புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
19 Posts - 3%
prajai
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேன்மொழிக்கு வந்த சோதனை! மதுரை மீட்புப் போராட்டம்


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 1:27 pm

தேன்மொழிக்கு வந்த சோதனை!

மதுரை மீட்புப் போராட்டம்


மதுரை மாநகராட்சியில் ஊழல், முறைகேடு புகார்கள் என எத்தனையோ வரிசை கட்டி நிற்க, 320 சதுரஅடி பிரச்னையால், லஞ்ச வழக்கில் சிக்கிக்கொண்டு முழிக் கிறார் மேயர் தேன்மொழி!

மதுரை மதிச்சியம் வடக்குத் தெருவில் மாநகராட்சிக்குச் சொந்தமான சமுதாயக்கூடம் உள்ளது. அதன் அருகே இருந்த காலிமனையை, அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க. இலக்கிய அணி துணைச் செயலாளர் சுந்தர்ராஜன் ஆக்கிரமித்து வீடு கட்ட, மாநகராட்சிக்குப் புகார் போனது. அதை யாரும் கண்டுகொள்ளாமல் போகவே, மேயர் மீது வழக்குப் போட்டார் வக்கீல் ஜெயராம்!

அவரைச் சந்தித்தோம். 'மாநகராட்சி இடத்தை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்தால் மேயரோ, கமிஷனரோ நேரடியாக நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட நபர் மீது போலீஸில் புகார் கொடுக்க வேண்டும். ஆனால், இங்கே காம்பவுண்ட் சுவரைக்கூட இடித்துவிட்டு, மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து இரண்டு மாடி கட்டடமே கட்டிவிட்டார்கள். எட்டு மாதங்களாகத் தொடர்ந்து புகார் கொடுத்தும் பதில் இல்லை. காரணம், சுந்தர்ராஜன் தி.மு.க-காரர் மட்டும் அல்ல, மேயரின் கணவர் கோபிநாதனுக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் மாணிக்கம் பிள்ளைக்கு வேண்டியவர். அதனால், பல லட்சம் மதிப்புள்ள அந்த நிலத்தையே அவருக்குப் பட்டா போட்டுக் கொடுக்க ஆயத்தமாகிவிட்டனர்.
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் So27b
ஆகவே, லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளருக்குப் புகார் அனுப்பினேன். அதற்கும் பதில் இல்லை. உடனே, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குப் போட்டேன். என் புகாரின்படி லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், இல்லை என்றால் உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் தனிநபர் வழக்குப் போடலாம் என்று 24.2.11 அன்று நீதிமன்றம் உத்தரவு இட்டது.

சுந்தர்ராஜனிடம் லஞ்சம் வாங்கியவர்களில் ஒருவரான சர்வேயர் குருசாமி, 'நீ எந்தக் கோர்ட்டுக்கு போனாலும், கடைசியில் ரிக்கார்டுக்கு எங்ககிட்டதான வரணும்?’ என்று மமதையாக சொன்னார். சொன்னதுபோலவே, அந்த இடத்தை ராமமூர்த்தி என்பவரிடம் இருந்து, சுந்தர்ராஜனின் மனைவி ரங்கம்மாள் பெயருக்கு கிரையம் பண்ணியதாக போலி ஆவணமும் ரெடி பண்ணிட்டாங்க.

உயர் நீதிமன்ற உத்தரவு நகலை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் தொடங்கவில்லை. அதனால் நீதிமன்றம் கொடுத்த 2-வது வாய்ப்பின்படி, மதுரை தலைமை நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன். அதை விசாரித்த நீதிபதி, மேயர் தேன்மொழி, கான்ட்ராக்டர் மாணிக்கம்பிள்ளை, ஆணையாளர் செபாஸ்டின், நகரமைப்பு அதிகாரி முருகேசன், சர்வேயர் குருசாமி, தி.மு.க. பிரமுகர் சுந்தர்ராஜன், அவரது மனைவி ரங்கம்மாள் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு இட்டது!' என்றார்.
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் So27a
மேயர் சார்பில் பேசிய அவரது கணவர் கோபிநாதன், 'இதுவரை இந்த விஷயம் மேயரின் கவனத்துக்கு வரவே இல்லை. நேற்றுதான் நகரமைப்பு அதிகாரியிடம் கேட்டேன். சுந்தர் ராஜன், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 1 லட்சம் நிதி உதவியுடன் கட்டிய வீடு அது. வீட்டின் மொத்த பரப்பே 320 சதுரடி(!)தான். தாசில்தார், நகராட்சி இன்ஜினியர் உள்ளிட்ட அதிகாரிகள்... 'அந்த இடத்துக்குப் பட்டா, பத்திரம் சரியாக இருக்கிறதா?’ என்று ஆய்வு செய்த பின்னரே வீடு கட்ட அனுமதி கொடுத்தார்கள். வீடு கட்டும்போது மாநகராட்சி இடத்தில் இரண்டு அடி இழுத்துக்கட்டிவிட்டதாக புகார் வந்ததால், ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மட்டும் இடித்தனர். மொத்த வீட்டையும் இடிக்க வேண்டும் என்று வீம்பு செய்த ஜெயராம், நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு உள்ளார். இந்தப் பிரச்னைபற்றி மேயரைச் சந்தித்து இதுவரை ஒரு மனுகூட அவர் கொடுத்தது இல்லை. மண்டலங்கள்தோறும் நடத்தப்படும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் அவர் மனு கொடுக்கவில்லை. பிறகு ஏன் சம்பந்தமே இல்லாமல் மேயரை வழக்கில் சேர்த்தார் என்றே தெரியவில்லை. அவர் அ.தி.மு.க. வக்கீல் என்பதால் திட்டம் இட்டு அசிங்கப்படுத்துகிறார்!' என்றார்.
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் So27
விஜிலன்ஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'நீதிமன்ற உத்தரவுப்படி மேயர் உள்ளிட்ட 13 பேர் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளோம். அவர்கள் மீதான குற்றம் நிரூபணமானால், குறைந்தது ஓர் ஆண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டுவரை சிறைத் தண்டனை கிடைக்கும்!'' என்றார்.

இதற்கிடையே, மேயர் தேன்மொழி முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளார். இன்னும் என்னென்ன புகார்கள் கிளம்பப் போகிறதோ?

‍நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் 47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jun 23, 2011 1:36 pm

"மொழி" மற்றும் "நிதி" -- ன்னாலே இப்ப பிரச்சினைதானோ...

கனிமொழி, தேன்மொழி, ...????

நேற்று தினமலர்... இன்று விகடன்... நான் இந்த வாரம் விடகனும் வாங்கலீங்கோ ஜாலி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 2:47 pm

ஒழுங்கா என் அக்கவுண்ட் நம்பர் தரேன் படிச்சதுக்கு பத்து தினார் அனுப்புங்க என் அக்கவுண்ட்ல சிப்பு வருது



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக