புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_lcapஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_voting_barஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_lcapஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_voting_barஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_lcapஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_voting_barஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_lcapஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_voting_barஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_lcapஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_voting_barஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_lcapஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_voting_barஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_lcapஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_voting_barஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_lcapஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_voting_barஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_lcapஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_voting_barஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_lcapஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_voting_barஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_lcapஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_voting_barஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_lcapஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_voting_barஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
உளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_lcapஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_voting_barஉளவாளிகளின் மர்ம உலகம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உளவாளிகளின் மர்ம உலகம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 11, 2011 1:31 am

First topic message reminder :

நண்பர்களே ,வழக்கம் போல் இதுவும் இணயதில் படித்தது ,இங்கு உங்களுக்காக ...இதன் உரிமை ,உரிமையாளருக்கே ,எனக்கு அல்ல .
அத்தியாயம் 1
எயார் பிரான்ஸ் விமானம் கடத்தல்

ஜூன் மாதம் 27ம் திகதி 1976ம் ஆண்டு. பாரிஸ் விமான நிலையம். சர்வதேசப் புறப்பாடுகள் பகுதி.

எயார் பிரான்ஸின் செக்இன் கவுண்டர்களில் வரிசைவரிசையாக பயணிகள் நின்றிருந்தார்கள். இஸ்ரேலின் டெல்-அவிவ் நகருக்குச் செல்லும் விமானத்துக்கான பயணிகளை செக்இன் செய்துகொண்டிருந்தார்கள் எயார் பிரான்ஸின் விமான நிலைய ஊழியர்கள்.

வழமையாக எந்தவொரு விமானமும் எந்த நாட்டுக்குப் போகின்றது என்பதைப் பொறுத்து அந்த நாட்டவர்கள்தான் பயணிகளின் எண்ணிக்கையில் பெரிய சதவிகிதம் இருப்பார்கள்.

அது போலவே இந்த விமானத்தில் பயணிக்க வந்திருந்த பயணிகளில் மிகப்பெரிய சதவிகிதமானவர்கள் இஸ்ரேலியர்கள். அதற்கு அடுத்தபடியாக கிரேக்க நாட்டவர்களும், பிரென்சுக்காரர்களும் இருந்தார்கள். இவர்களைத் தவிர மிக சொற்ப எண்ணிக்கையில் வேறு நாட்டவர்கள்.

எயார் பிரான்ஸ் விமானப் பிரான்ஸில் இருந்து கிளம்புவதால் அதில் பிரென்ச்காரர்கள் இருப்பது சரி. ஆனால் கிரேக்க நாட்டவர்கள் பிரான்சிலிருந்து இஸ்ரேலுக்குச் செல்லவுள்ள இந்த விமானத்தில் ஏன் அதிகமாக தென்படுகிறார்கள்?


காரணம், எயார் பிரான்ஸின் அந்த குறிப்பிட்ட விமானம் பாரிஸிலிருந்து நேரே இஸ்ரேல் செல்லும் விமானமல்ல. பாரிஸிலிருந்து முதலில் கிரேக்க நகரான ஏதன்ஸ் சென்று, அங்கு ஒரு மணிநேரம் நின்று பயணிகளை இறக்கி ஏற்றிக் கொண்டுதான் டெல் அவிவ் செல்லும் ரூட் அது. அதனால்தான் அதில் கிரேக்க நாட்டவர்களும் அதிகளவில் பயணிக்க வந்திருந்தனர்.

இந்த விமான ரூட்டிலுள்ள விசித்திரமான அம்சம் என்ன தெரியுமா?

விமானம் புறப்படும் பாரிஸ் விமான நிலையமும் பாதுகாப்புக் கெடுபிடி அதிகமுள்ள விமான நிலையம். விமானம் போய்ச் சேரும் இஸ்ரேலின் டெல்அவிவ் விமான நிலையத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். உலகிலேயே மிக அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கும் விமான நிலையம் அது. இந்த இரண்டுக்கும் இடையே விமானம் இயங்கி ஏறப்போகும் ஏதன்ஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மகா மோசம்!

இப்படி ஏதென்ஸ் வழியாகச் செல்வதால் அன்றைய தினம் குறிப்பிட்ட அந்த விமானத்தைக் கடத்துவதற்கு கடத்தல்கார்கள் குறிவைத்திருந்தார்கள்.
ந்த நாட்களில் ஐரோப்பிய விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்த விமானநிலையங்களின் முக்கியமானது, ஏதென்ஸ் விமான நிலையம். (இன்றுகூட நிலைமை அதுதான்) பாதுகாப்புச் சோதனைகளுக்குள் சிக்காமல் எந்தவொரு பொருளையும் விமானம்வரை கடத்திச் செல்லக்கூடிய அளவில் இருந்தது அங்கு நிலைமை.

இந்த எயார் பிரான்ஸ் விமானத்தைக் கடத்தத் திட்டமிட்டவர்கள் பாரிஸிலிருந்து விமானம் கிளம்பியபோதே பயணிகளாக அதற்குள் ஏறிவிட்டிருந்தார்கள். ஆனால் ஆயுதங்கள் எதுவுமில்லை. பாரிஸ் விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டி ஆயுதங்களை ரிஸ்க் எடுத்து கொண்டுசெல்ல அவர்கள் விரும்பியிருக்கவில்லை.

பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் பாரிஸ் விமான நிலையத்திலிருந்து கிளம்பியது. எயார் பிரான்சின் அந்த விமானம் எயார்பஸ் A300 ரக விமானம். ரெஜிஸ்ட்ரேஷன் F-BVGG. ரூட் இலக்கம் 139.
அதன் முதலாவது லான்டிங்காக ஏதென்ஸ் விமான நிலையத்திலும் இறங்கியது. ஏதென்ஸ் வரை பயணம் செய்த பயணிகள் விமானத்திலிருந்து இறங்கிக் கொண்டனர். டெல்அவிவ் செல்லும் பயணிகள் விமானத்துக்கு உள்ளேயே இருந்தனர்.

ஏதென்ஸ் விமான நிலையத்தில் நின்றிருந்த விமானத்தில் புதிய பயணிகள் ஏற்றப்படுவதற்கு முன்னர், துப்பரவுப் பணியாளர்கள் மூன்றுபேர் விமானத்துக்குள் ஏறி துப்பரவு செய்தார்கள்.

அந்த மூன்று பேரில் ஒரு ஆள் கடத்தற்காரர்களின் ஆள்.

அவர் துப்பரவு செய்துவிட்டு இறங்குமுன்னர் தன்னிடம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை விமானத்தில் டாய்லட் ஒன்றில் மறைத்து வைத்துவிட்டு இறங்கினார். துப்பரவுப் பணியாளர்கள் இறங்கிய உடனேயே விமானத்தில் பின்பகுதியில் அமர்ந்திருந்த ஒருவர் டாய்லட்டுக்குச் சென்றார்.

அவர் திரும்பவும் தனது சீட்டுக்கு வந்தபோது ஆயுதங்கள் அவருடன் வந்து விட்டன..
ஏதென்ஸ் விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பியபோதே கடத்தல்காரர்களின் கைகளில் ஆயுதங்கள் வந்துவிட்டன. ஏதென்ஸிலிருந்து விமானம் கிளம்பி சுமார் அரைமணி நேரத்தின்பின், முதலாவது கடத்தல்காரர் கையில் துப்பாக்கியுடன் தனது சீட்டிலிருந்து எழுந்தார்.

அந்த நிமிடத்தில் விமானத்தின் கட்டுப்பாடு கடத்தல்காரர்களின் கைகளுக்குப் போனது. விமானம் கடத்தப்படுகிறது என்ற தகவலை துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த விமானி தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்குத் தெரிவித்தார். கடத்தல்காரர்கள் வாடி ஹாடாட் என்ற தீவிர இஸ்லாமிய விடுதலை அமைப்பினர்.

விமானத்தைக் கடத்தியவர்கள் விஷயம் தெரியாத ஆட்களல்ல. அவர்களுக்கு விமான நகர்வுகள் பற்றி நன்றாகவே தெரிந்திருந்தது. அவர்கள் போய்ச்சேர வேண்டிய இடத்துக்கு (ஆபிரிக்கா) செல்வதற்கு விமானத்தில் எரிபொருள் போதுமானதாக இருக்காது என்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.

ஏதென்சில் இருந்து டெல்-அவிவ் இருக்கும் தூரத்தின் அளவிலான தூரத்திலிருக்கும் மற்றுமோர் விமான நிலையத்திற்கு விமானத்தைச் செலுத்தச் செய்வதாக திட்டம் வைத்திருந்தார்கள்.
அப்படி, அவர்கள் மனதில் வைத்திருந்த நாடு லிபியா. (காரணம் லிபியா இந்தத் தீவிரவாத அமைப்பினர்மீது ஓரளவு பரிவு வைத்திருந்த நாடுகளில் ஒன்று)

கடத்தல்காரர்கள் சொல்லிக்கொடுத்தபடி, ஏயார் பிரான்சின் விமானி தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தைக் தொடர்பு கொண்டு விமானத்தைக் கடத்தற்காரர்களின் உத்தரவுப்படி லிபியாவை நோக்கித் திருப்புவதாகத் தெரிவித்தார். சிறிது நேரத்தில் லிபியாவின் பென்காசி விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்க அனுமதி கொடுக்கப்பட்டது.

அங்கே இவர்கள் கேட்டுக் கொண்டபடி விமானத்துக்கு முழுமையாக எரிபொருள் நிரப்பப்ப லிபிய அரசு சம்மதித்தது.

இதற்கிடையே எயார் பிரான்சின் விமானம் கடத்தப்பட்ட விபரம் வெளியே தெரியவந்துவிட ஊடகவியலாளர்கள் பலர் பென்காசி விமான நிலையத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால் அவர்களில் யாரையும் விமானத்துக்கு அருகே செல்லவே லிபியப் பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கவில்லை.

விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த லிபியாவிலிருந்த பிரென்ச் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களுடன் பேசமுடியாது என்று கடத்தல்காரர்கள் கூறிவிட்டார்கள்.
இந்தக் கட்டத்தில் விமானத்துக்குள் ஒரு சுவாரசியமான நாடகம் நடைபெற்றது. கடத்தப்பட்ட பயணிகளில் இளம் பெண் ஒருவர் தான் கர்ப்பமுற்று இருப்பதாகத் தெரிவித்து, தனக்கு இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை என்று கூறினார். அதையடுத்து மயக்கமாகி சீட்டில் சரிந்தார்.

கடத்தல்காரர்கள் தமக்குள் ஆலோசனை செய்தபின் அந்த இளம்பெண்ணை மாத்திரம் பென்காசியில் வைத்து விடுவிக்கச் சம்மதித்தனர். இப்படியாக பணயக் கைதிகளில் முதலாவதாக இந்த இளம்பெண் விடுவிக்கப்பட்டார்.

சரி. “விமானத்துக்கு உள்ளே ஒரு நாடகம் நடைபெற்றது” என்று இந்தச் சம்பவத்தை ஏன் குறிப்பிட்டோம் என்று யோசிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது. விடுவிக்கப்பட்ட அந்த இளம் பெண் உண்மையில் கர்ப்பிணி அல்ல. சும்மா பொய் சொல்லித் தப்பித்துக் கொண்டார்!
எரிபொருள் நிரப்பப்பட்ட விமானம் பென்காசி விமானநிலையத்திலிருந்து கிளம்பியபோதுதான் கடத்தியவர்கள் முதலாவது பிரச்சனையைச் சந்தித்தார்கள்.

கடத்தற்காரர்களின் திட்டம் என்னவென்றால் ஏதென்ஸ் விமான நிலையத்தைவிட்டுக் கிளம்பியவுடன் விமானம் கடத்தப்படவேண்டும். அங்கிருந்து பென்காசி சென்று எரிபொருள் நிரப்பவேண்டும். அதன்பின்னர் சூடான் நாட்டின் கார்ட்டூம் விமான நிலையத்துக்கு விமானத்தைச் சொலுத்திச் சென்று அங்கே தரையிறங்கவேண்டும்.

இந்தக் கடைசிப் பகுதியில்தான் சிக்கல்.
விமானம் கிளம்பியபோது விமானியிடம் கார்ட்டூம் விமான நிலையம் நோக்கிச் செல்லும்படி கடத்தியவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். விமானமும் அந்தத் திசையில் செலுத்தப்பட்டது. ஆனால் சூடான் நாட்டு அதிகாரிகள் இந்த விமானத்தைத் தமது நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டார்கள்.

சூடான் நாடும் தங்கள்மீது அனுதாபம் வைத்திருக்கும். எனவே அங்கே விமானத்தைத் தரையிறக்கிவிட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்று இந்த விடுதலை அமைப்பினர் வைத்திருந்த திட்டம் குழம்பிப்போனது.
விமானம் சிறிது நேரம் எங்கே போகின்றது என்ற இலக்கு இல்லாமல் சூடான் இருந்த திசையில் பறந்து கொண்டிருந்தது. அதற்குள் கடத்தியவர்கள் தங்களுக்குள் கூடி ஆலோசித்தார்கள். ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள ஏதாவது ஒரு நாட்டில்தான் விமானத்தை இறக்குவது பாதுகாப்பானது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். சூடான் தரையிறங்க அனுமதிக்க மறுத்தபின் வேறு எங்கே செல்வது.

இரண்டாவது தேர்வாக அவர்கள் தேர்ந்தெடுத்த நாடு உகண்டா.

விமானத்தை உகண்டாவை நோக்கித் திருப்பும்படி விமானியிடம் கூறினார்கள். உகண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவின் சர்வதேச விமான நிலையம் பூகோள ரீதியில் இவர்கள் முதலில் செல்லத் திட்டமிட்டிருந்த கார்ட்டும் விமான நிலையத்திலிருந்து குறைந்த பாகை வித்தியாசத்திலேயே இருக்கிறது.

எனவே சூடான் நோக்கிச் சென்ற விமானத்தை இலகுவில் உகண்டாவை நோக்கித் திசைதிருப்பிவிடலாம். கார்ட்டூம் நகருக்கும் கம்பாலா நகருக்கும் இடையிலுள்ள தூரம் வெறும் 1053 மைல்கள்தான் என்பதால் கடத்தப்பட்ட விமானத்திலுள்ள எரிபொருளும் போதுமானதாக இருக்கும்.

இப்போது விமானி தரைக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு உகண்டாவில் தலையிறங்க அனுமதி வேண்டுமென்று கேட்டார்.
ஆச்சரியகரமாக உடனே அனுமதி கிடைத்தது. அதுவும் உகண்டாவின் அன்றைய தலைவர் இடி அமீன் தானே நேரடியாக அனுமதி வழங்கி ஆச்சரியப்படுத்தினார். அனுமதி கிடைத்தவுடன், எயார் பிரான்ஸ் விமானம் உகண்டாவின் தலைநகர் கம்பாலாவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருந்த என்டபே விமான நிலையத்தில் தரையிறங்கியது.

தரையிறங்கிய விமானத்தில் இருந்த பயணிகளில் இஸ்ரேலியர்களைத் தவிர மற்றய நாட்டுக்காரர்கள் அனைவரையும் கடத்தல்காரர்கள் உடனே விடுதலை செய்துவிட்டார்கள்.

அந்த எயார் பிரான்ஸ் விமானத்தின் காப்டனாகப் பணியாற்றியவர் Michel Bacos. பிரென்ச்காரரான இவரையும் கடத்தல்காரர்கள் விடுவித்தபோதும் அவர் வெளியேற மறுத்துவிட்டார். விமானத்தின் காப்டனான தனது பொறுப்பிலேயே அனைத்து விமானிகளும் இருப்பதால் அதில் ஒருபகுதியினரை விட்டுவிட்டுத் தன்னால் விடுதலையாகிச் செல்ல முடியாது என்று கூறிவிட்டார் இவர்.

இவரைப் பின்பற்றி எயார் பிரான்சின் மற்றய விமானப் பணியாளர்களும் விடுதலையாக மறுத்து, பணயக் கைதிகளுடனே தங்கிக் கொண்டனர்.
விடுதலையாக மறுத்த மற்றொருவர் அந்த விமானத்தில் பயணித்த பிரென்ச் கன்னியாஸ்திரி. துறவியான தனக்குப் பதிலாக பணயக் கைதிகளில் ஒருவரை விடுவிக்குமாறு இவர் கடத்தல்காரர்களைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரைப் பணயக் கைதியாக வைத்திருக்க கடத்தல்காரர்கள் சம்மதிக்கவில்லை.

இறுதியில் என்ன நடந்தது? அவரை வைத்திருந்தால் இது மத ரீதியான விவகாரமாகத் திரும்பிவிடும் என்று, உகண்டாவின் பாதுகாப்புப் படையினர் இந்தக் கன்னியாஸ்திரியைப் பலவந்தமாக அங்கிருந்து அப்புறப் படுத்தினர்.

இப்போது பணயக் கைதிகளாக இருந்த 105 பேரில் 85 பேர் இஸ்ரேலிய, மற்றும் இஸ்ரேலியப் பிரஜைகளில்லாத யூதர்கள். மிகுதி 20 பேரும் எயார் பிரான்ஸ் விமானச்

சிப்பந்திகள். இவர்கள் அனைவரையும் ஆயுத முனையில் வைத்துக்கொண்டு தமது கோரிக்கைகளை வெளியிட்டார்கள் கடத்தல்காரர்கள்
மொத்தம் மூன்று கோரிக்கைகள். முதலாவது, இஸ்ரேலியச் சிறைகளில் இருக்கும் நாற்பது பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யவேண்டும். இரண்டாவது, ஐரோப்பிய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யவேண்டும்.

மூன்றாவது, கென்யா நாட்டில் நைரோபி விமான நிலையத்திலிருந்து எல்-அல் இஸ்ரேலி ஏயார்லைன்ஸின் விமானம் ஒன்று கிளம்பும்போது அதை சாம்-7 ரொக்கட்டால் அடித்து வீழ்த்த முயன்ற இரு ஜேர்மன்காரர்கள் கைது செய்யப்பட்டு கென்யாவின் சிறையில் இருக்கிறார்கள். அந்த இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

இந்த மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தவறினால் பணயக் கைதிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள். இதற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு ஜூன் மாதம் 30ம் திகதி.
இஸ்ரேலில் அவசர அவசரமாக மந்திரிசபை கூடியது. பிரதமர் ரேபின் இஸ்ரேலியச் சிறைகளில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் 40 பேரை விடுதலை செய்யச் சம்மதிப்பதுபோலக் காட்டிக் கொண்டார். ஆனால், அதற்கு இஸ்ரேலிய உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதால் அதற்கு சில நாட்கள் அவகாசம் எடுக்கும் என்றும் கூறிக்கொண்டார்.
ஆனால், உள்ளே வேறு ஒரு திட்டம் இருந்தது.

இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் அதிரடியாக ரகசிய ஒப்பரேஷன் ஒன்றைச் செய்து பணயக் கைதிகளை விடுவிப்பதுதான் உள்ளேயிருந்த நிஜத்திட்டம்.

இது நடந்தபோது மொசாத்தில் தலைவராக இருந்தவர் யிட்சாக் ஹோபி. அவர் பிரதமருடன் ரகசியமாக ஆலோசனைக்கு அழைக்கப்பட்டார். அப்போதுதான் இஸ்ரேல் வெளிப்படையாகக் கூறாமல் ரகசிய அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு பணயக் கைதிகளை விடுவிக்கும் யோசனை ஒன்று தம்மிடம் இருக்கிறது எனத் தெரிவித்தார் பிரதமர்.

இந்த ஒப்பரேஷன் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்படவேண்டும். துரிதமாகவும் முடியவேண்டும். ஏதாவது தவறு நடந்தால் இஸ்ரேலியப் பணயக் கைதிகளின் உயிர்கள் எடுக்கப்பட்டுவிடும் என்பது மொசாத்தின் தலைவருக்கு கூறப்பட்டு அப்படியான முறையில் ஒரு ஒப்பரேஷனை நடாத்த முடியுமா என ஆலோசனை கேட்கப்பட்டது.
“இது உங்களால் முடியுமா?”

“இது உங்களால் (மொசாத்தால்) முடியுமா? அல்லது பேசாமல் கடத்தல்காரர்களின் கோரிக்கைக்கு இணங்கி எமது சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லையா” என்று கேட்டார் பிரதமர்.

“நாங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் அதற்குச் சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும். மொசாத்தின் நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கிடாமல் எங்களை எங்களது போக்கில் விட்டால் அதிரடியாக ஒரு ஒப்பரேஷனை நிச்சயம் செய்ய முடியும்” என்று கூறிவிட்டு அலுவலகம் திரும்பினார் மொசாத்தின் தலைவர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் கேட்டிருந்த அனுமதி வந்து சேர்ந்தது.


muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 11, 2011 2:29 pm

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சரின் கோரிக்கை இடி அமீனின் மாளிகை அதிகாரிகளால் (இடி அமீனின் உத்தரவுப்படி) நிராகரிக்கப்பட்டது.

அப்படித்தான் நடைபெறும் என்பதை அவரும் ஊகித்திருந்தார்.

இடி அமீன் பேசமாட்டார் என்பதை ஊகித்திருந்தும், அவர் இடி அமீனின் மாளிகையைத் தொடர்பு கொண்ட காரணமே வேறு. அங்கிருந்த முக்கிய அதிகாரிகளுடன், அவரால் பேச முடிந்தது. அதுதான் அவருக்குத் தேவை.

இடி அமீன் மாளிகையின் முக்கிய அதிகாரிகளுடன் பேசும்போது, “உங்களது நாட்டின் (உகண்டா) விமான நிலையத்தில் இஸ்ரேலியப் பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருப்பதால், இது ஒரு சம்பிரதாயமான தொலைபேசித் தொடர்பு” என்று தெரிவித்தார் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர். அத்துடன் அந்த பணயக் கைதிகளுக்கு உகண்டா அரசு உணவு வழங்க மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.

இதைச் சொல்வதற்கா போன் பண்ணினார்? இல்லை.

இந்தப் பேச்சுக்களின்போது, கதையோடு கதையாக, பணயக் கைதிகளை விடுவிப்பதற்காக கடத்தல்காரர்களின் சகல கோரிக்கைகைகளும் ஏற்பது என்ற நிலைப்பாட்டை இஸ்ரேலிய அரசு எடுத்திருப்பதாக (பொய்தான்!) மீண்டும், மீண்டும் கூறினார்.

இடி அமீனின் அரண்மனையிலுள்ள அதிகாரிகளுக்கு இதை ஏன் அவர் சொல்ல வேண்டும்? அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

முதலாவது, இஸ்ரேல் கடத்தல்காரர்களுக்குப் பணிந்து போகப்போகின்றது என்ற நம்பிக்கை உகண்டா அரசுக்கு ஏற்பட்டால்தான் பாதுகாப்பு விஷயத்தில் உகண்டா அஜாக்கிரதையாக இருக்கும்.

அப்படியொரு நம்பிக்கை உகண்டா அரசுக்கு ஏன் ஏற்பட வேண்டும்?

தமது பரிவுக்குரிய தீவிரவாத அமைப்பின் கடத்தல்காரர்கள்மீது, தமது நெடுநாள் விரோதியான இஸ்ரேலினால், தமது நாட்டு விமான நிலையத்தில் வைத்தே தாக்குதல் ஒன்று நடைபெறப்போகின்றது என்ற விஷயத்தை உகண்டா ஊகித்து விட்டால் என்ன நடக்கும்? உகண்டா தனது ராணுவத்தைக் கொண்டுவந்து அந்த விமான நிலையத்தைச் சுற்றி நிறுத்தி விட்டாலும் விடலாம்.

அப்படியான உஷார்படுத்தலைத் தடுத்து, உகண்டா அரசை அஜாக்கிரதையாக இருக்க வைப்பதே இந்தத் தொலைபேசி உரையாடலின் முதலாவது நோக்கம்.

இரண்டாவது நோக்கம், இடி அமீனின் மாளிகை அதிகாரிகளுக்குக் கூறப்பட்ட இந்த விஷயம் எப்படியும் கடத்தல்காரர்களுக்கு நிச்சயம் போய்ச்சேரும் என்பதை, இஸ்ரேல் ஊகித்திருந்தது. அப்போதுதான் அவர்களும் அலட்சியமாக இருப்பார்கள்.

ஒரு ராஜதந்திரியின் தொலைபேசி அழைப்பு உளவுத்துறை ஆபரேஷனுக்கே பாதை அமைத்துக் கொடுத்திருப்பதைப் பார்த்தீர்களா? இஸ்ரேலைப் பொறுத்தவரை இது மிகவும் சகஜமான ஒரு விளையாட்டுத்தான்!

இந்த ராஜதந்திர விளையாட்டைச் செய்ததுடன் நிறுத்திக் கொள்ளவில்லை இஸ்ரேல். ராஜதந்திர அளவில் மற்றுமோர் வேலையும் செய்தது. வெளிவிவகார அமைச்சின் மூலம் தமது நட்பு நாடுகளின் தூதரகங்களையும் தொடர்பு கொண்டது. அப்படித் தொடர்பு கொள்ளப்பட்ட தூதரகங்களிடமும், “கடத்தல்காரர்களிடம் பணிந்து போவதைத் தவிர, எமக்கு வேறு வழியில்லை” என்றே கூறப்பட்டது.

இப்படித் தொடர்பு கொள்ளப்பட்ட வெளிநாட்டுத் தூதரகங்களில் ஒன்று பிரிட்டிஷ் தூதரகம்.

“உகண்டாவிலிருந்த இஸ்ரேலியத் தூதரகம் மூடப்பட்டுவிட்டது. இதனால், உகண்டாவில் அப்போதும் இயங்கிக் கொண்டிருந்த உங்களது (பிரிட்டனின்) தூதரக உயரதிகாரியை எங்களது சார்பில் உகண்டாவில் பேச்சு வார்த்தைகளை நடத்த ஏற்பாடு செய்ய முடியுமா?” என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டது.

பிரிட்டிஷ் அரசும் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்தது.

இஸ்ரேலின் சார்பில் உகண்டா அரசுடன் பேசுவதற்கு அங்கிருந்த தூதரக உயரதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். அந்த பிரிட்டிஷ் தூதரக உயரதிகாரியும், இஸ்ரேல் கடத்தல்காரர்கள் கேட்பதையெல்லாம் கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றது என்றே உகண்டா அரசிடம் கூறிக்கொண்டிருந்தார்.

(இஸ்ரேலுக்காக உகண்டா அரசுடன் பேசிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரி, கடத்தல்காரர்களின் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்பதாகக் கூறுவது டூப் என்பதை ஊகித்திருந்தாரா என்பது தெரியவில்லை)

ராஜதந்திர விளையாட்டுகள் இப்படியாக ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபக்கமாக மொசாத்தின் அதிரடி நடவடிக்கையின் முதற் கட்டம் தொடங்கியது.

இஸ்ரேலுக்குச் சொந்தமான ஒரு போயிங் 707 விமானம் (ஆம். அந்த நாட்களில் 707தான் பாவனையிலிருந்த பிரபல விமானம்!) ஒன்று டெல்அவிவ் விமான நிலையத்திலிருந்து கிளம்பியது. கிட்டத்தட்ட 9 மணிநேரம் பறந்தபின், கென்யாவின் நைரோபி விமான நிலையத்தில் போய் தரையிறங்கியது அந்த விமானம்.

நைரோபி விமான நிலையத்தில் விமானம் இறங்கியதுத் கென்ய விமான நிலைய அதிகாரிகள் தமது வழமையாக செயற்பாடாக, விமானத்துக்குள் ஏறி செக் பண்ணினார்கள்

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 11, 2011 2:30 pm

மொசாத்தின் ஆலோசனைப்படி, அந்த விமானம் ஒரு பறக்கும் வைத்தியசாலை போலவே அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் என்று நிறையவே இருந்தன. அத்துடன் இஸ்ரேலிய டாக்டர்கள் குழு ஒன்றும் அந்த விமானத்தில் இருந்தது.

உண்மையில் அந்தக் குழுவில் இருந்தவர்கள் டாக்டர்கள் அல்ல. அவர்கள் மொசாத்தின் ஏஜன்ட்கள்தான் என்ற விபரம், நைரோபி விமானநிலைய அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதைவிட முக்கிய விஷயம், இந்த விமானத்தின் கீழ்ப்பகுதி (கார்கோ ஏற்றுமிடம்) மாற்றியமைக்கப்பட்டு, அதனுள் கொமாண்டோக்கள் மறைந்திருந்தனர்.

இவர்கள் உபயோகித்த 707 விமானத்திற்கு வெளியே எந்த விதமான எழுத்தும் எழுதப்பட்டிருக்கவில்லை. வழமையாக எந்தவொரு விமானத்திலும் குறைந்த பட்சம் அது எந்த நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் என்றோ, எந்த நாட்டுக்குச் சொந்தமான விமானம் என்றோ எழுதப்பட்டிருக்கும். இதில் அப்படி எதுவுமே இல்லை.

அந்த விமானத்தைச் செலுத்திய இரு விமானிகளும், பயணிகள் விமானங்களைச் செலுத்தும் ஆட்களல்ல. இஸ்ரேலிய விமானப்படையைச் சேர்ந்த விமானிகள்!

இஸ்ரேலின் போயிங் 707 விமானம் நைரோபி விமான நிலையத்தில் தரையிறங்கிய அதே நேரத்தில், தொடரின் முன்பகுதியில் நாங்கள் கூறிய லேக் விக்டோரியாப் பாதை வழியாக 6 மொசாத் ஏஜன்ட்களும் உகண்டா நாட்டுக்குள் யாருமறியாமல் நுழைந்துவிட்டிருந்தார்கள்.

இந்த ஆறுபோரிடம் சக்திவாய்ந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் இருந்தன.

மொசாத் தலைமையினால் அவர்களுக்கு இஸ்ரேலில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்த திட்டப்படி, அவர்கள் ஆறுபேரும் என்டபே விமான நிலையத்தின் வெளிப்புறமாக சூழ்ந்து கொண்டு மறைந்திருக்க வேண்டும். அங்கிருந்து தரையில் நடைபெறும் சம்பவங்களை நைரோபியிலுள்ள தொலைத் தொடர்புக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தெரிவிக்கவேண்டும்.

அது மாத்திரமல்ல அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை. மற்றொரு முக்கிய வேலையும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அது, தம்மிடமுள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கடத்தல்காரர்களையும், உகண்டாவின் விமானநிலைய அதிகாரிகளையும் குழப்பியடிப்பது.

அதை எப்படிச் செய்யப்போகிறார்கள்?

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 11, 2011 2:32 pm

அத்தியாயம் 5
இதுதான் அதிரடித் தாக்குதல் திட்டம்

லேக் விக்டோரியாப் பாதை வழியாக உகண்டா நாட்டுக்குள் யாருமறியாமல் நுழைந்து விட்டிருந்த 6 மொசாத் ஏஜன்ட்களும் என்டபே விமான நிலையத்தின் வெளிப்புறமாக சூழ்ந்து கொண்டு மறைந்து கொண்டார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த முக்கிய வேலைகளில் ஒன்று, உகண்டாவின் விமானநிலைய அதிகாரிகளையும் குழப்பியடிப்பது.

அதை எப்படிச் செய்தார்களென்றால், என்டபே விமான நிலையத்தின் விமான நிலையத்தின் கண்ட்ரோல் டவாரில் இருந்த ராடார்களை சிறிய கருவி ஒன்றிலுள்ள அலைவாரிசைகளால் ஜாம் பண்ணுவது. (இப்போது இதெல்லாம் சில்லறை விஷயம். ஆனால் அந்த நாட்களில் இது ஒரு பெரிய தொழில்நுட்பம்!)

அப்படிச் செய்யும்போது என்டபே விமான நிலையத்தின் கட்டப்பாட்டிலுள்ள வான் பரப்பிலுள்ள எந்தவொரு விமான அசைவையும் கன்ட்ரோல் டவரிலுள்ள ராடார்கள் காட்டாது.

இவர்கள், தமது கருவிகள் மூலம் என்டபே விமான நிலையத்தின் விமான நிலையத்தின் கண்ட்ரோல் டவாரில் இருந்த ராடார்களை ஜாம் பண்ணிவிட்டு, கமாண்டோக்களுடன் வரப்போகும் விமானத்துக்காக பொறுமையுடன் காத்திருந்தார்கள்.

அதே நேரத்தில், நைரோபி விமான நிலையத்தில் இஸ்ரேலிய விமானம் என்ன செய்துகொண்டிருந்தது?

விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. அதன்பின் விமானம் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. உகண்டாவில் கடத்தற்காரர்கள் பணயக் கைதிகளை விடுவித்த பின்னரே விமானம் அங்கிருந்து கிளம்பி உகண்டாவுக்குச் செல்லும் என்று நைரோபி விமான நிலைய அதிகாரிகளுக்கு விமானத்தின் விமானியால் கூறப்பட்டது.

இந்த நிலையில் நைரோபி விமான நிலைய அதிகாரிகள், விமானத்திலிருந்த விமானிகளும் வைத்தியர் குழுவும் (!) விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்துக்கு அருகிலுள்ள ஹோட்டலில் ஓய்வெடுக்கலாம் என்று கூறினார்கள்.

ஆனால், போயிங் 707 விமானத்தில் வந்த விமானிகளும், வைத்தியர் குழுவும், மறுத்து விட்டார்கள். தாங்கள் விமானத்துக்கு உள்ளேயே தங்கிவிடப் போவதாகவும், எந்த நிமிடத்திலும் விமானம் கிளம்புவதற்கான உத்தரவு வரலாம் என்றும் கூறியிருந்தார்கள்.

அந்த நாட்களில் நைரோபி விமான நிலையம் மிகச் சிறியது. இரவில் விமானங்கள் எதுவும் வருவதில்லை. இதனால் விமான நிலையமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிப் போய்க் காணப்படும். விமான நிலையத்தில் காவலும் மிகச் சொற்பம். அவர்களும் வெளியே வருவதில்லை.

நள்ளிரவு தாண்டிய நேரத்தில் அந்த விமானத்திலிருந்து 50 கொமாண்டோ வீரர்கள் ஓசைப்படாமல் ஆயுதங்களுடன் வெளியே வந்தார்கள்.

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 11, 2011 2:33 pm

அவர்களின் கைகளில் ஆயுதங்களைத் தவிர வேறு சில பொதிகளும் இருந்தன. இந்த 50 கொமாண்டோக்களும் லேக் விக்டோரியா ஏரியின் கரையை நோக்கி ஓசைப்படாமல் சென்றார்கள்.

இவர்களின் கைகளில் இருந்த பொதிகளில் காற்று அடிக்கக்கூடிய ரப்பர் படகுகள் இருந்தன.

லேக் விக்டோரியாவின் கரையில் அந்த ரப்பர் படகுகளுக்கு காற்று அடிக்கப்பட்டது. அவற்றின் மூலமாக லேக் விக்டோரியாவைக் கடந்து உகண்டாவுக்கு உள்ளே நுழைந்தார்கள் அந்த 50 கொமாண்டோக்களும்.

அந்த அதிகாலை நேரத்தில் என்டபே விமான நிலையத்தின் சுற்றுப்புறங்களில் இந்த 50 பேரும் சூழ்ந்து மறைந்து கொண்டார்கள். அவர்கள் மறைந்திருந்த இடத்திலிருந்து விமான நிலைய டேர்மினலும், ரன்வேயும் மிகத் தெளிவாகத் தெரிந்தன.

அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த உத்தரவு, அங்கே காத்திருக்க வேண்டும் என்பதே.ஆக்ஷன் ஏதும் கிடையாது.

என்டபே விமான நிலையத்திலுள்ள பணயக் கைதிகளை மீட்டும்போது இவர்களது உதவி தேவைப்பட்டால் மாத்திரமே இவர்கள் தமது மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு உள்ளே நுழைய வேண்டும் என்பதே உத்தரவு.

உண்மையான அதிரடி மீட்பு நடவடிக்கையை வேறு ஒரு கமாண்டோப் பிரிவுதான் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இவர்கள் ஸ்டான்ட்பையாக அனுப்பி வைக்கப்பட்ட குழு.

இந்த 50 பேரும் என்டபே விமான நிலையத்தைச் சூழ தத்தமது பொசிஷன்களை எடுத்துத் தயாராக இருந்த அதே நேரத்தில்-

பணயக் கைதிகளை மீட்கவேண்டிய கொமாண்டோக்கள் எங்கிருந்தார்கள்?

அந்த நேரத்தில் இஸ்ரேலிய விமானப்படைக்குச் சொந்தமான மூன்று சீ-130 ஹேர்குலஸ் ரக போக்குவரத்து விமானங்களில் அந்தக் கமாண்டோக்கள் இஸ்ரேலில் இருந்து பயணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத்தான் அதிரடித் தாக்குதலின் திட்டம் முழுமையாகக் கூறப்பட்டிருந்தது.

திட்டம் என்ன?

இவர்களது விமானம் என்டபே விமான நிலையத்தில் கன்ட்ரோல் டவரிடம் அனுமதி பெறாமல் தரையிறங்க வேண்டும். ராடார்கள் ஜாம் பண்ணப் பட்டிருக்கும் என்பதால், இவர்களது விமானங்கள் எண்டபேயை நோக்கிக் கீழே பதியும்வரை என்டபே விமானநிலைய அதிகாரிகளுக்கு அப்படி மூன்று விமானங்கள் தரையிறங்கப் போவதே தெரியாமலிருக்கும்.

இந்த மூன்று விமானங்களும் தரையிறங்கிய உடனே, என்டபே விமான நிலைய அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்படும். அவர்கள் தரையிறங்கிய விமானங்களுடன் முதலில் ரேடியோ தொடர்புகளை ஏற்படுத்தி அந்த விமானங்கள் எதற்காக வந்திருக்கின்றன என்று அறிய முயல்வார்களே தவிர, உடனடியாக அந்த விமானங்களைச் சுட மாட்டார்கள்.

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 11, 2011 2:34 pm

கிடைக்கும் இந்தக் குறுகிய நேர அவகாசத்தைப் பயன்படுத்தி, அதன் விமானிகள் விமானங்களை விமான நிலையக் கட்டடங்களுக்கு அருகே கொண்டு சென்றுவிட வேண்டும்.

என்டபே விமான நிலையத்தின் வரைபடமும், அதில் பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருந்த லொக்கேஷனும், விமானத்தில் வந்திறங்கும் கமாண்டோக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. விமானங்கள் விமான நிலையக் கட்டிடத்தை நெருங்கியதும் அதிலிருந்து கமாண்டோக்கள் குதித்து அதிரடியாக அந்தக் கட்டடத்துக்குள் நுழைந்து, எதிர்ப்பவர்களைச் சுட்டுவிட்டு பணயக் கைதிகளை மீட்கவேண்டும் என்பதே திட்டம்.

என்டபே விமான நிலையம் பற்றி மொசாத் உளவாளிகள் சேகரித்து அனுப்பியிருந்த தகவல்களின்படி இந்த விமான நிலையத்தில் உகண்டா ராணுவத்தின் ஒரு மிகச்சிறிய அவுட்போஸ்ட் மாத்திரமே இருக்கின்றது. அதில் அதிகபட்சம் ஏழிலிருந்து பத்து ராணுவத்தினர் மாத்திரமே இருப்பார்கள். அவர்களைச் சமாளிப்பது சுலபம்.

இந்த 10 ராணுவத்தினரும் தகவல் அனுப்பி, மேலதிக ராணுவத்தினரும், விமான எதிர்ப்புப் பீரங்கிகளும் விமான நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள மற்றொரு ராணுவ முகாமில் இருந்துதான் வந்துசேர வேண்டும். அவர்கள் அங்கிருந்து வருவதற்குள் அதிரடி மீட்பு நடவடிக்கை முழுமையாக முடிந்து, பணயக் கைதிகள் விமானத்தில ஏற்றப்பட்டு விமானம் கிளம்பிவிட வேண்டும்.

இதுதான் கமான்டோக்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த திட்டம்.

திட்டத்தில் மேலதிகமாகக் கூறப்பட்டிருந்த அறிவுறுத்தலின்படி, விமானம் என்டபே விமான நிலையத்தில் நின்ற விநாடியிலிருந்து சரியாக ஏழு நிமிடங்களுக்குள் அனைத்தையும் முடித்துவிட வேண்டும்.

ஒரு வேளை ஏதாவது தடைகள் ஏற்பட்டு இந்த ஒப்பரேஷன் 7 நிமிடங்களைவிட அதிக நேரம் எடுக்குமென்றால், ரேடியோ மூலம் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் உதவி கோரலாம். அந்த அலைவரிசையில் உதவி கோரப்பட்டால், என்னபே விமான நிலையத்தைச் சூழ மறைந்திருக்கும் 50 கொமாண்டோக்களும் உதவிக்கு வருவார்கள்.

அவர்களிடம் உதவி கோரும் பட்சத்தில், அவர்களையும் விமானத்தில் ஏற்றிக்கொண்டுதான் கிளம்பவேண்டும். அவர்களைத் தரையில் விட்டுவிட்டு செல்லக்கூடாது.

திட்டப்படி எல்லாமே ஏழு நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டால், மறைந்திருக்கும் ஐம்பது கொமாண்டோக்களை அழைக்கத் தேவையில்லை. அதேபோல அவர்களை விமானத்தில் ஏற்றிக்கொண்டு செல்லத் தேவையும் இல்லை. அவர்களே தங்கள் வழியைப் பார்த்துக் கொள்வார்கள்.

மிகத் தெளிவான திட்டம். ஆனால் ஆபத்தான திட்டமும் கூட!

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 11, 2011 2:35 pm

தொடரும் தொடரும் தொடரும் தொடரும் தொடரும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 11, 2011 2:36 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே ....மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு
மறுமொழியிடுகின்றேன் ...




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 11, 2011 2:37 pm

வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி நண்பரே ....மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு
மறுமொழியிடுகின்றேன் ...

நன்றி அண்ணா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 11, 2011 4:51 pm

மீதி பகுதி எப்போ .... இப்போ போயி தொடரும் சொல்லிட்டீங்களே //////



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Jul 11, 2011 8:28 pm

அது ஒரு அதிரடி மீட்பு. கடைசியாக இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் அதிரடியாக ரகசிய ஒப்பரேஷன் ஒன்றைச் செய்து பணயக் கைதிகளை விடுவித்து இஸ்ரேலிய நாட்டிற்கே அழைத்து சென்று விடுவார்கள். அந்த ஒப்பரேஷன் முடிந்த பிறகு தான் விமான நிலைய அதிகரிகளுக்கே தெரியும்.

இதுவரைக்கும் அப்பிடியொரு ஒப்பரேஷன் நடந்த்தா எனக்கு தெரியவில்லை.
பகிர்வுக்கு நன்றி..

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக