புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10 
5 Posts - 14%
heezulia
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mruthun
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 2:51 pm

First topic message reminder :

புதுமணத் தம்பதிகள், பச்சிளம் குழந்தைக்கு ஆரத்தி எடுப்பது ஏன்?

ஆரத்தி எடுப்பதற்காக பயன்படுத்தும் பொருட்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, கற்பூரம், நீர். ஒருவரை தண்ணீரால் சுழற்றி திருஷ்டி கழிக்கும் போது அவர் மீதான அனைத்து வகை கண் திருஷ்டியும் அகன்றுவிடும். இதனை நீர் வலம் விடுதல் என்று கூறுவர்.

பழங்காலத்தில் வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக அந்த உணவை நீர் கொண்டு ஆராதித்து விட்டு அதன் பின்னரே சாப்பிடத் துவங்குவர். இதுபோன்று செய்வதால் நாம் உண்ணும் உணவு புனிதப்படுவதாக அவர்கள் நம்பினர்.

புதுமணத் தம்பதிகள் திருமணம் முடிந்து மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வரும் காலத்தில் காத்து, கருப்பு உள்ளிட்ட தீவினைகள், சில கெட்ட சக்திகள், கண் திருஷ்டி உள்ளிட்டவையும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, புதுமணத் தம்பதிகள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக அவர்களுடன் வந்திருக்கலாம் எனக் கருதப்படும் தீய சக்திகளை அகற்ற திருஷ்டி கழிக்கப்படுகிறது.

இதேபோல் வீட்டின் வாரிசை சுமந்து வரும் தாயின் மீதும், குழந்தையின் மீதும் கண் திருஷ்டி இருக்கும் என்பதால் அந்த குழந்தை முதன் முதலாக தந்தை வீட்டிற்கு வரும் போது ஆரத்தி எடுக்கின்றனர். இதனை கவுரவிக்கும் விதமாகவும் கருதலாம்.

ஆரத்தி எடுக்கும் போது பயன்படுத்தப்படும் நீர், நெருப்பு (கற்பூரம்), இலை (வெற்றிலை) ஆகியவற்றுக்கு எந்த தீய சக்தியையும் விரட்டும் ஆற்றல் உண்டு. திலகம் இடும் பழக்கமும் சங்க காலம் முதலே இருந்து வந்தததும் குறிப்பிடத்தக்கது.




ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 4:56 pm

கணபதி ஹோமத்தின் முக்கியத்துவம் என்ன?

புது வீடு அல்லது அலுவலகத்திற்காக குடிபுகும் போது கணபதி ஹோமம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்கள்? எல்லோரும் இதனை மேற்கொள்ள வேண்டுமா? இதன் முக்கியத்துவம் என்ன?

‌பதில்: வினைகளை தீர்க்கக் கூடியவர் விநாயகர் என்பது ஐதீகம். விநாயகர் உருவமற்றவர். இதற்குக் காரணம் மஞ்சளைப் பிடித்து வைத்து கூட விநாயகராக வணங்கலாம். பழங்காலத்தில் பசும் சாணத்தை விநாயகராகப் பிடித்து வழிபட்டுள்ளனர். பசுவின் சாணத்தை தேவப்பிரசாதம் என்று பழைய நூல்கள் கூறுகின்றன.

நிலத்தில் படாமல் புல், செடி கொடிகளின் மேல் விழும் காராம்பசுவின் சாணத்தை பஸ்பமாக்கி, அதனை நெற்றியில் விபூதி போல் பூசினால் அது நோய்களைத் தீர்க்கும் மருந்தாக விளங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சைனஸ், சளித் தொந்தரவுகளுக்கு இது நல்ல பலனை அளிக்கும்.

கிரகப் பிரவேசத்தின் போது, வெற்றிலையின் மேல் பசுஞ்சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, விநாயகர் அகவலைப் பாடி, தாராளமாக கிரஹப் பிரவேசம் செய்யலாம். எனவே, கணபதி ஹோமம் செய்து விட்டுதான் கிரஹப் பிரவேசம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.

விநாயகரை மனதார வழிபட்டாலே முழுமையான பலன்களை எதிர்பார்க்கலாம். கணபதி ஹோமம் செய்யவில்லை என்பதால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. எந்த ஒரு காரியமாக இருந்தாலும் விநாயகரை வணங்கி விட்டுத் துவங்க வேண்டும். அதற்கு இதெல்லாம் எளிய முறைகள்.

நல்ல முகூர்த்த தினத்தில் கணபதி ஹோமம் செய்ய குருக்கள் கிடைக்கவில்லை என்றால், மேற்கூறிய முறைகளைப் பின்பற்றி விநாயகரை வணங்கலாம். புதிய வீட்டில் குடிபுகுந்த பின்னர் 2 அல்லது 3 மாதம் கழித்து கணபதி ஹோமம் செய்தாலும் தவறில்லை.

எனவே, பசுவின் சாணத்தையும், அருகம்புல்லையும் விநாயகராகப் பிடித்து, தெரிந்த விநாயகர் மந்திரங்களை சொல்லி வழிபட்ட பின்னர் பால் காய்ச்சி குடிபுகுந்தாலும் எந்த பாதிப்பும் வராது.




ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 4:57 pm

பசுவின் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை சிறந்த கிருமி நாசினி என்று கூறுகிறார்களே?

இந்து மதத்தைப் பொறுத்தவரை பசு தெய்வமாகவே வணங்கப்படுகிறது. பசுவின் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தெய்வங்கள், தேவர்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

பசுவின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் மனிதர்களுக்காகவே பயன்படுகிறது. உதாரணமாக தன் இரத்ததை அது பாலாக மாற்றித் தருகிறது. அதன் கொம்புகள் பல்வேறு பயன்பாடுகளுக்கும், அதன் தோல் மேளம் செய்வதற்கும் உதவுகிறது. தன்னலமற்றவர்களை உலகம் வணங்கும் என்பதற்கு பொருளாகவே பசுவை வணங்குவதை இந்து மதம் போதித்துள்ளது.

தாய்ப்பாலுக்கு இணையான மருத்துவ குணமும், புரதங்களும் பசும் பாலில்தான் உள்ளது. ஆட்டுப் பாலில் கூடுதலான புரதங்கள் இருப்பதாக அறிவியல் நிரூபித்தாலும், அது ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் பசும்பால் உடனடியாக செரிக்கும்.

இதிலும் காராம் பசு வகை சில ரக புற்களை மட்டுமே உணவாகக் கொள்ளும். சாதாரண வகை பசுவுக்கும், காராம் பசுவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. புராணங்களில் கூறப்பட்டுள்ளது போல் இறைவனில் திருமேனி மீது தானாகவே பால் சுரக்கும் வகையைச் சேர்ந்தது காராம் பசுவே. பல கோயில்களின் ஸ்தல வரலாற்றில் இவை கூறப்பட்டிருக்கும்.

தெய்வத்தன்மை உடைய காராம் பசுவின் பால் சுவையும், மருத்துவ குணங்களும் உள்ளதாக இருக்கும். இதற்கு காரணம் மூலிகைகளுக்கு ஒத்த தன்மையுடைய புற்களை மட்டும அது உண்ணும். சந்தைகளில் விற்கப்படும் தீவனங்களை அது விரும்பாது உண்ணாது.

தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவை கலந்த புளித்த நீரைக் கூட காரம் பசு குடிக்காது. இயற்கையாக கிடைக்கும் தண்ணீரைத்தான் அது குடிக்கும்.

இதன் காரணமாகவே அதன் சாணம் மருத்துவ குணம் மிக்கதாகத் திகழ்கிறது. இந்த சாணத்தை நிலத்தில் படாமல், அருகம்புல்லின் மேல் விழ வைத்து, அந்த அருகம்புல்லுடன் அதனை தீயிலிட்டு திருநீறு போல் ஆக்கி, அதனை பூசி வந்தால் தீராத நோயும் தீரும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

இதேபோல் பசுவின் சிறுநீரும் (கோமியம்) மருத்துவ குணம் மிக்கதாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே கிரஹப் பிரவேசத்தின் போது வீட்டிற்குள் கோமியம் தெளிப்பதையும், பசுவை வீட்டைச் சுற்றில் வலம் வரை வைத்து அதனை வீட்டிலேயே சிறிநீர் கழிக்க வைப்பதையும் இந்து மதத்தினர் கடைப்பிடிக்கின்றனர். இதன் காரணமாக அந்த வீட்டிற்கு இறைவன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பசுவை வணங்காத சித்தர்களோ, சாமியார்களோ இல்லை என்று கூடக் கூறும் அளவுக்கு பசுவின் மீதான பக்தி உள்ளது. உதாரணமாக கிருஷ்ணர் கோகுலத்தில் பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்தான். இதேபோல் ஏசுநாதர் பிறந்ததும் தொழுவத்தில். பாலைவன சித்தர் என்று புகழப்படும் முகமது நபிகளும் பசுவை நேசித்தவர்.

பசுவின் மகத்துவமும், தெய்வீகத் தன்மையும் நல்லவர்களுக்கே புரியும். உதாரணமாக ராமாயணத்தில் பரதனை விட்டு ராமனைப் பிரியும் போது, பரதன் வேதனை தாளாமல் புலம்புவார். உன்னை (ராமர்) பிரியும் அளவுக்கு என்ன பாவம் செய்தேன்; பசுவுக்கு உணவு வழங்காமல் இருந்தேனா; இல்லை கன்று பால் குடிக்கும் சமயத்தில் அதனை தாய்ப் பசுவடம் இருந்து பிரித்தேனா; பசுவை அடித்துத் துன்புறுத்தினேனா?... என்றெல்லாம் கூறி வருந்துவார்.

உலகில் உள்ள பசுக்கள் அனைத்தும் தமிழ் மொழி பேசுகிறது என்பது வாரியாரின் அறிவுப்பூர்வமான வாதம். எனவே இறைவனால் படைக்கப்பட்ட முதல் மொழி தமிழ் என்பதும் அவரது கூற்று.

தெய்வீகத் தன்மை காரணமாகவே தேவலோகத்தில் கூட பசு (காமதேனு) வணங்கப்பட்டதாக புரணங்கள் கூறுகின்றன. எனவே பசுவை வணங்க வேண்டும்.

சிறந்த கிருமி நாசினி: கிராமப்புறங்களில் அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு அதிகளவில் சொறி, சிரங்கு போன்ற தொற்றுகள் ஏற்படும். அதே மாணவர்கள் விடுமுறைக்காக வீடு திரும்பும் போது வைத்தியர்களிடம் சென்றால், அவர்கள் பசுவின் சாணத்தை அள்ளி தொழுவத்தை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளச் செல்வர்.

அப்படி கோமியம் கலந்த பசுவின் சாணத்தை கையில் அள்ளி சுத்தம் செய்வதன் மூலம், அது உடலின் பல்வேறு பகுதிகளிலும் கோமியம் கலந்த சாணம் படும் வாய்ப்பு ஏற்படும். பசுவின் சாணமும், கோமியமும் சிறந்த கிருமிநாசினி என்பதால் மாணவர்களின் தொற்றுகள் மறைந்து விடும்.

அதேபோல் பசுவின் சாணத்தை தலையில் சுமந்து சென்று கொட்டுவது, பசுவின் தொழுவத்தை தூய்மைப்படுத்துவது உள்ளிட்டவை சிவனுக்கு தொண்டாற்றுவதற்கு சமமானது என இந்து மத நூல்கள் கூறுகின்றன.

சில 10 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டிற்கு ஒரு பசு என்று இருந்த நிலை மாறி, தற்போது ஊருக்கு ஒரு கோசாலை (பசு மடம்) உருவாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.

தற்போதுள்ள பசு வதை தடுப்புச் சட்டம் கூட முழுமையாக அமலில் உள்ளதா எனச் சந்தேகமாக உள்ளது. எனவே பசு பாதுகாப்பு அல்லது மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் நாடு சுபிட்சமடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

யூரியா உள்ளிட்ட செயற்கை உரங்களை பயன்படுத்தாமல், பசுவின் சாணத்தை கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை எந்தவித பாதிப்பும் இல்லாத நெல், அரிசி கிடைக்கும். இதனை உட்கொண்டால் சர்க்கரை வியாதி உள்ளிட்ட இதர வியாதிகள் வராமல் தடுக்க முடியும்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த், ‘வெள்ளை நிறமுள்ள உணவுப் பொருட்களை தாம் ஒதுக்கிவிடுவதே தனது இளமையின் ரகசியம்’ என்று கூறியதில் இந்த வகை அரிசி இடம்பெறாது.

நகரத்தில் உள்ள பசுக்கள் போஸ்டர்களை தின்று விட்டு பால் கறக்கிறது. அதனைப் பருகுவதால் வேண்டுமானால் நோய் வரலாம். ஆனால் காராம் பசுவின் பால் எந்தக் கெடுதலும் செய்யாது.

பதப்படுத்தப்பட்ட பால் என்று விற்பனை செய்யப்படுவது சுத்தமான பசுவின் பால் கிடையாது. அதில் எருமைப்பால் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் காராம்பசுவின் பாலை குடித்தால் எந்த நோயும் வராது.




ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 4:58 pm

ருத்ராட்சம் அணிவது பற்றிக் கூறுங்கள்?

இந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு.

சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோத்திரம். சனியை இரண்டு பக்கத்திலும் வைக்கலாம்.

செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன்றும் சைவக் கிரகங்கள், சைவக் கடவுள்கள் ஆகும். செவ்வாய் - முருகன், குரு - தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள்.

இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம் அணிந்தால் பிரம்மாண்டமாக முன்னுக்கு வருவார்கள்.

அதிலேயும் ருத்ராட்சத்திலும் ஒன்று முதல் பல முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ஆனால் எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்கக் கூடிய ருத்ராட்சங்களே. அதில் எந்த மாறுபாடும் இல்லை.

ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றபடி அதில் மருத்துவ குணங்களும், ஆன்மீக குணங்களும் உள்ளன. பல்வேறு நூல்கள் இதைப் பற்றிக் கூறுகின்றன.

ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது.

அதற்காகத்தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.

ஏழரை சனி, அஷ்டமத்து சனி எல்லாம் வந்தாலே பலர் தானே ருத்ராட்சத்தை விரும்பி அணிவதைப் பார்த்திருக்கிறேன். ஏழரை சனி, அஷ்டமத்து சனி வந்தால் பழமையானவற்றை விரும்புவார்கள். ருத்ராட்சம், யானை தந்தம், யானை முடி மோதிரம் போன்றவற்றை அணிவார்கள்.

மற்றவர்களிடம் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக அல்லது அந்தப் பொருளின் மீதுள்ள ஒரு நம்பிக்கையினால் அவ்வாறு செய்வார்கள்.

சனி தசை நடக்கும்போது தன்னம்பிக்கையை விட மற்ற பொருட்களின் மீதுதான் நம்பிக்கை அதிகமாக இருக்கும். அதை அணிந்து கொண்டால் அதனால் நமக்கு நன்மை அளிக்கும் என்றெல்லாம் நினைப்பார்கள்.

சனி ராசி உள்ளவர்களும் ருத்ராட்சத்தை விரும்பி அணிவார்கள். மகரம், கும்ப ராசிக்காரர்கள் ருத்ராட்சத்தை விரும்புவார்கள்.

ருத்ராட்சத்தை அணியலாம். அதனால் நல்ல பலன்கள்தான் கிட்டும்.




ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 5:01 pm

மரண யோகம், சித்த யோகம் என்றால் என்ன?

குறிப்பிட்ட திதியும், நட்சத்திரமும் சேர்ந்து அந்த கிழமையும் வந்தால் அது மரண யோகம், அதுபோலவே குறிப்பிட்ட திதியும், நட்சத்திரமும் வந்தால் சித்த யோகம். எல்லாமே ஒரு கணக்குத்தான்.

ஞாயிற்றுக்கிழமை உத்திரட்டாதி அமாவாசை திதி என இன்று மூன்றும் சேர்ந்தால் அன்று அமிர்தயோகம்.

அடுத்து, ஞாயிற்றுக்கிழமை வேறு ஒரு திதி மற்றும் நட்சத்திரம் அன்று வேறு யோகம் வரும்.

ஒரு சில யோக நாட்களில் சுப காரியங்கள் செய்யலாம். மரண யோகம் போன்ற நாட்களில் சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது.


மரண யோகம் என்று ஏன் பெயர் வைத்தார்கள்?

மரண யோகம் என்பது மரணத்தைக் குறிப்பது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அன்றைய தினம் செய்யும் எந்த காரியமும் விருத்தி அடையாது. அதனால் தான் அன்றைய தினம் சுப காரியங்களை தவிர்க்கச் சொல்கிறார்கள்.

சித்த யோகம் என்றால் சித்தியாகுமா?

அப்படி எல்லாம் இல்லை. ஒரு சிலருக்கு மரண யோகமே நன்றாக இருக்கும். அதாவது அவர்களுக்கு ஜாதகமே எதிர்மறையாக இருக்கும். அதனால் அவர்களுக்கு மரண யோகம் நல்ல பலனைக் கொடுக்கும்.

எல்லாருக்கும் பொதுவானது அல்ல பஞ்சாங்கம் அப்படித்தானே?

நிச்சயமாக. பொதுவாக பஞ்சாகத்தைப் பார்க்கக் கூடாது. இன்று சுப முகூர்த்தம் கம்பெனி ஆரம்பிக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் அவனுக்கு அன்று சந்திராஷ்டமமாக இருக்கும். அவனுக்கு அன்றைய தினம் ஒத்து வராமல் போகக்கூடும்.

எல்லாமே நல்லது, எல்லாமே கெட்டது. அதில் எது யாருக்கு எது நல்லது, எது கெட்டது என்று பிரிக்க வேண்டும் அதுதான் உண்மையான ஜாதகம்.



ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 5:05 pm

முக்கிய குறிப்பு :- இங்கு பகிரப்பட்ட அனைத்து தகவல்களும் சுக்ரவர்த்தனி.org இணயத்திலிருந்து பகிரப்பட்டது




ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Sep 05, 2011 5:10 pm

பாலா அனைத்தும் நல்ல தகவல்கள் .
சூப்பருங்க :வணக்கம்:



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 Mgr
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 6:11 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக