புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_m10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10 
14 Posts - 70%
heezulia
நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_m10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_m10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_m10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_m10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_m10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_m10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_m10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_m10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
prajai
நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_m10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_m10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_m10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_m10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_m10நான் முத்துமாரி ஆனது எப்படி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் முத்துமாரி ஆனது எப்படி?


   
   
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Aug 17, 2011 3:21 pm

இந்த பதிவை ஒரு வலைப்பூவில் படித்தேன்... பகிரவேண்டும் என தோன்றியது... பெண்களுக்கு, ஏழைகளுக்கு, இல்லாதோருக்கு மட்டுமின்றி அனைவருக்கும் தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய பதிவு... படியுங்கள்...


நான் முத்துமாரி ஆனது எப்படி? Star2703_B

புழுதி பறக்கும் கரிசல் காடுதான் முத்துமாரியின் முகவரி. தயங்கி வெளிப்படும் வார்த்தைகளின் உச்சரிப்பில் இன்னமும் நகரம் பழகாத ஒரு கிராமத்துப் பெண் தெரிகிறார். வாய்ப்புகளும் வசதிகளும் அற்ற விருதுநகர் பக்கத்துக் கிராமம் சத்திரரெட்டியப்பட்டியில் பிறந்த முத்துமாரி இன்று டெபுடி கலெக்டர்!

முதல் தலைமுறையாகப் பள்ளிக்கூடம் பார்த்து, முட்டி மோதி முன்னேறி வந்திருக் கும் கரிசல் மண் பெண்!

வாய்ப்புகள் சூழ்ந்திருக்க உச்சம் தொடுவதைக் காட்டிலும்; உண்ணவும், உடுக்கவும், படிக்கவும், பயணிக்கவும் வாய்ப்புகள் மறுக்கப்படும் இடத்தில் இருந்து வெற்றியை எட்டிப்பிடிப்பது கூடுதல் சாதனை!

''விருதுநகர்ல இருந்து மதுரை போற ரோட்லதான் எங்க ஊரு. அப்பா சிவபாக்கியத்துக்கும் அம்மா பஞ்சவர்ணத்துக்கும் விவசாயம்தான் வேலை. சொந்தமா இருக்குற கொஞ்சம் நிலத்துல மழை பெய்ஞ்சா ஏதாச்சும் விவசாயம் நடக்கும். மத்த நாளெல்லாம் கூலி வேலை. நானும் அப்பப்போ அவங்ககூட வேலைக்குப் போவேன். பள்ளிக்கூடத்துலயும் எனக்குப் பெருசா எதுவும் தெரியாது. 'வீட்டுல நம்மளை கஷ்டப்பட்டுப் படிக்கவைக்காங்க. ஒழுக்கமாப் படிக்கணும்.' அது மட்டும்தான் தெரியும். அதனால, டீச்சர் என்ன படிச்சுக் குடுத்தாலும் உடனே படிச்சிருவேன். பத்தாங்கிளாஸ்ல நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்.

கள்ளிக்குடி பள்ளிக்கூடத்துல ப்ளஸ் ஒன் சேர்ந்த பிறகுதான் இன்ஜினீயரிங் படிக்கணும்னு ஆசை வந்து வெறியோடு படிச்சேன். எப்பமும் படிப்புதான். ப்ளஸ் டூ-ல 1026 மார்க் எடுத்து பள்ளிக்கூடத்துல இரண்டாவதா வந்தேன். எங்க ஊருக்கு அதெல்லாம் பெரிய மார்க். ஆனா, ஒண்ணுத்துக்கும் பயன்படலை. இன்ஜி னீயரிங் காலேஜ்ல பேமென்ட் ஸீட்டுதான் கிடைச்சது. அதுக்கு லட்சக்கணக்குல பணம் கட்டச் சொன்னாங்க. எங்க வீட்டுல முடியலை. அதுக்காக என்ன செய்ய?

பிறகு, விருதுநகர் வி.வி.வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரியில் பி.ஏ. ஹிஸ்ட்ரி சேர்ந்தேன். 'நல்லாப் படிக்கிற பிள்ளையை இப்படி ஹிஸ்ட்ரில சேர்த்துவிட்டிருக்குறதப் பாரு'ன்னு ஊரெல்லாம் எங்க அம்மா, அப்பாவைக் கேலி பண்ணாங்க. 'வரலாறு படிச்சா அரசாங்க வாத்தியார் வேலை மட்டும்தான் கிடைக்கும். இப்பல்லாம் அரசாங்கத்துல ஹிஸ்ட்ரி வாத்தியார் வேலைக்கு ஆள் எடுக்குறது இல்லை' அப்படி, இப்படின்னு ஆளாளுக்கு சொன்னாங்க. அதைக் கேட்டு எங்க வீட்டுக்கும் வருத்தம். நானும் அழுவேன். மெள்ள மெள்ளத் தேறி, 'சரி எதுவா இருந்தா என்ன? படிக்கிறதை ஒழுங்காப் படிப்போம்'னு படிக்க ஆரம்பிச்சேன். டிகிரி ரிசல்ட் வந்தப்போ பி.ஏ.ஹிஸ்ட்ரியில நான்தான் யுனிவர்சிட்டி கோல்டு மெடல்.

அடுத்தது என்ன பண்றதுன்னும் தெரியலை. அம்மா, அப்பா ரெண்டு பேருமே படிக்காததுனால விவரம் சொல்ல யாரும் இல்லை. நாங்களா உக்காந்து பேசி 'டீச்சருக்குப் படிச்சா என்னிக்கு இருந்தாலும் வேலை கிடைச்சிரும்'னு முடிவு பண்ணினோம். சேலம் சாரதா பெண்கள் கல்வியியல் கல்லூரியில் பி.எட்., சேர்ந்தேன். ஒரு வருஷம் ஹாஸ்டல். அரசாங்க ஸீட்டுங்கிறதால பெருசாச் செலவு இல்லை. படிச்சு முடிக்கும்போது என்கூட காலேஜ்ல படிச்ச புஷ்பராணியைப் பார்த்தேன். அவங்க மதுரையில தங்கி ஐ.ஏ.எஸ்., தேர்வுக்குத் தயாராகிட்டு இருந்தாங்க. 'நானும் ஐ.ஏ.எஸ்., எழுதணும். என்ன பண்ணணும்?'னு கேட்டதுக்கு, 'தினமும் பேப்பரைப் படி. அதுல வர்ற அறிவிப்புகளைப் பார்த்துக்கிட்டே இரு'ன்னு சொன்னாங்க. அதுக்குப் பிறகுதான் வீட்டுல தினமும் பேப்பர் போடச் சொல்லி படிக்க ஆரம்பிச்சேன்.

அப்படித்தான் ஒருநாள் 'சைதை துரைசாமி மனித நேய அறக்கட்டளை' சார்பா சென்னையில் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி கொடுக்கிற தகவல் தெரிஞ்சது. அங்கே போனேன். சின்ன தேர்வுவெச்சு சேர்த்துக்கிட்டாங்க. அதுவரைக்கும் சென்னைக்கு நான் வந்ததே இல்லை. ஆனா, அந்தப் பயமே தெரியாம அத்தனை அன்போடு அக்கறையோடு கவனிச்சுக்கிட்டார் துரைசாமி சார். இந்த ரெண்டு வருஷத்துல நான் சாப்பிட்ட சாப்பாடு, துணிமணி எல்லாம் அவர் தந்ததுதான். நானெல்லாம் சென்னைக்கு வந்து படிப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. அதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கும்போது அதை சரியாப் பயன்படுத்திக்கணும்னு நினைச்சேன்.

2008-ல் நான் இந்த ஐ.ஏ.எஸ்., அகாடமியில் வந்து சேர்ந்தேன். சிவில் சர்வீஸ் எழுதுறதுதான் நோக்கம். ஆனா, 2009 ஆரம்பத்தில் குரூப்-1 எக்ஸாம் வந்தப்போ, எங்க குடும்ப நிலைமையை மனசுலவெச்சு அதை எழுதலாம்னு நினைச்சேன். அகாடமியில் சொன்னப்போ, 'தாராளமா எழுதுங்க'ன்னு சொல்லி அதுக்குரிய புத்தகங்கள் எல்லாம் வாங்கித் தந்தாங்க. ராத்திரி பகலா எனக்குப் படிக்கிறதுக்கு எல்லாரும் உதவி பண்ணாங்க. ஆரம்பக் கட்டத் தேர்வு, பிறகு எழுத்துத் தேர்வு, அப்புறம் நேர்முகத் தேர்வு எல்லாம் வரிசையா முடிஞ்சு போன மாசம்தான் தேர்வு முடிவு வந்துச்சு. முதல் முயற்சியிலேயே குரூப் -1 தேர்வுல ஜெயிச்சுட்டேன். இப்போ நான் டெபுடி கலெக்டர்!'' என்கிறார் முத்துமாரி கம்பீரமாக.

''இனி என் நோக்கம் ஐ.ஏ.எஸ்-தான். தொடர்ந்து சிவில் சர்வீஸ் எழுதுவேன். சத்திரரெட்டியப்பட்டியின் முதல் ஐ.ஏ.எஸ்., நானாக இருப்பேன்!''

வாழ்த்துக்கள் முத்துமாரி!

மூலம் : ஆனந்த விகடன் மற்றும் http://mellathamizhini.blogspot.com



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நான் முத்துமாரி ஆனது எப்படி? Boxrun3
with regards ரான்ஹாசன்



நான் முத்துமாரி ஆனது எப்படி? Hநான் முத்துமாரி ஆனது எப்படி? Aநான் முத்துமாரி ஆனது எப்படி? Sநான் முத்துமாரி ஆனது எப்படி? Aநான் முத்துமாரி ஆனது எப்படி? N
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 17, 2011 3:23 pm

மனிதனை, மனிதநேயம் கொண்டு உதவுவதற்கு இங்கு மனித நேயங்கள் இருக்கத்தான் செய்கிறது.அந்த பெண்ணிற்கு உதவிய அத்தனை உள்ளங்களுக்கு ஒரு சல்யூட்.அதே போல் அந்த முத்துமாரி, அவர்களுடைய செயலிலும் முத்தாக மாறி செயல் பட வாழ்த்துகள்


சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நான் முத்துமாரி ஆனது எப்படி? Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 17, 2011 3:25 pm

டெபுடி கலெக்டர் முத்துமாரிக்கு ஒரு சல்யூட் நான் முத்துமாரி ஆனது எப்படி? 2825183110 நான் முத்துமாரி ஆனது எப்படி? 224747944



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Aug 17, 2011 3:34 pm

அர்த்தமுள்ள, வாழ்வை அர்த்தப்படுத்திய ஒரு கட்டுரை விகடனில் வாசித்தாலும் இங்கே உறவுகளுடன் படித்ததில் மகிழ்ச்சி...
பகிர்ந்ததற்க்கு நன்றி ranhassan



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நான் முத்துமாரி ஆனது எப்படி? Aநான் முத்துமாரி ஆனது எப்படி? Bநான் முத்துமாரி ஆனது எப்படி? Dநான் முத்துமாரி ஆனது எப்படி? Uநான் முத்துமாரி ஆனது எப்படி? Lநான் முத்துமாரி ஆனது எப்படி? Lநான் முத்துமாரி ஆனது எப்படி? Aநான் முத்துமாரி ஆனது எப்படி? H
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Aug 17, 2011 3:43 pm

சூப்பருங்க ரொம்ப கஷ்டபட்டிருக்காங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக