புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_c10உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_m10உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_c10 
32 Posts - 55%
heezulia
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_c10உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_m10உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_c10உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_m10உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_c10உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_m10உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_c10உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_m10உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_c10 
32 Posts - 55%
heezulia
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_c10உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_m10உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_c10உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_m10உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_c10உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_m10உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உளவாளிகளின் மர்ம உலகம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 11, 2011 1:31 am

First topic message reminder :

நண்பர்களே ,வழக்கம் போல் இதுவும் இணயதில் படித்தது ,இங்கு உங்களுக்காக ...இதன் உரிமை ,உரிமையாளருக்கே ,எனக்கு அல்ல .
அத்தியாயம் 1
எயார் பிரான்ஸ் விமானம் கடத்தல்

ஜூன் மாதம் 27ம் திகதி 1976ம் ஆண்டு. பாரிஸ் விமான நிலையம். சர்வதேசப் புறப்பாடுகள் பகுதி.

எயார் பிரான்ஸின் செக்இன் கவுண்டர்களில் வரிசைவரிசையாக பயணிகள் நின்றிருந்தார்கள். இஸ்ரேலின் டெல்-அவிவ் நகருக்குச் செல்லும் விமானத்துக்கான பயணிகளை செக்இன் செய்துகொண்டிருந்தார்கள் எயார் பிரான்ஸின் விமான நிலைய ஊழியர்கள்.

வழமையாக எந்தவொரு விமானமும் எந்த நாட்டுக்குப் போகின்றது என்பதைப் பொறுத்து அந்த நாட்டவர்கள்தான் பயணிகளின் எண்ணிக்கையில் பெரிய சதவிகிதம் இருப்பார்கள்.

அது போலவே இந்த விமானத்தில் பயணிக்க வந்திருந்த பயணிகளில் மிகப்பெரிய சதவிகிதமானவர்கள் இஸ்ரேலியர்கள். அதற்கு அடுத்தபடியாக கிரேக்க நாட்டவர்களும், பிரென்சுக்காரர்களும் இருந்தார்கள். இவர்களைத் தவிர மிக சொற்ப எண்ணிக்கையில் வேறு நாட்டவர்கள்.

எயார் பிரான்ஸ் விமானப் பிரான்ஸில் இருந்து கிளம்புவதால் அதில் பிரென்ச்காரர்கள் இருப்பது சரி. ஆனால் கிரேக்க நாட்டவர்கள் பிரான்சிலிருந்து இஸ்ரேலுக்குச் செல்லவுள்ள இந்த விமானத்தில் ஏன் அதிகமாக தென்படுகிறார்கள்?


காரணம், எயார் பிரான்ஸின் அந்த குறிப்பிட்ட விமானம் பாரிஸிலிருந்து நேரே இஸ்ரேல் செல்லும் விமானமல்ல. பாரிஸிலிருந்து முதலில் கிரேக்க நகரான ஏதன்ஸ் சென்று, அங்கு ஒரு மணிநேரம் நின்று பயணிகளை இறக்கி ஏற்றிக் கொண்டுதான் டெல் அவிவ் செல்லும் ரூட் அது. அதனால்தான் அதில் கிரேக்க நாட்டவர்களும் அதிகளவில் பயணிக்க வந்திருந்தனர்.

இந்த விமான ரூட்டிலுள்ள விசித்திரமான அம்சம் என்ன தெரியுமா?

விமானம் புறப்படும் பாரிஸ் விமான நிலையமும் பாதுகாப்புக் கெடுபிடி அதிகமுள்ள விமான நிலையம். விமானம் போய்ச் சேரும் இஸ்ரேலின் டெல்அவிவ் விமான நிலையத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். உலகிலேயே மிக அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கும் விமான நிலையம் அது. இந்த இரண்டுக்கும் இடையே விமானம் இயங்கி ஏறப்போகும் ஏதன்ஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மகா மோசம்!

இப்படி ஏதென்ஸ் வழியாகச் செல்வதால் அன்றைய தினம் குறிப்பிட்ட அந்த விமானத்தைக் கடத்துவதற்கு கடத்தல்கார்கள் குறிவைத்திருந்தார்கள்.
ந்த நாட்களில் ஐரோப்பிய விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்த விமானநிலையங்களின் முக்கியமானது, ஏதென்ஸ் விமான நிலையம். (இன்றுகூட நிலைமை அதுதான்) பாதுகாப்புச் சோதனைகளுக்குள் சிக்காமல் எந்தவொரு பொருளையும் விமானம்வரை கடத்திச் செல்லக்கூடிய அளவில் இருந்தது அங்கு நிலைமை.

இந்த எயார் பிரான்ஸ் விமானத்தைக் கடத்தத் திட்டமிட்டவர்கள் பாரிஸிலிருந்து விமானம் கிளம்பியபோதே பயணிகளாக அதற்குள் ஏறிவிட்டிருந்தார்கள். ஆனால் ஆயுதங்கள் எதுவுமில்லை. பாரிஸ் விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டி ஆயுதங்களை ரிஸ்க் எடுத்து கொண்டுசெல்ல அவர்கள் விரும்பியிருக்கவில்லை.

பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் பாரிஸ் விமான நிலையத்திலிருந்து கிளம்பியது. எயார் பிரான்சின் அந்த விமானம் எயார்பஸ் A300 ரக விமானம். ரெஜிஸ்ட்ரேஷன் F-BVGG. ரூட் இலக்கம் 139.
அதன் முதலாவது லான்டிங்காக ஏதென்ஸ் விமான நிலையத்திலும் இறங்கியது. ஏதென்ஸ் வரை பயணம் செய்த பயணிகள் விமானத்திலிருந்து இறங்கிக் கொண்டனர். டெல்அவிவ் செல்லும் பயணிகள் விமானத்துக்கு உள்ளேயே இருந்தனர்.

ஏதென்ஸ் விமான நிலையத்தில் நின்றிருந்த விமானத்தில் புதிய பயணிகள் ஏற்றப்படுவதற்கு முன்னர், துப்பரவுப் பணியாளர்கள் மூன்றுபேர் விமானத்துக்குள் ஏறி துப்பரவு செய்தார்கள்.

அந்த மூன்று பேரில் ஒரு ஆள் கடத்தற்காரர்களின் ஆள்.

அவர் துப்பரவு செய்துவிட்டு இறங்குமுன்னர் தன்னிடம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை விமானத்தில் டாய்லட் ஒன்றில் மறைத்து வைத்துவிட்டு இறங்கினார். துப்பரவுப் பணியாளர்கள் இறங்கிய உடனேயே விமானத்தில் பின்பகுதியில் அமர்ந்திருந்த ஒருவர் டாய்லட்டுக்குச் சென்றார்.

அவர் திரும்பவும் தனது சீட்டுக்கு வந்தபோது ஆயுதங்கள் அவருடன் வந்து விட்டன..
ஏதென்ஸ் விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பியபோதே கடத்தல்காரர்களின் கைகளில் ஆயுதங்கள் வந்துவிட்டன. ஏதென்ஸிலிருந்து விமானம் கிளம்பி சுமார் அரைமணி நேரத்தின்பின், முதலாவது கடத்தல்காரர் கையில் துப்பாக்கியுடன் தனது சீட்டிலிருந்து எழுந்தார்.

அந்த நிமிடத்தில் விமானத்தின் கட்டுப்பாடு கடத்தல்காரர்களின் கைகளுக்குப் போனது. விமானம் கடத்தப்படுகிறது என்ற தகவலை துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த விமானி தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்குத் தெரிவித்தார். கடத்தல்காரர்கள் வாடி ஹாடாட் என்ற தீவிர இஸ்லாமிய விடுதலை அமைப்பினர்.

விமானத்தைக் கடத்தியவர்கள் விஷயம் தெரியாத ஆட்களல்ல. அவர்களுக்கு விமான நகர்வுகள் பற்றி நன்றாகவே தெரிந்திருந்தது. அவர்கள் போய்ச்சேர வேண்டிய இடத்துக்கு (ஆபிரிக்கா) செல்வதற்கு விமானத்தில் எரிபொருள் போதுமானதாக இருக்காது என்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.

ஏதென்சில் இருந்து டெல்-அவிவ் இருக்கும் தூரத்தின் அளவிலான தூரத்திலிருக்கும் மற்றுமோர் விமான நிலையத்திற்கு விமானத்தைச் செலுத்தச் செய்வதாக திட்டம் வைத்திருந்தார்கள்.
அப்படி, அவர்கள் மனதில் வைத்திருந்த நாடு லிபியா. (காரணம் லிபியா இந்தத் தீவிரவாத அமைப்பினர்மீது ஓரளவு பரிவு வைத்திருந்த நாடுகளில் ஒன்று)

கடத்தல்காரர்கள் சொல்லிக்கொடுத்தபடி, ஏயார் பிரான்சின் விமானி தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தைக் தொடர்பு கொண்டு விமானத்தைக் கடத்தற்காரர்களின் உத்தரவுப்படி லிபியாவை நோக்கித் திருப்புவதாகத் தெரிவித்தார். சிறிது நேரத்தில் லிபியாவின் பென்காசி விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்க அனுமதி கொடுக்கப்பட்டது.

அங்கே இவர்கள் கேட்டுக் கொண்டபடி விமானத்துக்கு முழுமையாக எரிபொருள் நிரப்பப்ப லிபிய அரசு சம்மதித்தது.

இதற்கிடையே எயார் பிரான்சின் விமானம் கடத்தப்பட்ட விபரம் வெளியே தெரியவந்துவிட ஊடகவியலாளர்கள் பலர் பென்காசி விமான நிலையத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால் அவர்களில் யாரையும் விமானத்துக்கு அருகே செல்லவே லிபியப் பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கவில்லை.

விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த லிபியாவிலிருந்த பிரென்ச் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களுடன் பேசமுடியாது என்று கடத்தல்காரர்கள் கூறிவிட்டார்கள்.
இந்தக் கட்டத்தில் விமானத்துக்குள் ஒரு சுவாரசியமான நாடகம் நடைபெற்றது. கடத்தப்பட்ட பயணிகளில் இளம் பெண் ஒருவர் தான் கர்ப்பமுற்று இருப்பதாகத் தெரிவித்து, தனக்கு இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை என்று கூறினார். அதையடுத்து மயக்கமாகி சீட்டில் சரிந்தார்.

கடத்தல்காரர்கள் தமக்குள் ஆலோசனை செய்தபின் அந்த இளம்பெண்ணை மாத்திரம் பென்காசியில் வைத்து விடுவிக்கச் சம்மதித்தனர். இப்படியாக பணயக் கைதிகளில் முதலாவதாக இந்த இளம்பெண் விடுவிக்கப்பட்டார்.

சரி. “விமானத்துக்கு உள்ளே ஒரு நாடகம் நடைபெற்றது” என்று இந்தச் சம்பவத்தை ஏன் குறிப்பிட்டோம் என்று யோசிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது. விடுவிக்கப்பட்ட அந்த இளம் பெண் உண்மையில் கர்ப்பிணி அல்ல. சும்மா பொய் சொல்லித் தப்பித்துக் கொண்டார்!
எரிபொருள் நிரப்பப்பட்ட விமானம் பென்காசி விமானநிலையத்திலிருந்து கிளம்பியபோதுதான் கடத்தியவர்கள் முதலாவது பிரச்சனையைச் சந்தித்தார்கள்.

கடத்தற்காரர்களின் திட்டம் என்னவென்றால் ஏதென்ஸ் விமான நிலையத்தைவிட்டுக் கிளம்பியவுடன் விமானம் கடத்தப்படவேண்டும். அங்கிருந்து பென்காசி சென்று எரிபொருள் நிரப்பவேண்டும். அதன்பின்னர் சூடான் நாட்டின் கார்ட்டூம் விமான நிலையத்துக்கு விமானத்தைச் சொலுத்திச் சென்று அங்கே தரையிறங்கவேண்டும்.

இந்தக் கடைசிப் பகுதியில்தான் சிக்கல்.
விமானம் கிளம்பியபோது விமானியிடம் கார்ட்டூம் விமான நிலையம் நோக்கிச் செல்லும்படி கடத்தியவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். விமானமும் அந்தத் திசையில் செலுத்தப்பட்டது. ஆனால் சூடான் நாட்டு அதிகாரிகள் இந்த விமானத்தைத் தமது நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டார்கள்.

சூடான் நாடும் தங்கள்மீது அனுதாபம் வைத்திருக்கும். எனவே அங்கே விமானத்தைத் தரையிறக்கிவிட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்று இந்த விடுதலை அமைப்பினர் வைத்திருந்த திட்டம் குழம்பிப்போனது.
விமானம் சிறிது நேரம் எங்கே போகின்றது என்ற இலக்கு இல்லாமல் சூடான் இருந்த திசையில் பறந்து கொண்டிருந்தது. அதற்குள் கடத்தியவர்கள் தங்களுக்குள் கூடி ஆலோசித்தார்கள். ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள ஏதாவது ஒரு நாட்டில்தான் விமானத்தை இறக்குவது பாதுகாப்பானது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். சூடான் தரையிறங்க அனுமதிக்க மறுத்தபின் வேறு எங்கே செல்வது.

இரண்டாவது தேர்வாக அவர்கள் தேர்ந்தெடுத்த நாடு உகண்டா.

விமானத்தை உகண்டாவை நோக்கித் திருப்பும்படி விமானியிடம் கூறினார்கள். உகண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவின் சர்வதேச விமான நிலையம் பூகோள ரீதியில் இவர்கள் முதலில் செல்லத் திட்டமிட்டிருந்த கார்ட்டும் விமான நிலையத்திலிருந்து குறைந்த பாகை வித்தியாசத்திலேயே இருக்கிறது.

எனவே சூடான் நோக்கிச் சென்ற விமானத்தை இலகுவில் உகண்டாவை நோக்கித் திசைதிருப்பிவிடலாம். கார்ட்டூம் நகருக்கும் கம்பாலா நகருக்கும் இடையிலுள்ள தூரம் வெறும் 1053 மைல்கள்தான் என்பதால் கடத்தப்பட்ட விமானத்திலுள்ள எரிபொருளும் போதுமானதாக இருக்கும்.

இப்போது விமானி தரைக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு உகண்டாவில் தலையிறங்க அனுமதி வேண்டுமென்று கேட்டார்.
ஆச்சரியகரமாக உடனே அனுமதி கிடைத்தது. அதுவும் உகண்டாவின் அன்றைய தலைவர் இடி அமீன் தானே நேரடியாக அனுமதி வழங்கி ஆச்சரியப்படுத்தினார். அனுமதி கிடைத்தவுடன், எயார் பிரான்ஸ் விமானம் உகண்டாவின் தலைநகர் கம்பாலாவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருந்த என்டபே விமான நிலையத்தில் தரையிறங்கியது.

தரையிறங்கிய விமானத்தில் இருந்த பயணிகளில் இஸ்ரேலியர்களைத் தவிர மற்றய நாட்டுக்காரர்கள் அனைவரையும் கடத்தல்காரர்கள் உடனே விடுதலை செய்துவிட்டார்கள்.

அந்த எயார் பிரான்ஸ் விமானத்தின் காப்டனாகப் பணியாற்றியவர் Michel Bacos. பிரென்ச்காரரான இவரையும் கடத்தல்காரர்கள் விடுவித்தபோதும் அவர் வெளியேற மறுத்துவிட்டார். விமானத்தின் காப்டனான தனது பொறுப்பிலேயே அனைத்து விமானிகளும் இருப்பதால் அதில் ஒருபகுதியினரை விட்டுவிட்டுத் தன்னால் விடுதலையாகிச் செல்ல முடியாது என்று கூறிவிட்டார் இவர்.

இவரைப் பின்பற்றி எயார் பிரான்சின் மற்றய விமானப் பணியாளர்களும் விடுதலையாக மறுத்து, பணயக் கைதிகளுடனே தங்கிக் கொண்டனர்.
விடுதலையாக மறுத்த மற்றொருவர் அந்த விமானத்தில் பயணித்த பிரென்ச் கன்னியாஸ்திரி. துறவியான தனக்குப் பதிலாக பணயக் கைதிகளில் ஒருவரை விடுவிக்குமாறு இவர் கடத்தல்காரர்களைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரைப் பணயக் கைதியாக வைத்திருக்க கடத்தல்காரர்கள் சம்மதிக்கவில்லை.

இறுதியில் என்ன நடந்தது? அவரை வைத்திருந்தால் இது மத ரீதியான விவகாரமாகத் திரும்பிவிடும் என்று, உகண்டாவின் பாதுகாப்புப் படையினர் இந்தக் கன்னியாஸ்திரியைப் பலவந்தமாக அங்கிருந்து அப்புறப் படுத்தினர்.

இப்போது பணயக் கைதிகளாக இருந்த 105 பேரில் 85 பேர் இஸ்ரேலிய, மற்றும் இஸ்ரேலியப் பிரஜைகளில்லாத யூதர்கள். மிகுதி 20 பேரும் எயார் பிரான்ஸ் விமானச்

சிப்பந்திகள். இவர்கள் அனைவரையும் ஆயுத முனையில் வைத்துக்கொண்டு தமது கோரிக்கைகளை வெளியிட்டார்கள் கடத்தல்காரர்கள்
மொத்தம் மூன்று கோரிக்கைகள். முதலாவது, இஸ்ரேலியச் சிறைகளில் இருக்கும் நாற்பது பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யவேண்டும். இரண்டாவது, ஐரோப்பிய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யவேண்டும்.

மூன்றாவது, கென்யா நாட்டில் நைரோபி விமான நிலையத்திலிருந்து எல்-அல் இஸ்ரேலி ஏயார்லைன்ஸின் விமானம் ஒன்று கிளம்பும்போது அதை சாம்-7 ரொக்கட்டால் அடித்து வீழ்த்த முயன்ற இரு ஜேர்மன்காரர்கள் கைது செய்யப்பட்டு கென்யாவின் சிறையில் இருக்கிறார்கள். அந்த இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

இந்த மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தவறினால் பணயக் கைதிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள். இதற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு ஜூன் மாதம் 30ம் திகதி.
இஸ்ரேலில் அவசர அவசரமாக மந்திரிசபை கூடியது. பிரதமர் ரேபின் இஸ்ரேலியச் சிறைகளில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் 40 பேரை விடுதலை செய்யச் சம்மதிப்பதுபோலக் காட்டிக் கொண்டார். ஆனால், அதற்கு இஸ்ரேலிய உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதால் அதற்கு சில நாட்கள் அவகாசம் எடுக்கும் என்றும் கூறிக்கொண்டார்.
ஆனால், உள்ளே வேறு ஒரு திட்டம் இருந்தது.

இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் அதிரடியாக ரகசிய ஒப்பரேஷன் ஒன்றைச் செய்து பணயக் கைதிகளை விடுவிப்பதுதான் உள்ளேயிருந்த நிஜத்திட்டம்.

இது நடந்தபோது மொசாத்தில் தலைவராக இருந்தவர் யிட்சாக் ஹோபி. அவர் பிரதமருடன் ரகசியமாக ஆலோசனைக்கு அழைக்கப்பட்டார். அப்போதுதான் இஸ்ரேல் வெளிப்படையாகக் கூறாமல் ரகசிய அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு பணயக் கைதிகளை விடுவிக்கும் யோசனை ஒன்று தம்மிடம் இருக்கிறது எனத் தெரிவித்தார் பிரதமர்.

இந்த ஒப்பரேஷன் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்படவேண்டும். துரிதமாகவும் முடியவேண்டும். ஏதாவது தவறு நடந்தால் இஸ்ரேலியப் பணயக் கைதிகளின் உயிர்கள் எடுக்கப்பட்டுவிடும் என்பது மொசாத்தின் தலைவருக்கு கூறப்பட்டு அப்படியான முறையில் ஒரு ஒப்பரேஷனை நடாத்த முடியுமா என ஆலோசனை கேட்கப்பட்டது.
“இது உங்களால் முடியுமா?”

“இது உங்களால் (மொசாத்தால்) முடியுமா? அல்லது பேசாமல் கடத்தல்காரர்களின் கோரிக்கைக்கு இணங்கி எமது சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லையா” என்று கேட்டார் பிரதமர்.

“நாங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் அதற்குச் சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும். மொசாத்தின் நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கிடாமல் எங்களை எங்களது போக்கில் விட்டால் அதிரடியாக ஒரு ஒப்பரேஷனை நிச்சயம் செய்ய முடியும்” என்று கூறிவிட்டு அலுவலகம் திரும்பினார் மொசாத்தின் தலைவர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் கேட்டிருந்த அனுமதி வந்து சேர்ந்தது.


muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 11, 2011 8:59 pm

கோபி சதீஷ் wrote:அது ஒரு அதிரடி மீட்பு. கடைசியாக இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் அதிரடியாக ரகசிய ஒப்பரேஷன் ஒன்றைச் செய்து பணயக் கைதிகளை விடுவித்து இஸ்ரேலிய நாட்டிற்கே அழைத்து சென்று விடுவார்கள். அந்த ஒப்பரேஷன் முடிந்த பிறகு தான் விமான நிலைய அதிகரிகளுக்கே தெரியும்.

இதுவரைக்கும் அப்பிடியொரு ஒப்பரேஷன் நடந்த்தா எனக்கு தெரியவில்லை.
பகிர்வுக்கு நன்றி..

அது சரி தான் நண்பரே ,அந்த ஆபரேஷன் எப்படி நடந்தது ,அது தானே முக்கியம் ...

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 11, 2011 9:01 pm

வை.பாலாஜி wrote:மீதி பகுதி எப்போ .... இப்போ போயி தொடரும் சொல்லிட்டீங்களே //////

அண்ணா விரைவில் ....

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Tue Jul 12, 2011 2:37 am


4th part http://viruvirupu.com/2011/06/27/4142/
5th part http://viruvirupu.com/2011/07/08/4144/

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 12, 2011 10:07 am

5 தித் பார்ட் வரைக்கும் இங்கு பதிந்து விட்டேன் நண்பரே ...6 தித் பார்ட் காக தான் நாங்கள் காத்திருக்கிறோம் ...

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Tue Jul 12, 2011 10:22 am

நண்பரே நான் ஒரு மின் புத்தகத்தில் படித்ததாக நியாபகம். என் மடிக்கணினியில் குப்பைகள் அதிகமாக இருபதனால் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Thu Aug 04, 2011 1:33 am

அத்தியாயம் 6
அதிரடித் தாக்குதலின் வெற்றி!

என்டபே விமான நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முன்னேற்பாடுகள் பற்றி கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இப்போது அதிரடி ஆபரேஷனுக்கு வரவேண்டிய கமாண்டோக்கள் எப்படி வந்து சேரப் போகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

கமாண்டோக்களுடன் இஸ்ரேலிய விமானப்படையின் சீ130 விமானங்கள் முதலில் நைரோபி விமான நிலையத்தில் வந்து தரையிறங்க வேண்டும். அங்கே அந்த விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்ட வேண்டும்.

எரிபொருள் நிரப்பும் அனுமதி ஏற்கனவே கென்ய அரசால் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் எத்தனை விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட வேண்டும் என்ற விஷயத்தை இஸ்ரேல் தமது எழுத்துபூர்வமான கோரிக்கையில் சாமர்த்தியமாக தவிர்த்து விட்டிருந்தது.

அவர்களது நல்ல காலம் கென்ய அதிகாரிகளும் இதைக் கவனித்து விசாரித்திருக்கவில்லை.

மூன்று விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர் நைரோபி விமான நிலையத்திலிருந்து இந்த விமானங்கள் கிளம்பும்போது, முன்னரே அங்கு தரையிறங்கி நிறுத்தி வைக்கப்பட்டிக்கும் போயிங் -707 விமானமும் கூடவே கிளம்பிச் செல்லவேண்டும்.

கிளம்பும் அனைத்து விமானங்களும் எங்கே செல்கின்றன என்ற விபரத்தை கென்யா நாட்டு அதிகாரிகளுக்குச் சொல்லக் கூடாது.

இந்த முழுத் திட்டத்திலுள்ள மைனஸ் பாயின்டே இதுதான். ஒருவேளை கென்ய அதிகாரிகள், இவர்கள் செய்யப் போவதை ஊகித்து, சீ130 ரக விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப மறுக்கலாம். அல்லது இந்த விமானங்கள் அனைத்தும் கிளம்பியவுடன், உகண்டாவுக்கு தகவல் கொடுத்தாலும் கொடுக்கலாம். இவைதான் இந்தத் திட்டத்திலுள்ள மைனஸ் பாயின்ட்கள்.

ஆனால், மொசாத் வேறு வழியில்லாமல் அந்த ரிஸ்க்கை எடுக்கவேண்டியிருந்தது.

இஸ்ரேலில் இருந்து கிளம்பியிருந்த சீ-130 விமானங்களின் விமானிகளுக்கு அவர்கள் செல்ல வேண்டிய விமானப் பாதை பற்றிய பிளைட் பிளான் ஒன்று மொசாத்தாலேயே தயாரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது. பொதுவாக இந்தப் பாதையில் பயணிக்கும் எந்த விமானமும் இப்படியான ஒரு பிளைட் பிளானை உபயோகிக்காது என்ற வகையிலான, தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பிளைட் பிளான் அது.

கொடுக்கப்பட்ட பிளைட் பிளானின்படி விமானப் பாதை ஆபிரிக்கக் கண்டத்தில் முடிந்தவரை எந்தவொரு நாட்டின் மேலாகவும் பறக்காமல், செங்கடலின் மேலாகப் பறந்து கடந்து பின்னர், தெற்கு நோக்கித் திரும்பி ஒரு சுற்றுப்பாதையூடாக கென்ய வான்பரப்புக்குள் பிரவேசிப்பதாக இருந்தது.

இதற்குக் காரணம் என்னவென்றால், எந்தவொரு நாட்டின் வான்பரப்புக்கு மேலால் எந்த விமானங்கள் பறந்தாலும் அந்த நாட்டின் ஏதோ ஒரு கன்ட்ரோல் டவரிடம் அனுமதி பெற வேண்டும். இஸ்ரேலிய விமானங்கள் அந்தப் பிராந்தியத்தில் எங்கோ செல்லும் விஷயம் வேறு எந்தவொரு ஆபிரிக்க நாட்டின் கன்ட்ரோல் டவருக்கும் தெரியக்கூடாது.

எல்லாமே மிகத் துல்லியமான திட்டம்தான். ஒரேயொரு ரிஸ்க், நாங்கள் முதலில் கூறியது போல கென்ய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படுவதுதான்.

ஆனால் இவர்களது அதிஷ்டம், அவர்கள் கடைசிவரை சந்தேகப்படவில்லை.

***

அனைத்து விமானங்களும் நைரோபி விமான நிலையத்தில் வைத்து எரிபொருள் நிரப்பிவிட்டு குறித்த நேரத்தில் மேலெழுந்தன. திட்டப்படி விமானங்கள்அனைத்தும் 36000 அடி உயரத்தில் பறந்தபடி உகண்டாவின் வான் எல்லைக்குள் பிரவேசித்தன.

திடீரென தாழப்பதிந்து, ஒவ்வொன்றாக என்டபே விமான நிலைய ரன்வேயில் தரையிறங்கின.

வழமையாக ஒரு விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் சில உண்டு. ரன்வேயில் விமானம் ஓடி நிறுத்தப்படவேண்டிய தூரம், வேகக் கட்டுப்பாடு போன்ற இந்த நடைமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் லேன்டிங் செய்தார்கள்.

தரையிறங்கிய உடனே த்ரஸ்ட் ரிவேசர் மூலம் விமானத்தின் வேகம் சடுதியாக குறைக்கப்பட, விமானம் மிக மோசமாக குலுங்கிக் குலுங்கி ரன்வேயில் ஓடியது.

சகல விமானங்களும் ரன்வே முடியும் முன்னரே டாக்ஸிவேயில் திருப்பப்பட்டன. இந்த டாக்ஸிவே பணயக் கைதிகள் இருக்கும் கட்டிடத்துக்கு முன்னால் விமானத்தைக் கொண்டு போய் விடும்.

பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் முன் விமானம் போய் நிறுத்தப்படும் முன்னரே கமாண்டோக்கள் தரையில் குதித்து சுடத் தொடங்கினார்கள். இதை அங்கிருந்த யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்தக் குழப்பத்தில் கொமாண்டோக்கள் பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்துக்குள் சடுதியாக நுழைந்தார்கள். காவலுக்கு இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளும் முன்னரே சுடப்பட்டார்கள்.

பணயக்கைதிகளை ஓடிப்போய் விமானங்களில் ஏறமாறு கொமான்டோக்கள் கத்தினார்கள். ஓடமுடியாத பணயக்கைதிகளை கொமாண்டோக்கள் சுமந்துகொண்டு ஓடினார்கள்.

எல்லாமே கடகடவென நடந்துவிட்டன.

முதலாவது கமாண்டோ தரையில் குதித்த வினாடியிலிருந்து, மீட்கப்பட்ட கடைசி பணயக்கைதி விமானத்துக்குள் ஏற்றப்பட்ட விநாடி வரையிலான நேரம் சரியாக 5 நிமிடங்கள். திட்டமிடப்பட்டிருந்த நேரத்துக்கு 2 நிமிடங்களுக்கு முன்னரே எல்லாம் முடிந்துபோய் பணயக் கைதிகளுடன் விமானங்கள் ரன்வேயில் ஓடத் தொடங்கின.

நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கடத்தல்காரர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருந்தார்கள். அத்துடன் பணயக்கைதிகளை காவல்காப்பதற்காக லோக்கலில் ஒழுங்கு செய்யப்பட்ட 14 உகண்டா நாட்டுக் காவலர்களும் கொல்லப்பட்டனர். கூடவே, இரண்டு என்டவே விமானநிலைய ஊழியர்களும் கொல்லப்பட்டிருந்தார்கள்.

விமான நிலையத்தைச் சூழ மறைந்திருந்த 50 கொமாண்டோக்களின் உதவி கடைசிவரை கோரப்பட்டவில்லை.

அவர்கள் வந்த சுவடு தெரியாமல், மீண்டும் லேக் விக்டோரியா ஏரியைக் கடந்து கென்யா நாட்டுக்குள் சென்றுவிட்டனர். மறுநாளே இஸ்ரேலிய விமானப்படையின் மற்றுமோர் விமானம் வந்து அவர்களை அழைத்துச் சென்றது.

இந்த அதிரடி நடவடிக்கையின்போது கடத்தற்காரர்கள் திருப்பிச் சுடவில்லையா? சுட்டார்கள். அப்படிச் சுட்டதில் இஸ்ரேலியக் கமாண்டோக்களில் ஒரேயொருவர் மாத்திரம் உயிரிழந்தார். அவரது பெயர் லெப். கேணல் யொனாதன் நெட்டான்யாகூ.

இவர் யார் என்பதிலும் ஒரு சுவாராசியமான தரவு உண்டு. இந்த ஒப்பரேஷன் நடைபெற்றுப் பல வருடங்களின் பின்னர் இஸ்ரேலில் பிரதமராகிய பென்யமின் நெட்டன்யாகுவின் மூத்த சகோதரர்தான், இந்த அதிரடி நடவடிக்கையில் இறந்துபோன ஒரேயொரு இஸ்ரேலியக் கொமாண்டோ.

அவர் கொல்லப்பட்டாலும், மொசாத் நடாத்திய இந்த அதிரடி நடவடிக்கை மிகப் பெரிய வெற்றி!

மொசாத்தின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு ஒருசில கண்டனங்கள் எழுந்தாலும், இதன் வெற்றி அனைத்தையும் மறைத்துவிட்டது. இன்றுகூட உலகிலுள்ள அநேக உளவுத்துறைகள், தமது உளவாளிகளுக்கான ஆரம்பப் பயிற்சியில் கூறும் வரலாற்றுச் சம்பவமாகி விட்டது இந்த அதிரடி நடவடிக்கை.

முற்றும்




வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Aug 18, 2011 10:11 pm

மீதி??????????



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 1357389உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 59010615உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Images3ijfஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Aug 18, 2011 10:19 pm

மனிக்கவும் மூளுவதைஉம் படிதுவிடேன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 1357389உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 59010615உளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Images3ijfஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 3 Images4px
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 18, 2011 10:36 pm

உளவாளிகளின் பற்றி அறிய தந்தமைக்காக நன்றி..! மகிழ்ச்சி

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Wed Nov 23, 2011 10:05 pm

நன்றி நண்பர்களே



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக