புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_m10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_m10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_m10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_m10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_m10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10 
19 Posts - 3%
prajai
தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_m10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_m10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_m10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_m10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_m10தினமலர் செய்திகள் 01.07.11 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலர் செய்திகள் 01.07.11


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:35 am

ஜனாதிபதி ஜூலை 6ல் திருப்பதிக்கு வருகை

ஜூலை 01,2011,01:19 IST

நகரி: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், வரும் 6ம் தேதி மாலை டில்லியில் இருந்து, தனி விமானம் மூலம், மாலை திருப்பதிக்கு வரும் பிரதிபா பாட்டீல், பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேர ஓய்வுக்குப்பின், மாலை 6.45 மணிக்கு, திருப்பதியைச் சேர்ந்த ராஷ்டிரிய சேவா சமிதி (ராஸ்) ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். இரவு 7.15க்கு திருமலைக்கு புறப்பட்டு செல்லும் பிரதிபா, இரவு அங்கு தங்குகிறார். 7ம் தேதி காலை 9.40க்கு திருமலை கோவிலுக்கு சென்று வெங்கடேச பெருமாளை தரிசிக்கிறார். பின், 10.20 மணிக்கு, திருமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான வளாகத்தை திறந்து வைக்கிறார். பின், திருப்பதி விமான நிலையம் சென்று, அங்கிருந்து டில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் செய்திகள் 01.07.11 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:36 am


அதிகாரிகளிடம் மனு கொடுப்பதற்கு புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம் : கலெக்டர் "அட்வைஸ்'

உளுந்தூர்பேட்டை : அதிகாரிகளிடம் மனு கொடுக்கும் பொதுமக்கள் புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம் என கலெக்டர் மணிமேகலை கேட்டுக் கொண்டார். உளுந்தூர்பேட்டை தாலுகா பல்லவாடி கிராமத்தில் கலெக்டர் மணிமேகலை தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடந்தது. இதில் தொதி எம்.எல்.ஏ., குமரகுரு பேசியதாவது: மனுநீதிநாள் முகாமில் பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகை, ரேஷன் கார்டு கேட்டு அதிகளவில் மனுக்கள் கொடுக்கின்றனர். அதே நேரத்தில் போலி ரேஷன் கார்டுகள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இத்தொகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க கலெக்டர் நிதி வழங்க வேண்டும்.
மேலும் பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கவும், எறையூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதாரம் நிலையமும், எலவனசூர்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்திடவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு குமரகுரு எம்.எல்.ஏ., பேசினார். பின்னர் கலெக்டர் மணிமேகலை பேசுகையில், கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் நேரில் சந்தித்து மனுக்களை கொடுக்கலாம். இதற்காக புரோக்கர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். உங்களுக்கு சேவை செய்வதற்காக தான் நாங்கள் இருக்கிறோம். இத்தொகுதியில் குடிநீர் பிரச்னை இருப்பதாக குமரகுரு எம்.எல்.ஏ., கூறினார். அக்குறையை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் செய்திகள் 01.07.11 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:38 am

டில்லியில் கருணாநிதியை கண்டுக்கொள்ளாத காங்கிரஸ்

தன் மகள் கனிமொழியை சிறையில் பார்க்க, இரண்டாவது முறையாக, டில்லி வந்திருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. முதன் முறை வந்த போது, குலாம் நபி ஆசாத் உட்பட, பல காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதி தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து அவரைச் சந்தித்தனர். ஆனால், இந்த முறை கருணாநிதியை, காங்கிரஸ் கண்டுகொள்ளவேயில்லை. காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அவரைச் சந்திக்க வரவேயில்லை. மத்திய அமைச்சரும், கேரளாவைச் சார்ந்தவருமான வயலார் ரவி மட்டுமே வந்து பார்த்தார். "கூடா நட்பால் தி.மு.க., தோல்வியடைந்தது' என்ற கருணாநிதியின் அறிக்கை தான், தி.மு.க., தலைவரை, காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்காததன் பின்னணி என்கின்றனர், சீனியர் காங்கிரசார். "தமிழகத்தில் காங்கிரஸ் தோல்வியடையக் காரணம், தி.மு.க.,வின் ஊழல், கூடா நட்பு என்று நாங்கள் சொல்லியிருந்தாலும், மக்கள் நம்புவர்; தி.மு.க.,வின் கூற்றை யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள்' என்கிறது டில்லி காங்கிரஸ் வட்டாரம். தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, எந்த பிரச்னையானாலும், அடிக்கடி வந்து கருணாநிதியை சந்தித்தவர், சீனியர் அமைச்சரான பிரணாப் முகர்ஜி. ஒரு சில காங்கிரசார், "தி.மு.க., - காங்., கூட்டணி குறித்து, உறுதியாக நீங்கள் கருணாநிதியிடம் பேசுவது நல்லது' என, பிரணாப்பிடம் சொன்னார்களாம். அதற்கு பிரணாப், "தமிழக விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன். என்னை விட்டுவிடுங்கள்' என, கருணாநிதியைச் சந்திக்க மறுத்துவிட்டார்.

பிரணாப் அலுவலகம் உளவு பார்க்கப்பட்டதா? கடந்த வாரம், டில்லியில் பரபரப்பாக பேசப்பட்ட, விவாதிக்கப்பட்ட விவகாரம், பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் உளவு பார்க்கப்பட்டதா என்பதுதான். பிரணாப் முகர்ஜியின் நிதி அமைச்சக அலுவலகம், நார்த் ப்ளாக்கில் உள்ளது. இதே கட்டடத்தில், உள்துறை அமைச்சகமும், உளவுத்துறை அலுவலகங்களும் உள்ளன. இவருடைய ஆலோசகர் ஒமிதா பால் என்ற பெண்மணி. இவருடைய மேஜையின் கீழ் ஏதோ ஒட்டப்பட்டுள்ளதாக அவர் பீதியைக் கிளப்ப, உடனே இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார் பிரணாப். வழக்கமாக இந்த மாதிரி விசாரணையை, உளவுத்துறை செய்வதுதான் வழக்கம். ஆனால், பிரணாப் முகர்ஜியோ, நிதித்துறையின் அங்கமான வருமானத் துறையிடம், விசாரணையை ஒப்படைத்தார். வருமானத்துறையோ, தனியார் நிறுவனத்திடம், இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டது. காரணம், வருமான வரித்துறையிடம், இதுகுறித்து "செக்' செய்வதற்கான உபகரணங்கள் கிடையாது. பிரணாப் ஆலோசகரின் மேஜையின் கீழ், பபுள்கம் தான் ஒட்டப்பட்டுள்ளது என்று, அந்த தனியார் விசாரணை நிறுவனம் தெரிவித்தாலும், உளவு பார்க்க யாரோ முயன்றிருக்கின்றனர் என்று தெரிவித்தது. உடனே, இது தொடர்பாக பிரதமருக்கு, கடிதமும் எழுதிவிட்டார் பிரணாப். பிரணாப்பின் ஆலோசகர் ஒமிதா பால், நிதித்துறை அலுவலகத்தில் கொடி கட்டி பறக்கிறார். அவர் வைத்தது தான் சட்டம். எனவே, அவரை உளவு பார்க்க யாராவது முயற்சி செய்திருக்கலாம் என்ற விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். சக அமைச்சர்களை உளவு பார்க்கலாம் என்று கேட்கலாம். இதெல்லாம் அரசியலில் சகஜம்பா என்றுதான் சொல்ல முடியும். காரணம், இதற்கு முன்பாக நடந்த நிகழ்ச்சிகள் தான். ராஜிவ் பிரதமாராக இருந்தபோது, அப்போதைய ஜனாதிபதி ஜெயில் சிங்கிற்கும், இவருக்கும் பிரச்னை. ஜெயில் சிங்கின் தொலைபேசி, உளவுத் துறையால் ஒட்டு கேட்கப்பட்டது. இதையெல்லாம் செய்த அப்போதைய உளவுத்துறை தலைவர். நரசிம்ம ராவ் அமைச்சராகயிருந்தபோது, அவருடைய நடவடிக்கைகளும் உளவு பார்க்கப்பட்டதாக, தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

பிரதமரின் கோபம்: இந்திய அரசியலில் குட்டையைக் குழப்ப வேண்டுமா? கூப்பிடுங்கள் காங்கிரஸ் பொதுச் செயலர் திக் விஜய் சிங்கை என்ற நிலைக்கு ஆகிவிட்டது. எந்த ஒரு பிரச்னை என்றாலும், ஏதாவது வில்லங்கமாக சொல்லி, பிரச்னையை பெரிதாக்குவது திக் விஜய் சிங்கின் பாணி. சமீபத்திய இவர் பேச்சு, பிரதமரை கோபத்தில் ஆழ்த்திவிட்டது. ராகுலின் 41வது பிறந்த நாளன்று, "பிரதமர் பதவிக்கு ராகுல் தயாராக உள்ளார்' எனச் சொன்னார். ஏழு வருடங்களாக பிரதமர் பதவியில் உள்ள மன்மோகன் சிங்கிற்கு, இந்த பேச்சு பிடிக்கவில்லை. இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியிலிருந்து மறுப்பு அறிக்கை வர வேண்டும் என விரும்பினார் மன்மோகன் சிங். ஆனால், கட்சியின் சீனியர் தலைவர்களோ, "ஏழு ஆண்டுகள் மன்மோகன் சிங் பிரதமாராக இருந்துவிட்டார். தற்போது, அவர் புகழ் மங்கிவிட்டது. அவர் சொல்வதை, அவருடைய அமைச்சர்களே கேட்பதில்லை. எனவே, ராகுல் பிரதமராவதில் என்ன தப்பு' என்கின்றனர். கடைசியில் திக் விஜய் சிங், "நான் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ராகுல் பிரதமராக வர வேண்டும் என்று தான் சொன்னேன். மன்மோகன் சிங் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற எண்ணத்தில் பேசவில்லை' என்று, தன் அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக சாக்கு சொன்னார். "ராகுலுக்கு ஆலோசகராக, நெருக்கமாக உள்ள திக் விஜய் சிங், ராகுலுக்கு கெடுதல் தான் அதிகம் செய்கிறார். ஏற்கனவே, ராகுல் பிரசாரம் சென்ற மாநிலங்களில், காங்கிரஸ் தோல்வியைத் தான் சந்தித்துள்ளது. இதில் திக் விஜய் சிங் வேறு அவருடன் சேர்ந்து கொண்டால், கட்சி ஊத்திக் கொண்டு போய்விடும்' என, நொந்து போய் கூறுகின்றனர் சீனியர் காங்கிரசார் சிலர்.

சர்ச்சையில் பா.ஜ., தலைவர் கட்காரி: பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, தன் குடும்பத்துடன், பா.ஜ., ஆட்சியில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மலைக் கோவில்களுக்கு, யாத்திரை சென்று வந்தார். இந்த விவகாரம், பெரும் பிரச்னையைக் கிளப்பியுள்ளது. காரணம், கட்காரி குடும்பம், இந்த யாத்திரையை ஹெலிகாப்டரில் மேற்கொண்டது. அதற்கான செலவை, உத்தரகண்ட் அரசு செலவு ஏற்றுக் கொண்டது என, காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. தவிர, கட்காரி குடும்பம் இறங்கிய பிறகு, அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அதில் பைலட்டிற்கு பலத்த காயம். "தீர்த்த யாத்திரை செல்வோர் அவர்களுடைய சொந்த பணத்தில் தான் செல்வர். இதை காங்கிரஸ் புரிந்துகொள்ள வேண்டும்' என, பதிலளித்த பா.ஜ., "கட்காரி, தன் சொந்த செலவில் தான் பயணம் மேற்கொண்டார்' என, கூறியுள்ளது. ஆனாலும், இந்த பிரச்னை முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் செய்திகள் 01.07.11 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:40 am


ரேஷன் கார்டுக்கு மண்ணெண்ணெய் வழங்க மறுப்பு

தூத்துக்குடி:ரேஷன் கார்டிற்கு மண்ணெண்ணெய் வழங்காததை கண்டித்து நேற்று தூத்துக்குடி சிவில் சப்ளை தாலுகா அலுவலகத்தை பெண்களும், ஆண்களும் காலி கேன்களுடன் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாதத்திற்கு ஒதுக்கீடு செய்யும் மண்ணெண்ணெய் அளவை 20 சதவீதம் குறைத்துள்ளது.இதனால் காஸ் சிலிண்டர் உள்ள கார்டுகள் மண்ணெண்ணெய் பெறுகிறார்களா என்பது குறித்தும் அதிரடி சோதனைகள் அதிகாரிகள் குழு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காஸ் ஏஜென்சியில் பட்டியல் பெறப்பட்டு இது சம்பந்தமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கடந்த மாதம் வரை மண்ணெண்ணெய் பெற்று வந்த மக்களுக்கு திடீரென மண்ணெண்ணெய் கிடைக்காததால் திடீர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.ஜூன் மாதத்தின் கடைசி நாளான நேற்று மண்ணெண்ணெய் வாங்க கடைசி நாள். ஆனால் மண்ணெண்ணெய் கிடைக்காததால் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
முத்துக்கிருஷ்ணாபுரம், அழகேசபுரம், கிருஷ்ணராஜபுரம், மாணிக்கபுரம், பூபால்ராயபுரம், சாரங்கபாணிதெரு, கொடிமரத் தெரு ஆகிய தெருக்களில் சுமார் 450 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுதாரர்களுக்கு முத்துக்கிருஷ்ணாபுரம் 6வது தெருவில் உள்ள கடை மூலம் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தது.இந்த பகுதி மக்கள் ஒவ்வொரு மாதமும் மண்ணெண்ணெய் பெறுவதற்குள் கடும் சிரமப்பட்டு வருவதாக அந்த பகுதியில் உள்ள மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் புகார் தெரிவித்து வருகின்றனர். ஜூன் மாதத்திற்குரிய மண்ணெண்ணெய் இந்த பகுதி மக்களுக்கு நேற்று கடைசி நாளிலும் வழங்காததால் அந்த பகுதியில் உள்ள பெண்களும், ஆண்களும் திரண்டு வந்து சிவில் சப்ளை தாலுகா அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் கேன்களுடன் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவில் சப்ளை அதிகாரிகள் இரண்டு சிலிண்டர் காஸ் இருக்கும் வீடுகளுக்கு மண்ணெண்ணெய் கிடையாது. மண்ணெண்ணெய் ஒதுக்கீடு வரும் மாதத்தில் சரியானவுடன் வழங்கப்படும் என்று கூறி மக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் செய்திகள் 01.07.11 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:41 am

கருந்திரிகளை வெளியில் வாங்கினால் லைசென்ஸ் ரத்து :பட்டாசு ஆலைகளுக்கு எச்சரிக்கை

சிவகாசி : கருந்திரிகளை வெளியில் வாங்கும் பட்டாசு ஆலைகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்,'' என , சிவகாசி ஆர்.டி.ஓ., முனுசாமி தெரிவித்தார் பட்டாசுகளில் அனுமதியின்றி தயாரிக்கும் கருந்திரிகளை பயன்படுத்துவதால் விபத்துக்கள் ஏற்படுவதை தொடர்ந்து , இதை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. முனுசாமி ஆர்.டி.ஓ., தலைமை வகித்தார். பட்டாசு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், வருவாய் துறை, போலீஸ், தீயணைப்பு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

உற்பத்தியாளர் சங்க செயலாளர் அபிரூபன் பேசுகையில்,"" லைசென்ஸ் பெற்ற ஆலைகளில் கருந்திரி செய்ய அறைகள் ஒதுக்குவதில்லை. இந்த ஆலைகள் அனுமதியின்றி தயாரிப்பவர்களிடம் திரியை வாங்குகின்றன ,''என்றார்.
உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகணேசன் பேசுகையில்,"" அனுமதி பெற்ற தயாரிப்புக்கு 12.5 சதவீத வரிசெலுத்தி விற்பனை செய்கிறோம். அனுமதியின்றி தயாரிப்போர் எவ்வித செலவும் இன்றி தயாரித்து அதிக லாபத்திற்கு விற்பதால், முறையற்ற உற்பத்தியை ஊக்குவிக்கின்றனர்,''என்றார்.
தொழிற்சாலை துணை தலைமை ஆய்வாளர் பெரியசாமி பேசுகையில்,"" உற்பத்தி செய்த பட்டாசுகளை ஆலை வளாகத்திலேயே சோதனை செய்கின்றனர். இரவிலும், ஞாயிறு விடுமுறை நாட்களிலும் பட்டாசு தயாரிக்கின்றனர்,''என்றார் .
ஆர்.டி.ஓ., கூறுகையில்,""பட்டாசு ஆலைகளில் நடக்கும் விபத்துகள் அனுமதியின்றி தயாரிக்கப்படும் கருந்திரியால் ஏற்படுகிறது. ச லைசென்ஸ் பெற்றுள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்களே தேவையான திரியினை தயாரிக்க வேண்டும். இதை மீறி கருந்திரிகளை வெளியில் வாங்கினால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்,'' என்றார்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் செய்திகள் 01.07.11 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:42 am

இரவோடு இரவாக அண்ணாதுரை சிலை வைத்தது ஏன்


அனுப்பர்பாளையம் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில், இரவோடு இரவாக அண்ணாதுரை சிலை வைத்தது ஏன் என்று கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, வார்த்தை தடித்து, ஒருமையில் பேச ஆரம்பித்ததால், ம.தி.மு.க., - தி.மு.க., கவுன் சிலர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. தலைவர் மணி, கூட்டத்தை ஒத்திவைத்து விட்டு, மன்றத்தில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினார். ஆனால், கவுன்சிலர்களோ, அலுவலக வாசலில் அமர்ந்து, தீர்மானங்களை நிறைவேற்றினர். திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது; நகராட்சி தலைவர் மணி தலைமை வகித்தார். செயல் அலுவலர் (பொறுப்பு) மல்லிகை முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் நடந்த விவாதம்:பாலசுப்ரமணியம் (அ.தி.மு.க): அ.தி.மு.க., ஆட்சி அமைத்ததும், இலவச அரிசி, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்றார்.இதற்கு தி.மு.க., கவுன்சிலர் ராஜேந்திரன் எதிர்ப்பு தெரிவித்ததால், அ.தி.மு.க., - தி.மு.க., கவுன் சிலருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.தலைவர் மணி குறுக்கிட்டு, மன்ற பொருள் பற்றி பேசுங்கள்; பொது விஷயங்களை, பின்னர் பேசுவோம், என்றார். பாலசுப்ரமணியம்: நகராட்சி வளா கத்தில் அண்ணாதுரை சிலை நகராட்சி சார்பில் வைக்க தீர்மானம் றைவேற்றப்பட்டது. தலைவர், தனது சொந்த செலவில் எப்படி சிலை வைக்கலாம்?
பாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.,): அண்ணாதுரை சிலை இரவோடு, இரவாக வைத்து, திறக்க காரணம் என்ன? கல்வெட்டில் தி.மு.க., நகர செயலாளர் மணி என, உங்களது பெயரை எப்படி வைக்கலாம்? சுப்ரமணியம் (அ.தி.மு.க): எனது வார்டில் குடிநீர் குழாய் பதித்து, தன்னுடைய பெயரை, தலைவர் தன்னிச்சையாக வைத்துள்ளார்.மல்லிகை (செயல் அலுவலர்): அந்த கல்வெட்டுக்கும், நகராட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.சரோஜா (துணை தலைவர்): நகராட்சி வளாகத்தில் அண்ணாதுரை சிலையை இரவோடு, இரவாக வைத்து தன்னிச்சையாக எப்படி திறப்பு விழா நடத்தலாம்?
மணி (தலைவர்): "கிரேன்' மூலம் தூக்கி வைக்க வேண்டியிருந்ததால், இரவு நேரத்தில் வைத்தோம்; இன்னும் திறப்பு விழா நடத்தவில்லை. நாகராஜ் (ம.தி.மு.க): அண்ணாதுரை சிலை நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக கூறப்
பட்டுள்ளது. பராமரிப்பு செலவுக்கு பணம் கட்டப்பட்டுள்ளதா?மல்லிகை (செயல் அலுவலர்): பராமரிப்புக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை; அவர்களே பராமரித்துக் கொள்ள வேண்டும்.ரத்தினசாமி (ம.தி.மு.க,,): 2010 ஏப்., 15ல் நடந்த கூட்டத்தில், 168வது தீர்மானமாக, நகராட்சி வளாகத்தில் நகராட்சி செலவில் அண்ணாதுரை சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2011 ஜன., 25ல் நடந்த கூட்டத்தில், 179வது தீர்மானத்தில், தலைவர் தனது சொந்த செலவில் சிலை வைக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது நகராட்சி வளாகத்தில் அம்பேத்கர், ஈ.வெ.ராமசாமி சிலை வைக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தீர்மானம் எதற்கு? இரவோடு, இரவாக வைத்து விட்டு போக வேண்டியது தானே? என்றவாறு, ஒருமையில் பேச ஆரம்பித்தார்.
இதற்கு தலைவர் மணி எதிர்ப்பு தெரிவித்தார். உடனே, ம.தி.மு.க., கவுன்சிலருக்கும், தி.மு.க., கவுன்சிலருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மற்ற கட்சி கவுன்சிலர்கள் சமாதானம் செய்தனர். அதன் பின், கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறி, மன்றத்தை விட்டு, தலைவர் அவசர அவசரமாக வெளியேறினார். செயல் அலுவலரும் வெளியேறி, ரோடு பணியை பார்வையிட சென்றார்."செயல் அலுவலர் விளக்கம் கூறும் வரை, வெளியே செல்ல மாட்டோம்,' என, துணை தலைவர் சரோஜா தலைமையில் அ.தி.மு.க., - ம.தி.மு.க., - இ.கம்யூ., - மா.கம்யூ., - பா.ஜ., கவுன்சிலர்கள் 11 பேர், நகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் கழித்து வந்த செயல் அலுவலர், "தீர்மானம் தொடர்பாக பதில் கூற தயார்; மற்ற பிரச்னைகளுக்கு பதில் கூற முடியாது,' என்று கூறினார். அதன் பின், அலுவலக வாசலில் வைத்தே, 109 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.""குடிநீர், குப்பை, சாக்கடை பிரச்னை தீர்க்கப்படும். தீர்மானத்தில் நிறைவேற்றிய அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என செயல் அலுவலர் கூறியதை தொடர்ந்து, கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.முன்னதாக, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 18 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதை கண்டித்து, கவுன்சிலர்கள் கறுப்பு துணியை போர்த்திக் கொண்டு, கூட்டத்துக்கு வந்திருந்தனர்.




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் செய்திகள் 01.07.11 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:44 am


வந்தார்... வென்றார்... சென்றார்!

கோவை : மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் முதல்வர் ஜெயலலிதா படத்தை வைக்க மண்டல தலைவர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, எம்.எல்.ஏ., சேலஞ்சர் துரை தலைமையிலான அ.தி.மு.க.,வினர் நேற்று அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்து படத்தை மாட்டினர்.தமிழகத்தில் ஆட்சி மாறிய பின், அனைத்து அரசு அலுலகங்களிலும் கருணாநிதி புகைப்படத்தை மாற்றி விட்டு, முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது. ஆனால், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் மட்டும் முன்னாள் முதல்வரின் படம் மாற்றப்படாமலும், இந்நாள் முதல்வர் படம் மாட்டப்படாமலும் இருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் தெற்கு மண்டலக் கூட்டம், தலைவர் பைந்தமிழ் பாரி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் நடந்துக் கொண்டிருக்கும் போது மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையர் நாகராஜ் மற்றும் அதிகாரிகள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்தை எடுத்து வந்து சுவற்றில் மாட்ட முயன் றனர். மண்டலத் தலைவர் பைந்தமிழ் பாரி, எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். பத்திரிகைகளில் இச்செய்தியை நேற்று காலை படித்து கோபம் அடைந்த தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சேலஞ்சர் துரை, அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் தெற்கு மண்டல அலுவலகத்துக்குள் "அதிரடி'யாக நுழைந்தார். இரு தரப்பினருக்கும் மோதல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தி.மு.க.,வினர் எவரும் அங்கு இல்லை. உள்ளே நுழைந்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு மாட்டப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், முன்னாள் அமைச் சர் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோரின் புகைப் படங்களை அகற்றி விட்டு, முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை மாட்டினர். அப்போது அங்கு தி.மு.க., வினர் எவரும் இல்லை. இதன் பின் நிருபர்களிடம் எம்.எல்.ஏ., சேலஞ்சர் துரை கூறுகையில், ""அனைத்து அரசு அலுவலகங்களிலும் முன்னாள் முதல்வர் புகைப்படம் மாற்றப்பட்டு விட்டது. அரசுக்கு சொந்தமான தெற்கு மண்டல அலுவலகத்தில் முதல்வர் ஜெயலலிதா படத்தை மாட்ட முயன்ற மாநகராட்சி அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் கேவலமாக திட்டி அனுப்பியுள்ளனர். மண்டலக் கூட்டத்தை மரத்தடியில் நடத்தினாலும், முதல்வர் படத்தை மரத்தில் மாட்டியாக வேண்டும். ""முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்தை வைக்காமல், கருணாநிதி படத்துடன் மண்டலக் கூட்டம் நடந்துள்ளது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை ரத்து செய்ய பரிந்துரை செய்து, மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் எழுதவுள்ளோம். அதிகாரிகளை மிரட்டிய மண்டலத் தலைவர் பைந்தமிழ் பாரி மீது போலீசில் புகார் அளிக்கவுள்ளோம்,'' என்றார். சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குப் பின், அங்கு வந்த மாநகராட்சி துணை ஆணையர் ஜெயராமன், மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரணை நடத்திச் சென்றார். இச்சம்பவத்தால் நேற்று காலை ஒசூர் ரோட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு மண்டல அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. "அகற்றவே எதிர்ப்பு'தெற்கு மண்டலத் தலைவர் பைந்தமிழ் பாரி கூறியதாவது: முதல்வர் படத்தை அரசு அலுவலகங்களில் மாட்டும் மரபை நன்கு அறிந்தவன் நான். தெற்கு மண்டல பிரதான அலுவலகத்திலும், உதவி ஆணையர் அறையிலும் முதல்வரின் படம் மாட்டப்பட்டிருக்கிறது. கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் அலுவலகத்தில் மாட்டப்பட்டிருந்த எங்கள் கட்சித் தலைவர்களின் படங்களை அகற்றவே எதிர்ப்பு தெரிவித்தோம். முதல்வர் ஜெயலலிதா படத்தை மாட்ட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இவ்வாறு, பைந்தமிழ் பாரி கூறினார்.




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் செய்திகள் 01.07.11 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:45 am

கள்ளநோட்டு புழக்கத்தை கண்டறிய முயற்சி :தகவல் தெரிவிக்க பெட்டி "ரெடி'


திருப்பூர் : திருப்பூர் பகுதியில் கள்ள நோட்டுக் களின் புழக்கம் அதிகரித்துள்ளதால், அதுகுறித்து தகவல் அளிக்கும் வகையில், ஸ்டேட் பாங்கில் தகவல் பெட்டி அமைக்கப் பட்டுள்ளது.திருப்பூர் பகுதியில் பனியன் தொழில் மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள், பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள் உள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசிக்கின்றனர். தினமும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தக ரீதியாக புழக்கத்தில் உள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோதிகள், கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விடுகின்றனர். அவை, பொதுமக்களிடம் கைமாறி, இறுதியாக, வங்கிகளுக்கு வரும்போது தான், கண்டுபிடிக்கப்படுகின்றன.இதுகுறித்து வங்கியாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கள்ளநோட்டுகளை தடுக்கவும், புழக்கத்தில் விடும் சமூக விரோதிகளை கண்டறியவும் முயற்சி எடுக்க தீர்மானிக்கப்பட்டது. கள்ளநோட்டுகளை பொதுமக்கள் கண்டறிந் தால், முறையாக ஒப்படைக்கவும், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டது. அதற்காக, கள்ளநோட்டு தகவல் அறியும் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஸ்டேட் பாங்க் பிரதான கிளையில் இதன் சேவையை, கலெக்டர் மதிவாணன் நேற்று துவக்கி வைத்தார்.கலெக்டர் கூறியதாவது:கள்ளநோட்டுகள், தங்கள் கைக்கு கிடைத்தால், அதை பலரும் கிழித்து எறிந்து விடுகின்றனர். இதனால், அதன் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அதுகுறித்து போலீசுக்கு செல்லவும் பலரும் அச்சப் படுகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், இச்சேவை பரீட்சார்த்த முறையில் துவக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு கிடைத்த கள்ளநோட்டை, எந்த இடத்தில், எந்த நேரம், எப்படி கிடைத்தது என்ற விவரங்களை எழுதி, இப்பெட்டியில் போடலாம். இந்நடைமுறை எந்தளவு பயனளிக்கிறது என கண்டறிந்து, மற்ற வங்கி கிளைகளிலும் அமைக்கப்படும், என்றார்.எஸ்.பி., பாலகிருஷ்ணன் கூறுகை யில்,""இச்சேவை மூலம் திருப்பூரில் கள்ளநோட்டு புழக்கம் ஒழிக்கப்படும். கிடைக்கும் தகவல் அடிப்படையில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்து போலீசார் விசாரிப்பர். புகார் அளிக்கும் நபர்கள் பற்றிய விவரங்களை குறிப்பிட வேண்டும் என அவசியமில்லை,'' என்றார்.




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் செய்திகள் 01.07.11 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக