புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விகடன் செய்திகள்....


   
   

Page 2 of 2 Previous  1, 2

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 8:01 pm

First topic message reminder :

மேற்கு வங்க அரசு மருத்துவமனை அவலம்: 36 மணி நேரத்துக்குள் 17 குழந்தைகள் உயிரிழப்பு
கொல்கத்தா, ஜூன் 30,2011


மேற்கு வங்கத்தின் அரசு மருத்துவமனை ஒன்றில், இரு நாட்களுக்குள் 17 குழந்தைகள் மரணமடைந்த சம்பவம், அம்மாநிலத்தை வெகுவாக உலுக்கியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள பி.சி.ராய் மருத்துவனையில் வெவ்வேறு நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட 17 குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 36 மணி நேரத்துக்குள் இத்தனை குழந்தைகள் இறந்திருப்பது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளை இழந்த பெற்றோர்களும் உறவினர்களும் கதறலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பலரும் மருத்துவமனையையும், மருத்துவர்களையும் தாக்கிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

சுகாதாரத்துறையையும் கவனித்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பரில் நிமோனியா, இரைப்பை குடல் பிரச்னை காரணமாக 2 மாதக் கைக்குழந்தை உள்பட 14 குழந்தைகள் இதே மருத்துவமனையில் உயிரிழந்ததும், அப்போது மருத்துவமனையின் கவனக்குறைவைக் கண்டித்து பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றதும் நினைவுகூரத்தக்கது.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விகடன் செய்திகள்.... - Page 2 47

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 8:21 pm

மன்மோகன், ராஜபக்ஷே.. யார் கூறுவது உண்மை?'
சென்னை, ஜூன் 30,2011


தமிழர்களுக்கு சம உரிமை தொடர்பான பிரச்னையில், இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இருவரில் யார் கூறுவது உண்மை? என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தங்களை தொடர்ந்து ஏமாற்றுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாடகம் ஆடுவதாக தமிழக மக்கள் கருதுகிறார்கள் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைத் தமிழர்களின் குறைகள் நியாயமானவை. அவைத் தீர்க்கப்பட வேண்டும். அங்கு வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என இந்திய அரசு இலங்கை அரசை நிர்பந்தித்து வருகிறது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.

ஆனால், நேற்றைய தினம் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணுமாறு இந்திய நிர்பந்திக்கவில்லை என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே தெரிவித்திருக்கிறார்.

யார் கூறுவது உண்மை? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. ராஜபக்ஷே தெரிவித்திருக்கிற கருத்தை இந்தியப் பிரதமர் மறுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை.

இலங்கையில் போர் உச்சக் கட்டமாக நடைபெற்ற வேளையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள் போராடிய போது போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இலங்கை அரசுக்குக் கூறியிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

ஆனால், ராஜபக்ஷே அதை மறுத்தார். இந்தியா ஒருபோதும் போர் நிறுத்தம் செய்யும்படி கேட்கவில்லை என பகிரங்கமாகக் கூறினார்.

அதைப் போல இலங்கைக்கு ராணுவ ரீதியிலான உதவி எதையும் இந்தியா செய்யவில்லை என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ஆனால், இந்தியா செய்த உதவியால்தான் தாங்கள் வெற்றிபெற முடிந்தது என ராஜபக்ஷே போர் முடிந்த பிறகு கூறினார்.

இவ்வாறு தங்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாடகமாடுவதாக தமிழக மக்கள் கருதுகிறார்கள்.

எனவேதான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பாடம் கற்பித்தார்கள். இன்னமும் தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் என பிரதமர் மன்மோகன் சிங்கை எச்சரிக்கிறேன்," என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விகடன் செய்திகள்.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 8:22 pm

தமிழக மீனவர்கள் 23 பேரும் ராமேஸ்வரம் திரும்பினர்
ராமேஸ்வரம், ஜூன் 30,2011

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரும் இன்று ராமேஸ்வரம் திரும்பினர்.

ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள் கடந்த 20-ம் தேதி இலங்கை கடற்படையினரால் 5 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

இலங்கைக் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் அனைவரும் அனுராதபுரம் சிறையில் அடைக்‍கப்பட்டனர்.

மீனவர்களை உடனடியாக விடுவிக்‍க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இதேபோல், பல்வேறு கட்சித் தலைவர்களும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தினர்.

காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கிய ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை அரசின் அறிவிப்புக்கு பிறகு தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில், அனுராதபுரம் சிறையில் அடைக்‍கப்பட்டிருந்த 23 மீனவர்களும், தலைமன்னார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். 5 படகுகளுடன் அவர்களை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக மீனவர்கள் 23 பேரும் பின்னர், இந்திய கடற்படையிடம் ஒப்படைக்‍கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் இன்று பிற்பகல் ராமேஸ்வரம் திரும்பினர்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விகடன் செய்திகள்.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 8:23 pm

கேரள அரசுடன் தமிழகம் பேச்சு நடத்த கூடாது:ராமதாஸ்
சென்னை, ஜூன் 30,2011


முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பேச்சு நடத்த கேரள அரசு விடுத்துள்ள அழைப்பை தமிழகம் ஏற்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "முல்லைப்பெரியாறு விவகாரத்தில் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கேரள அரசு திமிருடனும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் செயல்பட்டு வந்துள்ளது.

இப்பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பது ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதை தெரிந்து கொண்டுதான் பேச்சு நடத்த வருமாறு தமிழக அரசுக்கு கேரளம் அழைப்பு விடுத்துள்ளது.

கேரள அரசின் இந்த வஞ்சக வலையில் தமிழக அரசு ஒருபோதும் விழுந்துவிடக் கூடாது. அவர்கள் அழைப்பை ஏற்று பேச்சு நடத்தினால், நாம் 125 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல நேரிடும். மேலும், தமிழகத்தின் 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை இழக்க நேரிடும்.

எனவே, புதிய அணை குறித்து பேச்சு நடத்துவதற்கான கேரள அரசின் அழைப்பை ஏற்கவே கூடாது," என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விகடன் செய்திகள்.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 8:25 pm

அன்னை வெர்சஸ் அம்மா...முதல் செக் டெல்லி...

'டெல்லி சென்ற ஜெயலலிதாவை, காங்கிரஸ் சார்பில் டெல்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் சந்தித்தார் அல்லவா? புதிய கவர்னர் நியமனத்துக்காக, அப்போது மூன்று பெயர்​களை ஜெயலலிதா பரிந்துரை செய்தாராம். மார்க்ரெட் ஆல்வா, நவீன் சாவ்லா, ஜனார்த்தன் ரெட்டி ஆகிய மூவரில் யாராவது ஒருவரைத் தமிழக கவர்னராக நியமித்தால் நல்லது என்றாராம். இதை சோனியாவின் கவனத்​துக்கு ஷீலா தீட்சித் கொண்டுசென்றதாகவும், அப்போது டெல்லி அன்னை, தமிழக அம்மாவைப்பற்றி கோப வார்த்தைகள் சிலவற்றை உமிழ்ந்ததாகவும் பேச்சு. 'ஜெயலலிதாவைப்பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும். அவரது டிமாண்ட்கள் அனைத்துமே கஷ்டமானதாகவே இருக்கும். அதை நிறைவேற்ற ஆரம்பித்தால், அனுமார் வால் மாதிரி நீளும்’ என்று கமென்ட் அடித்ததாம், டெல்லி மேலிடம். 'கவர்னர் நியமனம் என்பது மத்திய அரசாங்கத்தின் தனிப்பட்ட விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது’ என்றதாம் டெல்லி.''

''ஓ!''

''சென்னை வந்த பி.ஜே.பி. தலைவர் சுஷ்மா சுவராஜை சந்தித்து அன்பு பாராட்டியதன் மூலமாக காங்கிரஸ் மீதான கோபத்தை ஜெயலலிதா காட்டியதன் காரணம் இதுதானாம். இதற்கு மத்தியில்...''

''சொல்லும்!''

''தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, புதுச்​சேரி கவர்னர் இக்பால் சிங் ஆகிய இருவர் மீதும் பிரதமர் மன்மோகன் சிங் தனி பிரியம் வைத்துள்ளார். எனவே, பர்னாலாவை அந்த இடத்தில் இருந்து அசைப்பதும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. 'பர்னாலா மூட்டு வலி தொடர்பான சில சிகிச்சைகளை சென்னையில் செய்து வருகிறார். அதற்காக, அவர் கூடுதலாக ஓரிரு மாதம் அவகாசம் கேட்கிறார். அநேகமாக அந்த நீட்டிப்பை மத்திய அரசு வழங்கலாம். ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது என்பதையும் பார்ப்போம்’ என்று மத்திய அரசு நினைக்கிறது என்று டெல்லித் தகவல்கள் சொல்கின்றன. சோனியாவின் சாய்ஸ் ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ரோசய்யாவாக இருக்கிறதாம்!'' என்ற கழுகார்...

''ஜெயலலிதா டெல்லி போனபோது, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் பயன்படுத்தும் 6666 பதிவு எண்கொண்ட பஜுரோ காரும் சென்னையில் இருந்து டெல்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டது. ஜெயலலிதா சென்னை திரும்பிய பிறகும், அவருடைய கார் மட்டும் இன்னும் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்திலேயே காத்திருக்கிறது. ஜெயலலிதா தங்கியிருந்த அறையிலும், அவர் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த பொருட்களை அங்கேயே வைத்துப் பூட்டி, சாவியை மட்டும் எடுத்து வந்துவிட்டார்களாம். ஜூலை முதல் வாரத்தில், மீண்டும் டெல்லி விசிட் இருக்கலாம். அப்போது சோனியா சந்திப்பு நடக்கலாம் என்கிறார்கள்..விகடன் செய்திகள்.... - Page 2 P42



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விகடன் செய்திகள்.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 8:28 pm

கொந்தளித்த ஆ.ராசாவின் மனைவி!

''அவரைப்பத்தி இஷ்டத்துக்கு எழுதி உள்ளே தள்ளிட்டீங்களே!''

விகடன் செய்திகள்.... - Page 2 P2
டெல்லி திகார் சிறை வட்டாரத்தில் உலா வந்த ஆ.ராசாவின்உறவுக் காரர்களை, திருச்சி வருமான வரித் துறை விசாரணைக்காக அழைத்தது!

ஜூன் 24-ம் தேதி, காலை 10.35-க்கு ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ஆ.ராசாவின் சகோதரர் ராமச்சந்திரன், அக்கா மகள் வித்யா, அக்கா மகன்கள் பரமேஸ்வரன், வெங்கடேசன் ஆகியோர் இரண்டு கார்களில் வந்து இறங்கினர். அவர்களைச் சூழ்ந்து பளிச் பளிச்சென ப்ளாஷ் அடிக்க... இத்தனை மீடியாக்களை எதிர்பாராத அவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். ''அவரைப் பத்தித்தான் இஷ்டத்துக்கும் எழுதி ஜெயிலுக்கு அனுப்பிட்டீங்க... அப்புறம் இன்னும் ஏன் எங்களைத் தொல்லை பண்றீங்க?'' என்று சீறியபடி, அலுவலகத்தின் உள்ளே சென்றார் பரமேஸ்வரி.

அடுத்து வந்த ராமச்சந்திரனை சூழ்ந்து​கொண்ட நிருபர்கள், ''எதற்காக ஆஜராகச் சொல்லி உத்தரவு வந்துள்ளது? யார் யார் ஆஜர் ஆகிறீர்கள்?'' என்று கேட்க, ''உங்களுக்கு யார் தகவல் சொன்னார்களோ, அவர்களிடமே போய் விசாரித்துக்கொள்ளுங்கள்!'' என்று முறைத்தார்.

சற்று நேரத்துக்குப் பின்னர் அவர்களுடன் வந்த ஆடிட்டர்கள், ''வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ததில் சில சந்தேகங்கள் என்று பரமேஸ்வரியையும் ராமச்சந்திரனையும் வரச் சொல்லி இருக்கிறார்கள். சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தினந்தோறும் நூற்றுக்கணக்கானோரை வருமான வரித் துறையினர் வரச் சொல்லி விசாரிப்பது சாதாரண விஷயம்தான்...'' என்று விளக்கம் சொன்னார்கள்.

பரமேஸ்வரி விசாரணைக்காகச் சென்ற சிறிது நேரத்திலேயே, வித்யாவும் வெங்கடேசனும் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். பரமேஸ்வரியிடம் மதியம் வரையும், ராமச்சந்திரனிடம் மாலை வரையும் விசாரணை நடந்தது.
விகடன் செய்திகள்.... - Page 2 P3
இது தொடர்பாக விவரம் அறிந்த வட்டாரத்தில் பேசியபோது, ''இருவரிடமும் வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் இருக்கின்றன. ஆகவே, அவர்களிடம் ஆரம்பத்தில் விசாரணை நடத்தப்பட்டது. ஆ.ராசா கைதுக்கு முன்னர், பெரம்பலூர் மற்றும் திருச்சியில் அவரது சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் புகுந்து ரெய்டு நடத்திய சி.பி.ஐ. டீம், பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றது. சொத்துகள் வாங்குவதற்கான வருமானம் எப்படிக் கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடந்தது. பரமேஸ்வரி மற்றும் ராமச்சந்திரன் சொன்ன பதில்களில் விசாரணை அதிகாரிகளுக்கு முழுத் திருப்தி ஏற்பட்டதாகத் தெரியவில்லை. விரைவில் மற்ற உறவுகளையும் அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பார்கள்!'' என்றனர்.

இதுகுறித்து நாம் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் செல்போனில் தொடர்பு கொண்டோம். அது, ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. திருச்சியில் இருக்கும் ராசாவின் சகோதரர் கலியபெருமாளிடம் பேசினோம். ''உங்களிடம் பரமேஸ்வரி எதுவும் பேசமாட்டார். எங்கள் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை!'' என்று கூறினார்.





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விகடன் செய்திகள்.... - Page 2 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 30, 2011 11:41 pm

ராசா மனைவி பேரில் 3000 கோடி க்கு சொத்து மொரிஷியஸ் ல் இருப்பதாக செய்தி அடி பட்டுள்ளதே அது என்னாச்சு நு தெரிய வில்லையே!

விகடன் செய்தியை தொகுத்து வழ்ங்கியமைக்கு நன்றி அக்கா! மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 1:34 am

அருணை பினாமியாக போட்டிருப்பதாக லேட்டஸ்ட் தகவல் அருண்....புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விகடன் செய்திகள்.... - Page 2 47
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக