புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
68 Posts - 45%
heezulia
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
5 Posts - 3%
prajai
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
4 Posts - 3%
Jenila
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
2 Posts - 1%
jairam
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
1 Post - 1%
kargan86
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
9 Posts - 4%
prajai
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
6 Posts - 3%
Jenila
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
2 Posts - 1%
jairam
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
2 Posts - 1%
viyasan
சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_m10சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமயம் தோற்றமும் வளர்ச்சியும்


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 12:16 pm

வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும் நான்கு வளங்களையும் உள்ளடக்கிய இறைநிலையை உணர்ந்த ஞானிகள் அது அசைவற்றிருப்பதால் சிவம் எனக் கூறி சைவ சமயத்தை உருவாக்கினர்.

சும்மா இருப்பது எப்படி பேராற்றலாகும் இறைநிலையிலிருந்து தோண்றிய சக்திதான் தெய்வம் என்ற பெரியவர்கள் சாக்த சமயத்தை உருவாக்கினர்.

விண் தற்சுழற்சியின் போது சத்தத்துடன் சுழல்வதை உணர்ந்தவர்கள் இறைவனுக்கு சங்கையும், சக்கரத்தையும் கொடுத்து வைணவ சமயத்தை உருவாக்கினர்.

அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற பஞ்ச தன்மாத்திரைகளை உணர்ந்தவர்கள் இவை இயற்கையின் ஐந்து கரங்கள் என விநாயகனை படைத்து காணபத்தியம் என்ற சமயத்தை உருவாக்கினர்.

பஞ்ச தன்மாத்திரைகளோடு உயிரின் அலையான மனத்தையும் சேர்த்து இயற்கைக்கு ஆறு முகங்கள் என அறிந்தவர்கள் கெளமார சமயம் எனக் கூறி வழிபட்டனர்.

சமயம் (சமம்+இயம்) என்றால் எல்லோரும் சமம் என்ற எண்ணத்தோடு ஒத்தும், உதவியும் வாழ வேண்டும் என்பதாகும். ஆனால், இதை உணராத மக்கள் இறைநிலை உணர்ந்து வாழ்க்கை நெறிகளை தந்த மகான்களின் பெயரால் பல மதங்களை உருவாக்கினர்.

சமயம்

தனிமனிதர் பெறுகின்ற தெளிவையும் செயல்பாடுகளையுமே தொகுத்த விளைவாக சமுதாய தாக்கமாக வெளிப்படுகிறது. சமுதாய தாக்கமே தனிமனித வாழ்வை உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ செய்கிறது என்பதை 'புத்தர்' தெளிவுபடக் கூறுகிறார். இக்கருத்தையே திருவள்ளுவரும்,

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு" (குறள் - 595)
என்று கூறுகிறார்.

புத்தரின் இறுதிக்கால சூத்திரமான 'தாமரை சூத்திரம்' (சத்தர்ம புண்டரீகம்) மனித குலம் உய்ய தியாக வழியைப் போதிக்கிறது.

கிறித்துவத்தில் யோகம்:

உலகில் மனிதன் தோன்றி குழுவாக வாழ்ந்து சூமுகமானபோது சமயங்கள் தோன்றின. அவ்வாறு தோன்றிய பல்வேறு சமயங்களில் முக்கியமானவையாக இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவை முப்பெரும் சமயங்களாகும். இவற்றுள் கிறிஸ்தவம் உலகெங்கும் பெரும்பாலாகப் பரவியுள்ளது. இதைத் தோற்றுவித்தவர் 'இயேசு கிறிஸ்து'. இவர் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். 'கிறிஸ்து' என்ற சொல் கிரேக்கச் கொல்லிலருந்து பெறப்பட்டது. அதற்கு "புனிதப்படுத்தப்பட்டவர்" என்று பொருளாகும். (1 சாமுவேல் 2.10).

பத்துக் கட்டளைகள்:

இறைத்தூதர் 'மோசே' மூலமாக இறைவன் அளித்த பத்துக் கட்டளைகள் கிறித்துவத்தில் முகிகியமாகக் கருதப்படுகின்றன.

1. என்னையன்றி உனக்கு வேறு கடவுள்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
2. மேலே வானத்திலும் கீழே பூமியிலும், பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு உருவத்தையாகிலும், விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவும் அதை வணங்கவும் வேண்டாம்.
3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணாகச் கொல்லாதிருப்பாயாக.
4. ஓய்வு நாளைப் பரிசுத்தருடைய அனுசரிப்பாயாக.
5. உன் தந்தையையும், தாயையும் மதித்துப் போற்றுவாயாக.
6. கொலை செய்யாதிருப்பாயாக.
7. விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.
8. களவு செய்யாதிருப்பாயாக.
9. பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
10. பிறருடைய வீட்டையும், மனைவியையும், பிறருக்குரிய யாதொன்றையும் விரும்பாதிருப்பாயாக.

இஸ்லாத்தில் யோகம்:


'இஸ்லாம்' என்பது ஓர் அரபுச் சொல். அதன் பொருள் பணிதல், சரணடைதல், கீழ் படிதல் என்ற மூலக் கூறுகளை உள்ளடக்கியது. 'இஸ்லாம்' என்ற சொல்லின் நேர்ப் பொருள் 'அமைதி' என்பதாகும். ஒருவன் உடலையும் உள்ளத்தையும் அல்லாவிடம் பணிவாக ஒப்படைக்கும்போது அமைதியைப் பெறுகிறான் எனப் பொருள்படும். அல்லாவின் விதி முறைகளுக்கேற்ப பணிந்து செயல்படுபவர்கள் இசுலாமியர் என்பர். இசுலாம் சமயத்தின் தீர்க்க தரிசியாக முஸ்லீம்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் 'முகமது நபி' யாவார்.

இஸ்லாமிய மார்க்கம் இறைவனைத் தொழுகை செய்யும் முறையையே யோகம் என எடுத்து இயம்புகிறது. தொழுகையுல் அமரும்பொழுது, நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங்ககை விரல்கள் உட்பட இருபாதங்களின் விரல்களை பூமியின் மேல் நட்டு, இரு முழங்கால்கள் ஆக எட்டு உடல் உறுப்புகள், தரையில்பட தொழுகை நடத்த வேண்டும் என பணிக்கிறது. இந்நிலையை யோகாசனத்தில் 'யோக முத்திரை' என்றும் கூறுவர். தொழுகையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த பயிற்சி ஆகும்.

குரானில் இறைவனின் கருணை கிடைக்க எளிய வழி துறவு வாழ்க்கையோடு தியான முறைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறது. அப்பொழுதுதான் இறைவன் கருணை காட்டி அழைப்பதற்கேற்ற பக்குவ நிலையை மனிதன் அடைய முடியும் என்கிறது.

(நபியே, மனிதர்களை நோக்கி,) "நீர் கூறும்.
அல்லாஹ் ஒருவன்தான்.

(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கிறன.)

அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை; சந்ததியுமில்லை.)

தவிர, அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை. "(அத்தியாயம் 112)"


இஸ்லாத்தில் இறை நிராகரிப்பு, இறைநிலைக்கு இணை வைத்தல், பல தெய்வகொள்கை போன்ற சிந்தனைகள், கோட்பாடுகள் ஆகியவற்றிற்குச் சிறிதும் இடமில்லை. இறைவன் எந்தப் பாவதிதையும் மன்னித்து விடுவான். ஆனால், இணை வைக்கும் பாவத்தை மட்டும் மன்னிக்க மாட்டான் என்பது இறைவனே செய்யும் அறிவிப்பாகும்.

ஐந்து கடமைகள்:


இஸ்லாமியருக்கு ஐந்து முக்கியமான கடமைகள் இருக்கின்றன. அவை:

(1) ஈமான்
(2) தொழுகை
(3) நோன்பு
(4) ஜக்காத்
(5) ஹஜ்


என்பனவாகும். இவற்றை இஸ்லாமின் தூண்கள் என்று அழைக்கின்றனர்.

(1) ஈமான்:

இஸ்லாத்தில் மறுமை வாழ்க்கையில் நம்பிக்கை அவசியமாக வலியுறுத்தப்படுகிறது. மனிதன் இம்மையில் செய்த செயல்களுக்கு ஏற்றவாறு மறுமைக்கு ஏற்ற நீதியை இறைவன் தவறாது அளித்தே தீருவான் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கையாகும். இந்தக் கருத்தின் அடிப்படையில் இஸ்லாத்தில் சொர்ககம், நரகம் என்ற கோட்பாடுகளும் அமைந்துள்ளன. இஸ்நெறியைப் பின்பற்றி ஒழுக வேண்டும். அதற்கு அயரா விழிப்புணர்வு என்ற நிலையை மனித உள்ளத்தில் நிலை நிறுத்த ஐந்து வேளை தொழுகை இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது.

(2) தொழுகை:

இறைவனை நினைவு கூர்தல், இறைவனுடைய மேன்மையை ஒப்புக்கொள்ளுதல், அவனைப் போற்றி புகழ்தல், தேவைகளைக் கேட்டு இறைஞ்சுதல், நல்வழி காட்டும்படி வேண்டுதல் ஆகியன தொழுகையில் இடம்பெறும், இறைவனைத் தவிர யாருக்கும் சிரம் தாழ்த்துதல் தேவையில்லை என்பதை இஸ்லாம் உணர்த்துகிறது. இறைவன் முன்பு அனைவரும் சமமானவர்களே என்ற உணர்வு சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதாக அமைந்துள்ளது.

ஓர் உண்மையான இஸ்லாமியர் தினமும் ஐந்து நேரம் தொழ வேண்டும், தொழும் போது 'மக்கா' இருக்கும் திசையை நோக்கித் தொழ வேண்டும்.

(3) நோன்பு:


ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்பதை ஆண், பெண் இருவருக்கும் இஸ்லாம் கடமை யாக்கியுள்ளது. சூரிய உதயம் முதல் மறையும் வரை உள்ள காலத்தில் இறையுணர்விலேயே இருந்துகொண்டு தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளக்கூடிய சிந்தனையில் ஆழ்ந்திருக்க வேண்டும். இக்காலத்தில் எந்த வகையான உணவுகளையும், நீர்ப் பொருளையும் சிறு அளவு கூட உண்ணாமல் இருந்து நோன்பு இயற்ற வேண்டும். நோன்பு இயற்றுவதால் மனிதன் பழிச்செயல்களிலிருந்து விலகுகிறான். பிறருடைய துன்பங்களை உணரவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

ரம்ஜான் மாதம் முழுவதும் அதிகாலையிலிருந்து மாலை வரை ஆகாரம், தண்ணீரின்றி விரதம் இருப்பது முஸ்லீம்களின் முக்கிய கடமையாகும். நோயாளிளும், குழந்தைகளும், யாத்திரை செய்பவர்களும் இதற்கு விலக்கு.

(4) ஜக்காத்

அல்லாஹ், நோன்பாளிகள் மீது "ஜக்காத்' என்ற ஏழை வரியைக் கடமையாக்கி உள்ளார். ஜக்காத் யார் மீது கடமை என்பதையும், அதை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் குர் ஆன் மற்றும் ஹதீஸ்களில் விரிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

நோன்பாளி, "லைலத்துல் கத்ர்' என்ற நாளிலோ அல்லது அதற்கு முன்போ, தன்னிடம் உள்ள சொத்து, தங்கம், மற்ற வருவாய்களில் இரண்டரை விழுக்காட்டைக் கணக்கிட்டு அதைப் பெறத் தகுதியான ஏழைகளுக்கு கொடுத்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோன்பாளிகள் ஈத் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதைப் போலவே, ஏழை எளியவர்களும் அந்தப் பெருநாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஜக்காத் கடமையாக்கப்பட்டுள்ளது.

ஜக்காத் குறித்து நபிகள் நாயகம் அருளியது:

``எவ்வளவு கொடுத்தீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. வாய்மையுடனும், உள்ளத் தூய்மையுடனும் ஏழைகளுக்கு உதவியை கொடுக்கிறீர்களா? என்பதுதான் முக்கியம்''.

"நெருப்பை தண்ணீர் அழித்து விடுவது போன்று, செய்கின்ற தர்மங்கள் பாவங்களை அழித்து விடுகின்றன; தர்மம் இறைவனது கோபத்தை அணைத்து விடுகின்றது; துர்மரணத்தையும் தடுக்கின்றது''.

இன்னும் இது போன்ற பல சிறப்புகள், ஜக்காத் என்ற தர்மம் கொடுப்பதில் இருக்கின்றன.

(5) ஹஜ்

புனித மெக்காவிலுள்ள "கஃபா" எனும் இறையில்லத்தைச் சந்தித்துவர மேற் கொள்ளும் புனிதப் பயணமே ஹஜ்ஜாகும். உடல் நலமும், பயணம் செய்ய ஏற்ற வகையில் வாய்ப்பும் வசதியும் உள்ள ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் இந்தப் புனிதப் பயணம் கடமையாக்கப்பட்டுள்ளது. தமது வாழ்நாளில் ஒருமுறையேனம் இதனைச் செய்து முடிக்கக் கடமைப்பட்டுள்ளனர். திருத்தூதர் இப்றாஹிம் (அலை) அவர்கள் இறைவனுக்காகப் புரிந்த தியாகங்களை நினைவு கூர்வதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைக் கட்டளைகளை நிறைவேற்றிய வரலாற்றைப் புதுப்பிப்பதும் இந்தப் புனித ஹஜ்ஜின் முக்கிய கூறுகளாகும்.

இந்திய நாட்டில் ஆறு சமயமங்கள்:

பரிணாம வரிசையை அடிப்படையாகக் கொண்டு சமயம் ஆறு பிரிவுகளாக உருவாயின.

அவை:
1) சைவம்
2) சாக்தம்
3) வைணவம்
4) செயரம்
5) காணபத்தியம்
6) கெளமாரம்
ஆகும்.

1. சைவ சமயம்:

இறைநிலை எவ்வாறு இருக்கிறது என்று ஆராய்ந்தபோது, அது தூயவெளியாக எல்லையில்லாததாக மெளனமாக இருக்கிறது என்று கண்டனர். அரூபமான இறைநிலையே அனைத்து தோற்றங்களின் உட்பொருளாக உள்ளது என்ற கருத்தில் எல்லோரிடத்தும் அன்பும் கருணையும் காட்டி யாருக்ம் துன்பம் செய்யாது வாழும் நெறியே சைவ சமயம் எனப்பட்டது.

இத்தகைய செய்வ உணர்வில் இருந்துகொண்டு தாவரத்தைத் தவிர்த்த எந்த உயிரினங்களையும் கொன்று உணவாகக்கொள்வாதில்லை என்ற உணர் நோக்கில், மரக்கறி உணவை மட்டும் உட்கொள்ளும் வழக்கம் வந்தபோது அதுவே சைவ உணவு என பெயர் பெற்றது.

2. சாக்த சமயம்:

கடவுள் மெளனமாக இருக்கிறார் என்றால் நம்மை எப்படிக் காப்பாற்றுவார்? எப்படிப் பேசுவார்? என்ற எண்ணம் ஒரு புதிராக இருந்தது. நேரிடையாகப் பரம்பொருளை விளக்குவதைவிடப் பரம் பொருளிலிருந்து தோன்றி யிருக்கும் இயக்க நிலையான விண் என்ற சக்தியையே நாம் வணங்கும் பொருளாக எடுத்துக் கொள்ளலாம் என்றனர்.

சக்தி என்பது இந்தப் பிரபஞ்சமே இயங்கிக் கொண்டிருப்பதற்குக் காரணமாகியது. சக்தி என்பது விண் என்ற சிறிய துகள். இந்த விண்களின் திணிவு நிலைதான் இந்த உடலும், உயிரும். பார்க்கும் பொருள் எல்லாமே சக்தி மயம். சக்தியே அணு முதல் அண்டமங்கள், உயிர்கள், உடல்கள் அனைத்துமாய் உள்ளதால் சக்தியையே வணக்கத்திற்குரிய கடவுளாகக் கொண்டு இறைவழிபாடு ஆற்றி வந்தோர் தங்கள் வாழ்க்கை நெறியைச் சாக்த சமயம் என்று சொன்னார்கள்.

3. வைணவ சமயம்:

விண் என்ற சக்தி சுழன்று கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும் இருக்கின்ற நிலைகளைக் கண்டார்கள். சுழற்சி, சத்தம் என்ற இரண்டு அம்சங்களுக்கும் சக்கரம், சங்கு என உருவம் கொடுத்தபோது ஒரு கையிலே சக்கரத்தையும், இன்னொரு கையிலே சங்கையும் கொடுத்து, மெய்ப்பொருளுக்கு மகாவிஷ்ணு என்ற உருவம் அமைத்து வழிபட்டோர் தங்ககள் வாழ்க்கை நெறியை வைணவ சமயம் என்று சொன்னார்கள்.

4. செளர சமயம்:

சூரியன் வெளிச்சம், வெப்பம் ஆகியவற்றால்தான் உயிர்கள் தோன்றுகின்றன. சூரியன் இல்லாவிட்டால் உணவும் இல்லை; உணிரும் இல்லை, சூரியனின் ஆற்றலே உயிர்களின் தோற்றம், வளர்ச்சி, அழவு ஆகியவற்றிற்குக் காரணம் எனத் தேர்ந்து, சூரியனைக் கடவுளாக ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கை நெறியைச் செளர சமயம் என்று சொன்னார்கள்.

5. காண பத்தியம்:

சிவம் சக்தியாகி, அதிலிருந்து அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளை விண் கூட்டமாகிய பஞ்பூதங்களில் உணர்ந்தார்கள். அவை இயற்கைக்கு ஐந்து கரங்கள் என்பதற்குக் குறிப்பாக யானைமுகன் என்ற தோற்றத்தைக் கொணடுத்து, அதை ஒரு தெய்வமாக மதித்து ஒரு சமயத்தை நிறுவி வழிபட்டவர்கள், தங்கள் வாழ்க்கை நெறியைக் காணபத்தியம் என்று சொன்னார்கள்.

6. கெளமார சமயம்:

சிவம், சக்தி கூட்டால் இந்தப் பிரபஞ்சத்தில் அழத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் என்ற ஆறு நிகழ்ச்சிகள்தாம் உண்டு என்று உணர்ந்தனர். இவை பேரியக்க மண்டலச் சிறப்புகளாகவும், உயிர்களுக்கு இன்ப துன்ப உணர்வுகளாகவும் உள்ளன. எனவே, இத்தகைய ஆறு நிகழ்ச்சிகளையே தெய்வமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவிலே விளங்கிக் கொண்டனர். ஆறு நிகழ்ச்சிகளை ஆறு முகங்களாகக் கொண்டு குமரக்கடவுள் என்ற ஒரு தோற்றத்தைக் கொடுத்து, ஒரு சமயத்தை நிறுவி வழிபட்டபோது, தங்கள் வாழ்க்கை நெறியை கெளமார சமயம் என்று சொன்னார்கள்.

கருத்திற்கு ஒத்த தெய்வநிலைத் தேர்வு செய்து வழிபட்டபோது, காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம், மக்கள் அறிவின் வளர்ச்சிக்கு ஏற்ப இறைவழிபாடு வேறுபட்டது. இயற்கையின் நிலைகளும் ஆற்றல்களும் மறைபொருளாக இருப்பதால் அவற்ளைப் பொதுவாக மக்கள் உணர்ந்து கொள்ள வழியில்லை. எனவே, அம்மறை பொருட்களின் குறிப்பை உணர்த்தும் வடிவங்களை வணக்கத்திற்குரிய தெய்வநிலைத் தேர்வுகளாக்கிக் கொடுத்தனர். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி:- இந்தியா கலாசார புரட்சி அமைப்பு





ஈகரை தமிழ் களஞ்சியம் சமயம் தோற்றமும் வளர்ச்சியும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 15, 2011 12:24 pm

அருமையான சூப்பர் பதிவு, சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி

எவ்வளவோ விசயங்கள், இதன் மூலம் அறியத் தந்தமைக்கு நன்றி.

மூன்று மதத்தைப் பற்றியும், அதற்கான விளக்கமும், ஒவ்வொரு மதத்தின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் பற்றிய விளக்கம் தந்தமைக்கு நன்றி





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 12:27 pm

நன்றி கிட்சா அண்ணே நன்மைகள் எதிலிருப்பினும் எங்கிறிப்பினும் அதை தேடிசெல்வது மகிழ்ச்சிவிளைவிக்கும் இருப்பினும் இது கொஞ்சம் நீண்டபதிவுத்தான் எத்தனைபேர் பொறுமையாக படிப்பார்கள் என்று தெரியவில்லைநன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் சமயம் தோற்றமும் வளர்ச்சியும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 5:18 pm

பெளத்தமதம்

பெளத்தம் கி.மு.566-கி.மு.486 ல் வாழ்ந்த புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமயமும், தத்துவமுமாகும். இந்தியாவில் தோன்றிய இம்மதம் பின்னர் படிப்படியாக மத்திய ஆசியா, இலங்கை, திபெத், தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்காசிய நாடுகளாகிய சீனா, வியட்நாம், ஜப்பான், கொரியா, மங்கோலியா ஆகிய நாடுகளுக்கும் பரவியது.

"எல்லாத் தீமைகளையும் கைவிடுதல். நன்மையே செய்தல் ஒருவரின் உள்ளத்தைத் தூய்மையாக்கல் என்பனவே புத்தரின் போதனைகளாகும்." (தம்மபதம், XIV, 5)

பௌத்தம் பெரும்பாலும், நற்செய்கைகளைச் செய்தல், கெட்ட செய்கைகளை விலக்குதல், மனப்பயிற்சி என்பவற்றைக் கொண்டுள்ளது. இச் செயல்களின் நோக்கம், தனியொருவரினதோ அல்லது சகல உயிரினங்களினதுமோ கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்து ஞானம் பெறுவதாகும். ஞானம் பெறுவதென்பது நிர்வாணம் அடைதலாகும்.

உலகின் தோற்றம் பற்றி பெளத்தம்

உலகின் தோற்றம் பற்றி பல சமயங்களில் உறிதியுடன் தகவல்கள்கள் தரப்பட்டுள்ளன. பொதுவாக, பிற சமயங்கள் உலகை தேற்றுவித்த ஒன்றை பற்றி குறிப்பிட்டு சொல்கின்றன. பெளத்தம் இக்கேள்வி தேவையற்ற ஒன்றாக கருதி, விடையை நோக்கி கற்பனை கதைகளை தர மறுக்கின்றது. உலகம் இருக்கின்றது, அதுவே பெளத்ததின் முடிவு. தேவையேற்படின், இவ்வுலகம் முந்தி இருந்த உலகத்தில் இருந்து கர்ம விதிகளுக்கமைய வந்தது என கொள்ளலாம். எப்படி ஒரு மரம் விதையில் இருந்து வந்ததோ, எப்படி விதை மரத்தில் இருந்து வந்ததோ அப்படியே.

சார்பிற்றோற்றக் கொள்கை

கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகை தோற்றுவிக்கிவில்லை என்பது பெளத்தத்தில், புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்கை. இக்கொள்கையை தமிழில் சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் சமஸ்கிரதத்தில் பிரதித்தியசமுப்பாதம் என்றும் ஆங்கிலத்தில் Dependent Origination என்பர்.
இக்கொள்கையை சோ.ந.கந்தசாமி பின்வருமாறு விளக்குகின்றார்:

"எப்பொருளும் தோன்றச் சார்புகள் (=நிதானங்கள்) காரணமாக உள்ளன. ஆதலின், ஒருபொருளை உண்டென்றோ இல்லையென்றோ உரைப்பது பிழை. எப்பொருளும் சார்பினால் தோன்றி மறைந்து தோன்றி மறைந்து தொடர்தலின் நிலைபேறான தன்மை இல்லை. தோன்றி மறைதல் என்பது இடையறவு படாமல் விளக்குச்சுடர் போலவும் ஓடும் நீர்போலவும் நிகழ்தலின் தோன்றுதல் மறைதல் என்ற இரண்டிற்கும் இடையே நிறுத்தம் என்பது இல்லை. ஆதலின், புத்தரின் சார்பிற்றோற்றக் கொள்கை, முதற் காரணத்தை உடன்பட்ட கடவுட் கொள்கையினைப் புறக்கணித்து, ஒன்று தோன்ற ஒன்று சார்பாக உள்ளது என்ற சார்புக் காரணத்தை கொண்டது.
(பக்கம் 269) - சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம்.

கடவுள் கோட்பாடு

பெளத்த உலக பார்வையில் கடவுள் இருப்பதை அனுமானிக்கவில்லை, அப்படி இருந்தாலும் அதற்கான தேவை அங்கு இல்லை. கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது, அதை மீறிய மீவியிற்கை ஒன்றிருப்பதை பெளத்தம் மறுக்கின்றது. அப்படி இருந்தால் எந்த ஒரு பொருளுகும்மான இருப்பை நோக்கிய பெளத்தத்தின் அடிப்படை மூன்று விதிகளான Anicca, Anatta, Dukkha மீறியே கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும், அது பெளத்தத்தின் உலக பார்வைக்கு ஒவ்வாது.

அனைத்தையும் உருவாக்கும், நிர்வாகிக்கும், அழிக்கும் குணங்களை கொண்ட ஒருமிய சக்தி போன்ற கடவுள் என்ற ஒன்று உண்டு என்பதை புத்தர் மறுத்தார். எனினும் பெளத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகை பிறவிகள் இருக்கின்றார்கள். அவர்களால் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில் கர்ம விதிகளை புரிய கூடியவர்கள் அல்லது அனுபவங்களை பெற அல்லது அனுபவிக்க கூடியவர்கள், ஆனால் அவர்கள் கர்ம விதிகளுக்கு கட்டுபட்டவர்களே.

புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள்.

புத்தர் கண்ட நான்கு உண்மைகள்

துக்கம்: மனிதர்களால் துக்கத்தை தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை மனிதருக்கு துக்கத்தை தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துக்கம் தருபவையே.

ஆசை/பற்று: துக்கத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.

துக்க நிவாரணம்: ஆசையை விட்டுவிடுவதுவே துக்கதுக்கான நிவாரணம்.

எட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தை போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்.

எட்டு நெறிமுறைகள்

நற்காட்சி - Right View
நல்லெண்ணம் - Right Thought
நல்வாய்மை - Right Speech
நற்செய்கை - Right Conduct
நல்வாழ்க்கை - Right Livelihood
நன்முயற்சி - Right Effort
நற்கடைப்பிடி - Right Mindfulness
நற்தியானம் - Right Meditation


பிறவிச் சுழற்சியின் பன்னிரு சார்பு நிலைகள்

1. பேதைமை
2. செய்கை
3. உணர்வு
4. அருவுரு (Mind-Body Organism)
5. ஆறு வாயில்கள் (Six Senses)
6. ஊறு (Sense contact)
7. நுகர்ச்சி (Sense Experience)
8. வேட்கை
9. பற்று
10.பவம் (Will to born)
11.பிறப்பு
12.வினைப்பயன் (Suffering)

பெளத்த எண்ணக்கருக்கள்

அகிம்சை
கர்மம்
சம்சாரம்
ஆத்மன்
தர்மம்
நிர்வானம்
புத்தம்
மீள்பிறவி


நன்றி:- விக்கிபீடியா



ஈகரை தமிழ் களஞ்சியம் சமயம் தோற்றமும் வளர்ச்சியும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 16, 2011 5:26 pm

இதுவரை மேலோட்டமாகதான் இந்த மதங்களை பற்றி தெரியும்.........இவை முழுமையாக அறியும் வண்ணம் உள்ளது நன்றி அண்ணா



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 16, 2011 5:30 pm

அசத்தலான பதிவு.உங்கள் பதிவின் மூலம் எத்தனையோ விசயங்களை தெரிந்து கொண்டேன்.பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சமயம் தோற்றமும் வளர்ச்சியும் Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 5:41 pm

நன்றி ரேவதி மற்றும் கிட்சா சூப்பருங்க சூப்பருங்க :வணக்கம்: நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் சமயம் தோற்றமும் வளர்ச்சியும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Tue Aug 16, 2011 6:10 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அருமை பாலா சார்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 6:13 pm

நன்றி தேமுதிக சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் சமயம் தோற்றமும் வளர்ச்சியும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 16, 2011 6:20 pm

இதை படிப்பதும் மூலம் மீண்டும் சிறு வயதில் சமூக அறிவியல் பட புத்தகத்தை படித்த மாதிரி உணர்வு..!
தெளிவான விளக்கம்..! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக