புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜஸ்தான் Poll_c10ராஜஸ்தான் Poll_m10ராஜஸ்தான் Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜஸ்தான் Poll_c10ராஜஸ்தான் Poll_m10ராஜஸ்தான் Poll_c10 
251 Posts - 52%
heezulia
ராஜஸ்தான் Poll_c10ராஜஸ்தான் Poll_m10ராஜஸ்தான் Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
ராஜஸ்தான் Poll_c10ராஜஸ்தான் Poll_m10ராஜஸ்தான் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ராஜஸ்தான் Poll_c10ராஜஸ்தான் Poll_m10ராஜஸ்தான் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ராஜஸ்தான் Poll_c10ராஜஸ்தான் Poll_m10ராஜஸ்தான் Poll_c10 
18 Posts - 4%
prajai
ராஜஸ்தான் Poll_c10ராஜஸ்தான் Poll_m10ராஜஸ்தான் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ராஜஸ்தான் Poll_c10ராஜஸ்தான் Poll_m10ராஜஸ்தான் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ராஜஸ்தான் Poll_c10ராஜஸ்தான் Poll_m10ராஜஸ்தான் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ராஜஸ்தான் Poll_c10ராஜஸ்தான் Poll_m10ராஜஸ்தான் Poll_c10 
2 Posts - 0%
Barushree
ராஜஸ்தான் Poll_c10ராஜஸ்தான் Poll_m10ராஜஸ்தான் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜஸ்தான்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 10:22 am

ராஜஸ்தான் மாநிலத்தில் நான் சுமார் இருபத்து இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தவள். கரைகளைத் தொட்டு விளையாடும் உதய்பூர் ஏரிகளின் நீர் அலைகளையும், மணற்குவியலின் மீது ஊர்ந்து சித்திரம் வரையும் புழுதிக் காற்றையும் அடுக்கடுக்கான பானைகளில் நீர் சுமந்த வண்ணம் அநாயாசமாய் நடக்கும் ராஜஸ்தானிப் பெண்களையும், வீர தீர பராக்கிரமம் நிறைந்த ராஜபுத்திரர்களின் சரித்திரத்தையும் இன்றும் ஞாபகப் படுத்திக் கொண்டு ரசிப்பவள். அவற்றில் இதோ சில ஞாபகங்கள்.

* ராஜஸ்தானிகள் அன்பும், பண்பும் கொண்டவர்கள். பிற மாநிலத்தவர்களிடம் தங்கள் உடன்பிறப்புகளைப்போல் அன்பு காட்டுபவர்கள். விருந்தோம்பலில் அவர்களை யாரும் மிஞ்சி விட முடியாது.* * வானவில்லின் அத்தனை நிறங்களும் இறங்கி வந்து இங்குள்ள பெண்களின் உடைகளை ஆக்கிரமித்து விட்டனவோ என்று ஐயப்படும் அளவுக்கு வண்ணமயமான உடைகளில் பெண்கள் வளைய வருவது கண்களுக்கு இதம்.

* பொசுக்கி எடுக்கிற வெயிலிலும் பத்து கெஜ நீளமுள்ள துணியைச் சுருட்டி "சாஃபா' என்கிற தலைப்பாகையாக்கி ஆண்கள் அணிவது கௌரவத்தின் அறிகுறி என்றாலும் வெயிலிலய இருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும்தான் என்கிறார்கள். இந்த "சாஃபா'க்களின் வடிவமும், ஆண்களின் மீசை, தாடியின் ஸ்டைலும் மாவட்டங்களின் சரித்திரப் பின்னணிக்கு ஏற்ப மாறுபடும்!

* பெண்கள் கூந்தலில் மலர் சூடுவதில்லை. திருமணத்தில் மணமகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. நடனமாதுகள்தான் தலையில் பூ சூடுவார்கள் என்பது இவர்கள் கருத்து.

* மாமனார், மாமியார் முன்னிலையில் மகனும், மருமகளும் நேரடியாகப் பேசிக்கொள்ளாமல், "டொக் டொக்' என்று மரங்கொத்தி பாஷையில் பேசுவது மரியாதையை முன்னிட்டுதான்.

* கிராமத்துப் பெண்கள் திருமணமானதற்கு அறிகுறியாக தோள் பட்டையிலிருந்து முழங்கை வரையிலும், சற்று இடைவெளி விட்டு மணிக்கட்டு வரையிலும் வெள்ளை வளையல்களை அணிந்திருப்பார்கள்.

* வீட்டு வேலைகளைச் செய்ய வேலைக்காரிகள் கிடைப்பது அபூர்வம். ராஜபுத்ர பெண்கள் மற்றவர் வீட்டுத் துடைப்பத்தையும், எச்சில் பாத்திரங்களையும் தொட மாட்டார்களாம்.

* வேலைக்கு வருகிற ஆள், "பாத்திரங்களை நீர் விட்டு கழுவணுமா? இல்லை ட்ரை க்ளீனிங்கா?' என்று கேட்டால் திகைக்க வேண்டாம். பாத்திரத்தை மண்ணில் போட்டுப் புரட்டி எடுத்து, பிறகு சுத்தமான துணியால் துடைத்து வைப்பது "ட்ரை க்ளீனிங்' இப்படி செய்ய சம்பளம் அதிகம். (வேலை அதிகம் அதனால்) தண்ணீரை சேமிக்க இது ஒரு சிக்கன வழி.

*பாலைவனப் பிரதேசத்தில் பயணிக்கையில் எந்தக் கிராமத்தில் நிறுத்தி தண்ணீர் கேட்டாலும் மோரோ அல்லது பாலோதான் கொடுப்பார்கள்! தண்ணீர் அத்தனை அருமையான சாதனம்.

* "ஆகாதீஜ்' என்கிற அட்சயத்ரிதீயை அன்று இங்குள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கில் ஒரே முகூர்த்தத்தில் பால்ய விவாகங்கள் நடத்தப்படுகின்றன. இது சர்வ முகூர்த்தநாள் என்பதாலும் வரதட்சிணை கொடுக்க வேண்டி வராது என்பதாலும் நடத்தப்படுகின்றன. தடை செய்யும் "சாரதா' சட்டம் இருந்தும் யாரும் கண்டு கொள்வதில்லை! தொட்டிலில் தூங்கும் பெண் சிசுவையும், பிள்ளைக் குழந்தையையும், அவற்றின் தகப்பன்மார்கள் இடுப்பில் தூக்கிக் கொண்டு அக்னிவலம் வந்து சப்தபதியை நடத்தி முடிப்பது விநோதக் காட்சி.

* வீட்டுக்கு வரும் மருமகளின் முகத்திரையைத் தூக்கி அவளைப் பார்க்க உறவினர்கள் பணம் தரவேண்டும். "முஹ்தி கானா' என்பது இந்தச் சடங்கின் பெயர்.

* திருமண விருந்தில் பெண் வீட்டார் எத்தனை அதிக ரக இனிப்பு வகைகளைப் பரிமாறுகிறார்களோ அத்தனை உயர்ந்த அந்தஸ்துடையவர்கள் என்று அர்த்தம்.

* திருமணத்துக்குப் பிறகு பெண் வீட்டார் சம்பந்த வீட்டிலோ பெண் வீட்டிலோ உணவருந்த மாட்டார்கள். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கு என்று கணக்குப் போட்டு ஒரு தொகையை கொடுத்துவிடுவார்கள்.

* திருமணத்துக்கு முதல்நாள் பெண், பிள்ளை வீட்டார்கள் தனித்தனியாக குயவர் வீட்டுக்குச் சென்று, சுப முகூர்த்த நேரத்தில் அவர் மண்பாண்டம் தயாரிக்கும் சக்கரத்தை பூஜிப்பது வழக்கம். இதை "சக்' என்கிறார்கள். நேரமின்மையால் இப்போது திருமண மண்டபத்திலேயே டிசைன்கள் வரைந்த பானைகளை அடுக்கி பூஜை செய்து விடுகிறார்கள்.

* மாமியார் மருமகளுக்கு எத்தனை அன்பளிப்புகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், பூட்டு சாவியும் மட்டும் கொடுக்கக்கூடாது.

* முகூர்த்தம் முடிந்து "பிதாய்' (பெண்ணைப் புக்ககம் அனுப்பும் சடங்கு) நிகழ்ச்சியில் பெண் வீட்டார் நிச்சயம் வாய்விட்டு அழ வேண்டும்.

* "பராத்' என்பது பிள்ளை வீட்டார் மணமகனுடன் வரும் ஊர்வலம். அவர்கள் எந்த ஊரிலிருந்து வந்து இறங்கினாலும் மண்டபத்துக்கு குதிரை மீது அமர்ந்து வருவது சகஜம்.

* திருமண முகூர்த்தங்கள் அநேகமாக நடுநிசியில் நடக்கும். சிவ பெருமான் மயானத்தில் அந்த நேரத்தில்தான் நடனமாடுவதால், தீய சக்திகள் நசுக்கப்பட்டு வலிவு இழக்கும் நேரத்தில் திருமணம் நடந்தால் நல்லது என்று கருதப்படுவதால் இந்த வழக்கமாம்.

* கணவன்-மனைவி சண்டை முற்றி அவர்கள் பிரிவது என்று தீர்மானித்தால், பெரியவர்கள் முன்னிலையில் மனைவியானவள் தன் சேலைத் தலைப்பை இரண்டாகக் கிழித்துப் போட்டுவிட்டால் போதும். விவாகரத்தான மாதிரிதான்.

* பாலைவன நகரங்களில் காய்கறி வகைகள் அதிகம் கிடைக்காது. "கோ', "சாங்கடி' என்ற மரத்தின் காயும், வேர்களும் ரொட்டிக்குத் தொட்டுக் கொள்ளும் வகையில் சப்ஜியாகவும் ஊறுகாயாகவும் தயாரிக்கப்படுகின்றன.

* ராஜஸ்தானி ஸ்பெஷல் என்று சொல்லப்படும் உணவு வகைகளில் முக்கியமானது தால் பாட்டி - சூர்மா. இவை கோதுமை மாவில் தயாராகின்றன. கோதுமை ரொட்டியைச் சுட்டு அதைப் பொடித்து சர்க்கரையோடு சேர்த்து லட்டு மாதிரி பிடிக்கிறார்கள். தொட்டுக் கொள்ள கட்டா என்கிற கடலைமாவு சப்ஜி அல்லது கடி எனப்படும் மோர்க்குழம்பு சுவையாக இருக்கும்.

லக்ஷ்மி ரமணன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக