புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_m10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_m10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
251 Posts - 52%
heezulia
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_m10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
150 Posts - 31%
Dr.S.Soundarapandian
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_m10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_m10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_m10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_m10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_m10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_m10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_m10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_m10புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு


   
   

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jul 03, 2011 6:07 pm

First topic message reminder :

Nalla Tamil Arivom - purananuru

தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.

தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.

பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்

ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று,
அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே


பொருளுரை:

பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jul 08, 2011 3:03 pm

சிவா wrote:பயனுள்ள திரியைத் துவங்கியுள்ளீர்கள் சதா! மகிழ்ச்சி! தொடருங்கள்!

சிவா அண்ணாவுக்கு மிக்க நன்றி,
நன்றி



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jul 09, 2011 1:23 pm

நட்பின் யதார்த்தம்

நட்பு காதலை விட சிறந்தது, ரத்த பாசத்தை விட பெரியது என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனாலும் நட்பில் தன் நிலை இழப்பதை யாரும் விரும்புவதில்லை. என்ன தான் சிறந்த நட்பு என்று நாம் உணர்ந்தாலும், உரைத்தாலும் நம்மை உதாசீனப் படுத்தும், நம் உணர்வுக்கு சரியான அங்கிகாரம் கிடைக்காத நட்பை நாம் தொடருவதில்லை. இது தான் நட்பின் யதார்த்தம், ஆனாலும் இப்படி விலகி பின்பு உணர்ந்து ஒன்று சேரும் போது வரும் ஆனந்தம் அளவிலாதது.

பாடலின் பின்புலம்:

பலநாள் அதியமான் வீட்டில் இருந்த ஔவையாருக்கு அவனிடம் இருந்து பரிசு கிடைக்கவில்லை. அதியமான் வேண்டுமென்றே பரிசில் தருவதை காலம் தாழ்த்துகிறான், தன்னை உதாசீனம் செய்கிறான் என்று தவறாக உணர்ந்து அவன் அரண்மனையில் இருந்து வெளியேறும் பொழுது அரண்மனை வாயில்காப்பவனை பார்த்து எழுந்த பாடல் இது. நட்பில் விரிசல், கருத்து வேறுபாடு வந்து விலகும் பொழுது, நம்மால் நண்பர்களின் முகத்தை பார்த்து கூறி விலக முடியாது, குறிப்பாக பெண்கள் நட்பில் விலகும் போது எதையும் கூறாமலே விலகுகின்றனர். ஔவை சற்று வித்தியாசமானவள்,

இந்த பாடலில் வெளிப்படும் ஔவையின் கோவத்தை பாருங்கள். "மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்" & "கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்று இதன் பிறகு தான் கூறி இருப்பாரோ?

பாடலின் சிறப்பு

கல்வியின் சிறப்பையும், அந்த காலத்தில் தமிழ் பாடும் புலவர்கள், புரவலர்களின் தயவில் வாழ்ந்து வருந்துவதையும் இந்த பாடல் இலை மறை காயாக உணர்த்துகிறது.

பாடல் 3 : எத்திசைச் செலினும் சோறே (புறம் : 206)
பாடியவர் : ஔவையார்
பாடப்பட்டோன் : அதியமான்
திணை: பாடாண் துறை : பரிசில்

வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவி முதல் வயங்குமொழி வித்தித் தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன் அறி யலன் கோல்? என்னறி யலன் கோல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வருந்தலை உலகமும் அன்றே; அதனால்
காவினெம் கலனே; சுருக்கினென் கலப்பை;
மரங்கொல் தச்சன் மைவல் சிறா அர்
மழுவுடைக் கட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே"


பொருள் விளக்கம்

வாயில் காப்பவனே, வாயில் காப்பவனே
மன்னனின் காது குளிர பாடல் பாடி தன் உள்ளத்தில் எண்ணியதை
முடிக்கும் பொருட்டு, அவன் தரும் பரிசுக்காக மனம் வருந்தி
வரிசையில் ஏங்கி நிற்கும் நிலையை புலவர்களுக்கு தராத
அரண்மனை வாயில் காப்பவனே
அதியமான் தன்னை அறியாதவனா? அல்லது என்னை அறியாதவனா?
அறிவும் புகழும் உடையவர்கள் பிழைக்க வழியில்லாமல் இறந்தனர்
என்ற அவநிலை இந்த உலகத்திருக்கு இன்னும் வரவில்லை.
அதனால், என்னுடைய பொருட்களை எடுத்து கொண்டேன் இங்கிருந்து செல்கிறேன்,
நல்ல மர வேலை தெரிந்த தச்சன் காட்டில் எந்த திசை சென்றாலும், அங்கு கிடைக்கும் மரத்தை வைத்து தனக்கு வேண்டியதை செய்து கொள்வான். அது போல் திறமை உள்ளவன் எந்த திசை சென்றாலும் அவனுக்கு தேவையான உணவை பெற முடியும், வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளமுடியும். இங்கிருந்து செல்கிறேன், மறக்காமல் இதை உன் மன்னனிடம் கூறு.

ஒவ்வொருவரின் கடமை என்ன என்று அடுத்த பாடலில் காண்போம்.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jul 11, 2011 6:22 pm

ஒவ்வொருவரின் கடமை

இன்றைய சூழலில் ஒரு அலுவலத்தில் நாம் சேர்ந்த உடனேயே நமக்கு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொருவரின் தகுதி, வேலை பொறுத்து கடமைகள் மாறுபடுகின்றன. அதுபோல் பண்டைய தமிழ் முறையில் புறநானூறு ஒரு சில கடமைகளை வகுத்து இருக்கிறது. அது என்ன என்று இப்பாடல்கள் மூலம் அறியலாம்.

பாடல் 4 : காளைக்குக் கடனே (புறம் 312)
பாடியவர் : பொன்முடியார்
திணை : வாகை துறை :முதில் முல்லை
பாடப்பட்டவர் : யாருமில்லை (பொதுவாக பாடியது)

"ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே ;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே ;
வேல்வடித்துக் கொடுப்பது கொல்லற்குக் கடனே ;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக் ,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
"

பொருள் விளக்கம்:
குழந்தையை பத்திரமாக பெற்றுத் தருவது தாயின் கடமை
பெற்ற குழந்தைக்கு தேவையான கல்வி, அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் ஆகியவை சொல்லித் தந்து நான்கு பேர் புகழும் வண்ணம் சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை,
போரில் பங்கு பெரும் வீரர்களுக்கு உறுதியான கூரான வேல், வாள் செய்து கொடுப்பது கொல்லனின் கடமை. குடிமகனுக்கு நல்ல நடத்தை நிலை பெற செய்யுதல் மன்னனின் கடமை,
கூரிய ஒளி பொருந்திய வாளை கையில் ஏந்தி யானையைக் கண்டு அஞ்சாமல், அதை போரில் வெல்வது ஆண்களின் கடமை.

மக்கள் நல்ல நடத்தையில் இருப்பது மன்னனின் கையில் இருக்கிறது, இன்று போர் நடைபெறும் நாடுகளில் முக்கிய காரணம் ஆட்சி சரியில்லை, மன்னன் சரியில்லை என்ற காரணம் தான். மன்னனின் கடமை என்ன, இந்த பாடலில் காண்போம்.

பாடல் 5 : வேந்தர்க்குக் கடனே (புறம் 186)
பாடியவர் : மோசிகீரனார்
திணை : பொதுவியல் துறை : பொருண் மொழிக் காஞ்சி
பாடப்பட்டவர் : யாருமில்லை (பொதுவாக பாடியது)
(ஆட்சியாளர்கள் மனதில் ஆழமாக பதிய வேண்டிய பாடல்)

"நெல்லும் உயிர் அன்றே ; நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்தே மலர்தலை உலகம்;
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே"


பொருள் விளக்கம்:
ஒரு நாட்டின் வளத்திற்க்கு உண்ணும் உணவான நெல், அதை விளைவிக்கும் பூமி முக்கியம் இல்லை, நெல்லை விளைவிக்க பயன்படும் நீரும், அது வரும் ஆறும் முக்கியம் இல்லை. அந்த நாட்டின் மன்னனே முக்கியமானவன். அவனை பொறுத்தே நாட்டின் வளமை நிர்ணயம் ஆகிறது. "யதா ராஜா ததா பிரஜா". மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி". அதனால் யானே நாட்டின் உயிர் என்பதை அரச பதவியில் இருப்பவர்கள் உணர்ந்து ஒவ்வொரு காரியங்களையும் மக்கள் நலனுக்கு செய்வது மன்னனின் கடமை.

இப்படி கடமை செய்யும் ஒவ்வொருவரும் விரும்புவது என்ன?
அடுத்த பாடலில் காண்போம்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jul 25, 2011 1:59 am

மிகச்சிறந்த பதிவு இது சதா சிவம்.. தொடருங்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 5:27 am

திவுகள் அருமை... தொடருங்கள் நண்பா சூப்பருங்க அருமையிருக்கு



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 25, 2011 8:09 am

மிக சிறப்பாக உள்ளது சதாசிவம் அவர்களே. புறநானூறு , அகநானூறு போன்றவை இந்த தலைமுறைக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jul 25, 2011 9:36 am

அருமையான தொடர் தொடருங்கள் தோழரே



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Jul 25, 2011 9:44 am

ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;

இக்காலத்திற்க்கு தேவையானது !



- குடந்தை மணி
[size=18][You must be registered and logged in to see this link.]
[/size]
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Mon Jul 25, 2011 11:53 am

நல்ல முயற்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jul 25, 2011 5:16 pm

ஊக்கம் அளித்த நண்பர்களுக்கு நன்றி [You must be registered and logged in to see this image.]



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக