புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
435 Posts - 47%
heezulia
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
30 Posts - 3%
prajai
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_m10மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம், உயிர்தெழுதல், நரகம்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 3:32 am

First topic message reminder :



ஹாருன் யஹ்யா


அறிமுகம்

மரணம்… அது எந்த நேரத்திலும் ஏற்படலாம். யாருக்கு தெரியும். நீங்கள் இந்த கட்டுரையை வாசித்து கொண்டு இருக்கும் இந்த வேளையிலும் ஏற்படலாம். அல்லது நீங்கள் எதிர் பார்க்கும் நேரத்திற்கு முன்பாகவும் ஏற்படலாம்.

இந்த வரிகள் - உங்களை மரணம் சுவைப்பதற்கு முன்பான கடைசி சந்தர்பமாகவோ அல்லது கடைசி நினைவூட்டலாகவோ அல்லது கடைசி எச்சரிக்கையாகவோ இருக்கலாம். நீங்கள் இந்த வரிகளை வாசிக்கும் போது அடுத்த மணித்தியாளத்தில் நீங்கள் உயிருடன் இருப்பீர்களா என்று உங்களுக்கு தெரியாது. அவ்வாறு நீங்கள் உயிருடன் இருந்தாலும் உங்களுக்கு இன்னொரு மணித்தியாளத்தை உத்தரவாதம் அளிக்க யாராலும் முடியாது. உங்கள் வாழ்கையை ஒரு மணித்தியாளத்தை கொண்டோ அல்லது ஒரு மணித்துளியை கொண்டோ உத்தரவாதம் அளிக்க முடியாது. நீங்கள் இந்த புத்தகத்தை முழுமையாக படித்து முடிப்பீர்களா என்று உங்களுக்கு தெரியாது. மரணம் அது எந்த நேரத்திலும் உங்களை வந்தடையும். அது நீங்கள் மரணத்தை பற்றி சிந்திப்பதற்கு சில துளிகளுக்கு முன்பாக வந்தடையும்.

நீங்கள் மரணமடைவது உறுதி. நீங்கள் நேசிப்பவர்களும் மரணத்தை சுவைத்தே தீர்வார்கள். நீங்கள் அவர்களுக்கு முன்பு அல்லது அவர்கள் உங்களுக்கு முன்பாகவோ மரணிப்பார்கள். இன்றிலிருந்து 100 ஆண்டுகளுக்கு பின்பு உங்களுக்கு தெரிந்த ஒரு ஆத்மாவும் இந்த உலகில் இருக்காது..

மனிதனின் எண்ணத்தை எல்லையில்லா கனவுகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பாடசாலை கல்வியை முடித்து – கல்லூரி – பட்டம் – நல்ல தொழில் - திருமணம் - பிள்ளைகள் - நிம்மதியான வாழ்கை. ……இவைதான் மனிதனின் விரிந்த சாதாரண ஆசைகளாக உள்ளது. இவை தவிர மனிதனின் சந்தர்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப இன்னும் ஆயிரக்கணக்கான ஆசைகள் மனிதனில் விரிந்து காணப்படுகின்றன.

மனித வாழ்வில் நடைபெறும் சில உறுதியான நிகழ்வுகளில் மரணமும் ஒன்று. இது 100 வீதம் உறுதி. பல வருட விடா முயற்சியின் காரணமாக கல்லூரியில் இடம் பிடித்த மாணவன் வகுப்பறைக்கு போகும் வழியில் மரணமாகிறான். தொழிலை பெற்று கொண்ட ஒருவர் முதல் நாள் வேளைக்கு போகும் வழியில் மரணமாகிறார். புது மண தம்பதியரின் வாழ்கையை சாலை விபத்து பறித்து கொள்கிறது. தனது நேரத்தை சேமிக்கும் நோக்கில் விமானத்தில் பறக்கும் வியாபாரி ஒருவர்-அந்த விமானமே அவரது வாழ்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை அறியமாட்டார்.

அத்தகைய சந்தர்பங்களில் ஆசைகள் நிறைவேறாமல் தேங்கி நிற்கின்றன. அவர்கள் அவர்களது ஆசைகளை ஒருபோதும் நிறைவேறாது என்ற நிலையில் விட்டு விட்டு - இனிமேல் ஒருபோதும் திரும்ப முடியாத ஒரு இலக்கை நோக்கி செல்கிறார்கள். அந்த இடம் அவர்கள் ஒருபோதும் நினைத்து பார்த்திடாத இடமாக இருக்கிறது. பல வருடங்கள் பல மணிநேரங்கள் செலவழித்து அவர்கள் தீட்டிய கற்பனைகள் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. ஆனால் அவர்கள் நிச்சயமாக நடக்க இருக்கும் ஒன்றை சிந்திக்க மறந்து விட்டார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் சிந்திக்கும் மனசாட்சியுள்ள மனிதன் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்? உறுதியாக நடக்க இருக்கும் ஒன்றுக்கா அல்லது சில வேளை நடக்ககூடும் என்ற ஒன்றுக்கா? ஆனாலும் பெரும்பான்மை மக்கள் உறுதியாக நடக்கும் என்று கூறமுடியாத ஒன்றுக்கே முன்னுரிமை வழங்குவதை நாம் பார்க்கிறோம். அவர்கள் வாழ்வின் எந்த நிலையில் இருந்த போதிலும் அதை விட சிறந்த வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடினமாக சிந்திக்கிறார்கள்.

மனிதன் சாகா வரம் பெற்றவனாக இருந்தால் அவனது ஆசைகளை நியாயப்படுத்தலாம். உண்மை என்னவென்றால் ஆசைகள் அனைத்திற்கும் மரணம் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. ஆகவே நடக்கவோ அல்லது நடக்காமல் போகக்கூடிய ஆசைகளுக்காக எமது முழு கவனத்தையும் செலுத்தி உறுதியாக நடக்ககூடிய மரணத்தை பற்றி சிந்திக்காமல் விடுவது மிகப்பெரும் மடமையாகும்.

இதற்கு காரணம் மனிதன் அவனது மனதை அடக்க முடியாத ஆசைகளை கொண்டு அடிமை படுத்தி இருப்பதால் இந்த தெளிவான உண்மையை கவனிக்காமல் விட்டுவிடுகிறான்.

இவ்வாறான சூழ்நிலையில் அவர்கள் தங்களது உண்மையான வாழ்கை மரணத்தின் பிறகு தொடங்குகிறது என்ற உண்மையை விளங்கி கொள்வதில்லை. அதற்காக தங்களை தயார் படுத்திக்கொள்வதுமில்லை. அதனால் அவர்கள் மீண்டும் உயிர்பெற்று எழுந்ததும் நரகத்தை தவிர வேறு எங்கும் செல்வதுமில்லை. அது அவர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட இடமாகும். இந்த புத்தகம் எழுதப்பட்ட நோக்கம் - மனிதன் சிந்திக்க மறுக்கும் ஒன்றை சிந்திக்க வைக்கவும் - நிச்சயமாக சத்தியமாக நடக்க இருக்கும் ஒன்றை பற்றி எச்சரிப்பதற்குமாகும். அதை சிந்திக்க மறுப்பது எந்த வகையிலும் தீர்வாக அமையாது.



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 25, 2010 10:38 pm

தன்னை தானே ஏமாற்றி கொள்ளல்

மரணத்தை சிந்திக்காமல் மறதியில் திலைதிருக்கும் காரணிகளில் மனிதர்கள் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்ள சில தந்திரங்களை கையாளுகிறார்கள். அவற்றில் சிலவற்றை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு நினைப்பது மோசமான சூழ்நிலையில் தன்னை காப்பாற்றி கொள்ள தீக்கோழி தனது தலையை மண்ணில் புதைத்து கொள்வதை போன்றதாகும்.

- வாழ்வின் கடைசி காலங்களில் மரணத்தை பற்றி சிந்திக்கலாம் என்ற எண்ணம் : மனிதர்கள் 60 அல்லது 70 வருடங்கள் வரை உயிர் வாழ்வார்கள் என்று நினைக்கிறார்கள். இவை தான் நடுத்தர வயது மக்கள் இவ்வாறு சிந்திக்க அல்லது செயல்பட காரணம். இத்தகைய சிந்தகை காரணமாக பயங்கர விடயங்களை அவர்களது கடைசி காலங்களில் சிந்திக்கலாம் என்று எண்ணுகிறார்கள். அவர்களது இளமையில்- அல்லது அவர்களது முக்கிய காலகட்டத்தில் இத்தகைய துன்பம் தரக்கூடிய விடயங்களை கொண்டு மனதை சங்கடப்படுத்த விரும்புவதில்லை.; அனைத்து சுகங்களும் அனுபவித்து அதற்கு பின்னர் நல்லவைகள் எதுவுமே நடக்காது என்ற வாழ்வின் கடைசிகாலங்கள் தான் மரணத்தை பற்றி சிந்தித்து மறு உலக வாழ்கைக்கு தயார்படுத்த சரியான காலகட்டம் என்று பலர் நினைக்கிறார்கள். மறுமைக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற சிந்தனைளால் ஒருவகை ஆன்மீக ஆறுதல் கிடைக்கிறது.

அடுத்த நொடி மூச்சுக்கு உத்தரவாதமில்லாத நிலையில் தொலைதூர யோசனைகள் எந்த பயனுமில்லை. ஒவ்வொரு நாளும் அவனது வயதுடைய அல்லது அவனை விட இளயவர்கள் மரணமடைவதை அவன் பார்கிறான். மரண அறிவித்தல் தினசரி பத்திரிக்கைகளின் குறிப்பிடுமளவு இடத்தை பறித்து கொள்கின்றன.

ஒவ்வொறு மணித்தியாளமும் தொலைக்காட்சி மரணத்தை பற்றிய செய்திகளை சொல்லிக்கொண்டு இருக்கிறது. மனிதன் அவனை சுற்றி நிகழும் மரணங்களை பார்கிறான். ஆனால் அவனது மரணத்தை மக்கள் பார்பார்கள் என்றோ அல்லது அவனது மரண அறிவித்தல் பத்திரிக்கைகளில் வரும் என்பதை பற்றி குறைவாகவே சிந்திக்கிறான். மறுபுறத்தில் அவன் நீண்ட நாள் வாழ்ந்தாலும் அவனது சிந்தனை மாறாத காரணத்தால் அவனது வாழ்வில் எந்த மாற்றமும் நிகழாது. அவன் மரணத்தை சந்திக்கும் வரை அவன் மரணத்தை சிந்திப்பதிலிருந்து காலம் தாழ்த்தி கொண்டிருக்கிறான்.

- குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மட்டும் நரகத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் :


சமுகத்தில் காணப்படுகின்ற இந்த எண்ணம் வெறும் மூடநம்பிக்கையாகும். இந்த கருத்திற்கு ஆதரவாக குர்ஆனில் எந்த ஆதாரமும இல்லை. நரகத்தில ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தண்டனை அனுபவிக்க வேண்டும் அதன்பிறகு மன்னிப்பு வழங்கப்படும் என்ற கருத்துடைய் வசனம் குர்ஆனில் இல்லை. இதற்கு மாறாக எல்லா வசனங்களிலும் மறுமை நாளில் நம்பிக்கையார்கள் என்றும் அவநம்பிக்கையளர்கள் என்று இரண்டாக பிரிக்கப்படுவார்கள் என்று தான் கூறுகிறது. மற்ற வசனங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் சுவர்கத்தில் என்றென்றும் தங்கியிருப்பார்கள் என்றும் அவநம்பிக்கையளர்கள் நரகத்தில் முடிவில்லா நரக வேதனை சுவைப்பார்கள் என்றும் குர்ஆன் கூறுகிறது.

'ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது" என்று அவர்கள் கூறுகிறார்கள். 'அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான் அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?" என்று (நபியே! அந்த யூதர்களிடம்) நீர் கேளும். அப்படியல்ல! எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள். எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள் அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள். (ஸ_றா அல் பகறா :80-82) இன்னொரு வசனமும் இந்த கருத்தையே கூறுகிறது :



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 25, 2010 10:42 pm

இதற்குக் காரணம்: எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர (நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான் (இது) தவிர அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறிவந்ததும் அவர்களை ஏமாற்றி விட்டது. (ஸ_றா ஆல இம்ரான் : 24)

நரகம் என்பது கற்பனைக்கு எட்டாத வேதனைகள் நிறைந்த இடமாகும். சிறிது காலம் தான் நரகத்தில் இருக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்று கொண்டாலும் சுயநினைவுள்ள எந்த மனிதனும் அந்த வேதனையை சுவைக்க சம்மதிக்க மாட்டான். நரகத்தில் தான் இறைவனது தன்மைகளான அல்-ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) மற்றும் அல்-கஹ்ஹார் (ஆதிக்கம் செலுத்துபவன்) போன்றவைகளின் உண்மையான எல்லையை பார்க்க முடியும். நரக வேதனையை இவ்வுலக வேதனைகளோடு ஒப்பிட முடியாது. நரகத்தில் விரல் மட்டும் சுடப்படும் என்ற வேதனையை கூட ஒருவனால் தாங்கி கொள்ள முடியாது. அத்தகைய வேதனையை சுவைக்க ஒருவன் தயார் என்று சொன்னால் அவன் புத்தி சுவாதீனமற்றவன் என்றே கூறவேண்டும். மேலும் இறைவனது சாபத்திற்கு பயப்படாதவன் இறைவனுக்கு உரிய மரியாதையை கொடுக்க மறுக்கிறான். அத்தகைய நம்பிக்கையற்றவனை பற்றி குறிப்பிடுவது அவசியமற்றது.

- தனக்கு சுவர்க்கம் கிடைப்பது உறுதி என்று நம்புவது : தம்மை சுவர்க்கவாசிளாக கருதக்கூடிய சிலர் எம்மில் இருக்கின்றனர். நல்ல செயல்களை என கருதக்கூடியவற்றை சில சிறியவற்றை செய்து சில தீய செயல்களை தவிர்பதன் மூலம் தாங்கள் சுவர்கத்திற்கு தகுதியானவர்கள் என்று நினைக்கிறார்கள். இவர்கள் குர்ஆனுக்கும் மார்கத்தின் போதனைக்கும் எதிராக முடநம்பிக்கை இட்டுகட்டுதல் போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்கள் தங்களை உண்மையான விசுவாசிகளாகவே காட்டி கொள்கிறார்கள். இருப்பினும் குர்ஆன் அவர்களை இறைவனுக்கு இணை கற்பிப்பவர்களுடன் இணைத்தே வகைப்படுத்துகிறது.:

(நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக! அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம் இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம். அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை - எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம்.

இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக: 'நான் உன்னை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்" என்று கூறினான். (பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான் அவன், 'இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை" என்றும் கூறிக் கொண்டான். (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்" என்றும் கூறினான். அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக: 'உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?" என்று அவனிடம் கேட்டான். 'ஆனால், (நான் உறுதி சொல்கிறேன்புன்னகை அல்லாஹ் - அவன்தான் என் இறைவனாவான் என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன் (ஸ_றா கஃப் 32-38)

“நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின்” போன்ற வசனங்கள் மூலம் தோட்ட சொந்தக்காரன் இறைவன் மீதும் மறுமை மீதும் உறுதியான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறார். மேலும் சந்தேகத்தை கொண்ட சிலைகளை வணங்குபவர் என்றும் கூறுகிறார். அதேவேளை அவர் தன்னை சிறந்த நம்பிக்கையாளர் என்றும் வாதிடுகிறார். மேலும் இறைவன் அவருக்கு சுவர்க்கம் கொடுப்பான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தகைய சிறுமையான இறுமாப்பான சிலை வணங்குபவர்களின் தன்மைகள் பரவலாக மக்களிடம் காணப்படுகின்றன.



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 25, 2010 10:44 pm

இத்தகையவர்கள் தாங்கள் முழுமையாக பிழையிலிருப்பதை உணர்ந்த போதிலும் அவர்களிடம் கேட்கப்படும் போது அவர்கள் தங்களை அப்பாவிகளென காட்ட முயற்சிக்கின்றனர். மதத்தின் கொள்கைகளை கடைபிடிப்பது முக்கியமானதல்ல என்கின்றனர். அவர்களை சூழவுள்ள மார்க்க கட்டளைகளை பேணி பின்பற்றுபவர்களை ஒழுக்கமற்றவர்கள் என்றும் நம்பிக்கையற்றவர்கள் என்று கூறுவதன் மூலம் தங்களை அப்பாவிகளாக காட்ட முயற்சிக்கின்றனர். மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் இருப்பதன் காரணமாக தங்களை நல்லவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர். ஏழைகளுக்கு வாரி வழங்க தயங்குவதில்லை என்று கூறும் இவர்கள் உண்மையாகவே பல வருடங்களாக பொது சேவையில் ஈடுபடுவது போன்ற பல காரணங்கள் உண்மை முஸ்லிமாக உருவாக்கும் என்று கூறுகிறார்கள். மக்களுடன் நல்ல முறையில் நடப்பதால் மட்டும் முஸ்லிமாக முடியாது மாறாக இறைவனது கட்டளைகளுக்கு முழுமையாக கட்டுப்பட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாது அல்லது தெரியாதது போன்று நடிக்கிறார்கள்.

அவர்களுடைய மாசுப்படுத்தப்பட்ட மதத்தை ஏதாவது ஒருமுறையில் நியாயப்படுத்த அவர்கள் சில தவறான வழிமுறைகளை நாடுகிறார்கள். இது அவர்களது வஞ்சனையின் அடையாளமாகும். அவர்களது வாழ்கையை நியாயப்படுத்த செய்யும் தொழிலே தெய்வம் போன்ற சுலோகங்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். இது குர்ஆனின் பார்வையில் “ இறைவனுக்கு எதிரான பொய்களை உருவாக்குவது”தாகும். இதன் கூலி நரகத்தின் வேதனையாகும். அத்தகையவர்களை பற்றி குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது;

இன்னும் மனிதர்களில் 'நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்" என்று கூறுவோறும் இருக்கின்றனர் ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். -(ஸ_றா அல் பகறா : 8)

- இரட்டை வேடம் : மக்கள் மரணத்தை பற்றி சிந்திக்கும் போது தாங்கள் நிரந்தரமாக மறைந்து போவோம் என்று நினைக்கிறார்கள். இத்தகைய வியப்பான எண்ணம் இன்னொரு பாதுகாக்கும் உத்தியாகும். ஆவர்கள் இறைவானால் நிரந்தர வாழ்கை உறுதியளிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையின் பாதியை மட்டுமே நம்புகிறார்கள். அத்தகைய எண்ணம் அவர்களுக்கு சில ஆறதல்களை கொடுக்கிறது.

இறைவனை மீதான நம்பிக்கையாளனின் கடமைகளை பற்றி அவர்கள் சிந்திக்கும் போது அவர்கள் நிரந்தர வாழ்கை சம்பந்தமான உண்மைகளை முழமையாக தவிர்ந்து கொள்ளவே விரும்புகிறார்கள். இறுதியில் மண்ணில் மக்கி போவோம். மரணத்திற்கு பிறகு வாழ்கையில்லை” அவர்கள் தங்களை தாங்களே சமாதானப்படுத்தி கொள்கிறார்கள். அத்தகைய சிந்தனைகள் அனைத்து கவலைகளையும் தடுத்துவிடும். ஆனால் மறுமை நாளில் ஒருவர் தனது கணக்குகளை கொடுக்கும் போதும் நரகத்தில் வேதனை அனுபவிக்கும் போதும் அந்த வாதத்தின் நிலை புரியும். இவ்விரண்டு சூழ்நிலைகளிலும் அவர்களது கடைசி நாட்கள் வரை மறதியில் தங்கள் நாட்களை கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 25, 2010 10:48 pm

மறதியின் விளைவுகள்

ஒருவனது வாழ்கையில் கடைசிவரை மரணம் அவனது கவனத்தை ஈர்கும் என்று நாம் மேலே குறிப்பிட்டோம். இவை சிலநேரங்களில் மனிதனை அவனது வாழ்வின் அத்தியவசிய தேவைகளை மீண்டும் சரிபார்த்து அவனது நிலையை மாற்ற இத்தகைய நினைவூட்டல்கள் உதவுகிறது. வேறு சிலநேரங்களில் மேற்கூறப்பட்ட சிந்தனைகள் அவனை கட்டுப்படுத்தி அவனது கண்களை திரையிட்டிருக்கும் மறதியை மேலும் கடினமாக்கவும் வாய்புள்ளது.

நம்பிக்கையற்றவர்கள் அவர்களது பிந்தய காலத்தில் மரணம் அவர்களை வந்தடையும் என்று அவர்களுக்கு நன்றாக தெரிந்திருந்தும் அமைதி எனும் மூடநம்பிக்கையான உணர்வை ஏற்படுத்திக் கொண்டு சாந்தமான நிலையில் மரணத்திற்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பதற்கு காரணம் அவர்களை இந்த திரை முழுமையாக மூடிக்கொண்டுள்ளது. அவர்களை பொருத்தவரையில் மரணம் என்பது அமைதியான ஆழ்ந்த நித்திரை சாந்தம் மற்றும் நிரந்தர ஓய்வு என்று நினைக்கிறார்கள்.

இவர்களது சிந்தனைக்கு மாற்றமாக இ ஒன்றுமில்லாத நிலையிலிருந்து எல்லாவற்றையும் படைத்து பின்பு மரணிக்க செய்து பிறகு நியாய தீர்ப்பு நாளில் மீண்டும் அனைத்தையும் உயிர்பிக்கும் இறைவன் நிரந்தர வேதனையும் துன்பத்தையும் அவர்களுக்கு வாக்களிக்கிறான். நிரந்தர தூக்கம் என்ற நினைத்து கொண்டிருக்கும் அந்த மரணம் அது வரும் அந்த தருணத்தில் இந்த உண்மையை உணருவர்கள். அவர்கள் மரணம் என்பது முழமையாக மறைவது என்ற எண்ணம் தவறு என்றும் அதற்கு மாற்றமாக வேதனை நிறைந்த ஒரு புது உலகின் ஆரம்ப நிலை என்பதை உணருவர்கள். இந்த பெரும் வேதனையின் ஆரம்ப அறிகுறி உயிரை எடுக்க வரும் மலக்குகள் அல்லது வானவர்களின் பயங்கர தோற்றமாகும்.

ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும், (ஸ_றா முஹம்மத் : 27)

இந்த தருணத்தில் மரணத்தை பற்றி கவலைபடாமல் அகங்காரமாக திரிந்த ஏக இறைவனை மறுத்தவர்கள் பயத்தினாலும் செய்வதறியாது நிரந்தர வேதனையில் மூழ்குவார்கள். குர்ஆன் இதை பற்றி இவ்வாறு விளக்குகிறது :

'நாம் பூமியில் அழிந்து போய் விடுவோமாயின் மெய்யாகவே நாங்கள் புதிய படைப்பாவோமா?" எனவும் அவர்கள் கூறுகின்றனர் ஏனெனில் அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையே நிராகரிப்போராய் இருக்கிறார்கள். 'உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், 'மலக்குல் மவ்து" தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும். மேலும், இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், 'எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டும் கொண்டோம் - ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாய் நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்" என்று சொல்லும்போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்). (ஸ_றா அஸ் ஸஜதா : 10-12 )



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 25, 2010 10:50 pm


மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது


மரணம் ஆரம்ப நாட்களில் நினைவிற்கு வருவது மிக அரிது. இதை கடைசி நிலையாக நினைத்து கொண்டு இந்த சிந்தனையிலிருந்து தப்பித்து கொள்கிறான். இருப்பினும் மருத்துவத்தால் மரணத்திற்கு குணப்படுத்த முடியாததை போன்று சிந்திக்கமாலிப்பதாலும் மரணத்தை வெல்லமுடியாது.. மரணத்தை ஒருபோதும் தட்டிக்கழிக்க முடியாது. ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகள் மரண செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கின்றன. நீங்கள் கல்லறைகளை கடந்து செல்கிறீர்கள். உங்களது உறவினர்களும் தோழர்களும் மரணிக்கிறார்கள். அவர்களது மரண ஊர்வலங்களும் அல்லது நீங்கள் தெரிவிக்கும் இரங்கல்களும் நிச்சயமாக உங்களுக்கு மரணத்தை நினைவுபடுத்தும். ஒருவன் மற்றவரின் மரணத்தை பார்க்கும் போது முக்கியமாக அவனது விருப்பத்திற்குரியவர்களின் மரணத்தை பார்க்கும் போது அவன் அவனது முடிவை பற்றி சிந்திக்கிறான்.

இந்த சிந்தனை அவனை ஆழமாக பாதித்து அவனை நிம்மதியற்றவனாக மாற்றுகிறது.

அவன் எவ்வளவு தூரம் கடுமையாக எதிர்தாலும் அவன் எங்கு சென்று ஓளிந்தாலும் அல்லது தப்பிக்க முயன்றாலும் எந்த சந்தர்பத்திலும் அவனது மரணத்தை சுவைத்தாக வேண்டும். அவனுக்கு வேறு தெரிவு இல்லை. அதிலிருந்து வெளியே செல்ல அவனுக்கு வேறு வழியிருக்காது. ஒரு வினாடியும் பின்போடுவதில்லை.

ஆவன் எங்கு சென்றாலும் மரணம் அவனை சந்திக்கும். கடைசியில் அவனை பிடித்து கொள்ளும். 'நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும் பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்" (என்று) (நபியே!) நீர் கூறுவீராக. (ஸ_றா அல்ஜூம்மா : 8)


'நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் 'இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது" என்று கூறுகிறார்கள் ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, 'இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது" என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்: 'எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!" (ஸ_றா அன்னிசா: 78)

அதனால் தான் நாம் நம்மை ஏமாற்றுவதை நிறுத்திகொண்டு இறைவனால் வரையறுக்கப்பட்ட காலம் முடிய முன்னர் அவனது அன்பை பெற முயற்சிக்க வேண்டும். இறைவனுக்கு மட்டுமே இந்த நேரம் முடிவடைவதை பற்றி தெரியும்.

ஒருவனது மனசாட்சி இறுக்கமடையாலும் நல்ல பண்புகள் வளரவும் அடிக்கடி மரணத்தை சிந்திக்க வேண்டுமென்று எமது தூதர் முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள் :

அப்துல்லாஹ் பின் உமர் அறிவிக்கிறார்கள்: இறைதூதர் கூறினார்கள் தண்ணரால் இரும்பு துரப்பிடிப்பதை போன்று இந்த இதயம் துரப்பிடுத்துவிடும் அதை எவ்வாறு சுத்தப்படுத்துவது என்று கேட்கப்பட்ட போது மரணத்தை அதிகமாக நினைப்பதும் குர்ஆனை அதிகமாக ஓதுவதும். ஏன்று பதிலளித்தார்கள். (திர்மிதி 673)



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 25, 2010 11:06 pm

உண்மையான மரணமும் மரணத்தை பற்றிய கண்காணிப்பும்

ஆன்மா மரணமடைதல் (உண்மையான மரணம்)

நீங்கள் எவ்வாறு மரணமடைவீர்கள் மரணம் எப்படி இருக்கும் மரணமடையும் வேளையில் என்ன நடக்கும் என்பதை பற்றி எப்போதாவது சிந்தித்ததுண்டா?

இதுவரை மரணித்த எவரும் மீண்டும் உயிர் பெற்று எழுந்து வந்து மரண வேளையில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டதில்லை. ஆகவே மரணம் எவ்வாறு இருக்கும் அல்லது மரணவேளையில் ஒருவனது உணர்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்வது சாத்தியமற்றதாகவுள்ளது.

மனிதனுக்கு உயிரை கொடுத்து குறிப்பிட்ட தவணையின் பின்னர் அதை மீண்டும் எடுத்து கொள்ளும் இறைவன் மரணம் எவ்வாறு ஏற்படுகிறது என்று குர்ஆனில் விளக்குகிறான். ஆகவே குர்ஆனின் உதவி கொண்டே மரணம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதையும் மரணிக்கும் வேளையில் ஒருவனது உணர்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதை பற்றியும் அறிந்து கொள்கிறோம்.

குர்ஆனின் அடிப்படையில் மரணம் என்பது மக்கள் வெளியிலிருந்து பார்க்கும் மரணத்திலிருந்து மாற்றமானது. முதலில் மரணபடுக்கையில் இருக்கும் ஒருவன் பார்க்கும் நிகழ்வுகள் - அவனை சுற்றியுள்ளவர்களால் அறிந்துகொள்ள முடியாத நிகழ்வுகள் பற்றி சில வசனங்கள் விளக்குகின்றன. மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது - அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம்.எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை. (ஸ_றா வாகிஆ : 83-85)

ஏக இறைவனை மறுத்தவர்களின் மரணத்தை போலல்லாது நம்பிக்கையாளனின் மரணம் அமைதியானதாக இருக்கும். (குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்: 'ஸலாமுன் அலைக்கும்" ('உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்" என்று அம்மலக்குகள் சொல்வார்கள். (ஸ_றா அன்நஹல் : 32)

இந்த வசனங்கள் மரணத்தை பற்றி மிக முக்கியமான மாற்றமடையாத உண்மைகளை கூறுகிறது. மரணவேளையில் மரணிக்கும் ஒருவரின் நிலையும் அவரை சுற்றி நிற்கும் மற்றவர்கள் கண்ணோட்டமும் மாற்றமாக இருக்கும். உதாரணமாக ஏக இறைவனை மறுத்து வாழ்ந்த ஒருவரின் மரணம் வெளியிளிருந்து பார்க்கும் போது அமைதியான மரணமாக தோன்றும். இருப்பினும் ஆன்மா வேறு வகையில் மிக வேதனையாக வழியில் மரணத்தை சுவைக்கும். அதேநேரம் நம்பிக்கையாளரின் ஆன்மா கடுiமாயன வேதனையை அடைந்த போதும் அவரது உடலை விட்டும் கண்ணியமான முறையில் செல்கிறது.

சுருங்க கூறுவதாயின் உடல் மரணமடைவதும் குர்ஆன் கூறும் ஆன்மா மரணிப்பதும் வெவ்வேறு நிகழ்வுகளாகும். குர்ஆன் கூறும் இந்த உண்மையை விளங்கி கொள்ளாமல் மரணம் என்பதை முடிவில்லாத அமைதியான தூக்கம் என்று நம்பும் அவநம்பிக்கையாளர்கள் மரணவேளையை வேதனையற்ற அமைதியானதாக மாற்ற வழிகளை தேடுகிறார்கள். இத்தகைய தவறான சிந்தனைகளால் தூண்டுப்பட்டு; மாத்தரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்வது இயற்கை வாயுக்களை சுவாசித்தல் அல்லது கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மரணத்தை வேதனையற்ற முறையில் அடைவது போன்ற வழிகளை நாடுகிறார்கள்.



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 12:04 am

முன்பு கூறப்பட்டதை போன்று ஏக இறைவனை மறுபபவர்களின் மரணமானது கடுiமாயான வேதனையாக இருக்கும் அதே வேளை விசுவாசிகளின் அமைதியானதாக இருக்கும். மரணவேளையில் ஏக இறைவனை மறுத்தவர்களின் ஆன்மாவை பறிக்கும் வானவர்கள் நடந்து கொள்ளும் விதமும், அவாக்ளது உயிர் உடலிலிருந்து எடுக்கப்படும் போது அவர்கள் படும் வேதனையும் பற்றி குர்ஆன் தெளிவாக கூறுகிறது.

ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும், இது ஏனெனில்: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தமைதான் ஆகவே அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கி விட்டான். (ஸ_றா முஹம்மத் : 27-28)

மரண வேளையில் வானவர்கள் கூறும் நிரந்தர வேதனையை பற்றி செய்தியானது ஒருவனுக்கு கடுமையான வேதனையை ஏற்படுத்தும் என்று குர்ஆன் கூறுகிறது. அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, 'எனக்கு வஹீ வந்தது" என்று கூறுபவன் அல்லது 'அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்" என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) 'உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள் இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள் இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்" (என்று கூறுவதை நீர் காண்பீர்). (ஸ_றா அல் அனாம் : 93)

மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: 'எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்" என்று. இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் - நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான். (ஸ_றா அல்-அன்பால் : 50-51)

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான் பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள் அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள் மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (ஸ_றா அன்னாஸியா : 1)

ஆன்மா எவ்வாறு எடுக்கப்படும் என்பதை விளக்குகிறது :

அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால், 'மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது. ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான். (ஸ_றா அல்-கியாமா :26-28)

இந்த வேளையில் ஏக இறைவனை மறுத்தவன் அவன் வாழ்நாளில் ஏற்க மறுத்த உண்மைகளை சந்திப்பான். மரணத்தை அவன் உயிரை பிடுங்கி எடுப்பார்கள் ஆகியன அவர்களை காத்திருக்கும் வேதனையின் ஆரம்பமாகும்.

அதற்கு மாற்றமாக நம்பிக்கை கொண்டவர்களது மரணமானது நிரந்தர சந்தோஷத்தின் ஆரம்பமாகும். கடுமையாக வேதனை அனுபவிக்கும் ஏக இறைவனை மறுத்தவர்களை போன்றல்லாது, நம்பிக்கையாளரின் உயிர் (நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- (ஸ_றா அன் நாசியா: 2) எடுக்கும் வேளையில் வானவர்கள் கூறுவார்கள் :” (நிராகரிப்பை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்: 'ஸலாமுன் அலைக்கும்" ('உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்" என்று அம்மலக்குகள் சொல்வார்கள். (ஸ_றா அன் நஹல் : 32). இந்நிலையை தூக்கத்திற்கு ஒப்பிடலாம். தூக்கத்தின் போது உயிர் வேறு வகையில் மாற்றமடைகிறது. இதை பின்வரும் வசனம் இவ்வாறு கூறுகிறது:

அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான் மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (ஸ_றா அல் ஜீமர் :42)

இது தான் உண்மையான மரணம். வெளிப்புறம் மக்கள் காண்பது ஒரு உடல் படிப்படியாக அதன் செயல்பாடுகளை இழக்கும் அநனiஉயட மரணமாகும். ஒருவர் மரணிக்கும் வேளையில் வெளியிலிருந்து பார்க்கும் மக்கள் அவரது முகம் மற்றும் பின்புறம் அடிக்கப்படுவதையும் உயிர் தொண்டையை அடைவதையும் பார்பதில்லை. இதனுடன் தொடர்புடைய ஒருவனின் உயிரே இந்த உணர்வுகளை அனுபவிப்பதோடு இத்தகைய காட்சிகளை காண்கிறது. இருப்பினும் வெளியிலிருந்து பார்பவர்களை விட மரண நேரத்தில் ஒருவர் அதன் அனைத்து வழிகளிலும் மரணத்தை சுவைப்பார். வேறு வகையில் கூறுவதானால் மரண நேரத்தில் ஏற்படும் நிகழ்வுகள் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுவதாகும்.

நம்பிக்கையாளரின் அல்லது ஏக இறைவனை மறுத்தவராக இருந்தாலும் ஒருவரினது மரணம் ஒரு நிமிடத்தை கொண்டு தாமதிக்கவோ அல்லது அவசரப்பட மாட்டாது. மனிதன் எங்கு இருந்தாலும், அவர்களுடைய நேரம் வந்துவிட்டால், மரணம் வந்தே தீரும். மரணத்தை அனுபவிக்கும் விதமானது ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்பட்ட போதிலும் இவை வர்ணிக்க முடியாதவை.



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 12:06 am


நம்பிக்கையாளரின் மரணம்


** மரணமடைவது உறுதி என்று விளங்கிய நம்பிம்கையாளன் அவனது வாழ்நாள் முழவதும் அதற்காக தாயாராகிறான். பின்பு அதில் வெற்றியடைகிறான்.

** உயிரை பறிக்க வரும் வானவர்கள் அவனுக்கு வாழ்த்து கூறி அவனுக்கு சுவர்க்கம் என்ற நன்மாரயம் கூறுகிறார்கள்.

** வானவர்கள் நம்பிக்கையாளரின் உயிரை மெதுவாக எடுப்பார்கள்

** தனக்கு இறைவன் சுவர்கத்தை வாக்களித்துள்ளான் என்ற நற்செய்தியை உலகிலுள்ள மற்றவர்களுக்கு கூற அனுமதி கேட்பான். ஆனால் அது அனுமதிக்கப்பட மாட்டாது. ஏக இறைவனை மறுத்தவரின் மரணம்

** அவன் வாழ்நாளில் சிந்திப்பதிலிருந்து விலகியிருந்த மரணத்தை சந்திப்பான்

** மரணம் ஏற்படும் போது அவனது உடல் பயங்கரமாக நடுங்கும்.

** வானவர்கள் நரக வேதனையின் செய்தியை கூறுவார்கள்.

** அவனது பின்புறம் மற்றும் முகத்தில் அடித்த நிலையில் அவனது உயிரை பிடிங்கி எடுப்பார்கள்

** கடுமையான வேதனையுடன் அவனது உயிர் எடுக்கப்படும்

** உயிர் அவனது தொண்டை குழியை அடைந்தவுடன் அவனை குணப்படுத்த யாரும் இருக்கமாட்டார்கள்

** அவனது உயிர் கடினமான முறையில் எடுக்கப்படும்

** மரணவேளையில் அவன் நம்பிக்கை கொள்வதும் பாவமன்னிப்பும் கோருவதும் ஏற்றுகொள்ளப்படமாட்டாது மரணத்தை வெளியிலிருந்து பார்க்கும் மக்களுக்கு அநனiஉயட மரணத்தில் பாடம் கற்று கொள்ளலாம்.

அதாவது மரணமானது மனிதனின் உடல் எந்த அளவிற்கு பயனற்றதாக்குகிறது என்ற உண்மை காட்டுகிறது. ஆகவே மரணமும் புதைகுழியும் நம் ஒவ்வொருவருக்காகவும் காத்து கொண்டிருக்கிறது. ஆகவே அதை சிந்திப்பதும் குறிப்பிடப்படுவதும் சால சிறந்தது.



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 12:11 am


உடல் மரணமடைதல் (வெளியிலிருந்து பார்ப்பது)


மரணிக்கும் தருவாயில் உயிர் அது வாழும் மனித உடலிலிருந்து வெளியேறியவுடன் அது உயிரற்ற உடலை விட்டுச் செல்கிறது. உயிருள்ளவைகள் தனது தோலை மாற்றுவதை போன்று அது வெளி கூட்டை துறந்து உண்மையான வாழ்வை நோக்கி செல்கிறது.. . இருப்பினும் இந்த உடலுக்கு அதன் உண்மை நிலை அறியாது அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு கூடு இந்த உலகில் தங்கிவிடுவதானது முக்கியமானதாகும்.

ஒருவர் மரணித்தவுடன் இந்த உயிர் பொருத்தப்பட்டிருந்த கூட்டிற்கு என்ன நடக்கும் என்பதை பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?

ஒரு நாள் நீங்களும் மரணமடைவீர்கள். அது நீங்கள் எகிர்பாரத விதத்தில் வரலாம். நீங்கள் பொருள் வாங்க கடைக்கு போகும் வழியில் வாகனம் உங்களை மோதும் அல்லது உயிர்கொல்லி நோய் உங்கள் வாழ்வை முடிவுக்கு கொண்டுவரும் அல்லது எந்த காரணமும் இன்றி உங்கள் இதயம் துடிப்பது நின்று விடலாம் ஆகவே நீங்கள் மரணத்தை சுவைக்க ஆரம்பிக்கிறீர்கள்.

இதிலிருந்து உங்கள் உடலுடன் உங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடையது என்று சொல்லி வந்த உங்கள் உடல் சாதாரண தோல் குவியலாக மாறிவிடும்.

நீங்கள் மரணித்தவுடன் உங்கள் உடல் மற்றவர்களால் தூக்கி செல்லப்படும். உங்களை சுற்றி மக்கள் கவலை கொண்டு அழுது கொண்டிருப்பார்கள். உடல் பிரேத அறைக்கு எடுத்து செல்லப்பட்டு ஒரு இரவு அங்கு இருக்கும். அடுத்த நாள் புதைப்பதற்கான வேலைகள் நடைபெறும். தற்போது இறுகிய நிலையில் காணப்படும் உயிரற்ற உடல் குளிர்ந்த நீரால் கழுவப்படும். அதேநேரம் மரணித்ததன் அறிகுறியாக உடலின் சில பாகங்கள் ஊதா நிறமாக மாறும்.

பிறகு உடல் துணியால் சுற்றப்பட்டு சவப்பெட்டிக்குள் வைக்கப்படும். மரணவாகனம் சவப்பெட்டியை கொண்டு செல்ல தயாராக இருக்கும். புதைகுழியை நோக்கி செல்லும் போது மக்கள் தெருக்களில் காணப்படுவார்கள்.

மரணஊர்தியை பார்க்கும் சிலர் மரியாதை செய்வார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் அவர்களுடைய அன்றாட தேவைகளில் மூழ்கியிருப்பார்கள். உங்களை நேசிப்பவர்களும் உங்களை நேசிப்பதாக கருதுபவர்களும் சவப்பெட்டியை புதைகுழி நோக்கி தூக்கி செல்வார்கள். மீண்டும் அந்த இடத்தில் மக்கள் அழுதுபுலம்புவார்கள்.

பிறகு மக்கள் தப்பிக்க முடியாத இடத்தில் அடைவார்கள்.. சவக்குழி பலகையில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும். உங்களது உயிரற்ற உடல் சவப்பெட்டியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு சவக்குழிக்குள் வைக்கப்படும். கடைசியாக உங்களுக்காக பிராத்திக்கப்படும். இறுதியாக மக்கள் உங்களை மண்ணால் மூடுவார்கள். உங்களை சுற்றியுள்ள துணியில் மண் வீசப்படும். அது உங்கள் வாய், தொண்டை, கண், மூக்கு ஆகியவற்றை அடைத்து கொள்ளும். பிறகு மண் உங்கள் துணியை முற்றிலும் மூடிக்கொள்ளும். இறுதி கிரிகைகள் முடிவடைந்து மக்கள் கலைந்து செல்வார்கள். புதைகுழி அதன் ஆழ்ந்த அமைதிக்கு திரும்பிவிடும்.

உங்களது கடைசி கிரிகைகளக்கு வந்தவர்கள் தங்களுடைய அன்றாட தேவைகளுக்காக சென்றுவிடுவார்கள். உங்கள் உயிரற்ற உடலை பொருத்தவரையில் வாழ்கை என்பது அர்த்தமற்ற ஒன்றாகும். ஒரு அழகான வீடு, நல்ல வட்டசாட்டமான மனிதன், நல்ல நிலம் அனைத்திற்கும் எந்த அர்த்தமும் கிடையாது. உங்கள் உடல் இனிமேல் நண்பர்களை சந்திக்காது. அன்று முதல் உடல் மண்ணும் புழுக்களும் அதிலுள்ள பக்டீரியாக்களும் மட்டுமே சொந்தமாகிவிடும்.



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 12:15 am


நீங்கள் மரணித்த பின்பு உங்கள் உடல் எவ்வாறு இருக்கம் என்று சிந்தித்து பார்ததுண்டா ?


உங்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டவுடன் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் காரணிகளால் விரைவாக அழுகிவிடும்.

நீங்கள் புதைகுழிக்குள் வைக்கப்பட்டவுடன் ஒட்சிசன் இல்லாத காரணத்தால் பக்டீரியா மற்றும் இதர பூச்சிகளினதும் செயல்பாடுகள் அதிகரிக்கும். இந்த நுண்ணங்கிகளால் வெளியிடப்படும் வாயுக்கள் உடலை வெடிக்க செய்யும். வயிற்று பகுதியில் ஆரம்பித்து அதன் தோற்றத்தை மாற்றிவிடும். மார்பு பகுதியிலிந்து வெளியிடப்படும் வாயுக்களின் அழுத்தத்தால் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் கசியும். இவ்வாறு மாற்றமடைவதால் உடலிலுள்ள முடிகள், நகங்கள் குதிகால் மற்றும் தொடை ஆகியவை கழன்றுவிழும். உடம்பின் வெளிப்பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் உட்பகுதியிலுள்ள இதயம், ஈரல், குடல் போன்றவை அழுகிவிடும். இவ்வேளையில் வயிற்று பகுதியில் பயங்கரமான நிகழ்வுகள் நடைபெறும். வாயுக்களின் அழுத்தம் தாங்கமுடியாமல் தோல் வெடித்து தாங்கி கொள்ள முடியாத துர்வாடை வீசும். மண்டை ஓட்டிலிருந்து ஆரம்பித்து சதை அதன் குறிப்பிட்ட இடத்திலிருந்து விலகிவிடும். தோலும் மற்றய மெல்லிய திசுக்களும் முற்றிலுமாக அழிந்துவிடும். மூளை அழுகி கிளே (உடயல) போன்று ஆகிவிடும். உடல் எழும்பு மட்டும் மிஞ்சும் வரை இந்த நிகழ்வுகள் நடைபெறும்.

நான் என்று நீங்கள் பெருமை பாராட்டிய உங்கள் உடல் அருவருப்பான பயங்கரமான விதத்தில் மறைந்து போகும். நீங்கள் மத சம்பிரதாயங்களுக்காக விட்டு செல்பவைகளை மண்ணிலுள்ள புழுக்களும் பக்டீரியாக்களும் பூச்சிகளும் உடலை தின்றுவிடும்.

நீங்கள் விபத்தில் இறந்து புதைக்கப்படவில்லை என்றால் அதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்.

சாதாரண நாளில் அறையில் வைக்கப்பட்டுள்ள இறைச்சியை போன்று உங்கள் உடலை புழுக்கள் உண்ணும். புழுக்கள் கடைசி மாமிசத்தை உண்டபின்னர் உங்கள் உடம்பு எலும்பாக மாறிவிடும். இவ்வாறே சிறந்த முறையில் படைக்கப்பட்ட மனிதனின் வாழ்கை மிக பயங்கரமான முடிவிற்கு வருகிறது. ஏன் ?.

அது நிச்சயமாக இறைவனின் விருப்பப்படியே இத்தகைய மோசமான முறையில் முடிவை சந்திக்கிறது. அது மிக முக்கிய செய்தி ஒன்றை உள்ளே வைத்துள்ளது. அதாவது மோசமான முடிவை எதிர் நோக்கும் மனிதன் அவன் அவனது உடல்ல மாறாக உடலுக்குள் புகுத்தப்பட்டுள்ள ஆன்மாவாகும். வேறு வகையில் கூறுவதானால் மனிதனால் உடல் இல்லாமல் வாழமுடியும் என்று தெரிந்து கொள்ளவேண்டும.; இத்தகைய முடிவின் மூலம் மனிதன் தான் சதையும் முள் கொண்டு மட்டும் படைக்கப்பட்டவன் அல்லன் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

தனது வெளி தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதன் இந்த உலகம் தற்காலிகமானது என்றும் மரணத்தின் மூலம் அவனது வாழ்கை முடிவடைகிறது என்பதை தனது உடலை பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும். அது மண்ணால் அழிக்கப்பட்டு புழுக்களால் உண்ணப்பட்டு எலும்பு கூடாக மாறும்.



மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக