புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  Poll_c10ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  Poll_m10ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  Poll_c10ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  Poll_m10ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  Poll_c10ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  Poll_m10ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  Poll_c10ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  Poll_m10ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  Poll_c10ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  Poll_m10ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !


   
   
முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
http://www.tndawa.blogspot.com

Postமுஹம்மத் Fri 1 Jul 2011 - 18:25

http://tndawa.blogspot.com/2011/07/blog-post.html
ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன.

இவை ஆசியா வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை. இவை பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.

அரேபிய மக்களால் 160 க்கும் அதிகமான செல்லப் பெயர்களால் அழைக்கப்படும் இந்த

அதிசயப் பிராணியைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்

படைத்தவனைப் பறைசாற்றும் இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அதை திமிலாக்கிக் கொள்கிறது

(திமில் என்பது 45Kg எடை இருக்கும் அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்) எதற்காக என்றால் தேவை காலத்திற்காக உணவோ நீரோ கிடைக்காத வறட்சியான நேரத்தில் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும் உணவாகவும் மாற்றி கொள்கிறது

உணவோ நீரோ கிடைக்காத பட்சத்தில் கூட எந்த தேவையுமில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். குளிர்காலங்களில் ஆறு மாதம் வரை கூட நீர் குடிக்காமல் ஜீவிக்கும், நீர் கிடைத்தால் 100 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடங்களுக்குள் குடித்து விடும் (PUMP)

குடிக்கும் நீரை இரத்தத்தின் சிகப்பு அணுக்களில் ஏற்றி கொள்கிறது அதற்காக அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரிந்து இடமளிக்கிறது

குட்டி போட்டு பாலூட்டும் (மனிதன் உட்பட) மற்ற பிராணிகள் அனைத்திற்க்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும்

ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும் மனிதர்களுக்கு உடல் நீர் 12% குறைந்தாலே போதும் கதை முடிவுக்கு வந்து விடும் ஆனால் ஒட்டகம் 40% நீரை இழந்தால் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும்

குட்டி போட்டுப் பாலூட்டும் (மனிதன் உட்பட) பிராணிகளில் நீரிழப்பை தாங்கிக் கொள்வதில் ஒட்டகத்திற்கு நிகராக வேறு எதுவுமில்லை

நீரிழப்பினால் உடல் வறட்சி ஏற்படும் சமயத்தில் மற்ற பிராணிகளின் (மனிதன் உட்பட) இரத்தம் பாகு நிலைக்கு வந்து விடும் அதன் காரணத்தால் வாழ தேவையான இதமான சூட்டை தோலுக்கு அளிக்க முடியாமல் எகிறும் பிறகு சூட்டினால் வெடிப்பு மரணம் நிகழ்ந்துவிடும் (EXPLOSIVE HEAT DEATH)

ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அப்படி நேராது ஏனென்றால் உடல் திசுக்களில் உள்ள நீர் மட்டுமே குறையுமே தவிர அதன் இரத்தத்தில் நீர் அளவு குறையாமலிருக்கும்

நீரில்லாமல் வறட்சி ஏற்பட்டு நீண்ட இடைவேளிக்கு பிறகு நீர் குடித்தால் அது குறைந்த அளவாக இருந்தால் கூட மற்ற பிராணிகள் (மனிதன் உட்பட) நீர் போதை ஏற்பட்டு இறப்பு நிகழ்ந்து விடும் (WATER INTOXICATION) ஆனால் ஒட்டகம் வறட்ச்சிகு பிறகு 100 லிட்டர் குடிக்கும் ஆனால் சாகாது

அதன் உடல் சூடு 104 F டிகிரியை அடைய வேண்டும் அப்பொழுது தான் அதற்கு வியர்வையே வரும் (மனிதர்களுக்கு 98 F டிகிரி க்கு மேலே போனால் காய்ச்சல் என்று பெயர்) அதன் உடல் அளவிற்கு அதிகமான வியர்வை சுரப்பிகள் இருக்க வேண்டும்

ஆனால் மிகவும் குறைவாக இருப்பது ஒரு விசேஷம்

ஒட்டகத்திற்கு இருப்பது போல சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது நம்முடைய சிறுநீரில் அதிக தாது (உப்புகள்) கழிவுகள் 8 சதவீதமும் 92 சதவீதம் நீரும் இருக்கும்

ஆனால் ஒட்டகத்தின் சிறுநீரில் 40%க்கும் அதிகமாக கழிவும் குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைந்த நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது

மிகவும் குறைந்த அளவு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது ஒட்டகம் அதன் உடம்பில் புரோட்டீன் என்ற சத்து குறைய ஆரம்பித்தால் சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்துக் கொண்டு அதை புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றிவிடுகிறது அதனுடைய சிறுநீரகம்(MICROBIAL SYNTHESIS)

மற்ற பிராணிகளின் மலம் காய்வதற்கே இரண்டு நாட்கள் தேவைப்படும் ஒட்டகத்தின் மலத்தை போட்ட ஒரு சில மணி நேரத்தில் பற்ற வைத்து விடலாம் என்று மிருக ஆராய்ச்சியாளர் டேவிட் ஆட்டன்பரோ கூருகிறார் அந்த அளவிற்கு நீரே கலக்காமல் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது

நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டு நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம் ஆனால் ஒட்டகத்தின் மூச்சில் ஈரம் மிகவும் குறைவாக இருக்கும் ஏனென்றால் மற்ற எதற்கும் இல்லாத விசேஷ மூக்கு அமைப்பு தான் காரணம்

அதன் மூக்கிற்குள் அமைந்திருக்கும் அடுக்கடுக்கான திசு அமைப்புகள் அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தின் மூன்றில் இரண்டு பகுதியை வெளியேற்ற விடாமல் தடுத்து விடுகிறது

மேலும் அதன் மூக்கிலிருந்து வழியும் சளியைக் கூட அதன் மூக்கின் அமைப்பு உதட்டின் மேல் வெடிப்பின் வழியாக மீண்டும் வாய்க்குள் அனுப்பிவிடுகின்றது பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை மோப்ப சக்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு

கடுமையான வெப்ப காலங்களில் உண்பதை குறைத்துக் கொண்டு உடம்பை இதமாக வைத்துக்கொள்கிறது

நிழல் கிடைத்தால் உடனே பயன்படுத்திக் கொள்ளும் நிழல் இல்லையென்றால் சூரியனை நோக்கி உடம்பை வைத்துக் கொள்ளும் ஏனென்றால் குறைவான வெயில் மட்டும் அதன் உடம்பில் படும்படியாக அதன் உடம்பே அதற்க்கு நிழலை ஏற்படுத்திவிடுகிறது

அதற்கு காரணம் நீண்ட முட்டை வடிவமான் அதன் உடல் அமைப்பு ஆகும்

அதன் நீண்ட உயரமான கால்கள் அதன் உடலை உயரே வைத்துக் கொள்கிறது ஏனென்றால் பாலைவனத்தின் மணல் பரப்புகளின் மேல் சூடு அதிகமாக படர்ந்திருக்கும்

இப்படியாக சுவாசம் சிறுநீர் வியர்வை எச்சில் என்று எதன் மூலமாகவும் ஒரு துளி நீரைக் கூட வீணாக்கி விடாமல் ஜாக்கிரதையாக இருக்கிறது ஒட்டகம்

மற்ற மிருகங்கள் குழம்புகளை கொண்டு நடக்கும் ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த இரு குழம்புகளை இணைக்கும் மெத்தென்ற பட்டையான சதை இணைப்பைக் கொண்டு நடக்கிறது (அதன் பாத அமைப்பிற்கு சரியான உதாரணம் SNOW SHOES ஆகும்)

அதன் இரு குழம்புகளும் விரித்து கொள்ளும் காரணத்தால் 680 Kgs வரை எடையுள்ள ஒட்டகம் 450 Kgs வரை சுமையை சுமந்துக் கொண்டு மணலின் கால்கள் புதைந்து விடாமல் ஓட முடிகிறது

குட்டி போட்டு பால் கொடுக்கும் ஜீவன்கள் அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் (ANKLE JOINT) மட்டும் இருக்கும்

ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று இணைப்புகள் இருக்கும் அதனால் தான் ஒட்டகம் எளிதாக பாலை மணலின் மேடு பள்ளங்களில் செல்லமுடிகிறது

மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரையிடுவது போல் மூக்கை மூடிக்கொள்ளும் வசதி ஒட்டகத்திற்கு உள்ளது

அதன் காதுகளின் உள்ளேயும் வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள் மணலோ தூசியோ காதுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது

அதன் இமையிலுள்ள நீண்ட முடிகள் மணலிருந்து கண்ணிற்கு பாதுகாப்பு அளிக்கிறது அதன் புருவத்திற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பு பாலை சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்ணைத் தாக்கி விடாமல் தடுத்து விடுகிறது (SUN CLASS)

கண்ணிற்கு கீழே உள்ள இமைப் போன்ற அமைப்பு கண்ணை மணல் தாக்கி விடாமல் பாதுகாப்பு அளிக்கிறது மேலும் பாலை சூரியன் வெளிச்சத்தை பாதியாக குறைத்து விடுகிறது

ஆனால் பாதையை மறைத்துவிடுவதில்லை அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்திருப்பதால் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்

பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரபிகள்

எங்கேயாவது தூரத்தில் உணவோ நீரோ கிடைக்கும் பாலைவெளியில் அதை சிரமமில்லாமல் தேடுவதற்கு அதனுடைய நீண்ட கழுத்து உதவுகிறது (12அடி உயரத்தில் தலை இருக்கும்)

ஒட்டகங்கள் அதிகமான அளவு பாலை தருகிறது ஒட்டகப்பாலில் அபரிதமான அளவு வைட்டமின் C உள்ளது

மற்ற மிருகங்கள் மேயும் பொழுது தாவரங்களில் உள்ள ஈரம் தரயில் சிதறும் அதைக்கூட வீணாக்கிவிடாமல் மேயும் தன்மை கொண்டது ஒட்டகம்

பாலைவனத்தில் அதிகமாக முட்செடிகள் தான் கிடைக்கும் அதை மேய்வதற்கான அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம்

எந்த அளவிற்கு எனறால் அதன் உதட்டில் பட்டு முட்களே உடைந்துவிடும் மேலும் விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது

மணிக்கு 5 கி.மீ வேகத்தில் ஒரு நாளைக்கு 40 கி.மீ பிரயாணம் செய்யும்

இவ்வாரு தனது உடல் அமைப்பு அதன் செயல்பாடு அனைத்தும் அற்புதமானதாக கொண்ட இந்த ஒட்டகம் தானாகவே பரிணாம வளர்ச்சியின் மூலம் இதை பெற்றுக் கொண்டதா அல்லது இறைவனின் வல்லமையா என்று சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்

திரு-குர்-ஆன் 88வது அத்தியாயம் 17வது வசனம் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்கவேண்டாமா ? என்று நம்மை பார்த்து கேட்கிறது இந்த கேள்வியிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினை பல பல சிந்திப்போம்…..செயல்படுவோம்……வெற்றிபெருவோம்….. இன்ஷாஅல்லாஹ்...

இந்த கட்டூரையின் ஒட்டகம் பற்றிய அறிவியல் உண்மைகளை தொகுத்துக் கொடுத்த சகோ.அதிரை ஃபாருக் அவர்களுக்கு எமது இனையதளத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..!!!

http://tndawa.blogspot.com/2011/07/blog-post.html



மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  599303 ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  599303 ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  599303
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 1 Jul 2011 - 18:30

ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும் மனிதர்களுக்கு உடல் நீர் 12% குறைந்தாலே போதும் கதை முடிவுக்கு வந்து விடும் ஆனால் ஒட்டகம் 40% நீரை இழந்தால் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும்

ஆனால் பாதையை மறைத்துவிடுவதில்லை அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்திருப்பதால் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்

மற்ற மிருகங்கள் மேயும் பொழுது தாவரங்களில் உள்ள ஈரம் தரயில் சிதறும் அதைக்கூட வீணாக்கிவிடாமல் மேயும் தன்மை கொண்டது ஒட்டகம்

பாருங்களேன், எவ்வளவு விஷயம் இருக்கு இந்த மிருகத்துக்கிட்ட..
பகிர்வுக்கு நன்றி மொஹமட்...

ஆனா, ரொம்ப நீண்ட கட்டுரை ...
நா வேகமா தமிழ் படிப்பேனே....

ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
http://www.tndawa.blogspot.com

Postமுஹம்மத் Fri 1 Jul 2011 - 18:35

நன்றி சகோதரி தமிழை இவ்வளவு வேகமாக படிக்கும் உங்கள் திறமையை பாராட்டுகிறேன் ! ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  677196 இதை இரண்டு பதிவாக கொடுத்தால் தொடர்ச்சி கிடைக்காது அதனால் தான் முழுமையான நீண்ட கட்டூரையாக கொடுத்தேன்



மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  599303 ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  599303 ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  599303
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 1 Jul 2011 - 18:37

mmohammed wrote:நன்றி சகோதரி தமிழை இவ்வளவு வேகமாக படிக்கும் உங்கள் திறமையை பாராட்டுகிறேன் ! ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  677196 இதை இரண்டு பதிவாக கொடுத்தால் தொடர்ச்சி கிடைக்காது அதனால் தான் முழுமையான நீண்ட கட்டூரையாக கொடுத்தேன்

புதிய தகவல்கள் நிறைய இருந்தது....
நன்றி சகோ....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
http://www.tndawa.blogspot.com

Postமுஹம்மத் Fri 1 Jul 2011 - 18:42

நன்றி சகோதரி !



மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  599303 ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  599303 ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  599303
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 1 Jul 2011 - 18:44

உமா wrote:
ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும் மனிதர்களுக்கு உடல் நீர் 12% குறைந்தாலே போதும் கதை முடிவுக்கு வந்து விடும் ஆனால் ஒட்டகம் 40% நீரை இழந்தால் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும்

ஆனால் பாதையை மறைத்துவிடுவதில்லை அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்திருப்பதால் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்

மற்ற மிருகங்கள் மேயும் பொழுது தாவரங்களில் உள்ள ஈரம் தரயில் சிதறும் அதைக்கூட வீணாக்கிவிடாமல் மேயும் தன்மை கொண்டது ஒட்டகம்

பாருங்களேன், எவ்வளவு விஷயம் இருக்கு இந்த மிருகத்துக்கிட்ட..
பகிர்வுக்கு நன்றி மொஹமட்...

ஆனா, ரொம்ப நீண்ட கட்டுரை ...
நா வேகமா தமிழ் படிப்பேனே....

ஜாலி
தமிழ பாக்காதானே தெரியும் உமா படிக்கவும் தெரியுமா சொல்லவே இல்ல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 1 Jul 2011 - 19:24

ஜாஹீதாபானு wrote:
ஜாலி
தமிழ பாக்காதானே தெரியும் உமா படிக்கவும் தெரியுமா சொல்லவே இல்ல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி [/quote]

நா தமிழில் 85 மதிப்பெண்கள்....
தமிழை படிப்பேன், எழ்துவேன், ரசிப்பேன்....
அவ்வளவு பிடிக்கும், ஆனால், அலுவலகத்தில் ஆங்கிலம் பேசினால் தான் மதிக்குறாங்க....
சோகம் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
http://www.tndawa.blogspot.com

Postமுஹம்மத் Mon 4 Jul 2011 - 0:00

ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  102564 ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  102564 ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  102564



மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  599303 ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  599303 ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !  599303
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக