புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெருநாய்கள் !! - Page 2 Poll_c10தெருநாய்கள் !! - Page 2 Poll_m10தெருநாய்கள் !! - Page 2 Poll_c10 
32 Posts - 54%
heezulia
தெருநாய்கள் !! - Page 2 Poll_c10தெருநாய்கள் !! - Page 2 Poll_m10தெருநாய்கள் !! - Page 2 Poll_c10 
23 Posts - 39%
mohamed nizamudeen
தெருநாய்கள் !! - Page 2 Poll_c10தெருநாய்கள் !! - Page 2 Poll_m10தெருநாய்கள் !! - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
தெருநாய்கள் !! - Page 2 Poll_c10தெருநாய்கள் !! - Page 2 Poll_m10தெருநாய்கள் !! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெருநாய்கள் !! - Page 2 Poll_c10தெருநாய்கள் !! - Page 2 Poll_m10தெருநாய்கள் !! - Page 2 Poll_c10 
32 Posts - 54%
heezulia
தெருநாய்கள் !! - Page 2 Poll_c10தெருநாய்கள் !! - Page 2 Poll_m10தெருநாய்கள் !! - Page 2 Poll_c10 
23 Posts - 39%
mohamed nizamudeen
தெருநாய்கள் !! - Page 2 Poll_c10தெருநாய்கள் !! - Page 2 Poll_m10தெருநாய்கள் !! - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
தெருநாய்கள் !! - Page 2 Poll_c10தெருநாய்கள் !! - Page 2 Poll_m10தெருநாய்கள் !! - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெருநாய்கள் !!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 19, 2011 3:14 pm

First topic message reminder :

தெருநாய்கள் !! - Page 2 DSC00498


தெருநாய்கள் என்றாலே எனக்கு பயங்கர வெறுப்பு. அதிலும் சொறிபிடித்தவைகளைப் பற்றி சொல்லவும் வேண்டாம். அழுக்குப்பிடித்த அந்த நாய்கள் ஒவ்வொன்றையும் அந்நியன்,ரமணா பாணியில் தேடித்தேடி விஷ ஊசிப்போட்டு கொல்லவேண்டும் என நினைப்பேன். வீட்டு நாய்கள் நல்லவை. ஊசிபோடப்பட்டவை. அவை குரைப்பதை மட்டுமே செய்யக்கூடியவை. சுத்தமானவை. ஆச்சாரமானவை. சொல்லப்போனால் அவற்றில் சில என்னைப்போலவே சைவபட்சிணிகள். சாதுவானவை. உணவுக்காக குப்பைகளை கிளறி ஊரை நாறடிப்பதில்லை. ஆனால் இந்த தெருநாய்கள் இரவெல்லாம் கத்திக்கொண்டும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும் கடித்துக்கொண்டும் திரிவதால் எத்தனை பேர் தூக்கம் கெடுகிறது. ஊவென இதுகள் போடுகிற ஊளைக்கு என் மனைவி இரவெல்லாம் பினாத்திக்கொண்டு என் தூக்கத்தை கெடுப்பாள்.

இரவில் நிம்மதியாக வண்டி ஓட்டியபடி வீடு வந்து சேர்வதற்குள் எத்தனை நாய்களை தாண்டி வரவேண்டியிருக்கிறது. ஸ்ஸ்ப்ப்பா.. பெரிய போராட்டம்தான். குழந்தைகள் நிம்மதியாக டியூசன் போய் வரமுடிகிறதா.. குழந்தைகளை குறிவைத்து குரைப்பதையே குலத்தொழிலாக கொண்டிருக்கின்றன இந்த கருமம் பிடித்த நாய்கள். நல்ல வேளை எனக்கு குழந்தைகள் இல்லை. தெருப்பங்கீட்டில் பிரச்சனை வந்துவிட்டால் தெருவில் யாருமே நடமாட முடியாத அளவுக்கு இந்த நாய்களுக்கெல்லாம் கோஷ்டிபூசல் வேறு... கத்தி கத்தி ஊரை கூட்டி.. சகிக்க முடியாது. எங்கள் தெருவில் மட்டும் எப்படியும் நாற்பது நாய்களாவது இருக்கும். எண்ணியதில்லை.

மாநகராட்சியில் கம்ப்ளைன்ட் கொடுத்தாயிற்று.. ஹிந்து எடிட்டருக்கு லெட்டரும் எழுதியாயிற்று. என் நேரத்திற்கு பிடித்த கேடு! ஒரு மயிரையும் யாரும் பிடுங்க வில்லை. நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. நாய் பிடிக்கவும் காசு கொடுக்க வேண்டும் போல இருக்கிறது. யாரிடம் இருக்கிறது காசு. நாற்பதாக இருந்த நாய்களின் எண்ணிக்கை ஐம்பதானதுதான் மிச்சம். கோவை பக்கத்தில் நாய்களுக்கு கருத்தடை செய்கிறார்களாம் அதையாவது செய்துதொலைத்தால்தான் என்ன? சினிமாவில் காட்டுகிற நாய்வண்டிகளை நான் பார்த்ததேயில்லை.

என்னதான் இறைவன் படைத்த உயிராக இருந்தாலும் நமக்கு தொல்லையென்றால் கொலை செய்வதில் தப்பில்லை. கொசுக்களை கொல்வதில்லையா? கரப்பான்களை கொல்வதில்லையா? என்னதான் நான் சைவபட்சிணியாக ஜீவகாருண்ய ஒழுக்கத்தினை கடைபிடிப்பவனாக இருந்தாலும் நமக்கு தொல்லை கொடுப்பதை கொல்வதில் தவறில்லை என்றே வாழ்கிறேன். பசுவைப்போல நாய்களொன்றும் புனிதமானவை அல்லவே.

என்னால் எதையும் கொல்ல முடியாது என்றாலும் இந்த நாய்களில் ஒன்றையாவது வாழ்க்கையில் கொன்றுவிடவேண்டும் என்ற லட்சியம் மட்டும் நிறையவே இருந்தது. அதற்கு ஒரு காரணம் இருந்தது சிறுவயதில் ஒருமுறை பள்ளிக்கு சென்று திரும்பிக்கொண்டி ருந்த என்னையும் என் தங்கையையும் ஒரு நாய் கடித்துவிட்டது. ஒரு ஊசிக்கே அழுது ஆர்ப்பாட்டம் செய்கிற எனக்கு பல ஊசிகள் போடப்பட்ட அந்த தழும்பு இன்னும் மனதில் ஆறவில்லை. அப்போதிருந்தே இந்த நாய்துவேஷம் என்மனதில் வேரூன்றியிருக்கலாம். என் தங்கை அதை மறந்துவிட்டாள். அவளிடம் சொன்னால் சிரிப்பாள்.. இப்போது அவள் வீட்டிலேயே ஒரு நாயும் வளர்க்கிறாள். பொமரேனியன்.

ஒரு நாயையாவது கொல்லவேண்டும் என்கிற வெறியும் ஆத்திரமும் ஒவ்வொரு தெருநாயை நான் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் போதும் அதிகமாகும். எப்போதோ கடித்த நாய் மீதுள்ள கோபத்தில் இப்போது கொலையா என கொதிக்க வேண்டாம்.. உங்களையோ உங்கள் வீட்டில் இருப்பவர்களையோ இந்த நாய்கள் கடித்திருந்தால்தான் உங்களுக்கு அதன் வலிபுரியும்.

கொலைவெறி முற்றிப்போயிருந்தபோதும் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்காமலேயே இருந்தது. சில நேரங்களில் நாய் பலசாலியாக முரட்டுத்தனமாக இருந்துதொலைக்கும் அல்லது கூட்டமாக குழுவாக இருக்கும். அதைக்கண்டு நான் பயந்து ஒதுங்கிவிடுவேன். அல்லது நான் கல்லை எடுப்பதற்குள் அவை ஓடி ஒளிந்துகொள்ளுவதும் உண்டு.

அந்த நாய்களை போல இல்லை இந்த நாய்! இது சரியான நோஞ்சானாக இருந்தது. வயிறு ஒட்டிப்போய்.. எலும்புகள் துருத்திக்கொண்டிருந்தன. மார்புகளணைத்தும் தொங்கிப்போய் கண்களில் ஒளியின்றி.. ஓரிரு நாளில் இறந்துபோய்விடுமோ என்கிற நிலையில் இருந்தது. ஒருநல்ல மாலைப்பொழுதில் பைக்கில் சென்றுகொண்டிருந்த என்னை விரட்டிக்கொண்டே பின்னால் வந்தது அந்த நாய். பசியாக இருந்திருக்கலாம். வண்டியை நிறுத்தியதும் அதுவும் நின்றது. வாயால் மூச்சிரைக்க என்னையே பார்த்தபடி வாலாட்டிக்கொண்டே நின்றது. வண்டியை விட்டு இறங்கினேன். ஒரு கல்லை குனிந்து எடுக்க அது லேசாக பின்வாங்கியது. கல்லை ஓங்க ஓட முற்பட்டது.. கையிலிருந்த கல் சரியாக அதன் மண்டையில் பட்டதும் அது பொத்தென்று அப்படியே சரிந்து விழுந்தது. க்கீங் க்கீங் என ஈனக்குரலில் அனத்தியது. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அதன் அருகில் சென்று காலால் தலையை அசைத்துப்பார்த்தேன். க்கீங் க்கீங் என அனத்தியபடி அப்படியே கிடந்தது. என் ஆத்திரம் இன்னமும் அதிகமானது.. அதே சமயம் எனக்கு அது மகிழ்ச்சியாகவும் இருந்தது. அருகில் கிடந்த பெரிய கல்லை தூக்கி அதன் தலையில் போட்டேன். மண்டை ஓடு உடைந்த சப்தம் கடாக் முடாக் என்றது. கல் தலையில் சிக்கிக்கொண்டது. அதை ஆட்டி ஆட்டி எடுத்தேன். ஒரே ரத்தம். ச்சே கையெல்லாம்..பிசு பிசுவென.. தூக்கிப்போட்டுவிட்டேன். ஆனாலும் அதன் உடல் துடித்துக்கொண்டிருந்தது. விடாமல் இன்னொரு கல்லை போட்டும் கம்பியால் வயிற்றில் குத்தியும் அது துடித்துக்கொண்டேயிருந்தது. என்ன எழவுடா செத்துத்தொலைய மாட்டேங்குதே.. என எரிச்சலோடு இன்னொரு கல்லை தேடினேன்.. ரத்தம் படித்த கற்களை தொடவே சங்கட்டமாக இருந்தது. அருகிலிருந்த முற்செடிகளுக்குள் தேடினேன்.. அதற்குள்ளிருந்து நாலைந்து குட்டி நாய்கள் என் கால்களுக்குள் புகுந்து ஓடின.. என் தேடல் கல்லில்தான் இருந்தன. குட்டிகளை கவனிப்பதில் எனக்கு ஆர்வமில்லை.

அகப்பட்டது பெரிய கல்! இதை எடுத்து இன்னொரு போடு போட்டால் முடிந்தது கதை. இன்னமும் எனக்குள் அந்த கொலை வெறி நிறையவே மிச்சமிருந்தது. எனக்கே என்னை நினைத்து பெருமையாக இருந்தது. ஒரு நாயையாவது கொல்ல வேண்டும் என்கிற என் தணியாத ஆவல் இன்று தீரப்போகிறது. ஆனால் என் கால்களுக்குள் புகுந்து சென்ற நாய்க்குட்டிகள் துடித்துக்கொண்டிருந்த நாயினை சுற்றி சுற்றி வந்தன.. அதன் மார்புகளில வாய்வைத்து தடுமாறின.. நாய் இன்னும் சில விநாடிகளில் செத்துவிடும் நிலையிலிருந்தது. அதன் உடல் தூக்கி தூக்கி போட்டபடியும் வாயிலிருந்து எச்சில் வழிந்தபடியுமிருந்தது. க்கீ க்கீ க்கீ என அந்த குட்டிநாய்களின் கதறலை கேட்க சகிக்கவில்லை. கையிலிருந்த கல்லை கீழே போட்டுவிட்டு.. மீண்டும் பைக்கிற்கு அருகில் வந்தேன். திரும்பி பார்த்தேன்.. பெரிய நாயின் தலையில் ரத்தம் இன்னும் கசிந்தபடி இருந்தது. குட்டிநாய்கள் அதன் மார்புகளை கவ்வியபடியிருந்தன. எனக்குள்ளிருந்த கொலைவெறி ஏனோ தணிந்திருந்தது. இதற்கு மேலும் அந்த நாயை கொல்ல மனமொப்பவில்லை.

பைக்கை மிதித்து அங்கிருந்து நகர்ந்தேன். வீட்டிற்கு செல்லும் முன் ஏனோ மனது பதைபதைப்பாக இருந்தது. அவை குட்டிநாய்கள். பிறந்து ஓரிரு நாட்கள் இருக்கலாம். அவற்றால் சரியாக நடக்கவும்கூட முடியவில்லை. நான் கொன்றது அதன் அம்மாவாக இருக்கலாம். மீண்டும் பைக்கை திருப்பிக்கொண்டு பழைய இடத்திற்கே வந்தேன். சில காக்கைகள் பெரிய நாயின் மரணத்திற்காக அருகிலேயே கண்விழித்துக் காத்திருந்தன. நான் அங்கிருந்து கிளம்புகையில் குட்டிநாய்களின் எண்ணிக்கை நான்காக இருந்தது. அதில் இரண்டை காணவில்லை. அந்த இரண்டும் என்ன ஆனதோ தெரியவில்லை. இரண்டுதான் இருந்தன. காணமல் போன இரண்டையும் வேறு யாராவது எடுத்து சென்றிருக்கலாம். அந்த இரண்டு குட்டிகளையும் எடுத்து ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டுக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினேன். நினைவெல்லாம் அந்த தாய்நாயாகவே இருந்தது. என்னதான் இருந்தாலும் கொலைவரை சென்றிருக்க கூடாது. இனியென்ன செய்ய முடியும். செத்தது செத்ததுதான். செத்தது நாய்தானே,அதனாலென்ன...

பாவம் குட்டிகள். அந்த இரண்டு குட்டிகளில் வெள்ளைக்குட்டியொன்று ரொம்பவே அழகு.. என் மனைவிக்கு அவனை மிகவும் பிடிக்கும். அப்படியே அவன் அம்மா ஜாடை! எனக்கு கருப்பு குட்டிதான் இஷ்டம். நான் வீட்டிற்குள் நுழைந்தாலே என் பின்னாலேயே ஓடிவரும் நான் பால்கொடுத்தால்தான் குடிக்கும். மடியில் உறங்கும். கருப்பிதான் என் செல்லம். வெள்ளையன் என் மனைவிக்கு செல்லம்.

அதிஷா





அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Nov 26, 2011 1:04 am

மன வக்கிரம் அதிகமுள்ளவராக தென்படுகிறார் பாவம்... இதில் வெள்ளையனாம் கருப்பியாம். அதிர்ச்சி

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Sat Nov 26, 2011 10:47 am

அசுரன் wrote:மன வக்கிரம் அதிகமுள்ளவராக தென்படுகிறார் பாவம்... இதில் வெள்ளையனாம் கருப்பியாம். அதிர்ச்சி
அதிஷா மன வக்கிரம் கொண்டவரல்ல ..எல்லோருக்கும் ஆழத்திலோ மேற்பரபிலோ வக்கிரத்தின் இருள் படிந்திருக்கும் ..அவ்வாறான வக்கிரம் சார்ந்து ,உணர்தலுடன் ,விழிப்புணர்வுடன் அதை கடக்க முயல்பவர் தான் அதிஷா ...எழுத்தில் இவ்வாறு வெளிப்படுதுவதின் மூலம் அவை சார்ந்த உணர்தலுக்கு ஒளியூட்டுகிறார் .......

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 26, 2011 10:57 am

அனந்தம் ஜீவ்னி wrote:
அசுரன் wrote:மன வக்கிரம் அதிகமுள்ளவராக தென்படுகிறார் பாவம்... இதில் வெள்ளையனாம் கருப்பியாம். அதிர்ச்சி
அதிஷா மன வக்கிரம் கொண்டவரல்ல ..எல்லோருக்கும் ஆழத்திலோ மேற்பரபிலோ வக்கிரத்தின் இருள் படிந்திருக்கும் ..அவ்வாறான வக்கிரம் சார்ந்து ,உணர்தலுடன் ,விழிப்புணர்வுடன் அதை கடக்க முயல்பவர் தான் அதிஷா ...எழுத்தில் இவ்வாறு வெளிப்படுதுவதின் மூலம் அவை சார்ந்த உணர்தலுக்கு ஒளியூட்டுகிறார் .......
உங்களின் தெளிவான பின்னூட்டத்திற்கு நன்றிகள்..



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Nov 26, 2011 11:06 am

தெருநாய்கள் !! - Page 2 755837

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Nov 26, 2011 11:19 am

கருத்துள்ள கதை, பகிர்வுக்கு நன்றி ரேவதி தெருநாய்கள் !! - Page 2 678642



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 11:20 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு




தெருநாய்கள் !! - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக