிந்திருந்தனர் என்பதைத் தமிழ் மருத்துவ முறைகளிலிருந்து அறிய முடிகிறது.

எனவே' உணவே மருந்து என்பதற்கும், மருந்தே உணவு என்பதற்கும் பண்டைக் காலத் தமிழர்களின் வாழ்வையும்' தமிழ் மருத்துவத்தின் அடிப்படையையும் சான்றாகக் கூறலாம்.

உயிர் மருந்து

மருந்தாக அமையும் உணவே உடலுக்கு வலிமையைக் கொடுக்கும்; உடலின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும்; உடலின் உறுப்புகளுக்குப் பாதுகாப்பாக அமையும்; உடலை இயக்கும் ஆற்றலைக் கொடுக்கும்; உடல் நோயை நீக்குவதுடன் நோயற்று வாழ வகைப்படுத்தும் என்பவை அறிந்தே'

"" உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்''67

என்ற புறநானூற்றுப் புலவன் புலப்படுத்துவதைக் காணலாம்.

மருந்தே உணவு

சங்க காலத்தமிழ் மக்கள் தங்கள் உணவு வகைகளாக மேற் கொண்டிருந்தவற்றை சங்க இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அவர்கள் உண்ட உணவுகள் நிலத்தின் அடிப்படையிலும்' தொழிலின் அடிப்படையிலும், வளத்தின் அடிப்படையிலும் அமைந்திருந்தன. அவ்வாறு அமைந்த உணவுகள் அவர்களின் உடலைப் பேணுகின்ற குணங்களைக் கொண்டிருந்தன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 5:16 pm

மிளகு

மிளகு-அது தமிழ் நிலத்தின் மருந்து எனல் பொருந்தும். கடல் கடந்து சென்றும் தமிழ் நிலத்துப் பெருமையைக் கிரேக்க நாட்டிலும் நிலை நிறுத்திய பெருமை மிளகுக்கு உண்டு.

‘பகைவன் வீட்டிற்குச் சென்றாலும் பத்து மிளகொடு போ' என்பது பழமொழி. பகைவன் வீட்டில் நஞ்சு தரப்பட்டாலும் அது' கொண்டு செல்லும் பத்து மிளகினாலேயே குணமாகிவிடும் என்பதை உணர்த்தும். அவ்வாறான மிளகு, மருத்துவத்தின் மூலப்பொருளாக அமைவதோடு உணவாகவும் அமையும்.

"" கருங்கொடி மிளகின் காய்த்துணர் பசுங்கறி''68

என்று மிளகின் கொடி கருமையாகவும் பசுங்காயாகவும் கொத்தாகவும் காணப்படுவதை உணவாக்கினர். தண்டிலும் வேரிலும் உணவைச் சேகரிக்கும் கிழங்கு வகையான இஞ்சி' மஞ்சள் உணவாகி மருந்தாகிறது.

"" இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்''69

என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.

உப்பு

உப்பு எல்லா வளர்ச்சிக்கும் முதற்காரணமாய் இருக்கும். செந்நீர்' எலும்பு, வலிமை போன்றவற்றைத் தரும். பருத்தல் என்னும் பொருளில் உப்புதல் என்னுஞ் சொல்லில் உப்பு எனப் பெயர் பெற்றது என்பர். நெல்லின் அளவுக்கே உப்பும் விற்கப்பட்டது என்பதனால்' உப்பு எவ்வளவு உயர்ந்த பொருளாக மதிக்கப்பட்டது என்பது விளங்கும்.

"" நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்

சேரிவிலை மாறு கூறலின் மனைய''70

என்று' பண்டமாற்றாக உப்பு விற்கப் பட்டதை அகநானூறு குறிக்கும்.

உப்பின் அளவு, இரத்தத்தின் வேகத்தைக் கூட்டவும் குறைக்கவும் செய்கிறது. நோயாளர்கள் உப்பைக் கட்டுப் படுத்தினால் நோயின் வேகம் குறையும் என்கிறது, மருத்துவம்.

இதனை'

"" உப்பு அமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்''71

என்றதனால்' காதலர்களிடையே தோன்றும் பொய்க் கோபமும்' உப்பும் அளவாக இருக்க வேண்டும் என்றும்' இவ்விரண்டும் அதிகரித்தால் காதலும் உணவும் கெடும் என்னும் கருத்தில் எடுத்துக் காட்டாக அமைந்து, உப்பின் பயன் உணர்த்தப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 5:17 pm

புளி

புளி' தனக்குரிய சுவையெனும் குணத்தின் பெயரையே கொண்டிருக்கிறது. புளிப்பின் சுவையை மாற்றவல்லது காரமும் கரிப்பும். கரிப்பு என்னும் கார்ப்புச் சுவைக் குறியது உப்பு. புளிப்பும், கார்ப்பும் சமையலுக்குச் சுவையூட்டுவது. புளி' உப்பு ஆகிய இரண்டும் சித்த மருந்தில் சிறப்பாகக் கருதப் பெறும் பாகங்களாகும். வைத்தியம், வாதம்' யோகம் ஆகிய மூன்றும் இவற்றைக் குறிப்பிடும்.

உப்பையும் புளியையும் அறிந்தவனே ஞானி என்றும், சித்த னென்றும், வைத்தியனென்றும் கூறப்படுகிறது. இவற்றின் சிறப்பினை உணர்ந்தே சங்கத் தமிழ்மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.

"" படும்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர் போல""72

என்னும் குறுந்தொகை, சூல் கொண்ட மகளிர் தங்களுக்கு நேரும் குமட்டல் தீர புளியைச் சுவைத்ததாகத் தெரிவிக்கிறது. புளி' உணவுப் பொருளாகப் பல நிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

"" வெண்புடையக் கொண்ட தூய்த்தலைப் பழவின்

இன்புளிக் கலந்து மாமோ ராகப்''73

பயன்பட்டுள்ளது.

வேளைக் கீரையை ஏழ்மையின் காரணத்தால், புசிக்க உணவின்றி வறுமையில் வாடியோர் உண்டதாகக் குறிப்பர். வேளைக்கீரை' புளிப்புச் சுவை கொண்டது. வறுமையுற்றவர்க்கு ஏற்படுகின்ற தூக்கக் குறைவு, மலச்சிக்கல்' சோர்வு ஆகியவற்றிலிருந்து மீள வேளைக்கீரை பயன்பட்டது.

"" வேளை வெந்தை வல்சியாக''74

என்று புறநானூறு குறிப்பிடும் வேளைக்கீரையால் புளிப்புச் சுவையையும்'

"" எயிற்றியர் அட்ட இன்புளி வெண்சோறு''75

என்னும் சிறுபாணாற்றுப்படை, சோறே புளிப்புச் சுவையாகப் படைத்தளிக்கப் படுவதையும் குறிப்பிடுகிறது.

புளிப்புச் சுவையும் கார்ப்புச் சுவையும் உடலையும் உணவுப் பொருளையும் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் என்பதே இவ்விரண்டினால் அறியப்படும் உண்மையாகும்.

தேன்

தேன்' பல்வேறு வகையான மலர்களின் மகரந்தத்தைத் தேனீக்கள் உறிஞ்சி சேமித்து வைக்கும் மதுரமாகும். தேனின் இனிப்புச் சுவையால் அதனைத் தீந்தேன் என்றும் வழங்குவர். தேன், தமிழ் மருத்துவத்தின் துணை மருந்தாகப் பயன்படுவது. அதன் மருத்துவப் பண்பு எல்லா நாளிலும் எல்லாராலும் அறியப்பட்டதாக இருப்பது, தேனைப் பயன்படுத்துவதற்கு எல்லாரும் முன் வருவதுதான் காரணமாகும்.

"" பாற்பெய் புன்கந் தேனொடு மயங்கி''76

என்று' பால்சோறோடு தேன் கலந்து உண்டதாகப் புறநானாறு உரைக்கிறது.

பாலுடன் தேன்கலந்து உண்ணும் பழக்கம் பழந்தமிழர் கொண்டிருந்த உணவு முறையாகும். இதனை மேலும் சிறப்பாகத் திருக்குறள்'

"" பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்''77

என்று குறிப்பிடுவது, பாலும் தேனும் கலந்த சுவையின்பத்தினைச் சிறப்பிப்பதாக இருக்கிறது. தேனின் மருத்துவக் குணத்தினாலேயே இவ்வாறு சிறப்பிக்கப் படுவதாகக் கருதலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 5:17 pm

கள்

கள்' நறவு, மது' மட்டு, தேறல் என்னும் சொற்களால் கள்ளைக் குறிப்பிடுவர். கள்ளை மயக்கத்தைத் தரும் மதுவகையாகக் கூறுவர். அது' தெளிவும், ஊக்கமும் தருகின்ற இன்னீர் வகையைச் சார்ந்தது என்பர்.

சங்ககாலத்துப் பெண்களும் ஆண்களும் கள் அருந்தினர். அதியமான், ஒளவைக்குக் கள் கொடுத்தான். கள்ளை உண்ட ஒளவையார்' மன்னனைக் களித்துப் பாடினார் என்பதனை'

"" சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே

பெரிய கட் பெறினே

யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே.''78

என்று புறநானூறு குறிப்பிடும். இதனால் தெளிவும் ஊக்கும் கள்ளின் வழி மருந்தாகி இருக்கக் காண்கிறோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 5:18 pm

அறுசுவை

உணவின் சுவை வகைகள் ஆறாகும். அவை, துவர்ப்பு' கார்ப்பு, இனிப்பு' உவர்ப்பு, கைப்பு' புளிப்பு என்பன. இவை முறையே, ஆற்றல், வீறு' வளம், தெளிவு' மென்மை, இனிமை ஆகியவற்றைத் தரும் என்பது உணவு மருத்துவ நெறி. இதை உணர்ந்த நம் முன்னோர் தங்கள் உணவை அறுசுவைகளாக அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

"" அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட

மறுசிகை நீக்கி உண்டாரும்''79

என்று' தமிழர் தம் சுவையுணவைச் செப்புகிறது.

மேற்கண்ட அறுவகை சுவைகளைக் காலத்திற்கும், இடத்திற்கும், உடலுக்கும்' வயதிற்கும் ஏற்றவாறு திட உணவு, திரவ உணவு எனப் பிரித்து உண்டிருந்தனர். அவ்வாறு உண்ணப்பட்ட உணவு எட்டுவகை எனத் தெரிகிறது.

"" மெய்திரி வகையின் எண்வகை உணவின்

செய்தியும் வரையார்''80

என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றதனால், அக்காலத்துக் கூல வணிகர்கள், எண்வகை உணவிற்குரிய கூலங்களாக “நெல்லு, காணம்' வரகு, இறுங்கு சோளம்' தினை, சாமை' புல்லு, கோதுமை" என இளம் பூரணரும், “பயறு, உழுந்து' கடுகு, கடலை' எள்ளு, கொள்ளு' அவரை, துவரை" எனப் பேராசிரியரும் “நெல்லு, புல்லு' வரகு, தினை' சாமை, இறுங்கு' தோரை, இராகி" என அடியார்க்கு நல்லாரும் உரைக் கின்றனர். அவை' எவ்வகையாயினும் எண்வகை உணவுப் பொருள்கள் உணவாகப் பயன் பட்டிருந்தன என்பது பெறப்படும்.

இவ்வகை உணவுப் பொருள்களே சோறு போன்ற உணவாகவும், மாவு, கூழ் போன்ற உணவாகவும் அமைந்தன எனக் கொள்ளலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 5:19 pm

சுவைப் பொருத்தம்

உண்ணப்படுகின்ற உணவுப் பொருள் ஒன்றானால் அதன் சுவையும் ஒன்றாக இருக்கும். இரண்டிற்கும் மேற்பட்ட பொருள்களை உண்ணும் போது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையானால் மாறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. இன்ன சுவையை உண்டால்' அதற்கு மாற்றாக என்ன சுவையை உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். தெரியாவிட்டால் ஒவ்வாமையோ, உணவு நஞ்சோ ஏற்படலாம். இதை உணர்ந்த முன்னோர்கள் உணவின் மாற்று உணவுகளைத் தெரிந்திருந் திருக்கின்றனர். மாற்று உணவாகக் காரத்தைக் கொள்வர். கார உணவை உண்பவர்கள் அதற்கு மாற்றாக இனிப்பைச் சேர்ப்பர். ஒரு சுவை மிகுந்தால் அதனைக் குறைக்க மற்றொரு சுவையைச் சேர்த்துச் சமன் செய்வர்.

வாழ்வில் நட்பும், பகையும் காணப்படுவதைப் போல' உணவிலும் நட்புச் சுவை, பகைச் சுவையென இரண்டு உண்டு. ஆறுவகைத் தாதுகளில் இரத்தத்தை உண்டாக்கத் துவர்ப்பும், எலும்பை வளர்க்க உப்பும்' தசையை வளர்க்க இனிப்பும், கொழுப்பை உண்டாக்கப் புளிப்பும், நரம்பை வலுவாக்கக் கசப்பும், சுரப்பிகளைச் சீராக்கக் காரமும் என இவை ஒன்று சேர்ந்து உணவானால் ஏழாவது தாதுவான மூளைக்கு வேறு சத்தி தேவையில்லை. இதனையே அறுசுவை மருத்துவம் என்றும்' ஆறாதார மருத்துவம் என்றும் சித்த மருத்துவ நூலோர் குறிப்பிடுவர்.81

உண்ணும் முறை

உணவு நெறிகளை வகுத்து, சுவைக்கு ஏற்ற உணவுப் பொருள் களைச் சமைத்து, உடலையும் மனத்தையும் பாதுகாத்து, ‘உணவே மருந்து' மருந்தே உணவு' என்னும் இயற்கை வாழ்வுக்குத் தக தமிழர் வாழ்ந்து வந்துள்ளனர்.

துறைகள் தோறும் நிறைவாக வாழத் தொடங்கிய நம் முன்னோர்கள் உணவு உண்ணும் முறையையும் நிறைவாக வகுத் திருக்கக் காண்கிறோம்.

உணவு உண்பதை நான்குவகை வினைகளாகக் கூறுவர். அவை உண்பன, தின்பன, பருகுவன' நக்குவன என்பனவாயாகும்.

உண்ண வேண்டிய பொருளைப் பருகினாலோ, நக்க வேண்டிய பொருளைத் தின்றாலோ நகைப்பிற்கு இடமாகும். இந்நான்கு வகை உணவையும் ஒரே நேரத்தில் உண்ணும் உணவிற்கு ‘அடிசில்' சோறு எனக் குறிப்பர். அந்நால்வகைகளையும் உண்டாரை ‘அடிசில் அயின்றார்' என்னும் பொதுவினையால் இலக்கணங் கூறுவர்.82

பண்டைக்கால உணவு நெறி வளர்ந்து பக்குவமடைந்த நிலையில் இருந்தது என்பதற்கு' அதற்குத் தொல்காப்பியம் இலக்கணம் வரைந்திருப்பதையே சான்றாகக் கருதலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 5:20 pm

மருந்துப் பொருள்

பண்டைக் காலத் தமிழகம், ஆட்சி முறையினாலும் மக்கள் வாழ்க்கை அமைப்பு முறையினாலும் சிறந்து விளங்கியது. இவற்றை அறிந்த மேலை' கீழை நாட்டு அரசின் தூதுவர்களும், செல்வந்தர்களும், அறிஞர்களும், வணிகர்களும் தமிழகத்தை நாடி வரத் தொடங்கினர். தங்கள் நாட்டுத் திரவியங்களைக் கொண்டு வந்து தந்து' இந்நாட்டுச் சிறப்புக்குரிய பொருள்களை ஏற்றிச் சென்றனர்.

"" யவனர் தந்த வினைமான் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்''83

யவனர்கள் தங்கள் நாட்டிலிருந்து கொண்டு வந்த மரக் கலங்களிலிருந்து பொன்னை இறக்குவர். அப்பொன்னுக்கு ஈடாகத் தமிழகத்தின் மருந்துப் பொருளான மிளகை ஏற்றுவர். இவ்வாறு பொன்னுக்குப் பண்டமாற்றாக மிளகு வழங்கப்பட்டது. பழந்தமிழ்த் துறைமுகம் என்று இலக்கியங்களால் சிறப்பித்துக் கூறப்படும் முசிறித் துறைமுகப் பட்டினத்தில் இருந்து மருந்துப் பொருள்கள் ஏற்றுமதியாயின.

பழந்தமிழ்ப் பட்டினத் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதியான பொருள்களில் குறிப்பாக' இலவங்கம், மிளகு' இஞ்சி, அரிசி' ஏலம், தேக்கு' கருங்காலி, நூக்கு' சந்தனம், யானைத்தந்தம் போன்றவை. குறிப்பிடத் தகுந்தவை. இவற்றுள் மிளகு, இஞ்சி, ஆகிய இரண்டும் மருந்துப் பொருள்கள். மருந்துக்கென்றே பெறப் பெற்றவை. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த "இப்போ கிரேசு' (Hippocrates) என்ற புகழ் பெற்ற கிரேக்க மருத்துவர்' இந்திய மருத்துவ முறைகளையும், மருந்து வகைகளையும் கையாண்டு வந்துள்ளார். மிளகை ‘இந்திய மருந்து' என்றே குறிப்பிட் டிருக்கிறார். பண்டைய தமிழர் உணவுப் பொருள்களில் ஒன்றான நல்லெண்ணெயின் பயனையும் அவர் அறிந்திருக்கிறார்.84

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக