புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
284 Posts - 45%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
19 Posts - 3%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 40 of 82 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 61 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 21, 2011 7:58 pm

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார். (989)


எதிர்வரும் தீமைகளை எப்பொழுதும் எண்ணாது
மக்களவர் தம்சுயத்திற்கு நிலமகளை பழுதாக்க
என்றென்றும் பொறுத்து பொறுமைக் குவமையாக
நின்றிருக்கும் நிலமதும் தன்பொறுமை இழந்திடுமே

பிள்ளைகளால் தொல்லைபல அனுபவித்தும் அவள்
எள்ளளவும் பிள்ளைகளை திட்டாது அமைதிகாத்து
தாயென்ற பெயருக்கு ஏற்றபடி நடந்திடுனும்சிறிது
பொருமைதனை இழந்து கோவமதை கொள்வாள்

அமைதிக்கும் அழகுக்கும் உரிமைகொள்ளும் கடலே
தன்குணத்தை மாற்றிக்கொண்டு தடம்புரண் டோடும்
கடமைதனை கண்ணியமாய் செய்திடும் பெரியோர்
எந்நிலையிலும் சால்புமாறா கடலெனத் திகழ்வார்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 1:57 pm

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார். (989)


சிறந்த குறள்.சிறந்த கருத்து.
கடமை கண்ணியம் உள்ளோர் எத்தகு நிலையிலுமே நற்குணம் மாறாமல் திகழ்ந்துடுவார் என்பதை பூமியின் கோவம், தாய்மையின் சிறு கோவம் கடலின் ஆக்ரோஷம் இதனோடு ஒப்பிட்டு சொல்லியவிதம் அருமை தம்பி.

[You must be registered and logged in to see this image.]

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 2:01 pm

சிறந்த குறள்.சிறந்த கருத்து.
கடமை
கண்ணியம் உள்ளோர் எத்தகு நிலையிலுமே நற்குணம் மாறாமல் திகழ்ந்துடுவார்
என்பதை பூமியின் கோவம், தாய்மையின் சிறு கோவம் கடலின் ஆக்ரோஷம் இதனோடு
ஒப்பிட்டு சொல்லியவிதம் அருமை தம்பி.


மிக்க நன்றிகள் அக்கா...... புன்னகை [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 3:59 pm

பிஜிராமன் wrote:
எதிர்வரும் தீமைகளை எப்பொழுதும் எண்ணாது
மக்களவர் தம்சுயத்திற்கு நிலமகளை பழுதாக்க
என்றென்றும் பொறுத்து பொறுமைக் குவமையாக
நின்றிருக்கும் நிலமதும் தன்பொறுமை இழந்திடுமே

பிள்ளைகளால் தொல்லைபல அனுபவித்தும் அவள்
எள்ளளவும் பிள்ளைகளை திட்டாது அமைதிகாத்து
தாயென்ற பெயருக்கு ஏற்றபடி நடந்திடுனும்சிறிது
பொருமைதனை இழந்து கோவமதை கொள்வாள்

தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும்
தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத
கடலாகத் திகழ்வார்கள்.


குறளும், விளக்கமும் அருமை பிஜி [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 6:07 pm

தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும்
தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத
கடலாகத் திகழ்வார்கள்.


குறளும், விளக்கமும் அருமை பிஜி [You must be registered and logged in to see this image.]


மிக்க நன்றிகள் ரேவதி...... [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 6:10 pm

சான்றவர் சான்றாண்மைக் குன்றின் இருநிலத்தார்
தாங்காது மன்னோ பொறை. (990)

வருணபகவான் தன்பண்பான மழையை மறந்ததால்
அருமையாய் உழுந்து உலகமதற்கு உணவுதந்து

உடல்நலம் பெற்றுநாம் சிறந்திடவுதவும் மழைநீர்
குறைந்திட உழவரால் அதனை தாங்கிடமுடியாது

வழுக்குக் கம்பத்தில் கட்டிவிட்ட உரியினையே
எடுத்திடும் முடிவினிலே வாலிபர்கள் கூடிநின்று
ஒருவர்மேல் ஒருவரேற கீழுள்ளவர் பலங்குறைய
உரியினை எடுக்காமல் தரைத்தனில் வீழ்ந்திடுவர்

சான்றோரின் நற்குணமே நிலமுடன் இருந்ததற்கு
எத்தகைய பாரத்தையும் தாங்கிடும் வலுவளிக்கும்
அத்தகைய உயர்ந்தோரின் பொற்குணங் குறைந்திட
நிலமதுதன் வலுவிழந்து பாரந்தாங்குஞ் சக்திகெடும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 23, 2011 6:15 pm

பொருட்பால் - பெருமை 98 ஆவது அதிகாரம்

முன்னுரை

இவ்வதிகாரத்தின்தலைப்பு பெருமை, அதாவது ஒருவர் எந்தெந்த செயல்களை செய்யும் பொழுது பெருமைக்குரியவர்ஆகிறார் என்பதை தன் குறள்கள் மூலம் நமக்கு வள்ளுவர் தெளிவுபடுத்துகின்றார்.

1 ஆம்குறளில் ஊக்கமொன்றே ஒருவற்கு ஒளிபோன்ற பெருமை தரும்எனவும

2 ஆம்குறளில் பிறப்பாலே அனைவரும் சமம், அவரவர் தம்தொழிலில் காட்டும் திறமையாலேயே வேறுபடுகின்றனர்எனவும்

3 ஆம்குறளில் பண்புடையவர் தாழ்ந்த இடத்தில் இருந்தும் தாழ்ந்தவர் அல்லர்எனவும்

4 ஆம்குறளில் கற்புக்கரசிகளுக்கு கிடைக்கும் பெருமை தன்னைத் தானே காத்துக் கொள்ளும் மாந்தர்க்கும் கிடைக்கும்எனவும்

5 ஆம்குறளில் சிறந்த செயல்களை முறையோடு செய்து முடிபவர்கள் பெருமைக்குரியவர்கள்எனவும்

6 ஆம்குறளில் பெரியோர்களின் சிறப்பை உணராத சிறியோர் அவர்களை போற்றி வணங்க மாட்டார்எனவும்

7 ஆம்குறளில் தகுதியற்ற சிறியோர்க்கு சிறப்பான வொன்று கிடைக்குமாயின் என்செய்வதென்றறியாமல் அவர் வரம்பு மீறிடுவர்எனவும்

8 ஆம் குறளில் பண்புடைய பெரியோர்கள் அனைவரிடமும் எப்பொழுதும் பணிந்து பழகுவர்

9 ஆம்குறளில் எப்பொழுதும் ஆணவமின்றி அடக்கமுடன் இருப்பது பெருமை தரும் எனவும்

10 ஆவதுகுறளில்பிறர் குறையினை வெளிக்கூறாது மறைத்துக் கூறுவது பெருமைக்குரிய பண்பு எனவும்

தன்பத்துகுறள்களில்கூறுகிறார்.... இனிஒவ்வொருகுறளுக்கானவிளக்கத்தைகவிதை வடிவில்பார்க்கலாம்.....

ஒளியொருவற் குள்ள வெறுக்கை இழியொவற்
கஃதிறந்து வாழ்தும் எனல். (971)

உன்னத ஓவியத்தை நயம்படக் கொடுத்திட
வரைபவன் தன்னுள்ளே ஊக்கம் கொண்டிட
எத்தகைய சிக்கலும் எந்தவழி வந்திடினும்
முத்தென ஊக்கங்கொள்ள எளிதாய் முடிப்பர்

உலகில் நிறையப்பேர் கையின்றி காலின்றி
பலகலைகள் தன்னுள் கொண்டு பல்கலையாய்
எஞ்சிய அனைவருக்கும் காட்டாக திகழ்வாரே
இத்தகைய நற்பெருமைக்கு ஊக்கமே காரணமாம்

இருட்டில் இருந்தாலும் இமயத்தை தொட்டிட
பெருத்த ஊக்கமதை பக்குவமாய் கொண்டிடவே
தக்கஒளி தந்துவாழ்கை தரமுயர்த்தும் அஃதின்றேல்
மிக்க இழிவினையே அதுநல்கி சென்றிடும்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 24, 2011 3:48 pm

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான், (972)


மழைத்துளி பிறக்கும் மழைமேகமதன் இடத்தே
எல்லாத் துளிகளுமே ஓரிடமிருந்து வந்தவையே
அதிற்சில கடற்சேரும் சிலசேகரிப்பு தொட்டிசேரும்
அதுசேரும் இடத்தாலே வேறுபடும் பிறப்பாலல்ல

கருங்கற்கள் எப்பொழுதும் வலிமை கொண்டதுவாம்
அக்கற்கள் தாமுருவான விதத்தினாலே ஒன்றுபடும்
உளிதாங்கும் கற்கள் சிலையாகும் இல்லையேவக்கல்
மிதிதாங்கும் படியாகும் இதனாலே இவைவேறுபடும்

இப்புவிதான் பெற்றெடுத்த அனைத்துயிரும் சமமாகும்
எவ்வுயிரும் தம்பிறப்பால் வேற்றுமை அடைந்திடாது
ஒவ்வோர் உயிரும்தாம் கொண்டதொழிலாலும், அதிற்
காட்டுந் திறமையாலும் வேருபடுமேயன்றி பிறப்பாலல்ல




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 24, 2011 4:04 pm

பிஜிராமன் wrote:சான்றவர் சான்றாண்மைக் குன்றின் இருநிலத்தார்
தாங்காது மன்னோ பொறை. (990)

வருணபகவான் தன்பண்பான மழையை மறந்ததால்
அருமையாய் உழுந்து உலகமதற்கு உணவுதந்து

உடல்நலம் பெற்றுநாம் சிறந்திடவுதவும் மழைநீர்
குறைந்திட உழவரால் அதனை தாங்கிடமுடியாது

வழுக்குக் கம்பத்தில் கட்டிவிட்ட உரியினையே
எடுத்திடும் முடிவினிலே வாலிபர்கள் கூடிநின்று
ஒருவர்மேல் ஒருவரேற கீழுள்ளவர் பலங்குறைய
உரியினை எடுக்காமல் தரைத்தனில் வீழ்ந்திடுவர்

சான்றோரின் நற்குணமே நிலமுடன் இருந்ததற்கு
எத்தகைய பாரத்தையும் தாங்கிடும் வழுவளிக்கும்
அத்தகைய உயர்ந்தோரின் பொற்குணங் குறைந்திட
நிலமதுதன் வழுவிழந்து பாரந்தாங்குஞ் சக்திகெடும்

[You must be registered and logged in to see this image.]
ராமன், எனக்கு படித்ததும் அர்த்தம் புரிந்துவிட்டது.ஒரு சில வார்த்தைகள் .

வழுவளிக்கும் என்றால் வழு அதிகரிக்கும் என்று பொருளா.
இது மட்டும் தான் சந்தேகம்.
[You must be registered and logged in to see this image.]



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 24, 2011 5:28 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:
சான்றோரின் நற்குணமே நிலமுடன் இருந்ததற்கு
எத்தகைய பாரத்தையும் தாங்கிடும் வழுவளிக்கும்
அத்தகைய உயர்ந்தோரின் பொற்குணங் குறைந்திட
நிலமதுதன் வழுவிழந்து பாரந்தாங்குஞ் சக்திகெடும்
ராமன், எனக்கு படித்ததும் அர்த்தம் புரிந்துவிட்டது.ஒரு சில வார்த்தைகள் .

வழுவளிக்கும் என்றால் வழு அதிகரிக்கும் என்று பொருளா.
இது மட்டும் தான் சந்தேகம்.
[You must be registered and logged in to see this image.]
எழுத்து பிழையாக இருக்க வேண்டும் இரண்டு இடங்களிலும் வலுவளிக்கும், வலுவிழந்து என்றுதான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்




வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 40 of 82 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 61 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக