புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
J J உப்புமா Poll_c10J J உப்புமா Poll_m10J J உப்புமா Poll_c10 
68 Posts - 53%
heezulia
J J உப்புமா Poll_c10J J உப்புமா Poll_m10J J உப்புமா Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
J J உப்புமா Poll_c10J J உப்புமா Poll_m10J J உப்புமா Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
J J உப்புமா Poll_c10J J உப்புமா Poll_m10J J உப்புமா Poll_c10 
3 Posts - 2%
Guna.D
J J உப்புமா Poll_c10J J உப்புமா Poll_m10J J உப்புமா Poll_c10 
1 Post - 1%
Shivanya
J J உப்புமா Poll_c10J J உப்புமா Poll_m10J J உப்புமா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
J J உப்புமா Poll_c10J J உப்புமா Poll_m10J J உப்புமா Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
J J உப்புமா Poll_c10J J உப்புமா Poll_m10J J உப்புமா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
J J உப்புமா Poll_c10J J உப்புமா Poll_m10J J உப்புமா Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
J J உப்புமா Poll_c10J J உப்புமா Poll_m10J J உப்புமா Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
J J உப்புமா Poll_c10J J உப்புமா Poll_m10J J உப்புமா Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
J J உப்புமா Poll_c10J J உப்புமா Poll_m10J J உப்புமா Poll_c10 
15 Posts - 3%
prajai
J J உப்புமா Poll_c10J J உப்புமா Poll_m10J J உப்புமா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
J J உப்புமா Poll_c10J J உப்புமா Poll_m10J J உப்புமா Poll_c10 
9 Posts - 2%
jairam
J J உப்புமா Poll_c10J J உப்புமா Poll_m10J J உப்புமா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
J J உப்புமா Poll_c10J J உப்புமா Poll_m10J J உப்புமா Poll_c10 
4 Posts - 1%
Jenila
J J உப்புமா Poll_c10J J உப்புமா Poll_m10J J உப்புமா Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
J J உப்புமா Poll_c10J J உப்புமா Poll_m10J J உப்புமா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

J J உப்புமா


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jun 30, 2011 9:07 am

என்ன தம்பி ரொம்ப நாளா ஆளக் காணோம்.... ஆமா நீ ஏதோ கட்சியில சேர்ந்திட்டியாமே...

என்னது கட்சியிலா?... அப்படி ஒண்ணும் இல்லையே...

என்னோட வீட்டுக்காரர் சொன்னாரு... நீ ஏதோ செயலாளர் ஆயிட்டேன்னு...

ஆமாக்கா... அது ஈகரை இணையத்துல சதுர செயலாளர்...

என்னது சதுர செயலாளரா....? அப்படீன்னா...?

அது அந்த சிவ(ா)னுக்கே வெளிச்சம்....

சரி... கொஞ்சம் J J உப்புமா சாப்பிடரயா....

என்னது J J உப்புமாவா?... ஏங்க அவங்க ஜெயிச்சு ஆட்சிக்கு வந்துட்டாங்க அப்படிங்கறதுக்காக உப்புமாவுக்குகெல்லாம் அவங்க பெயரை வைக்கரது நல்லா இல்லை...

டேய்... இது ஜெய்ப்பூர் ஜவ்வரிசி உப்புமாடா...

"ம்... ம்..." டைனிங் ரூமிலிருந்து வெளியே வந்தார் என் நண்பர்

(சாதாரண ஜவ்வரிசி உப்புமா தானுங்க, அது பண்ணப் பண்ண உப்புமாவா, கூழா, களியான்னு புரியாம குழம்பிப்போயி கடைசியிலே பழியை ஒரு பாவமும் அறியாத ஜெய்ப்பூர் மேலே போட்டுட்டாங்க.)

உப்புமாவைச் சாப்பிட்டதுலேருந்து நண்பர் பேந்தப் பேந்த முழிச்சிட்டு இருந்தாரு பாவம்...

டேய்... நீ கொஞ்சம் சாப்பிடுறயா...

(நண்பரின் முழி என்னை எச்சரித்ததால்)... இல்லக்கா நான் மெஸ்ஸிலேயே சாப்பிட்டாச்சு...

அப்பா தப்பிச்சாண்டா... நண்பர் (மனதுக்குள்)

அக்கா இந்த உப்புமா செய்யறதப் பத்தி சொன்னா அதையே இன்னைக்கு பதிவுல போட்டுடறேன்...

இதெல்லாம் பதிவுல போடலாமா?

எத வேண்ணா போடலாம் அக்கா... படிச்சிட்டு அவங்க தலயிலெ அவங்களே முட்டிக்குவாங்க... நம்பள ஒண்ணும் பண்ண மாட்டாங்க... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க....

அக்காவுக்கும் கணினிக்கும் ஏழாம் பொருத்தம்! அவங்க தினமும் மவுஸோட அல்லாடுறதைப் பார்த்தா அவங்க வேலை பார்க்கிறாங்களா?... இல்லே... தோசை வார்க்குறாங்களான்னு சந்தேகமாயிருக்கும். அதுனாலே அவங்க புருஷனோட தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தித் தமிழிலே தட்டச்சு செய்ய முடிவு பண்ணினாங்க...

அவரு மனசுக்குள்ளே என்னைத் திட்டிக்கிட்டே கணிணி முன்னால வந்து உட்காந்தாரு...

இனி அந்தக் காட்சி அப்படியே!!! (நண்பரின் மனைவியும்.... நண்பரின் மனசாட்சியும்)

J J உப்புமா வேண்டாங்க... இன்னைக்கு "முதல்லே சிம்பிளா ரவா உப்புமா செய்வது எப்படீன்னு சொல்லறேங்க"

"ம்..." அதுக்கு மேலே நண்பராலே வாயைத் தொறக்க முடியலே..! எல்லாம் J J உப்புமாவோட ஜாலம்!

மனைவி சொல்லச் சொல்ல நண்பர் தட்டச்சு செய்ய ஆரம்பிச்சாரு!

"டைப் பண்ணுங்க! ரவா உப்புமா செய்யத் தேவையான பொருட்கள்...!"

"சாப்பிட ரெண்டு பேர்!" நண்பர் மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டாரு!

"ஏதாவது சொன்னீங்களா?" அக்கா கேட்குறாங்க... சொல்லுற நிலைமையிலா அவரு இருக்காரு? ஊஹூமுன்னு தலையை மட்டும் ஆட்டுறாரு!

"சரி, அடுத்ததா ரவை உப்புமா செய்யத் தேவையான பாத்திர பண்டங்களைப் பற்றிப் பார்க்கலாமா?"

"ரொம்ப முக்கியம்..." இது நண்பரின் மனசாட்சி.

"வாணலி..."

"----------"

"ஐயோ, வானொலி இல்லீங்க... வாணலி..! இலுப்புச்சட்டி... உங்க தலை மாதிரி இருக்குமே...!"

இப்படியே கரண்டி, கத்தி, தட்டுன்னு எல்லாத் தட்டுமுட்டுச் சாமான் பெயரையும் அம்மணி சொல்லச் சொல்ல, இப்போ நண்பர் பில்கேட்ஸுக்கு சாபம் போட்டுக்கிட்டிருந்தாரு! இருடீ, அடுத்தவாட்டி இந்தியா வா, வச்சிருக்கேன் உனக்கு!

ஒரு வழியா தேவையான பொருட்களுக்கு வந்தாங்க அம்மணி!

"பாம்பே ரவை!"

"போச்சுடா, பட்ட காலிலே படும்கிறது சரியாத் தானிருக்கு. பாம்பேக்கு இப்போ நேரமே சரியில்லை..." இது நண்பரின் மனசாட்சி.

"வெங்காயம்..."

"நல்ல வேளை! இதை வெட்டுற ஆம்பிளைங்க எதுக்கு அழறாங்கன்னு யாருக்கும் தெரியாது."

"தக்காளி!"

"க்கும்... கொஞ்சம் விலை குறைஞ்சா போதுமே!"

"உருளைக்கிழங்கு..."

"இது எதுக்கு? விட்டா முட்டக்கோசையே முழுசாப் போட்டிருவா போலிருக்கே!"

"கேரட்!"

"அதை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்?"

"பட்டாணி!"

"ஆமா, இப்படிப் பண்டங்களை வேஸ்ட் பண்ணினா பட்டாணிகிட்டே போய்த் தான் கடன் வாங்கணும்."


"பச்சை மிளகாய்... இஞ்சி... கருவேப்பிலை... கொத்தமல்லி..."

"அட, சுக்கு, மிளகு, திப்பிலியெல்லாத்தியும் விட்டுட்டாளே!"


"தாளிக்கத் தேவைப்படும் பொருட்கள்!"

"கல்யாணம் ஆனதுலேருந்து தினமும் எங்களைத் தாளிக்கறீங்களே, போதாதா?"

"கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம்...."

"இப்போ ஜீரகம் வரும் பாருங்க..!"


"ஜீரகம்....!"

"அதானே பார்த்தேன்!"


"ரீஃபைண்டு ஆயில்..."

"என்ன வெலை விக்குது தெரியுமா?"

"தேவையான அளவு உப்பு!"

"சொரணையிருக்கிறவங்களுக்கு மட்டும்!"

"தண்ணீர்..."

"சாப்பிடறதுக்கு முன்னாலேயும், அப்புறமும் அவங்கவங்க தலையிலே தெளிச்சுக்கணும். கடவுளாப் பார்த்துக் காப்பாத்தினாத் தானுண்டு."

"உப்புமா செய்வது மிகவும் சுலபம்"

"ஆமாமா, சாப்பிடறதுதான் கஷ்டம்."


"முதலில் அடுப்பைப் பற்ற வைத்து அதன் மேல் வாணலியை வைக்கவும்....."

"ஆமா, மத்தவங்களெல்லாம் அடுப்பிலே வைக்காம வாணலியை அடகுலே வைக்குறாங்களாக்கும்....."

"கொஞ்சமாக எண்ணையை விட்டு, ரவையைப் போட்டு வறுக்கவும்."

"புருசனை வறுக்கிறா மாதிரி இல்லாம இருந்தா சரி..."

"இளஞ்சிவப்பாக ரவை மாறியதும் அதை ஒரு அகலமான தட்டில் ஆற வைக்கவும்...."

"அடுப்பை உங்க சித்தப்பாவா வந்து அணைக்கப்போறாரு?"


"வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்."

"இந்த நேரத்துலே ஆம்பிளைங்கெல்லாம் சந்தர்ப்பம் பார்த்து ஓடிப்போயிருங்க.....!"

"தக்காளியைத் துண்டுதுண்டாக வெட்டவும்..."

"கையிலே கத்தியைக் கொடுத்தாலே இப்படித்தான்...."

"பட்டாணியின் தோலை உரிக்கவும்...."

"இவளுக்கு இதெல்லாம் சர்வசாதாரணம்...."

"பச்சை மிளகாயைக் கீறவும்..."

"இதைச் செய்ய இவளுக்குக் கத்தியே வேண்டாம்...."


"இஞ்சியைப் பொடிப்பொடியாக நறுக்கவும்..."

"இவ்வளவு வயலன்ஸ் தேவையா...?"

"கருவேப்பிலை, கொத்தமல்லியைக் கிள்ளி வைக்கவும்..."

"எதுக்கும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க! உங்களைக் கிள்ளிறப் போறாங்க....!"

"வாணலியிலே எண்ணையை விட்டு....."

"திரும்பவும் முதல்லேயிருந்தா...? அவ்வ்வ்வ்வ்...!"

"எண்ணை சூடானதும், அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயம், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், ஜீரகம் உப்பு எல்லாத்தையும் போட்டு..."

"நல்லாக் கிண்டுங்க! அதுதான் கை வந்த கலையாச்சே....!"

"பொன்னிறமானதும்....."

"அதைக் கொண்டு போய் நகைக்கடையிலே கொடுத்துப் புதுநகை வாங்கவும்....."

"உருளைக்கிழங்கையும், கேரட்டையும் போட்டு வதக்கவும்...."

"சும்மா சொல்லக்கூடாது. நல்ல மெமரி பவர்... ஆனா, அடிக்கடி வயசைத்தான் மறந்திடறா...."

"பட்டாணி, தக்காளியும் சேர்த்து வதக்கி, கொஞ்சம் பதம் வந்ததும் தண்ணீர் ஊற்றவும்..."

"ஆமா... அப்பத்தான் உப்புமா ரசம் மாதிரி தெளிவா இருக்கும்....."

"கருவேப்பிலையும் கொத்துமல்லியையும் சேர்த்து விடவும்...."

"இல்லியா பின்னே, அதுங்களை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்..?"


"ரவையை மெதுவாகக் கிளறிக்கிட்டே இருக்கணும்..."

"இந்த சமயத்துலே எதிர்வீட்டு சினேகிதிக்கு போன் பண்ணிப் பேசிக்கிட்டே கிளறினா இன்னும் நல்லாக் கிண்டலாம்...."

"அடுப்பைக் குறைத்து ஒரு தட்டைப் போட்டு மூடவும்...."

"அப்பாடா! இது ஒண்ணு தான் எனக்குப் பிடிச்சிருக்கு...."


"ஆவியிலே கொஞ்ச நேரம் வேகவைத்து விட்டுப் பிறகு இறக்கவும்..."

"எதை? ஆவியையா....?"


"சூடான சுவையான உப்புமா தயார்!"

"யாரும் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வராதீக! சூடா இருக்குமுங்கிறத வேண்ணா ஒத்துக்கறேன். மத்ததைச் சாப்பிட்டுச் சொல்லுங்க!"

ஹலோ எங்க ஓடறீங்க.... இன்னும் இதுமாதிரி குறிப்பெல்லாம் சொல்லறேங்க... பிளீஸ்... ஓடாதீங்க... ஹலோ... ஹலோஓஓஓஓஓஓ...




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 30, 2011 9:15 am

///எத வேண்ணா போடலாம் அக்கா... படிச்சிட்டு அவங்க தலயிலெ அவங்களே முட்டிக்குவாங்க... நம்பள ஒண்ணும் பண்ண மாட்டாங்க... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க....////

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jun 30, 2011 9:18 am

தாமு wrote:///எத வேண்ணா போடலாம் அக்கா... படிச்சிட்டு அவங்க தலயிலெ அவங்களே முட்டிக்குவாங்க... நம்பள ஒண்ணும் பண்ண மாட்டாங்க... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க....////

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
ஒரு உப்புமாவுக்காக துப்பாக்கியெல்லாம் தூக்கலாமா... அட்ரஸ் கொடுத்தா அக்கா செஞ்ச J J உப்புமாவ பார்சல் அனுப்பறேங்க...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 30, 2011 9:20 am

சூப்பர் நண்பா நல்லா ரசிஸ்சு சிரிஸ்சென் சிரி சிரி சிரி


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 30, 2011 9:21 am

dsudhanandan wrote:
தாமு wrote:///எத வேண்ணா போடலாம் அக்கா... படிச்சிட்டு அவங்க தலயிலெ அவங்களே முட்டிக்குவாங்க... நம்பள ஒண்ணும் பண்ண மாட்டாங்க... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க....////

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
ஒரு உப்புமாவுக்காக துப்பாக்கியெல்லாம் தூக்கலாமா... அட்ரஸ் கொடுத்தா அக்கா செஞ்ச J J உப்புமாவ பார்சல் அனுப்பறேங்க...

பயம்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jun 30, 2011 11:00 am

தாமு wrote: பயம்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஏன் பாஸ் உப்புமா வேண்டாமா.....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 30, 2011 11:05 am

நான் இப்போ உப்புமா தான் சாப்பிட்டு கொண்டு இருக்கேன்



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 30, 2011 11:11 am

J J உப்புமா 2825183110 J J உப்புமா 168300 J J உப்புமா 168300 J J உப்புமா 168300 J J உப்புமா 168300 J J உப்புமா 168300 J J உப்புமா 168300 J J உப்புமா 168300 J J உப்புமா 168300 J J உப்புமா 168300 J J உப்புமா 168300 J J உப்புமா 168300 J J உப்புமா 168300 J J உப்புமா 168300 J J உப்புமா 168300 J J உப்புமா 168300 J J உப்புமா 168300



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 30, 2011 11:16 am

அந்த நண்பர் யாருனு சொல்லவே இல்லையே J J உப்புமா 755837 J J உப்புமா 755837



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 30, 2011 11:18 am

dsudhanandan தலைப்பையும், பதிவையும் நகைச்சுவைக்கு மத்திட்டேன் தம்பி அன்பு மலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக