புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
68 Posts - 41%
heezulia
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
prajai
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
manikavi
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
319 Posts - 50%
heezulia
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_m10  என் அன்னை, என்தேசம்! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அன்னை, என்தேசம்! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 03, 2011 1:40 pm

பகுதி 1

என்னோர் எழில்! நிலவோ ஏறிவான் வீதியிலே
மின்னும் தனதொளியை மேதினியி லூற்றுங்கால்
தன்னந் தனிநடந்து தங்கநில வொளிகுளித்து
முன்னே என்பாதையில் மேற்குவழி நடந்தேன்

வெண்மை நிலவொளியின் வீச்சினிலே முன்னாலே
கண்முன் னெழில்தோற்றம் கைவரையு மோவியமாய்
எண்ண சிறுவயதின் எழிலுட்டும் கனவுகளாய்
தண்ணிலவில் மங்கித் தெரிந்தபோ தவள்கண்டேன்

மண்ணோடு தூசுபட மைவிழிகள் கோபமுற
விண்ணோ டெறித்தநிலா வீசுமொளி மின்னலிலே
பெண்ணின் திடமிழந்து பேசற்கரியவளாய்
திண்மை யிழந்து,வரும் தென்றல் உடல்சரிக்க

நின்றாள் துயர்பெருத்த நீள்விழிகள் நீர்சொரிய
தென்றல் தொடுந்தேகம் தீயெனவே வேகிவிட
கன்னம் எழில்சிதையக் கண்ணீரும் காய்ந்திருக்க
என்னோர் துயரடைந்தாள் ஏதறியேன் என்றதனால்

பெண்ணே பெருந்தகையே பெயரேது நானறியேன்
கண்ணீர் வழிவதுமென் காரணமும் தானறியேன்
மண்ணில்பெருவாழ்வு மாதுகொண்ட தாய்வதன
வண்ணம் தெரியுதம்மா வந்ததிங்கு ஏதென்றேன்

நெஞ்சம் அழுதுகொள நிர்க்கதியாய் ஏந்திழையோ
கொஞ்சம் எனதுகுரல் கொடுத்த மனத்துணிவில்
வஞ்சம் இழைத்தாரே வாழ்விலோர் சிங்கமகன்
நஞ்சின் நெஞ்சத்திரு நாட்டின் கொடியவனாம்

எந்தன் பெயரீழம் இன்பமுடன் தேன்தமிழைச்
சொந்தம் கொண்டே நிலத்தை சுற்றிவர மைந்தரவர்
வந்தோர் பகையறுத்து வாழ்வுதர வீரமுடன்
செந்தேன் தமிழ்வளர்த்து சீருடனே ஆண்டிருந்தேன்

பூவிரியப் புள்ளினங்கள் பொன்வானில் நீந்திவர
தாவிவிழுந் தோடும்நதி தமிழ்வாழ்த்தி இசைபாட
வாவிதனில் நீரோடி வட்டஅலைப் பூமலர
பூமிதனில் ஈழமெனும் பொன்நாட்டுக் கதிபதிநான்

என்னோர் அழகுடனே ஏற்றமுடன் நான்வாழ
வன்மை கொண்டேயுலகு வாழ்வை அழித்ததையோ
இன்னும் உயிர்களைந்து இதுபோதா ஊரழித்து
பொன்போலும் பூமிதனை பேய்வாழச் செய்தார்கள்

கொஞ்சங் குரல்நடுங்க கோதையுடல் தான்துடித்து
பஞ்சாம் முகில்நடுவே பாயுமிடி மின்னலென
நஞ்சின் கொடுமைகொள் நாகம் தீண்டியதாய்
நெஞ்சம் துடிதுடித்தே நினைவழிய மேலுரைத்தாள்

(2ம் பகுதி கீழே பார்க்க)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 03, 2011 1:45 pm

பகுதி 2

அந்தோ படுந்துயரம் அத்தனையும் என்சொல்வேன்
நிந்தை புரிந்தவரோ நெஞ்சழவே கேடுசெய்தார்
இந்தோர் நிலையடைய இன்னலிட்ட எத்தர்தனை
வந்தே விரட்டிவிடு வாய்மை நிலைநாட்டிவிடு .

எங்கே உலகநீதி எங்கே உரிமையென்று,
செங்கோல் பிடித்தவர்கள் செய்வதென்ன கேளாய்
பொங்கும் தமிழ்க்குரலை பேச்சை நெரித்தழித்து
சங்கை எடுத்தூதி சாவைஎமக் கீந்தாரே

பொன்னால் மணிமுடியும் பெற்றதோர் பெருவாழ்வும்
தன்நேர் நிகரற்ற தமிழ்வாழும் தேசமென
மின்னேர் விளைபுயலின் வேகமெடு மைந்தர்களும்
முன்னே துணையிருக்க முத்தமிழின்மூச்செடுத்து

பன்நூற் கலைவளமும்; பண்ணிசைகள் நற்றமிழாம்
முன்னோரின் காவியங்கள் மூத்தோர் பழங்கலைகள்
என்னை மகிழ்வுசெய எத்தனையோர் இன்பமுடன்
மன்னர் மணிமுடிகொள் மாவீர ஆட்சிகண்டோம்

அணிகொள் அழகோடு அறத்தின் வழிநடந்தோம்
பிணிகொள் அரசுசில போரென்று நீதிகொன்றார்
பணியா உளஉரமும் பாதையிலே நேர்நடையும்
துணிவோ டுயர்மறமும் துள்ளிவரும் போர்முடித்து

குனியா துணர்வுபொங்க கொள்கைவழி நீதியுடன்
தனியாய்அரசுகண்ட தாயின்நிலை இன்றறிவாய்
இனியேன் மௌனமடா இன்னலிடும் பாதகரை
தனியோர் இனமழிக்க தட்டிப்பதில் கேட்டிடடா

ஈழமகள் கண்களிலே எழுந்தோடும் நீராறு
ஆழமன துன்பமதை ஆற்றாமை தான்விளக்க
வீழுமீர் பூங்கரங்கள் வீரமகள் கால்கள்தனும்
பாழும் பகைபிணைத்து பாடுபெருந் துன்பமிட்டார்

கேழாயென் சின்னவனே கீழாம்நிலை யடைந்தோம்
நாளுமவர் திட்டமிட்டே நாட்டின் குடிகொல்லுகிறார்
மாளுமிந்த மக்களுயிர் மகனேநீ காத்திடடா
வாழுமிக் காலமதில் வாசல்வரை தள்ளிவைத்தார்

நாளைஎமை வீதியிலே நாட்டோரம் ஆழ்கடலில்
சூழைதனில் தள்ளியெமை சுற்றிவரத் தீயிடுவார்
மாளமுழு தாயெரித்து மண்ணதனை கொண்டிடுவார்
வாழவென நீஎழுந்து வையகத்தை கேட்டுவிடு

இல்லையெனில் நீயறிவாய் எமதழகுத் தமிழ்த்தேசம்
வல்லோர் அரசுகளின் வாயிலுண வாகிவிடும்
மெல்லத் தமிழழியும் மேதினியில் என்பதனை
பொல்லாப் பெரும்புழுகாய் பூமியிலே ஆக்கிவிடு

துள்ளியெழு உன்னுயிரும் துடிக்கத் துணிவுடனே
தெள்ளுதமிழ் வெல்லுமொரு திக்கைக் கருத்திலெடு
கள்ளினிமை பூமென்மை காற்றின் சுகம்யாவும்
உள்ளதமிழ் வாழஇனி உன்கடமை ஆற்றிவிடு

மங்கும் மதியொளியில் மங்கையவள் சொல்லிவிட
எங்கோ இருந்தெழுந்த இடியோடு புயலெனவே
பொங்கும் பெருஞ்சுழலோ பூவையவள் முன்னுருள
தங்கஒளி தானுருக்க தலைமறைந்து போயினளாம்

--அன்புடன் கிரிகாசன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக