புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Poll_c10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Poll_m10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Poll_c10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Poll_m10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Poll_c10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Poll_m10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Poll_c10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Poll_m10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Poll_c10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Poll_m10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Poll_c10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Poll_m10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு.


   
   

Page 2 of 2 Previous  1, 2

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 19, 2011 4:49 pm

First topic message reminder :

ஈகரைத் தோழர்களுக்கு ரமேஷ்நாகா - வின் அன்பு வணக்கங்கள்.
ஈகரைக் கவிதைப் போட்டி -4-இல் நானும் கலந்து கொண்டேன்.
ஆனால் நான் செய்த ஒரு தவறால், போட்டியின் விதி முறைகளுக்கு முரணானவனாகி,
போட்டியில் பங்கு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.

நான் எனது கவிதைகளை இ-மெயிலில் அனுப்பும் பொது அதை பிடிஎஃப் கோப்பில் அனுப்பி விட்டேன்.
இது குறித்து வந்த எச்சரிக்கையையும் நான் பார்க்கத் தவறி விட்டேன்.அதனால் என்னால்
கவிதைப் போட்டி-4-இல் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது.

ஒரு போட்டியில் கலந்து கொள்பவனுக்கு எத்தனை கவனம் வேண்டும் என்பதை நமது ஈகரைத் தோழர்கள் அனைவரும் அறிய வேண்டும்
என்பதனாலேயே இது குறித்து இப்போது எழுதுகிறேன்.
என்றாலும், நான் நம் ஈகரைத் தோழர்களுக்காக எழுதிய மூன்று கவிதைகளையும் இப்போது பகிர்ந்து கொள்வதில்
பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

தலைப்பு : அரசியல்:
********************

கவிதையின் பெயர்: எரிந்து போகும் வைரங்கள்:
****************************************
யாருக்குப் பாவம் செய்தேன்? - ஒற்றை எறும்புக்கும் தீங்கறியேன்;
மா தவத்துப் பிள்ளை இங்கே நானிருக்கப் போனதென்ன?
கூன் விழுந்த காலத்திலே-தோள் கொடுக்கப் பிள்ளை பெற்றேன்;
பட்ட மரம் நானிருக்கப் பச்சை மரம் படுத்ததென்ன?

நாலெழுத்துப் படிக்க வைத்தேன்-நானறியா நாகரீகம் சொல்லி வைத்தேன்.
ஐந்தறிவு அரசியலில் அவன் ஆயுள் முடிந்ததென்ன?
கொள்கை இல்லா அரசியலில் கொள்ளை போனது என் இதயம்.
அட!- உப்புக்கல்லு அரசாள என் வைரம் எரிந்ததென்ன?

வாய்மையில்லா அரசியலில்-
தலைவனுக்குத் துன்பமென்று தீக்குளித்த என் மகனே!
உன் உடம்பு வேகும் முன்னே என் உயிர் எரிந்து போனதையா!

ஐயா!-
செத்த உன் பேரைச் சொல்லி நிதி சேர்ப்பான் உன் தலைவன்;
நீதி கேட்டு வாசல் வரை.. நடை நடப்பான் உன் தோழன்.
நீ வளர்ந்த கருப்பையின் பொங்கி வரும் கண்ணீரை ...
யார் துடைப்பார் சொல்லுமையா!?

வார்த்தைகளால் ஏமாற்றி..ஏழைகளின் வாழ்க்கையினை விற்று விடும்
அரசியலைத் தடை செய்வோம்..
இனி ஊமைகளே அரசாளும் விதி செய்வோம்.
இது செய்தால்-
நெருப்பின் பசியாற இந்த ஏழை மகன் இறுதியாவான்.

தலைப்பு: சமுதாயம்:
***********************
கவிதையின் பெயர்: கரிக்கும் மழை நீர்:
***************************************

அலைந்து திரிகிறேன் நமது தெருக்களில்
நமக்கான முகவரியற்று.
ஊழல் நூற்றாண்டுகளின் தொடர்ச்சியாய்
இன்றைய நாளின் புதிய பக்கங்கள்.
"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!"-இல் துவங்கி
"இரவிலே வாங்கினோம்! இன்னம் விடியவே இல்லை!"-யைக்
கடந்து கொண்டிருக்கிறது காலம்.
"கண்ணீரால் காத்தது"- கருகி விட
அறுவடைகள் அடை காக்கப் படுகிறது..
மீண்டும், மீண்டும் அரசர்களாவோரின் களஞ்சியத்தில்.
பாட்டன்..பூட்டன் தியாகங்கள்
பரிசளிப்பு..அரசு வேலை..அலைக்கழித்தலோடு நின்று விட..
எலிகள் நரிகளாகி விட்டன..இன்றைய கால கட்டத்தில்.
இனி யாரும் சொல்ல எதுவுமில்லை...
நமது வானத்தில் மழை நீர் கரிக்கத் துவங்கி..

வெகு நாட்களாகி விட்டது.
*****************************************************

தலைப்பு : காதல்:
கவிதையின் பெயர்: நேசிப்பதால் மட்டுமே நிராகரிக்கிறேன்:
*********************************

என்னை மன்னித்து விடு! பெண்ணே!
உன் இமைச் சிறையை உடைத்து..உன் இதயச் சிம்மாசனத்தில்
நான் அமர்ந்ததாலும்..
உன் கன்னங்களில் உருண்டு விழும் கண்ணீரின் வெப்பமாய்
நான் இருந்ததாலும்.

உனக்கும் எனக்கும்தான் எத்தனை வேறுபாடு?
என்னை மட்டுமே அறிந்த நீ!
வாழும் உரிமையைத் தொலைத்துவிட்டு..
நடக்கும் பிணங்களாய்..இருக்கும் மக்களை சுமக்கும் நான்.

நான் உன்னையும் நேசிக்கிறேன்..
நமது தேசத்தைப் போலவே.!
நீயும் என்னை நேசித்தத்தில்..
எனக்கு மட்டும் வேதனை கலந்த மகிழ்ச்சி.

"மகிழ்ச்சி"- எனது ஆண்மையை உனது தீராக் காதலால் கௌரவப் படுத்தியதால்.
"வேதனை"- நமது தேசத்தின் நாளைய சூரியனை நசுக்க நினைக்கும்...
எதிரிகளோடு போராடும் என்னை..நீ நேசிப்பதால்.

நாளை-
நம் தேசத்தில்..நமது சூரியன் உதிக்கையில்..
நமது சுவாசம் மட்டுமே எங்கும் தென்றலாய் வீசுகையில்..
எனது காதலின் மாலைகளும்..உனது கழுத்தில் மட்டுமே விழும்.

அதுவரை-
நேசிப்பதால் மட்டுமே நிராகரிக்கிறேன்..

நம் காதலை.
*********************************************************


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 19, 2011 10:41 pm

காதலை பற்றிய கவி மிக அருமை அய்யா! விடுங்கள் அடுத்த முறை விழிப்புடன் செயல் பாடுங்கள்.. அருமையிருக்கு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 19, 2011 11:02 pm

ரொம்பவும் நன்றி! கலைவேந்தன் சார்! உங்களின் அன்புக்கும்,
ஆதரவான வார்த்தைகளுக்கும்.
ரொம்பவும் நன்றி! அருண்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jul 19, 2011 11:49 pm

அழகான கவிதைகள் வாழ்த்துக்கள் சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 20, 2011 1:08 am

நன்றி! இளமாறன் சார்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 20, 2011 11:00 am

அருமையான கவிதைகள். வாழ்த்துகள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. - Page 2 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 20, 2011 11:35 am

நன்றி! மஞ்சுபாஷினி.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக