புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
3 Posts - 3%
prajai
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
2 Posts - 2%
manikavi
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
1 Post - 1%
சிவா
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
216 Posts - 42%
heezulia
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
18 Posts - 3%
sugumaran
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
6 Posts - 1%
manikavi
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
4 Posts - 1%
prajai
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_m10அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்!


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Jul 02, 2011 8:02 pm

அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Tamil-DailyNews_Paper_69925653935
இயேசு உயிர்பெற்று வந்தபோது பன்னிரு
சீடர்களுள் ஒருவரான திதிம் என்னும் தோமா அங்கில்லை. மற்ற சீடர்கள் அவரிடம்,
‘ஆண்டவரைக் கண்டோம்’ என்றார்கள். தோமா அவர்களிடம், ‘‘அவருடைய கைகளில்
ஆணியால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலைவிட்டு, அவர் விலாவில்
என் கையை விட்டாலன்றி நான் நம்ப மாட்டேன்’’ என்றார்.
எட்டு
நாட்களுக்குப்பின் அவர்கள் ஓர் அறைக்குள் கூடியிருந்தார்கள். அன்று
தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே
வந்து அவர்கள் நடுவில் நின்று, ‘‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக!’’ என்று
வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், ‘‘இதோ! என் கைகள், இங்கே உன் விரலை
இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு, ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்’’
என்றார்.
அதேபோல தோமா அவரை சோதித்துப் பார்த்துவிட்டு, பிறகு உண்மை தெளிந்து, ‘‘நீரே என்
ஆண்டவர்!
நீரே என் கடவுள்!’’ என்று சொல்லி மெய்சிலிர்த்தார். இயேசு அவரிடம், ‘‘நீ
என்னைக் கண்டதால் நம்பினாய், காணாமலே நம்புவோர் பேறு பெற்றோர்’’ என்றார்.
(யோவான் 20: 24&29)
இயேசுவின் மீது அசையாத, உறுதி மிகுந்த
நம்பிக்கையுடன் இருந்த தூய தோமா, ‘‘நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்’’
என்று சொல்லும் அளவுக்கு அஞ்சா நெஞ்சமும், அர்ப்பணிப்பு உணர்வும்
கொண்டிருந்தார். இயேசுவின் மரணம் தூய தோமாவின் நம்பிக்கையை அசைத்திருந்தது.
அதனால் ஏற்பட்ட கசப்பு, விரக்தியினால், எதையுமே நம்ப முடியாமல் தவித்துக்
கொண்டிருந்தார். ‘‘ஆண்டவரைக் கண்டோம்’’ என்று மற்ற சீடர்கள் சொன்னபோது தோமா
அதற்கான உறுதியான ஆதார அடையாளங்களை கேட்டார். இந்தச் செய்கையானது
விசுவாசமற்ற தன்மையின் வெளிப்பாடாக இருப்பினும், தோமாவின் மனதை சரியாகப்
புரிந்து கொண்டவர் இயேசு மட்டுமே. ஆகவேதான், இயேசு சாந்தமுடன் தோமாவின்
சந்தேகத்தை நீக்க, தன் காயங்களை தொட அழைத்தார். தன்னுடைய அவ
நம்பிக்கையையும், சந்தேக குணத்தையும் உணர்ந்துகொண்ட தோமா, அது குறித்து
வெட்கமடைந்து, ‘‘நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்’’ என்று மற்ற சீடர்கள்
முன்பாக விசுவாச அறிக்கை சமர்ப்பித்தார். அதோடு இயேசுவின் மனிதத்
தன்மையையும், தெய்வீகத் தன்மையையும் உணர்ந்து இதன் மூலம் இயேசுவிடம்
தனிப்பட்ட விதத்தில் உறவை வளர்த்துக் கொண்டார்.நாம் யார் மீதெல்லாமோ வீணாக
சந்தேகப்பட்டு நம்முடைய அன்பின் சமாதானத்தை இழந்திருக்கிறோம். ஆனால்
ஆண்டவர் மீது நம்பிக்கையை வளர்க்க என்ன முயற்சிகள் எடுத்திருக்கிறோம்?
அவநம்பிக்கைக்கு இடம் கொடாமல் இறைவனில் ஆழ்ந்த விசுவாசம் கொள்ள வேண்டியது
அவசியம். அப்போதுதான் தூய தோமாவைப் போல இறையனுபவத்தை எடுத்துரைக்கும்
கருவியாக நம்மால் மாற முடியும்.
புனிதர்களின் மரணத்திற்குப்பின்
திருச்சபையில் வழிகாட்டிகளும் தலைவர்களும் இருந்தனர். அவர்கள்
புனிதர்களிடமிருந்து பெற்றுக்கொண்டவற்றையும் கற்றுக்கொண்டவற்றையும்
மக்களுக்குப் போதித்தனர். புனிதர்களிடமிருந்து தாங்கள் பெற்றுக்கொண்ட
அனைத்தையும் இவர்களும் தமக்குப் பின் தம் சீடர்களிடம் ஒப்படைத்தனர்.
ஜெருசலேமில் இருந்து யாகப்பர் எழுதியதையும் உரோமையிலிருந்து சீமோன்
எழுதியதையும் எபேசுவிலிருந்து அருளப்பர் எழுதியதையும் பெரிய
அலெக்சாந்திரியாவிலிருந்து மாற்கு எழுதியதையும் மசதோனியாவிலிருந்து லூக்கா
எழுதியதையும் இந்தியாவிலிருந்து தோமா எழுதியதையும் இன்னும் புனிதர்
எவரேனும் எழுதிய கடிதங்களைப் பெற்றுக்கொண்டு, எல்லா இடங்களிலும்
தேவாலயங்களிலும் லூக்கா எழுதிய ‘அப்போஸ்தலர் பணி’ வரலாற்றைப்போல
வாசிக்கப்பட வேண்டும் என்றும் பணித்தார்கள். இதனால் புனிதர்கள் எங்கும்
அறிமுகமாக
வேண்டும் என்றார்கள்.
இந்தியாவும், அதைச் சார்ந்த
பகுதிகளும் தூய தோமையாரிடமிருந்து புனிதத்துவத்தைப் பெற்றுக் கொண்டன. அவர்
அங்கு திருச்சபையைக் கட்டி எழுப்பி, அதற்குப் பணிவிடை செய்து, அதன்
வழிகாட்டியாகவும் தலைவராகவும் இருந்தார்.கிறிஸ்து இயேசுவின் பன்னிரு
சீடருள் ஒருவர் புனித தோமையார். நற்செய்தி போதிக்கும் பேறு கொண்டவர்.
ஆண்டவர் இயேசுவை ஆவலாய்த் தொடர்ந்தவர். கிறிஸ்துவுக்காக குருதி சிந்திய
வேதசாட்சி. என் ஆண்டவரே, என் கடவுளே என்று மொழிந்த நல் தூயவர். இயேசுவின்
காயங்களை தொடுகின்ற பெரும்பேறு பெற்றவர். கிறிஸ்துவின் உண்மை விசுவாச
வாழ்வின் முன் உதாரணமானவர். விசுவாசத் தன்மையை இயேசுவிடம் நிறைவாக
அறிந்தவர். இறைவனில் பேரன்பு கொண்டுள்ளதே பெரும் செல்வம் என்று உணர்ந்தவர்.
இயேசுவுக்காக அனைத்திலும் பணிந்து மகிழ்ந்தவர். ஈட்டியினாலே வதையுற்று
மண்ணில் சாய்ந்தாலும், விண்ணில் வாழும் தூயவர். நான் போதிக்கப் போகும் இடம்
எதுவென்று இறைவனிடம் கேட்டவர். இயேசுவே வழியும், உண்மையும், உயிரும்
என்றுணர்ந்தவர். ‘வாருங்கள் செல்வோம் இயேசுவுடன்’ என அழைத்தவர். கிறிஸ்துவ
விசுவாசம் வளம் பெற தினம் உழைத்தவர்.இந்திய நாட்டின் ஒளியாக தினம்
திகழ்பவர். ஏழு ஆண்டுகள் மலபாரில் வாழ்ந்து நற்செய்தி உரைத்தவர். தோமாவின்
மரபென மலபார் மக்கள் பெருமிதம் கொள்ளச் செய்தவர். தோமா கிறிஸ்தவம் என பல
குடும்பமும் மகிழ்வுறச் சொல்லும்படி திகழ்ந்தவர். சோழ மண்டலத்தின் இறுதிப்
பகுதியாம் சென்னை மயிலாப்பூர் வந்து இறைவனை எழிலாய்த் தமிழ்மொழி தனிலே
போதித்த திருத்தூதர். அப்போஸ்தலர்களுள் தமிழ் பேசும் சிறப்புப் பெற்று
சின்ன மலையில் குகை ஒன்றில் தங்கி, ஜெபித்து, போதனை செய்து மக்களை இறைபதம்
நாட அழைத்தவர். பாறையின் மீது தன் கைத்தடியால் தட்டி நீர் பெருகச் செய்து
மக்களின் தாகம் தணித்த சாதனையாளர். நன்றியறியாத வஞ்சகர்களால் சின்னமலையில்
ஈட்டியால் குத்தப்பட்டு ஒடுங்கிய உடலோடு ரத்தம் சிந்தச் சிந்த பெரியமலை
(பரங்கி மலை)க்கு இடம் பெயர்ந்து, ரத்த சாட்சியாய் இந்தியத் திருநாட்டில்,
தமிழகத் திருமலையில் உயிர் நீத்தவர். தோமையார் மலை எனப்பெயர் பெற்று
விளங்கும் பரங்கி மலையில் திருப்பீடத்தில் புனிதப்படுத்தப்பட்டிருக்கும்
திருச்சிலுவையை தன் கரங்களால் செதுக்கிய சிற்பி. மாந்தர் அனைவருக்கும்
சிலுவையின் புனிதம் அறியச்செய்த
மாபெரும் புனிதர்.
மண்ணக வாழ்வின்
நிலையற்ற பொருளை மாந்தர்க்கு விளக்கி, சாட்சிய வாழ்வின் விடிவெள்ளியாக
உயர்ந்து, இந்திய நாட்டிற்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாய் இறைவனால்
கொடுக்கப்பட்ட அற்புதர், திருத்தூதர், தூய தோமையார். விசுவாசமற்றவர்களால்
ஈட்டியால் குத்தப்பட்டு மரித்த அவரது ரத்தம் தமிழக மண்ணில் சிந்திச் சிதறி
வேத சாட்சியத்தின் வித்தாகத் திகழ்ந்த மகத்துவத்தின் மகிமை என்றென்றும்
மாறாது, மறையாது.& மணவைப்பிரியன் ஜெயதாஸ் பெர்னாண்டோ


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக