புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரம்ம ஞானம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 27, 2011 8:38 am

சாயிபாபா வீதி உலா வரும்போது, தன் மகனுக்கு ஏற்பட்டிருக்கும் பிளேக் கட்டியை குணப்படுத்துமாறு திருமதி தாதா சாஹேப் கபர்டே, கண்ணீருடன் வேண்டினாள்.

“வானம் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது. அந்த மேகங்கள் மழையாக மாறி உருகி ஓடிவிடும். எல்லாம் எளிதாகவும் தூயதாகவும் மாறும்.’ என்று கூறியபடியே பாபா, தான் அணிந்திருந்த நீண்ட அங்கியை இடுப்பு வரை தூக்கினார். அவரது இடுப்பைப் பார்த்த பக்தர்கள் பதறிப் போனார்கள்.

ஏன் தெரியுமா?

பாபாவின் இடுப்பில் பெரிதாக முட்டை அளவுக்கு நான்கைந்து பிளேக் கட்டிகள் இருந்தன!

“பாருங்கள். இதெல்லாம் பக்தர்களுக்கு வந்து பிளேக் கட்டிகள்தான். பக்தர்களின் கஷ்டங்கள் என்னுடைய கஷ்டங்கள் என்பதால், அவர்கள் நல்வாழ்வு வாழ, நான் அந்தக் கட்டிகளைச் சுமக்கிறேன்’ என்று சொல்லியபடியே தாங்கித் தாங்கி நடந்து சென்றார்.

ஆம். அதுதான் பாபா. பக்தர்களின் துன்பங்களைத் தான் வாங்கிக் கொண்டு, அவர்ளின் சந்தோஷத்தில் இன்பம் காண்பது அவரது வழக்கம். நாடெங்குமிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஷீரடி நோக்கி விரைந்ததற்கு முக்கியமான காரணம் இதுதான்.

சாயி பாபா யாரிடமும் எதுவும் பெறுவதில்லை. எந்தக் கட்டணமும் அங்கே கிடையாது. அவருக்காகத் தோன்றினால் சிலரிடம் தட்சணை கேட்பார். அதுவும் ஒரு பைசாவோ, இரண்டு பைசாவோதான். அதையும் எண்ணெய் வாங்கவும், புகை பிடிக்க புகையிலை வாங்கவுமே உபயோகப்படுத்தினார்.

அவருடைய பையில் குவியலாக எதுவோ இருக்கும். அது என்ன தெரியுமா? தீக்குச்சிகள். அதுவும் எரிந்து போன தீக்குச்சிகளை மொத்தமாய் சேகரித்துத் தன் பையில் பத்திரமாக வைத்துக் கொள்வார்.

அந்தச் செயல் மற்றவர்களுக்கு வேண்டுமானால் பித்துக்குளித்தனமாக இருக்கலாம். ஆனால் அதெல்லாம் பக்தர்களின் பாவங்கள் என்பதும், அவற்றை எரித்துப் புனிதப்படுத்தியிருக்கிறார் என்பதும் அவருக்கு மட்டும்தான் தெரியும்.

ஞானிகளை வெறும் கையுடன் பார்க்கக்கூடாது என்பது நியதி என்பதால், பாபாவைப் பார்க்க வரும் பக்தர்கள், அவர் முன்னால் செப்புக் காசுகளை வைப்பார்கள். அதில் ஒரு பைசா இருந்தால் மட்டும் அதை பாபா எடுத்துத் தன் பையில் போட்டுக் கொள்வார். அதற்கு மேற்பட்ட நாணயங்களை உடனே திரும்ப எடுத்துக் கொள்ளச் சொல்லி சத்தம் போடுவார்.

சிலரிடம் மட்டும் பாபா குறிப்பிட்ட தட்சணையைக் கேட்டு பெறுவார். அது ஏன்? “நான் வாங்கியதைப் போல் நூறு மடங்காகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்று அவரது வாய் முணுமுணுக்கும்.

பாபாவின் புகழ் உலகமெங்கும் பரவியது. ஏராளமான பக்தர்கள் ஷீரடியை நோக்கிப் படையெடுத்தார்கள். தட்சணைகள் குவிந்தாலும், பாபா அதையெல்லாம் உடனே தானம் செய்துவிடுவார். தனக்கென்று எதுவும் வைத்துக் கொண்டதே இல்லை. மறுநாள் பார்த்தால் அங்கே ஒரு பைசா கூட இருக்காது.

பாபா, மகாசமாதி அடைந்தபோது அங்கே சில ரூபாய்கள் மட்டுமே இருந்தன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை.

ஆனால் இன்றைக்கும் எத்தனையோ பேர் ஞானிகள் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை வைத்துக் கொண்டு துறவிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள்!

சில செல்வந்தர்கள், பாபாவின் மேல் உள்ள பக்தியால் விலை மதிப்புமிக்க பொருட்களை கொண்டு வருவார்கள். அதை பாபா பார்க்கக் கூட மாட்டார். சீற்றமடைந்து கடும் வார்த்தைகளால் திட்டுவார்.

“எனக்கு ஒரு கோவணம், துண்டு, ஒரு அங்கி, ஒரு தகரக் குவளை போதும். தேவையில்லாத எதையெதையோ கொன்டு வந்து என்னைத் தொல்லைப்படுத்தாதீர்கள்.’ என்று எரிந்து விழுவார்.

அப்படிப்பட்ட ஷீரடி சாயிபாபாவே, ஒரு பக்தனிடம் இருந்து ஐந்து ரூபாய் வாங்க வேண்டும் என்பதற்காகப் படாதபாடு பட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா? எல்லாம் அவரது லீலைதான்.

இதோ அந்த உண்மை சம்பவம்!

ஐந்து ரூபாய் கடன்

ஷீரடிக்குச் சற்றுத் தள்ளி ஒரு நகரத்தில் செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனிடம் நிறையப் பணம் இருந்தது. ஆனால் மனிதன் சரியான கஞ்சன். யாருக்கும் எதுவும் தர்மம் செய்தோ, உதவிகள் செய்தோ பழக்கம் இல்லாதவன். தவிர பேராசைக்காரனும் கூட.

சாயிபாபாவின் புகழைக் கேள்விப்பட்ட அந்தப் பணக்காரனுக்கு விபரீதமான ஓர் ஆசை வந்தது.

அது என்ன தெரியுமா? அவனிடம் பணத்துக்குப் பஞ்சமில்லை. வேலையாட்களுக்கும் குறைவில்லை. நோய் நொடி கூட இல்லை. அதனால் சாயிபாபாவிடம் பிரம்ம ஞானத்தை அறிய வேண்டும் என்ற ஆசை அவனுக்கு எழுந்தது.

அவனது நண்பன் சொல்லிப் பார்த்தான். “பிரம்ம ஞானம் எல்லாம் பெரிய விஷயம் அதைக் கேட்பதற்கே ஒரு தகுதி வேண்டும். உனக்கு அதெல்லாம் கிடையாது. பேராசைக்காரனான நீ அளவுக்கு மீறி ஆசைப் படுகிறாய். பாபாவிடம் சென்றால், உன்னைப் பார்த்தாலே அவர் எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிடுவார். அவரிடம் திட்டு வாங்கிக் கொண்டுதான் நீ திரும்புவாய்’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தான்.

“போடா’ என்றான் பணக்காரன். “நான் பிரம்ம ஞானத்தை அறிந்து கொள்ள கூடாது என்ற கெட்ட எண்ணம் உனக்கு!’ என்று நண்பனை அடித்த விரட்டினான்.

குதிரை வண்டியில் ஏறி ஷீரடி சென்றான் செல்வந்தன். அவன் சட்டைப் பையில் நிறைய பணம் வேறு இருந்தது.

பாபாவைப் போய் பார்த்தான். “பாபா அவர்களே, இங்கு வருகை புரியும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் குறைகளை எல்லாம் தீர்க்கிறீர்கள். என்னிடம் எந்தக் குறையும் இல்லை. அதனால் நீங்கள் எனக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்தால் நான் சந்தோஷமடைவேன்’ என்றான்.

பாபா சிரித்தார். “நண்பனே, என்னிடம் வருபவர்கள் பணம், உடல் நலம், புகழ், பதவி என்று கேட்டுத்தான் இங்கே வருகிறார்கள். ஆனால் என்னிடம் பிரம்ம ஞானத்தைக் கேட்ட முதல் ஆள் நீதான் உனக்கு அதை தெளிவாக்குகிறேன்’ என்றார்.

பணக்காரனுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. பாபா முன்னால் போய் உட்கார்ந்து கொண்டான். மணிக்கணக்காயிற்று. பாபா வேறு எதேதோ வேலைகளை கவனித்தாரே தவிர, அவனைக் கண்டுகொள்ளவே இல்லை. நொந்து போனான் அவன்.

அப்போது பாபா, ஒரு பையனைக் கூப்பிட்டு, “நந்து மார்வாடி வீட்டுக்குப் போ. கைமாற்றாக பாபா ஐந்து ரூபாய் கேட்டார் என்று சொல்லி, வாங்கி கொண்டு வா’ என்று அனுப்பினார்.

அந்தப் பையன் சிட்டாகப் பறந்தான். சற்று நேரத்தில் தொய்ந்த தலையுடன் வந்து, “மார்வாடி ஊரில் இல்லை. அவர் வீடு பூட்டியிருக்கிறது’ என்றான்.

பாபா குரோசர் என்பவரிடம் சென்று ஐந்து ரூபாய் கடன் வாங்கி வரச் சொன்னார். பையன் அப்போதும் தோல்வியுடன் திரும்பினான்.

பாபா மீண்டும் சிலரிடம் அதுபோல் ஐந்து ரூபாய் கடன் வாங்கி வரச் சொல்லி அனுப்பினார். அதையெல்லாம் அந்தப் பணக்காரன் எதிரில் உட்கார்ந்து கவனத்துக் கொண்டுதான் இருந்தான். அவன் பையிலோ நிறைய பணம் இருந்தது. அவன் நினைத்தால் ஐந்து ரூபாய் என்ன, நூறு ரூபாய் கூட எடுத்து பாபாவிடம் தந்திருக்கலாம். ஆனால் அவன்தான் கஞ்சப் பிசினாரி அயிற்றே. எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல், பாபா எப்போது உபதேசம் செய்வார் என்றே காத்திருந்தான். “பாபா, நான் வந்து வெகு நேரமாயிற்று. எனக்கு உபதேசம் செய்யுங்கள்’ என்றான்.

பாபா அவனையே பார்த்தார். “அதைத்தான் நான் உபதேசிக்க ஆரம்பித்து வேகு நேரம் ஆகிவிட்டதே நீ கவனிக்கவில்லையா? பிரம்மத்தினைக் கண்டுணர ஒருவன் ஐந்து பொருட்களைத் தானாகக் கொடுக்க வேண்டும். 1. சக்தி, 2. உணர்வு, 3. மனசு, 4. புத்தி, 5. அகங்காரம் ஆகிய ஐந்தையும் தந்தால்தான் பிரம்மஞானம் கிட்டும். அதை நீ புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ஐந்து ரூபாய் கேட்டு ஒவ்வொருவரிடமும் பையனை அனுப்பினேன்.

நீ என்ன பண்ணியிருக்க வேண்டும். உன் பையிலிருந்து ஒரு øந்து ரூபாயையாவது எடுத்து தேவையா என்று கேட்டிருக்க வேண்டும். நான் சரியாகச் சொல்கிறேன். உன் சட்டை பையில் பத்து ரூபாயாக 25 நோட்டுகள் உள்ளன. அந்த 250 ரூபாய் வெளியில் வை’ என்றார்.

நடுங்கிப் போனான் அந்தப் பணக்காரன். பதறியபடியே பணத்தைப் பையிலிருந்து எடுத்தான். பாபா சொன்னது போலவே அதில் 250 ரூபாய்தான் இருந்தது. அதை அப்படியே எடுத்து பாபாவின் காலடியில் வைத்தான்.

“இந்தப் பணம்தான் உனக்கு பிரம்மமாகத் தெரிகிறது. உனது கட்டுப் பிரம்மத்தை நீயே பத்திரமாய் வைத்துக் கொள். உன் பேராசையை நீ முற்றிலும் ஒழிக்காமல் பிரம்மஞானத்தைப் பெறவே முடியாது. பணத்தாசை, இறுமாப்பு, பொறாமை என்னும் முதலைகள் நிறைந்த நீர்ச்சுழியை, ஆசையே இல்லாதவன்தான் கடக்க முடியும்.

பேராசையும் பிரம்மமும் எதிர் எதிர் துருவங்கள். எங்கே பேராசை இருக்கிறதோ, எங்கே மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இல்லையோ அங்கே பிரம்மஞானமும் இல்லை. எனவே நீ முதலில் மனிதனாக மாறு. பிறகு வா பிரம்ம ஞானத்தைக் கற்பிக்கிறேன்’ என்று கூறினார்.

வெட்கத்துடன் அந்தப் பணக்காரன் வெளியில் சென்றான். அவன் அன்று முதல் நிச்சயம் மனிதனாக மாறியிருப்பான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பாபாவிடம் வந்தால் ஏதாவது நல்லது கிடைக்கும். எது எப்படியோ பிரம்மஞானம் பெற வந்த ஒருவன், ஒரு மனிதனாக, நல்ல மனிதனாகத் திரும்பிச் சென்றதே பாபாவிடம் பெற்ற வரம்தான் அல்லவா?



பிரம்ம ஞானம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 27, 2011 8:43 am

அருமை அண்ணா.... நாங்கள் ஷீரடி சாய்பாபா தீவிர பக்தன் சிரி

நல்ல விஷயம் நன்றி அண்ணா பிரம்ம ஞானம் 154550 பிரம்ம ஞானம் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக