புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 3:19 pm

First topic message reminder :

இலக்கியம்

இலக்கியம், வாழ்க்கையில் மனிதர்கள் கண்ட ஆழ்ந்த அனுபவங் களையும், உண்மைகளையும் கலைநயத்துடன் வெளியிடுகிறது. இலக்கியத்தால், பிறருடைய வாழ்க்கை, செயல், அறிவு, நினைவு, உணர்ச்சி, உள்ளக்கிடக்கை, குறிக்கோள் என்பவற்றை அறிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் முடியும்.

வாழ்வும் இலக்கியமும்

இலக்கியம் எனப் படைக்கப்படுவன அனைத்தும் இலக்கியமாகி விடுவதில்லை. இலக்கியம் என்பது, மனித வாழ்வோடு இணைந்து, ஆழ்ந்து–அகன்று, என்றும் நிலைபெறுவதுமான மனிதப்பண்புடன் தொடர்புடையது; மனிதனால் விரும்பக் கூடியது; மனித வாழ்க்கையோடு தொடர்புடையது; என்றும் நிலைத்திருக்கக் கூடியது; கற்போர் மனத்தில் இன்பத்தை ஊட்டுகின்றனவாக அமைவது.

இலக்கிய வகை

தனிமனிதன் வாழ்வு, அனுபவம் என்பவற்றைக் கூறும் இலக்கியம் ஒருவகை. மற்றொன்று, புறவுலக வாழ்வின் ஈடுபாட்டினால் ஏற்பட்ட அனுபவத்தின் வாழ்வு, தாழ்வு, நன்மை, தீமை, குற்றம், நீதி ஆகியவற்றுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பை அனுபவத்தால் கூறுவது. அனுபவம் என்பது தனிமனிதன் ஒருவனுக்கு மட்டும் உரிமையானதாகா தாகையால் மனித சமுதாயம் முழுமைக்கும் பொதுமையாகி விடுகிறது. அத்தகைய வகைக்குரியவை இலக்கிய வகைகளாகின்றன.

இலக்கியக் கலை

கலை என்பது ஒருவகை ஆற்றல்; குறிப்பிட்ட ஒருவழியை மேற்கொண்டு, முன்னரே கலைஞன் மனத்தில் தோன்றிய ஒரு பயனைப் பிறர் அறியச் செய்யும் ஆற்றலே ஆகும் அது என்கிறார், ஆபர் கிராம்பி என்ற திறனாய்வாளர். மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், தங்கள் கருத்துகளில் தோன்றிய சிறந்த உண்மைப் பொருள்களைக் கலைகளின் மூலமே வெளியிட்டனர். அவர்கள் வாழ்க்கையில் பெற்றிருந்த அனுபவத்தை அற ிவிக்கும் கருவியாகத் திகழ்வன அவர்கள் ஆக்கிய கலைகள் என்று, இலக்கியக் கலைக்குரிய அடிப்படைகள் கண்டறியப் படுகின்றன. அத்தகைய அடிப்படைகளைக் கொண்டு திகழும் கலைகளில் மருத்துவமும் ஒன்று. ‘ஆய கலைகள் அறுபத்து நான்கு’ என்று கூறப்படுபவற்றுள் மருத்துவமும் அடங்கும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 3:30 pm

கொச்சகக் கலிப்பா

ஆதி அந்த நிர்க்குணமே அண்டபிண்ட மேவுதிருச்
சோதிநட னம்புரியும் சுழிவீட்டு வாசலிலே
நீதிக்கரு வூர்நிலை யாய்க்குடி யிருந்து
சாதிகுல மெல்லாம் தவிர்த்து சதிர் மேல் வளர்ந்தே''31
எனவரும் கொச்சகக் கலிப்பா ஞான வெட்டியானில் அமைந்து சிறப்பிக்கிறது.

கலிப்பாவின் இனம் கலிப்பாவின் இனமாக அமைவது தாழிசை, துறை, விருத்தம் என்பன.

மோகப்பரு வத்திர மூடிக்கொளு நோயை
மேகச்சி யாகச்சிலர் வேறிப்படி யொத்த
தேகத்தது போகப்பெறு தீதுற்றிடு நாபி
மோகத்தனு போகத்துளி மூசத்தற லாமே.''32
என்னும் தாழிசைப் பாடலும்,

'' கோடைப் பெருக்கன்ன வெம்பியிக் கீது குளத்திலுரை
ஆடத்த வாசிநற் பத்தியஞ் சிந்த மலமுறிப்பு
மாடத்தி னாலிரு நானாள் கழாய மரிசமொன்றே
ஆடத் தகுவரு ணாத்திர மாத்திரைக் காயுளரே.''33
என்னும் கலித்துறைப் பாடலும்,

காரண மெனவரு கடிய நோய்கட்கு
தாரண மெனவரு தரணி மீதினில்
பாரண வடகத்தைப் பற்றி நின்றதோர்
சூரண மகிமையும் சொல்லு வாமரோ''34
என்னும் கலி விருத்தமும் மருத்துவ நூல்களில் காணப்படுகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 3:31 pm

வஞ்சிப்பா

பா வகையில் நான்காவதாக அமையும் வஞ்சிப்பா, மருத்துவப் பாடல்களாகக் காணப்படவில்லை. என்றாலும், வஞ்சிப்பா இனமான வஞ்சி விருத்தமும், வஞ்சித்தரு என்னும் இசைப் பாடல்களும் காணப்படுகின்றன.

இரசி தப்பொடி யொருதொ டிக்கிணை
யெய்து பாகமு னெய்த வேயிலை
மெள்ள வேயெடு விள்ள வேயுடை
வெண்மை யாகுமிஃ துண்மை யுண்மையே''35
என்னும் பதின்மூன்றடியாய் வரும் வஞ்சித் தருவும்,

இரத குளிகை யியல்பினை
வரத தறிவர் மனிதரார்
பரத முறைமை பகருவார்
சரத மிதுவே சரதமே.''36
என்னும் வஞ்சி விருத்தமும்,

சிதலை தருவடு செய்தி யெனவலை
மதலை யெனவுர மனிதர் நலிவுற
விதலை சிரமுற விளையும் வளிவினை
முதலை யிடுவது முடுகு தயிலமே.''37

என்னும் சந்த விருத்தமும் மருத்துவப் பாடல்களாகக் காணப் படுகின்றன. மருத்துவ நூல்களில் விருத்தப்பாக்களின் எண்ணிக்கையே இலட்சத்துக்கும் மேலாக இருக்கும். இதற்கு அடுத்ததாக வெண் பாக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால், மருத்துவ நூல்களின் சிறப்பு சிறந்து விளங்குகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 3:32 pm

விருத்தப் பாக்கள்:

விருத்தப்பாக்கள் பாடுவதற்கு எளிமையாகவும் சொற்சிக்கன மில்லாமல், கூறப்படுகின்ற பொருளுக்கு ஏற்றவாறு செய்யுள் அளவு அமைந்து விடுவதனால், விருத்தப்பாவில் மருத்துவப்பா என அமைத்துக் கொண்டனர் எனலாம்.

தேரையர் நூல்கள் மட்டுமே பல்வகைப் பாக்களைக் கொண்டு அமைந்துள்ளன. பல நூல்கள் பல பாவகைகளைப் பயன் படுத்த வில்லை. ஒன்றிரண்டை மட்டுமே, அதுவும் விருத்த வகைகளில் மட்டுமே பாவகைகளைக் கொண்டு அமைந்திருக்கின்றன. விருத்த வகைகளில் குறிப்பிடத்தக்க வகைகள் சில வருமாறு:

குறள் விருத்தம்

மந்தத்தி ளீடுமல பந்தத்தி னாலழன்மை
தொந்தித்த போதுநளிர் சந்திக்கு மேலே
மலபாதை யோடுலவு சலபாதை யாவதுடல்
வலபாதை யாகிவனி யிலபாதை யாமே''38

சிந்து விருத்தம்

தவசின் சேதி தன்னையே
யவசி யங்கறி யளவுகொள்
நவநி தத்தொடு நாலுநாள்
சுவறி டுஞ்சனி தோடமே''39
(தவசு முருங்கை இலையை அரைத்து, மிளகளவு வெண்ணெய் சேர்த்து, நான்கு நாள் சாப்பிட வாத பித்த கப சன்னி முதலிய நோய் நீங்கும்)

வெளி விருத்தம்

ஆமல கக்கனி யாமல கக்குவ தாமென்னில்
போமல வெப்பது நீயுணி லெற்ப ணியிலோடி
நேம மிகச்சிலர் நாளும கத்துவ நீர்மேவு
பூமிசை யுற்புரி நூனெறி பற்றினர் போனாரே.''40

நாள்தோறும் நெல்லிக்கனியை வாயிலடக்கிக் கொண்டு அதன் சாற்றைச் சுவைத்துக் கொண்டு வந்தால், ஆசன வாயில் உண்டாகும் வெப்பம் குறையும் என்னும் பொருளைக் கூறுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 3:33 pm

அறுசீர் ஆசிரிய விருத்தம்

வாரமே தணந்தெ டுத்து வைத்தநெய் யுளைக்கா லெல்லாம்
சேரமே லெங்கும் பூசித் தினந்தினம் பிடிக்கிற் பொல்லாக்
கோரமே புரியும் வாதக் குழாமறி ஞோர்க்கா மந்த
காரமே நாளு மிச்சாப் பத்தியங் கொண்டு கொள்ளே''41
வேறு
“ஆடா தோடை நன்னாரி அகிலும் சிறிய வழுதுணையும்
பாடா திலகும் பற்படகம் பங்கம் பாளை வேர்க் கொம்பு
சேடார் சீந்தில் சந்தனமும் செப்ப வரிய இவையனைத்தும்
கூடா நீரெட் டொன்றாக்கி குடித்தார் சுரத்தை விடுத்தாரே.''42
‘குடித்தார் சுரத்தை விடுத்தாரே’ என்று சுரத்துக்கு மருந்து கூறப்பட்டது.

எழுசீர் ஆசிரியவிருத்தம்

“ஒதுமிவ் வாறறி தகுமான வாசனை யூறுநன் னேய மென்னும்
மாதயி லாதியி லேகுண மேதெனில் வாத வியாதி முத
லேதமெ லாமறு மாமெனி லாகமே வேத மெலா றதனில்
வாதனை நீற்சனி நோய் வளியால் வருமா மஃதே யறியே”43

எண்சீர் ஆசிரியவிருத்தம்

உண்டிடவே பெருவயிறு சோகை தானும்
ஊது கா மாலைவிட பாண்டு ரோகம்
விண்டிடுகை கால்கடுப்பு வாத சூலை
மேகவெட்டை நீர்க்கடுப்பு சன்னி சீதம்
சண்டிடுமந் தாரசன்னி யண்ட வாதம்
சயரோகம் வலியிளைப்பு சலக்க ழிச்சல்
பண்டிதரே பருதிகண்ட பனிபோல் நீங்கும்
பாடினேன் மச்சமுனி யுற்றுப் பாரே.''44

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 3:34 pm

இசைப்பாடல்கள்

யாப்பின் வகையில் சந்தங்களை அமைத்து இசைத்துப் பாடும் பாடல்கள், பாமரர்களிடத்திலும் பெண்களிடத்திலும் குறிப்பாகக் கிராமத்துப் பாட்டாளிகளிடத்தில் செல்வாக்குப் பெறுபவை. அத்தகைய இசைப்பாடல்கள் நாட்டுப் பாடல்களாக வழங்கி வருபவை. அவை நாடோடி இலக்கியத்தின்–பண்பாட்டு இலக்கியத்தின் மூலங்களாகக் கருதத் தக்கவை. அத்தகைய பாடல்கள் மனித நாகரிகத் துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துபவை. அவ்வாறான இசைப்பாடல்களாக மருத்துவப் பாடல்களும் அமைந்து, பாமரரும் மருத்துவத்தை அறிந்திடச் செய்யும் வகையில் அமைந்து காணப் படுகின்றன. அத்தகைய பாடல்களாக இடம் பெறுபவை, சிந்து, கும்மி, தரு, திருப்புகழ் என்பனவாகும்.

நொண்டிச்சிந்து

வெண்குன்றி வேர்கொணர்ந்து கரு
வேலிப் பருத்தி பாலுலர்த்தி
எண்கீர லிற்சமமா அல்லி
யின்புனல் விட்டரைத் தொன்பது நாள்
பயறாக உண்டை செய்து ரவி
பாரா துலர்த்தி தன் பேரான
செயமான மாத்திரையை யெந்தத்
தீக்கடிக் குந்தின்னப் போக்கடிக்கும்''45
என்னும் நொண்டிச் சிந்து பாடல் தீமையைத் தருகின்ற நச்சுக் கடிகளுக்கு மருந்து உரைக்கக் காணலாம்.

கும்மி

பெண்களுக்குக் கல்விமுறை பழக்கத்தில் இல்லாத காலத்தில், பெண்களுக்கும் மருத்துவக் கல்வியைப் பயிற்றுவிக்க, பெண்களுக்கே உரிய கும்மிப் பாடலில் மருத்துவம் கூறப்பட்டிருப்பது, மருத்துவக் கல்வியின் வளத்தை மேம்படுத்துவதற்காகவே எனக்கொள்ள நேரிடுகிறது.

தேங்காய்ப் பாலுஞ் சிறுகுறிஞ் சாவேர்
தினமு மூன்று நாள் குடிக்க
வாங்கா மேகங் களிருப் பதொன்றும்
வாங்கிப் போமென் றடியுங்கடி''

ஆவின் வெண்ணையில் பூனைக்காலியிலை
அரைத்தே அடுப்பிற் தான்கிளறி
பாவனை யாகவே அருந்திடவே காசம்
பறக்கு மென்றே யடியுங்கடி''46
என்று அகத்தியரும்

வங்க மெழுகுபின் தங்கம தாகவே
மான வேதை தேர்ந்த கைபாகம்
தங்க மிறங்கி பாகங்களும் புடந்
தானே எரிக்கிற நேரங்களும்''

இங்கித மாகக் குறுக்கியே குப்பியில்
எரித்தெடுக்கிற பாகங்களும்
அங்கங்கே செந்தூர மெல்லாந் திரட்டியே
அன்புடன் சொல்கிறேன் கேளுங்கடி''47

என்று யூகிமுனிவரும் உரைக்கின்றனர். அகத்தியர், எளிமையான மருத்துவ முறையையும், யூகி, கடினமான வாத வைத்திய முறை யையும் கூறுவதற்காகக் கும்மியைத் தேர்ந்தெடுத்துள்ளது தெரிகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 3:34 pm

தரு

தரு என்பது இசையுடன் இசைத்துப் பாடப்படும் ஒரு வகை இசைப்பாடாலாகும். இந்தப் பாடல் மூலமாகச் சுட்டிகை என்னும் மருத்துவ முறையைக் கூறுவர். இது உடலில் ஆங்காங்கே மேடு பள்ளங்களைப் போலத் திட்டுத் திட்டாகப் பெருத்துக் கொண்டு வருகின்ற கட்டிகளைத் தீர்ப்பதற்காகக் கூறப்படுகின்ற மருத்துவ முறையாகும்.

கல்யாண தரு மோகனம்

சுட்டிகை யின்குண மெடுத்துநன்றாய்ச்
சொல்லுகிறேன் முறை தொடுத்து
கெட்டப தார்த்தத்தை நெருப்பில்வாட்டக்
கெண்ணிய மாகுமே பொருப்பில்
அப்படிப் போலேயிவ் வுடலைவாட்டி
யப்பா லறிவைபிணி விடலை
நல்ல சிட்டையிது போலேஇல்லை
ஞாலத்தி லேயினி மேலே''48

கெட்டுப் போன பொருள்களை நெருப்பில் வாட்டிப் பதப்படுத்து வதைப் போல, உடலைக் கெடுத்த நோயைச் சுட்டிகையினால் வாட்டி, உடலை வலிமை பெறச் செய்வதாகும். இதுவும் ஒருவகை மருத்துவ முறை என்பதை விளக்கிடும் மருத்துவ இசைப்பாணர்கள், இசைப் பாடலைப் பயன்படுத்தி மகிழ்வூட்டுவர்.

திருப்புகழ்

திருப்புகழ் என்றால் போற்றிப் புகழ்ந்து பாடப்படும் இசைப் பாவாகும். அருணகிரி நாதர் முருகன் மீது பாடிய புகழ்ப் பாடலான திருப்புகழ் இந்த இசைப்பா வகையைச் சாரும். அவ்வாறான இசைப்பா வடியில் மருத்துவத் திருப்புகழ் மருத்துவத்தை இசைக்கத் தோன்றிய வகைப் பாடலாகும். திருப்புகழ்ப் பாடலை இசைப்பதற்காகத் தாளத்தின் சந்தங்களைக் கூறிப் பாடலைக் குறிப்பிடும் முறையில் அமைக்கப் பெற்றுள்ளது இதன் தனிச் சிறப்பு.

நல்வாழ்வு மணப்பாகு

“தனதன தான தத்த தனதன தானதத்த தனதான
தனதன தானதத்த
இடருறு மேகவெட்டை படர்தரு மூரல் சட்டை
கொடியிடர் நோய் விரட்ட முறைகாணும்
இகமுறு சோம்பு கொத்த மலிநில வாரைசுக்கு
வினியநன் னாரி யொக்க வெடையோரைஞ்
சடரழன் மீதுகட்டி படிசல மாறுவிட்டு
விடரெரி வாக வெட்டி லொருகூறா
யடைவொடு நீரிறக்கி வடிவுற தேமணக்க
வறிமிசி ரீகரைத்து வடுப்பேற
வடிவுற வேகொதிக்க பதமுறு பாகுமிக்க
வலுவுறு நோயெடுக்க விவையேற
மலசல மேக கட்டுச் சடமுறு நீர்கடுப்பு
முலமுளை மூலரத்த விடுபோகும்
உடலெரி நாவறட்சி தடமறி யூரல் விட்டு
அதிகமு மூலிகெட்டி வலுவாமே
வெளிதரு யூனமிக்க வருளுற நோய் பலக்கும்
முனவலு வாயெடுக்க மனுவோர்க்கே”49
என்னும் இத்திருப்புகழ்ப் பாடலில், மேகவெட்டை, மேகச் சட்டை, மேகவூரல், மலஞ்சிறுநீர்க்கட்டு, நீர்க்கடுப்பு, நீர்க்கட்டு, முளைமூலம், மூலரத்தம், உடலெரிச்சல், நாவறட்சி முதலிய வெப்ப நோய் தொடர்பான அனைத்தையும் தீர்க்கும் மருந்து உரைக்கப்பட்டது.

கடுமையான நோய், உயர்வான மருந்து, அரிய முறை ஆனாலும் எளிமையான இசைப்பாடலாக உரைக்கப் பட்டிருப்பதை உணரலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 3:35 pm

தொடை

தொடை என்பது தொடுக்கப்படுவது. எழுத்துகளைக் கொண்ட சீர்களை அடிகளாகத் தொகுத்து அமைத்து, பா வகைகளாக இயற்றுவது தொடை எனப்படும். இவை மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, செந்தொடை, இரட்டைத் தொடை, அந்தாதித் தொடை என்னும் எட்டு வகையாகும்.
இவை எட்டும், அடி, இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க் கதுவாய், முற்று என இவற்றொடு பொருந்தி, ஒவ்வொன்றும் எட்டு வகை விகற்பங்களைக் கொண்டு அமையும். இவை அனைத்தும் மருத்துவ நூல்களில் காணப்படாவிடினும், பெரும்பாலான நூல்கள் அந்தாதியாகவே அமைந்திருக்கின்றன. எதுகையும் மோனையும், அனைத்து விகற்பங்களையும் கொண்டு அமைந்துள்ளன.

எதுகை

செய்யுளின் சீர், அடி ஆகிய இவற்றின் எழுத்துகளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகைத் தொடை எனப்படும்.

அடி எதுகையாக வரும் சொற்கள் ஓசை நயங்கருதியும், பொருளற்ற வெற்றுச் சொற்களாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

என்பார்கள், அன்பார்கள், வன்பார்கள், தன்பார்கள்''50

பண்ணப்பா, நிண்ணப்பா, கண்ணப்பா, நண்ணப்பா''51

உலுத்தராய், பிலுத்தராய், குலுத்திரம், வலுத்தம்''52

தேட்டான, நீட்டான, பூட்டான, ஆட்டான''53
எனவரும் எதுகைகள் ஓசைக்காகப் பயன்பட்டிருக்கும் வெற்றுச் சொற்கள் எனலாம்.

இணை எதுகை

“சித்திரவி சித்திரமா சிந்தில் வாழை நாகை கம்மொய்“ (யமக வெண்பா. 2ஆம் பாகம். பக்157) 1,2 சீர்களில் அமைந்த இணை எதுகை.

பொழிப்பு எதுகை

“பட்டமரம் போலாகும் வெட்டை மேகம்”ஏ 1,3 சீர்களில் அமைந்த பொழிப்பு எதுகை.

ஒரூஉ எதுகை

“துப்பு வெள்ளை முத்தீ துனிபனிபந் திப்புவல்லை”ஏ 1,4 சீர்களில் அமைந்த ஒரூஉ எதுகை.

கூழை எதுகை/மேற்கதுவாய் எதுகை

கானமழை மானமுது கன்னியறல் வன்னியறல்''
1,2,3 சீர்களில் அமைந்த கூழை எதுகையும், 1,3,4 சீர்களில் மேற்கதுவாய் எதுகையும் இணைந்து வந்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 3:38 pm

கீழ்க்கதுவாய் எதுகை

முப்பிணி யொப்பிணி யெப்பிணி யப்பிணி''
1,2,3,4 சீர்களில் அமைந்த கீழ்க்கதுவாய் எதுகை
மேற்கண்டவாறு எதுகை அமைந்த பாடல்கள் நிறைந்து காணப்படுகின்றன.அவ்வாறு அமைந்த எதுகையினால் செய்யுள் ஓசையும் நயமும் சிறந்து விளங்குகிறது.

மோனைத் தொடை

முதலெழுத்து ஒன்றிவரத் தொடுக்கும் மோனைத் தொடையில் அமைந்த தனிநூலே மருத்துவ நூலாகத் திகழ்கிறது. ஒவ்வொரு பாடலும் ஓர் எழுத்தையே மோனையாகக் கொண்டு இயற்றப் பெற்ற இந்நூல் “கரிசல்“ என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் அமைந்துள்ள சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய இரண்டும் முறையே 156, 298 அடிகளைக் கொண்ட எதுகைத் தொடை இலக்கியங்களாக அமைந்துள்ளன.

“காரார் வரைக்கொங்கை கண்ணார் கடலுடுக்கை''

சீரார் சுடர்ச் சட்டிச் செங்கலுழிப் பேராற்று''
என்று, சிறிய திருமடலும்,

மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின்
சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்''
என்று பெரிய திருமடலும், கலிவெண்பாவில் அமைந்திருக்கின்றன. இத்தகைய எதுகைத் தொடை இலக்கியம் வேறு எதுவும் இல்லை என்பதைப் போல, தமிழ் மருத்துவ நூல்களுள் மோனைத் தொடை இலக்கியமாகத் திகழும், வைத்திய “மகா கரிசல்’’ போல வேறு நூல்கள் இருப்பதாகத் தெறியவில்லை.

பரன் மகிமையுட் கொண்டு பேயகத் தேரன்
செயுமுறை தெரிகிலாத் தேரனா யடியேன்
உயுமுறை வைத்தியவுரைத் தமிழ்க் கரிசல்
தகுங்குறு மகவற் றாழிசை மோனை
வகை பெறு சந்த வருக்கத் துறைக்கே''54
என்று அவையடக்கம் கூறப்பட்டுள்ளது. இதனால், மகா கரிசல் என்னும் இந்நூல், தேரர் என்பவரால், மோனை யாசிரியக் குறுந்தொழிசையால் இயற்றப் பட்டுள்ளது தெரிய வரும்.

அகர முதலென வாகிய கரியாய்
அங்கங் களாயதி லாதார மாகி
அத்த மிகுந்த மருத்துவ மாய்ம
யக்கற நிற்குமிலக்கிய மாகி''55
எழுத்துகள் தோன்றுவதற்கு அகரம் சாட்சியாக விளங்குவதைப் போல, கரிசல் என்றால் சாட்சி என்னும் பொருளைக் கொண்டு, மருத்துவத்துக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய சாட்சிப் பொருளை உரைக்க இந்நூல் படைக்கப் பட்டிருப்பது தெரியலாம்.

இந்நூல் முழுவதும், உயிரெழுத்துகள் பன்னிரண்டில் ஐகாரம் தவிர ஏனைய எழுத்துகளிலும், க, ச, த, ந, ப, ம என்னும் உயிர்மெய் எழுத்துகளிலும், அதனொடு சேர்ந்த பிற உயிர்மெய் எழுத்துகளிலும் அறுபத்து மூன்று இனங்களில் மோனைத் தொடையமைந்த பாடல்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு இனத்துக்கும் குறைந்த அளவு அடியாக மூன்றடி (ஒள)யும், அதிக அளவு அடியாக அறுபத்திரண்டு அடியும் (இ) கொண்டு மொத்தம் 1501 அடிகளைக் கொண்ட மருத்துவ இலக்கியமாகத் திகழ்கின்றது.

மருத்துவத்துறைக்கு மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியத் துறைக்கும் இந்நூல் சிறந்த பங்களிப்பாகக் கருதுதற்குரியது.
கரிசல் என்னும் பெயரில் அகத்தியர் கரிசல், யூகி கரிசல் என்னும் வேறு நூல்கள் காணப்பட்டாலும் அவை, வேறுவகையான பாக்களையும் தொடைகளையும் கொண்டு அமைந்திருக்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 3:39 pm

இணைமோனை

செய்யுளின் அடிகளில் முதல் இருசீர்களில் மோனை வருவது.

செக்கச் சிவந்த பன்னீர்ப்பூப் புகலுறின்''56
இச்செய்யுளில் செக்கச் சிவந்த என இரண்டு சீர்களில் மோனை அமைந்தது.

பொழிப்புமோனை

செய்யுளில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை வருவது.

காசமறு மேனிக் கழலையறுங் குட்டமறுங்''
இதனுள் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைந்தது.

ஒரூஉ மோனை

முதற் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை வருவது.
"" நாள்வளரு மெய்க்கு நலமுண்டா நாடாது''
ஒன்று, நான்காம் சீரில் மோனை அமைந்தது.

கூழை மோனை

1,2,3 ஆகிய சீர்களில் மோனை வருவது.

சித்திரவி சித்திரமா சீந்தில் வாழை நாகை கம்மொய்''ஏ
ஒன்று, இரண்டு, மூன்றாம் சீர்களில் மோனை அமைந்தது.

மேற்கதுவாய் மோனை

ஒன்று மூன்று நான்காம் சீர்களில் மோனை அமைவது
காவா யுலவுபரி காரிகளுக் காதரவாம்''

கீழ்க் கதுவாய் மோனை

ஒன்று இரண்டு நான்காம் சீர்களில் மோனை அமைவது

முற்று மோனை

ஒன்று இரண்டு மூன்று நான்கு சீர்களிலும் மோனை அமைப்பது.

மாட மடங்கேணி மண்டப மாடரங்கு''

வச்சிர வல்லியை மோர் வார்த்தூற வைத்துலர்த்தி''
என மோனை வகைகள் அனைத்தும் அமையப் பெற்று மருத்துவப் பாக்களாக அமைந்துள்ளன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 3:57 pm

முரண் தொடை

செய்யுளின் அடி, வரிகளில் எதிர்மறையான பொருள்களைத் தரும் சொற்களைக் கொண்டு முரணாகத் தொகுக்கப்படுவது முரண்தொடை எனப்படும்.

காரமுடன் சார மதும் காலை தள்ளி மாலைதனில்''ஏ
காரம்சாரம்; காலைமாலை என இரண்டு முரண்கள் அமைந்துள்ளது.

திங்கள் மூன்றில் மதுவாரி நாதஞ் செழுங்கனல் போல்''ஏ
திங்கள், கனல் ஆகிய சொற்கள் குளுமை, வெம்மை ஆகிய பொருளைத் தந்து முரணாகின்றன.

எங்கள் குலவிந்தில் எறும்பு கடை யானை முதல்
செங்கமல வமிசத்தில் சேருமே''
இச்செய்யுள் எறும்புயானை; கடைமுதல் என்னும் இரண்டு முரண்களைக் கொண்டுள்ளது.

கன்னல் விழிமா மறைச்சி காதலருளும் பறைச்சி''ஏ
மறைச்சிபறைச்சி என்னும் சொற்கள் முரணாகின்றன.

ஆதி அந்த நிர்க்குணமே அண்ட பிண்ட மேவுதிருச்
சேதி நடனம் புரியும் சுழிவீட்டு வாசலிலே'
இச்செய்யுள், ஆதிஅந்தம்; அண்டம்பிண்டம் என்னும் இரண்டு முரண்களைப் பெற்றிருப்பதைப் போன்று பல செய்யுள்கள் தொடை விகற்பங்களைப் பெற்று சிறந்து விளங்குகின்றன.

அணிகள்

இலக்கியங்களில் அமையும் பொருள்களை விளக்கவும், பொருளோடு பொருளை ஒப்புமைக் காட்டி விவரிக்கவும், பொருளின் வண்ணம், வடிவம், தொழில், பயன் ஆகிய இயல்புகள் நன்கு புலப்பட உவமை பயன்படும்.

வினை பயன் மெய் உரு என்ற நான்கே
வசைபெற வந்த உவமைத் தோற்றம்''57
என்னும் நான்கு வகையான உவமைகளைத் தொல்காப்பியம் எடுத்துரைக்கிறது.

இந்நான்கு வகை உவமைகளைக் கொண்ட செய்யுள்கள் மருத்துவ இலக்கியங்களில் எவ்வாறு இடம் பெறுகின்றன என்பதை ஆராயலாம்.

வண்டுகள் தான்மதுவருந்து நேர்மை போல
வாதபித்த சிலேத்து மத்தின் மதுவை யுண்ணும்.''58
குருநாடி, வண்டுகள் வந்து மலர்களிடத்தோயுள்ள மதுவை உண்பதைப் போல என்று, எடுத்துக் காட்டு உவமையைக் கூறி, வாதம் பித்தம் ஐயம் என்னும் மதுவை உண்ணும் என்று வினை உவமை அமைந்து காணப் படுகிறது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக