புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
by ayyasamy ram Today at 15:50
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா?
Page 1 of 1 •
கலாச்சாரம் என்பது ஆங்கிலத்தின் CULTURE என்பதின் திரிபான சொல் அல்லது
சமஸ்கிருதத்தின் கலாச்சார் என்பதில் திர்பான சொல். ஆங்கிலத்தில் CULTURE
என்பது CULTIVATE என்னும் சொல்லில் இருந்து வருகின்றது. அதாது சமூகத்தின்
விளைச்சல் என எடுத்துக் கொள்ளலாம், அல்லது பண்படுதல் என்றும் எடுத்துக்
கொள்ளலாம். தமிழில் இதற்கு பண்பாடு என்று தான் சொல்ல வேண்டும். உலகில்
ஒவ்வொரு இன மக்களுக்கும் ஒருவித பண்பாட்டுக் கூறுக்கள் இருக்கின்றன.அந்த
பண்பாடு என்பது ஒரே இரவில் தோன்றியது அல்ல. மாறாக பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகள் படி முறை வளர்ச்சியாக கொஞ்சம் கொஞ்சமாக தோன்றியது. பண்பாடு என்பது வளரும் தன்மை உடையது. வளர்ச்சி வீதங்கள் பொருளாதார, மக்கள் வாழ்வு, நாகரிகவளர்ச்சி, நம்பிக்கைகள் என பல்வேறு கூறுகளால் மாறுபாடு அடைகின்றது. இன்று உலகில் இருக்கும் கலாச்சாரங்கள் ஒவ்வொன்றும் வளராமல் தேங்கிய நிலையில் எவையும் இல்லை. எதோ ஒரு வீதத்தில் வளர்ந்துக் கொண்டே தான் இருக்கின்றன.
பண்பாடு என்பதை ஒரு மக்கள் கூட்டம் பின்பற்றுவதே ஆகும். ஒரே மக்கள்
கூட்டத்திலும் கூட பண்பாட்டினை வெவ்வேறு அலகுகளாகவே குடும்பங்கள்
பின்பற்றுக்கின்றன, பொதுப்படையாக ஒருக் கூட்டத்துக்கும் மறுக் கூட்டத்துக்கும் பண்பாட்டுக் கூறுகள் மாறுபடுகின்றன. பண்பாடுகளில் எது உயர்வு தாழ்வு என்பதை நம்மால் நிர்ணயிக்க முடியாது, வேகமாகவும் முன்னோக்கியும் நகரும் பண்பாடுகளை ஒரு அளவுக் கோலாக நாம் எடுத்துக் கொள்கின்றோம். பண்பாடுகள் ஒன்றோடு ஒன்று தொடர்புப் படாத, அல்லது தொடர்புகள் குறைந்தக் காலத்தில் அளவுக் கோல்கள் என்று அவ்வளவாக எதுவும் இருந்திருக்கவில்லை, தான்தோன்றியாகவே அவை வளர்ந்தன. ஆனால் தொடர்புகள் ஏற்பட்ட பின் அளவுகோலின் அடிப்படையில் ஒவ்வொரு பண்பாடும் மாற்றங்களைக்
கொண்டு வரத்தொடங்கின.
பண்பாடு என்பதற்கும் மொழிக் கூட்டத்துக்கும் பெரிதும் சம்பந்தம் இல்லை. ஒரே
பண்பாடு உடையவர்கள் வெவ்வேறு மொழி பேசுபவர்களாகவும், ஒரே மொழி பேசுபவர்களேவெவ்வேறு பண்பாடுகளையும் கூட கொண்டிருக்கின்றனர். சில இடங்களில் ஒரே மொழிக் கூட்டத்துக்கு ஒரே பண்பாடும் உள்ளன. மதங்களுக்கும் பண்பாட்டுக்கும் கூட தொடர்புகள் இருக்கின்றன. ஏனெனில் மதங்கள் பண்பாட்டை உருவாக்குவதில்லை, இருந்தாலும் அந்த மதம் தோன்றிய பண்பாட்டினை மதங்கள் சுவீகரித்துக் கொள்கின்றன.
பிறகு அம்மதங்கள் பரவும் இடங்களில் அந்தப் பண்பாடுகளையும் வெவ்வேறு
கலவைகளில் பரப்பி விடுகின்றன. குறிப்பாக சனாதன தர்மம் எனப்படும் இந்து மதம் தென்னிந்தியாவில் பரவிய போது, பல பண்பாட்டுக் கூறுகளை இங்கே கொண்டு வந்தன.ஆனாலும் தமிழர்கள் தமது மரபை முற்றிலும் விட்டுக் கொடுக்கவில்லை. மரபு என்பது காலம் காலமாகவே ஒரு இடத்தில் ஒரு கூட்டத்தினரால் பின்பற்றப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள் வாழ்வியல் முறைகளாகும். தமிழர்கள் பௌத்த, சமண மதங்களை தழுவிய போதும் தமது மரபுகளை மாற்றியமைக்கவில்லை. குறிப்பாக சமண சமயம் உள்ளூர் வாசிகளின் மொழிகள், வாழ்வியலில் குற்றமில்லாத போது அவற்றை மாற்ற விரும்பியது இல்லை. தமிழர்களின் பண்பாடு சமணக் காலத்தில் ஒரு உயர்வு நிலைக்கு கொண்டுவரப்பட்டது.சமணம் தமிழர்களின் மரபுகளில் குற்றங்களை கடிந்த
அதே நேரத்தில் மரபுகளின் குற்றமில்லாத வாழ்வியல் முறைகளை ஏற்றுக்கொண்டது.
தொல்காப்பியரும் மரபு திரிதலை மொழிக்கும் - வாழ்வியலுக்கும்
எடுத்துரைக்கிறார். மரபு என்பது திரிந்துவிட்டால் அதன் தனித்தன்மை முற்றிலும் அழிந்துவிடும். அதாவது காலம் காலமாக இருக்கும் பழக்க வழக்கங்களை
மாற்றினால் அதன் தனித்தன்மை மாற வாய்ப்புள்ளது. ஆனால் அதே சமயம் மரபு
அப்படியே இருக்குமாயின், கால வளர்ச்சிக்கு ஏற்றவாறு வளராமல் பிற்போக்குத்
தனமாகவே இருந்து, அழியும் வாய்ப்பும் உள்ளது. அதனால் ஒரு பண்பாட்டில்
உயர்வான கூறுக்களை பேணிக் கொள்ள வேண்டும், அதன் மையக் கரு சிதைவடையக் கூடாது. அதே சமயம் பண்பாட்டில் காலத்துக்கு ஏற்ற வளர்ச்சியும் நாகரிகத்தோடு ஒட்டி ஏற்படுத்துதல் வேண்டும். பண்பாடு என்பது உடனடியாக மாறக் கூடியதே அல்ல, ஆனால் மாற்றமில்லாமலும் இருக்கக் கூடியதும் இல்லை.
நாகரிகம் என்பது கடிகாரத்தின் பெரிய முள் போல வேகமாக சுழலும், ஆனால்
பண்பாடு என்பது சின்ன முள் போல மெதுவாகவே சுழலும். எந்தவொரு கடிகாரத்திலும் சின்ன முள் வேகமாக சுழன்றால் கடிகாரம் தவறான வழிகள் செல்வதாகவே கணிக்க முடியும். ஒவ்வொரு பண்பாடும் உன்னதமானது என்றெல்லாம் இல்லை, மண்ணின் வாசத்துக்கு ஏற்ப மாறுபாடு உடையது. எக்சிமோக்களிடம் போய் சேலை உடுத்து எனக்கூற முடியாது ஏனெனில் அது கடும் பனிப் பிரதேசம் அல்லவா ? அதே போல ஒவ்வொரு மண்ணின் நிலைக்கு ஏற்ப பண்பாடுகள் மாறுபடும்.
தமிழ்க் கலாச்சாரங்களின் மீது குற்றம் காணும் சிலர், அதனை அடியோடு மாற்றிவிட்டு புதிய கலாச்சாரங்களை இறக்குமதி செய்ய விரும்புகின்றனர். ஆனால் ஐரோப்பிய மிசனரிகள் கூட அப்படியான எண்ணத்திலேயே இங்கு வந்தனர், ஆனால் அவர்கள் நமது கலாச்சாரங்களை முழுமையாக உணர்ந்த பின் இவற்றை முற்றிலும் மாற்றுவது தேவையற்றது என்பதால், இந்தியக் கலாச்சார விழுமியங்களை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். சிறந்த உதாரணமாக வீரமாமுனிவர் என்ற ஐரோப்பிய பாதிரியைக் குறிப்பிடலாம்.
தமிழ்க் கலாச்சாரம் குற்றமற்றது, உலகிலேயே தலைசிறந்தது எனக் கூறவரவில்லை. ஜரவாக்களுக்கு எப்படி அவர்கள் கலாச்சாரம் உயர்ந்ததோ, அதே போல தமிழர்களுக்கு தமிழ்க் கலாச்சாரம் உயர்வாகத் தான் தெரியும். ஆனால் அதே சமயம் ஏனையக் கலாச்சாரங்கள் தாழ்வானதும் இல்லை. தமிழ்க் கலாச்சாரங்களில் இருக்கும் குற்றங்களைத் குறைக் கூறுபவர்கள், குற்றங்களைத் தான் களையவேண்டுமே ஒழிய முற்றிலுமாக மாற்றியமைப்பது அல்ல.
மதங்களின் போர்வையில் வரும் கலாச்சாரப் படையெடுப்புகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். கிறித்த கத்தோலிக்க மதங்கள் செவ்விந்தியக் கலாச்சாரங்களை பூண்டோடு அழித்ததன் விளைவு, அந்த நாடுகள் இன்றளவும் முன்னேறுவதில் தடையாக இருக்கின்றன. ஒரு கலாச்சாரம் அழியத்தொடங்கினால், அந்த மக்களிடம் தாழ்வு மனப்பான்மை தானகவே ஓங்கிவிடும் என்பதே.
முகத்தில் பரு இருப்பதால் முகத்தையே மாற்ற முடியுமா ? மனைவியிடம் சிறுக்
குறை இருப்பதால் மனைவியே மாற்ற முடியுமா என்ன ? உலகம் முழுவதும் அனைத்துக் கலாச்சாரங்களை அழித்து ஒரேக் கலாச்சாரமாக மாற்ற முனைவதும், அனைத்து மொழிகளை அழித்து ஒரே மொழியாக மாற்ற முனைவதும் அனைத்து இனங்களை படுகொலை செய்து ஒரே இனமாக மாற்ற முனைவதும் ஒன்றே தான். அதுவே பாசிச சிந்தனையாகும்.
தமிழ்க் கலாச்சாரங்களில் இருக்கும் குற்றங்களை களைய வேண்டுமாயின் சமூக
விழிப்புணர்வே தேவையாகும். தமிழ்க் கலாச்சாரங்களில் இருந்த பல குற்றங்கள்
காலம் காலமாக மாறுபட்டே வந்துள்ளது, காலப் போக்கில் இப்போதுள்ள
குற்றங்களும் இல்லாமல் போகும் என்பதிலும் ஐயமில்லை. ஆங்காங்கே நடக்கும்
குற்றங்களை களைய நாம் நடவடிக்கை எடுத்தக் தான் வேண்டும். குறிப்பாக பெண்களை சமமாக மதித்தல், வரதட்சணை முறை, சிசுக் கொலை, சாதிய வேறுபாடுகள், என பல்வேறு குற்றங்கள் நமதுக் கலாச்சாரங்களில் இருக்கின்றன. இவற்றை நீக்க மக்கள் விழிப்புணர்வும், போதிய சட்டத் திட்டங்களே உதவ முடியும்.
இவற்றைக் காரணம் காட்டி மத மாற்றங்கள் என்பது ஒரு தீர்வாகவே அமையாது என்பதே எனது வாதம். மதம் மாறுவது சுய விருப்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமே ஒழிய ! கலாச்சார தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதினாலோ அல்லது கலாச்சார குற்றங்களில் இருந்து தப்பிக்கும் வழியாகவோ அல்ல !!! ஏனெனில் இஸ்லாமிய மதத்தில் சேர்வதால் கலாச்சாரங்களின் குற்றங்களை அழித்து வாழலாம் என கருதுகின்றார்கள். ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தெற்காசியா என்பது பழமைமிகுந்த பலவேறு சமூக சிக்கல்களைக் கொண்ட நாடு, ஒரு காலக்கட்டத்தில் ஓரே சமயிகளாக இருந்து பின்னர் தத்தமது வழிகளில் வாழ்வியலை அமைத்துக் கொண்ட நாடுகளாகும். குறிப்பாக இஸ்லாம் என்பது இன்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருக்கின்றன. அவை கடந்த 800 ஆண்டுகளுக்கு மேலாக அந்நாடுகளில் வாழும் மக்களால் பின்பற்றப் பட்டு வருகின்றன, அதற்கு முன் இருந்த சமூக சிக்கல்கள் பலவும் மதங்கள் மாற்றமடைந்தாலும் நீக்கப் பட முடியவில்லை என்பது தான் கண்முன்னே விரியும் சாட்சியாகும். சட்டத் திட்டங்கள், இறையாண்மைகள் இல்லாத காலங்களில் மதங்கள் அவ்விடத்தில் இருந்து பரிபாலணை செய்துவந்தன. ஆனால் இன்று தேசங்களும் சட்டங்களும் இறையாண்மைகளும் இருக்கின்றன. இன்றையக் காலக் கட்டத்தில் தேசங்கள் ஊடாகவும், சட்டங்களின் ஊடாகவும், பொதுக் கொள்கை ஒன்றை ஏற்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஊடாகவுமே கலாச்சாரத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க முடியும். ஒருக் கலாச்சாரத்தை அழித்துவிட்டு இன்னொன்றை போட்டு நிரப்புவதால் அல்ல !!! சமூகத்திருத்தங்களால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம். மாற்றங்கள் என்பது ஒரே இரவில் வந்தும் விடாது, ஆனால் எவ்வளவே வேகப் படுத்த முடியுமோ அவ்வளவு வேகப்படுத்துதலை சமூக ஆர்வலர்கள் கொண்டு வர வேண்டும் ....
கலாச்சாரங்களில் மதங்கள் குறிப்பிட்ட பங்காற்றுகின்றனவே ஒழிய !
கலாச்சாரங்களையும் மதங்களையும் ஒன்றாக எண்ண வேண்டியது இல்லை. ஏனெனில் மதங்களைத் துறந்தோர் கூட தாம் சார்ந்த பகுதியின் கலாச்சாரங்களை துறக்க முடியாது, ஆனால் மாற்றங்களை நோக்கிய நகர்வுகளில் மதங்கள் போடும்
முட்டுக்கட்டைகளை மதங்களுக்கு வெளியே இருந்து மாற்றியமைக்க இயலும்.
கலாச்சாரங்களை நாம் பேண வேண்டும். அதே சூழலில் கலாச்சாரங்களில் உள்ள பிழைகளை களையறுக்கவும் வேண்டும், புதிய சோதனைகளை ( EXPERIMENTS ) அரங்கேற்றவும் வேண்டும். அதே போல மற்றவரின் கலாச்சாரங்களை தாழ்வாக எண்ணவதையும் நிறுத்துங்கள். அமேசான் பழங்குடிகளின் கலாச்சாரம் நம்மை விட தாழ்வானது ஒன்றுமில்லையே. அவர்கள் வாழ்வியலுக்கு அது உயர்வான ஒன்றே. அதே போல கலாச்சார தாழ்வு மனப்பானமையூட்டலையும் நான் இக்கணத்தில் வன்மையாக கண்டிக்கின்றேன்.
நன்றி:கொடுக்கி.நெட்
சமஸ்கிருதத்தின் கலாச்சார் என்பதில் திர்பான சொல். ஆங்கிலத்தில் CULTURE
என்பது CULTIVATE என்னும் சொல்லில் இருந்து வருகின்றது. அதாது சமூகத்தின்
விளைச்சல் என எடுத்துக் கொள்ளலாம், அல்லது பண்படுதல் என்றும் எடுத்துக்
கொள்ளலாம். தமிழில் இதற்கு பண்பாடு என்று தான் சொல்ல வேண்டும். உலகில்
ஒவ்வொரு இன மக்களுக்கும் ஒருவித பண்பாட்டுக் கூறுக்கள் இருக்கின்றன.அந்த
பண்பாடு என்பது ஒரே இரவில் தோன்றியது அல்ல. மாறாக பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகள் படி முறை வளர்ச்சியாக கொஞ்சம் கொஞ்சமாக தோன்றியது. பண்பாடு என்பது வளரும் தன்மை உடையது. வளர்ச்சி வீதங்கள் பொருளாதார, மக்கள் வாழ்வு, நாகரிகவளர்ச்சி, நம்பிக்கைகள் என பல்வேறு கூறுகளால் மாறுபாடு அடைகின்றது. இன்று உலகில் இருக்கும் கலாச்சாரங்கள் ஒவ்வொன்றும் வளராமல் தேங்கிய நிலையில் எவையும் இல்லை. எதோ ஒரு வீதத்தில் வளர்ந்துக் கொண்டே தான் இருக்கின்றன.
பண்பாடு என்பதை ஒரு மக்கள் கூட்டம் பின்பற்றுவதே ஆகும். ஒரே மக்கள்
கூட்டத்திலும் கூட பண்பாட்டினை வெவ்வேறு அலகுகளாகவே குடும்பங்கள்
பின்பற்றுக்கின்றன, பொதுப்படையாக ஒருக் கூட்டத்துக்கும் மறுக் கூட்டத்துக்கும் பண்பாட்டுக் கூறுகள் மாறுபடுகின்றன. பண்பாடுகளில் எது உயர்வு தாழ்வு என்பதை நம்மால் நிர்ணயிக்க முடியாது, வேகமாகவும் முன்னோக்கியும் நகரும் பண்பாடுகளை ஒரு அளவுக் கோலாக நாம் எடுத்துக் கொள்கின்றோம். பண்பாடுகள் ஒன்றோடு ஒன்று தொடர்புப் படாத, அல்லது தொடர்புகள் குறைந்தக் காலத்தில் அளவுக் கோல்கள் என்று அவ்வளவாக எதுவும் இருந்திருக்கவில்லை, தான்தோன்றியாகவே அவை வளர்ந்தன. ஆனால் தொடர்புகள் ஏற்பட்ட பின் அளவுகோலின் அடிப்படையில் ஒவ்வொரு பண்பாடும் மாற்றங்களைக்
கொண்டு வரத்தொடங்கின.
பண்பாடு என்பதற்கும் மொழிக் கூட்டத்துக்கும் பெரிதும் சம்பந்தம் இல்லை. ஒரே
பண்பாடு உடையவர்கள் வெவ்வேறு மொழி பேசுபவர்களாகவும், ஒரே மொழி பேசுபவர்களேவெவ்வேறு பண்பாடுகளையும் கூட கொண்டிருக்கின்றனர். சில இடங்களில் ஒரே மொழிக் கூட்டத்துக்கு ஒரே பண்பாடும் உள்ளன. மதங்களுக்கும் பண்பாட்டுக்கும் கூட தொடர்புகள் இருக்கின்றன. ஏனெனில் மதங்கள் பண்பாட்டை உருவாக்குவதில்லை, இருந்தாலும் அந்த மதம் தோன்றிய பண்பாட்டினை மதங்கள் சுவீகரித்துக் கொள்கின்றன.
பிறகு அம்மதங்கள் பரவும் இடங்களில் அந்தப் பண்பாடுகளையும் வெவ்வேறு
கலவைகளில் பரப்பி விடுகின்றன. குறிப்பாக சனாதன தர்மம் எனப்படும் இந்து மதம் தென்னிந்தியாவில் பரவிய போது, பல பண்பாட்டுக் கூறுகளை இங்கே கொண்டு வந்தன.ஆனாலும் தமிழர்கள் தமது மரபை முற்றிலும் விட்டுக் கொடுக்கவில்லை. மரபு என்பது காலம் காலமாகவே ஒரு இடத்தில் ஒரு கூட்டத்தினரால் பின்பற்றப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள் வாழ்வியல் முறைகளாகும். தமிழர்கள் பௌத்த, சமண மதங்களை தழுவிய போதும் தமது மரபுகளை மாற்றியமைக்கவில்லை. குறிப்பாக சமண சமயம் உள்ளூர் வாசிகளின் மொழிகள், வாழ்வியலில் குற்றமில்லாத போது அவற்றை மாற்ற விரும்பியது இல்லை. தமிழர்களின் பண்பாடு சமணக் காலத்தில் ஒரு உயர்வு நிலைக்கு கொண்டுவரப்பட்டது.சமணம் தமிழர்களின் மரபுகளில் குற்றங்களை கடிந்த
அதே நேரத்தில் மரபுகளின் குற்றமில்லாத வாழ்வியல் முறைகளை ஏற்றுக்கொண்டது.
தொல்காப்பியரும் மரபு திரிதலை மொழிக்கும் - வாழ்வியலுக்கும்
எடுத்துரைக்கிறார். மரபு என்பது திரிந்துவிட்டால் அதன் தனித்தன்மை முற்றிலும் அழிந்துவிடும். அதாவது காலம் காலமாக இருக்கும் பழக்க வழக்கங்களை
மாற்றினால் அதன் தனித்தன்மை மாற வாய்ப்புள்ளது. ஆனால் அதே சமயம் மரபு
அப்படியே இருக்குமாயின், கால வளர்ச்சிக்கு ஏற்றவாறு வளராமல் பிற்போக்குத்
தனமாகவே இருந்து, அழியும் வாய்ப்பும் உள்ளது. அதனால் ஒரு பண்பாட்டில்
உயர்வான கூறுக்களை பேணிக் கொள்ள வேண்டும், அதன் மையக் கரு சிதைவடையக் கூடாது. அதே சமயம் பண்பாட்டில் காலத்துக்கு ஏற்ற வளர்ச்சியும் நாகரிகத்தோடு ஒட்டி ஏற்படுத்துதல் வேண்டும். பண்பாடு என்பது உடனடியாக மாறக் கூடியதே அல்ல, ஆனால் மாற்றமில்லாமலும் இருக்கக் கூடியதும் இல்லை.
நாகரிகம் என்பது கடிகாரத்தின் பெரிய முள் போல வேகமாக சுழலும், ஆனால்
பண்பாடு என்பது சின்ன முள் போல மெதுவாகவே சுழலும். எந்தவொரு கடிகாரத்திலும் சின்ன முள் வேகமாக சுழன்றால் கடிகாரம் தவறான வழிகள் செல்வதாகவே கணிக்க முடியும். ஒவ்வொரு பண்பாடும் உன்னதமானது என்றெல்லாம் இல்லை, மண்ணின் வாசத்துக்கு ஏற்ப மாறுபாடு உடையது. எக்சிமோக்களிடம் போய் சேலை உடுத்து எனக்கூற முடியாது ஏனெனில் அது கடும் பனிப் பிரதேசம் அல்லவா ? அதே போல ஒவ்வொரு மண்ணின் நிலைக்கு ஏற்ப பண்பாடுகள் மாறுபடும்.
தமிழ்க் கலாச்சாரங்களின் மீது குற்றம் காணும் சிலர், அதனை அடியோடு மாற்றிவிட்டு புதிய கலாச்சாரங்களை இறக்குமதி செய்ய விரும்புகின்றனர். ஆனால் ஐரோப்பிய மிசனரிகள் கூட அப்படியான எண்ணத்திலேயே இங்கு வந்தனர், ஆனால் அவர்கள் நமது கலாச்சாரங்களை முழுமையாக உணர்ந்த பின் இவற்றை முற்றிலும் மாற்றுவது தேவையற்றது என்பதால், இந்தியக் கலாச்சார விழுமியங்களை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். சிறந்த உதாரணமாக வீரமாமுனிவர் என்ற ஐரோப்பிய பாதிரியைக் குறிப்பிடலாம்.
தமிழ்க் கலாச்சாரம் குற்றமற்றது, உலகிலேயே தலைசிறந்தது எனக் கூறவரவில்லை. ஜரவாக்களுக்கு எப்படி அவர்கள் கலாச்சாரம் உயர்ந்ததோ, அதே போல தமிழர்களுக்கு தமிழ்க் கலாச்சாரம் உயர்வாகத் தான் தெரியும். ஆனால் அதே சமயம் ஏனையக் கலாச்சாரங்கள் தாழ்வானதும் இல்லை. தமிழ்க் கலாச்சாரங்களில் இருக்கும் குற்றங்களைத் குறைக் கூறுபவர்கள், குற்றங்களைத் தான் களையவேண்டுமே ஒழிய முற்றிலுமாக மாற்றியமைப்பது அல்ல.
மதங்களின் போர்வையில் வரும் கலாச்சாரப் படையெடுப்புகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். கிறித்த கத்தோலிக்க மதங்கள் செவ்விந்தியக் கலாச்சாரங்களை பூண்டோடு அழித்ததன் விளைவு, அந்த நாடுகள் இன்றளவும் முன்னேறுவதில் தடையாக இருக்கின்றன. ஒரு கலாச்சாரம் அழியத்தொடங்கினால், அந்த மக்களிடம் தாழ்வு மனப்பான்மை தானகவே ஓங்கிவிடும் என்பதே.
முகத்தில் பரு இருப்பதால் முகத்தையே மாற்ற முடியுமா ? மனைவியிடம் சிறுக்
குறை இருப்பதால் மனைவியே மாற்ற முடியுமா என்ன ? உலகம் முழுவதும் அனைத்துக் கலாச்சாரங்களை அழித்து ஒரேக் கலாச்சாரமாக மாற்ற முனைவதும், அனைத்து மொழிகளை அழித்து ஒரே மொழியாக மாற்ற முனைவதும் அனைத்து இனங்களை படுகொலை செய்து ஒரே இனமாக மாற்ற முனைவதும் ஒன்றே தான். அதுவே பாசிச சிந்தனையாகும்.
தமிழ்க் கலாச்சாரங்களில் இருக்கும் குற்றங்களை களைய வேண்டுமாயின் சமூக
விழிப்புணர்வே தேவையாகும். தமிழ்க் கலாச்சாரங்களில் இருந்த பல குற்றங்கள்
காலம் காலமாக மாறுபட்டே வந்துள்ளது, காலப் போக்கில் இப்போதுள்ள
குற்றங்களும் இல்லாமல் போகும் என்பதிலும் ஐயமில்லை. ஆங்காங்கே நடக்கும்
குற்றங்களை களைய நாம் நடவடிக்கை எடுத்தக் தான் வேண்டும். குறிப்பாக பெண்களை சமமாக மதித்தல், வரதட்சணை முறை, சிசுக் கொலை, சாதிய வேறுபாடுகள், என பல்வேறு குற்றங்கள் நமதுக் கலாச்சாரங்களில் இருக்கின்றன. இவற்றை நீக்க மக்கள் விழிப்புணர்வும், போதிய சட்டத் திட்டங்களே உதவ முடியும்.
இவற்றைக் காரணம் காட்டி மத மாற்றங்கள் என்பது ஒரு தீர்வாகவே அமையாது என்பதே எனது வாதம். மதம் மாறுவது சுய விருப்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமே ஒழிய ! கலாச்சார தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதினாலோ அல்லது கலாச்சார குற்றங்களில் இருந்து தப்பிக்கும் வழியாகவோ அல்ல !!! ஏனெனில் இஸ்லாமிய மதத்தில் சேர்வதால் கலாச்சாரங்களின் குற்றங்களை அழித்து வாழலாம் என கருதுகின்றார்கள். ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தெற்காசியா என்பது பழமைமிகுந்த பலவேறு சமூக சிக்கல்களைக் கொண்ட நாடு, ஒரு காலக்கட்டத்தில் ஓரே சமயிகளாக இருந்து பின்னர் தத்தமது வழிகளில் வாழ்வியலை அமைத்துக் கொண்ட நாடுகளாகும். குறிப்பாக இஸ்லாம் என்பது இன்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருக்கின்றன. அவை கடந்த 800 ஆண்டுகளுக்கு மேலாக அந்நாடுகளில் வாழும் மக்களால் பின்பற்றப் பட்டு வருகின்றன, அதற்கு முன் இருந்த சமூக சிக்கல்கள் பலவும் மதங்கள் மாற்றமடைந்தாலும் நீக்கப் பட முடியவில்லை என்பது தான் கண்முன்னே விரியும் சாட்சியாகும். சட்டத் திட்டங்கள், இறையாண்மைகள் இல்லாத காலங்களில் மதங்கள் அவ்விடத்தில் இருந்து பரிபாலணை செய்துவந்தன. ஆனால் இன்று தேசங்களும் சட்டங்களும் இறையாண்மைகளும் இருக்கின்றன. இன்றையக் காலக் கட்டத்தில் தேசங்கள் ஊடாகவும், சட்டங்களின் ஊடாகவும், பொதுக் கொள்கை ஒன்றை ஏற்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஊடாகவுமே கலாச்சாரத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க முடியும். ஒருக் கலாச்சாரத்தை அழித்துவிட்டு இன்னொன்றை போட்டு நிரப்புவதால் அல்ல !!! சமூகத்திருத்தங்களால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம். மாற்றங்கள் என்பது ஒரே இரவில் வந்தும் விடாது, ஆனால் எவ்வளவே வேகப் படுத்த முடியுமோ அவ்வளவு வேகப்படுத்துதலை சமூக ஆர்வலர்கள் கொண்டு வர வேண்டும் ....
கலாச்சாரங்களில் மதங்கள் குறிப்பிட்ட பங்காற்றுகின்றனவே ஒழிய !
கலாச்சாரங்களையும் மதங்களையும் ஒன்றாக எண்ண வேண்டியது இல்லை. ஏனெனில் மதங்களைத் துறந்தோர் கூட தாம் சார்ந்த பகுதியின் கலாச்சாரங்களை துறக்க முடியாது, ஆனால் மாற்றங்களை நோக்கிய நகர்வுகளில் மதங்கள் போடும்
முட்டுக்கட்டைகளை மதங்களுக்கு வெளியே இருந்து மாற்றியமைக்க இயலும்.
கலாச்சாரங்களை நாம் பேண வேண்டும். அதே சூழலில் கலாச்சாரங்களில் உள்ள பிழைகளை களையறுக்கவும் வேண்டும், புதிய சோதனைகளை ( EXPERIMENTS ) அரங்கேற்றவும் வேண்டும். அதே போல மற்றவரின் கலாச்சாரங்களை தாழ்வாக எண்ணவதையும் நிறுத்துங்கள். அமேசான் பழங்குடிகளின் கலாச்சாரம் நம்மை விட தாழ்வானது ஒன்றுமில்லையே. அவர்கள் வாழ்வியலுக்கு அது உயர்வான ஒன்றே. அதே போல கலாச்சார தாழ்வு மனப்பானமையூட்டலையும் நான் இக்கணத்தில் வன்மையாக கண்டிக்கின்றேன்.
நன்றி:கொடுக்கி.நெட்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|