புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
32 Posts - 42%
heezulia
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
1 Post - 1%
jothi64
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
398 Posts - 49%
heezulia
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
26 Posts - 3%
prajai
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு )


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 20, 2011 10:59 am

First topic message reminder :

அன்புள்ள தொப்புள் கொடி உறவிற்கு - ஈழம் எழுதுவது !

உனக்கு வணக்கம் சொல்கிற நிலையில் நான் இல்லை .
எனக்கு வாழ்த்து சொல்கிற நிலையில் நீயும் இல்லை. உனக்குமெனக்கும் ஏதோ உறவு இருப்பதாக இன்னும் நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்த மடலை எழுதுகிறேன். இது இலையுதிர் காலத்தில் , வசந்தத்தை வரவேற்று , பறவைகள் எழுப்புகிற ஒலி அல்ல . பட்டுப்போன மரம் , தன் விதையின் மூல வேருக்கு அனுப்புகிற ஒப்பாரி ஓலம் .

உருகுகிற உயிருடனும், கருகுகிற உடலுடனும், ,
குற்றுயிரும் கொலை உயிருமாய் கிடக்கும் என்னை , தன் கோர பற்களுக்கு மத்தியில் கவ்விகொண்டிருக்கிரான் அந்த சிங்கள வெறிநாய் ராஜபக்சே. அவன் அன்னை கவ்விக்கொண்டே மரணத்தின் வரவேற்பறையில் கிடத்த தயாராய் இருக்கிறான். இந்த நிலையிலும் நான் உனக்கு கடிதத்தை அனுப்புகிற காரணத்தை நீ அறிவாயா ?

நீ என்னை காப்பாற்றுவாய் என்கிற நப்பிக்கை
கடலில் கரைத்த பெருங்காயம் போல கலைந்துபோனது . அதை விடு, நான் உன்னோடு ஒருசில விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன். நாளை உன் வாரிசுக்கு என் வரலாற்றை சொல்லும் போதாவது என்னை நினைப்பாய் அல்லவா ?

முன்பு தந்தை செல்வா என்றொரு தலைமகன் இருந்தான்
. அவன் என்னை விடுவிக்க என்னென்னமோ செய்தான். அவனது வழி காந்திய வழி என்பதால் நான் கவலையற்று இருந்தேன். ஆனால் காலன் அந்த கனவை கலைக்க எத்தனித்தான். செல்வாவை சிலுவையில் சேர்த்தான். பின் எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள் . என்னை கூறுபோட்டு கீறினர்கள். வீரன் பிரபாகரன் வந்தான். அவனது காலங்களில் , ஆன்ட்டன பாலசிங்கம் என்றொருவன் இருந்தான். நார்வே தூதுக்குழுவில் அவனது பங்கு அளப்பரியது. அவனையும் காலன் காவு வாங்கினான். பின் செந்தமிழ் செல்வன் என்றொரு தீரன் வந்தான். அவனை சிங்கள படைகள் சிதைத்தன. அதன் பின் நல்லது நடக்க வேண்டும் ஆனால் என் தலைமையில் தன் நடக்க வேண்டும் என்ற இறுமாப்பில் ,, என்னையும் அழித்தான் , இறுதியில் துரோகி கர்ணாவால் பிரபாகரனும் அழிந்தான்.

இங்கு நான் இன்னொன்றை சொல்லவேண்டும்.
ஈழ மக்களை சிங்களன் கொன்றான் குவித்தான். அது அன்றாட வழக்கமாகிப் போனதால் , அதை சகித்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை காலம் எனக்கு தந்தது. பூப்படையாத சிறுமிகள் தெய்வத்திற்கு சமம் என்பார்கள். அந்த தெய்வங்கள் கூட புணரப்பட்ட பிணங்களாய் என் மடியில் கிடத்தப்பட்ட போது நான் அடைந்த வேதனை சொல்லிமாளாது . இந்த கொடுமையை விட என் கன்னிப்பெண்களின் கற்பை அந்த சிங்களன் அழித்தான் என்று நீ மேடைக்கு மேடை பேசும்போதுதான் நான் அதிக வேதனை அடைந்தேன். முதலில் நீ ஒன்றை தெரிந்துகொள் .

ஈழப் பெண்களுக்கு மட்டுமல்ல , வேறு எந்த பெண்ணின்
கற்பையும் ஒரு ஆணோ , பல ஆண்களோ கலங்க படுத்திவிடமுடியது. ஒரு பெண்ணின் கற்பை அவளே கலங்க படுத்திகொண்டல்தான் உண்டு. என் ஈழப் பெண்ணுக்கு நடந்தது ஒரு உடலியல் வன்முறை அவ்வளவுதான். பூக்களின் அனுமதியோடுதான் அதன் வாசம் நுகர படுகிறதா ? திருமண வாழ்விலும் இந்த சித்திரவதை உண்டு. இயற்கை பெண்ணுக்கு வைத்த கொடுமைகளில் இது தலையாயது .. மீண்டும் சொல்கிறேன் அது மன்னிக்க முடியாத உடலியல் வன்முறை. ஆகையால் ஈழப்பெண்களின் கற்பை சிங்களன் அழித்தான் என்பதை இனி நீ சொல்லவே சொல்லாதே.

உண்ணாவிரதம் இருந்து போரை நிறுத்திவிட்டேன் என்று
விளம்பரம் தேடிய அய்யாவிற்கும் , சண்டையில் கிழியாத சட்டை எங்கு இருக்கிறது என்று , ஏளன வசனம் பேசுவதுபோல , போர் என்றால் பொதுமக்கள் சாவது சகஜம் என்று என் மக்களின் இறப்பை திரைப்படமாக ரசித்த அம்மையார் அவர்களுக்கும் , பழ நெடுமாறன், வைகோ , திருமாவளவன் , சீமான் போன்ற தலைவர்களுக்கும் , ஏன் இந்த கடிதம் எழுத கரம் கொடுத்தவனுக்கும் , ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் நான் ஒரு அன்பு பரிசு தர ஆசைபடுகிறேன். சற்று நெருங்கிவாருங்கள் . இந்த பரிசு எதற்காக என்று தெரியுமா ? என்னை அழிப்பதற்க்கு, இந்தியா ஆயுதம் தந்தது. அதை தட்டிகேட்கும் தைரியமற்ற கோழை போல வேடிக்கை பார்த்தீர்கள் அல்லவா அதற்குத்தான்.

அந்த அன்பு பரிசு .. த்துஉ ...... என்ன எச்சில் தெரிக்கவில்லை
என்று பார்க்கிறீர்களா ? என் உமில்நீரைகூட அந்த சிங்களன் உறுஞ்சிக்கொண்டான். இறுதியாய் உன்னிடம் ஒன்று சொல்ல ஆசைபடுகிறேன். இன்று நான் நாளை நீ .. சீனக்காரன் இங்கு ராணுவ தடவாளம் அமைத்துவிட்டான். அவனின் முதல் இலக்கு நீதான் என்பதை மறந்துவிடாதே. என்னைத்தான் நீ காப்பாற்றவில்லை உன்னையாவது காத்துகொள்.
இப்படிக்கு
உன்னை நம்பிக்கெட்ட ஈழம் !






[You must be registered and logged in to see this image.]

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 10:17 am

அய்யம் பெருமாள் .நா wrote:
வணக்கம் ரேவதி !

என்னுடைய பொதுமடலைவிட உங்களுடைய பதில் மடலில் தான் அதிக வேதனை தெரிகிறது.


ஒரு பொது மனிதனாய் இக்கடிதம் எழுதுகிறேன்,
ஆனால் இம்மடலுக்கு பதில் கடிதம் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை இருந்தாலும் வணக்கம் என்றே ஆரம்பிக்கிறேன்.

நீங்களும் விரைவில் , பொது பிரச்சனையை பற்றிய சொந்த கட்டுரைகள் எழுதுவீர்கள் என்பதை என்னால் நிச்சயமாய் கூறமுடியும். தொடர்க.

நான் அடிக்கொடிட்ட வரிகள் சமூகத்தின் மீதுள்ள உங்கள் பார்வையை தெளிவு படுத்துகிறது.

நீங்கள் பொது பிரச்சனைகளில் தொடர்ந்து பதில் கடிதம் எழுதுகிறீர்கள். நன்றி.

நன்றி முயற்சி செய்கிறேன் [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 28, 2011 12:21 pm

kitcha wrote:வணக்கம் பெருமாள்,உங்களுடைய பொது மடல்களில் என்னை மிகவும் பாதித்த மடல் என்றால் இது தான்.

பழைய ஒரு சில நினைவுகள்,

மக்கள் திலகம் எம்‌ஜி‌ஆர் அவர்கள் ஈழப் புரட்சிக்கு எவ்வளவோ செய்து இருக்கிறார்கள்,ஆனால் அது எல்லாமே மறைமுகமாக என்று தான் நினைக்கிறேன்.அமைதிப் படை என்ற பெயரில் இந்தியா ராணுவம் அங்கு சென்ற பொது அதை எதிர்த்தவர் எம்‌ஜி‌ஆர் அவர்கள்.



எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் தனி ஈழம் மலர்ந்தால் மட்டுமே இலங்கையில் தமிழர்கள் பிரச்சினைகள் தீர்ந்து அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என்று உறுதியாக நம்பினார்.

அப்போது ஈழத்ததமிழர் விசயத்தில் அரசியல் செய்ய நினைக்காமல் அப்போதைய எதிர்க் கட்சித் தலைவரான கலைஞரும், தமிழக முதல்வர் எம்ஜிஆரின் எல்லா விதமான ஈழத் தமிழர் ஆதரவு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளுமே ஒன்று பட்டு நின்றுத் தனி ஈழம் மலரச் செய்து ஈழத் தமிழர்களின் வாழ்வினை மலரச் செய்து விட வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர்.

ஈழத்தில் தமிழர்களின் பிரச்சினை தீர தனி நாடாக ஈழம் உருவாவது மட்டுமே ஒரே தீர்வு என்று முழுமையாக நம்பிய எம்ஜிஆர், ஈழத் தமிழ்ப் போராளிகளின் ஆயுதப் போராட்டங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டி அளிக்கும் நோக்கத்துடன் நிதி திரட்டி வழங்கினார்.

அன்று எம்ஜிஆர் நிதி திரட்ட ஆரம்பித்த போது, முக்கிய எதிர்க் கட்சியான திமுகவும் அதில் பங்கேற்றுத் தனது பங்காக பெரும் நிதியைத் திரட்டித் தந்தது.
தனி ஈழம் மலரச் செய்ய தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டுப் போராடிய அந்தக் கால கட்டங்களில், இந்தியப் பிரதமராகவும், காங்கிரஸ் தலைவராகவும் இருந்த இந்திராகாந்தி அவர்களின் முழுமையான ஆதரவும் தமிழர்களின் தனி ஈழக் கோரிக்கைக்கு இருந்தது.

அது போன்ற ஒரு முழுமையான சாதகமான சூழலில் தமிழகத்தில் இருந்து மட்டும் அல்லாமல் இந்திய அரசிடம் இருந்தும் கூட தமிழர்களின் உரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்த நேரத்தில் கூட தமிழர்களுக்கு எந்த உரிமைகளையும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை அன்றைய சிங்கள இன வெறி அரசு,

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் இந்திரா காந்தியின் அணுகுமுறையும், ராஜீவ் காந்தியின் அணுகுமுறையும் வேறு வேறாக இருந்தது. ராஜீவ் காந்தி அவர்கள் இந்தியப் பிரதமர் ஆகப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு மாறிப் போனது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் என்ற ஒரு ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி நிறைவேற்ற முனைந்தார். தனி ஈழம் மட்டுமே தமிழர்களின் பிரச்ச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்று நம்பிய எம்ஜிஆருக்கு இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை.

எம்ஜிஆர் அந்த கால கட்டத்தில் நோய்வாய்ப்பட்டு இருந்தார். உடல்நலம் குன்றி இருந்த எம்ஜிஆரை ராஜீவ் காந்தி நேரடியாக மிரட்டியதாகவும்,சொல்லப்படுகிறது
உடல் பலவீனப்பட்டுப் போயிருந்த எம்ஜிஆரும் வேறு வழியின்றி இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டார். இந்த இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழாவையும் அவர் தவிர்க்க முயன்றார்.ஆனால் அப்போதும் கட்டாயப்படுத்தப் பட்டு அந்த விழாவில் கலந்து கொள்ள வைக்கப் பட்டார்.

ராஜீவ் காந்தியிடம், ஈழத்தில் இந்திய ராணுவத்தினரால் ஈழத் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப் படுவதைப் பற்றி மனம் குமுறிப் பலமுறை அழாத குறையாக எம்ஜிஆர் முறையிட்ட போது கூட ராஜீவ் காந்தியின் மனம் இளகவில்லை.அப்போதைய போரில் இந்தியா ராணுவத்தால் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை மட்டும் 7000-க்கும் அதிகம்.

அன்று எம்ஜிஆரின் கைகளைக் கட்டிப் போட்டுத் தனி ஈழம் மலர்வதைத் தடுத்த அதே காங்கிரஸ்தான், ஈழத்திற்கு இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழர்களின் பகுதிகளை வேட்டைக் காடாக்கி சூறையாடிய அதே காங்கிரஸ்தான், இன்றைக்கும் தங்கள் வாழ்வின் ஓரத்தில் நின்று கொண்டு உரிமைக்குப் போராடும் ஈழத் தமிழர்களை வாழ்வினை அழிக்கும் செயலை செய்து கொண்டுதான் உள்ளது.


காந்தியைக் கொன்ற கோட்சேவின் குருவான சவார்க்கரின் படத்தை நாடாளுமன்றத்தில் திறந்த போது அதைத் தடுக்க முடிந்ததா காங்கிரஸ் கட்சியால்?

இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட போது ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட சீக்கியர்கள் 2000 பேரின் உயிருக்காக, சீக்கியர்களிடம் தனது பதவிப் பிரமாணத்தின் போது பகிரங்க மன்னிப்புக் கேட்டாரே மன்மோகன்சிங் அதைத் தடுக்க முடிந்ததா காங்கிரஸ் கட்சியால்?

காங்கிரசிற்கு உடன்பாடில்லாத இது போன்ற எத்தனையோ நிகழ்வுகள் ஏற்பட்ட போது அவற்றை எல்லாம் தடுக்கத் திராணி இல்லாமல் பலவீனப் பட்டுப் போன நிலையில் தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு நிலையில் பலமில்லாத உள்ள காங்கிரஸ் கட்சி இங்கே தமிழகத்தில் மட்டும் எப்படித் தமிழர்களுக்கு எதிரான காரியங்களை அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து செய்து வருகிறது என்று பார்த்தால், அதற்கான பதில்தான் கூட்டணி.ராஜிவ்காந்தியைக் கொன்ற ஒரே ஒரு குற்றத்திற்காக நடக்கும் பழிவாங்கும் படலம் தான் இது.நாமும் அதை வேடிக்கை பார்க்க வேண்டிய சூழல்.



உத்தம் சிங் - ஒரு குறிப்பு (ஜாலியன் வாலாபாக் படுகொலை )

இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் ரௌலட் சட்டத்தை எதிர்த்து, 1919 பைசாகி பண்டிகை நாளன்று, பஞ்சாபின் அமர்தசரசு நகரின், நாற்புறமும் மதில்கள் சூழ்ந்த ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். அதன் ஒரே நுழைவாயிலை அடைத்துக் கொண்டு நின்ற 90 போலீசுகாரன்களையும் குண்டுகள் தீரும்வரை சுடும்படி உத்தரவிட்டான் வெள்ளைக்காரத் தளபதி ஜெனரல் டயர்.



அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தன் கண்முன்னால் கண்டு துடித்தவன் தான் உத்தம்சிங் என்ற 19 வயது இளைஞன்.

இந்தப் படுகொலைக்கு நேரடிக் காரணமானவர்கள் இருவர். ஒருவன், கொலைப்படைக்குத் தலைமையேற்ற தளபதி டயர். மற்றவன் அதற்கு உத்தரவிட்ட பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ. டயர். இவ்விருவரையும் கொன்று பழிதீர்ப்பது என்று சபதம் மேற்கொண்டான் உத்தம்சிங்



படுகொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க புறப்பட்டு, பல சிரமங்களை எதிர்கொண்டு, பல நாடுகள் கடந்து, சமயம் பார்த்து காத்திருந்து 21 ஆண்டுகள் கழித்து அவர்களுடைய சொந்த மண்ணான இங்கிலாந்திலேயே பழிவாங்கியவன் இந்த உத்தம்சிங்.


“நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என்பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்தமடைகிறேன். இது என் கடமை” என்று முழங்கினான். கதிகலங்கிப்போனது ஆங்கிலேயக் காலனி அரசு.



பஞ்சாப் மாநிலம் முழுவதும் அவன் நாட்டுப்புற வீரதீர நாயகனாகவும், தேசபக்த விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறான்.


அன்று உத்தம் சிங் செய்ததைத் தான் அதன் பின் அதே போல் ராஜிவ் காந்தியும் பழிவாங்கப் பட்டார்.இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.



ஆனால் எல்லா வற்றிற்கும் காலம் பதில் சொல்லும்.அவர்களின் சுதந்திர தாகம் ஒரு நாள் கிடைக்கும்.அந்த நாட்களில் நாம் இருப்போமா என்று தெரியவில்லை.ஆனால் வரலாற்றில் தனி ஈழம் என்றோ ஈழ சுதந்திரம் என்றோ ஒரு வரலாறு இருக்கும்.



அப்போது நம் ஈழ உறவுகள் சுதந்திரமாக காற்றை சுவாசிப்பார்கள்

கிச்சா அண்ணா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 28, 2011 6:18 pm

kitcha wrote:

எம்ஜிஆர் அந்த கால கட்டத்தில் நோய்வாய்ப்பட்டு இருந்தார். உடல்நலம் குன்றி இருந்த எம்ஜிஆரை ராஜீவ் காந்தி நேரடியாக மிரட்டியதாகவும்,சொல்லப்படுகிறது
உடல் பலவீனப்பட்டுப் போயிருந்த எம்ஜிஆரும் வேறு வழியின்றி இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டார். இந்த இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழாவையும் அவர் தவிர்க்க முயன்றார்.ஆனால் அப்போதும் கட்டாயப்படுத்தப் பட்டு அந்த விழாவில் கலந்து கொள்ள வைக்கப் பட்டார்.



உண்மைதான் கிட்சா. முன்பு ஈழம் என்று வந்தபோது, எத்தனையோ முரண்பட்ட மனிதர்களும் ஒன்றாய் குரல் கொடுத்தார்கள். காலபோக்கில் அதன் நிலை மாறிவிட்டது.

மற்றபடி பகத்சிங் பற்றி தங்களின் ஒப்பீடு மிகவும் வியப்பிற்குரியது. அன்று பகத்திங்கை காந்தி கைகளிவியது போலவே, இன்று ஈழமும் கைவிடப்பட்டுவிட்டது.

போனது போகட்டும். நாளை என்பது நிச்சயம் நமதே !!

நன்றி கிச்சா !



[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 28, 2011 6:23 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

உண்மைதான் கிட்சா. முன்பு ஈழம் என்று வந்தபோது, எத்தனையோ முரண்பட்ட மனிதர்களும் ஒன்றாய் குரல் கொடுத்தார்கள். காலபோக்கில் அதன் நிலை மாறிவிட்டது.

மற்றபடி பகத்சிங் பற்றி தங்களின் ஒப்பீடு மிகவும் வியப்பிற்குரியது. அன்று பகத்திங்கை காந்தி கைகளிவியது போலவே, இன்று ஈழமும் கைவிடப்பட்டுவிட்டது.

போனது போகட்டும். நாளை என்பது நிச்சயம் நமதே !!

நன்றி கிச்சா !

நன்றி,ஆனால் நான் சொன்னது உத்தம் சிங் (பகத் சிங் சகோதரர் என நினைக்கிறேன்)



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 8:12 pm

kitcha wrote:
நன்றி,ஆனால் நான் சொன்னது உத்தம் சிங் (பகத் சிங் சகோதரர் என நினைக்கிறேன்)
உத்தம் சிங் பஞ்சாப் காரர் ஆனால் பகத் சிங் சகோதரர் இல்லை



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 28, 2011 8:21 pm

கே. பாலா wrote:
kitcha wrote:
நன்றி,ஆனால் நான் சொன்னது உத்தம் சிங் (பகத் சிங் சகோதரர் என நினைக்கிறேன்)
உத்தம் சிங் பஞ்சாப் காரர் ஆனால் பகத் சிங் சகோதரர் இல்லை

அப்ப அந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையில் வரும் அந்த நபர் யார் சார்(கொஞ்சம் சொல்லுங்களேன்)



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 8:49 pm

kitcha wrote:
கே. பாலா wrote:
kitcha wrote:
நன்றி,ஆனால் நான் சொன்னது உத்தம் சிங் (பகத் சிங் சகோதரர் என நினைக்கிறேன்)
உத்தம் சிங் பஞ்சாப் காரர் ஆனால் பகத் சிங் சகோதரர் இல்லை

அப்ப அந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையில் வரும் அந்த நபர் யார் சார்(கொஞ்சம் சொல்லுங்களேன்)
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் வரும் அந்த நபர்நீங்கள் சொன்ன உத்தம் சிங் தான் கிச்சா ஆனால் அவர் பகத் சிங் சகோதரர் இல்லை என்று மட்டும் சொன்னேன் சிரி



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 28, 2011 10:25 pm

கே. பாலா wrote:ஜாலியன் வாலாபாக் படுகொலையில் வரும் அந்த நபர்நீங்கள் சொன்ன உத்தம் சிங் தான் கிச்சா ஆனால் அவர் பகத் சிங் சகோதரர் இல்லை என்று மட்டும் சொன்னேன் சிரி

சார், நீங்கள் உத்தம் சிங் பஞ்சாப் இல்லை யென்று சொன்ன பிறகு நெட்டில் நிறைய தேடினேன்.ஆனால் அவன் பஞ்சாபைச் சேர்ந்தவன் என்ற தகவல்கள் தான் அதிகம் இருக்கின்றன.அது இல்லாமல் புதியதாகவும் நிறைய செய்திகள் கிடைத்தது அவனைப் பற்றி.அந்த லிங்கை கீழே பதிந்து உள்ளேன் உங்கள் பார்வைக்கு.இது தவறான செய்தி எனில் உத்தம் சிங் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் பிளீஸ்

[You must be registered and logged in to see this link.]



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Sep 28, 2011 11:46 pm

kitcha wrote:
சார், நீங்கள் உத்தம் சிங் பஞ்சாப் இல்லை யென்று சொன்ன பிறகு நெட்டில் நிறைய தேடினேன்.ஆனால் அவன் பஞ்சாபைச் சேர்ந்தவன் என்ற தகவல்கள் தான் அதிகம் இருக்கின்றன.அது இல்லாமல் புதியதாகவும் நிறைய செய்திகள் கிடைத்தது அவனைப் பற்றி.அந்த லிங்கை கீழே பதிந்து உள்ளேன் உங்கள் பார்வைக்கு.இது தவறான செய்தி எனில் உத்தம் சிங் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் பிளீஸ்

கிச்சா... உத்தம் சிங் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்... ஆனால் பகத் சிங்கின் சகோதரர் அல்ல என்றுதான் பாலா கூறியுள்ளார்...

உத்தம் சிங் பற்றிய விவரங்கள் :

[You must be registered and logged in to see this link.]







கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Sep 29, 2011 12:26 am

அன்புள்ள ஈழத்திற்கு,
தொப்புள் கொடி எழுதும் பதில்...


நீயே எனக்கு வணக்கம் சொன்னாலும், உனக்கு பதில் வணக்கம் சொல்லும் நிலையில் நான் இல்லை.. அப்படி சொன்னாலும், அதை ஏற்கும் நிலையிலும் நீ இல்லை..
உனக்கும் எனக்கும் ஏதோ உறவு இருப்பதாக கூறினாயே.. அதே நம்பிக்கையில் எழுதப்படும் மடல் தான் இது!!

நீ எதிர்ப்பார்ப்பது போன்று இது இயலாமைக்கு வருத்தம் தெரிவிக்கும் மடலும் அல்ல, தன்னிலை விளக்க மடலும் அல்ல, குற்றச்சாட்டை மறுக்கும் பதிலும் அல்ல!! ஆனால், உன்னைப் பற்றி கேட்கும் மடல்!

என்னிடம் உதவி கோர கடல் கடக்க வேண்டும்.. ஆனால், உன் அருகிலேயே இருந்தார்களே என் உறவுத் தொடரல்கள்!! .. ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது, என்னிடம் இருந்து பிரிந்து போன என் இரத்தத்தின் சொச்சங்கள்.. அதாவது, மலையகத் தமிழர்கள்!! அவர்களிடம் நீ உதவி கேட்டு இருக்கலாமே??

ஏன் கேட்கவில்லை? சற்று கடுமையாக கேட்பதற்கு மன்னிக்கவும்... ஏன் உதவி கேட்க முடியவில்லை??
ஒரு கணமேனும் சிந்தித்தாயா?


முதலில், சிறிது வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போம்!!!

சுதந்திரம் பெற்ற சில நாட்களுக்குள்ளேயே இலங்கையில் "[You must be registered and logged in to see this link.]" என்ற சட்டம் ஒன்று இயற்றப்பட்டது... உனக்கு நினைவில் இருக்கிறதோ இல்லையோ எனக்கு நன்றாக நினைவில் நிற்கிறது!! மறக்கக் கூடிய சட்டமா அது??

"இலங்கையில் குடியுரிமை பெற குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் அங்கேயே வசித்து இருக்க வேண்டும்" என்ற வரிகள்.. இப்போதாவது ஞாபகம் வந்ததா?

பாவம் என் மக்கள்..
ஆங்கிலேயரால் தேயிலைத் தோட்டப்பணிகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்கள்!!
தங்கள் குடியுரிமையை இழந்து, என்னிடமும் வர முடியாமல் ( குடியுரிமை இருந்தால் தானே என்னிடமாவது வர முடியும்!) அங்கேயும் தங்க முடியாமல் (குடியுரிமை இருந்தால் தானே இலங்கையில் தங்க முடியும்!) தங்கள் அடையாளங்களை மறந்து தவித்தனரே!!! மறக்க முடியுமா?

தங்கள் வாழ்வினைப் பெறவே பலர் தங்கள் சுற்றம் மறந்து, சொந்தம் மறந்து அங்கேயே தங்க வேண்டிய சூழல் வந்தது... "சிரிமாவோ-சாஸ்திரி" ஒப்பந்தம் வந்து இருக்காவிடில் இன்றும் பலர் தவித்துக் கொண்டு இருப்பர் என்பது நிதர்சனம்..

அவர்கள் உன் உடன்பிறப்புகள் தானே!! அன்று அவர்களுக்காக நீ வாய் கூட திறக்கவில்லையே??? இன்று என் மக்கள் எழுப்பியதில் ஒரு சதவீதம் கூட அன்று ஆதரவு கொடுக்கவில்லையே?? மறந்து விட்டாயா?

அன்றும் இன்றும் உங்கள் எழுத்தாளர்களும், இலக்கியங்களும் அவர்களை "வந்தேறு குடிகள்" என்று தனியே தானே வகைப்படுத்தி வைத்து உள்ளீர்கள்!! ஒரே தாயின் மடியில் பிறந்த அவர்களிடம் மட்டும் ஏன் இந்த பாரபட்சம்?

இதைக் கேட்டால் உன்னிடம் இருந்து வரும் பதில் , "அவர்களுடன் சுமூக உறவு இல்லை" என்பதை நான் அறிவேன்.
"அவர்கள் உன் தொப்புள் கொடி உறவு தானே? ஏன் உறவு சுமூகமாக இல்லை? உறவு இருந்தால் தான் கைக்கொடுப்பாயா? " என்று கேட்டால், மிகவும் கோபப்படுவாய்... உன் பதில் மவுனம் தான்!! இதனையும் நான் அறிவேன்!! (இல்லையேல், பிறரும் பழைய வரலாறை அறியும் படி கேட்கிறேனே என்று ஆத்திரப்படுவாய் என்பதையும் அறிவேன்!)

பழங்கதைகள் பேசுதல் தவறு தான்... கடந்து வந்த பாதச்சுவடுகளை திரும்பி ஒரு முறை பார்க்க வைக்கத் தான் நான் கேட்டேன்...

என் மக்கள் தவறு செய்து இருக்கலாம்...ஆனால், என்னைக் குறை கூறும் முன், சற்று திரும்பிப் பார்.. நீயும் அதே தவறை அரை நூற்றாண்டுக்கு முன் செய்து இருக்கிறாய்!!

"இன்னும் எத்தனை முறை தான் அன்று நடந்ததை மறந்து என்னையே உலகில் உள்ள அனைவர் முன்பும் குற்றவாளியாகக் காட்டுவாய்?" என்பது தான் என் கேள்வி!!

தான் ஒரு குற்றத்தைச் செய்ததை உணராமல், அதனையே பிறர் செய்யும் போது "துரோகம்" என்று கூக்குரலிடுவது மிகவும் கேவலம்!!

' அவர்கள் எங்களைப் போல் எதை இழந்தனர்? எங்கள் வீடுகளை, பெண்களை..' என்று
நீண்ட வசனம் பேசுவாய்!! ' இதுவும் அதுவும் ஒன்றா?' என்று அங்கலாய்பாய்!!

ஆனால், அருகில் இருந்தே உதவாமல் மாற்றானுக்குத் துணைப் புரிந்தது
தவறல்லவா!!
அன்று செய்த வினை தான் திரும்பி உன்னை நேற்று தாக்கி இருக்கிறது!!

இனியேனும், என்னைக் குறை கூறுவதை நிறுத்தி விட்டு, உன் மக்கள் உனக்காக என்ன செய்தார்கள் என்று சிந்திப்பாயாக!!


உன்னிடம் குற்றம் காண வேண்டும் என்கிற எண்ணத்திலோ, உன் மனம் புண்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் நான் இந்த மடலை எழுதவில்லை....
உன் புலம்பல்களால் என் மக்கள் பலர் உனக்குத் துரோகம் செய்து விட்டதாகவும், உனக்கு உதவ முடியாத நிலையை எண்ணி வருந்தியும் அழுகிறனர்.. அவர்களுக்கும் பழையன தெரியட்டும் என்கிற எண்ணமே இந்த மடலின் நோக்கம்!!!!

இந்த மடல் எழுதியதன் மூலம் உன் விடுதலையில் எனக்கு ஆர்வம் இல்லை என்ற முடிவுக்கு வந்து விடாதே!!
பிறரை மட்டும் குறை கூறாதே என்பதற்குத் தான் இந்த மடல்..


உன்னிடல் தற்காலம் குறித்தும், இன்னும் சில குறித்தும் கேட்க விருப்பம் தான்.. ஆனால், மடல் மிகவும் நீண்டு விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்..

படித்தவுடன் பதில் மடல் இடவும்!!
பதிலைக் கண்டவுடன் பதில் இடுகிறேன்..

இப்படிக்கு,
தொப்புள் கொடி உறவு!!




[You must be registered and logged in to see this image.]

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக