புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புச் சகோதரிக்கு Poll_c10அன்புச் சகோதரிக்கு Poll_m10அன்புச் சகோதரிக்கு Poll_c10 
6 Posts - 60%
heezulia
அன்புச் சகோதரிக்கு Poll_c10அன்புச் சகோதரிக்கு Poll_m10அன்புச் சகோதரிக்கு Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
அன்புச் சகோதரிக்கு Poll_c10அன்புச் சகோதரிக்கு Poll_m10அன்புச் சகோதரிக்கு Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புச் சகோதரிக்கு


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Sep 20, 2009 10:31 am

அன்புச்
சகோதரி மீனுவுக்கு (தாமதத்திற்கு மன்னிக்கவும்)


From
meenuga To nandhtiha, Thu Sep 10, 2009 3:29 pm


தமிழ்
பற்றுள்ள நந்திதா அவர்களுக்காக ..ஒரு கவிதை


by
meenuga Yesterday at 12:45 am


இந்த தமிழ் என்ற கவிதையை நான் நந்திதா அவர்களுக்காக இங்கு ஈகரைல போடுறேன்.. அவங்களின் தமிழ்
பற்று ,அவர்களின் தமிழும எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு..இதில் தப்பு இருக்கலாம் இந்த
கவிதையில்.. இருந்தால் மன்னிக்கவும்.. அன்புடன் மீனுகா.



தமிழ்

தழிழரின் நாவினில்
தவழ்ந்திடும் தமிழ்
தரணியின் களனியில் (கழனியில்)
தழைத்திடும் தமிழ்
உலகத்தின் பிறப்புடன்
உருவான தமிழ்
தொன்மையின் சான்றிலும்
தொலையாத தமிழ் (துலங்கிடும் தமிழ்)
பிஞ்சுக் குழந்தையுடன்
கொஞ்சும் தமிழ்
மனசை மயக்கும்
மழலைத் தமிழ்
அன்னை மடியில்
அன்புத் தமிழ்
ஆசான் கரத்தில்
அறிவுத் தமிழ்
நண்பனின் மூச்சில்
நட்புத் தமிழ்
மடந்தையர் கண்களில்
மயங்கிடும் தமிழ்
காதலின் பேச்சில்
கவிதைத் தமிழ்
மன்னவர்சபையில்
மானத் தமிழ் (மன்னிய தமிழ்= மன்னிய நிலை பெற்ற்)
வள்ளுவன் எழுத்தில்
வாய்மைத் தமிழ்
பாரதி சொல்லில்
பற்சுவைத் தமிழ்
ஓளவையின் மொழியில்
அறிவுரைத் தமிழ்
கவிஞரின் உள்ளத்தில்
கனிந்திடும் தமிழ்
சங்ககாலம்வித்திட்ட
சாதனைத் தமிழ்
விளைகின்றமண்ணில்
வீரத் தமிழ்
கடலின் அலையிலும்
கவிபாடும் தமிழ்
காற்றின் ராகத்தில்
கலந்திட்ட தமிழ்
மழையின் சாரலாய்
மகிழ்திடும் தமிழ்
வற்றாத ஆறாக
வழிந்தோடும் தமிழ் (வாழ்ந்திடும் தமிழ்- ஆறு கரைகடக்கலாகாது(
பூவின் மென்மையாய்
புன்னகைக்கும் தமிழ் (பூக்கும் தமிழ்)
பூவுலகம் சூட்டும்
புகழ்மாலைத் தமிழ்
வானத்தில் சிறகடிக்கும்
வசந்தகாலப்பறவைத் தமிழ்
சாத்வீக குணத்தின்
சாந்தத் தமிழ்
அன்பின் மார்க்கத்தை
ஆற்றுகின்ற தமிழ்
வறுமையின் பிடியிலும்
வாழ்ந்திடும் தமிழ்
அடிமையை எதிர்த்திடும்
ஆணவத் தமிழ் (ஆளும் தமிழ்)
உறவுகள் வாழ்ந்திட
உதவிடும் தமிழ்
மரணத்தின் படுக்கையில்
மரிக்காத தமிழ்
மறுஜென்ம பாதையில்
மறையாத தமிழ்
ஆண்டவன் தந்துவிட்ட
அகராதித் தமிழ்
குறையாத சுவை தமிழுக்கே
குன்றாத மொழி தமிழுக்கே (குன்றாப்புகழ் தமிழுக்கே)
அழியாதஅழகு தமிழுக்கே
அணையாத தீபம் தமிழுக்கே
எங்கும் தமிழ்
எதிலும்தமிழ்
என்றும் நிலைத்திட
எல்லாம் வல்லவனின்
ஆசியை பெற்று
அகிலம் நிலைபெறும்.

அடைப்புக்குறிக்குள் இருப்பது என் கருத்து. ஏற்பதும் தள்ளுவதும் இதனை எழுதிய மீனுவின் உரிமை


இதோ
என்னுடைய சிறு கவிதை அன்புச் சகோதரிக்காக


ஒன்றரை அடியில் உலகை அளந்தது உன்னத தமிழல்லவா
உலகத்திற் கந்த பொதுமறை தந்து முயர்ந்தது தமிழல்லவா
மன்றினில் நடித்தான் மதியினைத் தரித்தான் மதித்த தமிழல்லவா
மாலவ னடியார் நாவினில் மலர்ந்து மகிழ்ந்த தமிழல்லவா
குன்றினில்அமர்ந்த குமரக் கடவுள் கொடுத்த தமிழல்லவா
குறுமுனி அமர்ந்த பொதிகையி னின்றும் குதித்த தமிழல்லவா
வென்றிட வேண்டி வந்தவர் கூட வியந்த தமிழல்லவா
விரிநீருலகி லிதுவே முதன் மொழியென் றிசைபெறும் தமிழல்லவா
முத்துதிர் திரைபுரள் முந்நீர்க் கரைதனில் முளைத்த தமிழல்லவா
முத்தமி ழென்றே உலகினில் நிற்க முனைந்த தமிழல்லவா
சித்தர்கள் சிந்தைத் தெளிவினைச் சொன்னது செம்மைத் தமிழல்லவா
சிவனடியார்கள்திருவுளம்பற்றிச் சிறந்தது தமிழல்லவா
இறைவனும் தமிழும் வேறில்லை யென்றே இயம்பிய தமிழல்லவா
இசையினைக் கூட்டி ஈசனை யேத்திய தீழத் தமிழல்லவா (இசையினைக் கூட்டி ஈசனை ஏத்தியது ஈழத் தமிழல்லவா)
மறையவன் மகற்கு முலைப்பாலீந்து வளர்த்த தமிழல்லவா
மாண்டவள் உயிரை மீட்டுக் கொடுத்தது மங்காத்தமிழல்லவா
எல்லாஉயிரும் சமமென் றியம்பியது எம்முடைத் தமிழல்லவா
ஏதிலியாயின்று ஏங்கி நிற்பதும் இனிய தமிழல்லவா
கல்லாமனிதன் காட்டு விலங்கென் றறைந்தது தமிழல்லவா
கற்கும் சிறார்கள் பதுங்கு குழியில் கரந்ததும் தமிழல்லவா
காட்டையும்திருத்திக் கழனியாக்கிக் களைத்ததும் தமிழல்லவா
கஞ்சிக்கின்றி கையேந்தி நிற்பதும் கன்னித் தமிழல்லவா
நாட்டையும் மாட்டையும் இழந்து எங்கோ நலிவதும் தமிழல்லவா (மாடு-செல்வம்)
நாமகள் தானும் கற்றிட விரும்புதல் நம்முடைத் தமிழல்லவா
எல்லையில் காவியம் படைத்திவ் வுலகில் எழுந்தது தமிழல்லவா
என்றுமுள்ளது மீடிலா தெனும்புக ழேற்றது தமிழல்லவா
முல்லைக்குத் தேர் தரு வள்ளலை ஈந்தது முதுமொழி தமிழல்லவா
அல்லலுற்றின்று அவனியி லலைவது அருமைத் தமிழல்லவா

தமிழும் தமிழனும் வேறில்லை தரணியில் அவற்கொரு நாடில்லை
அமிழ்தினும் இனிய தோழர்களே அரைக் கணமாவது சிந்திப்பீர்


அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 12:02 pm

அன்புக்கும் மரியாதைக்கும் உரிய நந்திதா அக்கா ,மீனுவுக்காக நீங்க இங்கே போட்டு உள்ள சிறு கவிதை ..இது சிறு கவிதை இல்லை இது மீனுவுக்கு பெரிய பொக்கிஷமான கவிதை..இந்த கவிதைக்கு மீனு தகுதியே இல்லை..ஆனா ரொம்ப பெரிய சந்தோஷத்தை துள்ளலை தரும் சந்தோஷ கவிதை ..நன்றிகள் பல அக்கா ..
நீங்க என்னை சகோதரி மீனு என்று சொல்லும் போது நிறைய சந்தோஷத்தை தந்தாலும் ..உங்களிடம் மீனுவுக்கு வருத்தம் இருக்கு அக்கா..ஈகரை நண்பர்கள் எல்லோரும் உங்கள் கனிவான பேச்சை கேக்க மிகவும் ஆசை படுகிறோம்..நீங்க படித்தவங்க தமிழை உணவாகவே எடுப்பவங்க ..
உங்கள் கவிதையிலேயே..சொல்லி இருக்கீங்க...
ஒன்றரை அடியிலேயே உலகை அளந்தது உன்னத தமிழ் என்றும்,
தமிழால் முடியாதது எதுவுமே இல்லை என்றும்.. அப்போ நீங்க தமிழ் பிரியை அக்கா ..நந்திதா அக்கா நீங்க தமிழையே சுவாசிக்கும் அக்கா ..அந்த தமிழுக்கு உள்ள இனிமையை நாம் சில சமயம் மட்டும் உங்கள் பேச்சில் காண முடிவதில்லை ..இப்படி மீனு சொல்வதால் நீங்க மீனுவை கோபித்தாலும் எரித்தாலும் பரவாய் இல்லை அக்கா ..மீனுவை நீங்க சகோதரி என்று சொல்லும் போது மீனு அந்த உரிமையில் தான் கேக்கின்றேன் ..நான் மட்டும் இல்லை ஈகரை நண்பர்கள் எல்லோரிடமும் அன்பாய் கனிவாய் பேசுங்கள் அக்கா ..நமக்கு எல்லோருக்குமே உங்களை பிடிக்கும் என்பது பிடிப்பு செய்தி அக்கா..
அன்புடன் மீனு ..



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Sep 20, 2009 1:07 pm

அன்புச் சகோதரிக்கு
வணக்கம்.
கோபப் படுவது என் குணமல்ல. எனதருமைச் சகோதரியை எரிக்கவா எனக்கு இரு கண்கள்?
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 1:48 pm

அக்கா ..உங்களுக்கு கண்களை சிரிக்க கொடுத்து இருக்கார் கடவுள்.. ப்ளீஸ் அக்கா ..நம்ம கூட அன்பாய் இருங்கள்..உடனே அப்போ நான் கோபமா இருக்கேனா என்று கேட்டு மீனுவை கவலை படுத்தாதீங்க ..எங்களுக்கு உங்கள் அன்பு வேணும்..எங்களுக்கு நீங்க வேணும்..உங்களை நமக்கு ரொம்ப பிடிக்கும்..
உங்கள் ஆக்கங்களை நமக்கு தாருங்கள் அக்கா..
அன்புடன் மீனு



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 1:52 pm

மீனு வேண்டாம் விட்டிடு



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக