புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
முன்னுரை
கதையோ, கவிதையோ எல்லாமே செய்யப்படுவதுதான். யுகங்களாக நீள விரியும் கணங்களோ, திரும்பிப் பார்ப்பதற்குள் கடந்து மறையும் பத்தும் இருபதுமான வருடங்களோ, மனதில் சூல் கொள்ள வைத்த அனுபவமும் அதன் தாக்கமும் வார்த்தைகளைத் தேடித் தேடி எழுத்தில் வடிக்கும்போது, செயற்கைத் தனம் எப்படியோ கலந்து ஏதோ ஓர் அளவில் அந்நியப்பட்டுத்தான் போகிறது.
அதையும் மீறிப் படைப்பு வெற்றி பெறுகிறது என்றால், ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அந்தக் கவிதைக்குள் வாசகர் தன்னுடைய கவிதையை எழுதிக் கொள்கிறார். எழுத்துக்கும் எனக்கும் உள்ள இருபதாண்டு உறவு கவிதையில் தொடங்கியது. என் உரைநடையைச் செம்மைப் படுத்தியது கவிதையே. சிறுகதையிலும், குறுநாவலிலும் மும்முரமான பிறகு, இந்தக் கவிதைகளைத் திரும்பப் படிக்கும்போது, ஒவ்வொன்றுக்குள்ளும் இருக்கும் கதைதான் உடனடியாக மனதில் படுகிறது. இதை எல்லாம் கதையாக எழுதியிருந்தாலும் இந்தத் தொனிதான் இருந்திருக்கும் என்ற நினைப்பும் கூடவே ஆசுவாசமாக எழுகிறது. கவிஞர் மீராவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் ஊர்க்காரரும், என் கல்லூரி ஆசிரியருமான அவருடைய பிரபலமான ’கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ என்னைப் பாதித்திருக்காவிட்டால் முதல் கவிதையை எழுதியிருக்க மாட்டேன்.
இந்தக் கவிதைகளில் பெரும்பான்மையானவை கணையாழியில் வெளியானவை. இருபத்தைந்து வருடங்களாகக் கணையாழியில் கவிதைகளும், "முன்பிருந்த தரத்தில் கவிதைகள் இல்லை. கவிதைத் தேர்வில் கவனம் தேவை" என்று கடிதங்களும் தொடர்ந்து வருவதிலிருந்து ஆங்காங்கே எல்லோரும் அடிக்குச்சிக் கவிதைகளை வைத்திருப்பது புலப்படுகிறதோ இல்லையோ, ’இன்றைய தேதியில் எழுதப்படுவது மோசமான எழுத்து’ என்ற எண்ணம் பரவலாக இருப்பதாகத் தெரிகிறது. சங்க காலத்திலும், இப்படி அதற்கு முந்திய காலத்தை உற்சாகமாகக் கையைக் காட்டித் திருப்திப்பட்டிருக்கலாம்!
என் கவிதைகளை வெளியிட்ட கணையாழிக்கும், மற்றப் பத்திரிகைகளுக்கும் நன்றி. சிற்றிதழ் வட்டாரத்தில் மட்டும் தெரிந்திருந்த என்னை வெகுஜனப் பத்திரிகை வாசக வட்டத்திலும் பலமாக அறிமுகம் செய்த ’எங்க வாத்தியாரை’ (சுஜாதா) இங்கே நினைக்காவிட்டால், "இன்றைக்கு ராத்திரி சோறு கிடைக்காது;"
’ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்’ சென்னை ஸ்நேகா பதிப்பகம் வெளியீடாக வந்தது. நேர்த்தியான அச்சமைப்போடு கூடிய அதன் முகப்போவியத்தைச் சிறந்த நவீன ஓவியர்களில் ஒருவரான ஆதிமூலம் வரைந்திருந்தார். என் நண்பர் எழுத்தாளர் - கவிஞர் - ஓவியர் யூமா வாசுகி புத்தகத்துக்கு உள்ளே தான் இக்கவிதைகளை உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில் அற்புதமான கோட்டோவியங்களை வரைந்தளித்திருந்தார். இருவருக்கும் என் நன்றி.
இரா.முருகன்
முன்னுரை
கதையோ, கவிதையோ எல்லாமே செய்யப்படுவதுதான். யுகங்களாக நீள விரியும் கணங்களோ, திரும்பிப் பார்ப்பதற்குள் கடந்து மறையும் பத்தும் இருபதுமான வருடங்களோ, மனதில் சூல் கொள்ள வைத்த அனுபவமும் அதன் தாக்கமும் வார்த்தைகளைத் தேடித் தேடி எழுத்தில் வடிக்கும்போது, செயற்கைத் தனம் எப்படியோ கலந்து ஏதோ ஓர் அளவில் அந்நியப்பட்டுத்தான் போகிறது.
அதையும் மீறிப் படைப்பு வெற்றி பெறுகிறது என்றால், ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அந்தக் கவிதைக்குள் வாசகர் தன்னுடைய கவிதையை எழுதிக் கொள்கிறார். எழுத்துக்கும் எனக்கும் உள்ள இருபதாண்டு உறவு கவிதையில் தொடங்கியது. என் உரைநடையைச் செம்மைப் படுத்தியது கவிதையே. சிறுகதையிலும், குறுநாவலிலும் மும்முரமான பிறகு, இந்தக் கவிதைகளைத் திரும்பப் படிக்கும்போது, ஒவ்வொன்றுக்குள்ளும் இருக்கும் கதைதான் உடனடியாக மனதில் படுகிறது. இதை எல்லாம் கதையாக எழுதியிருந்தாலும் இந்தத் தொனிதான் இருந்திருக்கும் என்ற நினைப்பும் கூடவே ஆசுவாசமாக எழுகிறது. கவிஞர் மீராவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் ஊர்க்காரரும், என் கல்லூரி ஆசிரியருமான அவருடைய பிரபலமான ’கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ என்னைப் பாதித்திருக்காவிட்டால் முதல் கவிதையை எழுதியிருக்க மாட்டேன்.
இந்தக் கவிதைகளில் பெரும்பான்மையானவை கணையாழியில் வெளியானவை. இருபத்தைந்து வருடங்களாகக் கணையாழியில் கவிதைகளும், "முன்பிருந்த தரத்தில் கவிதைகள் இல்லை. கவிதைத் தேர்வில் கவனம் தேவை" என்று கடிதங்களும் தொடர்ந்து வருவதிலிருந்து ஆங்காங்கே எல்லோரும் அடிக்குச்சிக் கவிதைகளை வைத்திருப்பது புலப்படுகிறதோ இல்லையோ, ’இன்றைய தேதியில் எழுதப்படுவது மோசமான எழுத்து’ என்ற எண்ணம் பரவலாக இருப்பதாகத் தெரிகிறது. சங்க காலத்திலும், இப்படி அதற்கு முந்திய காலத்தை உற்சாகமாகக் கையைக் காட்டித் திருப்திப்பட்டிருக்கலாம்!
என் கவிதைகளை வெளியிட்ட கணையாழிக்கும், மற்றப் பத்திரிகைகளுக்கும் நன்றி. சிற்றிதழ் வட்டாரத்தில் மட்டும் தெரிந்திருந்த என்னை வெகுஜனப் பத்திரிகை வாசக வட்டத்திலும் பலமாக அறிமுகம் செய்த ’எங்க வாத்தியாரை’ (சுஜாதா) இங்கே நினைக்காவிட்டால், "இன்றைக்கு ராத்திரி சோறு கிடைக்காது;"
’ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்’ சென்னை ஸ்நேகா பதிப்பகம் வெளியீடாக வந்தது. நேர்த்தியான அச்சமைப்போடு கூடிய அதன் முகப்போவியத்தைச் சிறந்த நவீன ஓவியர்களில் ஒருவரான ஆதிமூலம் வரைந்திருந்தார். என் நண்பர் எழுத்தாளர் - கவிஞர் - ஓவியர் யூமா வாசுகி புத்தகத்துக்கு உள்ளே தான் இக்கவிதைகளை உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில் அற்புதமான கோட்டோவியங்களை வரைந்தளித்திருந்தார். இருவருக்கும் என் நன்றி.
இரா.முருகன்
ராமலீலா
புகை உயரச்
சரங்கள் வெடித்துச் சிதற
ராவணன் எரிகிறான்.
வழக்கமாக எரிப்போம்.
உயிர்க்க வைப்போம்.
பனிவிழ இரவு வந்தது.
முன்பைவிடக் கூட்டம் அதிகம்.
சட்டைக்குள்
மயிரும் சதையும் பொசுங்கத்
துணுக்குற்றேன்.
போர்வையைக் கழற்றினேன்.
எல்லோரும் கழற்றினார்கள்.
ஒரு காற்றில்
மறைப்பு விலக
எரியலானோம்.
நிறங்கள் - மழையில்
நிசப்தம் நீலமாக;
அப்புறம்
ஒழுங்கு சிதைந்த சச்சதுரமாக.
மேலே அழுத்தும் ரப்பர்ப் பொதியாக.
நிறம் அதுவேயாக.
மசங்கலாகப் பழுப்புப் படகொன்று.
நிறம் மரித்த வெளிநோக்கிச்
செலுத்தப் பட்டேன்.
நீரின் துளியொன்று உதிர,
நீலம் இழைதொய்ந்து குழிய,
மேலும் துளிகள்; நின்று போனது.
புரண்டு படுத்த புலனும் மெல்லத்
துளிகள் விழுவதைப் புனைய முயல,
வேகங் கொண்ட படகின் உள்ளே
கருவாகக் கால்மடித்து, தலைகவிழ்த்து.
நிறங்கள் பற்றிக் கவலையில்லை -
இப்போதைக்கு.
நிசப்தம் நீலமாக;
அப்புறம்
ஒழுங்கு சிதைந்த சச்சதுரமாக.
மேலே அழுத்தும் ரப்பர்ப் பொதியாக.
நிறம் அதுவேயாக.
மசங்கலாகப் பழுப்புப் படகொன்று.
நிறம் மரித்த வெளிநோக்கிச்
செலுத்தப் பட்டேன்.
நீரின் துளியொன்று உதிர,
நீலம் இழைதொய்ந்து குழிய,
மேலும் துளிகள்; நின்று போனது.
புரண்டு படுத்த புலனும் மெல்லத்
துளிகள் விழுவதைப் புனைய முயல,
வேகங் கொண்ட படகின் உள்ளே
கருவாகக் கால்மடித்து, தலைகவிழ்த்து.
நிறங்கள் பற்றிக் கவலையில்லை -
இப்போதைக்கு.
நிறங்கள் - மழைக்கு அப்புறம்
ஆல்பின் சிறுவன் மட்டும்
கையில் பசையும் காகிதச் சுருளுமாக
வானவில்லை அதிசயிப்பான் கண்கள் சுருக்கி.
அங்கங்கே நீர்சுமந்து
கரும் பாம்பாய்த் தெரு நெளியும்.
பறக்க வைத்த தேவதைகள்
பாதியிலே சபித்தபடி
இறகு உதிர்த்த ஈசல்கள்
தரைநெடுகப் பரபரக்கும்.
சிறகு உலர்ந்த காக்கைகளும்
காலடியில் காற்று நீக்கி
ஊர்கின்ற பல்லிகளும்
விருந்துண்ண வெறுஞ் சுவரில்
சினிமா முகங்களைத் தடவிப் பதித்து
இறங்குமுன் உதிர்ந்தது
ஒட்டி வைத்த வானவில்.
ஆல்பின் சிறுவன் மட்டும்
காகிதச் சுருளும் பசையுமாக.
ஆல்பின் சிறுவன் மட்டும்
கையில் பசையும் காகிதச் சுருளுமாக
வானவில்லை அதிசயிப்பான் கண்கள் சுருக்கி.
அங்கங்கே நீர்சுமந்து
கரும் பாம்பாய்த் தெரு நெளியும்.
பறக்க வைத்த தேவதைகள்
பாதியிலே சபித்தபடி
இறகு உதிர்த்த ஈசல்கள்
தரைநெடுகப் பரபரக்கும்.
சிறகு உலர்ந்த காக்கைகளும்
காலடியில் காற்று நீக்கி
ஊர்கின்ற பல்லிகளும்
விருந்துண்ண வெறுஞ் சுவரில்
சினிமா முகங்களைத் தடவிப் பதித்து
இறங்குமுன் உதிர்ந்தது
ஒட்டி வைத்த வானவில்.
ஆல்பின் சிறுவன் மட்டும்
காகிதச் சுருளும் பசையுமாக.
விடியல்
தூக்குச் சட்டிகள் மூலையில் வைத்து
விளக்கு நிழலில் கோடுகிழித்துச்
சிறுமிகள் விளையாடினார்கள்.
வர்ண முகங்கள் சிரிக்கும் சுவரில்
பழைய பந்தெறிந்து
சிறுவரும் ஆடினர்.
சுவர்க் கோழிகள் சேர்ந்து ஒலிக்க
உறங்கிக் கிடந்த உறவின ரெல்லாம்
காலைப் பனிகருதிப் போர்த்திக் கொண்டனர்.
தெறித்து விழுந்த பந்துகள் விலக்கிக்
கண்கள் மூடித் தாண்டிய சிறுமி
கோட்டை மிதிக்க வண்டி வந்தது.
சில்லுகள் துணியில் முடித்துத்
தூக்குச் சட்டிகள் கையில் சுமந்து
ஏறிக் கொண்டார்கள்.
ஒரு சின்னக் கனவில்
கைகால் முளைத்த தீப்பெட்டிகள்
தலையில் கந்தகம் தடவச்
சிலிர்த்த சிறுவன் அழத் தொடங்குமுன்
நகரம் வந்தது.
தூக்குச் சட்டிகள் மூலையில் வைத்து
விளக்கு நிழலில் கோடுகிழித்துச்
சிறுமிகள் விளையாடினார்கள்.
வர்ண முகங்கள் சிரிக்கும் சுவரில்
பழைய பந்தெறிந்து
சிறுவரும் ஆடினர்.
சுவர்க் கோழிகள் சேர்ந்து ஒலிக்க
உறங்கிக் கிடந்த உறவின ரெல்லாம்
காலைப் பனிகருதிப் போர்த்திக் கொண்டனர்.
தெறித்து விழுந்த பந்துகள் விலக்கிக்
கண்கள் மூடித் தாண்டிய சிறுமி
கோட்டை மிதிக்க வண்டி வந்தது.
சில்லுகள் துணியில் முடித்துத்
தூக்குச் சட்டிகள் கையில் சுமந்து
ஏறிக் கொண்டார்கள்.
ஒரு சின்னக் கனவில்
கைகால் முளைத்த தீப்பெட்டிகள்
தலையில் கந்தகம் தடவச்
சிலிர்த்த சிறுவன் அழத் தொடங்குமுன்
நகரம் வந்தது.
புள்ளி
ஒரு சக்கரம் உருண்டது.
தொடங்கிய இடத்தைப் புள்ளியிடு.
இலக்கு உணரப் பட்டதா?
நாம் கற்பித்துக் கொள்வோம்.
திசைகள்? மேலிருந்து கீழா?
கீழிருந்து மேலா?
அதையும் தான்.
ஆரங்கள் உண்டா?
இல்லையென்றே சொல்லலாம்.
என்ன போயிற்று? கற்பித்துக் கொள்.
உருளும்போது ஆரங்களைத்
தனித்துப் பார்க்க இயலாதென
வாத்தியார் சொன்னது நினைவிருக்கா?
வாத்தியார் எல்லாம்தான் சொன்னார்.
சொன்னபடி குடுவையில் ஆக் ¢ன் தயாரித்து
முகர்ந்தோம். ஆடிகளை அமைத்து
வெய்யிலில் காயப்போட்ட கால்பந்தாட்ட
மைதானத்து ஓராமாய் அவர்
கோவணம் அவிழ்த்துக்
குந்தியிருக்க நோக்கினோம்.
அவர் சொல்லாமலே
அன்னி பெசண்டுக்கு மீசை போட்டோம்.
அப்புறம் ஒரு நாள் நினைவிருக்கா?
அவரைத் தூக்கிப் போகத் தோள் கொடுத்தோம்.
அப்புறம்? அதெல்லாம் அப்புறம்.
கற்பிதமா முக்கியம்? நமக்குப் பேச வேண்டும்.
தொடங்கிய இடத்தில் புள்ளி?
அதை அழித்துவிட்டு வந்து உட்கார்.
ஒரு சக்கரம் உருண்டது.
தொடங்கிய இடத்தைப் புள்ளியிடு.
இலக்கு உணரப் பட்டதா?
நாம் கற்பித்துக் கொள்வோம்.
திசைகள்? மேலிருந்து கீழா?
கீழிருந்து மேலா?
அதையும் தான்.
ஆரங்கள் உண்டா?
இல்லையென்றே சொல்லலாம்.
என்ன போயிற்று? கற்பித்துக் கொள்.
உருளும்போது ஆரங்களைத்
தனித்துப் பார்க்க இயலாதென
வாத்தியார் சொன்னது நினைவிருக்கா?
வாத்தியார் எல்லாம்தான் சொன்னார்.
சொன்னபடி குடுவையில் ஆக் ¢ன் தயாரித்து
முகர்ந்தோம். ஆடிகளை அமைத்து
வெய்யிலில் காயப்போட்ட கால்பந்தாட்ட
மைதானத்து ஓராமாய் அவர்
கோவணம் அவிழ்த்துக்
குந்தியிருக்க நோக்கினோம்.
அவர் சொல்லாமலே
அன்னி பெசண்டுக்கு மீசை போட்டோம்.
அப்புறம் ஒரு நாள் நினைவிருக்கா?
அவரைத் தூக்கிப் போகத் தோள் கொடுத்தோம்.
அப்புறம்? அதெல்லாம் அப்புறம்.
கற்பிதமா முக்கியம்? நமக்குப் பேச வேண்டும்.
தொடங்கிய இடத்தில் புள்ளி?
அதை அழித்துவிட்டு வந்து உட்கார்.
விஜயனின் மாமா
அவர் ஒரு நாள் வதை முகாமில்
கொல்லப் பட்டதாகச் சொன்னார்கள்.
தன்முறை வரக் காத்திருந்த பொழுது
சரளைக்கல் பாதையில் குடைபிடித்துக்
குரிசுப் பள்ளிக்குப் போன பாதிரியை,
வயதான யூதப் புரோகிதனை, கால் விந்தி நடந்த
வெளிச்சப்பாட்டை நினைத்துக் கொண்டாரா?
தூதப்புழை ஓரக் கிராமத்து அவர்
மேற்கில் எங்கோ மரித்த வினாடி,
ஆற்றில் குளித்து ஈரம் உடுத்து,
வேலுக் குட்டியும் நாணியும் வெள்ளாயி அப்பனும்
கூடவரச் சின்ன வயதில்
உற்சவம் முடிந்த அம்பலப் பரம்பருகே
அத்தப்பூத் தேடி நடந்த படிக்கா?
அந்த வருடம் ஓணத்துக்கு முன்பா
அப்புறமா அவரைக் கொன்றது?
மாவும் பலாவும் நிழல் விரிக்கும்
தோட்டம் தீட்டிய பழைய காகிதத்தில்
மழுங்கிய பென்சில் கொண்டு
யூத மனைவுக்குச் சொல்ல
நடுங்கும் விரல் வரைந்த ஓலைக் குடில்
அவர் நினைவின் முன்னறையிலா?
ஓடம் நகரும் வேம்பநாட்டுக் காயலின்
கதைகள் சொல்லி உறங்க வைத்த
’அச்சா’ என்று அழைக்கத் தெரிந்த
அவரின் நான்கு வயது மகனை என்ன செய்தார்கள்?
விஜயனின் மாமா
யாராக இருந்தார்?
யாராக இறந்தார்?
(மலையாள எழுத்தாளர் ஒ.வி.விஜயனின் , 1940-களில் ஜெர்மானிய நாஷி வதை முகாமில் வதிக்கப்பட்ட தாய்மாமன் நினைவாக. விஜயன், மலையாள மனோரமா ஆண்டு மலரொன்றில் இடம்பெற்ற நீண்ட பேட்டியில் யூதப் பெண்ணை மணந்து ஜெர்மனி சென்று அங்கே நாஷிகளால் கொல்லப்பட்ட தன் மாமன் பற்றிச் சொல்லியிருந்ததைப் படித்ததின் பாதிப்பு)
அவர் ஒரு நாள் வதை முகாமில்
கொல்லப் பட்டதாகச் சொன்னார்கள்.
தன்முறை வரக் காத்திருந்த பொழுது
சரளைக்கல் பாதையில் குடைபிடித்துக்
குரிசுப் பள்ளிக்குப் போன பாதிரியை,
வயதான யூதப் புரோகிதனை, கால் விந்தி நடந்த
வெளிச்சப்பாட்டை நினைத்துக் கொண்டாரா?
தூதப்புழை ஓரக் கிராமத்து அவர்
மேற்கில் எங்கோ மரித்த வினாடி,
ஆற்றில் குளித்து ஈரம் உடுத்து,
வேலுக் குட்டியும் நாணியும் வெள்ளாயி அப்பனும்
கூடவரச் சின்ன வயதில்
உற்சவம் முடிந்த அம்பலப் பரம்பருகே
அத்தப்பூத் தேடி நடந்த படிக்கா?
அந்த வருடம் ஓணத்துக்கு முன்பா
அப்புறமா அவரைக் கொன்றது?
மாவும் பலாவும் நிழல் விரிக்கும்
தோட்டம் தீட்டிய பழைய காகிதத்தில்
மழுங்கிய பென்சில் கொண்டு
யூத மனைவுக்குச் சொல்ல
நடுங்கும் விரல் வரைந்த ஓலைக் குடில்
அவர் நினைவின் முன்னறையிலா?
ஓடம் நகரும் வேம்பநாட்டுக் காயலின்
கதைகள் சொல்லி உறங்க வைத்த
’அச்சா’ என்று அழைக்கத் தெரிந்த
அவரின் நான்கு வயது மகனை என்ன செய்தார்கள்?
விஜயனின் மாமா
யாராக இருந்தார்?
யாராக இறந்தார்?
(மலையாள எழுத்தாளர் ஒ.வி.விஜயனின் , 1940-களில் ஜெர்மானிய நாஷி வதை முகாமில் வதிக்கப்பட்ட தாய்மாமன் நினைவாக. விஜயன், மலையாள மனோரமா ஆண்டு மலரொன்றில் இடம்பெற்ற நீண்ட பேட்டியில் யூதப் பெண்ணை மணந்து ஜெர்மனி சென்று அங்கே நாஷிகளால் கொல்லப்பட்ட தன் மாமன் பற்றிச் சொல்லியிருந்ததைப் படித்ததின் பாதிப்பு)
தரிசனம்
தலவரலாறு இல்லாத
கோயிலைச் சுற்றி
வழிகாட்ட வந்த கிழவர்
பிரகார வெய்யிலில் கைநீட்டிக்
காமரா பேசிய இடம் என்றார்.
சிவாஜி சாயலில் தொப்பை தெறிக்கச்
சிவனார் ஆடும் சுவரில்
மஞ்சள் எழுத்து வேலு ஆர்ட்ஸ்
கையெழுத்தில் காரையைச் சுரண்டி
ராஜாகாலப் படங்கள் கீழே
இருந்ததாக விரல் தேய்த்தார்.
காக்கிக் கால்சராய்மேல் கைத்தறித் துண்டோடு
வாசலில் நிறுத்திய சைக்கிளில் கவனமாய்
வாத்தியம் பிசிறிட வாசித்தவரைக்
காருகுறிச்சி பரம்பரை என்றார்.
பாசிக் குளப்படியில்
சிகரெட் துண்டு ஒதுக்கி,
சாக்குக் கட்டியில்
’சாந்தி ஒரு தேவிடி..’யை மிதித்தபடி
கண்ணாம்பா ஷூட்டிங்க் நடந்ததென்றார்.
வியர்வையும் லைப்பாய் வாடையுமாக
பிரசாதம் நீட்டிய குருக்கள் பற்றித்
தொடங்கும் முன் யாரோ
மணியடித்ததால்
கோபுரப் புறாக்கள் கொஞ்சம் பறந்தன.
செருப்பில் கால்நுழைத்து
ஒட்டிய வயிறு பார்த்துப் பையில் கைவிட
வேண்டாம் என்று சொல்லி
விரசாக நடந்து போனார்.
கொடுத்து வைத்த கோயில்.
தலவரலாறு இல்லாத
கோயிலைச் சுற்றி
வழிகாட்ட வந்த கிழவர்
பிரகார வெய்யிலில் கைநீட்டிக்
காமரா பேசிய இடம் என்றார்.
சிவாஜி சாயலில் தொப்பை தெறிக்கச்
சிவனார் ஆடும் சுவரில்
மஞ்சள் எழுத்து வேலு ஆர்ட்ஸ்
கையெழுத்தில் காரையைச் சுரண்டி
ராஜாகாலப் படங்கள் கீழே
இருந்ததாக விரல் தேய்த்தார்.
காக்கிக் கால்சராய்மேல் கைத்தறித் துண்டோடு
வாசலில் நிறுத்திய சைக்கிளில் கவனமாய்
வாத்தியம் பிசிறிட வாசித்தவரைக்
காருகுறிச்சி பரம்பரை என்றார்.
பாசிக் குளப்படியில்
சிகரெட் துண்டு ஒதுக்கி,
சாக்குக் கட்டியில்
’சாந்தி ஒரு தேவிடி..’யை மிதித்தபடி
கண்ணாம்பா ஷூட்டிங்க் நடந்ததென்றார்.
வியர்வையும் லைப்பாய் வாடையுமாக
பிரசாதம் நீட்டிய குருக்கள் பற்றித்
தொடங்கும் முன் யாரோ
மணியடித்ததால்
கோபுரப் புறாக்கள் கொஞ்சம் பறந்தன.
செருப்பில் கால்நுழைத்து
ஒட்டிய வயிறு பார்த்துப் பையில் கைவிட
வேண்டாம் என்று சொல்லி
விரசாக நடந்து போனார்.
கொடுத்து வைத்த கோயில்.
மழை நகரம்
அசன்பாய்
அத்தர்க் கடைமுன்
குப்பை லாரியில் தூரத்துணியும்
ஈரம் நாறிய இலையும் கழிவும்
தோளில் வழியச் சுமந்து சுமந்து
கூடை கவிழ்த்தவன் வயிறு தீய்த்த
மூக்கு உறிஞ்சிச் சொல்லுவான் -
’கிளப்புய்யா தாங்கலை வாடை’.
கடைசி நம்பர் லாட்டரி செண்டரில்
உதிர்த்து எறிந்த காகிதத்தோடு
வசவும் கிழித்துப் போகிற பெரிசு
சகதி தெளித்த கார் எண் படித்துப்
புதுசாய் வாங்கத் திரும்பி வருவார்.
மோர்வடியும் அலுமினிய டப்பா
மேசைக்கடியில் மறைத்தபடி
குடை மறந்த வாத்தியாரம்மா
உலர்த்திக் கொள்ள இடம் தேடுவாள்.
சிம்னி உடைந்த ராத்திரிச் சண்டையில்
வீட்டுப் பாடம் எழுத மறந்த
சின்ன விரல்கள் ஈர சிலேட்டில்
விரையக் கேட்கும் முதல்மணிச் சத்தம்.
’நனையாதேடி உடம்புக்கு வந்துடும்.
மாசக் கடைசியில் டாக்டருக்கு அழக்
கொட்டியா கிடக்கு? உள்ளே வாடி’.
பீத்தல் குடையில் ஒண்டிய கொலுசின்
சிரிப்புக் கொஞ்சம் கலைந்து சிதற
’தண்ணி லாரி .. தண்ணி லாரி’.
அசன்பாய்
அத்தர்க் கடைமுன்
குப்பை லாரியில் தூரத்துணியும்
ஈரம் நாறிய இலையும் கழிவும்
தோளில் வழியச் சுமந்து சுமந்து
கூடை கவிழ்த்தவன் வயிறு தீய்த்த
மூக்கு உறிஞ்சிச் சொல்லுவான் -
’கிளப்புய்யா தாங்கலை வாடை’.
கடைசி நம்பர் லாட்டரி செண்டரில்
உதிர்த்து எறிந்த காகிதத்தோடு
வசவும் கிழித்துப் போகிற பெரிசு
சகதி தெளித்த கார் எண் படித்துப்
புதுசாய் வாங்கத் திரும்பி வருவார்.
மோர்வடியும் அலுமினிய டப்பா
மேசைக்கடியில் மறைத்தபடி
குடை மறந்த வாத்தியாரம்மா
உலர்த்திக் கொள்ள இடம் தேடுவாள்.
சிம்னி உடைந்த ராத்திரிச் சண்டையில்
வீட்டுப் பாடம் எழுத மறந்த
சின்ன விரல்கள் ஈர சிலேட்டில்
விரையக் கேட்கும் முதல்மணிச் சத்தம்.
’நனையாதேடி உடம்புக்கு வந்துடும்.
மாசக் கடைசியில் டாக்டருக்கு அழக்
கொட்டியா கிடக்கு? உள்ளே வாடி’.
பீத்தல் குடையில் ஒண்டிய கொலுசின்
சிரிப்புக் கொஞ்சம் கலைந்து சிதற
’தண்ணி லாரி .. தண்ணி லாரி’.
சுழலும் உறவுகள்
மங்கிய இலைப்பச்சை வாடையும்
ஆமையோடாக உயரும் விளிம்புமாய்க்
குளம் ஒன்று கனவில் வந்தது.
ஆயிரம் ஆண்டு உடம்பு துறந்து
சுற்றும் முன்னோர் கரையோரம்
வந்து அமரச் சோற்று உருண்டைகள்
பரிமாறிய இலைகள் மிதக்கும் நீர்.
அடுத்த ஆண்டு வருவதாய்ச் சொல்லி
மேலே உயர்ந்தவர் குளிக்கச் சொன்னதால்
உள்ளே இறங்க விளிம்பு சுருங்கிக்
குளம் என்னைக் கவ்வி இறுக்கும்.
போனவருடம் எறிந்த இலைகளில்
படர்ந்து நீண்ட காளான் கைகள்
கீழே இழுக்கச் சுவாசம் முட்டிச்
சுற்றும் பார்க்க ஒளியும் இருளும்
பிணைந்து விரியும் பரப்பு அழைக்கும்.
தொடரும் தலைமுறைச் சங்கிலி இழையில்
எந்தக் கண்ணியில் இணைந்தோம் என்று
குழம்பி உள்ளே அமர்ந்து இருந்த
கூட்டம் நடுவே தேடத் தொடங்கினேன்.
கால்படாது ஓரம் வைத்த
வாளியில் புகையும் கல்கரித் தூள்கள்
மாவாய் அரைத்து அப்பிய வாசலில்
நின்றவர் அமரப் படைக்கலாயினர்.
முன்னோர் விரித்த இலைகள் முன்னால்
நான், மகன், அவன் பிள்ளைகள்.
மங்கிய இலைப்பச்சை வாடையும்
ஆமையோடாக உயரும் விளிம்புமாய்க்
குளம் ஒன்று கனவில் வந்தது.
ஆயிரம் ஆண்டு உடம்பு துறந்து
சுற்றும் முன்னோர் கரையோரம்
வந்து அமரச் சோற்று உருண்டைகள்
பரிமாறிய இலைகள் மிதக்கும் நீர்.
அடுத்த ஆண்டு வருவதாய்ச் சொல்லி
மேலே உயர்ந்தவர் குளிக்கச் சொன்னதால்
உள்ளே இறங்க விளிம்பு சுருங்கிக்
குளம் என்னைக் கவ்வி இறுக்கும்.
போனவருடம் எறிந்த இலைகளில்
படர்ந்து நீண்ட காளான் கைகள்
கீழே இழுக்கச் சுவாசம் முட்டிச்
சுற்றும் பார்க்க ஒளியும் இருளும்
பிணைந்து விரியும் பரப்பு அழைக்கும்.
தொடரும் தலைமுறைச் சங்கிலி இழையில்
எந்தக் கண்ணியில் இணைந்தோம் என்று
குழம்பி உள்ளே அமர்ந்து இருந்த
கூட்டம் நடுவே தேடத் தொடங்கினேன்.
கால்படாது ஓரம் வைத்த
வாளியில் புகையும் கல்கரித் தூள்கள்
மாவாய் அரைத்து அப்பிய வாசலில்
நின்றவர் அமரப் படைக்கலாயினர்.
முன்னோர் விரித்த இலைகள் முன்னால்
நான், மகன், அவன் பிள்ளைகள்.
விடுமுறை
நரகல் தெருக்களில்
சோனி எருமைகள்
கறந்த பாலில்
விடியும் காலையும்,
௬பைல்களை வளர்த்து
௬பைல்களைத் தின்று
௬பைல்களைக் கழியும்
யந்திரங்களுக்குச்
சேவை செய்து
தேய்ந்த பகலும்,
பெட்ரோல் நாறும்
மாலைப் பொழுதும்,
காற்று ஓய்ந்து
புழுங்கும் இரவும்,
எனக்கே யானது
என்றிருந்தேன் இதுவரைக்கும்.
நகரக் கழிவுகள்
கழித்த ஆறும்,
மரங்கள் செத்த
வெற்று மலையும்,
கட்டிடம் உயரும்
நஞ்சையின் தரையும் கூட
எனக்குத் தானாம்.
நரகல் தெருக்களில்
சோனி எருமைகள்
கறந்த பாலில்
விடியும் காலையும்,
௬பைல்களை வளர்த்து
௬பைல்களைத் தின்று
௬பைல்களைக் கழியும்
யந்திரங்களுக்குச்
சேவை செய்து
தேய்ந்த பகலும்,
பெட்ரோல் நாறும்
மாலைப் பொழுதும்,
காற்று ஓய்ந்து
புழுங்கும் இரவும்,
எனக்கே யானது
என்றிருந்தேன் இதுவரைக்கும்.
நகரக் கழிவுகள்
கழித்த ஆறும்,
மரங்கள் செத்த
வெற்று மலையும்,
கட்டிடம் உயரும்
நஞ்சையின் தரையும் கூட
எனக்குத் தானாம்.
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|