புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
2 Posts - 18%
heezulia
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 12:46 pm

பெர்சே 2.0 பேரணி தொடர்பில் பேரரசர் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.அந்த அறிக்கை என்ன சொல்ல வருகிறது என்பதைப் பார்ப்போம்.

ஜூலை 9 பேரணி நடப்பதில் அவருக்கு உடன்பாடில்லை என்பது தெளிவு. ஆனாலும் நல்ல நோக்கத்துடனேயே தெரு ஆர்ப்பாட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டது என்பதையும் அவர் சொல்லாமல் இல்லை.. “நாட்டில் ஆரோக்கியமான ஜனநாயகத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதில் மக்களில் ஒரு பகுதியினர் அரசியல் உணர்ச்சிவேகம்”கொண்டிருப்பதை அவர் ஒப்புக்கொண்டிருப்பது பெர்சே 2.0-ஐ அவர் கண்டனம் செய்யவில்லை என்பதை உணர்த்துகிறது.

“ஒரு பகுதியினர்” என்றாலும் மக்கள் அதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதையும் அவர்களின் நோக்கமும்(ஜனநாயகத்தைக் கொண்டுவருதல்) நல்லதே என்பதை அவர் அறிந்தே உள்ளார்.

ஆனாலும் “தெரு ஆர்ப்பாட்டங்களால் நன்மையைவிட தீமையே அதிகம்” என்பதை எண்ணித்தான் அவர் கவலையுறுகிறார். மக்களின் ஜனநாயக் கோரிக்கைகள் “நாட்டுக்கு அழிவைக் கொண்டு வந்துவிடக் கூடாது” என்றவர் விரும்புகிறார்.

பிரச்னைகள் எதிர்ப்படும்போது “நாகரிக சமுதாயமான நாம் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்றவர் எடுத்தியம்புகிறார்.

பேரரசரின் அறிக்கை, சம்பந்தப்பட்ட தரப்புகளில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

உடனடி எதிர்வினையாற்றியுள்ள பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், ஒரு விளையாட்டரங்கில் கூடி ஆர்ப்பாட்டம் செய்யும் வாய்ப்பை பெர்சே 2.0-க்கு வழங்க முன்வந்திருக்கிறார். சர்ச்சை தொடங்கியதிலிருந்து இப்போதுதான் அவரிடம் இப்படி ஒரு விட்டுக்கொடுக்கும் போக்கு தென்படுகிறது. மேலும், அவரின் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், பெர்சே 2.0 இயக்கத்தை ஒரு சட்டவிரோத அமைப்பு என்று அறிவித்திருக்கும்போது நஜிப், இப்படிச் சொன்னது வெளிப்படையாக இல்லாவிட்டாலுங்கூட மறைமுகமாக அவர் பெர்சேக்கு ‘சட்டப்பூரவ அங்கீகாரம்’ வழங்குவதாக பொருள்படுகிறது.

இச்சலுகையை அவர் வழங்க முன்வந்திருப்பதிலிருந்து ஒன்று புரிகிறது. தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரும் அந்த அமைப்புடன் போட்டியிட்டு இரண்டில் ஒன்றைப் பார்த்துவிடல் என்ற நிலைக்கு அவர் தயாராக இல்லை. தம் கெளரவத்தைக் காத்துக்கொள்ளவே இப்படி ஒரு சலுகையை முன்வைத்துள்ளார். ஆனால், இது போதாது. அவரால் நேர்ந்துள்ள சேதாரம் அதிகம்.கடந்த வாரத்தில் நியாயமற்ற முறையிலும் வெறித்தனமாகவும் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவர் எறும்புகளை அழிக்க அணுக்குண்டைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

அதன் மோசமான உட்டக்கட்டம், கப்பளா பத்தாசில் கைதுசெய்யப்பட்ட மலேசிய சோசலிசக் கட்சி உறுப்பினர் 30 பேர் பேரரசருக்கு எதிராக போர் தொடுத்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு அவர்களில் அறுவர் அவசரகாலச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது.

நஜிப் செய்தது தவறு என்று ஆணித்தரமாக அறைந்து கூறாவிட்டாலும்கூட, தோளில் தட்டிக்கொடுத்துக் கூறுவதுபோல்“அரசாங்கம் மக்கள் அதனிடம் நம்பி ஒப்படைத்துள்ள பொறுப்புகளை நியாயமான முறையிலும் விவேகமான முறையிலும் நிறைவேற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்” என்று பேரரசர் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் பயன்படுத்திய “நியாயம், விவேகம்” ஆகிய சொல்கள் கடந்த வாரம் அரசாங்கம் நடந்துகொண்ட விதம் நியாயமல்ல என்பதைச் சுட்டுகின்றன. அநியாயத்திலும் அநியாயமானது எதுவென்றால் ஒன்று, 30 பிஎஸ்எம் உறுப்பினரும் கம்யூனிசத்தை உயிர்ப்பிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டதாக இருக்க வேண்டும் அல்லது பெர்சே 2.0 ஒரு சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

“பல்லின சமுதாயத்தில் சமூகங்களுக்கிடையில் எந்தக் காரணத்தினாலும் பகைமைப் போக்கு உருவாவதையோ மக்களில் ஒரு பகுதியினர் அரசுக்கு எதிரானவர்களாக மாறுவதையோ காண விரும்பவில்லை”, என்று பேரரசர் கூறியிருப்பதும் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தியாகும்.

இது, அண்மைக்காலமாக பெர்க்காசா, உத்துசான் மலேசியா, முன்னாள் பிரதமர் மகாதிரும்கூட இனப் பதற்றத்தைத் தூண்டிவிடும் வகையில் நடந்துகொள்வதைக் குறிப்பிட்டுச் சொல்வதாக இருக்கக்கூடும்.

பேரரசரின் அறிக்கைக்கு பெர்சே 2.0-இன் எதிர்வினை என்னவென்றால் அது அகோங்கைச் சந்திக்க விரும்புகிறது. அச்சந்திப்பில் அதனுடன் சேர்ந்துகொள்ள மாற்றரசு அரசியல் கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. ஆனால், எக்காரணம் கொண்டும் பெர்சே 2.0 இதற்கு இடமளிக்கக் கூடாது. அது, இதுவரையிலும் தன்னை சமூக அமைப்புகள் சேர்ந்து நடத்தும் ஒரு இயக்கம் என்றுதான் கூறி வந்துள்ளது.அப்படியே அது தொடர்ந்து இருக்க வேண்டும்.

பெர்சேக்குப் பேட்டியளிக்க பேரரசர் இணங்கினால் பேரரசரிடம், தேர்தல் சீரமைப்புப் பற்றி தன்னுடன் பேச்சு நடத்துமாறு பிரதமருக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் ஆலோசனை கூறுமாறு கேட்டுக்கொள்ளலாம்.

சரி, பேரரசர் பேட்டி அளிக்க மறுத்தால்? ஒரு இக்கட்டுநிலை தோன்றும். அதன்பின்னர் அது, ஜூலை 9-இல் பேரணியை நடத்துவதா, கூடாதா? பேரரசரின் சொல்லுக்குச் செவி சாய்ப்பதா, மக்களின் சொல்லுக்குச் செவி சாய்ப்பதா? என்ற கேள்வி எழும்.

நம்முடையது அரசமைப்புமுறைசார்ந்த முடியாட்சி. அரசியல் விவகாரங்களில் பேரரசர் மதியுரை வழங்கலாம். ஏற்பதும் ஏற்காததும் கேட்பவரைப் பொறுத்தது. ஆனால், மலேசியரில் பலரும் பேரரசரின் பேச்சைமீறுவதை துரோகச் செயலாகத்தான் கருதுவார்கள்.

இங்குதான் பெர்சே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது அரசத்துரோகி என முத்திரை குத்தப்பட்டால், அரசின் அடக்குமுறையின் காரணமாக அதற்குக் கிடைத்துவரும் அனுதாபத்தில் பெரும்பகுதி மறைந்துபோக்கும்.

எனவே, பேச்சுவார்த்தைவழி தீர்வுகாண்பதே சிறந்த வழியாகப் படுகிறது. அதில், அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீரமைப்புகள் செய்வதற்கான கால அட்டவணை ஒன்று தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு முன்னதாக பெர்சே 2.0க்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் அதாவது, அதைச் சட்டவிரோத அமைப்பு என்று அறிவித்ததை ஹிஷாமுடின் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இல்லையென்றால், அரசாங்கம் “சட்டவிரோத” அமைப்பு ஒன்றுடன் பேச்சு நடத்துவது என்பது அபத்தமாகப் படும்.ஹிஷாமுடின் தம் தவற்றை ஒப்புக்கொள்ளாதுபோனாலும் பேரரசர் அந்த அமைப்புடன் “கலந்தாய்வு செய்யலாம்:” என்று கூறியிருப்பதும் நஜிப் அது பேரணியை ஒரு விளையாட்டரங்கில் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருப்பதும் அந்த அமைப்புக்கு ஒரு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கவே செய்கின்றன.

மேலும், தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆறு பிஎஸ்எம் கட்சியினரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள்மீதான குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட வேண்டும். அவர்கள் சட்டவிரோத அமைப்பு ஒன்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று குற்றம்சாட்டுவது சரியல்ல. அவர்கள் கைது செய்யப்பட்டு சில நாள்களுக்குப் பிறகுதான் பெர்சே 2.0 சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டது. அப்படி இருக்க அந்த அமைப்பு வருங்காலத்தில் ஒரு சட்டவிரோத அமைப்பாகும் என்பதை அவர்கள் எப்படி முன்னறிந்திருக்க முடியும்?

அடுத்த சில நாள்கள் சுவாரஷ்யமானவையாக இருக்கும். அரசாங்கத்துக்கும் பெர்சேக்குமிடையிலான மோதல் மேலும் தீவிரம் அடையலாம்.

விட்டுக்கொடுப்பது பல்வீனத்தைக் காட்டும் என்பதால் நஜிப் விட்டுக்கொடுக்க மறுக்கக்கூடும். பெர்சே 2.0, நியாயமும் மக்களும் தன் பக்கம் என்று நினைப்பதால் அதுவும் இறங்கிவர மறுக்கலாம்..

இப்படிப்பட்ட இழுபறி நிலையில் அனைவருக்கும் ஏற்புடைய தீர்வை அளிக்க நாட்டின் நலனை மனத்தில் கொண்ட நடுவர் ஒருவரால்தான் முடியும்.

மலேசியாஇன்று



ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக