புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
19 Posts - 3%
prajai
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடைவானம் கூப்பிடுதூரம்


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jul 07, 2011 10:46 pm

இது ஒரு கவியரங்கத்தில் பங்குபற்ற எழுதிய கவிதை. முழுதாக் இங்கே!

பகுதி1

குடைவானம் கூப்பிடுதூரம்

சக்தி வணக்கம்

வெட்டும் மின்னல் வீசுங் காற்று
வேகும் அண்டச் சூரியனும்
கொட்டும் மழையும் கூடும் இடியும்
கோலம் தந்தாள் சக்தியவள்
தட்டும் புவியுள் முட்டும் போது
தடதட வென்றே நிலமதிர
சுட்டுச்சீறும் செந்தீ மலையின்
சீற்றம் செய்வாள் சக்தியவள்

வண்ணச் சோலை வாசத் தென்றல்
வந்தே கன்னம் வருடிவிட
எண்ணப் பூக்கள் விரியும் வேளை
இசையுங் கவிதை வடிவாக்கி
மண்ணில் என்னை எழுதச் செய்தாள்
மாதோர் சக்தி தாள்போற்றி
விண்ணைக் குடையாய் விரியச் செய்தாள்
வியந்தே நானும் கவிசெய்தேன்

அவைவணக்கம்

மடைகொள் வெள்ளம் திறந்தாற் போலும்
மாகவி சபையில் கவியோடித்
தடைக ளின்றிப் பெருகும்போது
தானும் குவளை நீர்கொண்டே
இடையில் வந்தான் இவனோ கவியென்
றெதையோ எண்ணிக் கரமேந்தி
குடைவான் எட்டித் தொடவே நின்றான்
கூப்பிடு தூரம் ஆகாதோ!

**குடைவானம் கூப்பிடுதூரம்**

காதலிளங் கன்னியவர் கண்ணசைவைக் காட்டிவிடக்
காளையர்க்கு மாமலையும் கடுகாம்!
மாதர்களின் புன்னகையில் மேகமும்வ ளைத்திடுவர்
மின்னலெனப் பாயுஞ்சக்தி வீச்சாம்!
நாதஒலி ஓமெனுமோங் காரயிசை கேட்கும்விரி
வானிடையே காணுமிறை தேவி
யாதுமவ ளானவளின் சக்தியருள் நீபெறவே
வானம்வரும் கூப்பிடுமோர் தூரம்

ஒதுமறை வேதஒலி வானெழுமோர் காலைதனில்
உள்ளமதில் தேவஇசை பாடி
மாதினையோர் பாகனருள் மூடிவிழி நாமும்தொழ
மேன்மையுறும் வாழ்வதனைப் போல
ஏதும்மனந் தான்முயல எட்டுவது கிட்டாதென்
றெண்ணிமனம் சோர்ந்தநிலை மாறி
யாதுமென தாகுமென வீரமனம் கொள்ளுகுடை
வானம்வரும் கூப்பிடவே ஓடி

1. விண்ணில்..
நிலவெழுந்து புவிதழுவும் நேரமதில் ஓரிரவு
நின்றிருந்தேன் வான்விரிப்பின் கீழே
பலதுயரம் பட்டதிலே பால்நிலவின் குளுமைபெறப்
பார்த்திருந்தேன் குவிமணலின் மேலே
உலவிவருந் தென்றல்தொட ஒளிவிழியால் தாரகைகள்
உலகமதைக் கண்சிமிட்டிக் காணும்
அலைகடலின் மீன்களென ஆயிரங்கள் கோடியென
அழகொளிர விண்மீன்கள் தோன்றும்

நேர்தெரியுந் தாரகைகள் நிர்மலவான் வீதியிலே
நிற்கும்விதம் கற்பனையைத் தூண்ட
போரெடுத்துப் பூமிகொள்ளப் பால்தெருவின் வாசிகள்தீப்
பந்தங்களைக் கொண்டதுபோற் கண்டேன்
தேரோட்டி மகன்தீண்டத் தேவி யவள் இடைமணிகள்
திமிறிநிலம் விழுந்தவிதம் போலும்
காரிகையர் ஊர்முழுதுங் கார்த்திகையின் தீபஒளி
ஏற்றியதாய் வானிருக்கக் கண்டேன்

ஒருகணமென் திகிலடையும் உள்ளமதி லோர்நினைவு
உருளுமிந்த புவிமடியில் நின்றே
பெருவிரியும் வானிடையில் புரண்டுருள ஓடுகிறேன்
புவியிழுத்த தாலுலகில் நின்றேன்
கருமையினுட் சுழல்புவியுங் கதியெடுத்த வேகமிடை
காந்தவிசை வலுவிழந்து போனால்
உருண்டகன்ற விண்ணிடையில் உதிருமொரு பூவெனவே
உலகிதைவிட் டுச்சி வானில் வீழ்வேன்

பொதுவிலெந்த பொருளுமின்றி பூமிவெறும் கல்லெனவே
பெரியதொரு வெடிவெடித்துப் போகும்
இதுவுமொரு அதிசயமே இயற்கையதன் தருமகுணம்
எமையிருத்தி உயிர்கொடுத்த தாகும்
புதுமைசிலர் பூமியையே பங்குவைத்து எல்லையிட்டு
பொருளெனவோர் விலைபேசி விற்பர்
இதைவிடப்பே ரரசுகளோ இதுஎமது பூமிஎன்று
எளியவரை இனமழியக் கொல்வர்

முதுமைவரை ஆடுமவர் முடிவுதனில் ஆவதென்ன
மோனஇருள் சூனியத்தில் தூக்கம்
கொதிகுழம்பு சீறுமொரு கோடிஒளிச் சூரியன்கள்
கூட்டமதில் ஆவிகலந் தேகும்
இதுவிருக்க ஒருபுறமாய், உண்மையில்நா மிருப்பதெது
இத்தரையிற் பாதமுள்ள போதும்
பொதுவினி லெம் மீதியுடல் பூமியுடன் வான்வழியே
பெரியதொரு வட்டமிட்டு ஓடும்

கடுகதியில் விரையுமொரு புகையிரதம் உலகமெனில்
காசுகொடா பயணிகளே நாமும்
நடுவழியில் இறங்குமொரு நாள்வரவும் எவரறியா
நழுவுமொரு விதிமுடியும் யாவும்
தொடுவதிவர் பாதம்நிலம், தேகமெதில் வான்வெளியில்
திரிவரிவர் கதிரவனைச் சுற்றி
விடுஒருசந் தேகமிலை விரல்தொடுமிவ் வானமதே
விரிந்ததெனில் கூப்பிடுமோர் தூரம்

உச்சிவானக் குடைவிரித்தும் உள்ளேநீல வண்ணமிட்டு
உண்மையிலே வைத்தவரை அறியேன்
நிச்சயமாம் பூமிதனை நம்முயிர்க்கு வாழ்வளித்து
நித்திரைக்கு தொட்டிலென ஆட்டி
அச்சினிலே தான்சுழன்று ஆடிப்புவி பாயுமொளி
ஆதவனைச் சுற்றிவரச் செய்தார்
உச்சகடு வேகமதில் ஓடுகிறோம் வான்வழியே
உடல்தொடுவான் கூப்பிடுமோர் தூரம்

ஆழவெளி விண்பரவி ஓடுகின்ற சீற்றமுடன்
ஓங்கியெரி வான்சுடர்கள் மோதி
வீழவெடித் தாயிரமாய் வேகமுடன் வான்சிதற
வீதியெங்குந் தூசெனவே மாறும்
வாழுமெங்கள் வையகமும் வண்ணபுயல் தீபறந்து
வந்துடலை வேகவைக்கு மென்றோ
சூழுங்குடை தான்விரித்துச் சுற்றிவளி வட்டமிட்டுச்
சுந்தரவாழ் வீந்தனளோ சக்தி!

பகுதி 2 ல் முடியும்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Jul 08, 2011 12:46 am

kirikasan wrote:இது ஒரு கவியரங்கத்தில் பங்குபற்ற எழுதிய கவிதை. முழுதாக் இங்கே!

பகுதி1

குடைவானம் கூப்பிடுதூரம்

சக்தி வணக்கம்

வெட்டும் மின்னல் வீசுங் காற்று
வேகும் அண்டச் சூரியனும்
கொட்டும் மழையும் கூடும் இடியும்
கோலம் தந்தாள் சக்தியவள்
தட்டும் புவியுள் முட்டும் போது
தடதட வென்றே நிலமதிர
சுட்டுச்சீறும் செந்தீ மலையின்
சீற்றம் செய்வாள் சக்தியவள்

வண்ணச் சோலை வாசத் தென்றல்
வந்தே கன்னம் வருடிவிட
எண்ணப் பூக்கள் விரியும் வேளை
இசையுங் கவிதை வடிவாக்கி
மண்ணில் என்னை எழுதச் செய்தாள்
மாதோர் சக்தி தாள்போற்றி
விண்ணைக் குடையாய் விரியச் செய்தாள்
வியந்தே நானும் கவிசெய்தேன்

அவைவணக்கம்

மடைகொள் வெள்ளம் திறந்தாற் போலும்
மாகவி சபையில் கவியோடித்
தடைக ளின்றிப் பெருகும்போது
தானும் குவளை நீர்கொண்டே
இடையில் வந்தான் இவனோ கவியென்
றெதையோ எண்ணிக் கரமேந்தி
குடைவான் எட்டித் தொடவே நின்றான்
கூப்பிடு தூரம் ஆகாதோ!

**குடைவானம் கூப்பிடுதூரம்**

காதலிளங் கன்னியவர் கண்ணசைவைக் காட்டிவிடக்
காளையர்க்கு மாமலையும் கடுகாம்!
மாதர்களின் புன்னகையில் மேகமும்வ ளைத்திடுவர்
மின்னலெனப் பாயுஞ்சக்தி வீச்சாம்!
நாதஒலி ஓமெனுமோங் காரயிசை கேட்கும்விரி
வானிடையே காணுமிறை தேவி
யாதுமவ ளானவளின் சக்தியருள் நீபெறவே
வானம்வரும் கூப்பிடுமோர் தூரம்

ஒதுமறை வேதஒலி வானெழுமோர் காலைதனில்
உள்ளமதில் தேவஇசை பாடி
மாதினையோர் பாகனருள் மூடிவிழி நாமும்தொழ
மேன்மையுறும் வாழ்வதனைப் போல
ஏதும்மனந் தான்முயல எட்டுவது கிட்டாதென்
றெண்ணிமனம் சோர்ந்தநிலை மாறி
யாதுமென தாகுமென வீரமனம் கொள்ளுகுடை
வானம்வரும் கூப்பிடவே ஓடி

1. விண்ணில்..
நிலவெழுந்து புவிதழுவும் நேரமதில் ஓரிரவு
நின்றிருந்தேன் வான்விரிப்பின் கீழே
பலதுயரம் பட்டதிலே பால்நிலவின் குளுமைபெறப்
பார்த்திருந்தேன் குவிமணலின் மேலே
உலவிவருந் தென்றல்தொட ஒளிவிழியால் தாரகைகள்
உலகமதைக் கண்சிமிட்டிக் காணும்
அலைகடலின் மீன்களென ஆயிரங்கள் கோடியென
அழகொளிர விண்மீன்கள் தோன்றும்

நேர்தெரியுந் தாரகைகள் நிர்மலவான் வீதியிலே
நிற்கும்விதம் கற்பனையைத் தூண்ட
போரெடுத்துப் பூமிகொள்ளப் பால்தெருவின் வாசிகள்தீப்
பந்தங்களைக் கொண்டதுபோற் கண்டேன்
தேரோட்டி மகன்தீண்டத் தேவி யவள் இடைமணிகள்
திமிறிநிலம் விழுந்தவிதம் போலும்
காரிகையர் ஊர்முழுதுங் கார்த்திகையின் தீபஒளி
ஏற்றியதாய் வானிருக்கக் கண்டேன்

ஒருகணமென் திகிலடையும் உள்ளமதி லோர்நினைவு
உருளுமிந்த புவிமடியில் நின்றே
பெருவிரியும் வானிடையில் புரண்டுருள ஓடுகிறேன்
புவியிழுத்த தாலுலகில் நின்றேன்
கருமையினுட் சுழல்புவியுங் கதியெடுத்த வேகமிடை
காந்தவிசை வலுவிழந்து போனால்
உருண்டகன்ற விண்ணிடையில் உதிருமொரு பூவெனவே
உலகிதைவிட் டுச்சி வானில் வீழ்வேன்

பொதுவிலெந்த பொருளுமின்றி பூமிவெறும் கல்லெனவே
பெரியதொரு வெடிவெடித்துப் போகும்
இதுவுமொரு அதிசயமே இயற்கையதன் தருமகுணம்
எமையிருத்தி உயிர்கொடுத்த தாகும்
புதுமைசிலர் பூமியையே பங்குவைத்து எல்லையிட்டு
பொருளெனவோர் விலைபேசி விற்பர்
இதைவிடப்பே ரரசுகளோ இதுஎமது பூமிஎன்று
எளியவரை இனமழியக் கொல்வர்

முதுமைவரை ஆடுமவர் முடிவுதனில் ஆவதென்ன
மோனஇருள் சூனியத்தில் தூக்கம்
கொதிகுழம்பு சீறுமொரு கோடிஒளிச் சூரியன்கள்
கூட்டமதில் ஆவிகலந் தேகும்
இதுவிருக்க ஒருபுறமாய், உண்மையில்நா மிருப்பதெது
இத்தரையிற் பாதமுள்ள போதும்
பொதுவினி லெம் மீதியுடல் பூமியுடன் வான்வழியே
பெரியதொரு வட்டமிட்டு ஓடும்

கடுகதியில் விரையுமொரு புகையிரதம் உலகமெனில்
காசுகொடா பயணிகளே நாமும்
நடுவழியில் இறங்குமொரு நாள்வரவும் எவரறியா
நழுவுமொரு விதிமுடியும் யாவும்
தொடுவதிவர் பாதம்நிலம், தேகமெதில் வான்வெளியில்
திரிவரிவர் கதிரவனைச் சுற்றி
விடுஒருசந் தேகமிலை விரல்தொடுமிவ் வானமதே
விரிந்ததெனில் கூப்பிடுமோர் தூரம்

உச்சிவானக் குடைவிரித்தும் உள்ளேநீல வண்ணமிட்டு
உண்மையிலே வைத்தவரை அறியேன்
நிச்சயமாம் பூமிதனை நம்முயிர்க்கு வாழ்வளித்து
நித்திரைக்கு தொட்டிலென ஆட்டி
அச்சினிலே தான்சுழன்று ஆடிப்புவி பாயுமொளி
ஆதவனைச் சுற்றிவரச் செய்தார்
உச்சகடு வேகமதில் ஓடுகிறோம் வான்வழியே
உடல்தொடுவான் கூப்பிடுமோர் தூரம்

ஆழவெளி விண்பரவி ஓடுகின்ற சீற்றமுடன்
ஓங்கியெரி வான்சுடர்கள் மோதி
வீழவெடித் தாயிரமாய் வேகமுடன் வான்சிதற
வீதியெங்குந் தூசெனவே மாறும்
வாழுமெங்கள் வையகமும் வண்ணபுயல் தீபறந்து
வந்துடலை வேகவைக்கு மென்றோ
சூழுங்குடை தான்விரித்துச் சுற்றிவளி வட்டமிட்டுச்
சுந்தரவாழ் வீந்தனளோ சக்தி!

பகுதி 2 ல் முடியும்

தலைப்பின் ஆரம்பம் நானா சார்!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jul 08, 2011 1:58 am

realvampire wrote:
kirikasan wrote:இது ஒரு கவியரங்கத்தில் பங்குபற்ற எழுதிய கவிதை. முழுதாக் இங்கே!

பகுதி1

குடைவானம் கூப்பிடுதூரம்

சக்தி வணக்கம்

வெட்டும் மின்னல் வீசுங் காற்று
வேகும் அண்டச் சூரியனும்
கொட்டும் மழையும் கூடும் இடியும்
கோலம் தந்தாள் சக்தியவள்
தட்டும் புவியுள் முட்டும் போது
தடதட வென்றே நிலமதிர
சுட்டுச்சீறும் செந்தீ மலையின்
சீற்றம் செய்வாள் சக்தியவள்

பகுதி 2 ல் முடியும்

தலைப்பின் ஆரம்பம் நானா சார்!

உங்கள் கேள்வி சரியாக புரிந்து கொண்டேனோ தெரியவில்லை. இருந்தாலும் பதில்
நானும் நாத்திகன்தான். ஏன் இப்போதும் கூட நாத்திகன்தான். ஆனால் எமக்குமேலே ஒரு சக்தி இருக்கிறது இல்லையா? Power. அதன் கூறுகளாகத்தான் நாமுமிருக்கிறோம் அணுவிலிருந்து , எமதுடலின் இழையங்களின் சிறுதுணிக்கையிலிருந்து அண்டம் வரை பிரபஞ்சமெல்லாம்
கருவைச் சுற்றும் துணிக்கைகளாக ஒரே வடிவமாகவே உள்ளன.
(சுருக்கமாக கூறுகிறேன்)
எனவே நாம் அந்த Power ன் குழந்தைகள். அந்த இனம்தெரியாத சக்தியை எந்த உருவமில்லாத சக்தியை ஒரு பெண்ணாக உருவகித்த முன்னோர்களோடு நானும் கருத்தொருமித்து நானும் பெண்ணாக உருவகித்து வணங்குகிறேன். இருகரங்கள் கூப்புவதில்லை. இதயத்தால்மட்டும்.
விவாதிப்பின் மிக நீளும் இது ஒரு சிறுகோடு மட்டுமே!











realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Jul 08, 2011 2:12 am

கருத்ட்டமைகு நன்றி சார்...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக