புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10 
91 Posts - 61%
heezulia
இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10 
283 Posts - 45%
heezulia
இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கணச் சுருக்கம்


   
   

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:00 am

First topic message reminder :

இலக்கணச் சுருக்கம் - ஆறுமுகநாவலர்


முதலாவது: எழுத்ததிகாரம்

1.1. எழுத்தியல்

இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.
-----

2. அந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்றதிதிகாரங்களாக வகுக்கப்படும்.

எழுத்துக்களின் பெயர்
3. எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்
-----

4. அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.
-----

5. உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.
-----

6. உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும்.
-----

7. குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.
-----

8. நெட்டெழுத்துக்கள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்
-----

9. மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும்.
இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.
-----

10. மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.
-----

11. வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம்.
இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.
-----

12. மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம்.
இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.
-----

13. இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம்.
இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.
-----

14. அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம். உதாரணம்.
அவன், இவன், உவன்,
அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்.
-----

15.எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம்.உதாரணம்.
எவன், எக்கொற்றன்
கொற்றான, கொற்றனோ
ஏவன், கொற்றனே
யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம்
-----

16. அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம். இடையெழுத்தாறும். ஓரினமாகும்; அவை இவ்விரண்டோரினமாகாவாம்.
-----

17. உயிர் மெய்யெழுத்துக்களாவன. புன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.

அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.

உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

ஊயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
-----

18. ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும்.
உதாரணம். எஃகு, கஃசு, அஃது, பஃறி
-----

19. மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 14, 2009 3:58 am

தலைமையை மிக சரியாய் உறுதி படுத்துறிங்க சகோதரரே..



ஈகரை எத்தனையோ வகையில் பயனுள்ளதாக இருந்தாலும், எழுதுபவர்கள் இலக்கணமும் அறிந்து கொள்ளல் என்பது, இன்னும் எழுதி சாதிக்க பயன்படுமென்று காட்டிய தொலைதூர பார்வை தான்.



நன்றி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:59 am

முற்று வினை

239. முற்று வினையாவது, பால் காட்டும் விகுதியோடு கூடி நிறைந்து நின்று பெயரைக் கொண்டு முடியும் வினையாம்.

இம்முற்றுவினை கொள்ளும் பெயர்களாவன் பொவுட் பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என்னும் அறுவகைப் பெயருமாம்.

உதாரணம்.
செய்தான் சாத்தன் நல்லன் சாத்தன்
குளிர்ந்தது நிலம் நல்லது நிலம்
வந்தது கார் நல்லது கார்
குவிந்தது கை நல்லதுகை
பரந்தது பசப்பு நல்லது பசப்பு
ஒழிந்தது பிறப்பு நல்லது பிறப்பு


தேர்வு வினாக்கள்

239. முற்று வினையாவது யாது?
முற்று வினை கொள்ளும் பெயர்களாவன் எவை?

---

படர்க்கை வினைமுற்று


240. படர்க்கை வினைமுற்று, உயர்திணையாபாலொருமைப் படர்க்கை வினைமுற்றும், உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கை வினைமுற்றும், உயர்திணைப் பலர்பாற் படர்க்கை வினைமுற்றும், அஃறிணையொன்றன் பாற் படர்க்கை வினைமுற்றும், அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை வினைமுற்றும் என ஐந்து வகைப்படும்.
---

241. அன், ஆன், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.

உதாரணம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அவன்
நடந்தனன்
நடந்தான் நடக்கின்றனன்
நடக்கின்றான் நடப்பன்
நடப்பான் குழையன்
குழையான்
---

242. து, று, என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுமாம்.

உதாரணம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அவள்
நடந்தனள்
நடந்தாள் நடக்கின்றனள்
நடக்கின்றாள் நடப்பள்
நடப்பாள் குழையள்
குழையாள்
----

243. அர், ஆர் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், உயர்திணைப் பலர்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுமாம்.

உதாரணம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அவர்
நடந்தனர்
நடந்தார் நடக்கின்றனர்
நடக்கின்றார் நடப்பர்
நடப்பார் குழையர்
குழையார்


செய்யுளிலே பலர்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுக்கு, இவ்விகுதிகளின்றி, ப, மார் என்னம் விகுதிகளும் வரும். அவை இடைநிலையின்றித் தாமே எதிர் காலங் காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.

உதாரணம்.
நடப்ப நடமார் - அவர்
இவ்விரண்டற்கும் நடப்பார் என்பது பொருள்.
---

244. து, று என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் அஃறிணையொன்றன் பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம். இவற்றுள், றுவ்விகுதி, இறந்தகால விடைநிலையோடன்றி, நிகழ்கால வெதிர்காலவிடைநிலைகளோடு கூடி வராது.

உதாரணம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அது
நடந்தது
கூயிற்று நடக்கின்றது
---- நடப்பது
--- குழையது
அற்று

றுவ்விகுதி, வந்தன்று, உண்டன்று, சென்றன்று எனத்தடற வொற்றிடைநிலைகளின் முன்னும், புக்கன்று விட்டன்று, பெற்றன்று, என விகாரப்படடிறந்நகாலங் காட்டுங் கு, டு, று வீற்றுப் பகுதிகளின் முன்னும், அன்சாரியை பெற்று வரும். இவை, முறையே, வந்தது, உண்டது, சென்றது, புக்கது, விட்டது, பெற்றது எனப் பொருள்படும். றுவ் விகுதி, கூஙிற்று, ஓடிற்று என இன்னிடை நிலையின் முன் மாத்திரம், சாரியை பெறாது வரும்.

அற்று, இற்று, எற்று என்பவை, சுட்டினும் வினாவினும் வந்த வினைக்குறிப்பு முற்றுக்கள். இவை,

தந்தின்று என, றுவ்விகுதி தகரவிடைநிலையின் முன் இன்சாரியை பெற்றதன்றோ எனின்; அன்று. அது, தந்தன்று, என்னும் உடன்பாட்டு வினையை மறுத்தற்குத் தகரவிடைநிலைக்கும் றுவ் விகுதிக்கும் இடையே இல்லென்னும் எதிர்மறையிடை நிலையேற்று வந்த மறைவினையென்றறிக. தந்தின்று தந்ததில்லையென பொருள்படும்.

முறையே, அத்தன்மைத்து, இத்தன்மைத்து, எத்தன்மையித்து எனப் பொருள் படும்.

டுவ் விகுதியை இறுதியில் உடைய வினைச் சொல் அஃறிணையொன்றன்பாற் படர்க்கை குறிப்பு வினைமுற்றாம், இவ் விகுதி தெரிநிலைவினைமுற்றிற்கு இல்லை.

உதாரணம். பொருட்டு (ஸ்ரீ பொருளையுடையது)
ஆதிரைநாட்டு (ஸ்ரீ ஆதிரை நாளினிடத்தது)
குண்டுகட்டு (ஸ்ரீ ஆழமாகிய கண்ணையுடையது) அது
---

245. அ என்னம் விகுதியை இறுதியில் உடைய வினைச்சொல், அஃறிணைப் பலவின்பால் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுமா.

இவ்விகுதி, அன்சாரியை பெற்றும், பெறாதும், வரும்

உதாரணம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. அவை
நடந்தன
நடந்த நடக்கின்றன
நடக்கின்ற நடப்பன
நடப்ப கரியன
கரிய

ஆ என்னும் விகுதியை இறுதியில் உடைய வினைச் சொல், அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை, யெதிர்மறைத் தெரிநிலைவிணை முற்றாம். இவ்விகுதி குறிப்பு வினை முற்றிற்கு இல்லை.

உதாரணம்.

நடவா -- அவை

• நடப்ப என்னும் உயர்திணைப் பலர்பாற்படர்க்கைத் தெரிநிலை வினை முற்று, வேறு, நடப்ப என்னும் அஃறிணை பலவின்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும், வேறு, முன்னையது, நட என்னும் பகுதியும், பா என்னும், எதிர்கால பரர்பற்படர்க்கை விகுதியுமாகப், பகுக்கப்பட்டு வரும். பின்னையது, நட என்னும் பகுதியும், இப்பென்னும் எதிர்காலவிடைநிலையும், ஆ என்னும் பலவின்பாற் படர்க்கை விகுதியுமாக, பகுக்கப்பட்டு வரும்.

தேர்வு வினாக்கள்
240. படர்கை வினைமுற்று எத்தனை வகைப்படும்?
241. உயர்திணை யாண்பாலொருமை படர்க்கை விணைமுற்றுக்கள் எவை?
242. பெண்பாலொருமை படர்க்கை விணைமுற்றுக்கள் எவை?
243. உயர்திணை பலர்பாற் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை?
பலர்பாற் படர்க்கை தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்விகுதிகளின்றி வேறு விகுதிகளும் வருமோ?
244. அஃறிணையொன்றன்பாற் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை?
து, று, என்னும் இரு விகுதிகளும் முக்கால விடைநிலைகலோடும் வருமோ?
றுவ்விகுதி எவ்விடங்களின் எச்சாரியை பெற்று வரும்? எவ்விடத்துச் சாரியை பெறாது வரும்?
அஃறிணை யொன்றன்பாற் படர்க்கை வினைமுற்றுக்கு, து று என்னும் இரு விகுதிகளுமன்றி வேறு விகுதி இல்லையோ?
245. அஃறிணைப் பலவின் பாற் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை?
அஃறிணை பலவின்பாற் படர்க்கை வினைமுற்றுக்கு வேறு விகுதி இல்லையோ?

---



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:59 am

vidhyasagar wrote:தலைமையை மிக சரியாய் உறுதி படுத்துறிங்க சகோதரரே..



ஈகரை எத்தனையோ வகையில் பயனுள்ளதாக இருந்தாலும், எழுதுபவர்கள் இலக்கணமும் அறிந்து கொள்ளல் என்பது, இன்னும் எழுதி சாதிக்க பயன்படுமென்று காட்டிய தொலைதூர பார்வை தான்.



நன்றி!

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 4:00 am

முன்னிலை வினைமுற்று

249. முன்னிலை வினைமுற்று முன்னிலையொருமை வினைமுற்றும் முன்னிலைப் பன்மை வினைமுற்றுமென இரு வகைப்படும்.
---

250. ஐ ஆய் இ என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் முன்னிலையொருமைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.

உதாரணம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. நீ
உண்டனை
உண்டாய்
உண்டி உண்கின்றனை
உண்கின்றாய்
உண்ணாநின்றி உண்பை
உண்பாய்
சேறி குழையினை
குழையாய்
வில்லி

இகரவிகுதி எதிர்காலத்தை இடைநிலையின்றி தானே காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.

251. இர், ஈர், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய விசை; சொற்கள். முன்னிலைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.

உதாரணம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. நீர்
உண்டனிர்
உண்டீர் உண்கின்றனீர்
உண்கின்றீர் உண்பிர்
உண்பீர் குழையினிர்
குழையீர்

தேர்வு வினாக்கள்

249. முன்னிலை வினைமுற்று எத்தனை வகைப்படும்?
250. முன்னிலையொருமை வினைமுற்றக்கள் எவை? 251. முன்னிலை பனடமை வினைமுற்றுக்கள் எவை?

---

எதிர்மறை வினைமுற்று

252. எதிர்மறை குறிப்பு வினைமுற்றுக்கள், ஆல், இல் என்னும் எதிர்மறைப் பன்படியாக தோன்றிப் பால் காட்டும் விகுதிகளை பெற்று வருவனாவாம்.

உதாரணம்.

படர்க்கை - அல்லன், அல்லள், அல்லர் அன்று அல்ல அல்லனஸ
இலன் இலள் இலர் இன்று இல ஜ இல்லனஸ

தன்மை - அல்லேன் அல்லேம் இலேன் இலேம்

முன்னிலை - அல்லாய் அல்லீர் இலாய் இலீர்

இன்மை என்பது ஒரு பொருளினது உண்மைக்கும் ஒரு பொருளை உடமைக்கு மறுதலை உண்மை உளதாதல்.

உதாரணம்.

உண்மை இன்மை
இங்கே சாத்தனுளன்
இவனிடத்தே அறமுண்டு இங்கே சாத்தானிலன்
இவனிடத்தே அறமின்று

உடமை இன்மை
இவன் பொருளுடையன்
இது குணமுடையது இவன் பொருளிலன்
இது குணமில்லது

அன்மையென்பது ஒரு பொருள் சுட்டியதொரு பொருளாதற்கு மருதலை, பிரிது பொருளாதலைக் காட்டும். என்றபடி

உதாரணம்.

இவன் சாத்தனல்லன்: ஜ கொற்றன் ஸ
இஃதறனன்று: ஜ மறம் ஸ
---

253. எதிர்மறத் தெரிநிலை முற்றுக்கள், இல் ஆல், ஆ, என்னும் எதிர்மறையிடைநிலைகளோடு பால் காட்டும் விகுதிகளைப் பெற்று வருவனவாம். இவற்றுள் இல் இடைநிலை இறந்தகால இடைநிலையோடும் விகாரப்டிறந்த காலங்காட்டும் பகுதியோடும். நிகழ்கால விடைநிலையோடும். கூடி வரும். இனி இடைநிலையோடு கூடாது, இல் இடைநிலை குஞ்சாரியை பெற்றும் ஆல் இடைநிலை குஞ்சாரியை பெற்றும் பெறாதும் ஆகாரவிடைசாரியை பெறாதும் எதிர்காலம் உணர்த்தி வரும்.

உதாரணம்.

நடந்திலன், பெற்றிலன், நடக்கின்றிலன், நடக்கிலன், எ-ம். நடக்கலன், உண்ணலன், எ-ம். நடவான், எ-ம். வரும். மற்ற விகுதிகளோடு இப்படியேயொட்டிக் கொள்க.

இல், அல், ஆ, இவ் மூன்றையும் எதிர்மறை விகுதி என்பர் சிலர். எதிர்மறை இடைநிலையெனபதே சேனாவரையார். சிவஞான முனிவர். முதலியோர் துண்வு நடவா என்னும் அஃறிணைப்பலவின் பால் படர்க்கை வினைமுற்றில் ஆகாரம் வெரு விகுதி வேண்டாது தானே, எதிர்மறை பொருளோடு பலவின்பாற் படர்க்கைப் பொருளையுந் தந்து நிற்றலின், அங்கு மாத்திரம் விகுதியோ யென்றறிக.


அகரவிடைநிலை வருமெழுத்து உயிராயவழிக் கெடுதல் பதவியலிற் பெறப்பட்டது.

இங்ஙனமன்றி உடன்பாட்டு தெரிநிலை முற்றுக்களே ஆல் என்னும் பன்படியாக தோன்றிய எதிர்மறை சிறப்பு வினைக்குறிப்போடாயினும் இல்லை யென்னும் எதிர்மறைத்த தெரிநிலை வினைமுற்றுக்களாயும் வரும்.

உதாரணம்.
உண்டானல்லன், உண்டேனல்லன், உண்டாயல்லை, எ-ம். வந்தானில்லை, வந்தேனில்லை, வந்தாயில்லை, எ-ம். வரும்.

தேர்வு வினாக்கள்

252. எதிர்மறைத் குறிப்பு வினைமுற்றுக்கள் எவை? இன்மையென்பது என்னை?
அன்மை யென்பது என்னை?
253. எதிர்மறைத் தெரிநிலை வினைமுற்றுக்கள் எவை?
இவற்றுள் இல் இடைநிலை எப்படி வரும்? ஆல் இடைநிலை எப்படி வரும்?
அகரவிடைநிலை எப்படி வரும்?
எதிர்மறைத்தெரிநிலை வினைமுற்றுக்கள் இங்ஙனமன்றி, இன்னும் எங்ஙனம் வரும்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 4:02 am

முன்னிலை வினைமுற்று

249. முன்னிலை வினைமுற்று முன்னிலையொருமை வினைமுற்றும் முன்னிலைப் பன்மை வினைமுற்றுமென இரு வகைப்படும்.
---

250. ஐ ஆய் இ என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் முன்னிலையொருமைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.

உதாரணம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. நீ
உண்டனை
உண்டாய்
உண்டி உண்கின்றனை
உண்கின்றாய்
உண்ணாநின்றி உண்பை
உண்பாய்
சேறி குழையினை
குழையாய்
வில்லி

இகரவிகுதி எதிர்காலத்தை இடைநிலையின்றி தானே காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.

251. இர், ஈர், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய விசை; சொற்கள். முன்னிலைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.

உதாரணம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. நீர்
உண்டனிர்
உண்டீர் உண்கின்றனீர்
உண்கின்றீர் உண்பிர்
உண்பீர் குழையினிர்
குழையீர்

தேர்வு வினாக்கள்
249. முன்னிலை வினைமுற்று எத்தனை வகைப்படும்?
250. முன்னிலையொருமை வினைமுற்றக்கள் எவை? 251. முன்னிலை பனடமை வினைமுற்றுக்கள் எவை?

---

எதிர்மறை வினைமுற்று


252. எதிர்மறை குறிப்பு வினைமுற்றுக்கள், ஆல், இல் என்னும் எதிர்மறைப் பன்படியாக தோன்றிப் பால் காட்டும் விகுதிகளை பெற்று வருவனாவாம்.

உதாரணம்.

படர்க்கை - அல்லன், அல்லள், அல்லர் அன்று அல்ல அல்லனஸ
இலன் இலள் இலர் இன்று இல ஜ இல்லனஸ

தன்மை - அல்லேன் அல்லேம் இலேன் இலேம்

முன்னிலை - அல்லாய் அல்லீர் இலாய் இலீர்

இன்மை என்பது ஒரு பொருளினது உண்மைக்கும் ஒரு பொருளை உடமைக்கு மறுதலை உண்மை உளதாதல்.

உதாரணம்.

உண்மை இன்மை
இங்கே சாத்தனுளன்
இவனிடத்தே அறமுண்டு இங்கே சாத்தானிலன்
இவனிடத்தே அறமின்று

உடமை இன்மை
இவன் பொருளுடையன்
இது குணமுடையது இவன் பொருளிலன்
இது குணமில்லது

அன்மையென்பது ஒரு பொருள் சுட்டியதொரு பொருளாதற்கு மருதலை, பிரிது பொருளாதலைக் காட்டும். என்றபடி

உதாரணம்.

இவன் சாத்தனல்லன்: ஜ கொற்றன் ஸ
இஃதறனன்று: ஜ மறம் ஸ
---

253. எதிர்மறத் தெரிநிலை முற்றுக்கள், இல் ஆல், ஆ, என்னும் எதிர்மறையிடைநிலைகளோடு பால் காட்டும் விகுதிகளைப் பெற்று வருவனவாம். இவற்றுள் இல் இடைநிலை இறந்தகால இடைநிலையோடும் விகாரப்டிறந்த காலங்காட்டும் பகுதியோடும். நிகழ்கால விடைநிலையோடும். கூடி வரும். இனி இடைநிலையோடு கூடாது, இல் இடைநிலை குஞ்சாரியை பெற்றும் ஆல் இடைநிலை குஞ்சாரியை பெற்றும் பெறாதும் ஆகாரவிடைசாரியை பெறாதும் எதிர்காலம் உணர்த்தி வரும்.

உதாரணம்.

நடந்திலன், பெற்றிலன், நடக்கின்றிலன், நடக்கிலன், எ-ம். நடக்கலன், உண்ணலன், எ-ம். நடவான், எ-ம். வரும். மற்ற விகுதிகளோடு இப்படியேயொட்டிக் கொள்க.

இல், அல், ஆ, இவ் மூன்றையும் எதிர்மறை விகுதி என்பர் சிலர். எதிர்மறை இடைநிலையெனபதே சேனாவரையார். சிவஞான முனிவர். முதலியோர் துண்வு நடவா என்னும் அஃறிணைப்பலவின் பால் படர்க்கை வினைமுற்றில் ஆகாரம் வெரு விகுதி வேண்டாது தானே, எதிர்மறை பொருளோடு பலவின்பாற் படர்க்கைப் பொருளையுந் தந்து நிற்றலின், அங்கு மாத்திரம் விகுதியோ யென்றறிக.


அகரவிடைநிலை வருமெழுத்து உயிராயவழிக் கெடுதல் பதவியலிற் பெறப்பட்டது.

இங்ஙனமன்றி உடன்பாட்டு தெரிநிலை முற்றுக்களே ஆல் என்னும் பன்படியாக தோன்றிய எதிர்மறை சிறப்பு வினைக்குறிப்போடாயினும் இல்லை யென்னும் எதிர்மறைத்த தெரிநிலை வினைமுற்றுக்களாயும் வரும்.

உதாரணம்.
உண்டானல்லன், உண்டேனல்லன், உண்டாயல்லை, எ-ம். வந்தானில்லை, வந்தேனில்லை, வந்தாயில்லை, எ-ம். வரும்.

தேர்வு வினாக்கள்
252. எதிர்மறைத் குறிப்பு வினைமுற்றுக்கள் எவை? இன்மையென்பது என்னை?
அன்மை யென்பது என்னை?
253. எதிர்மறைத் தெரிநிலை வினைமுற்றுக்கள் எவை?
இவற்றுள் இல் இடைநிலை எப்படி வரும்? ஆல் இடைநிலை எப்படி வரும்?
அகரவிடைநிலை எப்படி வரும்?
எதிர்மறைத்தெரிநிலை வினைமுற்றுக்கள் இங்ஙனமன்றி, இன்னும் எங்ஙனம் வரும்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 4:03 am

செய்யுமென் முற்று


258. செய்யுமென்னும் வாய்ப்பாட்டுத் தெரிநலை வினைமுற்றுச் சொற்கள், படர்க்கையிடத்தனவாகிய ஐம்பால்களுக்குள்ளே பலர்பாலொழிந்த நான்கு பால்களுக்கும் பொதுவாக வரும்.

உதாரணம்.
அவண்ணும் அவளுண்ணும்
அதுவுண்ணும் அவையுண்ணும்

இம்முற்று வினைச் சொல்லில் உம் விகுதி நிகழ்காலமும் எதிர்காலமுங’ காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.
-----

தேர்வு வினா

258. செய்யுமென்னும் வாய்ப்பாட்டுத் தெரிநிலை முற்றுக்கள் எவ்வாறு பொதுப்பட வரும்?


பொதுவினைக் குறிப்பு


259. வேறு, இல்லை, உண்டு, என்னும் இம்மூன்று வினைக்குறிப்பு முற்றுச்சொற்களும், யார் என்னும் வினா வினைக்குறிப்பு முற்றுச் சொல்லும், இருதிணையம்பான் மூவிடங்கட்கும் பொதுவாகி வரும்.

உதாரணம்.

அவன்
அது
யாம் அவள்
அவை
நீ அவர்
யான்
நீர் வேறு, இல்லை, உண்டு, யார்

இல்லையென்பது ‘எஞ்ஞான்னுமில்’ எனக் கடைக் குறைந்து வருதலுமுண்டு.

அஃறிணையொருமைக்குரிய டுவ்விகுதி பெற்று நிற்கும் உண்டு என்னம் வினைக்குறிப்பு முற்றும் வேறே: விகுதியின்றிப் பொதுச் சொல்லாயே நிற்கும் இவ்வுண்டென்னும் வினைக்குறிப்பு முற்றும் வேறே: முன்னையது இன்று என்பதற்கு மறுதலை: பின்னையது இல் என்பதற்கு மறுதலை: பின்னையது இல் என்பதற்கு மறுதலை.

யார் என வகரங்கெட்டு நிற்கும் பலாபாற் படர்க்கை வினைப் பெயரும் வேறே: யார் என்னும் இவ் வினா வினைக்குறிப்பும் வேறே: யார் என்னும் இவ் வினா வினைக்குறிப்பும் வேறே.

யாரென்பது ஆரென விகாரப்பட்டும் வரும்.

260. எவன் என்னும் வினைவினைக் குறிப்பு மற்றுச் சொல் அஃறிணையிருபாற்கும் பொதுவாகி வரும்.

உ-ம்
அஃதெவன் அவையெவன்.

எவன் என்னும் உயர்திணையாண்பாற் படர்க்கை வினாப்பெயரும் வேறே: எவன் என்னும் இவ்வினா வினைக்குறிப்பும் வேறே.

எவன் என்பது என், என்ன, என்னை, என விகாரப்பட்டும் வரும்.
-----

தேர்வு வினாக்கள்

259. வேறு, இல்லை, உண்டு என்னும் இம்மூன்று வினைக்குறிப்பு முற்றுச் சொற்களும், யார், என்னம் வினாவினைக் குறிப்புமுற்றுச் சொல்லும், எவ்வாறு பொதுப்பட வரும்?
260. எவன் என்னும் வினா வினைக் குறிப்பு முற்றுச் சொல் எவ்வாறு பொதுப்பட வரும்?


பெயரெச்சம்

261. பெயரெச்சமாவது, பாhல் காட்டும். முற்று விகுதி பெறாத குறைச்சொல்லாய்ப் பெயரைக் கொண்டு முடியும் வினையாம்.

இப்பெயரெச்சங் கொள்ளும் பெயர்களாவன், வினை, முதற்பெயர், கருவிப் பெயர், இடப்பெயர், தொழிற்பெயர், காலப்பெயர், செயற்பாட்டுப் பொருட்பெயர் என்னும் அறவகை பெயருமாம்

உதாரணம்.

உண்டசாத்தன் - வினைமுதற்பெயர்
உண்ட கலம் - கருவிப்பெயர்
உண்ட வீடு - இடப்பெயர்
உண்ட ஊண் - தொழிற்பெயர்
உண்ட நாள் - காலப்பெயர்
உண்ட சோறு - செயப்படு பொருட்பெயர்

262. தெரிநிலைவினைப் பெயரெச்சம், செய்த வென்னும் வாய்ப்பாட்டிறந்தபாலப்பெயரெச்சம் எனவும் செய்கின்ற வென்னும் வாய்ப்பாட்டு நிகழ்காலப் பெயரெச்சம் எனவும் செய்யும் என்னும் வாய்ப்பட்டெதிர்காலப் பெயரெச்சம் எனவும் மூவகைப்படும்.

263. செய்தவென்னும் வாய்ப்பாட்டிறந்த காம், பெயரெச்சங்கள் இறந்த காலவிடைநிiயோடு வகாரப்பட்டிறந்தகாலங் காட்டும் தகுதியோடும் அகர விகுதி பெற்று வருவனவாம்.

உதாரணம்.
வந்த குதிரை போய குதிரை
உண்ட குதிரை புக்க குதிரை
தின்ற குதிரை விட்ட குதிரை
வருந்தின குதிரை உற்ற குதிரை

264. செய்கின்ற வென்னும் வாய்ப்பாட்டு நிகழ்கால பெயரெச்சங்கள், நிகழ்கால, விடைநிலையோடு அகரவிகுதி பெற்று வருவனவாம்.

உதாரணம்.
உண்ணாநின்ற குதிரை உண்கின்ற குதிரை
உண்கிற குதிரை

266. எதிர்மறைத் தெரிநிலை வினைப்பெயரெச்சங்கள், எதிர்மறை ஆகாரவிடைநிலையுந் தகரவெழுத்துப் போற்றோடு கூடிய அகரவிகுதியும் பெற்று வருவனவாம்.

செய்யாத என்பது செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் மூன்றற்கும் எதிர்மறையாம். இவ்வெதிர்மறை பெயரெச்சம் செய்கலாத, செய்கிலாத, என அல், இல் என்னும் இடைநிலைகளை ஆகாரச் சாரியையோடு பெற்று வரும்.

உதாரணம்.
உண்ணாத குதிரை நடவாத குதிரை

உண்ணாக் குதிரை, வடவாக் குதிரை என ஈற்றுயிர் மெய்கெட்டும் வரும்.

267. குறிப்பு வினைப்பெயரெச்சங்கள் அகரவிகுதி பெற்று வருவனவாம்.

உதாரணம்.
கரிய குதிரை, பெரிய களிறு, நெடியவில்
செய்ய மலர், தீய சொல், புதிய நட்கு
உள்ளபொருள் முகத்த யானை படத்த பாம்பு

268. எதிர்மறைத் குறிப்பு வினைப்பெயரெச்சங்கள் அல், இல. என்னம் பன்படியாகத் தோன்றி ஆகாரசச் சாரியையுந் தகரவெழுத்து பெற்றேடு கூடிய அகர விபுதியும் பெற்று வருவனவாம்.

உதாரணம்.
அல்லாத குதிரை இல்லாத பொருள்

அல்லாக்குதிரை இல்லாப் பொருள் என ஈற்றுயிர் மெய் கெட்டு வரும்.

269. பெயரெச்சங்கள் இருதணையைம்பான் மூவிடங் கடகும் பொதுவாகவரும்.

உதாரணம்.
உண்ட யான், யாம்
நீ நீர்
அவன், அவள், அவர், அது, அவை
------

தேர்வு வினாக்கள்
261. பெயரெச்சமாவது யாது? பெயரெச்சம் கொள்ளும் பெயர்கள் எவை?
262. தெரிநிலை வினைப்பெயரெச்சம், எத்தனை வகைப்படும் எவை?
263. செய்தவென்னும் வாய்ப்பாட்டிறந்தகாலப் பெயரெச்சங்கள் எவை?
264. செய்கின்ற வென்னும் வாய்ப்பாட்டு நிகழ்காலப் பெயரெச்சங்கள் எவை?
265. செய்யுமென்னும் வாய்ப்பாட்டெதிர்காலப் பெயரெச்சங்கள் எவை?
266. எதிர்மறைத் தெரிநிலை வினைப் பெயரெச்சங்கள் எவை? செய்யாத வென்பது எவற்றிற்கு எதிர்மறை? இவ்வெதிர்மறைப் பெயரெச்சம் இன்னும் இங்ஙனம் வரும்?
267. குறிப்பு வினை பெயரெச்சங்கள் எவை?
268. எதிர்மறைக் குறிப்பு வினைப் பெயரெச்சங்கள் எவை?
269. பெயரெச்சங்கள் எவ்வாறு பொதுப்பட வரும்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 4:04 am

வினையெச்சம்

270. வினையெச்சமாவது பால் காட்டும் முற்றுவிகுதி பெறாத குறைசெ சொல்லாய் வினைச்சொல்லைக் கொண்டு முடியும் வினையாம்.

இவ்வினையெச்சங் கொள்ளும் வினைச்சொற்களாவன உடன்பாடும் எதிர்மறையும் பற்றிவரும் தெரிநிலையுங் குறிப்புமாகிய வினைமுற்றும் பெயரெச்சமும், வினையெச்சமும், வினையாலணையும், பெயரும், தொழிற்பெயரும் ஆகிய ஐ வகை வினைச்சொற்களுமாம்.

உதாரணம்.
1. தெரிநிலைவினையெச்சந் தெரிநிலை வினை விகற்பங்கள் கொள்ளுதற்கு

உதாரணம்.

உண்டு வந்தான்; உண்டுவாரான் - தெரிநிலை வினைமுற்று
உண்டுவந்த் உண்டுவராத - தெரிநிலைப்பெயரெச்சம்
உண்டுவந்து; உண்டுவராது - தெரிநிலை வினையெச்சம்
உண்டுவந்தவன்; உண்டு வாராதவன் - தெரிநிலை வினையாலணையும் பெயர்
உண்டுவருதல்; உண்டுவராதவன் - தெரிநிலைத் தொழிற் பெயர்

2. தெரிநிலை வினையெச்சங் குறிப்புவினை விகப்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-

கற்றுல்லவன் - குறிப்புவினைமுற்று
கற்றுவல்ல - குறிப்பு வினைப்பெயரெச்சம்
கற்றுவல்லவன் - குறிப்புவினையாலனையும் பெயர்
கற்று வன்மை - குறிப்புத் தொழிற்பெயர்

3. குறிப்பு வினையெச்சந் தெரிநிலைவினை விகப்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-

அறமன்றிச் செய்தான்; அறமன்றிச் செய்யான் - தெரிவினைமுற்று
அறமன்றிச் செய்த் அறமன்றிச் செய்யாத - தெரிபெயரெச்சம்
அறமன்றிச் செய்து; அறமன்றிச் செய்யாமை - தெரிதொழிற் பெயர்

4. குறிப்பு வினையெச்சங் குறிப்பு வினையெச்சங் குறிப்பு வினை விகப்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-

அறமன்றியிலன் - குறிப்பு வினைமுற்று
அறமன்றியில்லாது - குறிப்பு வினைப்பெயரெச்சம்
அறமன்றியில்லாது - குறிப்பு வினையெச்சம்
அறமன்யில்லாதவன் - குறிப்பு வினையாலணையும் பெயர்
அறமன்யின்மை - குறிப்புத் தொழிற்பெயர்

271. பதவியலிற் கூறப்பட்ட வினையெச்ச விகுதிகளும் உகர விகுதி இறந்தகால விடைநிலையோடு கூடிவரும் என விகுதி, இறந்தகாலவிடைநிலையோடும் விகாரப்பட்டிருந்த காலங்காட்டும் பகுதியோடும் கூடிவரும். மற்றை விகுதிதி யெல்லாம் இடைநிலையின்றித் தாமே காலங்காட்டும்.

272. தெரிநிலை வினையெச்சங்கள் செய்து என்னும் வாய்ப்பாட்டிறந்த கால வினையெச்சம் எனவும், செயவென்னும் வாய்ப்பாட்டு முகலத்திற்குமுரிய வினையெச்சம் எனவும் செயின் என்னும் வாய்பாட்டெதிர்கால வினையெச்சம் எனவும் மூவகைப்படும்.

273. செய்து என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள், உ, இ, ய் என்னும் விகுதிகளை இறுதியிற் பெற்று தன் கருத்தாவின் வினையையே கொண்டு முடிவனவாம்.

இங்கே இறந்தகாலம் என்பது முடிக்கும் சொல்லால் உயரப்படும் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படும். தொழில்முன்னிகழ்தலை.

(உதாரணம்)

உகரவிகுதி நடந்து
உண்டு
சென்று தேர்ந்து
கேட்டு
கற்று வந்தான்
இகரவிகுதி
யகரவிகுதி ஆடி
ஆய் எண்ணி
போய் வந்தான்

இங்கே வினையெச்சத்தால்உயரப்படுந் தொழிலை நிகழ்த்தினா வினைமுதலே முடிக்குஞ் சொல்லால் உணரப்படும் தொழிற்கு வினைமுதலாகக் காண்க.

விகுதி விகரப்பட்டு, விகுதிபெறாது சில பகுதியே விகாரப்படும் இச்செய்தெனடவாய்ப்பட்டிறந்த கால வினையெச்சங்களாய் வரும்.

தழுவிக்கொண்டான்
மருவிவந்தான் தழீஇக்கொண்டான்
மாரிஇவந்தான் விகுதி விகாரப் பட்டு வந்தன
புகு
விடு
பெறு புக்கு வந்தான்
விட்டு வந்தான்
பெற்று வந்தான் விகுதி பெறாது சில பகுதியே விகாரப்பட்டு வந்தன

இச்செய்னெச்சம், ஒரோவிடத்து காரப் பொருட்டாயும் வரும்.

உதாரணம்.
கற்றறிந்தான்
அறம் செய்த புகழ்பெற்றான்

செய்யுளிலே இச்செய்தென்வாய்பபாட் டிறந்தகால வினையெச்சங்கள், பு, ஆ. ஊ, என்னும் விகுதிகளைப் பெற்றும் வரும்.

உதாரணம்.

புகரவிகுதி
ஆவிகுதி
ஊவிகுதி உண்குபு
உண்ணா
உண்ணூ தேடுபு
தேடா
தேடு வந்தான்

274. செய என்னும் வாயடப்பாட்டு முக்காலத்திற்கும் உரிய வினை யெச்சம் அகரவிகுதியை இறுதியிற் பெற்றுத் தான் கருத்தாவின் வினையையும் பிறகருத்தாவின் வினையையும் கொண்டு முடிவதாம்.

(3) செய வெண் வாய்ப்பாட்டு வினையெச்சம் இறந்த காலத்திலே காரணப் பொருளில் வந்து தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையும் கொண்டு முடியும்.

காரணப் பொருளில் வருதலாவது முடிக்குந் சொல்லால் உணரப்படும் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படுந் தொழில் காரணம் என்பது பட வருதல்.

உதாரணம்.
மழை பெய்ய புகழ்பெற்றது - தன்கருத்தாவின் பெயர்
மழை பெய்ய நெல் விளைந்நது - பிறகருத்தாவின் வினை
மழை பெய்ய புகழ்பெற்றது என்றவிடத்து வினையெச்சந்தால் உணரப்படும் தொழிலை நிகழ்த்தின வினைமுதலே முடிக்குஞ் சொல்லால் உணரப்படும் தொழிற்கு வினைமுதலாதல் காண்க.

மழைபெய்ய நெல்லு விளைந்தது எனற விடத்து வினையெச்சத் தால் உணரப்படும் தொழிலை நிகழ்த்தின வினைமுதலும் வேறே: முடிக்குஞ் சொல்லால் உணலப்படும் தொழிலை நிஷைகழ்த்தின வினைமுதலும் வேறேயாதல் காண்க.

செய்யுளிலே இச் செயன்வென்வாய்ப்பாட்டிறந்தகால வினையெச்சம் என என்னும் விகுதியை பெற்றும் வரும்.

உதாரணம்.
மழை பெயடதெனப் புகழபெற்றது - தன்கருத்தாவின் பெயர்
மழை பெய்தென நெல் விளைந்நது - பிறகருத்தாவின் வினை



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 4:06 am

(4) செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம் எதிர்காலத்திலே கரியப் பொருளில வந்து தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையும் கொண்டு முடியும்.

காரியப் பொருளில் வருதலாவது முடிக்குஞ் சொல்லால் உணலப்படுந் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படும் தொழில். காரியம் என்பது பட வருதல்.

உதாரணம்.

தானுண்ணவந்தான் - தன்கருத்தாவின் பெயர்
யானுண்ணத்தந்தான் - பிறகருத்தாவின் வினை

இச்செயவென்வாய்ப்பாட் டெதிர்கால வினையெச்சம் கு என்னும் விகுதியைப் பெற்றும் வரும்.

உதாரணம்.

தானுணற்கு வந்தான் - தன்கருத்தாவின் பெயர்
யானுணற்குத் தந்தான் - பிறகருத்தாவின் வினை

உணணும்படி, உண்ணும் பொருட்டு, உண்ணும் வண்ணம், உண்ணும் வகை என்பன உணற்கென்னும் பொருள்பட வரும்.

செய்யுளிலே, இச்செயவென்வாய்ப்பாட் டெதிர்கால வினையெச்சம், இய, இயர், வான், பான், பாக்கு என்னும் விகுதிகளைப் பெற்றும் வரும். இவற்றுள் முன்னைய இரண்டு விகுதி பெற்றவை தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின்வினையையுங் கொண்டு முடியும்; பின்னைய மூன்று விகுதி பெற்றவை தன் கருத்தாவின் வினையைக் கொண்டு முடியும்.



உதாரணம்.

இயவிகுதி நீரிவைகாணியவம்மின் - தன் கருத்தாவின் வினை
அவர் காணிய வம்மின் - பிற கருத்தாவின் வினை
இயர்விகுதி நாமுண்ணியர்வந்தேம் - தன் கருத்தாவின் வினை
நீருண்ணியர் வழங்குவேம் - பிற கருத்தாவின் வினை
வான்விகுதி - தான் கொல்வான் சென்றான்
பான்விகுதி - தானலைப்பான் புகுந்தான்
பாக்குவிகுதி - தான்றருபாக்கு வருவான் தன் கருத்தாவின் வினை

(5) செயவென்வாய்ப்பாட்டு வினையெச்சம், தனக்கென நியமமாக உரிய நிகழ்காலத்திலே, இது நிகழா நிற்க இது நிகழ்ந்தது என்னும் பொருள்பட வந்து, பிறகருத்தாவின் வினையைக் கொண்டு முடியும்.

இங்கே நிகழ்காலமென்றது, முடிக்குஞ் சொல்லால் உணரப்படுந் தொழிலோடு வினையெச்சத்தால் உயரப்படுந் தொழில் முற்பிற் பாடின்றி உடனிகழ்தலை.

உதாரணம்.
சூரியனுதிக்க வந்தான் - பிறகருத்தாவின் வினை

275.செயின் என்னும் வாய்ப்பாட்டு எதிர்கால வினையெச்சங்கள், இன், ஆல், கால், கடை, வழி, இடத்து, உம் என்னும் விகுதிகளை இறுதியிற் பெற்றுக் காரணப்பொருளில் வந்து, தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையும் பிறகருத்தாவின் வினையையும் கொண்டு முடிவனவாம்.

இவ்வினையெச்சம், எதிர்காலச் சொல்லையே முடிக்குஞ் சொல்லாகக் கொள்ளும். இவ்வினையெச்சத்தால் உணரப்படுந் தொழில், ஒருதலையாகவே சொல்லுவான். சொற்குப் பின்னிகழ்வதாயும், முடிக்குஞ்சொல்லால் உணரப்படுந் தொழிற்குக் காரணமாகமுன்னிகழ்வதாயும் உள்ளது; ஆதலால், இவ்வினையெச்சம் எதிhடகாலம் பற்றிக் காரணப்பொருளில் வருவதாயிற்று. ஒருதலை - துணிவு.

(உதாரணம்)

இன் யாணுண்ணி னுவப்பேன்
உண்ணிற் பசிதீரும் தன்கரு பிறகரு
ஆல் நீ வந்தால் வாழ்வாய்
நீ வந்தான் யான் வாழ்வேன் தன்கரு பிறகரு
கால் நீ கற்றக்காலுவப்பாய்
உண்டக்காற் பசிதீரும் தன்கரு பிறகரு
கடை நல்வினை தானுற்றக் கடையுதவும்
நல்வினை தானுற்றக்கடைத் தீவினை வராது தன்கரு பிறகரு
வழி நல்வினை தானுற்ற வழியுதவும்
நல்வினை தானுற்றவழித் தீவினை வராது தன்கரு பிறகரு
இடத்து நல்வினை தானுற்றவிடத்துதவும்
நல்வினை தானுற்றவிடத்துத் தீவினைவராது தன்கரு பிறகரு
உம் உண்டலு முவப்பாய்
உண்டலும் பசி தீரும் தன்கரு பிறகரு


வந்தால் என்பது துச்சாரியை பெற்றது. உண்டக்கால் என்பது துச்சாரியையும் அகரச்சாரியையும் பெற்றது. உற்றக்கால், உற்றக்கடை, உற்றவழி, உற்றவிடத்து என்பன அகரச்சாரியை பெற்றன. உண்டலும் என்பது துச்சாரியையும் அல்லுச் சாரியையும் பெற்றது.

உண்பானேல் உண்பானெனின், உண்பானாயின், உண்பானேனும் என, முற்று வினைகள், ஏல், எனின், ஆயின், ஏனும், என்னும் நான்கனோடும் இயைந்து, ஒரு சொன்னீர் மைப்பட்டுச் செயின் என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சங்களாய் வருமெனவும் அறிக.

276. எதிர்மறைத் தெரிநிலை வினையெச்சங்கள் எதிர்மறை ஆகாரவிடைநிலையோடு உ, மல், மே, மை, மைக்கு, கால், கடை, வழி, இடத்து என்னும் விகுதிகளைப் பெற்று வருவனவாம்.

செய்யாது என்பது செய்து, செய்பு, செய்யா, செய்யூ என்பவற்றிற்கு, எதிர்மறையாம். செய்யாது என்பதிலே தகரம் எழுத்துப்பேறு. செய்யாது என்பது, செய்கலாது, செய்கிலாது என, அல் இல், என்னும் இடைநிலைகளை ஆகாரச்சாரியையோடு பெற்றும் வரும்.

செய்யாமல் என்து, செய என்பதற்கு எதிர்மறையாம்.

செய்யாமல், செய்யாமே, செய்யாமை, செய்யாமைக்கு என்னும் நான்கும், செயற்கு, செய்யிய, செய்யியர் என்பவற்றிற்கும், செயற்கு என்பது படவருஞ் செயவேனெச்சத்திற்கும் எதிர்மறையாம்.

செய்யாக்கால், செய்யாக்கடை, செய்யாவழி, செய்யாவிடத்து என்னும் நான்கும், செயின் என்பதற்கும், அப்பொருள்பட வருவனவாகிய செய்தால், செய்தக்கால், செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து என்பனவற்றிற்கும் எதிர்மறையாம்.

(உதாரணம்)

விதிவினை யெச்சம் மறைவினையெச்சம்
உண்டு வந்தான் உண்ணாது வந்தான்
மழை பெய்யப் பயிர் தழைத்தது மழை பெய்யாமற் பயிர் வாடிற்று
இங்கே பெய்யாமல் என்பதற்கு
பெய்யாமையால் என்பது பொருள்
அவன் காணவந்தேன்
அவன் காணாமல் வந்தேன்.
இங்கே காணாமல் என்பதற்குக்
காணாதிருக்க என்பது பொருள்.
நீ வீடெய்தற்கு வணங்கு
நீ நரகெய்தாமல் வணங்கு
நீ நரகெய்தாமே வணங்கு
நீ நரகெய்தாமை வணங்கு
நீ நரகெய்தாமைக்கு வணங்கு
இஙகே எய்தாமல் என்பது முதலிய
நான்கிற்கும் எய்தாதொழியும் பொருட்டு
என்பது பொருள்
யானுணற்கு விதித்தான் யானுண்ணாமல் விதித்தான்
யானுண்ணாமே விதித்தான்
யானுண்ணாமை விதித்தான்
யானுண்ணாமைக்கு விதித்தான்
இங்கே உண்ணாமல் என்பது முதலிய
நான்கிற்கும் எய்தாதொழியும் பொருட்டு
என்பது பொருள்
யானுண்ணின்
மகிழ்வென் யானும்ணாக்கான் மகிழேன்
யானும்ணாக்கடை மகிழேன்
யானும்ணாவழி மகிழேன்
யானும்ணாவிடத்து மகிழேன்
இங்கே உண்ணாக்கால் என்பது முதலிய
நாந்கிற்கும் உண்ணாதொழியின் என்பது
பொருள்
உண்ணிற்
பசிதீரும் உண்ணாக்காற் பசி தீராது
உண்ணாக்கடை பசி தீராது
உண்ணாவழிப் பசி தீராது
உண்ணாவிடத்து பசி தீராது



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 4:07 am

277. உடன்பாட்டுக் குறிப்பு வினையெச்சங்கள், பண்படியாகத் தோன்றி அகரவிகுதியைப் பெற்று வருவனவாம்.

உதாரணம்.
மெல்லப் பேசினான் சாலப்பல
பைய நடந்தான் உறக்கரிது
வலியப் புகுந்தான் மாணப் பெரிது

மெல்ல என்பது, ல, ளவொற்றுமைபற்றி, மௌ;ளவெனவும் வழங்கும்.

278. எதிர்மறை குறிப்புவினையெச்சங்கள், அல், இல் என்னும் எதிர்மைபண்படியாகத் தோன்றி, றி டு மல் மே மை ஆல் கால் கடை வழி இடத்து என்னும் விகுதிகளைப் பெற்று வருவனவாம்.

உதாரணம்.

றி
து

மல்
மே
மை
ஆல்
கால்
கடை
வழி
இடத்து அறமன்றிச்செய்யான்
அறமல்லாதில்லை
அறமல்லதில்லை
அறமல்லாமலில்லை
அறமல்லாமேயில்லை
அறமல்லாமையில்லை
நீயல்லாலில்லை
அவனல்லாக்கானீயார்
அவனலடலாக்கடைநீயார்
அவனல்லாவழிநீயார்
அவனல்லாவிடத்து நீயார்
அருளின்றிச் செய்தான்
அருளில்லாது செய்தான்
---
யானில்லாமல் வந்தான்
யானில்லாமே வந்தான்
யானில்லாமை வந்தான்
--
யானில்லாக்கால் வருவான்
யானில்லாக்கடைவருவான் யானில்லாவழி வருவான்
யானில்லாவிடத்து வருவான்

இவ்வினையெச்சக் குறிப்புக்களில் வரும் ஆகாரமும் அகரமுஞ் சாரியை.

279. வினையெச்சங்கள், இருதிணையைம்பான் மூவிடங்கட்கும் பொதுவாக வரும்.

உதாரணம்.
நடந்து வந்தான், வந்தேம்
வந்தாய், வந்தீர்
வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன

280. தன் கருத்தாவின் வினையே கொள்ளுதற்குரிய வினையெச்சங்கள் சினை வினையாயின், அவை அச்சினைவினையைக் கொண்டு முடிதலுமன்றி, ஒற்றுமைபற்றி முதல் வினையையும் கொண்டு முடியும்.

உதாரணம்.
சாத்தன் காலொடிந்து வீழ்ந்தான். இங்கே ஒடிதல் சினைவினை; வீழ்தல் முதல் வினை ஆதலின் ஒடிந்து என்னுஞ் சினைவினையெச்சம் வீழ்ந்தான் என்னும் முதல் வினைகொண்டு முடிந்தது.

காலொடிந்து வீழ்ந்தது. இங்கே ஒடிதலுஞ் சினை வினை; வீழ்தலுஞ் சினைவினை. ஆதலின் ஒடிந்து என்னுஞ் சினைவினையெச்சம் வீழ்ந்தது என்னும் சினைவினை கொண்டு முடிந்தது.

மாடு காலொடிந்து வீழ்ந்தது. இங்கே வீழ்தல் மாட்டின் வினையாதலிற் சினைவினையெச்சம் முதல் வினைகொண்டு முடிந்தது.

281. பிற கருத்தாவின் வினையைக் கொள்ளும் வினையெச்சங்கள்; தன்கருத்தாவின் வினையைக்கொள்ளும் வினையெச்சங்களாக திரிந்தும் வரும். திரிபினும், அவற்றின் பொருள்கள் வேறுபடாவாம்.

உதாரணம்.
ஞாயிறு பட்டு வந்தான். இங்கே பட வென்னுஞ் செயவென் வாய்ப்பாட்டுவினையெச்சம் பட்டு என திரிந்து நின்றது.

மழைபெய்து நெல் விளைந்தது. இங்கே பெய்ய என்னுங் காரணப் பொருட்டாகிய செயவென் வாய்ப்பாட்டிறந்தகால வினையெச்சம் பெய்து என திரிந்து நின்றது.
-----

தேர்வு வினாக்கள்
270. வினையெச்சமாவது யாது? வினையெச்சங் கொள்ளும் வினைச் சொற்களாவன எவை?
271. வினையெச்ச விகுதிகளுள், எவ்விகுதிகள் காலங்காட்டும் இடைநிலையோடு கூடிவரும்? எவ்விகுதிகள் இடைநிலையின்றி தாமே காலங்காட்டும்?
272. தெரிநிலை வினையெச்சங்கள் எத்தனை வகைப்படும்?
273. செய்து என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால விiயெச்சங்கள் எவை? இங்கே இறந்தகாலம் என்பது எவை? இச் செய்தென் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள் வேறு விகுதிகளைப் பெற்று வருமோ?
274. செயவென்னும் வாய்ப்பாட்டு முக்காலத்திற்குமுரிய வினையெச்சம் யாது?
செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம், இறந்தகாலத்திலே எப்பொருளில் வந்து, எவ்வினையைக் கொண்டு முடியும்? காரணப்பொருளில் வருதலாவது என்னை?
இச் செயவென் வாய்ப்பாட்டிறந்தகால வினையெச்சம் வேறு விகுதியைப் பெற்று வருமோ?
செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம், எதிர்காலத்திலே எப்பொருளில் வந்து, எவ் விகையைக் கொண்டு முடியும்? காரியப் பொருளில் வருதலாவது என்னை?
இச்செயவென் வாய்ப்பாட்டெதிர்கால வினையெச்சம் - வேறு விகுதியைப் பெற்றும் வருமோ?
வேறெவைகள் உணற்கென்னும் வரும்?
செய்யுளிலே செயவென் வாய்ப்பாட்டெதிர் கால வினையெச்சம் வேறு விகுதிகளைப் பெற்றும் வருமோ? இவற்றுள், எவ்வௌ; விகுதி பெற்றவை எவ்வௌ; வினையைக் கொண்டு முடியும்?
இங்கே நிகழ்காலம் என்றது எதை?
275. செயினென்னும் வாய்ப்பாட்டு எதிர்கால வினையெச்சங்கள் எவை? இவ் வினையெச்சம் எக்காலச் சொல்லை முடிக்கும் சொல்லாகக் கொள்ளும்? செயினென்னும் வாய்ப்பாட்டு வினையெச்சங்களாய் வருவன பிறவும் உளவோ?
276. எதிர்மறை தெரிநிலை வினையெச்சங்கள் எவை? செய்யாது என்பது எவைகளுக்கு எதிர்மை?
செய்யாது என்பது இன்னும் எப்படி வரும்? செய்யாது என்பது எதற்கு எதிர்மறை?
செய்யாமல், செய்யாமே, செய்யாமை, செய்யாமைக்கு என்னும் நான்கும் எவைகளுக்கு எதிர்மறை?
செய்யாக்கால், செய்யாக்கடை, செய்யாவழி, செய்யாவிடத்து என்னும் நன்கும் எவைகளுக் எதிர்மறை?
277. உடன்பாட்டு குறிப்பு வினையெச்சங்கள் எவை?
278. எதிhமறைக் குறிப்பு வினையெச்சங்கள் எவை?
279. வியெச்சங்கள் எவ்வாறு பொதுப்பட வரும்?
280. தன் கருத்தாவின் வினையையே கொள்ளுதற்குரிய வினையெச்சங்கள் பிறகருத்தாவின் வினையைக் கொண்டு முடிதல் இல்லையோ?
281. பிறகருத்தாவின் வினையைக் கொள்ளும் வினை யெச்சங்கள் தன் கருத்தாவின் வினையெச்சங்களாக திரிந்து வருதல் இல்லையோ?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 4:08 am

முற்றுவினை எச்சப்பொருளைத் தருதல்


282. தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுங் குறிப்பு வினைமுற்றும், தமக்குரிய பயனிலை கொள்ளுமிடத்து வினையெச்சத்திற்குரிய பயனிலை கொள்ளுமிடத்து வினையெச்சப் பொருளையும், பெயரெச்சத்திற்குரிய பயனிலை கொள்ளுமிடத்து வினையெச்சப் பொருளையும், பெயரெச்சத்திற்குரிய பணனிலை கொள்ளுமிடத்துப் பெயரெச்சப் பொருளையுந் தரும்.

உதாரணம்.
கண்டனன் வணங்கினன்; இங்கே கண்டனன், என்னுந் தெரிநிலை வினைமுற்று, கண்டு என வினையெச்சப் பொருளைத் தந்நது.

உண்டான்சாத்தனூர்க்குப் போயினான்; இங்கே உண்டான் என்னுந் தெரிநிலை வினைமுற்று உண்டடெனப் பெயரெச்ச பொருளைத் தந்தது.
உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து இங்கே கையினார் என்னுங் குறிப்பு வினைமுற்று, கையையுடையனவராகி என வினையெச்சப் பொருளைத் தந்தது.

வெந்திறலினான் விரல் வழுதியோடு; இங்கே திரலினால் என்னும் குறிப்பு வினைமுற்று திறலினனாகிய எனப்பெயரெச்சப் பொருளைத் தந்தது.
----

தேர்வு வினா
282. வினைமுற்றுக்கள் எச்சப் பொருளை தருதல் இல்லையோ?


இருவகைவினைக் குறிப்பு


283. வினாக்குறிப்புச் சொற்கள், ஆக்கவினைக் குறிப்பும் இயற்கை வினைக்குறிப்பும் என இரு வகைப்படும்.

அவற்றுள், ஆக்கவினைக் குறிப்பாவது காரணம்பற்றி வரும் வினைக்குறிப்பாம் அதற்கு ஆக்கச்சொல் விருந்தாயினும் தொக்காயினும் வரும்.

உதாரணம்.
கல்வியாற் பெரியனாயினான் கல்வியாற் பெரியன்
கற்றுவல்லராயினார் கற்றுவல்லர்

இயற்கை வினைக்குறிப்பாவது காரணப்பற்றாது இயற்கையை உணர்த்தி வரும் வினைக்குறிப்பாம், அது ஆக்கச்சொல் வேண்டாதே வரும்.

உதாரணம்.
நீர் தண்ணிது
தீ வெய்து
----

தேர்வு வினாக்கள்
283. வினைக்குறிப்புச் சொற்கள் இன்னும் எத்தனை வகைப்படும்? ஆக்கவினைக்குறிப்பாவது யாது? இயற்கை வினைக்குறிப்பாவது யாது?


தெரிநிலை வினைப்பகுப்பு


284. தெரிநிலை வினைச் சொற்கள், செயப்பாடு பொருள் குன்றிய வினை, செயப்பாடு பொருள், குன்றாத வினை, எ-ம். தன்வினை, பிறவினை, எ-ம். செய்வினை, செயப்பாட்டு வினை, எ-ம். வௌ;வேறே வகையிற் பிரிவுபட்டு வழங்கும்.

285. செயப்படுபொருள் குன்றிய வினையாவது, செயப்பாடு பொருளை வேண்டாது. வரும்முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம்.

உதாரணம்.
நடந்தான், வந்தான், இருந்தான், உறங்கினான்.

இவை, இதை நடந்தான், இதை வந்தான் எனச் செயப்படு பொருளேற்று வாராமை காண்க.

286. செயப்படு பொருள் குன்றாத வினையாவது செயப்படுபொருளை வேண்டி நிற்கும் முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம்.

உதாரணம்.
உண்டான், கொடுத்தான், கண்டான், படித்தான், இவை, சோற்றையுண்டான், பொருளைக் கொடுத்தான் எனச் செயப்படும் பொருளேற்று, வருதல் காண்க.

287. தன்வினையாவது தன்னெழுவாய் கருத்தாவின் றொழிலை உணர்த்தி நிற்கும் முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம் இத்தன்வினை இயற்றுதற் கருத்தாவின் வினையெனப்படும்.

செயப்பாடு பொருள் கன்றிய முதனிலை செயப்பாடு பொருள் குன்றாத முதனிலை என்னும் இரு வகை முதலினையும் தன்வினைக்கு முதனிலையாக வரும்.

உதாரணம்.
சாத்தனடைந்தான், தச்சன் கோயிலைக் கட்டினான்.

இவைகளிலே, நடக்கையுங் காட்டலுமாகிய முதனிலைத் தொழில்கள் எழுவாய்க் கருத்தாவின் றொழிலாதல் காண்க.

288. பிறவினையாவது தன்னெழுவாய் இக்கருத்தா வல்லாத பிறகருத்தாவின் தொழிலை உணர்த்தி நிற்கும் முதனிலையடியாக தோன்றிய வினையாம். இப்பிறவினை ஏவுதற் கருத்தாவின் வினை எனப்படும்.

செயப்படு பொருள் குன்றிய முதனிலை, செயப்படுபொருள் குன்றாத முதனிலை என்னும் இரு வகை முதனிலைகளும் பிறவினை விகுதி பெற்றேனும் தாம் விகாரப்பட்டேனும், விகாரப்பட்டு விகுதிபெற்றேனும், பிற வினைப் பகுதிகளாய், வருதல் பதவியலிற் கட்டுவித்தான்.

இவைகளிலே நடக்கையுங் கட்டலுமாகிய முதனிலை தொழில்கள், எழுவாய் கருத்தாவின் தொழிலாகாது பிறகரத்தாவின் தொழிலாதல் காண்க.

செயப்படு பொருள் குன்றிய முதனிலை அடியாகத் தோன்றிய பிற வினைகள், அம் முதனிலைக் கருத்தாவைக் தமக்குச் செயப்படு பொருளாக கொண்டு வரும்.

உதாரணம்.
கொற்றான் சாத்தனைக் கடைப்படித்தான்
அரசன் றச்சனாற் கோயிலைக் கட்டுவித்தான்

289. தன் வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாக நிற்கும் முதனிலைகளுக்குஞ் சிலவுளவாம்.

உதாரணம்.

முதனிலை தன்வினை பிறவினை
அழி நீ யழி காட்டை யழி
கெடு நீ கெடு அவன் குடியைக் கெடு
வெளு நீ யுடம்படுவெளு துணியை வெளு
கரை நீ கரை புளியைக் கரை
தேய் நீ தேய் கட்டையைத் தேய்


இம்முன்னிலைகளால் வினைச்சொற் பிறத்தல் வருமாறு.


முதனிலை தன்வினை பிறவினை
அழி அழித்தான்
அழிக்கின்றான்
அழிவான் அழித்தான்
அழிக்கின்றான்
அழிப்பான்
கெடு கெட்டான்
கெடுகின்றான்
கெடுவான் கெட்டான்
கெடுகின்றான்
கெடுப்பான்
வெளு வெளுத்தான்
வெளுக்கின்றான்
வெளுப்பான் வெளுத்தான்
வெளுக்கின்றான்
வெளுப்பான்
கரை கரைந்தான்
கரைக்கின்றான்
கரைவான் கரைந்தான்
கரைக்கின்றான்
கரைப்பான்
தேய் தேய்ந்தான்
தேய்கின்றான்
தேய்வான் தேய்ந்தான்
தேய்கின்றான்
தேய்ப்பான்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக