புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு )


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 20, 2011 10:59 am

First topic message reminder :

அன்புள்ள தொப்புள் கொடி உறவிற்கு - ஈழம் எழுதுவது !

உனக்கு வணக்கம் சொல்கிற நிலையில் நான் இல்லை .
எனக்கு வாழ்த்து சொல்கிற நிலையில் நீயும் இல்லை. உனக்குமெனக்கும் ஏதோ உறவு இருப்பதாக இன்னும் நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்த மடலை எழுதுகிறேன். இது இலையுதிர் காலத்தில் , வசந்தத்தை வரவேற்று , பறவைகள் எழுப்புகிற ஒலி அல்ல . பட்டுப்போன மரம் , தன் விதையின் மூல வேருக்கு அனுப்புகிற ஒப்பாரி ஓலம் .

உருகுகிற உயிருடனும், கருகுகிற உடலுடனும், ,
குற்றுயிரும் கொலை உயிருமாய் கிடக்கும் என்னை , தன் கோர பற்களுக்கு மத்தியில் கவ்விகொண்டிருக்கிரான் அந்த சிங்கள வெறிநாய் ராஜபக்சே. அவன் அன்னை கவ்விக்கொண்டே மரணத்தின் வரவேற்பறையில் கிடத்த தயாராய் இருக்கிறான். இந்த நிலையிலும் நான் உனக்கு கடிதத்தை அனுப்புகிற காரணத்தை நீ அறிவாயா ?

நீ என்னை காப்பாற்றுவாய் என்கிற நப்பிக்கை
கடலில் கரைத்த பெருங்காயம் போல கலைந்துபோனது . அதை விடு, நான் உன்னோடு ஒருசில விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன். நாளை உன் வாரிசுக்கு என் வரலாற்றை சொல்லும் போதாவது என்னை நினைப்பாய் அல்லவா ?

முன்பு தந்தை செல்வா என்றொரு தலைமகன் இருந்தான்
. அவன் என்னை விடுவிக்க என்னென்னமோ செய்தான். அவனது வழி காந்திய வழி என்பதால் நான் கவலையற்று இருந்தேன். ஆனால் காலன் அந்த கனவை கலைக்க எத்தனித்தான். செல்வாவை சிலுவையில் சேர்த்தான். பின் எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள் . என்னை கூறுபோட்டு கீறினர்கள். வீரன் பிரபாகரன் வந்தான். அவனது காலங்களில் , ஆன்ட்டன பாலசிங்கம் என்றொருவன் இருந்தான். நார்வே தூதுக்குழுவில் அவனது பங்கு அளப்பரியது. அவனையும் காலன் காவு வாங்கினான். பின் செந்தமிழ் செல்வன் என்றொரு தீரன் வந்தான். அவனை சிங்கள படைகள் சிதைத்தன. அதன் பின் நல்லது நடக்க வேண்டும் ஆனால் என் தலைமையில் தன் நடக்க வேண்டும் என்ற இறுமாப்பில் ,, என்னையும் அழித்தான் , இறுதியில் துரோகி கர்ணாவால் பிரபாகரனும் அழிந்தான்.

இங்கு நான் இன்னொன்றை சொல்லவேண்டும்.
ஈழ மக்களை சிங்களன் கொன்றான் குவித்தான். அது அன்றாட வழக்கமாகிப் போனதால் , அதை சகித்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை காலம் எனக்கு தந்தது. பூப்படையாத சிறுமிகள் தெய்வத்திற்கு சமம் என்பார்கள். அந்த தெய்வங்கள் கூட புணரப்பட்ட பிணங்களாய் என் மடியில் கிடத்தப்பட்ட போது நான் அடைந்த வேதனை சொல்லிமாளாது . இந்த கொடுமையை விட என் கன்னிப்பெண்களின் கற்பை அந்த சிங்களன் அழித்தான் என்று நீ மேடைக்கு மேடை பேசும்போதுதான் நான் அதிக வேதனை அடைந்தேன். முதலில் நீ ஒன்றை தெரிந்துகொள் .

ஈழப் பெண்களுக்கு மட்டுமல்ல , வேறு எந்த பெண்ணின்
கற்பையும் ஒரு ஆணோ , பல ஆண்களோ கலங்க படுத்திவிடமுடியது. ஒரு பெண்ணின் கற்பை அவளே கலங்க படுத்திகொண்டல்தான் உண்டு. என் ஈழப் பெண்ணுக்கு நடந்தது ஒரு உடலியல் வன்முறை அவ்வளவுதான். பூக்களின் அனுமதியோடுதான் அதன் வாசம் நுகர படுகிறதா ? திருமண வாழ்விலும் இந்த சித்திரவதை உண்டு. இயற்கை பெண்ணுக்கு வைத்த கொடுமைகளில் இது தலையாயது .. மீண்டும் சொல்கிறேன் அது மன்னிக்க முடியாத உடலியல் வன்முறை. ஆகையால் ஈழப்பெண்களின் கற்பை சிங்களன் அழித்தான் என்பதை இனி நீ சொல்லவே சொல்லாதே.

உண்ணாவிரதம் இருந்து போரை நிறுத்திவிட்டேன் என்று
விளம்பரம் தேடிய அய்யாவிற்கும் , சண்டையில் கிழியாத சட்டை எங்கு இருக்கிறது என்று , ஏளன வசனம் பேசுவதுபோல , போர் என்றால் பொதுமக்கள் சாவது சகஜம் என்று என் மக்களின் இறப்பை திரைப்படமாக ரசித்த அம்மையார் அவர்களுக்கும் , பழ நெடுமாறன், வைகோ , திருமாவளவன் , சீமான் போன்ற தலைவர்களுக்கும் , ஏன் இந்த கடிதம் எழுத கரம் கொடுத்தவனுக்கும் , ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் நான் ஒரு அன்பு பரிசு தர ஆசைபடுகிறேன். சற்று நெருங்கிவாருங்கள் . இந்த பரிசு எதற்காக என்று தெரியுமா ? என்னை அழிப்பதற்க்கு, இந்தியா ஆயுதம் தந்தது. அதை தட்டிகேட்கும் தைரியமற்ற கோழை போல வேடிக்கை பார்த்தீர்கள் அல்லவா அதற்குத்தான்.

அந்த அன்பு பரிசு .. த்துஉ ...... என்ன எச்சில் தெரிக்கவில்லை
என்று பார்க்கிறீர்களா ? என் உமில்நீரைகூட அந்த சிங்களன் உறுஞ்சிக்கொண்டான். இறுதியாய் உன்னிடம் ஒன்று சொல்ல ஆசைபடுகிறேன். இன்று நான் நாளை நீ .. சீனக்காரன் இங்கு ராணுவ தடவாளம் அமைத்துவிட்டான். அவனின் முதல் இலக்கு நீதான் என்பதை மறந்துவிடாதே. என்னைத்தான் நீ காப்பாற்றவில்லை உன்னையாவது காத்துகொள்.
இப்படிக்கு
உன்னை நம்பிக்கெட்ட ஈழம் !






[You must be registered and logged in to see this image.]

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 23, 2011 5:03 pm

வை.பாலாஜி wrote:பொதுமடல்களில் என்னை மிகவும் பாதித்த மடல் ..
. அவர்களுக்கு நாம் என்ன செய்தோம் . அழிப்பதை சிங்களவன் அளித்துவிட்டான் ..
அவர்கள் நம்மை தொப்புக்கொடி உறவுகள் என்றார்கள் , நாம் அவர்களுக்கு என்ன செய்தோம் .

சில எழுத்து பிழை இருந்தாலும் அதை சுட்டி கட்ட விருப்பம் இல்லை
எழுத்துபிழையை கண்டறிந்தால் சுதானந்தன் மாதிரி சொல்லாமல் திருத்திவிடுங்கள் பாலாஜி ! அதுதான் நல்லது.


இயலாமையின் வெளிப்படுதன் நம் எண்ணங்கள் !!
நன்றி பாலாஜி !



[You must be registered and logged in to see this image.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 23, 2011 5:09 pm

நிச்சயம் முயற்சி செய்கின்றேன் அய்யம் பெருமாள் ... காரணம் நான் தமிழில் அவ்வளவு புலமை பெற்றவன் அல்ல...




[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 23, 2011 5:16 pm

வை.பாலாஜி wrote:பொதுமடல்களில் என்னை மிகவும் பாதித்த மடல் ..
சில எழுத்து பிழை இருந்தாலும் அதை சுட்டி கட்ட விருப்பம் இல்லை . அவர்களுக்கு நாம் என்ன செய்தோம் . அழிப்பதை சிங்களவன் அளித்துவிட்டான் ..

அவர்கள் நம்மை தொப்புக்கொடி உறவுகள் என்றார்கள் , நாம் அவர்களுக்கு என்ன செய்தோம் .


உண்மை...படிக்கவே வேதைனையாய் உள்ளது....
சோகம் சோகம் சோகம் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 23, 2011 5:19 pm

இளமாறன் wrote:உண்மைகள் மனதை வருந்த செய்கிறது ..காலம் எப்பொழுதும் ஒரே பக்கமாக சுழன்றது இல்லை நிச்சயம் ஒரு நாள் வரும் அன்று புத்த பிட்சுகள் உணருவார்கள்

ஈழத்தில் புத்தன் ரத்த காவு விரும்புகிறான் இளா, நன்றி !!


ஈழத்தாயே!
உன்னை நேசித்த உன் அன்பு மகன்களில் நானும் ஒருவன். உன் விடுதலையை எண்ணி எண்ணி தினம் தினம் கடவுளை வேண்டிய கருணையுள்ளவன் நான். அண்ணன் பிரபாகரனின் மரணம் கேட்டு கண்ணீர் விட்ட பச்சை தமிழன் நான். உன் வேதனையை என்னால் உணர முடிகிறது. ஆனால் உதவும் நிலையில் நானில்லை என்பதை நான் எப்படி சொல்வேன். ஆனால் உன் நிலை மாறும் என்று மட்டும் நான் உறுதியாக நம்புகிறேன். எந்த நிலையிலிருந்தும் யாரும் சொல்ல வேண்டிய வரி "இந்த நிலையும் மாறும்".
நீண்ட நீட்களுக்குப் பிறகு என் உடம்பை புல்லரிக்க வைத்த ஒரு மடல் இது.

நன்றி மஹா ! மற்றம் வரும் வரை நம்மவர்கள் உயிரோடு இருப்பர்களா என்பதுதான் பயம்

நேற்று விதைதீர்கள் ... நாளை நிசயமாக அறுவடை செய்வீர்கள்
எதை அறுவடை செய்வோம்.அதை விடுங்கள்
என் தங்கைகோ அக்காவுக்கோ நடந்தால் தான் ரத்தம் கொதிக்கும் என்றால் அது என்னடா மானங்கெட்ட ரத்தம் ... தோழர் முத்துகுமார்

இந்தவரிகள் ஈழக்கவிஞர் காசி ஆனந்தனை நினைவு படுத்துகிறது. உங்கள் அளவிற்கு நான் ஈழமக்களை பற்றி அறிந்தவன் இல்லை. அவர்களுக்காக ஆதங்கப்பட்டவனும் இல்லை. உங்களின் இந்த சிக்நேச்சர் ஒன்றே இதற்க்கு சாட்சி ! நன்றி புரட்சி !


மிகவும் வேதனையாக இருக்கிறது

ஒருசில நேரங்களில் சோகங்கள் வர்த்திகளை கொன்றுவிடுகிறது என்பதை நீங்கள் மறுபடியும் நிருபித்துள்ளீர்கள் . நன்றி தயா ( அய்யா )





[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 23, 2011 5:25 pm


சோகம் சோகம் சோகம் சோகம் [/quote]

உங்கள் வேதனையை உணர முடிகிறது > நன்றி அக்கா !

நிச்சயம் முயற்சி செய்கின்றேன் அய்யம் பெருமாள் ... காரணம் நான்
தமிழில் அவ்வளவு புலமை பெற்றவன் அல்ல...

புலமைக்கும் தமிழுக்கும் சம்மந்தமே இல்லை பாலாஜி ! நன்றி !






[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 23, 2011 5:36 pm

ரேவதி wrote:வணக்கம் ஈழமக்களே
உங்களுக்கு எங்களின் மீது அளவுகடந்த வெறுப்பு இருப்பினும் உங்களின் கடிதம் ஆரம்பமே (அன்புள்ள தொப்புள் கொடி உறவிற்கு) எங்களை வெட்கி தலை குனிய வைக்கிறது. நீங்கள் சொல்வதை போல் நமக்குள் இன்னும் ஒரு உறவு இருக்கிறது அதுவும் உயிரில்லாத பிணம் போன்ற உறவே !! கிட்டத்தட்ட நாங்களும் உங்களை போலவே இங்கே அழுது கொண்டிகிர்றோம் எங்களுடையா தலைவர்களை நினைத்து, அன்று உங்களுக்காக குரல் கொடுத்தவர்கள் இன்று துக்கு தண்டைனைகாக காத்து கொண்டிருக்கும் அந்த மூவறுக்காக குரல் கொடுத்து கொண்டு இருகிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் எங்களின் நோக்கம் மற்றவர்களை விட நாம் தனித்து நிற்க வேண்டும் என்பதே இதை சொல்ல நா கூசுகிறது இருந்தாலும் இதுதான் உண்மை.
ஒரு தனி மனிதனாய் எங்களால் உங்களை நினைத்து கவலைபடத்தான் முடியுமே தவிர வேறு எதுவுமே செய்ய முடியாது.இங்கே இருக்கும் நிலவரம் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறன் அதுதான் "லோக் பால்" அதற்காக ஒரு மனிதர் உண்ணாவிரதம் இருந்த்தார் அவருக்காக நாடே அவருடன் பாடுபட்டது, ஆனால் உங்களுக்காக இரண்டு நாள் மட்டுமே எங்களால்................ இதற்கு மேல் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும்.அன்று அண்ணன் பிரபாகரன் இறந்தவுடனே தெரியும் மற்றவர்கள் உங்களை மறந்து விடுவார்கள் என்று அதேபோல்தான் இப்போதும் நடக்கிறது.
பெண்களை பற்றி நீங்கள் சொன்னவுடன் எங்களால் அழ மட்டும்தான் முடிகிறது காரணம் தனக்கு வந்தால்தான் தெரியும் அந்த வேதனை!!
இறுதியாக ஒன்றை மட்டும் உங்களிடம் சொல்லி விடுகிறேன் பூவோடு சேர்த்து நாரும் மணக்கும் என்று சொல்லுவார்கள் அதே போல்தான் குப்பையை போன்ற அரசியல் தலைவர்களை கொண்டுள்ள நாங்களும் அதே போல் மனநிலையில்தான் இருப்போம்.
நேரமும், காலமும் ஒரே நாள்போல் இருக்காது என்றாவது ஒருநாள் மாறும்!!

நன்றி
தமிழன்


வணக்கம் ரேவதி !

என்னுடைய பொதுமடலைவிட உங்களுடைய பதில் மடலில் தான் அதிக வேதனை தெரிகிறது.


ஒரு பொது மனிதனாய் இக்கடிதம் எழுதுகிறேன்,
ஆனால் இம்மடலுக்கு பதில் கடிதம் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை இருந்தாலும் வணக்கம் என்றே ஆரம்பிக்கிறேன்.

நீங்களும் விரைவில் , பொது பிரச்சனையை பற்றிய சொந்த கட்டுரைகள் எழுதுவீர்கள் என்பதை என்னால் நிச்சயமாய் கூறமுடியும். தொடர்க.

நான் அடிக்கொடிட்ட வரிகள் சமூகத்தின் மீதுள்ள உங்கள் பார்வையை தெளிவு படுத்துகிறது.

நீங்கள் பொது பிரச்சனைகளில் தொடர்ந்து பதில் கடிதம் எழுதுகிறீர்கள். நன்றி.




[You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 23, 2011 6:01 pm

ஈழமே உன் மடல் கண்டு என் விழி ஈரமே !
மிச்சமிருந்த எச்சிலும் வீணாக்கிவிட்டாயே !- உன்
உமிழ்நீருக்கும் தகுதி உடையவரா? எம் தலைவர்கள்-
உன் விடியலுக்கு பூபாளம் பாடமாட்டார்கள்
முகாரி ராகமே போதும் அவர்களுக்கு ஓட்டு பொறுக்க !
தமிழின தலைவன் என்று எவனும் இங்கில்லை
அரிதாரம் அகற்றிய உனக்கு நன்றி

சுதந்திர தாகம் அடங்கி விடாது
ஈழம் மலரும்
இங்குள்ள தமிழனால் அல்ல! ஆமாம்
அடிமைகளுக்கு ஏது அதிகாரம்

புலம் பெயர்ந்து உன் விடியலுக்காய்
தாகத்தோடு தவிக்கும் உன் பிள்ளைகளால்
ஈழம் மலரும் !

அன்று வாழ்த்து செய்தி அனுப்ப வரிசையில்
நிற்பான்

தமிழன் !






வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Sep 23, 2011 6:10 pm

கடிதத்தை படித்துக்கொண்டே வருகையில் மனதில் ஏறிய கனமும் ரணமும் நீ அருகில் அழைத்து கொடுத்த பரிசைப் பார்த்ததும் மறைந்து, உனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்ற குரூர திருப்தி குடிகொண்டுவிட்டது..



[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 23, 2011 6:18 pm

கே. பாலா wrote:ஈழமே உன் மடல் கண்டு என் விழி ஈரமே !
மிச்சமிருந்த எச்சிலும் வீணாக்கிவிட்டாயே !- உன்
உமிழ்நீருக்கும் தகுதி உடையவரா? எம் தலைவர்கள்-
உன் விடியலுக்கு பூபாளம் பாடமாட்டார்கள்
முகாரி ராகமே போதும் அவர்களுக்கு ஓட்டு பொறுக்க !

தமிழின தலைவன் என்று எவனும் இங்கில்லை
அரிதாரம் அகற்றிய உனக்கு நன்றி

சுதந்திர தாகம் அடங்கி விடாது
ஈழம் மலரும்
இங்குள்ள தமிழனால் அல்ல! ஆமாம்
அடிமைகளுக்கு ஏது அதிகாரம்


அன்று வாழ்த்து செய்தி அனுப்ப வரிசையில்
நிற்பான்
தமிழன் !


புலம் பெயர்ந்து உன் விடியலுக்காய்
தாகத்தோடு தவிக்கும் உன் பிள்ளைகளால்
ஈழம் மலரும் !

ஆம் தந்தை செல்வா கூட புலம் பெயர்ந்த தமிழனாய் இருந்து மீண்டும் ஈழம் வந்துதான் போராடினார் . நிச்சயம் ஈழம் பிறக்கும். அன்று
ஞாலம் மகிழும் !
நன்றி பாலா சார் !



[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 8:45 pm

வணக்கம் பெருமாள்,உங்களுடைய பொது மடல்களில் என்னை மிகவும் பாதித்த மடல் என்றால் இது தான்.

பழைய ஒரு சில நினைவுகள்,

மக்கள் திலகம் எம்‌ஜி‌ஆர் அவர்கள் ஈழப் புரட்சிக்கு எவ்வளவோ செய்து இருக்கிறார்கள்,ஆனால் அது எல்லாமே மறைமுகமாக என்று தான் நினைக்கிறேன்.அமைதிப் படை என்ற பெயரில் இந்தியா ராணுவம் அங்கு சென்ற பொது அதை எதிர்த்தவர் எம்‌ஜி‌ஆர் அவர்கள்.



எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் தனி ஈழம் மலர்ந்தால் மட்டுமே இலங்கையில் தமிழர்கள் பிரச்சினைகள் தீர்ந்து அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என்று உறுதியாக நம்பினார்.

அப்போது ஈழத்ததமிழர் விசயத்தில் அரசியல் செய்ய நினைக்காமல் அப்போதைய எதிர்க் கட்சித் தலைவரான கலைஞரும், தமிழக முதல்வர் எம்ஜிஆரின் எல்லா விதமான ஈழத் தமிழர் ஆதரவு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளுமே ஒன்று பட்டு நின்றுத் தனி ஈழம் மலரச் செய்து ஈழத் தமிழர்களின் வாழ்வினை மலரச் செய்து விட வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர்.

ஈழத்தில் தமிழர்களின் பிரச்சினை தீர தனி நாடாக ஈழம் உருவாவது மட்டுமே ஒரே தீர்வு என்று முழுமையாக நம்பிய எம்ஜிஆர், ஈழத் தமிழ்ப் போராளிகளின் ஆயுதப் போராட்டங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டி அளிக்கும் நோக்கத்துடன் நிதி திரட்டி வழங்கினார்.

அன்று எம்ஜிஆர் நிதி திரட்ட ஆரம்பித்த போது, முக்கிய எதிர்க் கட்சியான திமுகவும் அதில் பங்கேற்றுத் தனது பங்காக பெரும் நிதியைத் திரட்டித் தந்தது.
தனி ஈழம் மலரச் செய்ய தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டுப் போராடிய அந்தக் கால கட்டங்களில், இந்தியப் பிரதமராகவும், காங்கிரஸ் தலைவராகவும் இருந்த இந்திராகாந்தி அவர்களின் முழுமையான ஆதரவும் தமிழர்களின் தனி ஈழக் கோரிக்கைக்கு இருந்தது.

அது போன்ற ஒரு முழுமையான சாதகமான சூழலில் தமிழகத்தில் இருந்து மட்டும் அல்லாமல் இந்திய அரசிடம் இருந்தும் கூட தமிழர்களின் உரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்த நேரத்தில் கூட தமிழர்களுக்கு எந்த உரிமைகளையும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை அன்றைய சிங்கள இன வெறி அரசு,

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் இந்திரா காந்தியின் அணுகுமுறையும், ராஜீவ் காந்தியின் அணுகுமுறையும் வேறு வேறாக இருந்தது. ராஜீவ் காந்தி அவர்கள் இந்தியப் பிரதமர் ஆகப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு மாறிப் போனது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் என்ற ஒரு ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி நிறைவேற்ற முனைந்தார். தனி ஈழம் மட்டுமே தமிழர்களின் பிரச்ச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்று நம்பிய எம்ஜிஆருக்கு இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை.

எம்ஜிஆர் அந்த கால கட்டத்தில் நோய்வாய்ப்பட்டு இருந்தார். உடல்நலம் குன்றி இருந்த எம்ஜிஆரை ராஜீவ் காந்தி நேரடியாக மிரட்டியதாகவும்,சொல்லப்படுகிறது
உடல் பலவீனப்பட்டுப் போயிருந்த எம்ஜிஆரும் வேறு வழியின்றி இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டார். இந்த இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழாவையும் அவர் தவிர்க்க முயன்றார்.ஆனால் அப்போதும் கட்டாயப்படுத்தப் பட்டு அந்த விழாவில் கலந்து கொள்ள வைக்கப் பட்டார்.

ராஜீவ் காந்தியிடம், ஈழத்தில் இந்திய ராணுவத்தினரால் ஈழத் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப் படுவதைப் பற்றி மனம் குமுறிப் பலமுறை அழாத குறையாக எம்ஜிஆர் முறையிட்ட போது கூட ராஜீவ் காந்தியின் மனம் இளகவில்லை.அப்போதைய போரில் இந்தியா ராணுவத்தால் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை மட்டும் 7000-க்கும் அதிகம்.

அன்று எம்ஜிஆரின் கைகளைக் கட்டிப் போட்டுத் தனி ஈழம் மலர்வதைத் தடுத்த அதே காங்கிரஸ்தான், ஈழத்திற்கு இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழர்களின் பகுதிகளை வேட்டைக் காடாக்கி சூறையாடிய அதே காங்கிரஸ்தான், இன்றைக்கும் தங்கள் வாழ்வின் ஓரத்தில் நின்று கொண்டு உரிமைக்குப் போராடும் ஈழத் தமிழர்களை வாழ்வினை அழிக்கும் செயலை செய்து கொண்டுதான் உள்ளது.


காந்தியைக் கொன்ற கோட்சேவின் குருவான சவார்க்கரின் படத்தை நாடாளுமன்றத்தில் திறந்த போது அதைத் தடுக்க முடிந்ததா காங்கிரஸ் கட்சியால்?

இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட போது ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட சீக்கியர்கள் 2000 பேரின் உயிருக்காக, சீக்கியர்களிடம் தனது பதவிப் பிரமாணத்தின் போது பகிரங்க மன்னிப்புக் கேட்டாரே மன்மோகன்சிங் அதைத் தடுக்க முடிந்ததா காங்கிரஸ் கட்சியால்?

காங்கிரசிற்கு உடன்பாடில்லாத இது போன்ற எத்தனையோ நிகழ்வுகள் ஏற்பட்ட போது அவற்றை எல்லாம் தடுக்கத் திராணி இல்லாமல் பலவீனப் பட்டுப் போன நிலையில் தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு நிலையில் பலமில்லாத உள்ள காங்கிரஸ் கட்சி இங்கே தமிழகத்தில் மட்டும் எப்படித் தமிழர்களுக்கு எதிரான காரியங்களை அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து செய்து வருகிறது என்று பார்த்தால், அதற்கான பதில்தான் கூட்டணி.ராஜிவ்காந்தியைக் கொன்ற ஒரே ஒரு குற்றத்திற்காக நடக்கும் பழிவாங்கும் படலம் தான் இது.நாமும் அதை வேடிக்கை பார்க்க வேண்டிய சூழல்.



உத்தம் சிங் - ஒரு குறிப்பு (ஜாலியன் வாலாபாக் படுகொலை )

இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் ரௌலட் சட்டத்தை எதிர்த்து, 1919 பைசாகி பண்டிகை நாளன்று, பஞ்சாபின் அமர்தசரசு நகரின், நாற்புறமும் மதில்கள் சூழ்ந்த ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். அதன் ஒரே நுழைவாயிலை அடைத்துக் கொண்டு நின்ற 90 போலீசுகாரன்களையும் குண்டுகள் தீரும்வரை சுடும்படி உத்தரவிட்டான் வெள்ளைக்காரத் தளபதி ஜெனரல் டயர்.



அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தன் கண்முன்னால் கண்டு துடித்தவன் தான் உத்தம்சிங் என்ற 19 வயது இளைஞன்.

இந்தப் படுகொலைக்கு நேரடிக் காரணமானவர்கள் இருவர். ஒருவன், கொலைப்படைக்குத் தலைமையேற்ற தளபதி டயர். மற்றவன் அதற்கு உத்தரவிட்ட பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ. டயர். இவ்விருவரையும் கொன்று பழிதீர்ப்பது என்று சபதம் மேற்கொண்டான் உத்தம்சிங்



படுகொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க புறப்பட்டு, பல சிரமங்களை எதிர்கொண்டு, பல நாடுகள் கடந்து, சமயம் பார்த்து காத்திருந்து 21 ஆண்டுகள் கழித்து அவர்களுடைய சொந்த மண்ணான இங்கிலாந்திலேயே பழிவாங்கியவன் இந்த உத்தம்சிங்.


“நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என்பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்தமடைகிறேன். இது என் கடமை” என்று முழங்கினான். கதிகலங்கிப்போனது ஆங்கிலேயக் காலனி அரசு.



பஞ்சாப் மாநிலம் முழுவதும் அவன் நாட்டுப்புற வீரதீர நாயகனாகவும், தேசபக்த விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறான்.


அன்று உத்தம் சிங் செய்ததைத் தான் அதன் பின் அதே போல் ராஜிவ் காந்தியும் பழிவாங்கப் பட்டார்.இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.



ஆனால் எல்லா வற்றிற்கும் காலம் பதில் சொல்லும்.அவர்களின் சுதந்திர தாகம் ஒரு நாள் கிடைக்கும்.அந்த நாட்களில் நாம் இருப்போமா என்று தெரியவில்லை.ஆனால் வரலாற்றில் தனி ஈழம் என்றோ ஈழ சுதந்திரம் என்றோ ஒரு வரலாறு இருக்கும்.



அப்போது நம் ஈழ உறவுகள் சுதந்திரமாக காற்றை சுவாசிப்பார்கள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக