புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_m10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10 
11 Posts - 33%
heezulia
திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_m10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_m10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10 
6 Posts - 18%
i6appar
திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_m10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10 
3 Posts - 9%
Jenila
திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_m10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_m10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_m10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_m10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10 
88 Posts - 35%
i6appar
திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_m10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_m10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_m10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_m10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_m10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_m10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_m10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10 
2 Posts - 1%
prajai
திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_m10திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Tue Jul 05, 2011 8:33 pm

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை அப்படின்னு ஒரு தமிழ் பாட்டு இருக்கு. ஒரு வார்த்தை நயத்திற்காக அந்த கவிஞர் அப்படி சொல்லியிருக்கலாம். ஆனா ஆசையை மூணு வகையாக பிரிச்சிருக்காங்க நம் முன்னோர்கள்.

பொன்னாசை
பெண்ணாசை
மண்ணாசை.

பொன்னாசை பெண்களுக்கும்,
பெண்ணாசை ஆண்களுக்கும்,
மண்ணாசை இரு பாலருக்கும்

என்று அம்முன்னோர்கள் பிரித்திருக்கலாம்..


என்னை கேட்டால் அந்த முன்னோர்கள் எனப்படுபவர்கள் ஆண்களாய் மட்டுமே இருந்திருப்பார்கள் என்பேன். இங்கு ஆணாசை என்பது வகைப்படுத்தப் படவில்லை. பெண்களுக்கு ஏன் ஆணாசை இருக்காதா? அல்லது இருக்ககூடாதா?

சாலையோரம் ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இப்படியெல்லாம் சிந்தித்து கொண்டிருக்கும் என்னை ஒரு பெண் என்றும், பெண்ணியவாதி என்றும் நீங்கள் நினைத்தால், மன்னித்து தொடரவும்.



நான் ஒரு செயின் பறிக்கும் திருடன். செயின் பறிப்பு எனது பொழுதுபோக்கு அல்ல என் பொழப்பு. இதுவரை நான் நிறைய செயின் பறிப்புகள் செய்திருக்கிறேன். அந்த கடவுள் புண்ணியத்தில் இதுநாள் வரை போலிஸ் திருடர்களிடம் மாட்டியதில்லை. கடவுளின் அருள் எனக்கு அதிகமாய் இருப்பதாய் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

அப்போது ஒரு சுமாரான இளம் பெண்ணும் அவளது தாயாரும் என் அருகில் வந்து நின்றார்கள். அந்த இளம் பெண்ணின் கழுத்தில், தமிழ் புராண சீரியலில் வரும் பெண் தெய்வத்தைப் போல ஏராளமான நகைகள் பளபளவென மின்னியது. என் கண்ணை கூசியது.

"ஒருவேளை உண்மையான தெய்வமே வந்து நம்மை சோதனை செய்கிறதோ?" என்ற எண்ணம் கூட என் மனதில்.

"அடச்சீய்! கடவுள் தான் நம்ம பக்கம் இருக்கிறாரே!"

என் கைகளும் மனமும் பரபரவென அலைந்தது. நகத்தை வெறிகொண்டு கடிக்க ஆரம்பித்தேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். பக்கத்தில் ஸ்டைலாக டிரஸ் செய்த ஒரு இளைஞன் இருந்தான். காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு, தலையை லேசாய் ஆட்டிக் கொண்டிருந்தான். அவன் ஐ.டி துறையில் வேலை செய்து கொண்டிருக்கலாம். அவனும் அந்த பெண்ணின் கழுத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நகைகளை பறிக்கும் ஆசை அவனுக்குள்ளும் வந்திருக்கலாம்.

"எப்படி செயல்படுத்துவது?" என்ற திட்டத்தை ஒரு முறை மனதிற்குள் ஓட விட்டேன். நகையை பறித்தவுடன் ஓட வேண்டிய பாதையையும் தீர்மானித்தேன். நன்கு மூச்சை இழுத்துக் கொண்டேன்.

மெல்ல அவளை நோக்கி நகர முற்பட்ட போது தான், கோரஸாய் அந்த சத்தம் கேட்டது.

"புடிங்க புடிங்க"
"செயின புடுங்கிட்டு ஓடுறான், அவன புடிங்க"

சடாலென்று ஒருவன் என்னை தாண்டி வெகுவேகமாய் ஓடிக் கொண்டிருக்க, பின்னால் ஒரு கூட்டமே ஓடி கொண்டிருந்தது. அந்த நொடி என் சகலத் திட்டமும் மாயமாய் மறைந்து போனது. பரீட்சை ஹாலில் ஆசிரியர் பக்கத்தில் வந்து நிற்க, எல்லா பதிலும் மறந்து போனது போல ஆனது.

நானும் கூட்டத்தோடு கூட்டமாக பின்னே ஓடினேன். அந்த சமயத்தில் "மொழி" திரைப்படத்தில் வரும் ஜோதிகாவைப் போல எங்கிருந்தோ வந்த ஒரு பெண் எம்பி பாய்ந்து அவன் காலைப் பற்றினாள். அவன் தடாலென்று தலைக் குப்புற விழுந்தான். அவள் வேகமாய் எழுந்து அவன் தலை முடியைப் பற்றி பளீர்! பளீர்! என அவன் கன்னத்தில் அறைந்து கொண்டே இருந்தாள். அவள் ஒரு கன்னத்தில் அடிக்க, அவன் மறு கன்னத்தை காட்டிக் கொண்டிருந்தான். வலியை தாங்கவே அவ்வாறு செய்தான்.

அவளை பார்க்கும் போது ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் பார்த்த, ஜான்சி ராணியை போலவே எனக்கு காட்சி தந்தாள். குதிரையும் கூர்வாலும் மட்டுமே மிஸ்ஸிங்.

அவளோடு சேர்ந்து கூட்டமாய் வந்த எல்லோரும் அவன் மேல் ஏறி மிதி மிதியென மிதித்தார்கள். இப்போது கூட்டம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது. ஒரு சில இடங்களில் மற்றவர்களிடம் அடிவாங்கி தப்பித்து இருக்கிறேன். ஆனால் யாரையும் இதுவரை அடித்ததில்லை. அதனால் யாரையாவது பயங்கர வெறியுடன் அடிக்கும் ஆவல் என் உள் மனதில் இருந்து கொண்டே இருந்தது. அந்த ஆவல் வரும் போதெல்லாம் என்னிடம், சுவர் மட்டுமே மாட்டும். இப்போது ஒருவன் அகப்பட்டுள்ளான். இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பமும் இனி கிடைக்காது.

கூட்டத்தை தள்ளி முட்டி கொண்டு உள்ளே சென்றேன். அவன் இப்போது மல்லாக்க போடப் பட்டிருந்தான். என் ஆசை நிறைவேறப் போகிறது. என்னால் முடிந்த பலம் கொண்ட மட்டும் இழுத்து அவன் வயிற்றில் குத்தினேன். குத்த குத்த "அஆவேன்று" அலறிக் கொண்டே இருந்தான். எல்லோரும் அடித்து கொண்டே இருக்க, சில குத்துக்கள் குத்திய பின்பு நான் நகர்ந்தேன். வெளியே வரும்போது தான் பார்த்தேன் அந்த கூட்டத்தில் அவனை தொடர்ந்து உதைத்துக் கொண்டிருந்தார்கள் என் தொழில் எதிரிகளான கருப்பனும், வெள்ளையம்மாவும்.

என் ஆசை தீர்ந்து வெளியே வரும் போது, சுற்றி இருந்த மக்கள் ஜான்சி ராணிக்கு அடுத்து என்னையும் ஒரு வீரனாகவும் உத்தமனாகவும் பார்த்த பார்வை, நான் ஒரு நல்லவனாக என்னையே நினைக்கச் செய்தது. ஆனால் அவன் பாக்கெட்டில் இருந்து நான் சுட்ட, ஒரு தாலி கொடி மட்டும் லேசாய் என் தொடையையும், மனதையும் உறுத்தியது.

கதை நீதி : திருடன் பிடிபட்டான், திருடர்கள் பிடிபடவில்லை.
நன்றி:Katz

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jul 05, 2011 8:56 pm

"கதை நீதி : திருடன் பிடிபட்டான், திருடர்கள் பிடிபடவில்லை"
சூப்பருங்க
ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 05, 2011 9:18 pm

ஹாஹா சரியான வார்த்தை....

கடவுள் எப்பவுமே அவன் பக்கம் தான்னு இருந்ததால் தான் அன்னிக்கு அவன் செய்ய வேண்டிய திருட்டை வேறொருத்தன் செய்து தர்ம அடி வாங்கி இருக்கான்.....

ஆனால் அதுவே அவனுக்கு உறுத்தி இருக்குன்னா திருந்தலாம் மே பி....

அருமையான கதை பகிர்வு செல்வம். அன்பு நன்றிகள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக