புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
Page 12 of 15 •
Page 12 of 15 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .
பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.
தேவையானவை:
வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர்
சர்க்கரை 200 கிராம்
செய்முறை:
அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.
இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .
பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.
தேவையானவை:
வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர்
சர்க்கரை 200 கிராம்
செய்முறை:
அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முந்திரி கொத்து
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த முந்திரி கொத்து மிகவும் பிரபலம் !
நீங்களும் செய்து மகிழுங்கள் இந்த தீபாவளிக்கு!
தேவையானவை :
பூரணம் செய்ய :
பாசி பயறு அல்லது பாசிப்பருப்பு 100 கிராம்.
முந்திரி பருப்பு 100 கிராம்.
வெல்லம் 100 கிராம்
ஏலக்காய் 10
தேங்காய் துருவல் 1 கப்
வெள்ளை எள்ளு 50 கிராம்
மேல் மாவு செய்ய :
பச்சை அரிசி மாவு 1 /4 கப் (களைந்து உலர்த்தின அரிசி இல் செய்த மாவு என்றால் நல்லது )
மைதா 3 /4 cup
மஞ்சள் கலர் 1 ,சிட்டிகை
சோடா உப்பு சிறிது
எண்ணெய் பொரிக்க
செய்முறை:
பச்சை அரிசி மற்றும் மைதா மாவை சலித்து மஞ்சள் கலர், சோடா உப்பு சேர்த்து கெட்டியாக , அதாவது இட்லி மாவு பதத்திற்கு
தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.
பூரணத்திற்கு பாசி பயறை நன்றாக நெய் அல்லது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும், ஆறிய பின் ரவை போல் பொடித்து
கொள்ளவும்.
பிறகு எள்ளு மற்றும் தேங்காய் துருவலை தனி தனியாக வறுக்கவும்.நல்ல பிரவுன் கலர் வரும் வரை தேங்காவை வறுக்கவும்.
'பட பட' வென பொறியும் வரை எள்ளை வறுக்கவும்.
முந்திரி யை ஒரு சுட்டறு மிக்சி இல் பொடிக்கவும். ஏலம் பொடிக்கவும்.
ஒரு வாணலி இல் பொடித்த வெல்லம் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
வெல்லம் கரைந்ததும் அதை வடி கட்டி கொள்ளவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
இளம் பாகு அதாவது ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக்கொண்டு பாகில் கொஞ்சம் எடுத்து அதில் விடவும். பிறகு கையால் உருட்டி பார்க்கவும் , உருட்ட வந்தால் அது இளம் பாகு. அப்படி பாகு காய்ந்ததும்,
அடுப்பை சின்ன தாக்கி, பொடித்த அனைத்தையும் கொட்டி கிளறவும்.
கொஞ்சம் ஆறினதும் கெட்டியாக பிசைந்து கொள்ளவும் .
மாவு கெட்டியாக, சிறய சிறிய உருண்டைகளாக பிடிக்கும் பதம் இருக்கவேண்டும்.
தேவைப்பட்டால் கொஞ்சம் மாவை சேர்த்து கொள்ளலாம்.
பிசைந்த மாவை சிறு சிறு உருளைகளாக உருட்டவும்.
மூன்று மூன்று உருண்டைகளாக சேர்த்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு , உருண்டைகளை கரைத்து வைத்துள்ள மைதா ,அரிசி மாவு கலந்த மாவில் முக்கி
கொதிக்கும் எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்.
நல்ல பவுன் கலரில் எடுக்கவும்.
சுவையான முந்திரி கொத்து தயார்
இதை நிறைய நாட்கள் வைத்து சாப்பிடலாம்.சீக்கிரம் கெடாது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த முந்திரி கொத்து மிகவும் பிரபலம் !
நீங்களும் செய்து மகிழுங்கள் இந்த தீபாவளிக்கு!
தேவையானவை :
பூரணம் செய்ய :
பாசி பயறு அல்லது பாசிப்பருப்பு 100 கிராம்.
முந்திரி பருப்பு 100 கிராம்.
வெல்லம் 100 கிராம்
ஏலக்காய் 10
தேங்காய் துருவல் 1 கப்
வெள்ளை எள்ளு 50 கிராம்
மேல் மாவு செய்ய :
பச்சை அரிசி மாவு 1 /4 கப் (களைந்து உலர்த்தின அரிசி இல் செய்த மாவு என்றால் நல்லது )
மைதா 3 /4 cup
மஞ்சள் கலர் 1 ,சிட்டிகை
சோடா உப்பு சிறிது
எண்ணெய் பொரிக்க
செய்முறை:
பச்சை அரிசி மற்றும் மைதா மாவை சலித்து மஞ்சள் கலர், சோடா உப்பு சேர்த்து கெட்டியாக , அதாவது இட்லி மாவு பதத்திற்கு
தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.
பூரணத்திற்கு பாசி பயறை நன்றாக நெய் அல்லது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும், ஆறிய பின் ரவை போல் பொடித்து
கொள்ளவும்.
பிறகு எள்ளு மற்றும் தேங்காய் துருவலை தனி தனியாக வறுக்கவும்.நல்ல பிரவுன் கலர் வரும் வரை தேங்காவை வறுக்கவும்.
'பட பட' வென பொறியும் வரை எள்ளை வறுக்கவும்.
முந்திரி யை ஒரு சுட்டறு மிக்சி இல் பொடிக்கவும். ஏலம் பொடிக்கவும்.
ஒரு வாணலி இல் பொடித்த வெல்லம் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
வெல்லம் கரைந்ததும் அதை வடி கட்டி கொள்ளவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
இளம் பாகு அதாவது ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக்கொண்டு பாகில் கொஞ்சம் எடுத்து அதில் விடவும். பிறகு கையால் உருட்டி பார்க்கவும் , உருட்ட வந்தால் அது இளம் பாகு. அப்படி பாகு காய்ந்ததும்,
அடுப்பை சின்ன தாக்கி, பொடித்த அனைத்தையும் கொட்டி கிளறவும்.
கொஞ்சம் ஆறினதும் கெட்டியாக பிசைந்து கொள்ளவும் .
மாவு கெட்டியாக, சிறய சிறிய உருண்டைகளாக பிடிக்கும் பதம் இருக்கவேண்டும்.
தேவைப்பட்டால் கொஞ்சம் மாவை சேர்த்து கொள்ளலாம்.
பிசைந்த மாவை சிறு சிறு உருளைகளாக உருட்டவும்.
மூன்று மூன்று உருண்டைகளாக சேர்த்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு , உருண்டைகளை கரைத்து வைத்துள்ள மைதா ,அரிசி மாவு கலந்த மாவில் முக்கி
கொதிக்கும் எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்.
நல்ல பவுன் கலரில் எடுக்கவும்.
சுவையான முந்திரி கொத்து தயார்
இதை நிறைய நாட்கள் வைத்து சாப்பிடலாம்.சீக்கிரம் கெடாது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மைசூர் பாகு
தேவையானவை :
ஒரு கப் கடலை மாவு
இரண்டு கப் நெய்
இரண்டு கப் சர்க்கரை
வேண்டுமானால் அரை ஸ்பூன் ஏலப்பொடி
செய்முறை :
ஒரு ஆழமான உருளி இல் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு , சர்க்கரையை போடவும்.
அது கொதித்து ஒரு இழை பாகாக வரும்போது ( கொதித்துக்கொண்டு இருக்கும் பாகை ஆள் காட்டி விரலால் தொட்டுக்கொண்டு அதை கட்டை விரலால் தொட்டால் நடுவில் ஒரு நூல் போல வரும் அது வே கம்பி பதம் புன்னகை ) அளந்து வைத்திருக்கும் கடலை மாவை ஒவ்வொரு டேபிள் ஸ்பூன் ஆக பாகில் தூவி கிளறனும்.
ஒரு ஸ்பூன் நெய் விடனும்.
இப்படி மொத்த மாவும் நெய்யும் முடியும் வரை போட்டு போட்டு கிளறனும்.
மொத்தமாக கொட்டக் கூடாது கூடாது கூடாது கூடாது
மாவு கட்டி இல்லாமல் இருப்பது முக்கியம்.
ஒரு கட்டத்தில் உருளி இல் இருக்கும் மைசூர் பாகு இல் நெய் பிரிந்து வர ஆரம்பிக்கும்.
மேலும் நிறைய ஓட்டைகள் இருப்பது போல தோன்ற ஆரம்பிக்கும்.
இப்போது அடுப்பை சின்னதாக்கி விட்டு ஒரு தட்டில் நெய் கொஞ்சம் தடவவும்.
மைசூர் பாகை அதில் கொட்டவும்.
ஒரு பத்து நிமிடம் ஆறினதும் துண்டங்கள் போடலாம்.
குறிப்பு: மைசூர் பாகு மெத் என்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போல வேண்டுமானால், சர்க்கரை யை ஒன்றரை கப் எடுத்துக்கொள்ளுங்கள் . மற்றும் கிளறும்போது ஒரு சிட்டிகை சோடா உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.சரியா?
தேவையானவை :
ஒரு கப் கடலை மாவு
இரண்டு கப் நெய்
இரண்டு கப் சர்க்கரை
வேண்டுமானால் அரை ஸ்பூன் ஏலப்பொடி
செய்முறை :
ஒரு ஆழமான உருளி இல் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு , சர்க்கரையை போடவும்.
அது கொதித்து ஒரு இழை பாகாக வரும்போது ( கொதித்துக்கொண்டு இருக்கும் பாகை ஆள் காட்டி விரலால் தொட்டுக்கொண்டு அதை கட்டை விரலால் தொட்டால் நடுவில் ஒரு நூல் போல வரும் அது வே கம்பி பதம் புன்னகை ) அளந்து வைத்திருக்கும் கடலை மாவை ஒவ்வொரு டேபிள் ஸ்பூன் ஆக பாகில் தூவி கிளறனும்.
ஒரு ஸ்பூன் நெய் விடனும்.
இப்படி மொத்த மாவும் நெய்யும் முடியும் வரை போட்டு போட்டு கிளறனும்.
மொத்தமாக கொட்டக் கூடாது கூடாது கூடாது கூடாது
மாவு கட்டி இல்லாமல் இருப்பது முக்கியம்.
ஒரு கட்டத்தில் உருளி இல் இருக்கும் மைசூர் பாகு இல் நெய் பிரிந்து வர ஆரம்பிக்கும்.
மேலும் நிறைய ஓட்டைகள் இருப்பது போல தோன்ற ஆரம்பிக்கும்.
இப்போது அடுப்பை சின்னதாக்கி விட்டு ஒரு தட்டில் நெய் கொஞ்சம் தடவவும்.
மைசூர் பாகை அதில் கொட்டவும்.
ஒரு பத்து நிமிடம் ஆறினதும் துண்டங்கள் போடலாம்.
குறிப்பு: மைசூர் பாகு மெத் என்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போல வேண்டுமானால், சர்க்கரை யை ஒன்றரை கப் எடுத்துக்கொள்ளுங்கள் . மற்றும் கிளறும்போது ஒரு சிட்டிகை சோடா உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.சரியா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தால் ஹல்வா !
இது பயத்தம் பருப்பில் செய்வது. ரொம்ப சுவையான வட இந்திய இனிப்பு. ஆனால் செய்ய கொஞ்சம் பொறுமை தேவை புன்னகை
தேவையானவை :
பயத்தம் பருப்பு 1 கப்
நெய் 1 கப்
சர்க்கரை 1 கப்
பால் 1/4 கப்
சர்க்கரை போடாத கோவா 3/4 கப்
குங்குமப்பூ - 10 12 இதழ்கள்
முந்திரி, பாதாம் சீவியது 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
பயத்தம் பருப்பை நன்கு களைந்து, 1 - 1 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
கொஞ்சம் 'கர கர'பாக அரைக்கவும்.
வாணலி இல் நெய்விட்டு உருகியதும் அரைத்து வைத்ததை அதில் விட்டு கிளறவும்.
அடுப்பை தணித்து வைத்து நன்கு கிளறனும்.
பக்கத்து அடுப்பில் மட்டும் ஒரு உருளி இல் சர்க்கரை மற்றும் தண்ணீர் விட்டு ஒற்றை கம்பி பாகு வைக்கவும்.
பாலை சுடவைத்து அதில் குங்குமபூவை கரைத்து வைக்கவும்.
தால் - நல்லா பொரிந்து கொஞ்சம் 'பிரவுன்' கலரில் வரும்போது அதில் சர்க்கரை பாகை விட்டு கிளறவும்.
குங்குமப்பூவை கரைத்து வைத்துள்ள பாலையும் விடவும்.
நன்கு கிளறவும்.
எல்லாமாக சேர்ந்து 'ஹல்வா' பதத்துக்கு வரும் போது கோவாவை உதிர்த்துப்போட்டு கிளறி இறக்கவும்.
மேலே சீவிவைத்துள்ள முந்திரி பாதாமை தூவி சூடாக பரிமாறவும்.
ரொம்ப அருமையாக இருக்கும்
இது பயத்தம் பருப்பில் செய்வது. ரொம்ப சுவையான வட இந்திய இனிப்பு. ஆனால் செய்ய கொஞ்சம் பொறுமை தேவை புன்னகை
தேவையானவை :
பயத்தம் பருப்பு 1 கப்
நெய் 1 கப்
சர்க்கரை 1 கப்
பால் 1/4 கப்
சர்க்கரை போடாத கோவா 3/4 கப்
குங்குமப்பூ - 10 12 இதழ்கள்
முந்திரி, பாதாம் சீவியது 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
பயத்தம் பருப்பை நன்கு களைந்து, 1 - 1 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
கொஞ்சம் 'கர கர'பாக அரைக்கவும்.
வாணலி இல் நெய்விட்டு உருகியதும் அரைத்து வைத்ததை அதில் விட்டு கிளறவும்.
அடுப்பை தணித்து வைத்து நன்கு கிளறனும்.
பக்கத்து அடுப்பில் மட்டும் ஒரு உருளி இல் சர்க்கரை மற்றும் தண்ணீர் விட்டு ஒற்றை கம்பி பாகு வைக்கவும்.
பாலை சுடவைத்து அதில் குங்குமபூவை கரைத்து வைக்கவும்.
தால் - நல்லா பொரிந்து கொஞ்சம் 'பிரவுன்' கலரில் வரும்போது அதில் சர்க்கரை பாகை விட்டு கிளறவும்.
குங்குமப்பூவை கரைத்து வைத்துள்ள பாலையும் விடவும்.
நன்கு கிளறவும்.
எல்லாமாக சேர்ந்து 'ஹல்வா' பதத்துக்கு வரும் போது கோவாவை உதிர்த்துப்போட்டு கிளறி இறக்கவும்.
மேலே சீவிவைத்துள்ள முந்திரி பாதாமை தூவி சூடாக பரிமாறவும்.
ரொம்ப அருமையாக இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வால்நட் ஹல்வா
தேவையானவை :
2 கப் மைதா அல்லது all purpose flour
3 கப் சர்க்கரை
1 கப் வெண்ணை
1 கப் வால்நட் ( பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும் )
3 கப் வெந்நீர்
செய்முறை :
ஒரு அடிகனமான வாணலி அல்லது உருளி இல் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை போடவும்.
அதிலேயே சர்க்கரையும் போடவும்.
மிதமான தீ இல் அடுப்பை வைக்கவும்.
வெண்ணை உருகி சர்க்கரையும் உருகட்டும்.
அது உருகி கொஞ்சம் பிரவுன் கலரில் குழம்பாக வரும் இதை 'காரமெல்' என்போம்.
அப்படி வந்ததும், அதை கிளரிக்கொண்டே, வெந்நீரை அதில் விடவும்.
நன்கு கலக்கவும்.
அதில் மொத்த 'caramel ' ம் கரைந்து பிரவுன் கலர் தண்ணீர் கிடைக்கும்.
அதை அப்படியே வைத்துக்கொள்ளவும்.
மற்றுமொரு வாணலி இல் பாக்கி வெண்ணை போட்டு அது கொஞ்சம் உருகியதுமே , மைதாவை போட்டு நன்கு பொரிக்கவும்.
கருகாமல் பார்த்துக்கொள்ளனும்.புன்னகை
நல்ல 'பவுன் கலரில் பொரிந்ததும், பொடித்து வைத்துள்ள வாழ்நாட்களை போட்டு கிளறவும்.
அவை நன்கு கலந்ததும், இப்போ எடுத்து வைத்துள்ள 'caramel water ' ஐ அதில் விட்டு, கிளறவும்.
கட்டி தட்டாமல் நன்கு கிளறவும்.
மொத்த தண்ணீரும் உ றிந்து கொண்டு 'ஹல்வா' பதத்துக்கு வரும்வரை கிளறவும்.
நெய்தடவி வைத்துள்ள தட்டில் கொட்டவும்.
தேவையானால் , கொஞ்சம் ஆறினதும், கடைகள் போல வில்லைகள் போடவும்.
அருமையான ' வால்நட் ஹல்வா ' தயார்.
தேவையானவை :
2 கப் மைதா அல்லது all purpose flour
3 கப் சர்க்கரை
1 கப் வெண்ணை
1 கப் வால்நட் ( பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும் )
3 கப் வெந்நீர்
செய்முறை :
ஒரு அடிகனமான வாணலி அல்லது உருளி இல் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை போடவும்.
அதிலேயே சர்க்கரையும் போடவும்.
மிதமான தீ இல் அடுப்பை வைக்கவும்.
வெண்ணை உருகி சர்க்கரையும் உருகட்டும்.
அது உருகி கொஞ்சம் பிரவுன் கலரில் குழம்பாக வரும் இதை 'காரமெல்' என்போம்.
அப்படி வந்ததும், அதை கிளரிக்கொண்டே, வெந்நீரை அதில் விடவும்.
நன்கு கலக்கவும்.
அதில் மொத்த 'caramel ' ம் கரைந்து பிரவுன் கலர் தண்ணீர் கிடைக்கும்.
அதை அப்படியே வைத்துக்கொள்ளவும்.
மற்றுமொரு வாணலி இல் பாக்கி வெண்ணை போட்டு அது கொஞ்சம் உருகியதுமே , மைதாவை போட்டு நன்கு பொரிக்கவும்.
கருகாமல் பார்த்துக்கொள்ளனும்.புன்னகை
நல்ல 'பவுன் கலரில் பொரிந்ததும், பொடித்து வைத்துள்ள வாழ்நாட்களை போட்டு கிளறவும்.
அவை நன்கு கலந்ததும், இப்போ எடுத்து வைத்துள்ள 'caramel water ' ஐ அதில் விட்டு, கிளறவும்.
கட்டி தட்டாமல் நன்கு கிளறவும்.
மொத்த தண்ணீரும் உ றிந்து கொண்டு 'ஹல்வா' பதத்துக்கு வரும்வரை கிளறவும்.
நெய்தடவி வைத்துள்ள தட்டில் கொட்டவும்.
தேவையானால் , கொஞ்சம் ஆறினதும், கடைகள் போல வில்லைகள் போடவும்.
அருமையான ' வால்நட் ஹல்வா ' தயார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
Condensed milk 400 gms tin 1
கடலை மாவு 3 கப்
பிஸ்தா, பாதாம் , முந்திரி பொடித்து வைத்தது 3 டேபிள் ஸ்பூன்
நெய் 1 கப்
பால் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
வாணலி இல் நெய்விட்டு கடலை மாவை கருகாமல் வறுக்கவும்.
இதற்கு ஒரு 10 -12 நிமிடங்கள் ஆகும்.
பொறுமையாக வறுக்கணும்.
அப்புறம் ஈசிதான். புன்னகை
அடுப்பை சின்னதாக்கி விட்டு, condensed மில்க் ஐ விட்டு நன்கு கிளறவும்.
கைவிடாமல் கிளறவும், அது மொத்தமாய், சுருண்டு வரும் வரை கிளறவும்.
நெய்தடவிய தட்டில் கொட்டவும்.
சமப்படுத்தவும்.
இப்போ உடைத்த பருப்புகளை அதன் மீது தூவி அலங்கரிக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடலாம்.
அவ்வளவு தான் 'மோஹன் தால்' ரெடி.
வாயில் கரையும் அற்புதமான ஸ்வீட் ரெடி.
எங்க கிருஷ்ணா அப்பாக்கு ரொம்ப பிடிக்கும் இது.
Condensed milk 400 gms tin 1
கடலை மாவு 3 கப்
பிஸ்தா, பாதாம் , முந்திரி பொடித்து வைத்தது 3 டேபிள் ஸ்பூன்
நெய் 1 கப்
பால் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
வாணலி இல் நெய்விட்டு கடலை மாவை கருகாமல் வறுக்கவும்.
இதற்கு ஒரு 10 -12 நிமிடங்கள் ஆகும்.
பொறுமையாக வறுக்கணும்.
அப்புறம் ஈசிதான். புன்னகை
அடுப்பை சின்னதாக்கி விட்டு, condensed மில்க் ஐ விட்டு நன்கு கிளறவும்.
கைவிடாமல் கிளறவும், அது மொத்தமாய், சுருண்டு வரும் வரை கிளறவும்.
நெய்தடவிய தட்டில் கொட்டவும்.
சமப்படுத்தவும்.
இப்போ உடைத்த பருப்புகளை அதன் மீது தூவி அலங்கரிக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடலாம்.
அவ்வளவு தான் 'மோஹன் தால்' ரெடி.
வாயில் கரையும் அற்புதமான ஸ்வீட் ரெடி.
எங்க கிருஷ்ணா அப்பாக்கு ரொம்ப பிடிக்கும் இது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாதுஷா - எல்லோருக்கும் பிடித்த 'இனிப்பு' குறைவான இனிப்பு இது செய்வது ரொம்ப கஷ்டம் என்று நினைக்க வேணாம் ரொம்ப சுலபம்.
இதோ அதன் ரெசிபி :
தேவையானவை :
1 கப் மைதா
பேக்கிங் சோடா 1/4 டீ ஸ்பூன்
சமையல் சோடா ஒரு சிட்டிகை
சர்க்கரை 1/2 ஸ்பூன் (பொடிக்கவும் )
தயிர் 1 டேபிள் ஸ்பூன்
நெய் - உருக்கியது - 1/8 கப்
வாசனை இல்லாத எண்ணெய் - 1/2 டீ ஸ்பூன்
சர்க்கரை பாகு வைக்க :
1 1/2 கப் சர்க்கரை
1 1/2 கப் தண்ணீர்
ஏலப்பொடி கொஞ்சம் அல்லது ரோஸ் எசன்ஸ்
பொறிக்க : எண்ணெய்
செய்முறை :
முதலில் மைதாவை சோடா உப்பு மற்றும் பேகிங் சோடா போட்டு சலிக்கவும்.
ஒரு பேசினில் சலித்ததை போடவும்.
வேறு ஒரு சின்ன கிண்ணி இல் தயிர் மற்றும் சர்க்கரையை போட்டு கலக்கவும்.
மாவில் நெய் மற்றும் எண்ணையை விட்டு நன்கு கலக்கவும்.
நன்கு கலந்ததும் அது பார்க்க 'பிரட் துகள்கள்' போல இருக்கும்.
அப்படி இருந்தால் பதம் சரி என்று அர்த்தம்.
இப்போ கிண்ணி இல் இருக்கும் தயிர் மற்றும் சர்க்கரையை நன்கு கரைத்து, மாவில் விடவும்.
'மெத்' என்று பிசையவும்.
தேவையானால்......தேவையானால் துளி ... துளியே துளி தண்ணீர் விட்டுக்கலாம்.
அவ்வளவு தான் இதை அப்படியே சுமார் 1 மணிநேரம் , மூடி வைத்து விடவும்.
1 மணி நேரத்துக்கு பிறகு ஒரு உருளி அல்லது வாணலி இல் தண்ணீர் விட்டு சர்க்கரையை போடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
'ஒரு கம்பி 'பாகு வரும் வரை கொதிக்க விடவும்.
ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
மற்றும் ஒரு அடுப்பில் எண்ணெய் வைக்கவும்.
அடுப்பை 'சிம்' இல் வைக்கவும்.
பிறகு மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
உள்ளங்கை இல் வைத்து கட்டை விரலால் உருண்டை இன் நடுவில் அழுத்தி பள்ளம் போல செய்யவும்.
இது போல செய்வதால் , பாதுஷாக்கள் நன்கு பொறியும். எனவே இதை மறக்க வேண்டாம்.
இதே போல மற்ற எல்லா மாவையும் செய்யவும்.
நான் கொடுத்துள்ள அளவிற்கு 15 'மினி பாதுஷாக்கள்' வரும்.
இப்போ வாணலி இல் எண்ணெய்விட்டு சில நிமிடங்களிலேயே , அது ரொம்ப சூடாவதர்க்குள் பாதுஷாக்களை போடணும்.
அதாவது, எண்ணெய் இல் ஒரு துளி மாவை போட்டால் அது 1 நிமிடம் கழித்துத்தான் மேலே வரணும்.
உடனே மேலே வந்தால் எண்ணெய் இன் சூடு அதிகம் என்று அர்த்தம்.
அவசரப்படாமல் காத்திருக்கவும்.
2 -3 நிமிடங்கள் கழித்து திருப்பி விடவும்.
நன்கு பவுன் கலர் வந்ததும் எடுத்து பாகில் போடவும்.
அவ்வளவு தான் சூப்பர் பாதுஷாக்கள் ரெடி.
கொஞ்சம் ஆறினதும் சாப்பிடலாம்.
விண்டு பார்த்தால் உள்ளே 'லேயர் லேயராக' இருக்கணும்.
அது தான் பதம்.
மேலே சர்க்கரை பூத்துக்கொண்டு இருக்கும்.
ஆனால் அதுக்கு ஓர் 12 மணி நேரம் காத்திருக்கணும் ! ரிலாக்ஸ்
ஆனால் உடனே சாப்பிட்டு பார்க்கலாம் புன்னகை
குறிப்பு: மேலே சர்க்கரை பூத்துக்கொண்டு வரவேண்டாம் என்றால், சர்க்கரை பாகில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு விடணும்.
இதற்கான படங்களை கிழே கொடுத்துள்ளேன் ; பார்க்கவும்.
படிக்கத்தான் இவ்வளவு பெரிசா இருக்கே தவிர 10 நிமிஷத்தில் செய்து விடலாம்
இதோ அதன் ரெசிபி :
தேவையானவை :
1 கப் மைதா
பேக்கிங் சோடா 1/4 டீ ஸ்பூன்
சமையல் சோடா ஒரு சிட்டிகை
சர்க்கரை 1/2 ஸ்பூன் (பொடிக்கவும் )
தயிர் 1 டேபிள் ஸ்பூன்
நெய் - உருக்கியது - 1/8 கப்
வாசனை இல்லாத எண்ணெய் - 1/2 டீ ஸ்பூன்
சர்க்கரை பாகு வைக்க :
1 1/2 கப் சர்க்கரை
1 1/2 கப் தண்ணீர்
ஏலப்பொடி கொஞ்சம் அல்லது ரோஸ் எசன்ஸ்
பொறிக்க : எண்ணெய்
செய்முறை :
முதலில் மைதாவை சோடா உப்பு மற்றும் பேகிங் சோடா போட்டு சலிக்கவும்.
ஒரு பேசினில் சலித்ததை போடவும்.
வேறு ஒரு சின்ன கிண்ணி இல் தயிர் மற்றும் சர்க்கரையை போட்டு கலக்கவும்.
மாவில் நெய் மற்றும் எண்ணையை விட்டு நன்கு கலக்கவும்.
நன்கு கலந்ததும் அது பார்க்க 'பிரட் துகள்கள்' போல இருக்கும்.
அப்படி இருந்தால் பதம் சரி என்று அர்த்தம்.
இப்போ கிண்ணி இல் இருக்கும் தயிர் மற்றும் சர்க்கரையை நன்கு கரைத்து, மாவில் விடவும்.
'மெத்' என்று பிசையவும்.
தேவையானால்......தேவையானால் துளி ... துளியே துளி தண்ணீர் விட்டுக்கலாம்.
அவ்வளவு தான் இதை அப்படியே சுமார் 1 மணிநேரம் , மூடி வைத்து விடவும்.
1 மணி நேரத்துக்கு பிறகு ஒரு உருளி அல்லது வாணலி இல் தண்ணீர் விட்டு சர்க்கரையை போடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
'ஒரு கம்பி 'பாகு வரும் வரை கொதிக்க விடவும்.
ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
மற்றும் ஒரு அடுப்பில் எண்ணெய் வைக்கவும்.
அடுப்பை 'சிம்' இல் வைக்கவும்.
பிறகு மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
உள்ளங்கை இல் வைத்து கட்டை விரலால் உருண்டை இன் நடுவில் அழுத்தி பள்ளம் போல செய்யவும்.
இது போல செய்வதால் , பாதுஷாக்கள் நன்கு பொறியும். எனவே இதை மறக்க வேண்டாம்.
இதே போல மற்ற எல்லா மாவையும் செய்யவும்.
நான் கொடுத்துள்ள அளவிற்கு 15 'மினி பாதுஷாக்கள்' வரும்.
இப்போ வாணலி இல் எண்ணெய்விட்டு சில நிமிடங்களிலேயே , அது ரொம்ப சூடாவதர்க்குள் பாதுஷாக்களை போடணும்.
அதாவது, எண்ணெய் இல் ஒரு துளி மாவை போட்டால் அது 1 நிமிடம் கழித்துத்தான் மேலே வரணும்.
உடனே மேலே வந்தால் எண்ணெய் இன் சூடு அதிகம் என்று அர்த்தம்.
அவசரப்படாமல் காத்திருக்கவும்.
2 -3 நிமிடங்கள் கழித்து திருப்பி விடவும்.
நன்கு பவுன் கலர் வந்ததும் எடுத்து பாகில் போடவும்.
அவ்வளவு தான் சூப்பர் பாதுஷாக்கள் ரெடி.
கொஞ்சம் ஆறினதும் சாப்பிடலாம்.
விண்டு பார்த்தால் உள்ளே 'லேயர் லேயராக' இருக்கணும்.
அது தான் பதம்.
மேலே சர்க்கரை பூத்துக்கொண்டு இருக்கும்.
ஆனால் அதுக்கு ஓர் 12 மணி நேரம் காத்திருக்கணும் ! ரிலாக்ஸ்
ஆனால் உடனே சாப்பிட்டு பார்க்கலாம் புன்னகை
குறிப்பு: மேலே சர்க்கரை பூத்துக்கொண்டு வரவேண்டாம் என்றால், சர்க்கரை பாகில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு விடணும்.
இதற்கான படங்களை கிழே கொடுத்துள்ளேன் ; பார்க்கவும்.
படிக்கத்தான் இவ்வளவு பெரிசா இருக்கே தவிர 10 நிமிஷத்தில் செய்து விடலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஷோகன் ஹல்வா
இந்த ஹல்வா சாக்கலேட் போல இருக்கும்................மிருதுவாக இருக்காது புன்னகை நல்லா 'கடக் முடக்' என்று இருக்கும்........பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
தேவையானவை:
கடலை மாவு 1 கப்
சர்க்கரை 2 கப்
நெய் 2 கப்
ஏலப்பொடி கொஞ்சம்
தேவையானால் உடைத்த பாதாம் முந்திரி பருப்புகள் 1 டீ ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு தட்டில் நெய் தடவி வைத்துகொள்ளவும்.
ஒரு வாணலி இல் 2 கப் சர்க்கரை மற்றும் 1 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
ஏலப் பொடி போடவும்.
1 கம்பி பதம் வரும் வரை கொதிக்கட்டும்.
அதற்குள், மற்றும் ஒரு வாணலி இல் அல்லது ஆழமான உருளி இல் 1 கப் நெய்விட்டு கடலை மாவை வறுக்கவும்.
நெய்விட்டதும் அது 'liquid ' ஆக ஆகிவிடும்...........அப்படியே அடுப்பை 'சிம்' இல் வைத்து கை விடாமல் கலக்கிக்கொண்டே இருக்கவும்.
கொஞ்சம் பிரவுன் ஆகும் வரை இப்படி வறுக்கணும்.
பக்கத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் சர்க்கரை பாகை எடுத்து இந்த கடலை மாவில் விடவும்.
பொங்கி வரும்...பத்திரம்.............நன்கு கிளறவும்.
பொடித்து வைத்துள்ள பருப்புகளை போடவும்.
மீதி உள்ள நெய்யையும் கொட்டி கிளறவும்.
நுரைத்து , நன்கு சுருண்டு வரும்போது ஏற்கனவே நெய் தடவி வைத்துள்ள தட்டில் கொட்டவும்.
கொஞ்சம் ஆறினதும் துண்டம் போடலாம்.
'சூப்பரா ஆக' இருக்கும்.............
இந்த ஹல்வா சாக்கலேட் போல இருக்கும்................மிருதுவாக இருக்காது புன்னகை நல்லா 'கடக் முடக்' என்று இருக்கும்........பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
தேவையானவை:
கடலை மாவு 1 கப்
சர்க்கரை 2 கப்
நெய் 2 கப்
ஏலப்பொடி கொஞ்சம்
தேவையானால் உடைத்த பாதாம் முந்திரி பருப்புகள் 1 டீ ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு தட்டில் நெய் தடவி வைத்துகொள்ளவும்.
ஒரு வாணலி இல் 2 கப் சர்க்கரை மற்றும் 1 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
ஏலப் பொடி போடவும்.
1 கம்பி பதம் வரும் வரை கொதிக்கட்டும்.
அதற்குள், மற்றும் ஒரு வாணலி இல் அல்லது ஆழமான உருளி இல் 1 கப் நெய்விட்டு கடலை மாவை வறுக்கவும்.
நெய்விட்டதும் அது 'liquid ' ஆக ஆகிவிடும்...........அப்படியே அடுப்பை 'சிம்' இல் வைத்து கை விடாமல் கலக்கிக்கொண்டே இருக்கவும்.
கொஞ்சம் பிரவுன் ஆகும் வரை இப்படி வறுக்கணும்.
பக்கத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் சர்க்கரை பாகை எடுத்து இந்த கடலை மாவில் விடவும்.
பொங்கி வரும்...பத்திரம்.............நன்கு கிளறவும்.
பொடித்து வைத்துள்ள பருப்புகளை போடவும்.
மீதி உள்ள நெய்யையும் கொட்டி கிளறவும்.
நுரைத்து , நன்கு சுருண்டு வரும்போது ஏற்கனவே நெய் தடவி வைத்துள்ள தட்டில் கொட்டவும்.
கொஞ்சம் ஆறினதும் துண்டம் போடலாம்.
'சூப்பரா ஆக' இருக்கும்.............
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அம்மா நான் எடை குறைக்க டயட் இருக்கலாம்னு நினைக்கும் போது இப்படி சுவையான பதார்த்தங்களை போட்டால் என்ன செய்வேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135130mbalasaravanan wrote:அம்மா நான் எடை குறைக்க டயட் இருக்கலாம்னு நினைக்கும் போது இப்படி சுவையான பதார்த்தங்களை போட்டால் என்ன செய்வேன்
என்ன செய்வது?.......................எடையை குறைப்பது என்பது ரொம்ப கஷ்டமான வேலை
- Sponsored content
Page 12 of 15 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 15
|
|