புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
51 Posts - 43%
heezulia
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
3 Posts - 3%
prajai
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
417 Posts - 49%
heezulia
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
286 Posts - 33%
Dr.S.Soundarapandian
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
28 Posts - 3%
prajai
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_m10நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா???


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 09, 2011 12:17 am

உங்களில் யாராவது உங்கள் காது, மூக்கு, வாய் இவற்றை நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா? நமது உடலில் கை, கால் போன்ற பகுதிகளை நேரடியாகப் பார்க்க முடியும். அதே நேரம் கண், காது, மூக்கு, வாய், முதுகு என்று நம் உடலின் பல பகுதிகளை நம்மால் நேரடியாகப் பார்க்க முடியாது. அவற்றின் பிம்பங்களைத் தான் பார்க்கமுடியும். நம்மோடு பிறந்து, நம் உடலின், நம் வாழ்வின் முக்கிய அங்கங்களாக இருக்கும் இந்தப் பகுதிகளை நாம் நேரடியாகப் பார்க்க முடியாமல் இருப்பதுபோல், நம் வாழ்வின் ஆதாரமாய், அடித்தளமாய் இருக்கும் இறைவனையும் நாம் பல நேரங்களில் பார்க்க முடியாமல் தவிக்கிறோம். முக்கியமாக, வாழ்வில் துன்பங்கள், போராட்டங்கள் சூழும் நேரங்களில் நம் கடவுள் தொலைந்துபோய் விட்டதைப் போல் உணர்கிறோம். ஆனால், உண்மை என்ன? நாம் நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும், நம் உடலின் பகுதிகளாய் இருக்கும் இந்த உறுப்புக்களைப் போல், நம் கடவுளும் எங்கும், எப்போதும் நம் முன், நம்மைச் சுற்றி இருக்கிறார். மறுக்க முடியாத இந்த உண்மையை நம் உள்ளத்தில் இன்னும் ஆழமாய் வேரூன்ற இன்றைய ஞாயிறு சிந்தனை நமக்கு உதவியாக இருக்கும். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியா மூலமும், நற்செய்தியில் சீடர்கள், அதிலும் சிறப்பாக பேதுரு மூலமும் கடவுளின் பிரசன்னத்தை வாழ்வில் உணர்ந்து கொள்ளும் வழிகளை நாம் கற்றுக் கொள்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில் நாம் சந்திக்கும் இறைவாக்கினர் எலியா தன் உயிருக்குப் பயந்து குகையில் ஒளிந்திருக்கிறார். பாகால் என்ற தெய்வத்திற்குப் பணி செய்த பொய்வாக்கினர்களை நூற்றுக் கணக்கில் பழி தீர்த்த இறைவாக்கினர் எலியா, (அரசர்கள் முதல் நூல் 18: 40) அரசன் அல்லது அரசி கையால் இறப்பதற்குப் பதில் இறைவன் கையால் இறப்பதே மேல் என்ற தீர்மானத்தில் குகையில் ஒளிந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில், குகையைவிட்டு வெளியே வந்து, தன்னைச் சந்திக்கும்படி இறைவன் எலியாவுக்கு அழைப்பு விடுக்கிறார். குகைக்கு வெளியே இறைவனைச் சந்திக்க வரும் எலியா, சுழல் காற்று, நிலநடுக்கம், தீ ஆகியவற்றைக் காண்கிறார். இவை எதிலும் இறைவன் இல்லை. இவைகளுக்குப் பின் வந்த மெல்லிய ஒலியில் இறைவனின் அழைப்பை எலியா கேட்கிறார்.
சக்தி வாய்ந்த அரசனை, அரசியை எதிர்த்து, தன்னைக் காக்க வரும் இறைவன் சக்தியின் வெளிப்பாடுகளான சுழல்காற்று, நிலநடுக்கம், தீ இவைகளின் வழியே தன் சக்தியைக் காட்ட வேண்டும். இதுதான் இறைவாக்கினரின், எதிர்பார்ப்பு. நமது எதிர்ப்பார்ப்பும் இதுவே. இந்த எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக, மெல்லிய ஒலியில் இறைவன் இறைவாக்கினரைச் சந்தித்தது எலியாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்ல பாடம்.
நாம் எதிர்பார்க்கும் வழிகளில் வராமல், எதிர்பாராத விதமாய் வந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதே இறைவனின் அழகு. இதையே இன்றைய நற்செய்தி நிகழ்ச்சியிலும் நாம் காண்கிறோம். இயேசு கடல் மீது நடந்தது, பேதுரு கடல் மீது நடக்க முயன்றது ஆகிய நிகழ்வுகள் இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளன. இயேசு கடல் மீது நடந்த புதுமை மத்தேயு, மாற்கு, யோவான் என்ற மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ளது. இயேசு 5000 பேருக்கு உணவளித்த பிறகு அன்று மாலை அல்லது இரவே இந்தப் புதுமை நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 09, 2011 12:18 am

இன்றைய நற்செய்தியின் முதல் வரிகளே நமக்கு ஒரு பாடத்தைச் சொல்லித் தருகின்றன. இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார். (மத்தேயு நற்செய்தி 14: 22) பசியாலும் நோயாலும் வாடியிருந்த மக்களின் தேவைகளை நிறைவு செய்த இயேசு உடனே அவ்விடத்தை விட்டு அகல நினைக்கிறார். அது மட்டுமல்ல. தன் சீடர்களையும் அவ்விடத்தைவிட்டு செல்லும்படி கட்டாயப்படுத்துகிறார் என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இயேசுவின் இந்த அவசரத்திற்கான காரணத்தை யோவானின் நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. யோவான் நற்செய்தியில் 5000 பேருக்கு உணவளித்ததும், எழுதப்பட்டுள்ள வரிகள் இவை:
யோவான் நற்செய்தி: 6: 14-15
இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

வயிறார உண்டவர்கள் இயேசுவை வாயாரப் புகழ்ந்திருக்க வேண்டும்... அந்தக் கூட்டத்தில் ஒருவர் திடீரென, "இவர்தாம் நாம் இத்தனை ஆண்டுகளாய் காத்து கிடந்த அரசர்." என்று உரக்கச் சொல்லியிருக்கலாம். இதுவரை இயேசுவின் சொல்திறமையைக் கண்டு வியந்தவர்கள், இன்று அவர் செயல் திறமையையும் கண்டனர். 5000 பேருக்கு உணவளித்த அந்தப் புதுமை இயேசுவின் மீது இருந்த மதிப்பை இன்னும் பல மடங்காக உயர்த்தியது. இயேசு அவர்களது எண்ணங்களை, அவ்வெண்ணங்களை செயல்படுத்த அவர்கள் கொண்ட வேகத்தைப் பார்த்தார். அவர்கள் மத்தியிலிருந்து நழுவிச் சென்றார். கூட்டத்தில் உருவாகும் நிதானமற்ற உணர்வுகள் ஒருவருக்குக் கோவில் கட்ட கற்களைத் திரட்டும். அல்லது அதே கற்களை எறிந்து அவரைக் கொன்று சமாதியும் கட்டும். இதை நன்கு உணர்ந்திருந்த இயேசு அங்கிருந்து அகன்று சென்றார். எதற்காக? தன் தந்தையுடன் உறவாட, உரையாட...
மின்னல் கீற்று போல சிந்தனை ஒன்று எனக்குள் பளிச்சிடுகிறது. வாழ்க, வாழ்க என்று கோஷம் போடும் கும்பல் பாடும் துதிகளிலேயே மயங்கி கனவு காணும் நமது தலைவர்கள் அவ்வப்போது இப்படி கூட்டத்திலிருந்து தப்பித்துப் போய், தனியே தங்கள் வாழ்க்கையைக் கொஞ்சம் அமைதியாய் சிந்தித்தால், எவ்வளவு பயன் கிடைக்கும்? ஹூம்... அன்பர்களே, இப்போது நீங்கள் கேட்டது… என் ஏக்கப் பெருமூச்சு.

தந்தையோடு தனியே உறவாடச் சென்ற இயேசு அங்கேயேத் தங்கி விடவில்லை. காற்றோடு, கடலோடு போராடிய தன் சீடர்களைத் தேடி வந்தார். அதுவும், கடல் மீது நடந்து வந்தார். உரோமையப் பேரரசைக் கவிழ்க்க உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள் என்று இயேசுவை அரசராக்க வந்த மக்களிடமிருந்து தப்பித்தார் இயேசு. காரணம்? அவரது அரசு, அவரது பணி உரோமைய சக்திக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதை இயேசு விரும்பவில்லை. மாறாக, இவ்வுலக, மறு உலக சக்திகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படவேண்டும் என்பது அவரது விருப்பம். இந்தச் சக்திகளைத் தன் காலடிக்குக் கொண்டு வருவதைக் காட்டும் வகையில் இயேசு கடல் மீது நடந்தார்.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 09, 2011 12:18 am

கடல் மீது நடந்து வருவது இயேசுதான் என்பதைச் சீடர்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அவர்களது எண்ணங்கள், பார்வைகள் எல்லாம் அவர்களைச் சூழ்ந்திருந்த கடல் அலைகளிலும் காற்றிலுமே இருந்ததால், கடவுளை அவர்களால் பார்க்க முடியவில்லை. துன்பங்கள், போராட்டங்கள் நேரத்தில் கடவுளைப் பார்க்கமுடியாமல், கடவுள் நம்மை விட்டு தூரமாய் போய்விட்டதைப் போல் எத்தனை முறை உணர்ந்திருக்கிறோம்?
எப்போதோ வாசித்த ஓர் உவமைக் கதை இது. மனிதன் ஒருவன் தன் வாழ்க்கைப் பயணத்தைத் திருப்பிப்பார்க்கிறான். பயணத்தில் கடவுள் தன்னோடு நடந்து வந்ததற்கு சான்றாக பாதை முழுவதும் இரு ஜோடி காலடித் தடங்கள் பதிந்திருந்தன. அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு சில நேரங்களில் அந்தப் பாதையில் ஒரு ஜோடி காலடித் தடங்களே இருந்ததைப் பார்க்கிறான். நினைவுபடுத்தி பார்த்த போது, அந்த நேரங்களெல்லாம் அவன் அதிக துன்பத்தில், போராட்டத்தில் கஷ்டப்பட்ட நேரங்கள் என்று கண்டுபிடிக்கிறான். உடனே கடவுளிடம், "துன்ப நேரத்தில் என்னைத் தனியே விட்டுவிட்டு போய் விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?" என்று முறையிடுகிறான். "மகனே, பெரும் அலைகளாய் துன்பங்கள் வந்தபோது ஒரு ஜோடி காலடித் தடங்களே இருப்பதைப் பார்த்து விட்டு அவசர முடிவேடுத்துவிட்டாய். அந்த நேரத்தில் உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக் கொண்டு நடந்தேன்." என்றார் கடவுள்.

மத்தேயு இன்னுமொரு புதுமையை இங்கு சேர்க்கின்றார். அந்தப் பகுதியைக் கூறும் நற்செய்தியைக் கேட்போம்.
மத்தேயு நற்செய்தி 14: 26-32
அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, 'ஐயோ, பேய்' என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். 'துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்' என்றார். பேதுரு அவருக்கு மறுமொழியாக, 'ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்' என்றார். அவர், 'வா' என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்' என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, 'நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?' என்றார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, 'உண்மையாகவே நீர் இறைமகன்' என்றனர்.

சிறு குழந்தைகளைப் பெரியவர்கள் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் விளையாட்டைப் பார்த்திருப்போம். அந்தக் குழந்தை எந்த வித பயமும் இல்லாமல், சிரித்தபடியே வானத்தில் பறக்கும் காட்சி அழகாய் இருக்கும். அப்பாவோ, அம்மாவோ அருகிருக்கிறார்கள் என்று தெரிந்தால் குழந்தைகளுக்கு அசாத்திய வீரம் வந்து விடும்.
தீப்பிடித்து எரியும் ஒரு வீட்டின் முதல் மாடியில் ஒரு சிறுமி அகப்பட்டுக் கொண்டாள். கீழே இருந்து தந்தை அந்தச் சிறுமியைக் குதிக்கச் சொல்கிறார். குழந்தை அங்கிருந்து கத்துகிறாள்: "அப்பா, ஒன்னும் தெரியலியே. ஒரே புகையா இருக்கே. எப்படி குதிக்கிறது?" அப்பா கீழிருந்தபடியே சொல்கிறார்: "உனக்கு ஒன்னும் தெரியலனாலும் பரவயில்லமா. தைரியமா குதி. என்னாலே ஒன்னைப் பார்க்க முடியுது. குதிம்மா." என்று தந்தை சொன்னதை நம்பி குதிக்கிறாள் சிறுமி, தந்தையின் பாதுகாப்பிற்குள்.

பேதுரு ஒரு குழந்தை போல பேசுகிறார். இயேசுவும் ஒரு குழந்தையாக மாறி ஒரு விளையாட்டை ஆரம்பிக்கிறார். தண்ணீரில் நடப்பதே ஒரு சாதனை. அதுவும் புயல், அலை எனச் சுற்றிலும் பயமுறுத்தும் சூழலில் இயேசு பேதுருவைத் தண்ணீரில் நடக்கச் சொன்னது பெரியதொரு சவால்.
இதில் கவனிக்க வேண்டிய இன்னுமொரு அம்சம் என்னவென்றால், இயேசு பேதுருவுக்கு அந்தச் சவாலை அளிக்கும் முன்பு காற்றையும், கடலையும் அமைதி படுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை.
வாழ்க்கையில் வீசும் புயல்கள் எல்லாம் ஓய்ந்த பிறகுதான், பிரச்சனைகளை எல்லாம் தீர்ந்த பிறகுதான் இறைவனைச் சந்திக்க முதல் அடி எடுத்துவைப்போம் என்று நினைக்கும் நம் எண்ணங்கள் தவறு; மாறாக அந்தப் புயலின் நடுவில் இறைவன் காத்துக்கொண்டிருப்பார் துணிந்து சென்று அவரைச் சந்திக்கலாம் என்பதை இயேசு நமக்கு சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறார்.
பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்... அலையும், புயலும் அலைகழித்துக் கொண்டுதான் இருக்கும்... அஞ்சாதீர்கள், துணிந்து வாருங்கள்.... புயலின் நடுவில், கடலின் நடுவில் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

அருள் வாக்கு..!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 09, 2011 1:21 am

பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்... அலையும், புயலும் அலைகழித்துக் கொண்டுதான் இருக்கும்... அஞ்சாதீர்கள், துணிந்து வாருங்கள்.... புயலின் நடுவில், கடலின் நடுவில் கடவுள் நம்மோடு இருக்கிறார்.
அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? Ila
ஜான்
ஜான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 08/08/2011

Postஜான் Tue Aug 09, 2011 6:44 am

இறைவனை நம்பி இறங்கி விட்டால் செயற்கரிய செய்யலாம் என்பது இதன் சுருக்கம்

நன்றி தம்பிகளே


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 09, 2011 6:47 pm

நன்றி அண்ணா..! நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 6:50 pm

அற்புதமான பதிவு மிக அருமயான பகிர்வு இதை நேற்றே எனது ஐபாடில் பார்த்தேன் அதில் பின்னூட்டமிடமொடியாததால் இன்று இடலாம் என்று இருந்தேன் இப்பொழுது மீண்டும் கண்ணில் பட்டது மிக்க நன்றி அருண் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா??? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 09, 2011 6:52 pm

நன்றி பாஸ்..! நன்றி நன்றி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 09, 2011 7:12 pm

பகிர்வுக்கு நன்றி அருண் சூப்பருங்க அருமையிருக்கு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 09, 2011 7:28 pm

நன்றி சுதா அண்ணா..! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக