புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 2:20 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:53 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri Jul 12, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_m10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10 
11 Posts - 58%
heezulia
வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_m10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10 
6 Posts - 32%
rajuselvam
வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_m10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10 
1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்
வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_m10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_m10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10 
199 Posts - 42%
heezulia
வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_m10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10 
194 Posts - 41%
Dr.S.Soundarapandian
வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_m10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10 
18 Posts - 4%
i6appar
வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_m10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_m10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_m10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_m10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10 
9 Posts - 2%
prajai
வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_m10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_m10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_m10வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை


   
   
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Sat Jul 02, 2011 4:09 pm

வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை 02-sivan-malai-temple300


ஒரு நிகழ்வு குறித்து உலகம் அறியும் முன்பே சொல்லும் ஒரு சக்தி வாய்ந்த மலைக் கோவில் குறித்து அறிந்து அதைக் காண ஆவலுடன் சென்றோம்.

சிந்தையை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது. பஞ்ச பூதங்களின் சக்தியை உணர்ந்து சித்தத்தை அடக்கி செயற்கரியன செய்து வென்றவர்கள் தான் சித்தர்கள். அவ்வகையைச் சேர்ந்தவர்களில் ஒருவரான சிவ வாக்கிய சித்தர் பூஜித்த மலை தான் சிவன்மலை.

எங்கும் வளம் பொங்கும் கொங்கு நாட்டின் சிங்க நகரான காங்கயத்திற்கு அருகில் காங்கயம்-திருப்பூர் நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிவன்மலை.

இம்மலை மீது கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு, பட்டாலிமலை என்று வழங்கப்பட்டதாகவும், அதன் பின் அங்கு வந்து சித்தர் சிவவாக்கியர் முன்நின்று முயன்று சான்றோர்களின் பெருந்துணையுடன் பக்தர்களின் ஒத்துழைப்பாலும் பல திருப்பணிகள் செய்துள்ளார். அது முதல் இந்த மலை சிவன் மலை என்று பெயர் பெற்றதாம்.

மேலும், அக்காலத்தில் இந்த மலையை சுற்றி பசுக்கள் சூழ்ந்தும் மேய்ந்தும் வர வளம் பெற்றுள்ளது. பசுக்களை சேய் என்று கூறுவது தமிழ் வழக்கில் உள்ளது. இதனால் சிவனின் சேயான குகன் வந்து அமர்ந்து அருள்பாலிப்பதாலும் சேமலை என்று அழைக்கப்பட்டது. கால சுழற்சியில் அது சிவன்மலை என மருவியதாகவும் ஒரு தகவல் உண்டு.

இந்த மலையின் சிறப்பு குறித்து அங்கு சாமி கும்பிட வந்த ஈரோட்டைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் ராஜேஷ் என்பவரிடம் பேச்சு கொடுத்தோம். அவர் நம்மிடம், சிவன்மலை முருகப் பெருமானின் சிறந்த திருத்தலமாகும். இது கொங்கு நாட்டின் புகழ்ப் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள முருகன் சக்தி வாய்ந்த தெய்வமாகும். தான் தெரிவிக்க விரும்புவதை பக்தர்களின் கனவில் வந்து கூறி கட்டளையிட்டு பின் நடப்பதை முன் கூட்டியே தெரிவி்க்கும் அபூர்வ சக்தி கொண்டவர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோயில் பெட்டியில் சொம்பில் தண்ணீர் வைக்க உத்தரவு வந்தது. இதனால் நாட்டில் என்ன நடக்கப் போகின்றது என அது பற்றி அப்போது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் சில நாட்களிலேய தமிழகத்தில் மக்களின் மனங்களில் மாறாத வடுவை ஏற்படுத்திய பேரழிவு அரக்கன் என்ற சுனாமி வந்து அப்பாவிகள் பலர் உயிரையும் பலிவாங்கிவிட்டது. அப்போது தான் இந்த பெட்டியில் உள்ள பொருளுக்கு மதிப்பு இன்னும் அதிகமானது.

அடுத்து மஞ்சள் வைத்து கோயிலில் பூசை செய்தனர். முன்பு காட்டில் சும்மா கிடந்த மஞ்சள் தங்கத்தின் விலையை விட அதிக அளவுக்கு மார்க்கெட்டில் விற்பனையானது. அப்போது விண்ணை முட்டும் அளவு உயர்ந்த விலை இப்போது வரை பழைய நிலைக்கு திரும்பிவே இல்லை என்றார்.

அடுத்து அங்கிருந்த கரூரைச் சேர்ந்த தேமுதிக முன்னாள் மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் என்பவர் கூறுகையில், நான் இந்த கோவிலின் மகிமை தெரிந்து அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றேன். இங்கு வந்துவிட்டு சென்றாலே ஒரு மாற்றம் நிச்சயம். இந்த கோவிலின் சக்தி ஆபூர்வமானது. முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து மண் வைத்து பூசை செய்யச் சொன்னதாம். அது முதல் இந்த பகுதியைச் சுற்றி நிலத்தின் மதிப்பு கண்ணாபிண்ணா என உயர்ந்து வி்ட்டதாம். அவ்வளவு ஏன் தமிழகத்தில் பல இடங்களில் இதே நிலை தான். இப்போது கூட சாமானிய மக்கள் நிலம் வாங்குவது குதிரைக் கொம்பாக உள்ளது.

அதே போன்று மற்றொரு பக்தரின் கனவில் வந்து 500 ரூபாய் பணம் வைக்கச் சொல்லி உத்தரவு வந்ததாம். அதன் பின்பு மக்கள் மத்தியில் 10, 20, 50 ரூபாய்க்கு மதிப்பு குறைந்து போனது. ஏன் 100 ரூபாய்க்கு கூட மதிப்பு குறைந்து, தற்போது பலரிடம் ரூ. 500 சரளமாக புழக்கத்தில் உள்ளது. இது தான் முருகனின் அருள் என பெருமை பொங்கச் சொன்னார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து அரைப் பவுன் தங்கத்தை வைத்து பூசை செய்யச் சொன்னதாம்.

சாமிக்கு கூட தங்கத்தின் மீது காதலா என பலரும் வியந்து கிடக்க, அடுத்த சில நாட்களிலேயே அதன் உண்மை நிலவரம் உலகிற்கு தெரிய வர ஆரம்பித்தது.

அது என்ன வென்றால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்ததே அப்போது தான். பெண்ணைப் பெற்றவர்கள் முருகா இது என்ன சோதனை என குரலை உயர்த்தியவர்கள் இப்போது வரை முருகா நீ தான் எங்க பெண்ணை கரை சேர்க்க வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.

இது இப்படி என்றால் மற்றொரு பக்தரின் கனவில் வந்த முருகன், தேங்காயை வைக்கச் சொல்லி உள்ளார். அது போலவே தேங்காயை வைத்து பூசையும் நடைபெற்றது. அப்போது தான் தேங்காய் விலையும் கூட அதிகரித்தது. கொப்பறை தேங்காய்க்கும் ஒரு மவுசு வந்து அது கொப்பறை தேங்காய் ஊழல் வரை சென்று நின்றது என்கின்றனர்.

தற்போது திருப்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்ற பக்தரின் கனவில் தோன்றி பச்சை அரிசி வைக்கச் சொல்லி உத்தரவு வந்ததாம். அதன்படியே அந்த பெட்டியில் தற்போது பச்சை அரிசி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதைச் சொன்ன கோடீஸ்வரன் என்ற பக்தரின் பெயரும், அவர் கோயிலில் வந்து சொன்ன தேதியும் மறவாமல் குறிப்பிட்டுள்ளனர்.

கடவுள் கனவில் சொல்லுகின்ற அந்த பொருளை அந்தப் பெட்டியில் எப்போது வைப்பார்கள் என்று கோயில் ஊழியர் ஒருவரிடம் கேட்ட போது,

காங்கயத்திற்கு அருகில் உள்ள திருப்பூர், வெள்ளக்கோயில், தென்னிலை, பரமத்தி, பல்லடம், கோவை மற்றும் பல சுற்றுப்புற கிரமங்களில் உள்ள தனது பக்தர் ஒருவரின் கனவில் சாமி தோன்றி பெட்டியில் வைக்க வேண்டிய பொருள் பற்றி கூறுவார்.

மறுநாள் அருள் வந்த நிலையில், அந்த நபர் தனது கனவில் சுவாமி தோன்றி சொன்னது குறித்து கோயில் நிர்வாகியிடம் வந்து தெரிவிப்பார். அவர் சொன்னது உண்மை தானா என்று தெரிந்து கொள்ள கோயில் நிர்வாகிகள் பூக்களை பொட்டலத்தில் வைத்து அதை சாமி முன்பு போட்டு பூச்சயனம் கேட்பார்கள்.

அதில் முதல் எடுப்பிலே வெள்ளைப் பூ வந்தால் முருகன் கனவில் தோன்றி கூறியது உண்மை தான் என உறுதி செய்து கொண்டு அந்த பொருளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அந்த பெட்டியில் வைத்து விடுவார்கள். கூடவே அருள் வந்து சொன்னவர் பெயர், அவரது ஊர், அவர் கோயிலில் வந்து சொன்ன தேதி என அனைத்தையும் அந்த பெட்டியின் கீழ் எழுதி வைத்துவிடுவார்கள். இது தான் நடைமுறை என விளக்கம் கொடுத்தார்.

தற்போது பச்சை அரிசி வைத்துள்ளது பற்றி கோயில் குருக்கள் ஒருவரிடம் கேட்ட போது அவர் நம்மிடம் பேசும் முன்பு, சில மந்திரங்களை வாயில் முணுமுத்தபடி பின்பு குரலை உயர்த்தி தம்பி பச்சை அரிசி வைத்துள்ளது நல்ல சகுனம் தான். நாட்டில் விவசாயம் செழிக்கும். அரிசிப் பஞ்சம் வராது. சுபிச்சமாக இருக்கும் போங்கோ என அருள்வாக்கு கூறினார்.

நாட்டில் நடப்பதை முன்கூட்டியே மக்களுக்கு சொல்லும் இந்த கடவுளின் அருள் வாக்கை நினைத்து மெய் மறந்தபடி அங்கிருந்து புறப்பட்டோம்.


ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jul 02, 2011 4:17 pm

🐰 🐰
முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
🐰 🐰

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 02, 2011 4:36 pm

சிவன் மலை மீதான நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் அதிகம் எங்கள் ஊரிலும் அடிக்கடி இதனை பற்றி பேசிக் கொள்வார்கள் சிவன் மலையில் என்ன வைத்து பூஜை ஆகிறது என்று நான் பல முறை பார்த்துள்ளேன்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
prabhukdm
prabhukdm
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Postprabhukdm Sat Jul 02, 2011 4:42 pm

நன்பர் கூறியது அனைத்தும் உண்மையே மேலும் சிவன்மலையில் தை மாதம் முதல் கொடியேற்றம் நடைபெரும் அதை நடத்திவைப்பவர்கள் கொங்கு நாவிதர்கள் இதை எதற்கு இங்கு கூறுகின்றேன் என்றால் அந்தகாலத்திலேயே ஜாதிகள் பார்க்காமல் அனைவரும் சமம் என்று காட்டத்தான் இந்த பகுதில் கொங்குவெள்ளாலக் கவுண்டர்கள்தான் அதிகம் ஆனால் கொங்குநாவிதர்கள்(பார்பர்) கொடியேற்றி வைத்தபின்னர்தான் மற்றவர்கள் முருகனை வழிபாடு செய்யமுடியும்.இங்கு நடைபெறும் தைபூச திருவிழா காண கண்கோடிவேண்டும் திருவிழா நடைபெரும் நாட்களில் எள்ளை போட்டால் அது கீழே விழாது அவ்வளவு கூட்டம் இருக்கும்.நண்பர்களே வாருங்கள் வந்து அருள்பெருங்கள்



பிரபு வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை 362913
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 02, 2011 4:44 pm

சிவன்மலை வரும் நண்பர்கள் சென்னிமலை முருகனையும் தரிசித்து விட்டு சொல்லுங்கள்...:நல்வரவு:



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sat Jul 02, 2011 6:03 pm

சிவன் மலையில், பெரிய சிவலிங்கம் ஒன்று உள்ளது என்று சொல்லுகிறார்களே அது உண்மையா? நான் ஒரு நூலில் படிதுள்ளேன் ,சிவன் மலை ,ஒரு பெரிய காடு என்று. இதுவும் உண்மையா ?


கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Jul 02, 2011 6:59 pm

.

இனி வரும் காலங்களில் விலைவாசியை குறைக்க பூஜை செய்யுங்கள் ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 02, 2011 10:54 pm

muthu86 wrote:சிவன் மலையில், பெரிய சிவலிங்கம் ஒன்று உள்ளது என்று சொல்லுகிறார்களே அது உண்மையா? நான் ஒரு நூலில் படிதுள்ளேன் ,சிவன் மலை ,ஒரு பெரிய காடு என்று. இதுவும் உண்மையா ?
அண்ணா சிவன் மலை என்பது காடு இல்லை ஒரு மலை தான் இருக்கும் காங்கேயம் அருகில் உள்ளது தற்போது நகரமாக மாறி வரும் பகுதி...
சிவன்மலை என்பது பெயர் தான் ஆனால் அங்கு முருகன் கோவில் தான் உள்ளது பெரிய சிவலிங்கம் இல்லை என்று நினைக்கிறேன்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 29, 2012 6:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக