புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10 
366 Posts - 49%
heezulia
அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10 
25 Posts - 3%
prajai
அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் )


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 16, 2011 2:48 pm

அன்புள்ள கவிஞர்களே !

வணக்கம்! நான் உங்களிடம் சொல்ல நினைத்த
ஒன்றினை இன்று இந்த மடலின் மூலம் சொல்லிவிடுகிறேன்.

முன்னுரை;

தன்னுடைய எண்ண அலைகளை, முகத்தில்
வெளிப்படுத்துகிறவர் நடிகர். எழுத்தில் வெளிப்படுத்துகிறவர் எழுத்தாளர்' பேச்சில் வெளிப்படுத்துகிறவர் பேச்சாளர்.ஆனால் இந்த இலக்கணத்திற்குள் ஒரு கவிஞரை அடக்க முடியாது.

கவிஞர் என்பர் யார் ?


எங்கோ ஓர் மூலையிலிருந்து தன்னுடைய
கவிதையினை படிக்க கூடிய ரசிகன் அல்லது வாசகனின் மனதில் , ஏதாவது ஒரு எண்ண அலைகளை எழுப்பவேண்டும். இங்கு ரசிகனின் பார்வையும் கவிஞனின் பார்வையும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. ஏனென்றால் ஒரு கவிஞன் என்பவன் தன்னுடைய உணர்வுகளை அடுத்தவர்களுக்கு கடத்த முடியாது. ஆனால் ரசிகனின் மனதில் ஒரு புது உணர்வை ஏற்படுத்த முடியும். இந்த பணியை செய்வதுதான் கவிதை. இந்த மாதிரி கவிதைகளை எழுதுபவர்கள் தான் கவிஞர்கள்.
ஒரு கவிஞர் என்பவர் வாசகனின் மனதில் ....உணர்வுகளை தூண்டி விடுகிறவர் அல்லது உணர்வுகளை உற்பத்தி செய்கிறவர்.

கவிஞனும் சிரமமும் :


கவிதை எழுதுவது என்பது ,, ஒரு
நாணயத்தை சுண்டிவிடுவது போல அவ்வளவு எளிதான செயல் அல்ல

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் வசப்பட வில்லையடி
வயிற்ருக்கும் தொண்டைக்கும் உருவம் இல்லாதொரு உருண்டையும் உருளுதடி


இந்த திரையிசை பாடல் வேறொரு உணர்விற்காக
எழுத பட்டது . ஆனால் கவிதை எழுதுகிற நேரத்தில் கவிஞர்களின் மனநிலையும் இப்படித்தான் இருக்கும்.தன்னுடைய சிந்தனையை வார்த்தைகலாக்க துடிப்பார்கள்.ஆனால் சில சமயங்களில் வார்த்தை கிடைக்காது. வீட்டில் இருப்பவர்களுக்கு பயந்து ( குறிப்பாய் பெண் கவிஞர்கள் ) அமைதியாய் அமர்ந்திருந்தாலும் ,, அவர்களது மனது சுவற்றில் முட்டும்.அந்த நேரத்தில் கவிஞரின் வேதனை ஒரு தாய்மை பேரின் வலிக்கு சமம் என்றாலும் மிகை இல்லை.

கவிதையில் உணர்வும் செய்தி வெளிப்படும் "


மேற்கண்ட சிரமங்களுக்கு ஆட்பட்டும், ஒருவர்
எழுதிவிடுகிற எல்லாம் கவிதையாகிவிடாது.இது பெரிய பெரிய கவிஞர்களுக்கும் பொருந்தும். பாரதியினுடைய சொல் புதிது , பொருள் புதிது , சுவை புதிது என்கிற கவிதையினை நாம் படிக்கும் போது நமக்கு எந்த விதமான உணர்வும் ஏற்படவில்லை. ஆனால் ஒரு செய்தி கிடைக்கிறது . இதை சொல்வதானால் பாரதியின் தரம் குறைந்துவிடாது.

சிநேகமான ஒரு அணைப்பு
அன்பாக இதழ் கவ்வி நீ தரும் அசை முத்தம்
இவற்றையெல்லாம்
சிறுக சிறுக குறைத்து கொண்டாலும்
நமக்கான தருணங்களில் -- நீ
குழந்தையை போல
தூங்கி போனாலும் - அனிச்சை செயலாய்
அதையும் ரசிக்க கற்று கொண்டேன் --
ஏன் உறக்கத்தை விலை கொடுத்து


இந்த கவிதை ஒரு அறிமுக கவிஞரின் கவிதை.
( அந்த சகோதரியின் பெயர் மறந்துவிட்டது. ஏன் பள்ளி காலங்களில் படித்த கவிதை ) இதில் சிறப்பான எதுகை மோனை எதுவும் இல்லை. ஆனாலும் இதை வசிக்கும் போது நமக்குள்ளும் ஒரு விதமான பிரிவு சோகம் ஏற்ப்பட்டுவிடுகிறது. ஆக கவிதை என்பது
யார் எழுதினாலும் ...
செய்தியை வெளிப்படுத்தினால் --வெற்றி பெறாது
உணர்வுகளை தந்தாள் -- வெற்றி பெறும்.

கவிதையின் அர்த்தப்புரிதல் :


என கவிதைக்கு
என்ன அர்த்தம் என்று கேட்கிறார்கள்;
கவிதையாய் இருப்பதுதான் அதற்க்கு அர்த்தம் .
சூரியனுக்கு அர்த்தம் என்ன ? அது
சூரியனாய் இருப்பது தானே
::::
இது ஈரோடு தமிழன்பனின் ஒரு கவிதை.
பொதுவாய் கவிஞர்களிடம் ,, கவிதைக்கு அர்த்தம் என்ன என்று கேட்பது தவறு. ஆனாலும் நான் செய்தாலி , ரமேஷ் நாகா, வித்யாசன் போன்றவர்களிடம் இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன என்று கேட்பதுண்டு. அப்போது அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எனக்கு தெரியாது ,, ஆனால் நான் ஏன் கேட்பேன் தெரியுமா ?

என்னுடைய பார்வை .. கவிஞரின் பார்வையோடு
ஒத்து போகிறதா என்பதை அறிந்து கொள்வதர்க்காகத்தன் இந்த விசப்பரிட்சையில் ஈடுபடுவதுண்டு.

மேலும்

நாம் பட்டம் பூச்சிகளுடன்
பேச வேண்டுமானால் ...
நம்மிடம் சில நல்ல நிறங்களாவது
இருக்க வேண்டும் ...

அதாவது ஒரு கவிதையினை புரிந்து கொள்ள
வேண்டுமானால் நம்மிடம் கொஞ்சம் கவித்தன்மை இருக்க வேண்டும். என்று தமிழன்பன் கூறுகிறார். ஆனால் கவித்தன்மை இருப்பவர்கள் தான் கவிதயை விரும்புவர்கள் என்பது ஏன் கருத்து.

கவிதைக்கு விமர்சனம் தேவையா ?

பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையிலேயே மணம் உண்டு :
ஒத்துகொண்டன் நக்கீரன் :
ஞானபீட பரிசை சிவன் எடுத்து கொண்டு
சாகித்திய அகாதமி பரிசை
நக்கீரனுக்கு ஏற்பாடு செய்துவிட்டான் :

இந்த இடத்தில் ஈரோடு தமிழன்பன் என்ன
கூறுகிறார் என்றால் .. சரியான கவிதையை இனம் கண்டு பாராட்ட வேண்டும் என்கிறார். எழுதுகிற அல்லவற்றையும் படித்துவிட்டு
ஆகா
உங்கள் கவிதையில் தமிழ் அருமை
ஓஹோ
உங்கள் கவிதை தமிழுக்கே பெருமை ;;;;;...............என்று

எல்லாவற்றையும் பாராட்டக்கூடாது என்று
நானும் கூறுகிறேன். சில தகுதியில்லாத கவிதைகளை பாராட்டினால் கவிஞரின் வளர்ச்சி பாதிக்கப்படும். உண்மையை சொல்ல வேண்டும். அதே சமயத்தில் கவிஞரை ஊக்கபடுத்தும் விதமாகவும் கூற வேண்டும். விமர்சனம் என்றால் நிறை குறை இரண்டும் இருக்க வேண்டும். கனியில்லாத மரங்களில் பறவைகள் இருப்பதில்லை. கவிதை மரம் என்றால் விமர்சனம் கனி என்பதை உணர வேண்டும்.

விமர்சனத்தின் அடிப்படை :

கவிஞர் ந, காமராசு .. கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளை
குறை கூறுவார்.
மலர்களை போல் தங்கை உறங்குகிறாள் என்கிற வரியை கூட குறை சொல்லியிருப்பார். மேலை நாட்டில் கீட்ஸ் என்பவர் தூங்கிகிற தான் காதலியின் கண்களை பார்த்து
மலர்கள் அரும்பாகிறது என்று எழுதியிருப்பர். அதுதான் உண்மை. கண்ணதாசனின் கவிதை சரியில்லை என்பார்.இந்த விமர்சனத்திற்கு கண்ணதாசன் பதில் கூறவில்லை.

அதே கண்ணதாசனிடம் ... ஒரு கல்லூரி மாணவர்
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ என்று எழுதியிருக்கிறீர்களே இது சரியா என்றாராம் . அதற்க்கு கண்ணதாசன் தவறு தான் மன்னித்துவிடுங்கள் என்றாராம். ஆனால் அவர் நினைத்திருந்தால் /... இல்லை தங்கம் தரமே இருந்தாலும் .. சற்று மச்சம் குறைந்திருந்தாலும் மக்கள் அதை விரும்பத்தான் செய்கிறார்கள் ,,, என்று ஏதோ ஒரு பதிலை சொல்லியிருக்கலாம் ஆனால் அவர் அபப்டி சொல்லவில்லை . ஏன் தெரியுமா ?

புலமை காய்ச்சலால் எழுகிற விமர்சனத்திற்கும்
,, ரசிப்பு தன்மையால்@ அக்கறையினால் எழுகிற விமர்ச்சனத்திற்க்கும் இடையே உள்ள வேறுபாட்டினை அறியும் திறமை கண்ணதாசனுக்கு இருந்தது. ஆகவே பணிந்தார் உயர்ந்தார்.

முடிவுரை :


அன்புள்ள கவிஞர்களே விமர்சனத்தை ஏற்று
கொள்ளுங்கள் . வளர்வீர்கள். அதே சமயத்தில் விமர்சனதிர்ககவும் , வேறு எதற்காகவும் உங்கள் முயற்சியை கைவிட்டுவிடாதீர்கள்.





ஏதோ தோன்றியது எழுதினேன். இது சரியா ? தவறா ? பதில் கடிதம் எழுதுங்கள் ! நன்றி !



[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 16, 2011 3:47 pm

[You must be registered and logged in to see this image.]
கவிஞர்களே இதற்கு பதில் போடுங்கள்




[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 16, 2011 3:49 pm

ஓ அப்படியா அவ்ளோதானா பெருமாளு தூக்கம்



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 16, 2011 4:00 pm

அய்யம்பெருமாளின் கருத்தை மறுப்பதற்கில்லை.
என்றாலும்...பாராட்டுவதில் கஞ்சத்தனம் வேண்டாம் என்பதுதான் என் கருத்து. குழந்தைகளைக் கொஞ்சுவதில்
கஞ்சத்தனம் எதற்கு?...எழுதுவது கைவர, கைவர..
மிகச்சிறந்த படைப்புக்களை அவர்கள் தருவார்கள்.
அவர்களின் ஆரம்பக்கட்டங்களிலேயே..அவர்களைப் பௌதிகத் தராசில் நிறுத்தால்...அவர்கள் எழுத பயந்து பின்வாங்கிவிடுவார்கள் என்பது என்னுடைய கருத்து.

என்னுடைய இந்தக் கருத்துக்கு எதிர்வினை இருக்குமென்று அறிவேன்! வரவேற்கிறேன்.





[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 16, 2011 4:07 pm

rameshnaga wrote:அய்யம்பெருமாளின் கருத்தை மறுப்பதற்கில்லை.என்றாலும்...பாராட்டுவதில் கஞ்சத்தனம் வேண்டாம் என்பதுதான் என் கருத்து. குழந்தைகளைக் கொஞ்சுவதில் கஞ்சத்தனம் எதற்கு?...எழுதுவது கைவர, கைவர..
மிகச்சிறந்த படைப்புக்களை அவர்கள் தருவார்கள்.

அவர்களின் ஆரம்பக்கட்டங்களிலேயே..அவர்களைப் பௌதிகத் தராசில் நிறுத்தால்...அவர்கள் எழுத பயந்து பின்வாங்கிவிடுவார்கள் என்பது என்னுடைய கருத்து.
என்னுடைய இந்தக் கருத்துக்கு எதிர்வினை இருக்குமென்று அறிவேன்! வரவேற்கிறேன்.


உண்மை ரமேஷ் நாகா !!

ஆனால் நம் ஈகரையில் கவிஞர்களாக அறியப்பட்டவர்கள் எல்லாம் ஆரம்ப நிலை கவிஞர்கள் இல்லை என்பது என் கருத்து. எல்லோரும் கரை கண்டவர்கள் ஆகத்தான் இருக்கிறார்கள்.

மற்றபடி உங்கள் கருத்தில் எந்த முரண்படும் இல்லை. பாராட்டுதலை பற்றி நான் எழுத மறந்து விட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நன்றி ரமேஷ் நாகா !!




[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 16, 2011 4:12 pm

Manik wrote:ஓ அப்படியா அவ்ளோதானா பெருமாளு தூக்கம்


சூப்பருங்க கவிஞர்களே இதற்கு பதில் போடுங்கள்



நன்றி !! மாணிக்

நன்றி !! ரேவதி



[You must be registered and logged in to see this image.]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 16, 2011 4:20 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
rameshnaga wrote:அய்யம்பெருமாளின் கருத்தை மறுப்பதற்கில்லை.என்றாலும்...பாராட்டுவதில் கஞ்சத்தனம் வேண்டாம் என்பதுதான் என் கருத்து. குழந்தைகளைக் கொஞ்சுவதில் கஞ்சத்தனம் எதற்கு?...எழுதுவது கைவர, கைவர..
மிகச்சிறந்த படைப்புக்களை அவர்கள் தருவார்கள்.

அவர்களின் ஆரம்பக்கட்டங்களிலேயே..அவர்களைப் பௌதிகத் தராசில் நிறுத்தால்...அவர்கள் எழுத பயந்து பின்வாங்கிவிடுவார்கள் என்பது என்னுடைய கருத்து.
என்னுடைய இந்தக் கருத்துக்கு எதிர்வினை இருக்குமென்று அறிவேன்! வரவேற்கிறேன்.


உண்மை ரமேஷ் நாகா !!

ஆனால் நம் ஈகரையில் கவிஞர்களாக அறியப்பட்டவர்கள் எல்லாம் ஆரம்ப நிலை கவிஞர்கள் இல்லை என்பது என் கருத்து. எல்லோரும் கரை கண்டவர்கள் ஆகத்தான் இருக்கிறார்கள்.

மற்றபடி உங்கள் கருத்தில் எந்த முரண்படும் இல்லை. பாராட்டுதலை பற்றி நான் எழுத மறந்து விட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நன்றி ரமேஷ் நாகா !!
ஏற்கெனவே...அறியப்பட்ட மாதிரி நீங்கள் மிகச் சிறந்த கருத்துக்களையும்..விமர்சனங்களையும் முன்னெடுத்து வருபவர்...அய்யம்பெருமாள். நீங்கள் அளித்த பின்னூட்டத்தில்..
மன்னிப்பெல்லாம் தேவையில்லை. அது நமக்குள்..இடைவெளியை உருவாக்குவது போல் உணர்கிறேன்.
மற்றபடி..தளத்தின் மிகச் சிறந்த செயல்பாட்டிற்கும்..
மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் நீங்கள் உருவாகி வருகிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. உங்களுடைய சிறந்த சிந்தனைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.





[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 16, 2011 4:31 pm

rameshnaga wrote:
ஏற்கெனவே...அறியப்பட்ட மாதிரி நீங்கள் மிகச் சிறந்த கருத்துக்களையும்..விமர்சனங்களையும் முன்னெடுத்து வருபவர்...அய்யம்பெருமாள். நீங்கள் அளித்த பின்னூட்டத்தில்..
மன்னிப்பெல்லாம் தேவையில்லை. அது நமக்குள்..இடைவெளியை உருவாக்குவது போல் உணர்கிறேன்.


மற்றபடி..தளத்தின் மிகச் சிறந்த செயல்பாட்டிற்கும்..
மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் நீங்கள் உருவாகி வருகிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. உங்களுடைய சிறந்த சிந்தனைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

தாங்கள் கூறியதில் நான் மிகவும் மகிழ்ந்தேன். ஆனாலும் நான் அப்படித்தான் இருக்கிறேனா ? செயல் படுகிறேனா என்பதில் எனக்கு ஐயம் உண்டு.தங்களின் கூற்றை மெய்ப்பிக்க என்னால் ஆன வரை முயற்ச்சிக்கிறேன். நன்றி ரமேஷ் நாகா !!

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 16, 2011 4:52 pm

விமர்சிக்கப் படுகிறவன் விண்ணை நோக்கி செல்வான்.அந்த விமர்சனத்தை அவன் சரியான திசையில் இட்டுச்சென்றால். ஆக ஒரு கவிஞன் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் அவன் கவிதையை விமர்சனத்திற்கு உள்ளாக்கினால் மட்டுமே அது முடியும்....வெற்று வார்த்தையும் நீங்கள் கூறியபடி ஆகா ஓகோ என்ற பாராட்டும் பயன் படுமா ஒரு கவிஞனை உயர்வுக்கு கொண்டு செல்லுமா என்றால் சந்தேகம் தான்......ஆனால் இந்த வார்த்தைகள் அவனை அதே வட்டத்தில் இறங்காமலும் ஏறாமலும் கொண்டு செல்ல உதவும்.....என்பது என் கருத்து......

மொத்தில் உங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அய்யம் பெருமாள்.......கவிஞர்கள் என்று போட்டிருக்கிறீர்கள்....ஒரு சந்தேகம் நான் கவிஞனா?????



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 16, 2011 5:00 pm

பிஜிராமன் wrote:விமர்சிக்கப் படுகிறவன் விண்ணை நோக்கி செல்வான்.அந்த விமர்சனத்தை அவன் சரியான திசையில் இட்டுச்சென்றால். ஆக ஒரு கவிஞன் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் அவன் கவிதையை விமர்சனத்திற்கு உள்ளாக்கினால் மட்டுமே அது முடியும்....வெற்று வார்த்தையும் நீங்கள் கூறியபடி ஆகா ஓகோ என்ற பாராட்டும் பயன் படுமா ஒரு கவிஞனை உயர்வுக்கு கொண்டு செல்லுமா என்றால் சந்தேகம் தான்......ஆனால் இந்த வார்த்தைகள் அவனை அதே வட்டத்தில் இறங்காமலும் ஏறாமலும் கொண்டு செல்ல உதவும்.....என்பது என் கருத்து......

மொத்தில் உங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அய்யம் பெருமாள்.......கவிஞர்கள் என்று போட்டிருக்கிறீர்கள்....ஒரு சந்தேகம் நான் கவிஞனா?????


வணக்கம் பிஜி ராமன் !!


நீங்கள் கவிஞர் இல்லை என்றால் ,, வேறு யார்தான் கவிஞர்? ஈகரையில் நான் தொட பயப்படுகிற அர்த்த செறிவு உள்ள கவிதைகளில் உங்களுடையதும் ஒன்று .

விமர்சனத்திற்க்கு நல்ல விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி !!
மீண்டும் சந்திப்போம் !! விமர்சனங்களோடு !!



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக