புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_m10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10 
366 Posts - 49%
heezulia
தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_m10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_m10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_m10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_m10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10 
25 Posts - 3%
prajai
தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_m10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_m10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_m10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_m10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_m10தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...!


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Sep 05, 2011 12:26 pm

மருத்துவமும் விஞ்ஞானமும் வளர வளர... சுகாதாரம் தொடர்பான புதுப்புது அச்சுறுத்தல்கள் பற்றிய செய்திகளும் புறப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. லேட்டஸ்ட் வரவு ஈ-கோலை (E coli-Escherichia coli)

''உயிருக்கே உலை வைக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான ஒரு வகை பாக்டீரியாதான் இப்போது பரவிவரும் ஈ-கோலை. இந்தியாவுக்குள் இந்தப் பாதிப்பு இன்னும் வரவில்லை. இது ஆறுதலாக இருந்தாலும், இந்த பாக்டீரியா பரவக்கூடிய அபாயத்துக்கான பாதையாக இந்தியாவின் சுகாதாரம் இருப்பதுதான் வேதனை!'' என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

ஈ-கோலை பாக்டீரியா பாதிப்பை முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கைகள். இப்போது வலியுறுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக... ஈ-கோலை பாக்டீரியா பெண்களிடத்தில் பரவுவதற்கான சாத்தியம் அதிகம் இருக்கிறது. தாம்பத்யம் வாயிலாகப் பரவி, குடும்பத்தின் நிம்மதியைக் குலைக்கிற அளவுக்கு ஈ-கோலை மாறும் அபாயம் இருக்கிறது என்பதற்காகவே இந்த விழிப்பு உணர்வு கட்டுரை.

உ.பி. மாநிலத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியரும், சிறுநீரக சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஷஹஜாத் ஃபக்ருல் ஹக் இதுகுறித்து விரிவான தகவல்களை இங்கே விளக்குகிறார்.

''மனித உடலிலேயே ஈ-கோலை பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இவை, உணவு ஜீரணத்துக்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவுகின்றன. மலம் கழிக்கும்போது சரியாக சுத்தப்படுத்தாவிட்டால், மலத்தின் மூலம் வெளியேறும் இந்த பாக்டீரியாவே நமக்கு தீமை செய்யக்கூடியதாகவும் மாறிவிடும். இதைத் தவிர சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் வாயிலாகவும்... சுகாதாரமற்ற இடங்களில் மல, ஜலம் கழிக்கும்போது பிறப்புறுப்புகளில் தொற்றுவதன் வாயிலாகவும் உடலில் பரவ வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இத்தகைய தொற்று ஈ-கோலையை விரட்டியடிக்க நவீன மருந்து மாத்திரைகள் நிறைய வந்துவிட்டன. அதனால், அச்சம் கொள்ளவேண்டாம்!'' என நம்பிக்கையான வார்த்தைகளை சொன்ன டாக்டர் தொடர்ந்தார்.

''யூ.டி.ஐ. ((UTI-Urinary Tract Infection)யூ.டி.ஐ. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தாங்கமுடியாத எரிச்சல், முதுகுவலி, குளிர் காய்ச்சல்... போன்ற தொல்லைகளால் அவதிப்படுவார்கள். இதற்குச் சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காதபோது... நாளடைவில், சிறுநீரகத்தைப் பாதித்து உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் உண்டு. இதில் இருந்து தப்பிக்க சாத்தியமான எளிய வழி இருக்கிறது. சுத்தமான தண்ணீரை அதிகம் குடித்தாலே... பாதிப்பை ஓரளவுக்குக் குறைத்துவிடலாம்!

'யூ.டி.ஐ.’ என்பது தொற்று நோய் வகையைச் சேர்ந்தது என்பதால், பாதிக்கப்பட்ட நபர்கள் நோய் முற்றிலும் தீரும்வரை உடலுறவைத் தள்ளிப் போடுவது நல்லது. அல்லது ஆணுறையைப் பயன்படுத்தலாம். மனைவிக்கு யூ.டி.ஐ. பாதிப்பு அடிக்கடி இருந்தால், முதலில் கணவருக்குதான் விந்து பரிசோதனை செய்ய வேண்டும். பாதிப்பு இருக்கும்பட்சத்தில், உடலுறவின்போது குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே விந்து வெளியாகிவிடும். ஏனெனில், ஆண்களின் சிறுநீரகத்திலிருக்கும் 'புராஸ்டேட்’ எனும் சுரப்பி, சிலசமயம் வயதின் காரணமாக அளவில் பெருத்துவிடும். அப்போது புராஸ்டேட்டில் ஈ-கோலை தாக்குதலும் அதிகமாக இருக்கும். இதனால், விந்து முந்துதல், மலட்டுத் தன்மை, சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் அணிவகுக்கும்.

ஈ-கோலை பாதித்த தன்மையைப் பொறுத்து ஆன்டிபயாட்டிக் ஊசி மற்றும் மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் பாதிப்புகளைக் குறைக்கவும், அறவே அதன் பிடியில் இருந்து நம்மை காத்துக்கொள்ளவும் ஒரே வழி'' என்றவர், ஈ-கோலை தொற்று நோயைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் சொல்ல ஆரம்பித்தார்.

''மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் அந்தப் பகுதியை சுத்தமாக கழுவி விடவேண்டும். ஆண், பெண் இருவரில் ஒருவர் மலம் கழித்துவிட்டு, தங்கள் உறுப்பை சுகாதாரமாக வைத்துக் கொள்ளாமலிருந்து, அந்த நேரத்தில் உடலுறவு வைத்துக் கொண்டாலும்... இந்த ஈ-கோலை பரவக்கூடும். அதேபோல... உடலுறவுக்குப் பிறகு, பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டும். அசதியாலோ அக்கறையற்ற போக்காலோ பலரும் அப்படியே உறங்கிவிடுகிறார்கள். அது தவறு. தாம்பத்தியத்தில் தொற்றுக்கு வாய்ப்பு ஏற்படாதபடி இயற்கையாகவே சில ஏற்பாடுகள் இருந்தாலும், இத்தகைய பாக்டீரியா பாதிப்புகளில் இருந்து தப்பிக்க... உறவுக்குப் பின்னர் சுத்தம் அவசியமாகிறது. வாழ்கைத் துணை தவிர, மற்றவர்களுடன் உடலுறவு கொள்வதையும் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். மொத்தத்தில், நம் உடலைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் யூ.டி.ஐ. தொல்லை நம்மை நெருங்கவே நெருங்காது!'' என்றார் உறுதியுடன்.

எப்படி வருகிறது ஈ-கோலை?

உடலுக்கு கேடு விளைவிக்கும் ஈ-கோலை பாக்டீரியா எப்படி பரவுகிறது என மைக்ரோபயாலஜி நிபுணர்கள் சிலரிடம் கேட்டோம். ''ஈ-கோலை பாக்டீரியாக்களில் பல வகை இருக்கின்றன. ஒவ்வொரு பாக்டீரியாவும் ஒவ்வொரு விதத்தில் பரவும். மலத்தில் உள்ள ஈ-கோலைகளில் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை அதிகம். குறிப்பாக... ஆடு, மாடுகளின் சாணங்களிலும் இந்த ஈ-கோலை பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சாணத்தை சுகாதாரமற்ற முறையில் பயன்படுத்துவது சர்வ சாதாரணமாக நடக்கும். மிகச்சுத்தமாகக் கழுவிய பிறகே இதர வேலைகளில் ஈடுபட வேண்டும். இல்லையேல் அந்தத் தொற்று எளிதாக நடந்துவிடும்.

மேலை நாடுகளில் வேகவைக்காத காய்கறிகள், மாட்டுக்கறி மூலமாக ஈ-கோலை பாக்டீரியா பெரிய பாதிப்பை உண்டாக்கி வருகிறது. ஈ-கோலை பாதிப்பு ஏற்பட்ட உடன் எந்த அறிகுறியும் தெரியாது. 24 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரத்தில் அதன் பாதிப்புகள் தெரியத் தொடங்கும். திடீர் வயிற்றுப்போக்கு வந்தால்... உடனடியாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது!'' என்கிறார்கள் உஷார்படுத்தும் விதமாக.

உறவில் உஷார்!

உடல் உறவுக்குப் பிறகு பிறப்பு உறுப்புகளை சுத்தப்படுத்தும் அவசியம் குறித்து செக்ஸாலஜி நிபுணர் நாராயணரெட்டியிடம் கேட்டோம். ''உறவுக்கு முன்னர் குளித்து சுத்தபத்தமாக இருப்பதுதான் மிக அவசியம். அதேசமயம், உறவுக்குப் பின்னர் பிறப்பு உறுப்புகளில் இருக்கும் பிசுபிசுப்பால் பெரிதாக எந்தப் பிரச்னையும் உருவாகாது. காரணம், அவை நம் உடலுக்குள்ளேயே சுரக்கும் ஒன்றுதான்.

ஆனால், சில மேலை நாடுகளில் மலம் வழியாக ஈ-கோலை பாக்டீரியாக்கள் பரவுவதாக தெரியவந்திருக்கிறது. அதனால், இயற்கைக்கு முரணான உறவு கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்கிற நெறிமுறைகளோடு வாழும் நம்நாட்டு கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள் இதுகுறித்து அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை!'' என்றார் உறுதியாக.

- -அவள் விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக