புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம், உயிர்தெழுதல், நரகம்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 3:32 am

First topic message reminder :



ஹாருன் யஹ்யா


அறிமுகம்

மரணம்… அது எந்த நேரத்திலும் ஏற்படலாம். யாருக்கு தெரியும். நீங்கள் இந்த கட்டுரையை வாசித்து கொண்டு இருக்கும் இந்த வேளையிலும் ஏற்படலாம். அல்லது நீங்கள் எதிர் பார்க்கும் நேரத்திற்கு முன்பாகவும் ஏற்படலாம்.

இந்த வரிகள் - உங்களை மரணம் சுவைப்பதற்கு முன்பான கடைசி சந்தர்பமாகவோ அல்லது கடைசி நினைவூட்டலாகவோ அல்லது கடைசி எச்சரிக்கையாகவோ இருக்கலாம். நீங்கள் இந்த வரிகளை வாசிக்கும் போது அடுத்த மணித்தியாளத்தில் நீங்கள் உயிருடன் இருப்பீர்களா என்று உங்களுக்கு தெரியாது. அவ்வாறு நீங்கள் உயிருடன் இருந்தாலும் உங்களுக்கு இன்னொரு மணித்தியாளத்தை உத்தரவாதம் அளிக்க யாராலும் முடியாது. உங்கள் வாழ்கையை ஒரு மணித்தியாளத்தை கொண்டோ அல்லது ஒரு மணித்துளியை கொண்டோ உத்தரவாதம் அளிக்க முடியாது. நீங்கள் இந்த புத்தகத்தை முழுமையாக படித்து முடிப்பீர்களா என்று உங்களுக்கு தெரியாது. மரணம் அது எந்த நேரத்திலும் உங்களை வந்தடையும். அது நீங்கள் மரணத்தை பற்றி சிந்திப்பதற்கு சில துளிகளுக்கு முன்பாக வந்தடையும்.

நீங்கள் மரணமடைவது உறுதி. நீங்கள் நேசிப்பவர்களும் மரணத்தை சுவைத்தே தீர்வார்கள். நீங்கள் அவர்களுக்கு முன்பு அல்லது அவர்கள் உங்களுக்கு முன்பாகவோ மரணிப்பார்கள். இன்றிலிருந்து 100 ஆண்டுகளுக்கு பின்பு உங்களுக்கு தெரிந்த ஒரு ஆத்மாவும் இந்த உலகில் இருக்காது..

மனிதனின் எண்ணத்தை எல்லையில்லா கனவுகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பாடசாலை கல்வியை முடித்து – கல்லூரி – பட்டம் – நல்ல தொழில் - திருமணம் - பிள்ளைகள் - நிம்மதியான வாழ்கை. ……இவைதான் மனிதனின் விரிந்த சாதாரண ஆசைகளாக உள்ளது. இவை தவிர மனிதனின் சந்தர்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப இன்னும் ஆயிரக்கணக்கான ஆசைகள் மனிதனில் விரிந்து காணப்படுகின்றன.

மனித வாழ்வில் நடைபெறும் சில உறுதியான நிகழ்வுகளில் மரணமும் ஒன்று. இது 100 வீதம் உறுதி. பல வருட விடா முயற்சியின் காரணமாக கல்லூரியில் இடம் பிடித்த மாணவன் வகுப்பறைக்கு போகும் வழியில் மரணமாகிறான். தொழிலை பெற்று கொண்ட ஒருவர் முதல் நாள் வேளைக்கு போகும் வழியில் மரணமாகிறார். புது மண தம்பதியரின் வாழ்கையை சாலை விபத்து பறித்து கொள்கிறது. தனது நேரத்தை சேமிக்கும் நோக்கில் விமானத்தில் பறக்கும் வியாபாரி ஒருவர்-அந்த விமானமே அவரது வாழ்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை அறியமாட்டார்.

அத்தகைய சந்தர்பங்களில் ஆசைகள் நிறைவேறாமல் தேங்கி நிற்கின்றன. அவர்கள் அவர்களது ஆசைகளை ஒருபோதும் நிறைவேறாது என்ற நிலையில் விட்டு விட்டு - இனிமேல் ஒருபோதும் திரும்ப முடியாத ஒரு இலக்கை நோக்கி செல்கிறார்கள். அந்த இடம் அவர்கள் ஒருபோதும் நினைத்து பார்த்திடாத இடமாக இருக்கிறது. பல வருடங்கள் பல மணிநேரங்கள் செலவழித்து அவர்கள் தீட்டிய கற்பனைகள் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. ஆனால் அவர்கள் நிச்சயமாக நடக்க இருக்கும் ஒன்றை சிந்திக்க மறந்து விட்டார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் சிந்திக்கும் மனசாட்சியுள்ள மனிதன் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்? உறுதியாக நடக்க இருக்கும் ஒன்றுக்கா அல்லது சில வேளை நடக்ககூடும் என்ற ஒன்றுக்கா? ஆனாலும் பெரும்பான்மை மக்கள் உறுதியாக நடக்கும் என்று கூறமுடியாத ஒன்றுக்கே முன்னுரிமை வழங்குவதை நாம் பார்க்கிறோம். அவர்கள் வாழ்வின் எந்த நிலையில் இருந்த போதிலும் அதை விட சிறந்த வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடினமாக சிந்திக்கிறார்கள்.

மனிதன் சாகா வரம் பெற்றவனாக இருந்தால் அவனது ஆசைகளை நியாயப்படுத்தலாம். உண்மை என்னவென்றால் ஆசைகள் அனைத்திற்கும் மரணம் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. ஆகவே நடக்கவோ அல்லது நடக்காமல் போகக்கூடிய ஆசைகளுக்காக எமது முழு கவனத்தையும் செலுத்தி உறுதியாக நடக்ககூடிய மரணத்தை பற்றி சிந்திக்காமல் விடுவது மிகப்பெரும் மடமையாகும்.

இதற்கு காரணம் மனிதன் அவனது மனதை அடக்க முடியாத ஆசைகளை கொண்டு அடிமை படுத்தி இருப்பதால் இந்த தெளிவான உண்மையை கவனிக்காமல் விட்டுவிடுகிறான்.

இவ்வாறான சூழ்நிலையில் அவர்கள் தங்களது உண்மையான வாழ்கை மரணத்தின் பிறகு தொடங்குகிறது என்ற உண்மையை விளங்கி கொள்வதில்லை. அதற்காக தங்களை தயார் படுத்திக்கொள்வதுமில்லை. அதனால் அவர்கள் மீண்டும் உயிர்பெற்று எழுந்ததும் நரகத்தை தவிர வேறு எங்கும் செல்வதுமில்லை. அது அவர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட இடமாகும். இந்த புத்தகம் எழுதப்பட்ட நோக்கம் - மனிதன் சிந்திக்க மறுக்கும் ஒன்றை சிந்திக்க வைக்கவும் - நிச்சயமாக சத்தியமாக நடக்க இருக்கும் ஒன்றை பற்றி எச்சரிப்பதற்குமாகும். அதை சிந்திக்க மறுப்பது எந்த வகையிலும் தீர்வாக அமையாது.



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 4:05 am

இந்த உலகின் தற்காலிக வாழ்கை

மனிதன் அவனது உடலை எந்நேரமும் சுத்தமாக வைத்து கொள்ள அதிக நேரங்களை செலவிடுவது ஏன் என்று நீங்கள் எப்போதவது சிந்தித்து பார்ததுண்டா? அசுத்தமான உடல், துர்வாடை வீசக்கூடிய வாய், பிசுபிசுப்பான சருமம் அல்லது முடி போன்ற நிலைகள் ஏற்படுவது ஏன்? மனிதனின் உடலிலிருந்து நாற்றம் ஏற்படுவது ஏன்?

மனிதனை போலல்லாது தாவரங்கள் மிகவும் சிறப்பான நறுமணத்தை கொண்டுள்ளது. ரோஐ அல்லது வேறு எந்த பூவோ அவை மண்ணில் வளர்ந்து தூசியான அசுத்தமான சூழ்நிலையில் இருந்த போதிலும் அவை துர்வாடை வீசுவதில்லை. மனிதன் எவ்வளவு கஷ்டப்பட்டு அவனது உடலை பராமரித்தாலும் அவனால் நிரந்தர நறுமணத்தை பெற்று கொள்ளவே முடிவதில்லை.

மனிதன் ஏன் இவ்வளவு பலவீனங்களை உடையவனாக படைக்கப்பட்டுள்ளான் என்பதை பற்றி சிந்தித்து பார்ததுண்டா? பூக்களில் நறுமணம் வீச செய்த இறைவன் மனிதனில் உடலை ஏன் நாற்றம் வரக்கூடியதாக படைத்தான்?

மனிதனின் பலவீனம் நாற்றத்தோடு மட்டும் வரையறுக்கப்படவில்லை. மாறாக அவனுக்கு சோர்வடைந்து பசிக்கிறதுஇ தளர்வடைகிறான்இ காயமடைகிறான்இ நோய் ஏற்படுகின்றன….

இவை அனைத்தையும் சேர்ந்து சாதாரண மனிதன் உண்டாக்கிய போதிலும் அவற்றில் ஏமாற்றக்கூடியவைகளும் இருக்கின்றன. சிவ நேரம் உடலிலிருந்து துர்வாடை வீசாமலிருக்கலாம். அதை போன்று ஒருவர் தலை வலி அல்லது வேறு எந்த நோயாலும் பாதிக்க படாமலிருக்கலாம். இந்த பலவீனங்கள் தற்செயலமாக ஏற்படுவது இல்லை மாறாக இறைவனால் ஏற்படுத்தப்படுகின்றன. இறைவன் மனிதனை ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்காக வேண்டுமென்றே அவனை பலவீனமானவனாக படைத்துள்ளான்.



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 4:05 am

அந்த திட்டம் இரண்டு காரணங்களை உள்ளடக்கியுள்ளது : முதலாவது மனிதன் அவன் பலவீனமான இறைவனின் அடிமை என்பதை உணரவேண்டும். எவ்வித பலவீனமும் இல்லாமல் இருப்பது இறைவனின் தன்மை. அவனது அடிமைகள் முற்றுமுழுதாக பலவீனமானவர்கள் அவர்கள் அவர்களது படைப்பாளனின் பால் தேவையுள்ளவர்களாக இருக்கிறார்கள். இதை குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள் ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன் புகழுக்குரியவன். அவன் நாடினால், உங்களைப் போக்கிவிட்டு, (வேறொரு) புதியபடைப்பைக் கொண்டு வருவான். இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல. (ஸ_றா அல்பாதிர் : 15-17)

பலவீனமான மனித உடல் அவன் பலவீனமானவன் என்பதை மனிதனுக்கு தொடர்ச்சியாக நினைவூட்டுகிறது.

மனிதன் தன்னை மேலானவனாகவும் தன்நிறைவானவனாகவும் நினைக்ககூடும். ஆனாலும் ஒவ்வொரு நாளும் அவன் செல்லும் கழிவறை மற்றும் அங்கு அவன் காண்பவை அவனது உண்மையான நிலையை அவனுக்கு தெரியப்படுத்தும்.

இரண்டாவது நோக்கம் இத்தகைய பலவீனங்கள் மனிதனின் வாழ்வு தற்காலிகமானது என்பதை நினைவூட்டுகிறது. காரணம் இந்த உலகில் இத்தகைய பலவீனங்கள் உடலுக்கு விசித்திரமானதாக இருக்கும்.

மறுமையில் சுவர்க்கவாசிகளுக்கு முழுமையான உடல் கொடுக்கப்படும். இந்த உலகிலுள்ள நிறைவற்ற பலவீனமான உடலானது நம்பிக்கையாளனின் உண்மையான உடலல்ல மாறாக குறிப்பிட்ட காலத்திற்கு தங்கியுள்ள தற்காலிகமான உருவமாகும். அதனால் தான் இந்த உலகில் உண்மையான அழகை பெறமுடியாதுள்ளது. மிகவும் வசீகரமான அழகான ஒருவன் கழிவறைக்கு செல்கிறான் அவனுக்கு வியர்கிறது காலையில் துர்வாடை வீசுகிறது பிறகு வலியால் அவதிபடுகிறான். ஒருவன் தன்னை சுத்தமாக வைத்துகொள்ள முடிவில்லாத அன்றாட விடயங்களில் ஈடுபட வேண்டியுள்ளது. வசீகரமான முகத்தை கொண்ட சிலருக்கு உடல் அமைப்பு சீராக இருக்காது.. அழகான கண்களையுடைய சிலருக்கு மூக்கு பெரிதாக இருக்கும். இதை போன்று எண்ணிலடங்காத உதாரணங்களை கூறலாம். எல்லாம் சிறப்பாக உள்ள ஒருவன் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருப்பான்.

இவற்றுக்கு மேலாக, எல்லாம் சிறப்பாக அமைந்த ஒருவன் நிச்சயமாக வயோதிபத்தை அடைந்து மரணிப்பான். எதிர்பாராத சாலை விபத்தில் மறுசீரமைக்க முடியாத அளவிற்கு உடல் காயமடையலாம். இந்த உலகில் மனித உடல் மாத்திரம் நிலையில்லாத தற்காலிகமானது என்று கூறமுடியாது. அனைத்து பூக்களும் வாடுகின்றன.

மிகவும் சுவையான உணவு அழுகி பயனற்று போகிறது. இவை அனைத்தும் இவ்வுலகின் அசாதாரணமானவை.



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 4:05 am

இவ்வுலகில் எமக்கு மற்றும் இந்த உடலுக்கும் கொடுக்ப்பட்ட குறுகிய வாழ்கை இறைவனின் தற்காலிக அருளாகும். நிரந்தர வாழ்வும் நிறைவான படைப்பும் மறுமையில் தான் சாத்தியமாகும். இதை குர்ஆன் கூறும் போது:

உங்களிடம் தரப்பட்டிருக்கும் எப்பொருளும், (நிலையற்ற) இவ்வுலக வாழ்கையின் (அற்ப) சுகங்களே. இறைநம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடம் (தங்கள் காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கை கொள்வோருக்கு இறைவனிடத்தில் இருப்பது மிக்க மேலானதும் நிலையானதுமாகும். (ஸ_றா அஷ்-ஷ_றா: 36)

மற்றொரு வசனத்தில் இவ்வுலகின் உண்மை நிலையை விளக்குகிறது :

அறிந்து கொள்ளுங்கள்: 'நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும் மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும் பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும் (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும் (அதாவதுபுன்னகை அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர் பின்னர் அது கூளமாகி விடுகிறது (உலக வாழ்வும் இத்தகையதே எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (ஸ_றா அல்-ஹதீத் : 20)

சுருங்க கூறுவதாயின் இவ்வுலகில் இறைவன் அவனது எல்லையற்ற சக்திக்கும் அறிவிற்கும் அத்தாட்சியாக பல அழகான வியக்கத்தக்கவைகளையும் குறையுள்ளவகளையும் படைத்துள்ளான். நிரந்தரம் மற்றும் மேன்மை ஆகியவை இவ்வுலக நியதிக்கு எதிரானது. மனிதன் எவ்வளவு சிந்தனை செய்தாலும் அவனது நவீன தொழிநுட்பத்தை உபயோகித்தாலும் இறைவனின் நியதிகளை மாற்ற முடியாது. இதனால் தான் மக்கள் மறுமையை அடைந்து இறைவனுக்கு முறையான நன்றியையும் மரியாதையையும் செலுத்த முற்படுவர். மேலும் மக்கள் இவ்வுலகத்தில் நற்பேறுகளை அடையமுடியாது என்பதை உணர்ந்து அதற்கான நிரந்தர இடம் நம்பிக்கையாளர்களுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளது என்பதை உணரவேண்டும். இதை குர்ஆன் இவ்வாறு விளக்குகிறது :

எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும் என்றும் நிலைத்திருப்பதும் ஆகும். (ஸ_றா அல்- ஆஃலா : 16-17)

இன்னொறு வசனத்தில் “இன்னும், இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை - இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும் - இவர்கள் (இதை) அறிந்திருந்தால். “ (ஸ_றா அன் கபூத் : 64) தற்காலிக புகலிடமான இந்த உலகத்திற்கும் நிரந்தர வாழ்வான மறுமைக்கும் இடையே சிறிய இடைவெளியே இருக்கிறது. மரணம் எனும் கருவியை கொண்டு இந்த திரை நீக்கப்படுகிறது. மனிதன் மரணத்தோடு அவனது உடல் மற்றும் இந்த உலகத்தோடுள்ள அனைத்து பந்த பிணைப்புகளையும் துண்டித்து அவனுக்கு படைக்கப்பட்ட புது உடலுடன் அவனது நிரந்தர வாழ்வை ஆரம்பிப்பான்.

மரணத்தின் பின் உண்மையான வாழ்கை ஆரம்பமாவதால் உண்மையான இயற்கையின் சட்டங்களும் அவ்வாறே மறுமைக்கு ஏற்றவாறு அமையும். இவ்வுலகிலுள்ள சட்டங்கள் அனைத்தும் குறையுள்ள நிறைவற்ற நிரந்தரமற்றவைகள் இருப்பினும் அவை உண்மையல்ல அவை மாறக்கூடியவை. உண்மையான சட்டங்கள் எல்லையற்ற தன்னிகரற்ற மரணமடையாதவைகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்படும். வேறுவகையில் கூறுவதானால் சாதாரணமானது என்னவென்றால் வாடாத பூக்கள்இ வயோதிபத்தை அடையாத மனிதன், அழுகாத பழங்கள். உண்மையான சட்டங்கள் மனிதனின் ஒவ்வொரு ஆசைகளும் உடனே பூர்தியாக வேண்டும். அவனுக்கு நோய்கள் வரக்கூடாது. மேலும் குளிரையோ அல்லது வியர்வையையோ உணரவும் கூடாது.



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 4:06 am

தற்காலிக சட்டங்கள் இந்த தற்காலிக உலகில் நடைமுறையில் உள்ளன ஆனால் உண்மையான சட்டங்கள் மறுமை வாழ்கையில் வரும். இவ்வுலகில் காணப்படும் அனைத்து குறையுள்ள நிறைவற்றவைகளும் வேண்டுமென்றே மாசுப்படுத்தப்பட்ட உண்மையான சட்டங்களாகும்.

உண்மையான சட்டங்களை கொண்டுள்ள மறுமை நினைப்பதை போன்று மிக தொலைவிலில்லை. இறைவன் அவன் நாடும் எந்த வேளையிலும் மனிதனின் வாழ்வை முடித்து அவனை மறுமைக்கு அனுப்புவான். இந்த நிலை மாற்றம் கண் சிமிட்டும் எடுத்து கொள்ளும் மிக குறுகிய காலத்தில் நடைபெறும். இது ஒருவர் கனவிலிருந்து எழும்புவதற்கு ஒப்பிடலாம்.

ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்?" என்று கேட்பான். 'ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக!" என்று அவர்கள் கூறுவார்கள். 'ஒரு சொற்ப காலம் தவிர (பூமியில் அதிகம்) நீங்கள் தங்கவில்லை. நீங்கள் (இதை) அறிந்திருந்தால்!" என்று (இறைவன்) கூறுவான். 'நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?" (என்றும் இறைவன் கேட்பான்.) (ஸ_றா அல் மூஃமின்: 112-115)

மரணம் வரும் வேனைஇ கனவுகள் முடிவிற்கு வந்து மனிதன் அவனது உண்மையான வாழ்வை ஆரம்பிக்கிறான். இந்த உலகில் கண்சிமிட்டும் நேரம் இருந்த மனிதன் இறைவனுக்கு முன் உலகில் அவன் செய்தவைகளுக்கான கணக்குகளை காட்ட வருவான். அவன் வாழ்நாள் முழுவதும் மரணத்தை மனதில் வைத்து இறைவனின் அருளை நாடியவனாக வாழ்ந்திருந்தால் அவன் காப்பாற்றப்படுவான். குர்ஆன் இவர்களை வலக்கரத்தில் பட்டோலை கொடுக்கப்பட்டவர்கள் என்று அழைக்கிறது. ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), 'இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்" எனக் கூறுவார். 'நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்." (ஸ_றா அல்-ஹாக்கா :19-20)



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 4:06 am


மரணத்திலிருந்து பாடம் படிக்க தவறியவர்களின் நிலை


பெரும்பாலனவர்களிடம் மரணத்தைபற்றி சரியான சிந்தனை இல்லை. “ வாழ்வின் முடிவு மரணம்” என்பது அதில் ஒன்று. ஒருபடி முன் சென்றால் மரணம் என்பது அடுத்த வாழ்வின் ஆரம்பம் என்பதை புரிந்து கொள்வான். இந்த மறைமுகமான தோற்றமானது ஏக இறைவனை மறுப்பவர்களை குறுகிய காலத்திற்குள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தூண்டுகிறது. அதனால் தான் மறுமை பற்றி உண்மைகளை உணராதவர்கள் இவ்வுலக வாழ்நாளிலேயே அனைத்தையும் அனுபவித்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து அறியாமல் அவர்களுடைய அனைத்து ரசனைகளையும் ருசித்து விட வேண்டும் என்று துடிக்கிறார்கள். இவர்கள் இவ்வாறு நடந்மு கொள்ள காரணம் மரணத்தோடு இவ்வுலகின் அனைத்து சுகங்களும் முடிந்து விடும் என்ற சிந்தனையே.. அவர்களுக்கு இன்னும் பல காலம் உயிருடன் இருப்பார்கள் என்ற சிந்தனையின் காரணமாக நீண்ட கால திட்டங்களை தீட்டுகிறார்கள். அவர்கள் தங்களை அறிவாளிகளாக நினைப்பதோடு இறைவனையும் மறுமையையும் உறுதியாக நம்பி அதற்காக தங்களை தயார்படுத்துகின்ற நம்பிக்கையாளர்களை முட்டாள்கள் என்று கருதுகிறார்கள். இது சாத்தானால் மனிதனை ஏமாற்ற கையாளும் பழமையான முறையாகும். இந்த பழமையான முறையை எச்சரிக்கும் விதமாக இறைவன் இவ்வாறு கூறுகிறான்.

நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான். (ஸ_றா முஹம்மது : 25)

ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான் அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான் மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. (ஸ_றா அன் நிசா: 120)

வாழ்கை நிரந்தரமானது என்று அதிஷ்டம் இவ்வுலகில் இருக்குமானால் ஏக இறைவனை மறுப்பவர்கள் வாழ்வை போட்டியாகவே கருதுவார்கள். அவர்களது வாழ்கை முழுவதும் குழந்தைகளிலும், உடமைகளிலும் பெருமை அடைவார்கள். இந்த பெருமை அவர்களுக்கு போலி கௌரவத்தை கொடுப்பதால் மறுமைனய சிந்தனை விட்டும் அவர்கள் முழுமையாக விலகி சென்று விட்டார்கள். அவர்களின் பெரும் தவறின் காரணமாக அவர்களின் கடைசி இலக்கு எவ்வாறு அமையும் என்று குர்ஆன் விளக்குகிறது.

அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்? அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல அவர்கள் (இதை) உணர்வதில்லை. (ஸ_றா அல்-மூஃமின் : 55-56.)

அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்கள் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம் அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான். (ஸ_றா அத்-தவ்பா: 55)



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 4:07 am

இறைவன் மனிதனுக்கு மரணத்தையும் மறுமையையும் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதற்காகNவு பல எச்சரிக்கைகளையும் இறைசெய்திகளையும் கொடுக்கிறான். இன்னொரு வசனத்தில் இறைவன் மனிதனுக்கு சோதனைகள் எச்சரிக்கையாகவே கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறான் ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்" என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா செய்து மீள்வதுமில்லை(அது பற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை. (ஸ_றா அத்-தவ்பா : 126)

உண்மையாகவே மக்களில் பெரும்பான்மையானவர்கள் பல சோதனைகளை சந்திக்கிறார்கள். அதனால் அவர்கள் அடிக்கடி பாவ மன்னிப்பு கேட்டு நல்லுணர்ச்சி பெறுகின்றனர். இந்த செயல் நடப்பது அரிது அதாவது வருடத்தில் ஒருமுறையோ அல்லது இருமுறையோ நடக்கும். இதற்கு மாற்றமாக சிறியதாக அன்றாடம் நடைபெறுகின்ற தொல்லைகளாகவும் இருக்கலாம். மனிதன் மரணங்களையும், காயங்களையும், விபத்துகளையும் தினமும் சந்திக்கிறான். பத்திரிக்கைகள் மரணசெய்திகளாலும் மரண அறிவித்தல்களாலும் நிறைந்து காணப்படுகின்றன. இத்தகைய நிகழ்வுகளோடு இயற்கை அழிவுகள் எந்நேரமும் வந்து மனிதனது பரீட்சை நேரத்தை முடித்துவிடும் என்று நினைக்க வேண்டும். இத்தகைய விழிப்புணர்வு ஒருவனை இறைவனை ஞாபகமூட்டி அவனிடத்தில் அடைக்கலம் தேடி அவனிடத்தில் பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

சோதனைகளின் மூலம் பாடம் கற்று கொள்ளும் நம்பிக்கையாளன் உறுதியடைகிறான். இருப்பினும் இதே நிகழ்வு ஏக இறைவனை மறுப்பவர்களுக்கு வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். மரண பயத்தால் திகிலடைந்து மரணத்தின் உண்மைகளை யோசிக்காமல் அதனை மறக்க முற்படுவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் பாதுகாப்பு தேடுகிறார்கள். இருப்பினும் இத்தகைய ஏமாற்றும் முறை அவர்களுக்கு கேடு விளைவிக்கும். காரணம் இறைவன் அவர்களது நேரம் வரும் வரை அவர்களை விட்டுவைக்கிறான். இந்த தவணை அவர்கள் சிந்திப்பதற்கு மாற்றமாக அவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. (ஸ_றா அன் நஹல் : 61).; குர்ஆனில் வேறொரு இடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறது.

இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம் (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.”(ஸ_றா ஆல-இம்றான்: 178)

தனது நெருங்கியவரின் மரணத்தின் மூலம் நல்லுணர்ச்சி பெறாத சிந்தனையற்ற மனிதன் அவன் மரணத்தை நெருங்கும் சந்தர்பத்தில் இறைவனிடத்தில் மிகவும் அருளை வேண்டியவனாக மாறுவான். அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான் (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)" என்று எண்ணுகிறார்கள் அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், 'நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்" என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள். (ஸ_றா யூனூஸ் : 22)

இத்தகைய மக்கள் அவர்களது சோதனைகள் நீக்கப்பட்ட பின்னர் அவர்களது பழைய நிலைக்கு மாறிவிடுகின்றனர். அவர்களுடைய வாக்குறுதிகளை மறந்து சிறிதளவேனும் மனசாட்சியின்றி போலியான நிலையில் சென்றுவிடுகின்றனர். இத்தகைய பொய்யானவைகள் நியாய தீர்ப்பு நாளில் அவர்களுக்கு எதிராக சாட்சியமளிக்கும்.



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 4:07 am

அவன் அவர்களைக் காப்பாற்றி விட்டதும் அவர்கள் பூமியின் மேல் நியாயமில்லாது அழிச்சாட்டியம் செய்கிறார்கள் மனிதர்களே! உங்கள் அழிச்சாட்டியங்கெல்லாம் உங்களுக்கே கேடாகமுடியும் உலக வாழ்க்கையில் சிறிது சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் இதன் பின்னர் நம்மிடமே நீங்கள் திரும்ப வர வேண்டியதிருக்கிறது. அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு நாம் அறிவிப்போம். (ஸ_றா யூனூஸ் : 23)

மரணத்தின் போதும் மனிதன் இதே முறையை கையாள முற்படுவான் இருப்பினும் அவனுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது.

மேலும், இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், 'எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டும் கொண்டோம் - ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாய் நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்" என்று சொல்லும்போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்). மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம் ஆனால் 'நான் நிச்சயமாக நரகத்தை - ஜின்களையும், (தீய) மனிதர்களையும் - ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்" என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது. ஆகவே, உங்களுடைய இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்திருந்ததின் (பலனை) அனுபவியுங்கள், நிச்சயமாக நாமும் எங்களை மறந்து விட்டோம் மேலும் நீங்கள் செய்த (தீ) வினையின் பயனாக என்றென்றும் நிலையான வேதனையை அனுபவியுங்கள்' (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்). (ஸ_றா அஸ் ஸஜதா : 12-14)

இந்த பயனற்ற முயற்சிகள் நரகத்திலும் தொடரும்:

இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: 'எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்" என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) 'சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார் ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள் ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை" (என்று கூறுவான்). (ஸ_றா அல்-பாதிர் : 37)

மறுமையில் இத்தகைய பயனற்ற முயற்சிகளும்அதனது வேதனையான முடிவும் ஏற்பட காரணம் பூமியில் மனிதனின் வாழ்வும் அதன் தாப்பரியங்களின் உண்மைiயாண நிலையை அவனால் புரிந்து கொள்ளாததன் விளைவாகும். நம்பிக்கை கொள்ளாதவன் அவனை சுற்றி நடப்பவைகளை கொண்டு நல்லுணர்ச்சி பெறுவதில்லை. இறைவனால் அனுப்பப்பட்ட எச்சரிக்கைகளை செவிசாய்பதில்லை. அவனது மனசாட்சி குரலை அசட்டை செய்து அல்லது அவற்றை மதிக்காமல் மரணத்தை நடக்க கூடாத ஒன்றாக பார்கிறான். அவன் அவனது ஆன்மாவின் பிழையான யோசனைகளை மதித்து கட்டுப்பட்டு .இறைவனின் திருப்தியை பெற முயல்வதில்லை. இவை அனைத்தும் மரணம் சடுதியாக வந்து அவனை பிடித்து கொள்ளும் போது மேற்கூறிய வசனங்களில் குறிப்பிட்டதை போன்று அவன் மோசமான சூழ்நிலையில் மாட்டிக்கொள்வான். ஆகவே ஒருவனுக்கு மரணம் வரு முன்னர் அவனது மறதி எனும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்து கொள்ள வேண்டும்.



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 4:07 am

ஏனென்றால் மரண நேரமானது அவனுக்கு திருந்துவதற்கான எந்த சந்தர்பத்தையும் கொடுக்காது:

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள் (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்) 'என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான். ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான். (ஸ_றா அல்-மூனாபிகூன் : 10-11 )

அறிவுடையவர்கள் மரணத்தை அதிகமாக சிந்திக்கவேண்டும். அதன் சிந்தனையை தவிர்க்க முயலகூடாது. இதன் மூலமே இறைவனது விருப்பப்படி செயல்பட முடியும். அவனது ஆன்மாவின் மோசமான பக்கத்தை போலியான வாழ்கையை கொண்டு ஷைத்தான் ஏமாற்றமால் தடுக்க முடியும.;. உண்மையில் உலக வாழ்கையை ஒருவனது முக்கிய குறிக்கோள்களாக மாற்றுவது மக்களுக்கு மிகப்பெரும் ஆபத்தாகும். இதை பற்றி எமது தூதர் கூறும்போது “ எமது உலக விடயங்கள் எமது முக்கிய குறிக்கோள்களாக மாறாமல் எம்மை காத்துகொள்ள வேண்டும் என்றார்கள். .(அப்துல்லா இப்னு உமர் அறிவிக்கிறார். நூல் திர்மிதி :783)



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 4:08 am



மரணத்திற்கு தயாராதல்


இந்த உலகம் மனிதனை தயார்படுத்தும் இடமாகும். இறைவன் மனிதனுக்கு பல கடமைகளை கொடுத்து அவன் வகுத்துள்ள எல்லைகளை அறிவித்துள்ளான். மனிதன் இந்த எல்லைகளை கடைபிடித்து அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து அவன் தடைசெய்துள்ளவற்றை விட்டும் விலகியிருந்தால் மனிதன் முதிர்ச்சி அடைவதோடு விழிப்புணர்வும் சிறந்த ஞானத்தையும் அடைந்து கொள்வான். இத்தகைய தன்மைகளை கொண்டுள்ள ஒரு நம்பிக்கையாளன் அவனை வந்தடையும் எந்த தீங்காக இருந்தாலும் மிகுந்த பொறுமையுடன் தாங்கிக்கொள்வான். அவன் இறைவனிடம் பால் திரும்பி அவனிடம் மாத்திரம் உதவி தேடுவான். இந்த முறையில் தான் இறைவனில் நம்பிக்கை கொள்ள வேண்டும் அவனில் உறுதியான எல்லயற்ற நம்பிக்கை கொண்டு மறைமுகமாக உள்ளத்தில் கீழ்படிய வேண்டும். இறைவனால் வழங்கப்பட்ட உண்மையான அருட்கொடைகளை உணர்ந்து அதற்காக ஆழ்ந்த நன்றியை வெளிப்படுத்தி இறைவனுக்கு மிக நெருக்கடைவான். மிகச் சிறந்த ஞானத்தையும் நன்னடத்தையுமம் கொண்ட சிறந்த நம்பிக்கையாளனாக மாறுவான். மேலும் அனைத்தும் நிறைவாக காணப்படும் சுவர்கத்தை பெற்று கொள்ள வேண்டியவர்களில் ஒருவனாக மாறுவான். அதேநேரம் உலக கண்ணோட்டத்தில் தெளிவாக இருந்தும் இவ்வுலகின் உண்மைகளை படிக்க தவறினால் அவன் சிறந்த நடத்தைகளை காண்பிக்க தவறிவிடுவான். இதன் காரணமாக அவன் அனைத்து விதமான இழப்புகளுக்கும் உரியவனாகிறான்.

உண்மையில் ஆதி மனிதன் ஆதம் உலகிற்கு அனுப்பபட்டதன் நோக்கம் உரிய பயிற்ச்சிகளை பெற்று; பின்பு பரீட்சிக்கப்பட்டு அவரை நிரந்தர வாழ்கைக்கு தயார்படுத்துவது இறைவனின் நியதியாகும். இறுதியில் அவர் மிகச்சிறந்த நடத்தையுடையவர் என்று குர்ஆன் பாராட்டுகிறது..

மனிதன் அவனுக்கு பல சோதனைகள் தொடர்சியாக கொடுக்கப்பட்டு சோதிக்கப்படுகிறான். அவன் அவற்றை சிறந்ந முறையில் அனுகினால் அவனுக்கு அவனது நிரந்தர வாழ்கையில் வெகுமதிகளை பெற்று கொள்வான்.

அவனது தோல்விகள் அவனுக்கு தண்டனைகளை பெற்று கொடுக்கும். அவர்களது பரீட்சை நேரம் எப்போது முடியும் என்பது யாருக்கும் தெரியாது. குர்ஆன் இதை மேலும், “எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹ்வின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம் இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம் நன்றியுடையோருக்கு அதி சீக்கரமாக நற்கூலி கொடுக்கிறோம்” (ஸ_றா ஆல-இம்ரான் : 145) கூறுகிறது. இந்த காலம் சிலநேரம் நீண்டு காணப்படும், சிலநேரம் சுருக்கமாகவும் இருக்கும். உண்மை என்னவென்றால் நாம் கணக்கிடும் நீண்ட காலம் 70 அல்லது 80 ஆண்டுகளை தாண்டாது.



அதனால் தான்இ மனிதன் நீண்ட கால திட்டங்களை தீட்டாமல் குர்ஆனுக்கு கட்டுபட்டு அதன் கட்டளைகளின் அடிப்படையில் வாழ்ந்து தனது அனைத்து செயல்களுக்கும் மறுமையில் கணக்கு காட்ட வேண்டும் என்று அறிந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் நிரந்தர வாழ்கைக்கு தயாராக தவறினால் இந்த நோக்கத்திறகாக வழங்கப்பட்ட ஒரேஒரு சந்தர்பத்தையும் நழுவ நேரிடும். அதனால் நிரந்தர நரகமும் அதன் வேதனைகளும் தவிர்க்க முடியாதவையாகிவிடும். ஓவ்வொரு மனிதனும் சுவர்கத்தை மிகவும் நேசிக்க கூடிய ஒரே இடம் நரகம் என்பதை மறக்க கூடாது. அதனால் தான் இவ்வுலகில் வீணாக செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் மிகப்பெரும் நட்டமும் அதேநேரம் பயங்கர முடிவை நோக்கி வைக்கும் மிகப்பெரும் காலடியாகும்.

இவ்வுலகில் அனைத்தையும் விடவும் இந்த உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். நாம் எமது வாழ்நாளில் நடக்கலாம் என்று சந்திக்கும் ஒரு நிகழ்வுக்காக நம்மை தயார்படுத்தி கொள்வதை போன்று அதை விடவும் முக்கியத்துவம் கொடுத்து அடுத்த வாழ்கைக்கு தயார் படுத்தி கொள்ள வேண்டும். ஏனென்றால் மரணிக்க போவது நாம். மரணத்தின் பின் நிகழும் சம்பவங்கள் அனைத்தையும் தனியாக சந்திக்க போவதும் நாம் தான். அதனால் இந்த விடயம் எமமோடு தொடர்புடையது. நிரந்தர நற்பேறுகளை தேடுபவர்களுக்கு இறைவன் இவ்வாறு கட்டளையிடுகிறான் :

ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும் இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள் நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான் அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள். (ஸ_றா அல்-ஹஸர்: 18-19)



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 4:09 am



உயிர் தெழுதல்


எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான். 'கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.

ஆகவே, பார்வையும் மழுங்கிசந்திரனும் ஒளியும் மங்கி- சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும். அந்நாளில் '(தப்பித்துக் கௌ;ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான். 'இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்).

அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு. (ஸ_றா அல்-கியாமா: 5-12)

அறிமுகம்

மறுமையை பற்றி நம்புவது


மறுமை மீது நம்பிக்கை கொள்வது நம்பிக்கையின் மிக முக்கிய அம்சமாகும். குர்ஆனில் முதல் அத்தியாயத்தில் அருளற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் அவனது தன்மைகளை பற்றி கூறிய பின்பு நியாய தீர்ப்பு நாளின் அதிபதி (ஸ_றா அல்-பாத்திஹா: 3) என்று அறிவிக்கிறான். அடுத்த அத்தியாயத்கதின் மூன்றாவது வசனத்தில் நம்பிக்கையாளர்களை பற்றி கூறும்போது “(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள் தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள் இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். “(ஸ_றா அல்-பகறா:3)

இந்த மறைவானது என்ற பதம் மரணமடைற்த பின்னர் மீண்டும் உயிர்பெற்று எழுதல் உயிர் பெற்று எழும் நாள், சுவர்க்கம் மற்றும் நரகம் என்பவற்றை எல்லாம் உள்ளடக்கியது, சுருங்க கூறினால், மறுமை சம்பந்தப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கும். உண்மையில், அடுத்த வசனமான ஸ_றா பகறாவின் 4வது வசனத்தில் அவர்கள் மறுமை நாளையும் உறுதி கொள்வார்கள் என்பதன் மூலம் மறுமையின் நம்பிக்கை மீது விசேடமாக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

மறுமை மீது நம்பிக்கையானது உண்மையான நம்பிக்கையின் அடையாளமாகும் அது மிக அவசியமானதுமாகும். குர்ஆன் வரையரை செய்யும் மறுமை மீதான நம்பிக்கையானது ஒரு நம்பிக்கையாளனுக்கு உண்iமாயன உறுதியான சான்றாகும். ஒருவன் மறுமை மீது கொண்டுள்ள நம்பிக்கையானது மற்ற நம்பிக்கைகளான இறைவன் மீதும் அவனது வேதங்கள் மீதும் அவனது தூதர்கள் மீதும் நிபற்தனையற்ற நம்பிக்கை கொண்டுள்ளான் என்பதற்கான ஆதாரமாகும். அத்தகைய ஒருவன் இறைவன் அனைத்து பொருட்கள் மீதும் ஆற்றல் பெற்றவன் என்றும் அவனது சொல்லும் வாக்குறுதிகளும் உண்மையானவை என்று அறிந்து வைத்திருப்பான். அவன் மறுமை மீது சந்தேகம் கொள்வதில்லை. இத்தகைய உண்மைகளை பார்பதற்து முன்னறே அவற்றை. ஏற்கனலே பார்ததை போன்று நம்புவான். இது இறைவனால் அவனுக்கு வழங்கப்பட்ட அறிவின் காரணமாக அவன் இறைவன் மீது வைக்கும் சாதாரண நம்பிக்கையின் வெளிப்பாடாகும். மேலும் மறுமை மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்வதானது அவனை அனைத்து சந்தேகங்களை விட்டும் சுத்தப்படுத்துவதுடன் குர்ஆனில் கூறப்பட்டவாறு இறைவன் மீதும் அவனது தன்மைகள் மீதும் முழுமையான நம்பிக்கை வைத்து அவனுக்கு முற்று முழுதாக கட்டுப்பட வைக்கும். இந்த நம்பிக்கையானது ஒருவனை இறைவனை சரியான முறையில் தெரிந்து கொள்ள வழிவகுக்கும். இந்த நம்பிக்கையையே இறைவனது பார்வையில் சிறந்தது.



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக