புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
32 Posts - 42%
heezulia
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
32 Posts - 42%
prajai
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%
jothi64
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
398 Posts - 49%
heezulia
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
26 Posts - 3%
prajai
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:34 pm

அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

அகல உழுகிறதை விட ஆழ உழு.

அகல் வட்டம் பகல் மழை.

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

அடக்கமே பெண்ணுக்கு அழகு.

அடாது செய்தவன் படாது படுவான்.

அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

அந்தி மழை அழுதாலும் விடாது.

அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

அறச் செட்டு முழு நட்டம்.

அற்ப அறிவு அல்லற் கிடம்.

அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

அறமுறுக்கினால் அற்றும் போகும்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:34 pm

அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.

அறிய அறியக் கெடுவார் உண்டா?

அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.

அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?

அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.

அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.

ஆரால் கேடு, வாயால் கேடு.

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.

ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.

ஆழமறியாமல் காலை இடாதே.

ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.

ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

ஆறின கஞ்சி பழங் கஞ்சி.

ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?

ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.

ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

ஆனை படுத்தால் ஆள் மட்டம்.

ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.

ஆனைக்கும் அடிசறுக்கும்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:34 pm

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.

இஞ்சி இலாபம் மஞ்சளில்.

இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.

இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.

இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.

இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

இரக்கப் போனாலும் சிறக்கப் போ.

இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை.

இராச திசையில் கெட்டவணுமில்லை.

இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.

இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.

இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.

இருவர் நட்பு ஒருவர் பொறை.

இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.

இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?

இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.

இளங்கன்று பயமறியாது.

இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.

இறங்கு பொழுதில் மருந்து குடி.

இறுகினால் களி , இளகினால் கூழ்.

இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.

இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.

இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே.

இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.

ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.

ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

ஈர நாவிற்கு எலும்பில்லை.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:35 pm

உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.

உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.

உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.

உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?

உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.

உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.

உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.

உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.

உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.

உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?

உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.

உலோபிக்கு இரட்டை செலவு.

உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.

உளவு இல்லாமல் களவு இல்லை.

உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல.

உள்ளது போகாது இல்லது வாராது.

உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.

உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.

உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.

ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.

ஊண் அற்றபோது உடலற்றது.

ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.

ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.

ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.

ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.

ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய்?

எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு. (நெருப்பில்லாது புகையாது)

எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?

எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?

எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

எண் இல்லாதவர் கண் இல்லாதவர்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:36 pm

எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.

எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.

எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.

எண்ணை முந்துதோ திரி முந்துதோ?

எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?

எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.

எதார்த்தவாதி வெகுசன விரோதி.

எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.

எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.

எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.

எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

எருது நோய் காக்கைக்கு தெரியுமா?

எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.

எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது.

எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?

எலி அழுதால் பூனை விடுமா?

எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.

எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.

எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்.

எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?

எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.

எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.

எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?

எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.

எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்.

எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.

எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.

எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.

எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.

எறும்பு ஊர கல்லுந் தேயும்.

எறும்புந் தன் கையால் எண் சாண்.

ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:37 pm

ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.

ஏரி நிறைந்தால் கரை கசியும்.

ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.

ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.

ஏழை என்றால் எவர்க்கும் எளிது.

ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.

ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குச் கோபம்.

ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.

ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.

ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?

ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை

ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?

ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை

ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.

ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.

ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.

ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.

ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.

ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!

ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.

ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.

ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.

ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?

ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.

ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:37 pm

கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?

கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.

கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.

கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.

கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.

கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.

கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?

கடல் திடலாகும், திடல் கடலாகும்.

கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?

கடலுக்குக் கரை போடுவார் உண்டா?

கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.

கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.

கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.

கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.

கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.

கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.

கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.

கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.

கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.

கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.

கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.

கண் கண்டது கை செய்யும்.

கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?

கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.

கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.

கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.

கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.

கண்டதே காட்சி கொண்டதே கோலம்.

கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.

கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?

கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?

கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.

கதிரவன் சிலரை காயேன் என்குமோ?

கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:38 pm

கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.

கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.

கரணம் தப்பினால் மரணம்.

கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?

கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.

கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்.

கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?

கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.

கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.

கல்லாடம் (நூல்) படித்தவனோடு மல் ஆடாதே.

கல்லாதவரே கண்ணில்லாதவர்.

கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.

கல்வி அழகே அழகு.

கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.

கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.

கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.

கள்ள மனம் துள்ளும்.

கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!

கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.

கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!

கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.

களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.

கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.

கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.

கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.

கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?

கன்று செத்துக் கலப் பால் கறக்குமா?

கனிந்த பழம் தானே விழும்.

காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.

காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.

காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:38 pm

காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.

காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?

காணி ஆசை கோடி கேடு.

காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்.

காப்பு சொல்லும் கை மெலிவை.

காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.

காய்த்த மரம் கல் அடிபடும்.

காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.

கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை.

காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.

காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.

காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்.

காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.

காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.

காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.

காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.

காற்றில்லாமல் தூசி பறக்குமா?

காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.

காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

கிட்டாதாயின் வெட்டென மற.

கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.

கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?

கீர்த்தியால் பசி தீருமா?

கீறி ஆற்றினால் புண் ஆறும்.

குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?

குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.

குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.

குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.

குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?

குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.

குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.

குணத்தை மாற்றக் குருவில்லை.

குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.

குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:39 pm

குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.

குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.

குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.

குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.

குப்பை உயரும் கோபுரம் தாழும்.

குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?

கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.

குரங்கின் கைப் பூமாலை.

குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.

குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.

குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.

குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?

குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?

குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.

குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே.

குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்.

குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.

கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.

கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?

கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.

கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.

கெட்டும் பட்டணம் சேர்.

கெடுக்கினும் கல்வி கேடுபடாது.

கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.

கெடுவான் கேடு நினைப்பான்.

கெண்டையைப் போட்டு வராலை இழு.

கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.

கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.

கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக